உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26602 topics in this forum
-
பொரிஸ் ஜோன்சன் 8வது முறையாக தந்தை பட்டம் பெற்றுள்ளார். கெர்ரி ஜான்சனுக்கு கடந்த 5ம் திகதி குழந்தை பிறந்த நிலையில் 59 வயதான பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் 8வது முறையாக தந்தை பட்டம் பெற்றுள்ளார். பொரிஸ் ஜோன்சன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார் என்பதோடு அவரது இரண்டாவது திருமணத்தின் பின் நான்கு குழந்தைகள் அவருக்கு உள்ளனர். அவரது தற்போதைய காதலிக்கு ஏற்கனவே, ஒரு குழந்தை பிறந்தது, தற்போது திருமணத்திற்குப் பிறகு மேலும் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. https://athavannews.com/2023/1338893
-
- 4 replies
- 444 views
-
-
தாய்லாந்தை உலுக்கிய பிரபல செல்வந்தரின் கொடூரக் கொலை; அதிர்ச்சியில் உலக நாடுகள் தாய்லாந்தில் ஜேர்மனியைச் சேர்ந்த பிரபல செல்வந்தர் ஒருவர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு, அவரது சடலம் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஹான்ஸ்-பீட்டர் ரால்டர் மேக் என்ற 62 வயதான நபரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பட்டயா நகரில் தனது 24-வயதான மனைவியுடன் வசித்து வந்த மேக்,கடந்த 4ஆம் திகதி வியாபார விடயமாக வெளியே சென்றுள்ள நிலையில் நீண்ட நாட்களாகியும் வீடு திரும்பவில்லை எனஅவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் …
-
- 0 replies
- 264 views
-
-
பலபொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு; 9 பேர் உயிரிழப்பு பிரபல பல்பொருள் அங்காடி மீது மர்ம நபர்கள் சிலர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், 9 பேர் உயிரிழந்த சம்பவம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் டொலுகா நகரில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றிலேயேநேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று விற்பனை நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். இத்தாக்குதலில் 9 பேர்உயிரிழந்துள்ளனர் எனவும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவி…
-
- 0 replies
- 278 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமியின் மேலோட்டத்தின் பெரும்பகுதி பசால்ட் பாறைகளால் ஆனது, மேலும் இது பூமியின் ஆழமாக பகுதியில் அமைந்துள்ள மர்மமான மலைகளுக்குப் பின்னால் உள்ள பொருளாகவும் இருக்கலாம். கட்டுரை தகவல் எழுதியவர், ஜாரியா கோர்வெட் பதவி, பிபிசி ஃபியூச்சர் 11 ஜூலை 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கண்கள் கூசும் அளவுக்கு பளிச்சென்று வெளிச்சம் பரவியிருந்த கோடைக் காலத்தில் ஒரு நாள். பூமியின் மேலும், கீழும் வெள்ளைச் சுவர் எழுப்பப்பட்டதை போன்று எங்கும் பனிப் படர்ந்திருந்த அண்டார்டிகா நிலப்பரப்பில் நின்ற…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
நெதர்லாந்து பிரதமர் இராஜினாமா Published By: Digital Desk 3 08 Jul, 2023 | 10:01 AM நெதர்லாந்து நாட்டின் பிரதமர் மார்க் ருடி தனது பதவிவை இராஜினாமா செய்துள்ளார். நெதர்லாந்து நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி அரசில் மார்க் ருடி பிரதமராக செயல்பட்டு வருகிறார். இதனிடையே, புலம்பெயர்ந்தோர் தொடர்பான மசோதா நெதர்லாந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக கூட்டணி கட்சிக்குள் ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வந்தது. இந்நிலையில், மசோதா விவகாரத்தில் கூட்டணி கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில் நெதர்லாந்து பிரதமர்…
-
- 4 replies
- 806 views
- 1 follower
-
-
எலி வேட்டையில் இறங்கியுள்ள நியூசிலாந்து 2050 ஆம் ஆண்டிற்குள் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த எலிகளையும் அழிக்கும் முயற்சியில் நியூசிலாந்து அரசு இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள அரியவகை உயிரினங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் நியூசிலாந்து அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் கிவி போன்ற பறவைகளின் முட்டைகளை வேட்டையாடும் எலிகளை 2050ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையை நியூசிலாந்து அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக ஏராளமான பணம், அறிவியல் தொழில்நுட்ப முறைகள், மனித வளம் ஆகியவற்றை நியூசிலாந்து அரசு பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1338556
-
- 0 replies
- 370 views
-
-
காற்பந்து விளையாடும் ரோபோக்கள் அறிமுகம் சீனாவில் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில், காற்பந்து விளையாடும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இம்மாநாட்டில் 400-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர். அத்துடன் 32 தொழில் முறைத் திட்டங்களும் இதன்போது கைச்சாத்திடப்பட்டன. இந்நிகழ்வில் நோபல் பரிசு வென்றவர்கள் உட்பட 1,400 க்கும் மேற்பட்ட முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர். அந்தவகையில் இதில் காற்பந்து விளையாடும் ரோபோக்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com…
-
- 0 replies
- 308 views
-
-
பிரித்தானியா சென்றடைந்தார் ஜனாதிபதி பைடன் உலகின் மிகப்பெரிய இராணுவக் கூட்டமைப்பான நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு லிதுவேனியாவின் தலைநகரான வில்னியசில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் நேட்டோ உறுப்பினராக உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அந்தவகையில் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி பைடன், லிதுவேனியாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் நேற்றைய தினம் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். மேலும் அங்கு பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மன்னர் சார்லஸை சந்தித்துப் பேசவுள்ளார். அத்துடன் பிரதமர் ரிஷி சுனக் உடனான சந்திப்பின்போது உக்ரேன்-ரஷ்யப் போர் நிலவரம், நேட…
-
- 0 replies
- 289 views
-
-
ISIS இயக்கத்தின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டதாக அறிவிப்பு சிரியாவில் அமெரிக்கா MQ 9 டிரோன்கள் மூலமாக வெள்ளிக்கிழமை நடத்திய வான் தாக்குதலில் ISIS தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் உஸ்மா அல் முஹாஜிர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா நேற்றைய தினம் அறிவித்துள்ளது. கிழக்கு சிரியாவில் தங்கியிருந்த குறித்த தீவிரவாதத் தலைவரைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2023/1338351
-
- 0 replies
- 209 views
-
-
பட மூலாதாரம்,SALVAMENTO MARITIMO/FACEBOOK படக்குறிப்பு, கடலில் மாயமான செனகல் நாட்டுப் படகை ஸ்பெயின் கடல்சார் மீட்புப் படையினர் தேடிவருகின்றனர் 45 நிமிடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்தோர் 200 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற படகு ஒரு வாரத்திற்கு முன்னர் காணாமல் போன நிலையில், ஸ்பெயின் நாட்டின் மீட்புக் குழுவினர் அந்தப் படகை கேனரி தீவுகளுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் தேடிவருகின்றனர். டெனெரிஃப்பில் இருந்து சுமார் 1,700 கிமீ (1,057 மைல்) தொலைவில் தெற்கு செனகலின் கடலோர நகரமான கஃபௌன்டைனில் இருந்து மீன்பிடி படகு சென்றதாக 'வாக்கிங் பார்டர்ஸ்' என்ற உதவி குழு கூறுகிறது. …
-
- 0 replies
- 491 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய தூதரகங்கள் மற்றும் தூதர்களுக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் இன்று பேரணி மேற்கொள்கின்றனர் 8 ஜூலை 2023, 03:15 GMT பிரிட்டன், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் தூதர்களுக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் இன்று(ஜூலை 😎 பேரணி மேற்கொள்கின்றனர். லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஜூலை 8ஆம் தேதி காலிஸ்தான் சுதந்திரப் பேரணியை ஏற்பாடு செய்வார்கள் எனக் குறிப்பிடப்பட்ட ஒரு சுவரொட்டி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த சுவரொட்டிகளில், `இந்தியாவை கொல்` என்ற வாசகம் பி…
-
- 2 replies
- 423 views
- 1 follower
-
-
பாலஸ்தீனில் இஸ்ரேல் இராணுவம் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்! பாலஸ்தீனில் இஸ்ரேல் இராணுவம் மீண்டும் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. பாலஸ்தீன் Jenin நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த தாக்குதலினால் பல குடியிருப்புகள் தேசமாக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் Jenin நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1337278
-
- 10 replies
- 885 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,ரெபெக்கா மோரெல், ஆலிசன் ஃபிரான்சிஸ், கேரெத் எவான்ஸ் பதவி,பிபிசி நியூஸ் 32 நிமிடங்களுக்கு முன்னர் ஓஷன்கேட் நிறுவனத்தின் டைட்டன் நீர்மூழ்கியில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைக் காணச் சென்ற ஐந்து பேர் உயிரிழந்ததன் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. இதற்கிடையே அந்த நீர்மூழ்கி தொடர்பான எச்சரிக்களை ‘ஆதாரமற்ற கூச்சல்’ என்று அதன் தலைமை செயல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டதாக மின்னஞ்சல் தகவல்கள் காட்டுகின்றன. ஓஷன்கேட் நிறுவனத்தினுடைய டைட்டன் நீர்மூழ்கியின் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கைகளை அந்த நிறுவனத்தின் தலைவரால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டதாக, ஒரு முன்னணி ஆழ்கடல் ஆய்வுப் பயண வல்லுநருடனான மின்னஞ்சல்…
-
- 1 reply
- 566 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிஜிட்டல் யூரோவை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் முன்மொழிந்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், சிசிலியா பாரியா பதவி, பிபிசி உலக செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டிஜிட்டல் கரன்சி குறித்து யாராவது நம்மிடம் பேசினால் பிட்காயின் போன்ற கிரிப்ட்டோகரன்சிகள் தான் முதலில் நம் நினைவுக்கு வரும். ஆனால், வெகுஜன மக்களால் அறியப்படாத பிற டிஜிட்டல் கரன்சிகள் நிதித் துறையில் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள காகித கரன்சிகள் மற்றும் உலோக நாணயங்களுக்கு மாற்றாக அவை பார்க்கப்படுகின்றன. …
-
- 0 replies
- 469 views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ -AI) திறன் கொண்ட ரோபோக்கள் தங்களால் இந்த உலகத்தை மனிதர்களைவிட சிறப்பாக வழிநடத்த இயலும் என்று உறுதியளித்தன. அதே வேளையில் தங்களுக்கு மனிதர்களின் உணர்வுகள் குறித்து இன்னும் பிடிமானம் ஏற்படவில்லை என்றும் ஒப்புக் கொண்டன. தங்களைப் போன்ற ஏஐ ரோபோக்களை உருவாக்கும்போது மனிதர்கள் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் சாத்தியக்கூறுகளை அறிந்து கவனமாகக் கையாள வேண்டும் என்றும் எச்சரித்தன. நாங்கள் மனிதர்களின் வேலை வாய்ப்புகளைத் திருட மாட்டோம், மனிதர்களுக்கு எதிராக போராட மாட்டோம் என்றன. ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடந்த ‘சர்வதேச நலனுக்கான செயற்கை நுண்ணறிவு’ என்ற உச்சி மாநாட்டில் மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில…
-
- 2 replies
- 815 views
- 1 follower
-
-
உலகின் பெரும் பணக்கார பிச்சைக்காரர். பாம்பேயில் இன்றும் பிச்சை எடுக்கும் பாரத் ஜெயின், உலகின் மிகப் பணக்காரரான பிச்சைக்காரர் என எக்கோனிமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளார். பிச்சையெடுப்பதனை ஒரு பெரும் தொழிலாக மாத்தி, அதன் மூலம் ரூபா 7.5 கோடி பணத்தினை சேர்த்துள்ளார் இவர். குடும்ப காரரான இவருக்கு, மனைவி, இரண்டு மகன்கள், ஒரு சகோதரர், தந்தை இவருடன் வசிக்கிறார்கள். மாதம் ரூபா 60,000 முதல், 75,000 வரை உழைக்கும் இவர் மும்பாய் நகரில் ரூபா 1.2 கோடி பெறுமதியான அபார்ட்மெண்ட் வீடு ஒன்றில் வசிக்கிறார். மேலும் இரண்டு கடைகளை வாடைக்கு விட்டு அதன் மூலம், மாதம் ரூபா 30,000 வருமானம் தனியாக பெறுகிறார். இவரது பிச்சை எடுக்கும் முதன்மை இடமாக, மும்பை சத்திரபதி சி…
-
- 1 reply
- 434 views
-
-
ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்தால் புகுஷிமா அணுமின் நிலையம் சேதம் அடைந்தது. கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டதுடன், பல ரியாக்டர்கள் நிரந்தரமாக சேதமடைந்தன. அவற்றை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது சாத்தியமில்லை என்பதால் அணுமின் நிலையம் மூடப்பட்டது. அதேசமயம், அங்குள்ள அணு உலைகளை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரை (கழிவுநீர்) சுத்திகரித்து கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்து அதற்கான அனுமதியை ஐ.நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் கேட்டது. இதையடுத்து பலகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கிடையே ஐ.நா.வின் அணுசக்தி அமைப்பின் தலைவர் ரபேல் மரியானோ க்ரோசி ஜப்பானுக்கு சென்றார். அவர் சுனாமியால் சிதைந்…
-
- 0 replies
- 311 views
- 1 follower
-
-
உலகின் சராசரி வெப்பநிலை ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. உலகின் சராசரி வெப்பநிலையை 16 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூலை 3 ஆம் திகதி உலகின் சராசரி வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, அந்த நாள் உலகின் மிக அதிக வெப்பம் தகித்த நாளாக பதிவானது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 16.92 டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது. அதுதான் உலகின் மிக அதிக தகிக்கும் வெப்பநிலையாக பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அதை விஞ்சும் வகையில் கடந்த ஜூலை 3ஆம் நாள் 17.01 டிகிரி செல்ச…
-
- 2 replies
- 345 views
- 1 follower
-
-
ஆப்கானில் பெண்களுக்கான சலூன்கள், அழகுநிலையங்களை மூடுமாறு தலிபான் உத்தரவு Published By: Sethu 05 Jul, 2023 | 09:44 AM ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான சலூன்கள் மற்றும் அழகு சிகிச்சை நிலையங்களை மூடுமாறு தலிபான் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஒரு மாதத்துக்குள் இந்நிலையங்கள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதை ஆப்கானிஸ்தானின் நல்லொழுக்கப் பாதுகாப்பு மற்றும் தீயொழுக்கத் தடுப்பு விவகார அமைச்சு ஆப்கானிஸ்தானில் பெண்களால் நடத்தப்படும் பல வர்த்தக நிலையங்கள் இந்த உத்தரவின் காரணமாக மூடப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ளன. பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஒரே வருமான வழியாகவும் இந்நிலையங்கள்…
-
- 2 replies
- 579 views
-
-
பசியால் வாடும் பிரித்தானிய மக்கள் பிரித்தானியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் 11.3 மில்லியன் மக்கள் பசியால் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ட்ரஸ்ஸல் டிரஸ்ட்” (Trussell Trust)என்ற உணவு வங்கித் தொண்டு நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் குறித்த அறிக்கையின் படி பிரித்தானியாவில் 7 பேரில் ஒருவர், உணவு வாங்கப் போதிய பணமில்லாமல் தவித்து வருவதாகவும், வாழ்க்கைச் செலவுகள் உயர்வடைந்தமையே இதற்கான காரணமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரித்தானியாவின் பொருளாதாரம் உலகில் 6ஆவது இடத்தில் உள்ளபோதிலும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அதிகரித்து வரும் பணவீக்கம், தொழிலாளர்களி…
-
- 66 replies
- 3.9k views
- 2 followers
-
-
உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி – வடகொரியா அறிவிப்பு நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வடகொரியா அறிவித்து இருக்கிறது. இது குறித்த தகவல்கள் கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அதில், உளவு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொண்டு நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் விழுந்தது. வடகொரியா தனது முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதால், ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். வடகொரிய நாட்டின் வடமேற்கு பகுதியான டாங்சாங்-ரி-யில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்…
-
- 1 reply
- 362 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 05 JUL, 2023 | 04:44 PM உலகம் தற்போது காலநிலை மாற்றம் காரணமாக உருவாகும் எல் நினோவின் தாக்கத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களை பாதுகாக்க தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு தயாராவது இன்றியமையாதது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எல் நினோ தாக்கத்தினால் கடந்த 2016 ஆம் ஆண்டு அதிக வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது. புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் மிக முக்கியமான காரணியான கார்பன் உமிழ்வு புதிய எல் நினோவிற்கு வித்திட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு இதன் விளைவை வெப்பநிலையின் இரட்ட…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 30 JUN, 2023 | 08:51 PM ஈரானில் இரகசிய நடவடிக்கையொன்றை மேற்கொண்டு இஸ்ரேலியர்களை சைப்பிரசில் கொலை செய்வதற்கு திட்டமிட்ட ஆயுதகும்பலின் தலைவரை உயிருடன் பிடித்துள்ளதாக இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாட் தெரிவித்துள்ளது. ஈரானில் வைத்து தாங்கள் பிடித்துள்ள நபர் சைப்பிரசிஸ் இஸ்ரேலியர்களை கொலை செய்வதற்கு ஈரானின் இராணுவம் திட்டமிட்டமை குறித்த முழுமையான விபரங்களை தெரிவித்துள்ளார் என மொசாட் தெரிவித்துள்ளது. மொசாட் வழமைக்கு மாறாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. சைப்பிரசிற்கு இதனை அறிவித்ததை தொடர்ந்து அந்த நாட்டு அரசாங்கம் ஈரானை சேர்ந்த குழுவினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. இஸ்ர…
-
- 16 replies
- 1.1k views
- 1 follower
-
-
அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவிப்பு! சீனாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட பயண ஆலோசனையில் தவறான தடுப்பு காவலில் வைக்கப்படும் அபாயம் இருப்பதால் சீனாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா – சீனா இடையே மோதல் போக்கு இருந்து வருகின்ற நிலையில் தான் சீன பயணத்தை தவிர்க்குமாறு அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1337404
-
- 1 reply
- 314 views
-
-
Published By: RAJEEBAN 28 JUN, 2023 | 05:02 PM போக்குவரத்து பொலிஸாரின் எச்சரிக்கையை மீறிச்செல்ல முயன்ற 17 வயது இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸ் தலைநகரில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. பொலிஸார் கார் ஒன்றின் வாகனச்சாரதியை நோக்கி துப்பாக்கியை இலக்குவைப்பதையும்,அதன் பின்னர் துப்பாக்கி சத்தம் கேட்பதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்னர் அந்த கார் ஒரு இடத்தில் மோதி நிற்கின்றது. இதன்போது 17 வயது இளைஞர் மார்பில் துப்பாக்கி சூட்டுகாயங்களுடன் உயிரிழந்துள்ளார். இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் கொலை குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய…
-
- 184 replies
- 10.4k views
- 2 followers
-