Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கொலைக் குற்றச்சாட்டின் பேரில் டாக்டர் ஜெயந்த் அமெரிக்காவில் கைது [14 - March - 2008] டாக்டர் எமன் என வர்ணிக்கப்பட்ட ஜெயந்த் பட்டேல் அமெரிக்காவின் ஒரிகான் மாநிலத்திலுள்ள அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யபபட்டுள்ளார். தனது கடமைகளில் கவனயீனமாக இவர் இருந்ததால் இவரது நோயாளர்கள் பலர் இறந்தும் பலர் தீராத நோய்கள், தேவையற்ற சத்திரச் சிகிச்சைகள் போன்றவற்றுடன் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து பொலிஸாரால் இவர் கைது செய்ப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் 17 நோயாளிகளின் இறப்புக்கும் வேறு சிலரின் உடல் உபாதைகளுக்கும் அவரே பொறுப்பு என்று குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. …

  2. ஒபமாவை விமர்சித்த ஹிலாரியின் ஆலோசகர் இராஜினாமா 14.03.2008 / நிருபர் எல்லாளன் அமெரிக்க ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரக் ஒபமா கறுப்பினத்தவராக இல்லாதவிடத்து அவரால் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் திகழ முடியாது என விமர்சித்தமை காரணமாக பெரும் சர்ச்சைக்குள்ளான ஹிலாரி கிளின்டனின் ஆலோசகர், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ""ஒபமா வெள்ளையராக இருந்தால் அவர் இந்நிலைக்கு ஒருபோதும் வந்திருக்க முடியாது'' என ஹிலாரி கிளின்டனின் ஆலோசகரான ஜெரால்டின் பெர்ராரோ கலிபோர்னிய பத்திரிகையெ?985;்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். 1984 ஆம் ஆண்டு உப ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஜெ?992;ால்டின் பெர்ராரோ, ஹிலாரி கிளின்டனின் நிதிச் சபையிலான கௌரவ பதவி…

    • 0 replies
    • 824 views
  3. அவுஸ்திரேலியாவில் சீக்கிய மாணவர்கள் தலைப்பாகை அணிவதற்குத் தடை [05 - March - 2008] அவுஸ்திரேலியாவிலுள்ள பாடசாலைகளில் சீக்கிய மாணவர்கள் தலைப்பாகை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் குயின்லாந்து மாகாணத்திலுள்ள ஓர்மிஸ்டன் கல்லூரியிலேயே இத்தடை முதன்முதலாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் மாணவர்களின் பெற்றோரை அழைத்த கல்லூரி நிர்வாகம்; தலைமுடியை சீராக கத்தரித்து சீவியும் மாணவர்கள் பாடசாலைக்கு தலைப்பாகை அணியாமலும் வருகை தரவேண்டும். தலைப்பாகை அணிவதற்கு பாடசாலை விதிகளில் இடமில்லை. அதனால் இக்கட்டுப்பாடுகளை அம்மாணவர்கள் விரும்பாவிட்டால் அவர்களை கல்லூரியிலிருந்து நீக்குவதைத் தவிர வேறுவழி இல்லையெனத் தெரிவித்துள்ளது. இவ்விடயம…

  4. 'ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய்நோக அடிமை சாக மாஈரம் போகுதென்று விதை கொண்டோட வழியினிலே கடன்காரர் மறித்துக்கொள்ள கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்க பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க பாவிமகன் படும்துயரம் பார்க்கொணாதே...' - துன்பத்தின் துன்பமாக வந்து போட்டுத் தாக்குவதைப் பற்றி விவேக சிந்தாமணியில் நொந்து போய் வரும் பாடல் இது. ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் கதி இதையெல்லாம் தாண்டியே போச்சு! இலங்கைக் கடற்படைத் தாக்குதல், கண்ணி வெடி அச்சுறுத்தல், கடத்தல்காரர்கள் தொல்லை, போலீஸ் நெருக்கடி என்று திக்திக் வாழ்க்கை நடத்தும் நம் மீனவர்கள், 'எங்கள் பகுதிக்குள் மீன் பிடிக்க வராதே... வந்தால் பதிலடி கொடுப்போம்' என்கி…

    • 9 replies
    • 1.9k views
  5. இன்றைய செய்தி உலாவில் கண்ட செய்தியை இங்கே இணைக்கிறேன். சுவையான இந்தத் தகவல் தொடர்பாக மேலதிக விபரங்கள் தெரிந்தோர் இதில் பதிவிட்டு இக்கருத்துக்களத்தை மெருகூட்டலாம். (லண்டன் கிழக்கு லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் 41 விதமான மொழிகளைப் பேசும் மாணவர்கள் படித்து வருகிறார்கள். உலகிலேயே அதிக மொழிகளைப் பேசும் மாணவர்கள் படிப்பது இங்கு மட்டும்தான் என்று கருதப்படுகிறது. கிழக்கு லண்டனின், ரெட்பிரிட்ஜ் பகுதியில் உள்ள தி நியூபெரி பார்க் தொடக்கப் பள்ளிதான், இந்த சர்வ மொழி சாலையாகும். இங்கு மொத்தம் 851 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 41 மொழிகளைப் பேசுகின்றனர். ஆப்ரிகன் முதல் ஹீப்ரு வரை, ஜப்பானிஸ் முதல் நார்வே மொழி வரை படு சரளமாக இந்த மாணவ, மாணவியர் பேசுகின்றனர். ஒவ்வொரு மாணாக்கருக்…

    • 2 replies
    • 1.1k views
  6. விலைமாதர் வலையில் நியூயார்க் கவர்னர்!: ராஜிநாமா செய்வாரா? திகதி : Wednesday, 12 Mar 2008, [saranya] அமெரிக்காவின் நியூயார்க் மாநில கவர்னர் எலியட் ஸ்பிட்சர், ஒரு விலை மாதை ஹோட்டலுக்கு வரவழைத்து உறவு கொண்டது, அம் மாநில குற்றப்பிரிவு போலீஸ?992;ால் கண்டுபிடிக்கப்பட்டது. கவர்னர் என்றும் பாராமல் மூத்த போலீஸ் அதிகாரிகள் அவரிடமே நேரடியாக விசாரணை நடத்தி குற்றத்தைப் பதிவு செய்துவிட்டனர். அச் செய்தியை "நியூயார்க் டைம்ஸ்' நாளிதழின் இணையதளம் மக்களுக்குத் தெரியப்படுத்திவிட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்ட கவர்னர், அதற்காகத் தனது குடும்பத்தாரிடமும் மாநில மக்களிடமும் மன்னிப்பு கோரினார். நாட்டு மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய கவர்னரே, விலைமாதர்கள் கும்பலை ஊக்குவிப்பது…

    • 0 replies
    • 1.2k views
  7. கடலில் பலத்த சூறாவளி 4 மீனவர்கள் மாயம் ராமேஸ்வரம் கடலில்இ நள்ளிரவில் வீசிய பலத்த காற்றால் மீனவர்கள் 4 பேர் மாயமானார்கள். ராமேஸ்வரத்திலிருந்து 500 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு மீனவர்கள் சென்றனர். நடுக் கடலில் நள்ளிரவில் பலத்த காற்று வீசியது. மீன்பிடி வலைகள் அறுந்தன. கடல் கொந்தளித்ததால் மீன்பிடிக்க முடியாமல் பலர் கரை திரும்பினர். வலைகள் அறுந்ததில் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1277#1277

    • 6 replies
    • 1.4k views
  8. இந்தியர்களின் அதிருப்தியை சம்பாதித்த அமைச்சர் சாமிவேலு சொந்த தொகுதியில் (Sungai Siput) எதிர் கட்சியான நீதிக்கட்சியின் (Parti Keadilan Rakyat) Dr. ஜெயகுமாரிடம் தோல்வி கண்டார். அமைச்சர் சாமிவேலு 30 வருடங்களாக இத்தொகுதியில் உறுப்பினராகவும், அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்தவர். http://www.channelnewsasia.com/stories/sou.../333757/1/.html அதே போல் சில சீனர்களை பெரும்பான்மையாக கொண்ட பினாங் (Penang) மாநிலத்திலும் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழக்கலாம் என கருதப்படுகின்றது ...! http://www.channelnewsasia.com/stories/sou.../333764/1/.html

    • 6 replies
    • 2k views
  9. பிரிட்டன் குடியேற்றத்திற்கும் உதவும் ஐ.இ.எல்.டி.எஸ்.! செவ்வாய், 11 மார்ச் 2008( 17:01 IST ) ஐ.இ.எல்.டி.எஸ். (IELTS) என்ற சர்வதேச ஆங்கில மொழிப் புலமை பரிசோதனை தேர்வுகள் பிரிட்டன், ஆஸ்திரேலிய கல்வியாளர்களால் நடத்தப்படுகிறது. இத்தேர்வை 2007-ம் ஆண்டில் மட்டும் 9.38 லட்சம் பேர் எழுதியுள்ளனர். கடந்த மூன்று ஆண்டில் மட்டும் இத்தேர்வு எழுதியோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. பல்கலைகழக நுழைவுத்தேர்வு, புதிய குடியேற்ற கொள்கைகள், தனித்துவமிக்க அங்கீகாரம் ஆகியவற்றிற்கு இந்த சான்றிதழ் அவசியம். பிப்ரவரி 2008 முதல் பிரிட்டன் உள்துறை, புள்ளிகள் அடிப்படையிலான புதிய குடியேற்ற முறையை அறிமுகப்படுத்துயுள்ளது. இந்த முறை ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தேவை…

    • 0 replies
    • 725 views
  10. கடும் போட்டி உறுதி Wednesday, 12 March, 2008 01:58 PM . சென்னை, மார்ச். 12: மாநிலங்களவை தேர்தலில் திமுக அணி 5 இடங்களிலும், அதிமுக அணி 2 இடங்களிலும் போட்டியிடுவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, போட்டி உறுதியாகிவிட்டது. அதிமுக ஒரு இடத்திலும், மதிமுக ஒரு இடத்திலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் பாலகங்கா போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. . மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அல்லது வேளச்சேரி மணிமாறன் போட்டி யிடக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங் களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 7 பேர் போட்டி யிடுவதை அடுத்து, இந்த தேர்தலில் போட்டி உ…

    • 0 replies
    • 545 views
  11. பிரித்தானியாவின் மிகப் பெரிய பொலிஸ் பிரிவொன்றின் (GMP) பிரதான பொலிஸ் தலைமை அதிகாரியான Michael Todd நேற்றிரவில் இருந்து காணாமல் போயிருந்த நிலையில் இன்று Bwlch Glas மலைப்பகுதியில் சடலமாக மீடக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் பிரதமரும் மரணமான அதிகாரியும். இவர் கிட்டத்தட்ட 30 வருடங்களாக பிரித்தானிய பொலிஸ் சேவையில் பணியாற்றியவர் ஆவார். இவருக்கு வயது 50 மட்டுமே. இவரது திடீர் மர்ம மரணம் பிரித்தானிய பொலிஸ்துறை மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட பிரித்தானியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. http://news.bbc.co.uk/1/hi/england/manchester/7290359.stm

    • 6 replies
    • 1.6k views
  12. 60 கோடியில் ஆயுதம் வாங்க நக்ஸலைட்டுகள் திட்டம்' ப 60 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க நக்ஸலைட்டுகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட் டீல் மக்களவையில் தெரிவித்தார். உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது இதைத் தெரிவித்தார். நக்ஸலைட்டுகளுக்கும் நேபாளத்தில் இயங்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இல்லை. மேலும் படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?t=904

  13. ஹமாஸ் தீவிரவாத இயக்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தை: இஸ்ரேலியர்கள் விருப்பம் திகதி : Tuesday, 11 Mar 2008, [saranya] ஹமாஸ் தீவிரவாதி இயக்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதையே பெரும்பாலான இஸ்ரேலியர்கள் விரும்புவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் நாட்டிற்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே எலியும் ஞீனையும் போல பல ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டவண்ணம் உள்ளன. பாலஸ்தீன நாட்டில் செயல்படும் ஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கம், இஸ்ரேல் நாட்டவர்கள் மீது அவ்வப்போது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தொடர் சண்டை எதிரொலியாக இஸ்ரேல்_பாலஸ்தீன எல்லைப்பகுதியில் எப்போதும் பதட்டமான சூழ்நிலை காணப்ப…

    • 0 replies
    • 608 views
  14. இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் உட்பட பிரிட்டனின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் எங்கனும் பலமான காற்று வீசிக் கொண்டிருக்கிறது. பேரிரச்சலுடன் காற்று வீசுவதுடன் மழையும் பெய்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே அத்திலாண்டிக் சமுத்திரத்தில் உருவான தாழமுக்கம் புயற் சின்னமா ஐயர்லாந்து, வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் மேற்கு, தெற்கு கரைகளை நோக்கி நகர்ந்து வருவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. புயலுக்கு நேரடியாக முகங்கொடுக்கும் பகுதிகளில் மணிக்கி 80 மைல் அல்லது 130 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இதனால் மரங்கள் வேருடன் புடுங்கி எறியப்பட்டுள்ளன. கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன என்று செய்திகள் கூறுகின்றன. லண்டனிலும் இரைச்சலுடன் பலமான காற்று வீசுவதுடன் …

    • 14 replies
    • 2.5k views
  15. ரஜினிக்கு பிச்சை அளித்த பெண்! செவ்வாய், 11 மார்ச் 2008 ஆசியாவிலேயே ஜாக்கி ஜானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்தை பிச்சைக்காரராக நினைத்த ஒரு பெண்மணி ரூ.10 தானம் அளித்துள்ளார். இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகளவில் வருமானத்தை குவித்த 'சிவாஜி' பட வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் வெளிநாடுகளுக்கு செல்லாமல் இந்தியாவிலேயே உள்ளார். தமிழ் திரையுலகத்தினால் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ரஜினி திடீரென பெங்களூருவில் உள்ள ஒரு கோயிலுக்கு தனது நண்பருடன் சென்றார். கசங்கிய சட்டை, சாதாரண லுங்கி அணிந்தோடு மட்டுமல்லாமல், பழுப்பு நிற துண்டை தலையில் கட்டியிருந்தார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் கோயிலில் ரஜினி மிக எளிமையாக இருந்ததால், …

  16. மேலை நாடுக‌ளும் அல்கொய்தா போன்ற‌ தீவிர‌வாதிக‌ளின் பார்வையில் ப‌ட்ட‌ நாடுக‌ளும் இன்று மிக‌ப்பெரிய‌ ஒரு ஆப‌த்தான‌ சூழ‌லில் சிக்கியுள்ள‌து. சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு அதாவ‌து அமெரிக்க‌ இர‌ட்டைக் கோபுர‌ தாக்குத‌ல் ந‌ட‌ந்த‌ பிற‌கு தேடுத‌ல் வேட்டை தீவிர‌ப‌டுத்த‌ப‌ட்ட‌ ச‌ம‌ய‌ம் 2004 - டிச‌ம்ப‌ரில் தாலிபானின் க‌ட்டுபாட்டில் இருந்த‌ ஆப்கானை மீட்ட‌ பிற‌கு ஆப்பிரிக்க‌ நாடுக‌ளில் ஒன்றான‌ சூடானில் ஒரு அல்கொய்தா தீவிர‌ வாதியின் கைதை அடுத்து ஒரு திடுக்கிடும் செய்தி வெளியான‌து. ஆம் அல்கொய்தா தீவிர‌வாதிக‌ள் சில‌ விஞ்ஞானிக‌ளின் உத‌வியால் அணுகுண்டுக‌ளை த‌யார் செய்வ‌து போன்ற‌ ஆராய்ச்சிக‌ளில் ஈடுப‌ட்டு கொண்டிருக்கின்ற‌ன‌ர் என்ற‌ அந்த‌ செய்தி பாதுகாப்பு ஏஜென்சிக‌ளுக்கு எச்ச‌ரிக்கை ம‌ணி அடித்…

  17. 50 ஆண்டுகளில் முதல் முறையாக மலேசியாவில் ஆளும் கூட்டணிக்கு முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை திகதி : Sunday, 09 Mar 2008, [saranya] மலேசியா நாட்டில் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கூட்டணியான தேசிய அணியில் (பாரிசன் நேசனல் கூட்டணி), மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்று இருந்தது. இந்த கூட்டணி தான் நாடு விடுதலை பெற்றது முதல் கடந்த 50 ஆண்டுகளாக அந்த நாட்டை பெரும்பலத்துடன் ஆட்சி செய்து வந்தது. இந்த தேர்தலில் முதல் முறையாக அந்த கூட்டணிக்கு மிகச்சிறிய அளவிலான மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றது. அரசியல் சட்டத்தை திருத்துவதற்கு 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி ஆளும் கூட்டணிக்கு தேவை. மொத்தம் உள்ள 220 தொகுதிகளில் 139 இடங்களில…

    • 0 replies
    • 750 views
  18. பாகிஸ்தானில் புதிய அரசு அமைக்கும் விவகாரம்: பெனாசிர், நவாஸ் ஷெரீப் கட்சிகள் இடையே உடன்பாடு திகதி : Sunday, 09 Mar 2008, [saranya] பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சி 2-வது இடத்தை பிடித்தது. அதிபர் முஷரப் ஆதரவு கட்சி படுதோல்வியை தழுவியது. பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன. எனினும் சில கருத்துவேறுபாடுகள் காணப்பட்டதால் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்தது. இ…

    • 0 replies
    • 629 views
  19. கோவிந்தாவின் சாதனை Monday, 10 March, 2008 12:28 PM . மும்பை, மார்ச் 10: நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் கடந்த 4 ஆண்டுகளில் பாலிவுட் நடிகர் கோவிந்தா 2 நிமிடங்கள் மட்டுமே மக்களவையில் பேசியுள்ளார். திரைப்பட நட்சத்திரங்கள் அரசியலில் குதித்து, எம்.பி.க்க ளாவது வழக்கமாக இருந்து வருகிறது. . ஹேமமாலினி, தர்மேந்தரா, ஜெயப்பிரதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தற்போது எம்.பி.க்களாக உள்ளனர். எனினும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படும் திரைப்பட நட்சத்திரங்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதில் அத்தனை ஆர்வம் காட்டுவதில்லை. பல எம்.பி.க்கள் நாடாளுமன்றம் பக்கமே தலை காட்டுவதில்லை. ஹேமமாலினி, தர்மேந்திரா மற்றும் ஜெயப்பிரதா ஆகியோர் இதுவரை மிக சில நாட்கள் மட்டுமே…

    • 1 reply
    • 861 views
  20. விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே வன்னிய சமூகத்தைச் சேர்ந்த கிருஸ்துவர்களுக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த கிருஸ்துவர்களுக்கும் இடையே ஜாதிக் கலவரம் நடந்த எறையூரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறிவிட்டதால் அந்த கிராமமே வெறிச்சோடிக் கிடக்கிறது. இங்குள்ள புனித ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் வழிபாடு நடத்தும் போது தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக தலித் மக்கள் குற்றம் சாட்டியதால் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 3 மாதமாக பிரச்சனை இருந்து வந்தது. இந் நிலையில் தலித் சமூக மக்கள் தனியாக ஒரு தேவாலயத்தை நிறுவி, தங்கள் தேவாலயத்தை தனிப் பங்காக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்ததால் பிரச்சனை தீவிரமானது. இதற்கிடையே நேற்று காலை அங்கு பயங்கர ஜாதி…

  21. தெலுங்கு தேசம் கட்சியில் பிளவு: சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக முன்னாள் மந்திரி போர்க்கொடி திகதி : Sunday, 09 Mar 2008, [sindhu] ஆந்திராவில் தெலுங்கானா பகுதியை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதை வலியுறுத்தி உருவா னதுதான் தெலுங்கானா ராஷ் டிரிய சமிதி கட்சி. அதன் தலைவர் சந்திரசேகர்ராவ் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டார். தேர்தல் வாக்குறுதியில் தனி தெலுங்கானா அமைப்போம் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தற்போது மவுனம் சாதிப்பதால் சந்திர சேகர்ராவ் காங்கிரஸ் கூட் டணியில் இருந்து வெளியேறினார்.சமீபத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூண்ட…

    • 0 replies
    • 627 views
  22. மேகாலயா-நாகலாந்து தேர்தல் ஆட்சி அமைப்பதில் இழுபறி; காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை திகதி : Sunday, 09 Mar 2008, [sindhu] திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து 4-வது முறை யாக ஆட்சியை பிடித்துள்ளது. புதிய அரசு பதவி ஏற்பு விழா நாளை அகர்தலாவில் நடைபெறுகிறது. முதல்-மந்திரியாக மாணிக் சர்க்கார் 3-வது முறையாக பதவி ஏற்கிறார். முன்னதாக புதிதாக தேர்ந் தெடுக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் சட்டசபை கட்சி தலைவராக மாணிக் சர்க்கார் தேர்ந்து எடுக்கப்படுகிறார். திரிபுராவில் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் மேகாலயா, நாகலாந்து மாநி லங்களில் காங்கிரஸ் கட்சி…

    • 0 replies
    • 630 views
  23. கியூபா மாற வேண்டும்: புஷ் திகதி : Sunday, 09 Mar 2008, [saranya] கியூபா தொடர்பான அமெரிக்க கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால், அந்நாடு முதலில் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். சமீபத்தில் பிடல் காஸ்ட்ரோ ஓய்வு பெற்றதையடுத்து கியூபா தொடர்பான அமெரிக்காவின் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பலரும் கூறியதை சுட்டிக்காட்டிய புஷ், உண்மையில் கியூபாதான் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கியூபாவின் கொள்கைகள் மாறாதவரை, அந்நாட்டின் மீது அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாது என்று அவர் கூறியுள்ளார். கியூபாவில் புதிய அதிபர் பதவியேற்றாலும் அதன் கொள்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எ…

  24. பிரபல எழுத்தாளர் சுஜாதா மரணம் சென்னை : சென்னையில் பிரபல எழுத்தாளர் சுஜாதா என அழைக்கப்படும் ரங்கராஜன் மரணமடைந்தார். அவருக்கு வயது 75. இவர் சிவாஜி, அந்நியன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வச‌னம் எழுதியுள்ளார். தினமலர்

  25. நான்கு மாதத்துக்குப் பின்னர் சூரியனைக் கண்ட லாங்கியர்பைன் தீவு மக்கள் [08 - March - 2008] நான்கு மாத இருளுக்குப் பின் லாங்கியர்பைன் தீவு மக்கள் முதல் முறையாக சூரிய உதயத்தை அனுபவித்துள்ளனர். வடதுருவத்தில் இருந்து 1000. கி.மீ., தொலைவில் உள்ள தீவு லாங்கியர் பைன். வடபகுதியில் மனிதர்கள் வாழும் கடைசித் தீவு.இதற்கு அப்பால் மனிதர்கள் வசிக்க முடியாது. இந்தத் தீவை 100 ஆண்டுகளுக்கு முன் லாங்கியர் பைன் என்ற அமெரிக்கர் கண்டுபிடித்தார். அவர் பெயரிலேயே இத்தீவு அழைக்கப்படுகிறது. இந்தத் தீவில் பிரதான தொழில்சுரங்கம் தோண்டுவதுதான். இங்கு விமானநிலையம் இருக்கிறதுடன், இரண்டாயிரம் பேர் வசிக்கின்றனர். 15 குழந்தைகள் பள்ளிக்கூடமும் செயல்பட்டு வருகிறது. சூரியன் பூமத்திய …

    • 0 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.