உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
திருக்கடையூர் கோவில் பயணம் ரத்து; ஜெயலலிதா சென்ற விமானத்தில் கோளாறு- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் சென்னை, பிப். 20- நாகை மாவட்டம் திருக் கடைïரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நீண்ட ஆயுள் வேண்டி பக்தர்கள் தங்கள் 60 மற்றும் 80-வது பிறந்தநாளில் சிறப்பு பூஜைகள் செய்து அமிர்தகடேசுவரரை வழிபடுவது வழக்கம். அ.தி.மு.க. பொதுச் செய லாளர் ஜெயலலிதாவுக்கு வருகிற 24-ந்தேதி 60-வது பிறந்த நாள் . மாசி மகத்தன்று ஜெயலலிதா பிறந்தவர் என்? தால் நாளை மாசிமகம் வருவதால் திருக்கடைïர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்த முடிவு செய்து இருந்தார். இன்று காலை சென்னையில் இருந்து குட்டி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சை செல்ல முடிவு செய்து இருந்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
2004 ஆசிய சுனாமிக்குக் காரணமான பூமி அதிர்ச்சி ஏற்பட்ட இடத்தில் மிகப் பலமான பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தோனிசியா உட்பட ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. The Hawaii-based Pacific Tsunami Warning Centre issued a tsunami watch for Indonesia, but said "a destructive widespread tsunami threat does not exist based on historical earthquake and tsunami data". http://news.bbc.co.uk/1/hi/world/7254325.stm
-
- 1 reply
- 2.2k views
-
-
கொசோவா நாளை 17:02:08 சுதந்திர நாடாகிறது. நாளை கொசோவா தனது சுதந்திர பிரகடனத்தை அறிவிக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 13 replies
- 2.7k views
-
-
தமிழக முதல்வர் கலைஞர் ஒரு திருமணவிழாவில் மணமகனுக்கு பெயர் மாற்றம் செய்ய விரும்பி தமிழ் பெயராக அன்புச்செல்வன் என்று மாற்றம் செய்து அழைத்தார். இதனை எங்கள் மறைந்த அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் நினைவாக அவர் மனதில் நீங்காத உணர்வுகளின் பாதிப்பாக இப்பெயரை வைத்தார் என்று எடுத்து கொள்ளலாமா? மேடையில் திருமணம்-பெயர் மாற்றம்: முன்னதாக மாநாட்டு மேடையில் செங்கல்பட்டு நகர திமுக செயலாளர் சதீஷ்பாபு-ரேவதியின் திருமணத்தை சுயமரியாதை திருமணமாக கருணாநிதி நடத்தி வைத்தார். அப்போது பேசிய கருணாநிதி. நான் இங்கே மணமகனுக்கு ஒரு வேண்டுகோளை வைத்து வாழ்த்துகிறேன். சதீஷ்குமார் என்ற அவர் பெயரை மாற்றி தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார…
-
- 0 replies
- 964 views
-
-
முஷாரப் கதி என்ன? Tuesday, 19 February, 2008 01:50 PM . இஸ்லாமாபாத், பிப்.19: பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஸ் ஷெரீப் கட்சி அதிக இடங்களை வென்றுள்ளன. . எதிர்க்கட்சிகளுக்கு கூட்டாக பெரும்பான்மை பலம் கிடைத்திருப்ப தால் முஷாரப் கதி என்னவாகும் எனும் கேள்வி எழுந்துள்ளது. புதிய பிரதமராக யார் பொறுப்பேற்க கூடும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முஷாரப் ஆதரவு பெற்ற ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு இடையே பாகிஸ்தானில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. வன்முறை அச்சத்தால் பலர் வாக்களிக்க வரவில்லை. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஐ.நா. அமைதிப்படைகள் எதியோப்பியாவுக்குள் நுழைவதற்கு எரித்திரியா தடை விதித்தது [19 - February - 2008] [Font Size - A - A - A] * ஐ.நா. கடும் ஆட்சேபம் எரித்திரியாவிலுள்ள ஐ.நா.வின் நூற்றுக் கணக்கான அமைதிப் படைகளை எதியோப்பியாவுக்குள் நுழைவதற்கு எரித்திரியா தடை விதித்துள்ளமைக்கு ஐ.நா. தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. எரித்திரியா அரசாங்கம் ஐ.நா.வின் அமைதிப் படைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து தனது படைகளை எதியோப்பியாவுக்கு செல்லுமாறு ஐ.நா. உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஆறு வாகனங்கள் மட்டுமே எரித்திரியாவை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தமது படைகளுக்கான விநியோகங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சில படையினர் துப்பாக்கி முனையில் அ…
-
- 0 replies
- 664 views
-
-
பிடல் காஸ்ரோ அதிபர் பதவியிலிருந்து இராஜினமா. பிடல் காஸ்ரோ அதிபர் மற்றும் இராணுவ அதிகாரி பதவியில் இருந்து இராஜினமா செய்துள்ளார். Castro resigns as Cuban president: official media. Fidel Castro resigned Tuesday as president and commander in chief of Cuba, the online official press said. AFP.
-
- 0 replies
- 689 views
-
-
புலிகள் ஊடுருவல் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் - ஜெயலலிதா தெரிவிப்பு [Monday February 18 2008 05:00:51 PM GMT] [யாழினி] தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுருவல் தொடர்பான பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் பாராளுமன்றத்திலும் தமது கட்சியினர் இந்தப் பிரச்சினையை எழுப்பப் போவதாகவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இந்தப் பிரச்சினையை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பேரவையில் எழுப்பினார். இந்நிலையில் தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு …
-
- 3 replies
- 1.2k views
-
-
மலேசியாவில் அமைதி பேரணி நடத்திய மலேசிய தமிழர்கள் மீது தாக்குதல் கோலாலம்பூர் : மலேசியாவில் அமைதி பேரணி நடத்திய தமிழர்கள் மீது மலேசிய போலீசார் தடியடி நடத்தி தாக்குதல் நடத்தினர். மலேசியாவில் சமஉரிமை கோரி மலேசிய தமிழர்கள் உட்பட இந்திய வம்சாவளியினர் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி போராட்டம் நடத்தினர். இவர்கள் மீது தடியடி நடத்தியும் கலைத்தனர். மேலும் பலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்தவர்களை விடுவிக்க கோரி இன்று மலேசியாவில் தமிழர்கள் அமைதியாக பேரணி நடத்தி, கையில் ரோஜாக்களுடன் பிரதமர் படாவியிடம் மனு கொடுப்பதற்காக பார்லிமென்ட் நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து.நிறுத்தியதோடு அல்லாமல், அவர்கள் மீது தடியடி நடத்தியும், தண்ணீரை பீச்சியடித்தும், கண்ணீர…
-
- 13 replies
- 1.7k views
-
-
துருக்கியரை வேலைக்கு அழைக்கும் நோர்வே ! 17.02.2008 / நிருபர் எல்லாளன் தற்போது ஸ்கன்டிநேவிய நாடுகளான டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளில் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில் நோர்வே தனது ஆட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக துருக்கியில் இருந்து பணியாளரை இறக்க உள்ளதாக அந்நாட்டின் தொழில் அமைச்சர் பியான கோகன் கன்சன் தெரிவித்தார். துருக்கியில் நிறைய படித்தவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு உரிய வேலை கிடைக்கவில்லை அத்தகைய திறமைசாலிகளை நோர்வே பயன்படுத்த விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார். அதேவேளை ஏற்கெனவே துருக்கியரை வேலைக்கு அமர்த்தி அதனால் பல சமூக சிக்கல்களை சந்தித்த டென்மார்க் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பணியாளரை வரவழைப்பது நல்ல…
-
- 1 reply
- 1k views
-
-
லால் மசூதியில் மதகுரு கொல்லப்பட்டமைக்கு பழிதீர்க்கவே பெனாசிரைக் கொன்றோம் [17 - February - 2008] * வாக்குமூலத்தில் தீவிரவாதிகள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் லால் மசூதியில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மதகுரு கொல்லப்பட்டமைக்கு பழிவாங்குவதற்காகவே முன்னாள் பிரதமர் பெனாசிரைக் கொன்றோமென பெனாசிர் கொலை தொடர்பில் கைதான குற்றவாளிகள் வாக்குமூலத்தின் போது தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கடந்த ஏழாம் திகதி ராவல்பிண்டியில் வைத்துகைதுசெய்யப்பட்ட உசேன் குல் மற்றும் ரபாகத் ஆகியோர் அளித்த வாக்குமூலத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாக்குமூலத்தில் அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதா…
-
- 0 replies
- 629 views
-
-
எம்.ஜி.ஆர். வாரிசு யார்? [17 - February - 2008] -கலைஞன் - தமிழக அரசியலில் எம்.ஜீ.ஆர். வாரிசு நானா நீயா என்ற போட்டி உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தாமே எம்.ஜீ.ஆர்.எனக் கூறும் பெரியண்ணா விஜயகாந்த், நாட்டாமை சரத் குமார் ஆகியோரின் விஸ்வரூப வளர்ச்சி தி.மு.க.வுக்கும் அ.தி.மு.கவுக்கும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் கொடுக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க.வையே இதுவரை பரம விரோதியாக கருதிவந்த கருணாநிதிக்கும் தி.மு.க.வையே இதுவரை தனது பரம வைரியாக கருதி வந்த ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்தும் சரத் குமாரும் குடைச்சலைக் கொடுக்கத் தொடங்கியுள்ளதால் இவர்களுக்கெதிரான பிரசாரங்களை தி.மு.க.வும் அ.தி.மு.வும் முடுக்கிவிட்டுள்ளதால் தமிழக அரசியலில் அனல் பறக்கத் தொடங்கி விட்டது. …
-
- 0 replies
- 2.1k views
-
-
தற்கொலை தாக்குதலில் 80 பேர் பலி.70 பேர் காயமடைந்துள்ளார்கள். KANDAHAR, Afghanistan - A suicide bombing at an outdoor dog fighting competition killed 80 people and wounded scores more Sunday, a governor said, in what appeared to be the deadliest terror attack in Afghanistan since the fall of the Taliban in 2001. Officials said the attack apparently targeted a prominent militia commander who had stood up against the Taliban. He died in the attack. Several hundred people — including Afghan militia leaders — had gathered to watch the event on the western edge of the southern city of Kandahar. Witnesses reported gunfire from bodyguards after the blast; it w…
-
- 0 replies
- 607 views
-
-
தாய்லாந்தில் வாகனம் செலுத்தும்போது கைத்தொலைபேசி பாவிக்கத் தடை. 16.02.2008 / நிருபர் எல்லாளன் பாங்கொக்: வாகனங்களில் செல்லும்போது கைத்தொலைபேசி உபயோகிப்பதற்கு தாய்லாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு மே மாதம் 8ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களைச் செலுத்துவோர் கைத்தொலைபேசி பயன்படுத்துவதால் அதிக அளவில் விபத்துகள் நடைபெறுகின்றன. இத்தகைய விபத்துகளை தடுக்க, வாகனம் செலுத்தும் போது கைத்தொலைபேசி உபயோகத்திற்கு தடை விதிக்க தாய்லாந்து அரசாங்கம் முடிவு செய்தது. இதையடுத்து, அதற்கான தடை உத்தரவை தாய்லாந்து அரசு பிறப்பித்துள்ளது. இந்தத் தடை உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று வாகனச் சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்…
-
- 0 replies
- 637 views
-
-
பிரிட்டனில் சிகரெட் வாங்க பர்மிட்? . Saturday, 16 February, 2008 04:00 PM . லண்டன்,பிப். 16: பிரிட்டனில் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் சிகரெட்டுகளை வாங்க விரைவில் 10 பவுண்டுகள் மதிப்புள்ள பர்மிட் பெற வேண்டியது அவசியமாகக் கூடும். . சிகரெட் வாங்குவதற்கு பர்மிட் வைத்திருக்க வேண்டியதை கட்டாயமாக்க வேண்டும் என்ற இந்த அலோசனையை பிரிட்டன் அரசாங்கத்தின் சுகாதார ஆலோசனை அமைப்பான ஹெல்த் இங்கிலாந்து அமைப்பு தெரிவித்துள்ளது. பர்மிட் முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் நிதி தேசிய சுகாதார திட்டத்திற்கு அளிக்கப்படும் என்று ஹெல்த் இங்கிலாந்தின் தலைவர் ஜுலியன் லீ கிராண்ட் தெரிவித்துள்ளார். பர்மிட் பெறுவதில் உள்ள சிக்கல் மற்றும்…
-
- 0 replies
- 685 views
-
-
மாவீரன் நெப்போலியன் மரணுத்துக்கு, வயிற்று புற்று நோய் தான் காரணம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். போரில் திறமை பெற்ற பிரெஞ்சின் புகழ்பெற்ற மாமன்னர் நெப்போலியன், 1815ம் ஆண்டு நடந்த வாட்டர்லுõ போரின் போது, தோல்வியை சந்தித்தார். அவரை, அட்லான்டிக் தென்பகுதியில் உள்ள ஹெலினா தீவுக்கு, பிரிட்டிஷ் அரசு நாடு கடத்தியது. அங்கு அவர் இறந்து போனார். அவரது முடியை ஆராய்ந்த விஞ்ஞானிகள், அதில் விஷம் இருந்ததால், நெப்போலியனை விஷம் கொடுத்து சாகடித்திருக்க வேண்டும் என்று 1961ம் ஆண்டு முடிவு செய்தனர். இது தவறு என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. நெப்போலியன் வசித்த காலத்தில் இருந்த அனைவரது முடியிலும், நச்சுத்தன்மை இருந்தது. நெப்போலியனின் மகனின் முடியிலும், நெப்போலியன் சிறுவனாக …
-
- 1 reply
- 1.6k views
-
-
கொசோவா தனிநாட்டு பிரேரணைக்கு ஆப்பு வைக்க ரஸ்யா, சேர்பியா கங்கணம் ! ஐ.நாவில் பிரேரணை. 15.02.2008 / நிருபர் எல்லாளன் கொசோவோவின் அல்பேனிய இன தலைவர்களால் மேற்கொள்ளப்படக் கூடிய எந்தவொரு சுதந்திர பிரகடனத்தையும் ரத்துச் செய்யும் தீர்மானம் ஒன்றை செர்பிய அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. அப்படியான ஒரு பிரகடனம் செர்பியாவின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் செயலாகும் என்று அறிக்கை ஒன்றில் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகலில் கொசோவோவின் அந்தஸ்து குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்ஸில் ஆராயவிருந்தது. செர்பியா மற்றும் ரஷ்யாவின் வேண்டுகோளை அடுத்து இந்தச் சந்திப்பு நடக்கவுள்ளது. இன்னும் சில நாட்களில் பிரகடனப்படுத்தப்படப் போவதாக நம்பப்படு…
-
- 6 replies
- 1.3k views
-
-
கேரளாவில், “சிவப்பு மழை’யின் பரபரப்பு ஓய்ந்த நிலையில், “மீன் மழை’ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிச்சூர் அருகே உள்ள கந்தனசேரி என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. சிலர் வேலை முடிந்து தாமதமாக இரவில் மழையில் நனைந்தபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, தங்கள் மீது மீன் விழுவதை பார்த்து அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர். இத்தகவல் கிராமத்தில் பரவியதும் பரபரப்பு ஏற்பட்டது. மழையில் விழுந்த மீன்களை, ஒரு வாளி தண்ணீரில் சிலர் போட்டு வைத்தனர். அப்பகுதியில் உள்ள குளம், வாய்க்கால் போன்றவற்றில் கிடைக்கும் வகையை சேர்ந்த சிறு மீன்கள் என்பது மறுநாள் பகலில் உறுதிப்படுத்தப்பட்டது. இது குறித்து கேட்ட போது, கொச்சி அறிவியல் பல்கலைக்கழகத்தின் மீன்வள அறிவியல் துறை பேராசிரி…
-
- 0 replies
- 2.8k views
-
-
சோனியாவுக்கு அழைப்பாணை அனுப்பலாமா? தேர்தல் அதிகாரிகளிடையே கருத்து முரண்பாடு 13.02.2008 / நிருபர் எல்லாளன் வெளிநாட்டு விருது பெற்றது தொடர்பாக சோனியா காந்திக்கு அழைப்பாணை அனுப்புவது குறித்து தேர்தல் அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பெல்ஜியம் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான "ஓர்டர் ஒப் லியோபோல்ட்' என்னும் விருதை அவருக்கு அந்நாட்டு அரசு வழங்கியது. இது குறித்து கேரளாவைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர், ""சோனியா காந்தி பெல்ஜியம் நாட்டுக்கு விசுவாசமாக நடந்து கொண்டதாலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. எனவே அவரை பாரா…
-
- 2 replies
- 772 views
-
-
அமெரிக்கா-இலினாய்ஸ் பல்கலையில் துப்பாக்கி சூடு-4 மாணவிகள், 1 மாணவன் பலி வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 15, 2008 இலினாய்ஸ்: அமெரிக்காவின் வடக்கு இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் 5 மாணவர்களை சுட்டுக் கொன்ற நபர் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 22 மாணவர்கள் மீதும் குண்டுகள் பாய்ந்து காயமடைந்துள்ளனர். ஜியாலஜி வகுப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் 3 துப்பாக்கிகளுடன் ஒருவன் அங்கு வந்தான். ஆசிரியரின் அருகே போய் நின்ற அவன், வகுப்பை கவனித்துக் கொண்டிருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இதில் 4 மாணவிகளும் ஒரு மாணவனும் அங்கேயே குண்டு பாய்ந்து பலியாயினர். மற்ற மாணவ, மாணவிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இதில் 22 பே…
-
- 2 replies
- 978 views
-
-
மும்பையிலிருந்து வட இந்தியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்! வியாழன், 14 பிப்ரவரி 2008( 19:36 IST ) மராட்டிய நவ நிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்ரேவின் தொண்டர்களால், மும்பை, நாசிக் நகரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் பலர் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தாமாகவே வெளியேறி வருகின்றனர். மராட்டியத்தில் வசிக்கும் வட இந்தியர்களுக்கு எதிராகப் பேசிய ராஜ் தாக்ரே நேற்று கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அவர் கைதான தகவல் அறிந்ததும், மும்பை, நாசிக், புனே உள்ளிட்ட நக…
-
- 1 reply
- 1.1k views
-
-
சென்னை: சென்னையில் இளம் காதலர்கள் ரோஜாப்பூ, வாழ்த்து அட்டைகள், பரிசுகள் வழங்கியும், ஓட்டல்களில் `காக்டெய்ல்' விருந்துடனும் காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். காதலர் தினமான நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பார் உதவியாளர்கள் தயாரித்து வழங்கிய புதிய வகை `காக்டெய்ல்'களை சுவைத்து மகிழ்ந்த பல ஜோடிகளை பார்க்க முடிந்தது. கலாசார சீரழிவு என்ற எதிர்ப்புகளை பற்றி கவலைப்படாத இந்த இளம் ஜோடிகள், காதலுக்கு கலாசாரம், மதம் மட்டுமல்ல `காக்டெய்ல்'லும் தடையில்லை என்று மகிழ்ச்சியில் திளைத்தனர். இவர்களுக்காக பார் உதவியாளர்களும் மது வகைகளுடன் பழ வகைகளை கலந்து தங்களது புதுமையினால் அசத்தினர். தாஜ் கன்னிமாரா ஓட்டலின் பார் உதவியாளர் அசோக்குமார், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி பழம…
-
- 5 replies
- 1.5k views
-
-
காதலர் தினத்தை எதிர்த்து போராட்டம் 2/14/2008 6:29:35 PM வீரகேசரி இணையம் - காதலர் தினத்தை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பு இன்று டில்லியில் போராட்டம் நடத்தியது. இந்த இயக்கத்தின் அமைப்பாளர் அ.வா. சுனில்குமார் கருத்து தெரிவிக்கையில் நம் நாட்டில் காதலர் தினம் என்ற பெயரில் மேல்நாட்டவரின் மோகக் கலாசாரம் தலைவிரித்து ஆடுகிறது. இளைஞர்களிடம் தமது பண்பாட்டையும் கலாசாரத்தையும் வலியுறுத்தி அவர்களுக்கு நல்வழிகாட்டுவதே இன்றைய பெரியோர்களின் கடமை என்பதை உணரவேண்டும். புதுச்சேரியில் இந்து முன்னணி கடந்த ஆண்டு எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் அப்போது காதலர் தினம் எங்கும் கொண்டாடப்படவில்லை. இந்நிலையில் இந்தத் தினத்தைக் கொண்டாட உள்ள நிறுவனங்கள் முன் இன்றும் (நேற்று) ஆர்ப்பாட்டம் …
-
- 2 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி முதல் சுவிஸில் வசிக்கும் அனைத்து வதிவிட உரிமை பெற்றவர்களும் வீசா இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சென்று வரலாம். மேலதிக தகவல்கள்:- http://www.ajeevan.ch/content/view/115/1/
-
- 15 replies
- 2.1k views
-
-
டென்மார்க் பத்திரிகையில் முகமது நபியின் காட்டூன்கள் வெளியானதும், அதைத் தொடர்ந்து அந்த பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராகவும், டென்மார்க் நாட்டிற்கும் மக்களுக்கும் எதிராகவும் உலககலாவிய ரீதியில் முஸ்லீம் உலகில் எழுந்த எதிர்ப்பும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். பின்னர் அது அந்த காட்டூனை வரைந்த ஒவியரின் தலைக்கு முஸ்லீம் மதத்தலைவர்களால் விலைகுறிக்கப்பட்டு, இன்று அந்த விலைக்காக தலையை கொய்ய வந்தவர்கள் பிடிபட்டது வரை வந்திருக்கிறது. இப்படி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த காட்டூன்களையும் ஒரு தடவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தேடியதில் கிடைத்தவையே இவை. அதில் அப்படி நான் எதிர்பார்த்தளவில் பாரதூமாக எதுவும் எனது சிற்றறிவுக்கு தென்படவில்லை! பல மரணங்களையும், மரண தண்டனை அறிவிப்புகள…
-
- 32 replies
- 5.8k views
-