உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26859 topics in this forum
-
லண்டனில் வீராப்பு பேசிய விஜய் மல்லையாவை மும்பையில் அமலாக்கப் பிரிவு வீழ்த்தியது எப்படி? லண்டனில் சி.பி.ஐ, மும்பையில் அமலாக்கப் பிரிவு நெருக்கடி கொடுக்க மல்லையா நாடு திரும்ப முடிவு செய்துள்ளார். ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது விஜய் மல்லையா பிரச்னை. இந்தியாவில் 17 பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்துவரும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கை, கடைசிக்கட்டத்தை எட்டியுள்ளது. இனிமேல் விஜய் மல்லையா வந்தாலும் வராவிட்டாலும், அவரின் 13,900 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் கைப்பற்றப்பட்டு, நாட்டின் கருவூலத்தில் சேர்க்கப்படும். கடந்த…
-
- 0 replies
- 420 views
-
-
லண்டனில் வெள்ளை நிற ரோஜாக்களுடன் நடைபெற்ற ஸ்டீபன் ஹாக்கின்ஸ் இறுதி சடங்கு! புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்சின் இறுதி சடங்கு ஏராளமானோர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஜ்டீபன் ஹாக்கின்ஸ் கடந்த 14 ஆம் திகதி தனது 76 வயதில் இங்கிலாந்து கேம்பிரிஜ் இல் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்துள்ளார். இவர் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு காணப்பட்டுள்ளதுடன், அவ்வாறே பல விஞ்ஞான சாதனைகளையும் நிலைநாட்டியுள்ளார். இந்நிலையில் இவரது உடல் 50 வருடங்களாக ஆராய்ச்சியாளராக காணப்பட்ட கோன்வில் மற்றும் காயஸ் கல்லூரியில் இருந்து, அல்லி மலர் மற்றும் வெள்ளை ரோஜாக்களை சவப்ப…
-
- 0 replies
- 525 views
-
-
பெங்களூருவில் மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இலங்கை அமைச்சருக்கு எதிராக கறுப்பு கொடி பிடித்து ஆக்ரோஷம் காட்டியவர்கள் மீண்டும் ஒரு புரட்சி செய்து தமிழர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள். பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற 'நான்காவது சர்வதேச ஆயுர்வேத மாநாட்டில்' கலந்து கொள்வதற்காக வந்திருந்த இலங்கை கண்டி மாகாணத்தின் சுகாதாரத் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுனில் கே அமரதுங்காவுக்கு கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கறுப்பு கொடி காட்டிய 40 பேரும் பெங்களூரு போலிசாரால் கைது செய்யப்பட்டனர். இதில் ரம்யா தயாளன் என்ற ஒரு கன்னட பெண்ணும் அடக்கம். கைது செய்யப்பட்ட பின்பு என்ன நடந்தது என்பதை கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் கல…
-
- 0 replies
- 367 views
-
-
இந்தியின் முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி. சல்மான் கான் உள்பட பல ஸ்டார்களின் முன்னாள் காதலியான இவர் சினிமாவிலிருந்து டி.வி.க்கு வந்திருக்கிறார். இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சேட்டிலைட் சேனல் 'சேனல் 4.' இதன் பிரதான நிகழ்ச்சி 'பிக் பிரதர்.' பிரபலமான நபரின் ஒருமாத வாழ்க்கையை அப்படியே லைவ்வாக காண்பிக்கும் இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முதன்முறையாக இந்நிகழ்ச்சிக்கு இந்தியாவைச் சேர்ந்த ஷில்பா ஷெட்டியை 'சேனல் 4' தேர்ந்தெடுத்திருக்கிறது. ஒருமாதம் வேறு சில பிரபலங்களுடன் தங்கியிருக்கும் ஷில்பாவை லைவ்வாக காண்பிக்கப் போகிறார்கள். எழுத்தாளர்கள், பாப் இசைக்கலைஞர்கள் கொண்ட இந்த குழுவில் அனைவரையும் கவர்ந்தவர் ஷில்பா ஷெட்டிதான் என்கிறார்கள். ஒருமாத…
-
- 71 replies
- 9.2k views
-
-
லண்டனில், பாரிய தீ விபத்து! லண்டனிலுள்ள கட்டடம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிழக்கு லண்டனின் Barking பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில், உள்ளூர் நேரப்படி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) 3.31 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த 100 தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மாலை 6 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/லண்டனில்-பாரிய-தீ-விபத்த/
-
- 0 replies
- 494 views
-
-
லண்டனுக்கு வந்த திமிங்கிலம் தேம்ஸ் நதியூடாக லண்டனின் மத்திய பிரதேசத்திற்குள் 5 மீற்றர் நீளமான திமிங்கிலம் உட்பிரவேசித்துள்ளது. வழக்கமாக வடக்கு அட்லாண்டிக் பகுதியின் ஆழ்கடல் பிரதேசங்களில் சிறு கூட்டமாக காணப்படும் இந்த சிறிய வகை திமிங்கிலம் தேம்ஸ் நதிக்கு வந்தது அதிசயமாக கருதப்படுகின்றது. இந்த அரிய காட்சியை காண தேம்ஸ் நதியருகே நேற்று பெருந்தொகையான மக்கள் கூடியிருந்தனர். இதனை பாதுகாப்பான முறையில் மீண்டும் கடலுக்கு அழைத்து செல்வதற்காக முயற்சியில் கடல் வாழ் உயிரினங்களை காக்கும் அமைப்பு ஈடுபட்டுள்ளது. நேற்று இந்த செய்தியே பிரத்தானிய தொலைக்காட்சிகளில் பரபரப்பான விடயமாக இருந்ததுடன் பல தொலைக்காட்சிகளில் திமிங்கிலம் பயணம் செய்வதை நேரடி ஒளிபரப்பாக காண கூடியதாக இருந்தது. …
-
- 21 replies
- 3.9k views
-
-
லண்டனை அடுத்து ஜெர்மனியிலும் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என அச்சப்படுகிறது.பேர்லினில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடமேற்கு பேர்லினில் உள்ள Hohenschönhausen பகுதியில் உள்ள இரவு நேர விடுதிக்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் அந்த நாட்டு நேரப்படி அதிகாலை 2.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜெர்மன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை லண்டன் சுரங்க ரயில் நிலையத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் காரணமாக, 29 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக…
-
- 1 reply
- 537 views
-
-
2011 இல் பிரிட்டனில் நடத்தப்பட்ட மக்கள் கணக்கெடுப்பின் பிரகாரம்.. லண்டனில் வெறும் 45% மக்களே உள்ளூர் வெள்ளை பிரிட்டன் மக்களாக உள்ளனர். மிகுதிப் பேர் வெளிநாட்டவர்களாவர். நாடாளவிய ரீதியில் பிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கையே முதன்மை வகிக்கிறது. போலந்து நாட்டவர்கள் இரண்டாம் இடத்தையும்.. பாகிஸ்தானியர்கள்.. மூன்றாம் இடத்தையும் தக்க வைத்துள்ளனர். 2001 கணக்கெடுப்பில் போலந்து நாட்டவர்களின் எண்ணிக்கை முதல் 10 க்குள் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும்.. குடியேற்றக்காரர்களின் வரவால் பிரிட்டன் வீட்டுப் பிரச்சனைக்கு ஆளாகி உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. மேலும்.. மத ரீதியில்.. கத்தோலிக்கர்களின் சனத்தொகை வீழ…
-
- 1 reply
- 794 views
-
-
லண்டனை முடக்க திட்டமிட்டுள்ள எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு! காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அவசரநிலை குறித்து இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அடுத்த வாரம் முதல் லண்டன் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு தீர்மானித்துள்ளது. சுற்றுச்சூழல் நெருக்கடியைச் சமாளிப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தொடங்கும் வரை ஒக்ரோபர் 7 முதல் இரண்டு வாரங்கள் அல்லது நடவடிக்கை எடுக்கப்படும் வரை வெஸ்ட்மின்ஸ்டரை முடக்க ஆர்வலர்கள் குழு திட்டமிட்டுள்ளது. அத்துடன் லண்டன் சிற்றி விமான நிலையத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் லண்டனில் ஏனைய பகுதிகளில் சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 60 க்கும்…
-
- 0 replies
- 453 views
-
-
லண்டன் - ஆஸ்திரேலியா: இடைநில்லா விமானச் சேவை - குவாண்டாஸ் நிறுவனம் அறிவிப்பு பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருடன் இணைக்கும் 14,498 கிமீ தூரம் கொண்ட 17 மணிநேர இடைநில்லா விமானச் சேவையை குவாண்டாஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. லண்டன்: லண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை இணைக்கும் விமான சேவையினை குவாண்டாஸ் நிறுவனம் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 14,498 கிமீ தூரத்தை கடந்து செல்லும் இடைநில்லா விமானச் சேவை நீண்ட காலமாக பல்வேறு நிறுவனங்களும் அறிவித்து பின…
-
- 8 replies
- 679 views
-
-
லண்டனில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதற்கு வெளிநாட்டினரின் வருகைதான் முக்கியக் காரணம்... லண்டன் இப்போது குற்றவாளிகளின் நகரமாக மாறிக்கொண்டுவருகிறது. கள்வர்கள், போதைப்பொருள் கடத்துபவர்கள், சிறுவர்களைப் பாலியல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்கிறவர்கள், கொலைசெய்கிறவர்கள், பிள்ளைகளைக் கடத்துகிறவர்கள், பெண்கள் மீதான வன்முறையைப் பிரயோகிப்பவர்கள் என்று குற்றங்கள் நிறைந்த இடமாகக் காணப்படுகிறது. உள்ளூர் ஆங்கிலத் தொலைக்காட்சிகளிலெல்லாம் ‘கள்வர்கள் கவனம்’ என்று விளம்பரம் போட்டுச் சொல்லுமளவுக்குக் குற்றச்செயல்கள் அதிகரித்திருக்கின்றன. இறக்குமதியாகும் குற்றங்கள் லண்டனில் வெளிநாட்டவர்களின் வருகைக்குப் பின்னர்தான் களவும், கொள்ளையும் குற்றச் செயல்களும் அதிகரித்துவிட்டதாக வெள்ளைக்கார நண்பர…
-
- 12 replies
- 1.1k views
-
-
லண்டன் - சீனா சரக்கு ரயில் 12,000 கிமீ பயணத்தை முடித்து சீனா வந்தடைந்தது லண்டனிலிருந்து சீனாவுக்கு சனிக்கிழமை வந்து சேர்ந்த சரக்கு ரயில் ஈஸ்ட் விண்ட். | படம். |ஏ.எஃப்.பி. மேற்கு ஐரோப்பாவுடன் தனது வர்த்தக தொடர்பை உயர்த்தும் நோக்கத்துடன் லண்டன் - சீனா சரக்கு ரயில் ’ஈஸ்ட் விண்ட்’ தனது 12,000 கிமீ பயணத்தை முடித்து கிழக்கு சீன நகரமான யிவூக்கு இன்று (சனிக்கிழமை) வந்து சேர்ந்தது. உலகின் 2-வது மிக-நீளமான ரயில் தடமாகும் இது. இந்த ரயிலில் விஸ்கி, குழந்தைகளுக்கான பால் உள்ளிட்ட பொருட்கள் சீனாவுக்கு வந்திறங்கின. தனது வர்த்தகத்தை உலகின் பல்வேறு திசைகளுக்கும் கொண்டு செல்லும் சீனாவின் மிகப்பெரிய திட்டமாகும் இது. …
-
- 4 replies
- 710 views
-
-
பாரிய பனிப்பாறை அண்டார்டிகாவின் பிரண்ட் பனிக்கட்டியை உடைத்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகின் பாரிய பனிப்பாறைகள் பிரித்தானிய விஞ்ஞானிகள் உலகின் பாரிய இரண்டு பனிப்பாறைகளை கண்காணித்து வருகின்றனர். அவற்றில் ஒன்று கிரேட்டர் லண்டன் அளவுடையது என்றும், மற்றொன்று கார்ன்வால் அளவுடையது என்றும் கூறப்படுகிறது. பிரித்தானிய அண்டார்டிக் சர்வேயின் ஹாலி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து திரும்பிய பனிப்பாறை நிபுணர் மருத்துவர் ஆலிவர் மார்ஷ், இது கன்றை ஈன்றுவது போன்ற இது எங்களுக்கு தெரிந்தது என குறிப்பிட்டார். ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில், A81 என்ற பாரிய பனிக்கட்டி அண்டார்டிகாவின் பிரண்ட் ஐஸ் ஷெல்ஃப்பில் இருந்து விட…
-
- 1 reply
- 465 views
-
-
லண்டன் ஆர்ப்பாட்டத்தில் உலக அளவில் கவனத்தை ஈர்த்த கறுப்பின இளைஞன் லண்டனில் கறுப்பின மக்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த தீவிர வலதுசாரி ஆதரவாளரான வெள்ளையரை கறுப்பின இளைஞர் ஒருவர் பாதுகாப்பாக தூக்கி செல்லும் காட்சி பதிவான புகைப்படம் தற்போது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்களின் உண்மையான காரணம் எதுவென இந்த ஒற்றைப் புகைப்படம் உணர்த்துவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். திடகாத்திரமான ஒரு கறுப்பின இளைஞன், முகக்கவசம் அணிந்து கொண்டு, காயத்துடன் ரத்தம் சொட்டும் ஒரு வெள்ளையரை தனது தோளில் சுமந்தபடி, பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறும் காட்சியே புகைப்படமாக வெளியானது. கறுப்பின ஆதரவு ஆர்ப்பாட்டமானது தற்போது லண்டனில் இனவெறியை தூண்டிய தலைவர்கள…
-
- 1 reply
- 758 views
-
-
ஐ.எஸ் குழுவினர் வெளியிட்டுள்ள புது வீடியோவில் லண்டன் உள்ளிட்ட 3 நகரங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் வெளியிட்டுள்ள புது வீடியோ பதிவில் லண்டன், பெர்லின் மற்றும் ரோம் நகரங்களில் அடுத்த தாக்குதல் இருக்கும் என எச்சரித்துள்ளனர். பாரிஸ் மற்றும் பிரசெல்ஸ் தாக்குதல் குறித்து பேசும் அந்த வீடியோவில், ஐ.எஸ் குழுவினருக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு இதுவே தீர்வு எனவும் எச்சரிக்கின்றனர். பாரிஸ், பிரசெல்ஸ் நாகரங்களை அடுத்து தாக்குதலை தொடுக்கும் நகரம் குறித்து அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், தெரிவு செய்யப்பட்டுள்ள 3 நகரங்களில் ஒன்றில் முதலில் தாக்குதல் தொடுக்கப்படும் எனவும் அந்த ஐ.எஸ்.ஆதரவாளர் தெரிவிக்கின்றார். …
-
- 0 replies
- 424 views
-
-
லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் அசம்பாவிதம் லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் அசம்பாவித நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அசம்பாவித இடத்தை காவல் துறையினர் சூழ்ந்திருப்பதாக அறிவிக்கப்படுகின்ற அதேவேளை மக்களை குறித்த பகுதியை தவிர்க்குமாறும் கோரியுள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பான விபரங்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/archives/51346
-
- 2 replies
- 533 views
-
-
லண்டனில் நடைபெறவுள்ள கோடை ஒலிம்பிக் போட்டிகளின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தை ஈரான் தடை செய்துள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது. London2012.Com எனும் குறித்த இணையத்தளத்தை தேடுபொறிகளில் தேடினால் தானாக Peyvandha.ir எனும் மாற்றுத்தளத்திற்கு செல்வதாக ஈரானியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் ஈரானின் வெளிவிவகார அமைச்சிடம் முறையிடப்பட்டுள்ள போதும் அவர்கள் பதில் அளிக்க மறுத்துள்ளனர். ஈரானின் அரச தலைமைகள் அண்மையில் விடுத்த உத்தரவின் படி சைபர் கஃபேக்களில் இணையத்தை உபயோகிக்கும் ஈரானியர்கள், அவர்களுடைய ID, மற்றும் பெயர் விபரங்களை பதிவிட வேண்டிய விதிமுறை கொண்டுவரப்பட்டது. மேலும் லண்டன் ஒலிம்பிக்கின் லோகோவில் Zion எனும் வார்த்தை பிரயோகம் தோன்றுவதாகவும், இது இஸ்ரேல் அல்…
-
- 1 reply
- 512 views
-
-
[size=4]லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது, அமெரிக்க விமானங்களின் மீது தாக்குதல் நடத்த அல் -கொய்தா தீவிரவாத அமைப்பு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.[/size] [size=4]லண்டன் ஒலிம்பிக் வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் உலக நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள், வீராங்கணைகள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியை சீர்க்குலைக்கும் வகையில், அல்-கொய்தா அமைப்பு போட்டியின் இடையே அமெரிக்க விமானங்களின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக சண்டே டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலை நடத்துவதற்காக, நார்வேயை சேர்ந்த ஒருவரை, முஸ்லீம் மதத்திற்கு மாற்றி, அவருக்கு தீவிரவாத பயிற்சி அளித்திருப்பதாக தெரிக…
-
- 0 replies
- 421 views
-
-
லண்டன் கம்டன் லொக் சந்தை((Camden Lock Market )) யில் தீ விபத்து : பிரித்தானியாவின் லண்டனில் தீ விபத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வடக்கு லண்டனின் கம்டன் லொக் சந்தை (Camden Lock Market ) யில் இவ்வாறு தீ விபத்து இடம்பெற்றுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் 70 தீயனைப்புப் படைவீரர்களும் பத்து தீயனைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தீ மிகவும் வேகமாக பரவியதாக நேரில் கண்ட சாட்சியொருவர் தெரிவித்துள்ளார். தீ விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரையில் பதிவாகவில்லை, எனினும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது http://globaltamilnew…
-
- 0 replies
- 407 views
-
-
லண்டன் மாநகரக் காவல்துறையில் சற்று வித்தியாசமான திறன் படைத்தவர்கள் இருக்கின்றனர். தாங்கள் பார்க்கின்ற கிட்டத்தட்ட எல்லா முகங்களையும் நினைவில் வைத்துக்கொள்ளும் அசாத்திய திறமை இந்த சூப்பர் ரெக்கக்னைசர்களுக்கு (Super Recogniser) உள்ளது. மக்கள் கூட்டங்களுக்குள்ளே குற்றவாளிகளையும் சந்தேகநபர்களையும் தங்களின் கழுகுக் கண்களைக் கொண்டு கண்டுபிடிப்பது தான் அவர்களின் வேலை. http://www.bbc.com/tamil/global/2015/10/151021_super_recognisers
-
- 0 replies
- 620 views
-
-
அண்மையில் சென்னையில் நடந்த போலீஸ் விருது வழங்கு விழாவில் தமிழக முதல்வர்,தமிழகத்தின் உளவுப்பிரிவுத் தலைவர் ஜாஃபர்சேட்டுக்கு சிறப்பு விருது வழங்கினார்.அது தேசிய சட்ட நாள் விருது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செயல்படும் பன்னாட்டு நீதியரசர்கள் குழுமத்தினர்,உலக அளவில் போலீஸ் துறையில் சிறப்பாக செயல்-படுபவர்களுக்கு இந்த விருதை வழங்குகிறார்கள்.இந்த விருதை இந்தியாவிலிருந்து பெறும் காவல்துறை அதிகாரியாக ஜாஃபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அது என்ன தேசிய சட்ட நாள் விருது? சட்டம், ஒழுங்கை காப்பாற்றுவது, குற்றங்களைத் தடுப்பது,பயங்கரவாதத்துக்கு எதிராக துடிப்புடன் செயல்படுவது இப்படி பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து விருதுக் குரிய காவல்துறை அதிகாரியைத் தேர்ந்தெடுத்து இந்த விருதை வ…
-
- 0 replies
- 856 views
-
-
லண்டன்: இங்கிலாந்தில் கோயில் பசுவை அத்துமீறி கருணைக் கொலை செய்த அமைப்பு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மிகப்பெரிய இந்துக் கோயிலான பக்தி வேதாந்த மேனர் கோயில் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் என்ற இடத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான கோசாலையில் கங்கோத்ரி என்ற 13 வயது பசு இருந்தது. ஒரு விபத்தில் கங்கோத்ரியின் கால்கள் முறிந்ததால் நிற்க முடியாமல் மாதக்கணக்கில் படுத்தே கிடந்தது. இதனால் அதன் வயிறு மற்றும் முதுகு பகுதியில் புண்கள் ஏற்பட்டு ஆறாத ரணமாகிவிட்டது. வேதனையால் பரிதாபமான நிலையில் இருந்த கங்கோத்ரியை விஷ ஊசி போட்டு கருணைக் கொலை செய்துவிடலாம் என்று கோயில் நிர்வாகத்திடம் ராயல் சொசைட்டி என்ற பிராணிகள் வதை தடுப்பு அமைப்பு கோரியது. இதற்கு கோயில் நிர்வாகம் ஒத்த…
-
- 0 replies
- 759 views
-
-
கன்டெய்னர் லாரிகள், மினி பஸ் மோதல்: லண்டன் கோர விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பலி பதிவு: ஆகஸ்ட் 28, 2017 00:57 லண்டனில் கன்டெய்னர் லாரிகளும், மினி பஸ்சும் மோதிக்கொண்ட கோர விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்கள். லண்டன்: லண்டனில் கன்டெய்னர் லாரிகளும், மினி பஸ்சும் மோதிக்கொண்ட கோர விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் காஞ…
-
- 6 replies
- 1.1k views
-
-
லண்டன் சிற்றி விமான நிலையத்தில் இரசாயன தாக்குதல் லண்டன் சிற்றி விமான நிலையத்தில் இன்று மாலை 4.15 மணியளவில் இரசாயனதாக்கம் ஏற்பட்டதாக கருதப்படுகின்றது. இத்தாக்குதல் காரணமாக பிரிட்டிஷ் எயர்வெயஸ் ஊழியர் 5 பேர் பாதிப்புக்குள்ளாகியதாகவும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 26 பேர் அம்பியுலன்ஸ் வைத்தியத்துக்குட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விமானநிலையத்தில் இருந்த 500 பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன் விமான நிலையமும் அவசரமாக மூடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http…
-
- 1 reply
- 462 views
- 1 follower
-
-
லண்டன் சுரங்க ரயில் குண்டு வெடிப்பு: 18 வயது இளைஞர் கைது லண்டன் சுரங்க ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் சுமார் 24 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களை வேட்டையாடிய போலீஸார் 18 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். ஆனாலும், ஒரு நபருக்கு மேல் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் அதிகாரிகள் ரகசிய புலனாய்வு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால் விவரங்களை வெளியிட இடமில்லை என்று தெரிவித்துள்ளனர். இங்கிலிஷ் கால்வாய், டோவர் துறைமுகப் பகுதியிலிருந்து 18 வயது இளைஞர் ஒருவரை கெண்ட் போலீஸ் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இவர…
-
- 4 replies
- 1.2k views
-