உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26857 topics in this forum
-
2011 மார்ச்சில் மக்கள் புரட்சியுடன் ஆரம்பித்த சிரிய உள்நாட்டுப் போரில் 190 000 பேர் பலி SATURDAY, 23 AUGUST 2014 14:25 2011 மார்ச் மாதம் அமைதியான முறையில் சிரியாவில் ஆரம்பித்த மக்கள் புரட்சி உள்நாட்டுப் போராக வெடித்ததில் இதுவரை பலி எண்ணிக்கை 191 000 ஐத் தாண்டி விட்டதாகவும் கடந்த வருடம் பலி எண்ணிக்கை முன்னைய் வருடத்தின் இரு மடங்கை விட அதிகமாக இருந்ததாகவும் வெள்ளிக்கிழமை ஐ.நா இன் மனித உரிமைகள் அலுவலகம் அறிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் தலைமை அதிகாரி நவிபிள்ளை சிரியாவில் இந்த தீவிர மனிதப் படுகொலை நிகழ்ந்ததற்கு முக்கிய காரணமாக மேற்குலகின் அலட்சியப் போக்கே விளங்குவதாகவும் இவற்றின் பதில் நடவடிக்கை வலிமையானதாக இல்லாதது தான் சிரிய கொலையாளிகள் தமது படுகொலைக…
-
- 0 replies
- 390 views
-
-
லடாக்கில்.... 100 இந்திய வீரர்களை. 300 சீன ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்? டெல்லி: ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் 100 இந்திய வீரர்களை 300 சீன ராணுவத்தினர் முற்றுகையிட்டிருப்பதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா சீனா இடையே உறுதியான எல்லைக்கோடு வரையறுக்கப்படவில்லை. இதனால் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. காஷ்மீரின் லடாக் பகுதியில் புர்ட்சே என்ற இடத்தில் கடந்த மாதம் 25 கி.மீ தூரம் சீனப் படையினர் ஊடுருவினர். இந்திய ராணுவத்தினர் தெரிவித்த எதிர்ப்பை அடுத்து அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிச் சென்றனர். இந்நிலையில் லடாக் பகுதியில் டெம்சாக் என்ற இடத்தில் சீன வீரர்கள் 30 பேர் கடந்த 11ந் தேதி 500 மீட்டர் தூ…
-
- 0 replies
- 844 views
-
-
சில்மிஷ பாதிரியார் 'எஸ்கேப்'போராட்டம் டிசம்பர் 05, 2006 சென்னை: சிறுமிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதராக சர்ச்சையில் சிக்கியுள்ள பாதிரியார் தலைமறைவாகி விட்டார். அவரைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள், பெண்கள் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னை பரங்கிமலை பகுதியைச் சேர்ந்தவர் போபர்ஸ் ஜெயராஜ். 60 வயதாகும் இவர் ஒரு பாதிரியார். அப்பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த எனது மகள் உள்பட பல சிறுமிகளை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று தனது காம வெறியைக் காட்டியதாக ஜெயராஜ் மீது மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சகாயமேரி என்பவர் புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரிக்க பரங்கிமலை உதவி ஆணையர…
-
- 0 replies
- 712 views
-
-
தன் ராஜ்ஜியத்திற்கு இப்படி ஒரு சோதனை வரும் என்று அழகிரி நினைத்திருக்க மாட்டார். தென் மாவட்ட இடைத்தேர்தல்களைப் போல் பணத்தையும், ஆட்களையும் வைத்து சட்டமன்றத் தேர்தலை எளிதாக எதிர்கொள்ளலாம் என நினைத்தார் அழகிரி. அந்த எண்ணத்திற்கு ஆப்பு வைத்து அஞ்சாநெஞ்சனையே நிலைகுலைய வைத்து விட்டது தேர்தல் ஆணையம். மதுரையில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாமா? என்கிற அளவுக்கு தேர்தல் ஆணையம் தீவிரமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, தேர்தல் ஆணையம் கடுமையாக நடந்து கொள்ள ஆரம்பித்தது. தேர்தலை தள்ளிவைக்க வேண்டும், தேர்தல் முடிவுகளை சீக்கிரம் அறிவிக்க வேண்டும் என்கிற அரசியல் கட்சிகளின் எந்தக் கோரிக்கையையும் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. தமிழகம் முழுவதும் அதிகாரிகள் மாற்றப்பட் டன…
-
- 0 replies
- 710 views
-
-
அகதிகளுக்கு தாற்காலிக நுழைவு இசைவு (விசா) வழங்கும் சர்ச்சைக்குரிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம், தனது குடியேற்றச் சட்டத்தை ஆவுஸ்திரேலியா கடுமையாக்கியுள்ளது. குடியேற்றச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான மசோதா ஆவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்ககல் செய்யப்பட்டது. மசோதா மீது இரவு முழுவதும் நடைபெற்ற விவாதத்துக்குப் பின், மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அது வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தையடுத்து, தஞ்சம் தேடி ஆவுஸ்திரேலியா வரும் அதிகளுக்கு 3 ஆண்டுகளுக்கான தாற்காலிக நுழைவு இசைவு வழங்கப்படும். அந்த நுழைவு இசைவு வைப் பெறுவதன் மூலம், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகத் தங்கும் உரிமையை அகதிகள் பெற முடியாது. நுழைவ…
-
- 0 replies
- 260 views
-
-
புதுடெல்லி, ரஷியா அதிபர் விளாடிமீர் புதின் இந்திய வருகை இருநாடுகள் இடையிலான நட்புறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா - ரஷியா நாட்டு தலைவர்களுக்கு இடையேயான 15–வது உச்சி மாநாடு டெல்லியில் நடக்கிறது. இதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உயர்மட்டக்குழுவினருடன் நேற்று இரவு டெல்லி வந்து சேர்ந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு முதலில் தனிப்பட்ட முறையிலும், பின்னர் உயர்மட்டக்குழு மட்டத்திலும் நடைபெறுகிறது. பின்னர் அவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து பேசுகிறார். ரஷியா அதிபர் புதினை இன்…
-
- 0 replies
- 494 views
-
-
மலேசிய விமான நிலையத்தில் 7 மாதங்கள் தங்கியிருந்த சிரிய அகதி கனடா அனுப்பி வைப்பு November 29, 2018 விசா காலாவதியாகிய நிலையில் மலேசிய விமான நிலையத்தில் தங்கியிருந்த சிரிய அகதி ஒருவர் 7 மாதங்களுக்குப் பின்னர் கனடா அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சிரியாவைச் சேர்ந்த 37 வயதான ஹசன் அல் கோடார் என்பவர் மலேசியாவுக்கு சுற்றுலா வந்து அங்கிருந்து வேறு நாட்டுக்குச் செல்ல முயன்ற போது கோலாலம்பூர் விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருந்தனர். மேலும் ஹசனின் விசா காலம் முடிந்து விட்டதாகத் தெரிவித்து அவருக்கு அனுமதி மறுத்ததனைத் தொடர்ந்து அவர் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் தற்போது ஏழு மாதங்களுக்குப் பின்னர் இந்த வாரம் அவர் கனடா சென்றடைந்து…
-
- 0 replies
- 498 views
-
-
[11 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] * புஷ் கவலை கொசோவாவிற்கு ஐ.நா. ஆதரவுடன் சுதந்திரத்தை வழங்குவதற்கான திட்டம் ரஷ்யா மற்றும் சேர்பியாவின் எதிர்ப்பினால் பாதிப்படையும் நிலையிலுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் தெரிவித்துள்ளார். இத்தாலிக்கான விஜயத்தின் போது அந் நாட்டு பிரதமர் றோமனோ புறொடியுடன் பேச்சுக்களை நடத்திய பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இப் பேச்சுக்களின் பின் புஷ்ஷூக்கு எதிராகத் திரண்ட ஆர்ப்பாட்டகாரர்களை கலகத் தடுப்பு பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி கலையச் செய்தனர். ஜனாதிபதி புஷ்ஷின் ஜரோப்பிய விஜயத்தின் அடுத்த கட்டமாக அவர் அல்பேனியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். சேர்பியாவிடமிருந்து கொசோவாவிற…
-
- 0 replies
- 763 views
-
-
எந்த நாட்டிலும் ஊழல் இல்லாமல் இல்லை' - தன்னார்வ நிறுவனத்தின் அதிரவைக்கும் ஆய்வு ..! watchdog Transparency International என்ற சர்வதேச தன்னார்வ நிறுவனம் உலக அளவில் ஊழல் மிகுந்த நாடுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்தது. அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் ஊழலை அடிப்படையாகக் கொண்டு 180 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தப் பட்டியலில் சோமாலியா, தெற்கு சூடான், சிரியா ஆகிய நாடுகள் முதல் முன்று இடங்களைப் பிடித்துள்ளன. வறட்சி, போர், முதலான விஷயங்களால் சிக்கி தவித்து வரும் இந்த நாடுகளில் லஞ்சம், ஊழல் அதிக அளவில் தலைவிரித்தாடுகிறது. இந்தப் பட்டியலில் இந்தியா 78-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு…
-
- 0 replies
- 953 views
-
-
கடந்த 5-ம் தேதி கொச்சினில் மலையாள சினிமா உலகினர் ஒன்றுகூடி, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ‘அணையை உடைப்போம்…’ என்று குரல் எழுப்பினார்கள்.அதில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, திலீப், முகேஷ் போன்ற நடிகர்களும் கமல், உன்னிகிருஷ்ணன் போன்ற டைரக்டர்களும் அடக்கம். தமிழ் சினிமா மட்டும் இன்னும் அமைதி காக்கும் சூழலில், இயக்குனர் பாரதிராஜாவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ”இன்று, முல்லைப் பெரியாறு பிரச்னை அந்த அணையைக் காட்டிலும் பிரமாண்டமாக எழுந்து தமிழனை மிரட்டுகிறது. நேற்று வரை சகோதரனாக இருந்த மலையாளி, இன்று சண்டையாளி. இரண்டு மாநில மக்களையும் சமாதானப்படுத்த வேண்டிய மத்திய அரசு, கை கட்டி வேடிக்கை பார்க்கிறது. மாநில அரசுகளை மோத விட்டு ஓரமாய் உட்கார்ந்து ரசிக்கிறது. இப்போது கேரள…
-
- 0 replies
- 777 views
-
-
ஹெய்ட்டியின் வான்பரப்பில் அமெரிக்காவின் இரண்டு ஜெட்விமானங்கள் துப்பாக்கி பிரயோகத்தினால் சேதமடைந்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. ஹெய்ட்டியில் அதிகரிக்கும் காடையர் குழுக்களின் வன்முறைகளின் மத்தியில் அந்த நாடு விமானப்போக்குவரத்தினை இடைநிறுத்தியுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஹெய்ட்டி தலைநகர் போட் ஒவ் பிரின்சில் தரையிறங்கிக்கொண்டிருந்த ஸ்பிரிட் எயர்லைன்ஸ் விமானத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது, அதன் பணியாளர் ஒருவர் சிறியகாயங்களிற்குள்ளானார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்னர் அந்த விமானம் அங்கு தரையிறங்காமல் டொமினிக் குடியரசின் சான்டியாகோவில் தரையிறங்கியது, அங்கு விமானத்தை சோதனையிட்டவேளை துப்பாக்…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
சவுதி அரேபியா சுற்றுலா பயணிகளுக்கான விசாக்களை வழங்க தீர்மானம் ! சவுதி அரேபியா முதல் முறையாக சுற்றுலா பயணிகளுக்கான விசாக்களை வழங்க தீர்மானம் செய்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெட்ரோலிய கச்சா எண்ணெய் வளம் தவிர்த்து சுற்றுலாத் துறையின் மூலமும் வளர்க்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவர சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் திட்டமிட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக வெளிநாட்டினருக்கு சுற்றுலா விசாக்களை முதல் முறையாக சவுதி அரேபியா வழங்குகிறது. இதுகுறித்து சவுதி அரேபியாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் அகமது அல் காதீப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''சவுதி அரேபியாவை சர்வதேச சுற்றுலாவுக்…
-
- 0 replies
- 348 views
-
-
வட கொரிய தலைவரின் உயர்மட்ட உதவியாளர் கார் விபத்தில் பலி வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் உயர்மட்ட உதவியாளர் கிம் யங் கோன் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் உயர்மட்ட உதவியாளர் கார் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது. கிம் யங் கோன் என்ற எழுபத்து மூன்று வயதான அவர், தென் கொரியாவுடனான உறவுகளை கையாளும் பொறுப்பில் இருந்தார். இரு நாடுகள் மீள இணைவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளையும் இவர் கையாண்டு வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தென் மற்றும் வட கொரியாவுக்கு இடையில் பீரங்கித் வெடி பரிமாற்றதை அடுத்து ஏற்பட்டிருந்த பதற்றநிலையை தளர்த்த உதவிய வட கொரிய பிரதிநிதிகள் குழுவில் இவரும் இருந்தார். ப…
-
- 0 replies
- 653 views
-
-
அசாஞ் மீதான விசாரணையை ஸ்வீடன் கைவிடுகிறது விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ் மீது 2010 இல் சுமத்தப்பட்ட பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை ஸ்வீடனில் உள்ள வழக்குரைஞர்கள் கைவிட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் அசாஞ், 2012 இல் லண்டனில் உள்ள ஈக்வடோரியன் தூதரகத்தில் தஞ்சம் புகுந்து ஏழு ஆண்டுகளாக சுவீடனுக்கு ஒப்படைக்கப்படுவதைத் தவிர்த்துள்ளார். 48 வயதான ஆஸ்திரேலியர் ஜூலியன் அசாஞ் மே மாதம் ஈக்வடோர் தூதரகத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். அத்துடன் பிணை நிபந்தனைகளை மீறியதற்காக அவருக்கு 50 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் (Belmarsh) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொது வழக்கு வ…
-
- 0 replies
- 410 views
-
-
தினமலரில் வெளியான செய்தியின் ஒரு பகுதி இங்கே இணைக்கப்படுகிறது. தமிழ்த்தாய் இச்செய்தியால் குற்றுயிராக்கப்படாமல் சிற்சில திருத்தங்கள். (தமிங்கலத்தில் உள்ளவை தனி ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றன.) தமிழில் "Left, Right' போட்ட ம.தி.மு.க.,: ம.தி.மு.க., சென்னை மண்டல மாநாடு, தீவுத்திடலில் நேற்று நடந்தது. மாலை 3.30 மணியளவில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து, சீருடை அணிந்த தொண்டர் அணியினரின் பேரணி துவங்கியது. மன்றோ சிலை அருகே ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, பேரணியை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேடைக்கு 3.45 மணிக்கு வந்துவிட்ட வைகோ, 5 மணி வரை பேரணியை பார்வையிட்டார், பின்னர் மாநாட்டுத் திடலுக்கு சென்றார். மாநாடு மற்றும் பேரணியை முன்னிட்டு சில…
-
- 0 replies
- 864 views
-
-
ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்! ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்ததுடன் குறிப்பாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை. ஈரான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்களுக்க…
-
- 0 replies
- 230 views
-
-
பிரித்தானியா செல்லும் தொழிலாளர்கள் மொழித் தேவைகளைப் பூர்த்தி செய்வது அத்தியாவசியம்! பிரெக்ஸிற் பிந்தைய விதிகள் நடைமுறைக்கு வருவதனால் தொழிலாளர்கள், வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவதற்கு மொழித் தேவைகளைப் பூர்த்தி செய்வது என்பது அடுத்த ஆண்டு முதல் அத்தியாவசியம் ஆக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா உத்தியோகப்பூர்வமாக வெளியேறினாலும் சிறிய மாற்றங்கள் கொண்டுவருவதற்கான காலம் டிசம்பர் 31 வரை நடைமுறையில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய மக்கள் உறுப்பு நாடுகளுக்கு இடையில் சுதந்திரமாக செல்ல முடிகின்றமையினால் நாட்டிற்கு வரும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் பெருமளவான பிரித்தான…
-
- 0 replies
- 438 views
-
-
அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு! அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் புதன்கிழமை (16) 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி தீவு நகரமான சாண்ட் பாயிண்டிலிருந்து தெற்கே சுமார் 87 கி.மீ தொலைவில் அமைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அலாஸ்கா நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 12:37 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அலாஸ்காவின் கடற்கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். எனினும், பிற்பகல் …
-
- 0 replies
- 141 views
-
-
25 JUL, 2025 | 06:44 PM ஆர்.சேதுராமன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பராக விளங்கிய, உலகின் முதல்நிலை கோடீஸ்வரர் இலோன் மஸ்க், 'அமெரிக்கா கட்சி' எனும் புதிய அரசியல் கட்சியை ஸ்தாபிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அந்நாட்டு அரசியலில் மஸ்க்கின் கட்சி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ளன. 'டெஸ்லா' மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனம், 'ஸ்பேஸ் எக்ஸ்' எனும் ரொக்கெட் தயாரிப்பு மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் 'எக்ஸ்' சமூக வலைதள நிறுவனங்களின் அதிபரான இலோன் மஸ்க், உலகின் முதல்நிலை கோடீஸ்வரராக விளங்குகிறார். அவரின் செல்வ மதிப்பு 400 பில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * எக்வடாரின்ன் மோசமான நிலநடுக்கத்தில் குறைந்தது 270 பேர் பலியான நிலையில் உயிர் தப்பியவர்களை மீட்கும் பணிகள் இரண்டாவது நாளாக தீவிரம்; * பிரேசில் அதிபர் டில்மா ரொசெஃபை குற்றம்சாட்டி பதவிநீக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேறியது; பிரேசிலின் தேசிய நிற ஆடைகளணிந்து அவரது எதிர்ப்பாளர்கள் இதைக் கொண்டாடினாலும் அதிபரின் ஆதரவாளர்களும் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர்; * போலியோவுக்கு எதிரான புதிய நோய்த்தடுப்பு மருந்து அறிமுகம்; உலக வரைபடத்தில் அழிவின் விளிம்பிலுள்ள போலியோ நோய் ஆப்கானிலும், பாகிஸ்தானிலும் தொடர்வது ஏன்? ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 364 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - துருக்கிய மக்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் விசா இல்லாமல் அனுமதிக்கும்படி ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை. ஆனால், ஐரோப்பிய நாடுகளிடம் ஒருமித்த ஒப்புதல் இல்லை. - வடகொரிய பல்கலைக்கழகத்துக்குள் சென்ற பிபிசி செய்திக்குழு, அந்த ரகசிய நாட்டின் கல்வி முறையால் ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தது. - பிரஞ்சு நவநாகரிக அடையாளமான ''சனல்'' நிறுவனம் கம்யூனிஸ கியூபாவில் தமது நவநாகரிக ஆடை அணிகல நிகழ்வை மேடையேற்றியது.
-
- 0 replies
- 532 views
-
-
லண்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் உள்ள, 1.1 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்குவர் என, உலக வங்கி எச்சரித்துள்ளது. சீனாவில் வூஹான் நகரில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் 202 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், பொருளாதார வீழ்ச்சியால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில், கூடுதலாக 1.1 கோடி (11 மில்லியன்) மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது. இதுகுறித்து உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஆதித்ய மேட்டூ கூறுகையில், 'கொரோனா உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத…
-
- 0 replies
- 385 views
-
-
எகிப்தில் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் பங்குபற்றப்போவதில்லை! எகிப்து தலைநகர் ஷர்ம் எல்-ஷேக்கில் நாளையதினம் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் அமைப்பினர் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வருகை தொடர்பாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி ஆகியோர் தலைமையில் நாளை ஷர்ம் எல்-ஷேக்கில் காசா அமைதிக்கான மாநாடு நடைபெறவுள்ளதாக எகிப்திய ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் “இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் …
-
- 0 replies
- 203 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. *பெரும் சாத்தான் என்று வர்ணித்த அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இருந்திருக்கிறார் இரானின் முன்னாள் அதியுயர் ஆன்மீகத்தலைவர்; பிபிசிக்கு கிடைத்த பிரத்யேக ஆதாரங்கள்! *பயங்கரவாத எதிர்ப்பு மறுசீரமைப்புக்களை முன்வைக்கிறது ஜெர்மனி; ஜெர்மனியிலுள்ள அகதிகளை கடும்போக்கு இஸ்லாமியவாதிகள் இலக்கு வைப்பதாக அந்தநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கவலை *பிரிட்டிஷ் தெருக்களில் அதிகரிக்கும் குரூரமான நாய்ச்சண்டை; இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகும் கொடூரத்தை நிறுத்தக் கோரும் விலங்கு பாதுகாப்பாளர்கள்.
-
- 0 replies
- 406 views
-
-
ஜோத்பூர்: ராஜஸ்தானில் ஜோத்பூர் அருகே மெஹ்ரான்கர்க் என்ற இடத்தில் கோவிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 130 பேர் பலியாயினர். மேலும் 450 பேர் படுகாயமடைந்துள்ளனர். நவராத்திரியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெஹ்ரான்கர்க் மலைப் பகுதியில் அமைந்துள்ள சாமுண்டா கோவிலில் இன்று அதிகாலை தரிசனத்துக்காக குவிந்தனர். மலையடிவாரத்திலிருந்து கோவிலுக்குச் செல்லும் சுமார் 2 கி.மீ. நீளமுள்ள பாதை மிக மிகக் குறுகலானதாகும். அதன் வழியே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறிக் கொண்டிருந்தனர். மலையேறியவர்கள் கோவிலின் வெளியே கதவு திறப்பதற்காக காத்திருந்தனர். காலை 5.30 மணியளவில் மின்சாரம் தடைபட்டது. அப்போது சிலர் திடீரென கோவிலுக்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைய முயன்றனர்.…
-
- 0 replies
- 688 views
-