Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலர் காயம்-சுனாமி எச்சரிக்கை ஜூலை 16, 2007 டோக்கியோ: வட மேற்கு ஜப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 190 பேர் காயமடைந்தனர். பல வீடுகள் தரைமட்டமாகின. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஜப்பானின் வடமேற்கில் உள்ள நிகாடா மாகாணத்தில் உள்ள காஷிவாசாகி என்ற இடத்திற்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து தரை மட்டமாயின. ஏராளமானோர் இடிபாடுகளிடையே சிக்கியுள்ளனர். அதில் சிலருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது. இங்குள்ள கோவில்களின் கூரைகளும் இடிந்து விழுந்தன. நிகாடா மாகாணத்தில் உள்ள ஒரு அணு மின்சக்தி நிலைய…

  2. பயங்கரவாதத்திற்கு எதிரான போரும் அவுஸ்திரேலிய பிரதமரும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமானது ஒருபோதுமே முடிவுறப்போவதில்லை எனவும் பல தசாப்த காலங்களுக்கு அது நீண்டு செல்லும் என்றும் அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹோவார்ட் தனது நாட்டு மக்களை எச்சரித்திருப்பதுடன் இஸ்லாமிய அடிப்படை வாதத்தினால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலானது தொடர்ந்து வளர்ச்சியடைந்து செல்வதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார். எல்லைகளற்ற இந்த அச்சுறுத்தலின் யதார்த்த நிலை தொடர்பாக விழித்தெழுமாறு தனது நாட்டு மக்களுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார். தங்களின் வாழ்க்கை முறை மீது இஸ்லாமிய அடிப்படை வாதம் வெறுப்புணர்வைக் கக்குவதாக சாடியுள்ளதுடன் மத சுதந்திரத்தை இந்த அடிப்படைவாதம் அழித்து நாசமாக்குவதுடன் நின்றுவிடா…

  3. சிப்ஸ் திண்ற மகனை கொன்ற தந்தை ஜூலை 16, 2007 கட்டாக்: தான் சாப்பிட வாங்கி வந்த உருளைக்கிழங்கு சிப்ஸை தனது மகன் எடுத்துச் சாப்பிட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர், 6 வயது மகனை கொடூரமாக அடித்துக் கொன்றார். ஒரிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் நரசிங்கபூர் அருகே உள்ள நிமசாஹி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் நாயக் (28). நேற்று இவர் சாப்பிடுவதற்காக உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கி வந்தார். வீட்டில் சிப்ஸை வைத்து விட்டு அந்தப் பக்கமாக சென்றிருந்தார் நாயக். அப்போது அவரது 6 வயது மகன் அந்த சிப்ஸை எடுத்து சாப்பிட்டு விட்டான். திரும்பி வந்து பார்த்த ரமேஷ், சிப்ஸைக் காணாமல் திடுக்கிட்டார். தனது மகன்தான் எடுத்துச் சாப்பிட்டு விட்டான் என்பதை அறிந்த அவர், கோபத்தில…

    • 6 replies
    • 1.8k views
  4. "றோ"வை விமர்சித்து "றோ" அதிகாரி எழுதிய புத்தகத்துக்கு தடை விதிக்க இந்திய அரசு பரிசீலனை இந்திய உளவு அமைப்பான "றோ"வை விமர்சித்து முன்னாள் "றோ" அதிகாரி வி.கே.சிங் எழுதிய புத்தகத்துக்குத் தடை விதிப்பது குறித்து இந்திய அரசு பரிசீலித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. றோ அமைப்பில் பணியாற்றி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் வி.கே.சிங், அண்மையிக்ல் இந்தியாஸ் எக்ஸ்டர்னல் இன்டலிஜன்ஸ் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டிருந்தார். இந்திய இராணுவத்தில் உளவுப் பிரிவில் பணியாற்றிய சிங், கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை றோ அமைப்புடன் இணைந்து பணியாற்றினார். இதில் கிடைத்த அனுபவத்தை அவர் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். "அமெரிக்காவின் உளவு அமைப்பான சி…

  5. ஐ.நா. சபையின் பொதுச்சபை கூட்டத் தொடர் செப்டெம்பர் 25 ஆம் திகதி நியூயோர்க்கில் ஆரம்பம் வீரகேசரி நாளேடு ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி நியூயோர்க் நகரில் ஆரம்பிக்கவுள்ளது. ஐ.நா. சபையில் அங்கத்துவம் வகிக்கும் சகல நாடுகளினதும் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை ஐ.நா. பொதுச் சபையின் நிலையியற் குழு மேற்கொண்டு வருகின்றது. ஒவ்வொரு அங்கத்துவ நாடுகளினதும் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் ஆகியோருக்கு இது குறித்த அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக செப்öடம்பர் மாதம் 22 ஆம் திகதி நியூயோர்க் நகரிற்கு விஜயம் ம…

  6. இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல் ரீதியான தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும் திருச்சி, ஜூலை.15-: இலங்கை தமிழர் பிரச்சினையில், அரசியல் ரீதியான தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும் என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூறினார். திருச்சி, லால்குடி மாவட்ட திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி பெரியார் மாளிகையில் நேற்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமை, போர் தீவிரமாகும் சூழ்நிலையால் அங்குஉள்ள தமிழர்கள் அகதிகளாக வெளியேறும் நிலை உள்ளது. சிலர் காடுகளுக்கு சென்று உணவு இல்லாமல் தவ…

  7. அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் முறுகல் நிலை நீடிக்கின்றது. Written by Seran - Jul 14, 2007 at 04:23 PM இந்தியா அணுசக்தித்துறையில் மிகவேகமாக முன்னேறி வருகின்றது. அது அணுகுண்டுகளைத்தாயாரிப்பதில

    • 1 reply
    • 785 views
  8. வங்கக் கடலில் இந்தியா - அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் கூட்டுப் பயிற்சி. வங்கக் கடலில் இந்தியா,அமெரிக்கா,ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கப்பற்படைகள் கூட்டுப் பயிற்சி மேற்கொள்வதற்கு குறித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக் கடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கப்பற்படைகள் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப் போவதாக வந்துள்ள செய்தி குறித்து எமது அரசியல் தலைமைக் குழு தனது கவலையைத் தெரிவிக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே உ…

  9. ஈராக்கில் பணியாற்றும் அமெரிக்க படையினரின் விடுமுறையை அதிகரிக்கும் சட்டப் பிரேரணை தோல்வி. ஈராக்கில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்க படையினருக்கு போரிலிருந்து கூடிய ஓய்வளிக்கும் சட்டப் பிரேரணையொன்று அமெரிக்க செனட் சபையைச் சேர்ந்த குடியரசு கட்சி அங்கத்தவர்களால் முடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் ஈராக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தமது முயற்சிகளை ஜனநாயக கட்சியினர் புதுப்பித்த வேளையிலேயே இது இடம்பெற்றுள்ளது. இராணுவ கொள்கை தொடர்பான ஆரம்ப திருத்தமொன்று சம்பந்தமான வாக்கெடுப்பில் வெள்ளை மாளிகை வெற்றி கண்டிருந்தபோதும், படையினருக்கு அவர்களது பணிக்கிடையே வழங்கப்படும் ஆகக்குறைந்த ஓய்வு காலத்தை நிர்ணயிக்கும் வாக்கெடுப்பில் செனட் சபையி…

    • 1 reply
    • 881 views
  10. ஜுலை 20-இல் தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான ஆர்ப்பாட்டம்: திராவிடர் கழகம் ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு வேடிக்கை பார்ப்பதைக் கண்டித்து ஜுலை 20ஆம் நாளன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிவித்துள்ளார். சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திரிகோணமலையில் பேசிய சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்ச, விடுதலைப்புலிகளை அடியோடு அழித்தால் ஒழிய இலங்கையில் அமைதி திரும்பாது என்று கூறியிருக்கிறார். பல நாடுகள் ராணுவ நடவடிக்கை மூலம் ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. அரசியல் தீர்வு தான் ஒரே வழி என்று சொன்னதை ராஜபக்ச கேட்க தயாரில்லை. ஓர் இறுதிப் போராட்டத்துக்கு சிறிலங்கா ராணுவமும் புலி…

  11. பவனந்தி வடகிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவம் நிகழ்த்தி வரும் அட்டூழியங்களும், கொடு-மைகளும் அளவு கடந்து போய்க் கொண்டி-ருக்கின்றன. ‘இந்தியனே வெளியேறு’ என்ற முழக்கம் அசாம், மிசோரம் உள்ளிட்ட 7 மாநிலங்களிலும் உரக்கக் கேட்கிறது. ஈழத்தில் அமைதி(!)ப் படையின் செயல்பாடுகள் எப்படி என்பது நாறிப்போன விசயம். புனிதக் கட்டு உடைந்துவிடாமல் போற்றிப் பாதுகாக்கப்-பட்டு வரும் ராணுவத்தின் பிம்பம் சுக்கல் சுக்கலாகி ஆங்காங்கே தெறித்து விழுகிறது. தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் இந்திய துணை ராணுவப் படைகளுக்கு எதிரான மக்களின் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. மனோரமா என்ற பெண் பாலியல் வன்முறைக்கு இலக்காகி இராணுவத்தினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து எழுச்சி கண்டது போராட்டம். சமூகத்தின் மதிக்கத்…

  12. பிரித்தானியா கடற்கரையில் தமிழ் சிறுவன் மரணம் வோல்சிங்கம் தேவாலயத்துக்கு வருடாவருடம் நடைபெறும் திருவிழாவில் தமிழ்க் கத்தோலிக்கர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த வருட விழாவில் கலந்து கொள்ள சென்ற ஆனந்தராஜன் நீல்பிரசாந்தா என்ற 15 வயது சிறுவனும் கலந்து கொண்டபின்பு, வேல்ஸ் கடற்கரைக்கு நீந்தச் சென்றுள்ளார். அவருடன் நீந்தச் சென்ற 11 வயதுடைய சகோதரன் கடலலைகளில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். ஆனால் ஆனந்தராஜன் நீல்பிரசாந்தைக் காப்பாற்ற முடியவில்லை. Sea death boy was Tamil pilgrim A 15-year-old boy who died when he and an 11-year-old boy were swept out to sea was on a Tamil pilgrimage to Norfolk with his family. Anandarajan Neelprasantha, of Wembley, had been on pilgrim…

  13. குடியரசுத் தலைவராக ஒரு பெண் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில் வரக்கூடும் என்பது குறித்து பெரும் ஆரவாரங்கள் எழுந்துள்ளன. காங்கிரசு கூட்டணி சார்பில் இம்முறை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரதீபா பாட்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார். சென்ற முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட கேப்டன் இலட்சுமியைத் தோற்கடித்த அதே காங்கிரசு கட்சிதான் இம்முறை பிரதீபா பாட்டீலை நிறுத்தியுள்ளது. கேப்டன் இலட்சுமி இந்திய தேசிய இராணுவத்தில் இயங்கியவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் முழு மூச்சோடு பங்கேற்றவர். இந்திய விடுதலைக்குப் பிறகும் தொடர்ந்து பொது வாழ்க்கையில் செயலாற்றி வருபவர். அவரைவிட பிரதீபா பாட்டீலை சிறந்த வேட்பாளராகக் கருத இயலாது. ஆகஇ காங்கிரசு க…

  14. லண்டனில் உள்ள மிகவும் தீவிரமான நிலக்கீழ் தொடரூந்து வழிகளில் ஒன்றான "சென்றல் லைன்" தொடரூந்து Mile end - Bethanl green நிலக்கீழ் தொடரூந்து நிலையங்களுக்கிடையிலான பாதையில் தரம்புண்டதை அடுத்து பல பயணிகள் காயமைடந்தும் பலர் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளனர். இப்பயணப் பாதை எப்போதும் தீவிரமானதுடன் அதிக எண்ணிக்கையான பயணிகள் பயணம் செய்யும் பாதையும் ஆகும்..! பயணிகள் தொடரூந்து தடம் புரண்ட போது குண்டு வெடித்ததாக நினைத்துப் பெரும் பீதியடைந்துள்ளனர். 2005 இல் குண்டு வெடிப்பின் போதும் இதே வழி தொடரூந்து பாதிப்புக்குள்ளானதுடன் தமிழர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்..! Mile end - Bethanl green நிலக்கீழ் தொடரூந்து நிலையங்கள் மூடப்பட்டுள்ளன..! http://news.bbc.co.uk/1/hi/england/l…

    • 6 replies
    • 1.7k views
  15. உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஸ்லிம்; பில் கேட்ஸை முந்தி சாதனை ஜூலை 05, 2007 மெக்சிகோ: பல வருடமாக நம்பர் ஒன் பணக்காரராக இருந்து வந்த மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி விட்டு அந்த இடத்திற்கு வந்துள்ளார் மெக்சிகோவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவன அதிபரான கார்லோஸ் ஸ்லிம். உலகின் மிகப் பெரும் பணக்காரராக பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்தவர் கேட்ஸ். இந்த நிலையில் அவரது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் மெக்சிகோவைச் சேர்ந்த தொழிலதிபரான கார்லோஸ் ஸ்லிம். கார்லோஸ் ஸ்லிம், அமெரிக்கா மொவில் என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம்தான் லத்தீன் அமெரிக்காவிலேயே மிகப் பெரிய தொலைத்தொடர்பு நி…

    • 8 replies
    • 3k views
  16. கடத்தப்பட்ட பிபிசி செய்தியாளர் அலன் ஜோன்ஸ்ரன் விடுவிக்கப்பட்டார். காஸாவில் வைத்து இனந்தெரியாத ஆயுத கும்பலால் கடத்தப்பட்ட பிபிசி செய்தியாளர் அலன் ஜோன்ஸ்ரன் 4 மாதங்களின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். BBC's Gaza correspondent released BBC correspondent Alan Johnston has been released by kidnappers in Gaza after nearly four months in captivity. -BBC News- Photos: Associated press.

  17. `நிமிட்ஸ்' போர்க்கப்பல் நாளை அதிகாலை சென்னை வருகிறது- 6 இடங்களில் சுற்றுச்சூழல் சோதனை சென்னை, ஜுலை. 1- அமெரிக்காவின் மிகப் பிரமாண்டமான போர்க்கப்ப லான `நிமிட்ஸ்' சென்னை நோக்கி வந்து கொண்டிருக் கிறது. அணுசக்தியால் இயங் கும் இந்த கப்பல் 90 விமானங் களை சுமந்து வருகிறது. 4 ஏக்கர் பரப்பளவுக்கு பரந்து விரிந்துள்ள இந்த கப்பலில் இருந்து ஒரே நேரத்தில் 4 போர் விமானங்கள் கிளம்பிச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பலில் அணு ஆயுதங்களும், நீண்ட தூரத்துக்கு பாய்ந்து செல்லும் ஏவுகணைகளும் இருக்கின்றன.இந்த கப்பலில் உள்ள அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு அபாயம் ஏற்படலாம் என்று சர்ச்சை கிளம்பியது. ஆனால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும், ஆய்வுகளும் செய்யப்பட்டிர…

  18. பிரித்தானிய ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ விமான நிலையம் மீது லண்டன் கார் குண்டுப் பாணியில் தாக்குதல்..! விபரங்கள் இணைப்பில்.. http://news.bbc.co.uk/1/hi/uk/6257606.stm

  19. ஒரு பக்கம் "பளிச்'; மறு பக்கம் "வெறிச்'. தமிழக என்.எச்.,க்கு எப்போது தான் விடிவோ? Shot at 2007-06-29 கூடலுார் : கர்நாடக பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகப் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்காதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் இருந்த கக்கநல்லா முதல் மேட்டுப்பாளையம் வரையிலான சாலை தேசிய நெடுஞ்சாலை துறையின் கீழ் ஒப்படைக்கப்பட்டது. இச்சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் இதில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. சாலையை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியதை தொடர்ந்து கக்கநல்லா கூடலுார் மேட்டுப்பாளையம் சாலை சீரமைக்கப்படும் என தெ…

  20. அமெரிக்க போர் கப்பலை எதிர்த்து போராட்டம்:விடுதலை சிறுத்தைகள் கைது [ தற்ஸ் தமிழ் ] - [ Jun 29, 2007 04:00 GMT ] அமெரிக்கா அணுசக்தி போர் கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் சென்னைக்கு வருவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் சென்னை துறைமுகத்தில் மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் இன்று காலை சென்னை துறைமுக அலுவலகம் முன்பு கட்சியின் துணை பொதுச் செயலாளர் திருமாறன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென மறியலில் ஈடுபட்டனர். மீனவரணி ஒருங்கிணைப்பாளர் சேரன் உள்ளிட்ட 75 பேர் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர். இதையடுத்து சென்னை போலீஸ் உதவி கமிஷ்னர் நாகராஜன் தலைமையில் போலீஸார் விரைந்து வந்து ஆர்ப…

  21. நான் அவன் இல்லை பட பாணியில் 4 பெண்களை மணந்த வாலிபர் கல்லூரி மாணவியுடன் ஓட்டம் நாகர்கோவில், ஜூன் 29- Ôநான் அவன் இல்லைÕ பட பாணியில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் தற்போது கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட ஒரு பெண் இது குறித்து இன்று நாகர்கோவில் போலீசில் புகார் செய்யதுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: மதுரையை சேர்ந்தவர் தர்மசேகர் (29). பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருப்பார். இனிக்க இனிக்கபேசி பெண்களை மயக்குவதில் மிகவும் வல்லவர். ஏற்கனவே இவருக்கு திருமணமாகி முதல் மனைவிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மதுரையிலேயே 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரின் நடவடிக்கைகள் இவரத…

    • 40 replies
    • 6k views
  22. மத்திய லண்டன் பகுதியில் ஹைமார்க்கெட் எனும் இடத்தில் வெடிக்க வைக்கத் தயார் செய்யப் பட்ட நிலையில் கார் ஒன்று இன்று அதிகாலை பொலீசாரினால் கண்டு பிடிக்கப் பட்டது. காரினுள் பெற்றோல் மற்றும் காஸ் சிலிண்டர்கள் போன்றவை நிரப்பப் பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://news.bbc.co.uk/player/nol/newsid_62...bw=bb&mp=wm

  23. ஏலத்திற்கு வரும் காந்தியடிகளின் கடைசி கடிதம்: காப்பாற்ற மத்திய அரசு தீவிரம் மகாத்மா காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்படுவற்கு முன் கடைசியாக எழுதிய கடிதம் இங்கிலாந்தில் ஏலத்திற்கு வரவுள்ளது. இதையடுத்து அந்தக் கடிதம் ஏலம் போய் விடாமல் காக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள கிறிஸ்டி ஏல மையம் உலக அளவில் பிரலமான ஏல மையம் ஆகும். இங்கு புகழ் பெற்ற பல பொருட்கள், பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்கள், கடிதங்கள் உள்ளிட்டவற்றை ஏலம் விடுவார்கள். தற்போது இந்த ஏல மையத்தில் தேசத் தந்தை மகாத்மா காந்தி எழுதிய முக்கியக் கடிதம் ஒன்று ஏலத்திற்கு வந்துள்ளது. காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு எழுதிய கடிதம் இது. 19…

    • 9 replies
    • 2.4k views
  24. ஷேர் ஆட்டோ மோதியதில் இறந்த நண்பனுக்கு இறுதி சடங்கு செய்த குரங்குகள்: பொதுமக்களை வெறுத்து விரட்டின திருப்பத்தூரிலிருந்து வேலூர் செல்லும் மெயின் ரோட்டில் நேற்று மாலை அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. அப்போது சாலையை கடக்க முயன்ற ஒரு குரங்கு மீது பயங்கரமாக மோதியது. இதில் ஷேர் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது. ஆட்டோவில் அடிபட்ட குரங்கு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தது. பயணிகள் 4 பேர் படுகாயமடைந்தனர் 7 பேர் தப்பினர். காயமடைந்த 4 பேரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் இறந்து கிடந்த குரங்கை யாரும் கண்டு கொள்ளவில்லை. சோகமான குரங்குகள் தங்கள் நண்பன் விபத்தில் சிக்கியதை அறிந்த இரு குரங்குகள் ஓடிவந்தன. பலியான …

    • 17 replies
    • 3k views
  25. கல்யாண ஏக்கம் - அண்ணி மீது எண்ணெய் ஊற்றிக் கொன்ற பெண்! கல்யாணம் நடக்காத கோபத்தில், அண்ணன் மனைவி மீது ஆத்திரமடைந்த பெண், அவர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிக் கொலை செய்தார். அந்தப் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுவை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் பொறியாளராக கடமையாற்றி வருகின்றார். இவரது மனைவி விக்கிரவாண்டியைச் சேர்ந்த உமாதேவி. இவர் புதுவை அரசின் மாவட்ட தொழில் மையத்தில் எழுத்தராக பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு சரத், அஸ்வின் என்ற 2 குழந்தைகள் உள்ளன. ராஜா தனது தாயார் ஜெயலட்சுமி, தங்கை புவனேஸ்வரி ஆகியோருடன் தங்கியுள்ளார். புவனேஸ்வரிக்கு மாப்பிள்ளை அமையாமல் திருமணம் …

    • 1 reply
    • 2.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.