Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Published By: RAJEEBAN 02 JUN, 2023 | 11:01 AM மெக்சிக்கோவின் மேற்குப்பகுதியில் உள்ள நகரமொன்றில் அதிகாரிகள் மனித எச்சங்கள்அடங்கிய 45 பைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். கடந்தவாரம் காணாமல்போன இளைஞர்கள் சிலரை தேடிச்சென்றவேளை குவாடலஜரா என்ற நகரில் மனித எச்சங்கள் அடங்கிய 45பைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஆண்களினதும் பெண்களினதும் உடல்கள் காணப்படுகின்றன - இன்னமும் எத்தனை உடல்கள் காணப்படுகின்றன என்பது தெரியவில்லை . மனித எச்சங்கள் நிலப்பகுதி மிகவும் சவாலான ஒன்று என்பதாலும் போதிய வெளிச்சம் இன்மையாலும் தேடுதல் நடவடிக்கைகள் பல நாட்கள் தொடரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏழுபேர் காணாமல்போ…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,மேட் மெக்கிராத் பதவி,சுற்றுச்சூழல் செய்தியாளர் 47 நிமிடங்களுக்கு முன்னர் இறந்து போன பன்றிகள், கால்நடைகள் மற்றும் கோழியிலிருந்து கிடைக்கும் கொழுப்பைப் பயன்படுத்தி விமானங்களுக்கான பசுமை எரிபொருள் தயாரிக்கப்பட்டால் எதிர்காலத்தில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. விலங்குகளின் கொழுப்பு ஒரு தேவையற்ற பொருளாகக் கருதப்படுகிறது. இந்தக் கொழுப்பைப் பயன்படுத்தி விமானப் போக்குவரத்துக்கான எரிபொருளைத் தயாரிக்கும்போது மிகக் குறைந்த அளவிலான கரிம வாயு மட்டுமே வெளியாகிறது. விலங்குகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்…

  3. 28 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 31 மே 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் வளர்ந்தார் ரோஸ். அவர் 13 வயதிலிருந்தே புகைபிடிக்க ஆரம்பித்தார். புகைபிடிக்கக் கூடாது என்று தன் அம்மா மிகக் கண்டிப்பாகச் சொன்னதாக ரோஸ் கூறுகிறார். ஆனால் அதன் மீது இருந்த போதையை விடமுடியவில்லை. அவர் அப்பாவின் சிகரெட்டை திருடுவார். கூடவே பள்ளிக்கூடத்தில் மதிய சாப்பாட்டுக்குக் கிடைக்கும் பணத்தையும் இதற்காக செலவு செய்வார். அடுத்த 45 ஆண்டுகளுக்கு அவர் தினமும் இரண்டு பாக்கெட் சிகரெட்டுகளை ஊதித்தள்ளினார். பிறகு ஒரு நாள் அவர் காலில் பிரச்சனை ஏற்பட்டது. இது புகை பிடி…

  4. Published By: SETHU 30 MAY, 2023 | 05:19 PM ஆய்வுகூடத்திலிருந்து கொவிட்19 ரைவஸ் கசிந்திருக்கலாம் என்ற கருத்தை நிராகரிக்க முடியாது என சீனாவின் சிரேஷ்ட விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் ஜோர்ஜ் காவோ கூறியுள்ளார். பிபிசிக்கு அளித்த செவ்வியொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வைரஸியல் மற்றும் நீர்ப்பீடனவியல் பேராசிரியரான ஜோர்ஜ் காவோ, சீனாவின் நோய்க் கட்டுப்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரகாக பதவி வகித்தவர். கொவிட்19 தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய அவர், அவ்வைரஸின் மூலத்தை கண்டறிவதற்கான பணிகளிலும் ஈடுபட்டார். கடந்த வருடம் சீன தொற்றுநோய் கட்டுப்பாட்டு மத்திய நிலையிலிருந்து ஓய்வு பெற்ற அவர், …

  5. துருக்கியில் நடைபெற்ற இரண்டாவது கட்ட அதிபர் தேர்தலில்,எர்டோகன் மீண்டும் துருக்கி அதிபராகின்றார். Erdogan wins Turkish election, extending rule to third decade President Recep Tayyip Erdogan speaks at the presidential palace after winning reelection in a runoff. Chris McGrath/Getty Images CNN — President Recep Tayyip Erdogan has won Turkey’s presidential election, …

  6. ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் ஆஸ்திரேலியாவின் கலாசார சின்னங்களில் ஒன்றான கங்காருகள் உண்மையிலேயே இயற்கை தாய் ஈன்றெடுத்த ஓர் அதிசய உயிரினம். முழு வளர்ச்சியில்லாமல் பிறக்கும் குட்டிகளை வயிற்றில் உள்ள பைக்குள் வைத்து வளர்க்கும் அதிசய வரத்தை கங்காருவுக்கு வழங்கியுள்ளது இயற்கை. ஆஸ்திரேலியாவின் முத்திரையில் இடம்பெறுமளவுக்கு அங்கீகாரம் பெற்றிருந்தாலும் பல இடங்களில் அது ஒரு பயிர் அழிக்கும் பிராணியாகத்தான் கருதப்படுகிறது. அதனால் இன்று அரசாங்கமே அனுமதி கொடுத்து அவற்றை எக்கச்சக்கமான அளவில் வேட்டையாடச் சொல்கிறது. Kangaroo Culling | வேட்டையாடப்படும் கங்காருகள் எதற்காக கங்காருகள் கொல்லப்படுகின்றன? முக்கியமானதும் முதன…

  7. Published By: RAJEEBAN 29 MAY, 2023 | 03:24 PM ரஸ்யாவில் பெலாரஸ் ஜனாதிபதிக்கு நஞ்சூட்டப்பட்டுள்ளதாக பெலாரஸ் எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்த பின்னர் பெலாரஸ் ஜனாதிபதியின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்ற நிலையிலேயே கிரெம்ளின் அவருக்கு நஞ்சூட்டியுள்ளது என எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. பெலாரஸ் ஜனாதிபதி லுகாசென்கோவின் உடல்நிலை பாதிப்பிற்கான காரணங்கள் வெளியாகாத நிலையில் ரஸ்யாவிற்கான விஜயத்தின்போதுஅவருக்கு நஞ்சூட்டப்பட்டது என பெலாரஸ் எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/156449

  8. ஹிட்லரின் வீட்டில் மனித உரிமைகள் பயிற்சி வளாகம் – வெளியான அறிவிப்பு! Posted on May 29, 2023 by தென்னவள் 19 0 அடோல்ஃப் ஹிட்லர் வசித்து வந்த வீடு மனித உரிமைகள் பயிற்சி மையமாக மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றிய அறிவிப்பை ஆஸ்த்ரியாவின் உள்கட்டமைப்பு துறை அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்டது. இந்த வீடு நாஜிக்கள் யாத்திரை மேற்கொள்ளும் அளவுக்கு புனித தளமாக மாறுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய ஆலோசனை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வியென்னாவில் இருந்து 284 கிலோமீட்டர்கள் கிழக்கு திசையில் அமைந்திருக்கும் வடமேற்கு ஆஸ்த்ரியாவின் பிரௌனாவ் அம் இன் பகுதியில் உள்ள கட்டிடத்தில்…

    • 0 replies
    • 199 views
  9. எல்சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சருக்கு சிறைத்தண்டனை ! கடமைகளிலிருந்து விலகிய குற்றத்திற்காக எல்சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதி மொரிசியோ ஃபூனஸ் மற்றும் நீதி அமைச்சருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி குழுக்களுடன் தொடர்புகளை பேணியமை மற்றும் கடமைகளிலிருந்து விலகியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக முன்னாள் ஜனாதிபதி மொரிசியோ ஃபூனஸிக்கு 14 ஆண்டுகளும் முன்னாள் நீதி அமைச்சர் டேவிட் முங்குயாவிற்கு 18 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் இருந்த அவர், தேர்தல் இலாபத்திற்காக திட்டமிட்ட குற்றச் செயல்…

  10. பட மூலாதாரம்,ALAMY கட்டுரை தகவல் எழுதியவர்,ஜிபாட் டமிராட் மற்றும் செசிலியா மக்குலே பதவி,பிபிசி நியூஸ் 27 மே 2023 எத்தியோப்பியா நாட்டின் இளவரசராக இருந்த அலிமாயேஹு, 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் மரணம் அடைந்தார். வின்ட்சர் கோட்டை வளாகத்தில் புதைக்கப்பட்ட அவரது உடலின் எஞ்சிய பாகங்களை திரும்பத் தரும்படி எத்தியோப்பிய அரச வம்சாவளியினர் விடுத்துள்ள கோரிக்கையை பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம் நிராகரித்துள்ளது. எத்தியோப்பியா இளவரசராக இருந்த அலிமாயேஹு அவரது ஏழாவது வயதில் அனாதையாக பிரிட்டனுக்கு அழைத்து வரப்பட்டார். பிரிட்டனுக்கு வரும் வழியில் அவரின் தாயார் இறந்ததை அடுத்து, அந்த சிறு வயதில் அவருக்கு அப்படியொரு துயர நிலை ஏற…

  11. ரஸ்யா தொடர் ஆளில்லாவிமான தாக்குதல் - 50 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் 28 May, 2023 | 01:08 PM உக்ரைன் தலைநகர் மீது தாக்குதலை மேற்கொண்ட ரஸ்யாவின் 50க்கும்மேற்பட்ட ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஸ்யா மேற்கொண்ட தொடர்ச்சியா டிரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தலைநகரை நோக்கிவந்துகொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்துள்ளதாக தெரிவித்துள்ள கீவ்வின் மேயர் மேலும் பல ஆளில்லா விமானங்கள் தலைநகர் நோக்கி வருகின்றன என எச்சரித்துள்ளார். ரஸ்யா ஈ…

  12. Published By: RAJEEBAN 26 MAY, 2023 | 01:09 PM எலிசபெத் மகாராணியை கொலை செய்வதற்கான சதிதிட்டம் குறித்த தகவல்களை அமெரிக்காவின் எவ்பிஐ வெளியிட்டுள்ளது. 1983ம் ஆண்டு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை பிரிட்டிஸ் மகாராணி உயிராபத்துக்களை எதிர்கொண்டார் என எவ்பிஐ வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவி;த்துள்ளன. எலிசபெத்மகாராணியின் மரணத்தை தொடர்ந்து அவரது 1983ம் ஆண்டிற்கான அமெரிக்க விஜயம் குறித்த ஆவணங்களை எவ்பிஐ வெளியிட்டுள்ளது. ஐஆர்ஏயினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து கவலை கொண்டிருந்த எவ்பிஐ எலிசபெத் மகாராணியை காப்பாற்றிய விபரங்களை பகிர்ந்துகொண்டுள்ளது. …

  13. நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் பெரும் முயற்சி எடுத்து வந்தது. இதனை விரும்பாத ரஷ்யா கடந்தாண்டு பெப்ரவரி மாதம் சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடக்கம் முதலே இருந்து வருகின்றன. அதன்படி ரஷ்யா மீது பொருளாதார தடை, உக்ரைனுக்கு ஆயுதம் சப்ளை போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் அந்த நாடுகள் ஈடுபடுகின்றன. இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடை விதித்து வருகிறது. 15 மாதங்களை தாண்டியும் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உலக பொருளாதாரத்தில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வரு…

  14. பட மூலாதாரம்,EVE WILLEY படக்குறிப்பு, ஈவ் வைலி கட்டுரை தகவல் எழுதியவர்,ஈவ் வைலி பதவி,பிபிசி செய்திக்காக 26 மே 2023, 10:22 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஈவ் வைலிக்கு அப்போது 16 வயது. அவர் விந்தணு தானம் மூலம் பிறந்தார் என்பது அப்போதுதான் அவருக்குத் தெரிய வந்தது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் ஈவுக்கு இந்தத் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்தது. இதைத் தொடர்ந்து, தனது உண்மையான தந்தை யார் என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் அவருடைய மனதில் எழுந்தது. இந்த ஆர்வம் அதிகரிக்க, அதிகரிக்க அவர் பல விஷயங்களைத் தேடிப் …

  15. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியில் போட்டியிட ரொன் டிசான்டிஸ் விண்ணப்பம் Published By: Sethu 25 May, 2023 | 10:14 AM புளோரிடா மாநில ஆளுநர் ரொன் டிசான்டிஸ், எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டிடுவதற்கு விண்ணப்பித்துள்ளார். இக்கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான பிரச்சாரங்களை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 44 வயதான ரொன் டிசான்டிஸ், புளோரிடா மாநில தேர்தல்கள் ஆணைக்குழுவில் தனது வேட்பு மனுவை புதன்கிழமைதாக்கல் செய்தார். யேல் பல்கலைக்கழகத்தி…

    • 7 replies
    • 502 views
  16. சீனாவில் பரவும் புதியவகை கொரோனா சீனாவில், ஓமிக்ரான் துணை வகை XBB வைரஸ் மூலம் மீண்டும் கொரோனா விரைவாகப் பரவி வருவதாக அந்நாட்டு ஊடங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் புதியவகை கொரோனா அலை, ஜூன் மாத இறுதிக்குள் சீனாவில் உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள நிலையில், இரண்டு புதிய கொரோனா தடுப்பூசிகளை சீனா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. கடந்த மே 22ஆம் திகதி சீனாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், சுவாச நோய்க்கான சீன தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரான நிஜாங் நன்ஷான், “ஓமிக்ரான் துணை வகை XBB வைரஸ் விரைவாகப் பரவுவதால் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது உலகின் பிற பகுதிகளையும் ப…

  17. பட மூலாதாரம்,SADAM ALOLOFY/UNFPA படக்குறிப்பு, தன் குழந்தையுடன் மோனா கட்டுரை தகவல் எழுதியவர்,சார்லின் ஆன் ரோட்ரிக்ஸ் பதவி,பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கர்ப்பிணியான இளம்பெண் மோனா (வயது 19) மலை உச்சியில் இருக்கும் தனது வீட்டில் இருந்து மருத்துவமனையை அடைய நான்கு மணிநேரம் ஆகலாம் என்று கணித்திருந்தார். ஆனால் சாலை வசதி இல்லாத கரடுமுரடான பாதை, கடுமையான பிரசவ வலி, மோசமான வானிலை போன்ற காரணங்களால் அவர் மருத்துவமனையை அடைய ஏழு மணி நேரம் ஆகிவிட்டது. “ஒட்டகம் ஒவ்வோர் அடியை எடுத்து வைத்தபோதும் நான் உடைந்து போனேன்” என்கிறார் மோனா. ஒரு க…

  18. Published By: SETHU 24 MAY, 2023 | 01:22 PM குறுந்தூர உள்ளூர் விமான சேவைகளுக்கு பிரான்ஸில் உத்தியோகபூர்வமாக தடை அமுலுக்கு வந்துள்ளது விமானங்களால் வெளியிடப்படும் சூழல் மாசு வாயுக்களை குறைப்பதே இதன் நோக்கமாகும். இரண்டரை மணித்தியாலங்களுக்குள் ரயில் மூலம் பயணம் செய்யக்கூடிய தூரங்களுக்கான உள்ளூர் விமானப் பயணங்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், பாரிஸுக்கும் லியோன், நொன்ட், போடோவ் முதலான முக்கிய பிராந்திய நகரங்கள் பலவற்றுக்கும் இடையிலான விமான சேவைகளில் பெரும்பாலானவற்றை இல்லாமலாக்கி விடும் எனக் கருதப்படுகிறது. இதற்கான சட்டம் 2 வருடங்களுக்கு முன்னர் பிரெஞ்சு பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிரு…

  19. அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரம் ஆண்டுக்கு சராசரியாக 1 முதல் 2 மிமீ வரை புதைந்து வருவதாகவும், சில பகுதிகள் ஆண்டுக்கு 4.5 மிமீ அளவில் புதைந்து வருவதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நகரம் முழுவதும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் எடையும், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றமும் நியூயார்க் நகரத்தை மூழ்கடித்துள்ளதாக ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் மற்ற 99 நகரங்களில் இருந்து தரவுகளை ஆய்வு செய்தனர் மற்றும் இது நியூயார்க் நகரத்திற்கு மட்டுமேயான பிரச்சனை இல்லை என்று கண்டறிந்துள்ளனர். இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரம் மிக வேகமாக மூழ்கி வருவதாகவும், இதன் காரணமாக வேறு இடத்தில் புதிய நகரத்தை அமைப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவ…

  20. 25 MAY, 2023 | 01:11 PM சிட்னியின் சிபிடியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பலதளங்களை கொண்ட கட்டிடமொன்று தீப்பிடித்ததை தொடர்ந்து பல கட்டிடங்களிற்கு தீபரவியுள்ளது. நகரில் பெரும்புகைமண்டலத்தை காணமுடிகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்டிரல் ஸ்டேசனிற்கு பின்னால் உள்ள கட்டிடமொன்று முற்றாக எரியுண்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்துவதாக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட தீயணைப்புபடைவீரர்களும் 20க்கும்மேற்பட்ட தீயணைப்பு படைவாகனங்களும் தீயை கட்டுப்படுத்த முயல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருகட்டிடம்…

  21. Published By: RAJEEBAN 23 MAY, 2023 | 12:10 PM உக்ரைன் தனது எல்லைகளிற்கு அப்பால் சதிதாக்குதல்களில் ஈடுபடுகின்றது என ரஸ்யா குற்றம்சாட்டியுள்ளது. புட்டினிற்கு எதிரான குழுவொன்றை சேர்ந்தவர்கள் ரஸ்யாவின் தென்மேற்கு பிராந்தியமான பெல்கொரோட்டில் தாக்குதலை மேற்கொண்டதாக உரிமைகோரியுள்ள நிலையிலேயே ரஸ்யா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. பெல்கொரோட்டில் இடம்பெற்ற தாக்குதலில் நிர்வாககட்டிடங்கள் வீடுகள் ஆரம்பபாடசாலைகள் சேதமடைந்துள்ளதாக அந்த பிராந்தியத்தின் ஆளுநர்தெரிவித்துள்ளார். எனினும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். என்ற அமைப்பினர் உக்ரைன் அருகில் உள்ள பெல்கொரோட்டின் ஒர…

  22. கொரோனா… இந்த வார்த்தையை கேட்டாலே பயப்படாத யாவரும் இல்லை எனலாம்… 21ஆம் நூற்றாண்டில் உலகத்தையே புரட்டிப்போட்ட மிகப்பெரிய கொடூர தொற்றாகும். முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டு உலகத்தையே அஞ்ச வைத்தது. ஒட்டுமொத்த உலக மக்களையும் வீட்டிற்குள்ளேயே முடக்கியது. உலக பொருளாதாரம் தலைகீழாக சென்றது. இதுவரை உலக அளவில் 68,12,24,038 மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. .68,81,401 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது உலகம் சகஜ நிலைக்கு வந்துவிட்டாலும், கொரோனா முடிவுக்கு வரவில்லை. உருமாற்றம் அடைந்து அச்சுறுத்தியே வருகிறது. இந்த நிலையில் மீண்டும் உலகம் ஒரு பெருந்தொற்றுக்கு தயாராக வேண்டியது தேவை என உலக சுகாதார ஸ்தாபன தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரித்துள்ளார். இதுகுற…

  23. உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைவது மலையேற்ற வீரர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மலையேற்ற சீசனில் ஏராளமான வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகின்றனர். அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கென வழிகாட்டிகள் உள்ளனர். அவர்களும் வீரர்களுடன் சிகரத்தில் ஏறி இறங்குகின்றனர். அவ்வகையில் இந்த ஆண்டு நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டி கமி ரீட்டா (வயது 53), மலையேற்ற வீரர்களுடன் நேற்று சிகரத்தை அடைந்தார். இந்த வாரத்தில் மட்டும் இரண்டு முறை அவர் சிகரத்தை அடைந்துள்ளார். அத்துடன் தன் வாழ்நாளில் 28 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார். அவர் பாரம்பரியமான தென்கிழக்கு மலைமுகட்டு பாதை வழியாக சென்று 8,849 உயரம் கொண்ட சிகரத்தை வெற்றிகரமாக அட…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவைத்தேடி புறப்பட்ட கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்தபோது, போர்ச்சுகல் மன்னர் ஜான் இந்தியாவை அடைய கடல் வழியைக் கண்டுபிடிக்க முன்முயற்சி எடுத்தார். இந்த நோக்கத்திற்காக மூன்று பெரிய கப்பல்களை உருவாக்க மன்னர் உத்தரவிட்டார். ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டார். இந்தியாவுக்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறும் முன்பே அவர் காலமானார். ஆனால் அவரது வாரிசு இம்மானுவேலிடமும் இந்தியாவை அடைவதற்கான உற்சாகம் அதே அளவுக்கு இருந்தது. இந்தப்பணியை மேற்கொள்ள அவர் வாஸ்கோடகாமாவை கமாண்டராக தேர்ந்தெடுத்தார். வாஸ்கோ தன்னுடன் வந்த இரண்டு கப்பல்களுக்கு தனது சகோதரர் பாவ்லோ மற்றும்…

  25. பாடசாலை விடுதியில் தீ பரவல் -19 மாணவர்கள் உயிரிழப்பு தென் அமெரிக்கா Guyana பகுதியில் பாடசாலை விடுதியொன்றில் இடம்பெற்ற தீ பரவலில் சிக்குண்டு உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 25 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் இந்த தீ பரவலுக்கான காரணங்கள் இது வரையில் கண்டறியப்படவில்லை என Guyana பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பழங்குடியினர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 20 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் இந்த தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை Guyana பொலிஸார் முன்;னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. htt…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.