Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சென்னையில் வைகோ தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பாரிய கண்டனப் பேரணி ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னையில் மறுலமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற கண்டனப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ம.தி.மு.க.சார்பில் ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரணி சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. சென்னை மன்றோ சிலையில் இருந்து இந்த பேரணி புறப்பட்டது. பேரணிக்கு தலைமை தாங்கி ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ நடந்தே சென்றார். அவரை தொடர்ந்து ம.தி.மு.க.தொண்டர்கள் கையில் கொடியுடன் அணிவகுத்து சென்றனர். ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கறுப்புச் சேலை அணிந்த படி கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட சிற…

  2. சுவிசில் உள்ள எட்டப்பர் சிலரின் தமிழீழ விடுதலைக்கு எதிராண திட்டமிட்ட பிரச்சாரம். http://www.sf.tv/var/videoplayer.php?catid...0%3A18%3A32.549

  3. வெள்ளி 01-09-2006 18:27 மணி தமிழீழம் [மயூரன்] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்க மன்மோகன் சிங் இணக்கம். தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க இந்திய பிரதமமந்திரி மன்மோகன் சிங் இணக்கம் வெளியிட்டுள்ளார். அத்துடன் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்க போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளதாக இந்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலர் வை கோபாலசாமி நேற்று முன்தினம் மன்மோகன் சிங்கை சந்தித்தபோதே இந்த உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தம்மை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்குவதற்காக கடிதத்தை அனுப்பவேண்டும் என மன்மோகன் சிங் கேட்டுள்ளார். http://www.pathivu.com/ind…

    • 3 replies
    • 1.2k views
  4. உண்மைப் படம் உல்டாப் படம் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக் விமானம் அங்குள்ள விமான ஓடுதளம் ஒன்றில் பயணம் செய்த போது பெறப்பட்ட படங்களை திருடி..கிரபிக்ஸ் மூலம் உல்டா பண்ணி..புலிகள் விமானமாக காட்டியது அம்பலமாகிறது..! கிராபிக்ஸ் மன்னர்களே..இது உங்களுக்கல்ல...மீண்டும்...புலி

  5. வாஷிங்டன், செப். 1: இன்டர்நெட் மூலம் 8 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளின் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட செக்ஸ் படங்களை டவுன்லோடு செய்து வைத்திருந்த அமெரிக்கருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம். 10 ஆண்டுகளாக அவர் இந்த ஈனச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய கடலியல் மற்றும் தட்பவெப்பவியல் ஆணையத்தில் பணிபுரிந்து வந்த ராபர்ட் கேரீ (52) மீது 2005ல் குற்றம் சாட்டப்பட்டது. தம் மீது குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து கேரி, நாட்டை விட்டுத் தப்பியோடினார். இதையடுத்து, அமெரிக்காவில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளிகளின் படங்கள் இந்த ஆண்டு ஜனவரியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதன்பிறகு 3 நாள்கள…

  6. சம்பியன் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதற்கு வக்கீலுடன் இந்தியா வருகிறார் கிப்ஸ் சூதாட்ட புகாரில் சிக்கிய தென் ஆபிரிக்க வீரர் கிப்ஸ் வக்கீலுடன் வந்து இந்தியாவில் நடைபெறும் சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி 2000 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த போது சூதாட்டத்தில் ஈடுபட்டதை டில்லி பொலிஸார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அப்போதைய தென் ஆபிரிக்க அணிக் கப்டன் குரோஞ்ஞே, கிப்ஸ், நிக்கி போஜே ஆகியோர் மீது டில்லி பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சூதாட்டம் குறித்து தென் ஆபிரிக்க அரசு கிங் கமிஷனை அமைத்து விசாரணை நடத்தியது. இதன் முன்பு ஆஜராகிய குரோஞ்ஞே சூதாட்டக்காரர்களிடம் பணம் பெற்றதை ஒப…

  7. இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு-கிழக்கு தமிழர்களுக்கு மருந்து மற்றும் உணவுப் பொருள்களை செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேசத் தொண்டு அமைப்புக்கள் மூலம் வழங்க வழிவகை காண வேண்டும் என்று இந்திய அரசை தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேடு வலியுறுத்தியுள்ளது. "தினமணி" நாளேட்டில் இன்று வெள்ளிக்கிழமை வெளியான ஆசிரிய தலையங்கம்: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நோர்வேயின் முன்முயற்சியில் நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்துவிட்ட சூழ்நிலையில் இரு தரப்புக்குமிடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இதனால் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடகிழக்குப் பகுதிகளில் பெரும் பதற்றம் நீடிக்கிறது. இலங்கை இராணுவத…

  8. ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் மீது சிறிலங்கா இராணுவம் நடத்தும் இனப்படுகொலையைக் கண்டித்து சென்னையில் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் இன்று வெள்ளிக்கிழமை கண்டனப் பேரணி நடைபெற உள்ளது. இது தொடர்பில் ம.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ம.தி.மு.க. சார்பில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு கண்டனப் பேரணி சென்னை மன்றோ சிலை அருகில் இருந்து புறப்படுகிறது. தொடர்ந்து அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியை சென்று சேரும். அங்கு பேரணியின் நிறைவில் வைகோ பேசுகிறார். இந்த கண்டன பேரணியில் அவைத்தலைவர் எல்.கணேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ந.இராமச்சந்திரன், நாசரேத்துரை, மல்லை சி.இ.சத்யா மற்றும் நாட…

  9. இந்தோனேசியாவில் 13 ஈழத் தமிழர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவின் தெற்குப் பகுதியான ஜாவாப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சந்தேசகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் ஜகார்த்தாவுக்குத் தென்மேற்கே 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பன் டென் மாகாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் பொலிஸார் நடத்திய திடீர்ச் சோதனை நடவடிக்கை ஒன்றின்போதே இவர்கள் 13 பேரும் கைது செய்யப்பட்டனர் என்று இந்தோனேஷியப் காவல்துறையினர் தெரிவித்தனர். சிறிய விடுதியைப் பொலிஸார் முற்றுகை யிட்ட சமயம் அங்கு இருபது பேர் தங்கியி ருந்தனர் என்றும் அவர்களில் ஏழு பேர் பொலி ஸாரின் பிடியில் இருந்து தப்பிவிட்டனர் என் றும் தெரிவிக்கப்படுகி…

  10. இந்தியா: போரை நிறுத்துக; இலங்கை ஏற்க மறுப்பு. ____________________________________________________ இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் வன் முறைகளுக்கும் போருக் கும் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு உடனடி யாகப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தி யாவும் அனைத்துலக சமூகமும் இலங்கைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஆனால் இலங்கை அரசோ மறுப்புத் தெரிவித்து வருகிறது. திருகோணமலையை மீண் டும் தங்கள் கட்டுப் பாட் டுக்கொண்டு வரும்வரை தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கப் போவதாக அது தெரி வித்துள்ளது. இந்தியாவும் அமெரிக் காவும் இணைந்து இலங்கை அரசிடம் நேரடியாகவும் மறைமுக மாகவும் பேச்சு வார்த்தை நடத்தி விட்டன. இலங்கையில் நடை பெற்று வரும் ரத்…

  11. இங்கிலாந்துக்கு மகிந்த ராஜபக்ச திடீர் பயணம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று இங்கிலாந்துக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்து பிரதமர் ரோனி பிளேயருடன் பேச்சுக்கள் நடத்த இன்று செவ்வாய்க்கிழமை காலை மகிந்த பயணம் மேற்கொண்டதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. யுத்த நிறுத்த ஒப்பந்தம் சீர்குலைந்திருப்பது தொடர்பாக பிளேயருடன் மகிந்த ஆலோசனை நடத்தக் கூடும் என்று தெரிகிறது. கடந்த நவம்பர் மாதம் அரச தலைவராகப் பதவியேற்ற பின்னர் இங்கிலாந்துக்கு மகிந்த மேற்கொள்ளும் முதலாவது பயணம் இது.

  12. எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியது ஒட்டுமொத்த தமிழர்களின் மனதை புண்படுத்துகின்ற அநாகரிக செயல்: ஜெயலலிதா கண்டனம் யாழ்ப்பாணத்தில் எம்.ஜி.ஆர். சிலையை சிறிலங்கா இராணுவத்தினர் தார்பூசி சேதப்படுத்தியமைக்கு தமிழக முன்னாள் முதல்வரும் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறையில் நிறுவப்பட்டுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலை மீது சிங்கள இராணுவ வீரர்கள் தார் பூசி சேதப்படுத்தியுள்ளதாக பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியைப் பார்த்து தாம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த அநாகரிகச் செயல், உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த த…

    • 0 replies
    • 988 views
  13. பகுதி-1 பகுதி-2 தகவல் வன்னியனின் வலைப்பூவில் இருந்து பெறப்பட்டது. தமிழ்மண வன்னியனுக்கு நன்றிகள்!

  14. தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தேசிய கீதத்துக்கு அவமரியாதை- திட்டமிட்ட சதி? [ஞாயிற்றுக்கிழமை, 27 ஓகஸ்ட் 2006, 20:30 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தேசிய கீதம் அவமதிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் கால் பந்தாட்டத்தில் இந்திய- சிறிலங்கா அணிகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மோதின. முன்பாக இந்திய வீரர்கள் தேசிய கீதத்திற்கு மரியாதை செய்வதற்காக அணிவகுத்து நின்றனர். அப்போது இந்திய தேசிய கீதம் தெளிவற்ற முறையில் ஒலிபரப்பப்பட்டது. ஆனால் சிறிலங்காவின் தேசிய கீதம் சிறப்பான முறையில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இதனால் இந்திய வீரர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்க…

    • 18 replies
    • 4.4k views
  15. இலங்கையில் 3 நாள் போர் நிறுத்தம் நார்வே மந்திரிகளிடம் இந்தியா வலியுறுத்தல் ஓஸ்லோ, ஆக. 27- இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள 3 நாள் போர் நிறுத்தம் செய்யுமபடி இந்தியா வலியுறுத்தி உள்ளது. நார்வே தலைநகர் ஓஸ்லோவில் அந்த நாட்டு அமைச்சர்கள் எரிக் சொல்ஹெய்ம், கார் ஸ்டொர் ஆகியோரை இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் சியாம்சரண் சந்தித்துப் பேசினார். இலங்கை நிலவரம் குறித்தும், அங்கு பாகிஸ்தான் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்தும் விவாதித்தார். இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள 3 நாள் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று சரண் வலியுறுத்தினார். தமிழகத்தில் இலங்கை அகதிகள் வருகை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் அமைதியற்ற நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் சுட்ட…

  16. Nato forces ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் அப்பாவிப் பொதுமக்கள் மீது குண்டு வீசிக் கொன்றுவிட்டு தலிபான்களைக் கொன்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்து வருவது மீண்டும் மீண்டும் அம்பலமாகி வருகிறது..! President Hamid Karzai ordered an investigation on Friday into the killing of eight people in a US raid on suspected militants in eastern Kumar province. Local police said those killed were civilians. Hundreds of people have died this year in Afghanistan's worst bloodshed since the fall of the Taleban five years ago. Nato forces recently assumed formal control of military operations in southern Afghanistan from the US-led coaliti…

  17. விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் முதல் பெண்: ராக்கெட்டில் விசேஷ ஏற்பாடு அமெரிக்கா, ரஷியா, பிரான்சு, ஜெர்மனி உள்பட 16 நாடுகள் இணைந்து விண் வெளியில் சர்வதேச மிதக்கும் ஆய்வுக் கூடத்தை அமைத்து வருகின்றனர். அவ்வப்போது இந்த ஆய்வுக் கூடத்துக்கு தேவையான தளவாடங்களையும் அங்கு தங்கி ஆய்வு நடத்தும் விண் வெளி வீரர்களுக்கு உணவுப் பொருள்களையும் ராக்கெட்டில் வைத்து அனுப்பி வருகிறார்கள். இந்த மிதக்கும் விண்வெளி ஆய்வுக் கூட திட்டத்துக்கு போதிய நிதி திரட்டுவதற்காக விண்வெளிக்கு ராக்கெட்டில் சுற்றுலா பயணிகளையும் அமெரிக்கா அனுப்பி வருகிறது. ஏற்கனவே அமெரிக்க கோடீஸ்வரர் உள்பட 3 பேர் விண்வெளிக்கு சுற்றுலா பயணம் சென்றுள்ளனர். இப்போது முதல் முறையாக ஒரு பெண் விண்வெளிக்கு சுற்றுலா…

    • 0 replies
    • 809 views
  18. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும், இந்து மக்கள் கட்சி, பாரதீய பார்வார்ட் பிளாக் மற்றும் தனித்தமிழர்சேனை ஆகிய மூன்று இந்து இயக்கங்கள், இன்று வியாழக்கிழமை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருக்கும் இலங்கை துணைத்தூதரகத்தை நோக்கி எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள். இலங்கையில் பெரும்பான்மை சிங்களர்களுக்கும், சிறுபான்மை தமிழர்களுக்கும் இடையிலான மோதல், வெறும் இனப்பிரச்ச்சினை மட்டுமல்ல என்றும், சிங்கள பௌத்த மதத்திற்கும், தமிழ் இந்துக்களுக்கும் இடையிலான மதமோதலாகவும் இதை அணுகவேண்டும் என்றும் கூறினார், தமிழ்நாட்டின் இந்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளரான இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத். சுமார் 80 கோடி இந்துக்கள் வசிக்கும் இந்தியா, தனது அண்டை ந…

  19. இலங்கை பிரச்சினை தமிழ்நாட்டில் சூடுபிடிக்கிறது; நாளும் பேரணி. இலங்கை பிரச்சினை தமிழ் நாட்டில் சூடுபிடிக்கிறது. தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் பயங்கரவாத காரியங் களைக் கட்டவிழ்த்து விடுவதை எதிர்த்துக் கடந்த இரண்டு வார காலமாகவே சென்னையில் அன்றாடம் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன. இலங்கையில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருக் கும் முல்லைத்தீவில் இலங்கை ராணுவம் குண்டு போட்டு 61 தமிழ் மாணவிகளைக் கொன்றது முதல் தமிழ்நாட்டில் இலங்கை அரசைக் கண்டித்துப் பேரணி களும் ஆர்ப்பாட்டங்களும் நடக் கத் தொடங்கிவிட்டன. மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, பாட்டாளி மக்கள் கட்சி போன்ற அரசியல் கட்சிகள் இலங்கை அரசை எதிர்த்து ஆர்ப்பாட்ட…

  20. வைகோ மீது வழக்கு பொலிஸார் ஆலோசனை. [24 - August - 2006] விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக ம.தி.மு.க.பொதுச்செயலர் வைகோ மீது வழக்கு தொடருவது குறித்து தமிழக பொலிஸார் ஆலோசித்து வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை சென்னை தியாகராஜர் நகர் பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ இலங்கைப் பிரச்சினைக்கு தமிழ் ஈழம்தான் தீர்வு. விடுதலைப்புலிகளுக்கு நாங்கள் என்றென்றும் ஆதரவு தருவோம். இந்தியாவில் மேலும் ஒரு காஷ்மீர் உருவாகும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டாம் என்ற ரீதியில் பேசியிருந்தார். வைகோவின் இப்பேச்சு இந்தியாவின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் குற்றம் சாட்டினர். மேலும் இது தொடர்ப…

  21. விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற எழு சுற்று அமைதிப் பேச்சுக்களின் போதும் அதில் பங்குபற்றிய அரசதரப்பு பிரதிநிதிகளுக்காக சிறிலங்கா அரசு சுமார் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாவை செலவிட்டுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றின் நேற்றைய அமர்வின்போதும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அரசதரப்பின் பிரதம கொறடா ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மேற்கண்ட தகவலை தெரிவித்தார். தாய்லாந்து சட்டாகிப்பில் ஆரம்பித்த முதல் கட்ட அமைதிப் பேச்சில் கலந்துகொண்ட அரசு தரப்பு குழுவினருக்கு 7 லட்சத்து 83 ஆயிரத்து 964 ருபாவும் அங்கு நடைபெற்ற இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களுக்கு 16 லட்சம் ரூபாவும் நோர்வேயில் நடைபெற்ற மூன்றாம் சுற்று பேச்சுக்களுக்கு 25 லட்சம் ர…

  22. சிங்களவர்களுக்கு அச்சம் என்றால் என்னவென்றே தெரியாது: மேர்வின் சில்வா சிங்களவர்களுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது என்று சிறிலங்காவின் பிரதியமைச்சர் மேர்வின் செல்வா நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.வடக்கு-கிழக்கு நிலைமைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் பேசிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது: சிங்களவர்களுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. பயம் என்றால் அடிமட்டத்தினால் அளக்கப்படுவதா என்றே ஒவ்வொரு சிங்களவரும் கேள்வி எழுப்புவர்.எனினும் எதிரி மறைந்திருந்து தாக்கும் போது அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் இனம் எமது இனமல்ல. எதிரிகளை தாக்கியழிக்கும் வீரச்சிங்களவர்கள் நாம்.விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அவர்கள் பயங்கரவாதச் செயல்களி…

    • 4 replies
    • 1.4k views
  23. பிரதமர் மன்மோகன் சிங்கின் அண்ணன் ஆட்டோவில் பிரதமர் இல்லத்திற்கு வந்து இறங்கியதால் அவரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் பிரதமரே வாசல் வரை வந்து தனது அண்ணனை உள்ளே அழைத்துச் சென்றார். பிரமதரின் அதிகாரப்பூர்வ இல்லம் டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில உள்ளது. பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள் பிரதமரின் வீட்டுக்கு சமீபத்தில் 3 பேர் காரில் வந்து பரபரப்பை ஏற்படுததினர். இதையடுத்து பாதுகாபபு மேலும் அதிகரிக்கப்பட்டது. இந் நிலையில் வயதான சீக்கியர் ஒருவர் ஆட்டோவில் வந்து பிரதமர் வீட்டு வாசலில் இறங்கினார். பாதுகாப்பையும் மீறி ஆட்டோ உள்ளே வந்து விட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆட்டோவை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள் ஆட்டோவில் இருந்து இறங்கிய பெரிய…

  24. ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து இந்தியாவின் தலைநகரம் புதுடில்லியில் உள்ள சிறிலங்கா தூதரகம் முன்பாக ஓகஸ்ட் 30 இல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது: ம.தி.மு.க. சார்பில் ஈழத்தமிழர் பாதுகாப்புப் பொதுக்கூட்டம் நேற்று இரவு சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் (சிறையில் இருந்தாலும்) தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஈழத்தமிழர் பிரச்சினைக்க…

  25. "தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் வன்முறைகளைக் கண்டித்து சிறிலங்காவுக்கு எதிரான தடைகளை விதிக்குமாறு" சுவிஸ் வாழ் தமிழர்கள் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக சுவிசின் மாநிலங்கள் தழுவிய ரீதியாக நடைபெற்று வந்த "சாவிலும் வாழ்வோம்" கவனயீர்ப்பு போராட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வில் பங்கேற்ற சுவிஸ் வாழ் தமிழர்கள் அந்நாட்டு அரசிடம் இக்கோரிக்கையை விடுத்தனர். சுவிஸ் தமிழர் பேரவை மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (21.08.06) நண்பகல் சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான சுவிஸ் வாழ் தமிழர்கள் பங்கேற்றனர். சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச மற்றும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.