உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27005 topics in this forum
-
இஸ்ரேல் நடத்தும் போர் மத்திய கிழக்கிற்கு அப்பாலும் பரவக்கூடும் – ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை. காசாவில் இஸ்ரேல் நடத்தும் போர் மத்திய கிழக்கிற்கு அப்பாலும் பரவக்கூடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். ஒருசிலர் செய்யும் குற்றங்களுக்காக பாலஸ்தீன பகுதியில் உள்ள அப்பாவி குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் தண்டிக்கப்படுவது தவறு என்றும் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் எஇரத்தக்களரி மற்றும் வன்முறையைத் தடுப்பதே அனைவரது நோக்கமாக இருக்க வேண்டும் என விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். நெருக்கடி மேலும் அதிகரித்தல் கடுமையானதும் மிகவும் ஆபத்தான மற்றும் அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். …
-
- 1 reply
- 561 views
-
-
Published By: RAJEEBAN 26 OCT, 2023 | 12:22 PM இஸ்ரேலிற்கு ஆதரவளிக்கும் வகையில் அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் கருத்து தெரிவித்து வருவதற்காக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக சிட்னியை சேர்ந்த சட்டநிறுவனமொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் வெளியிட்டுவரும் கருத்துக்கள் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு உடந்தையாவதற்கு சமமானது என பேர்ச்குரொவ்லீகல் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள பாலஸ்தீனியர்களின் சார்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கவேண்டும் என்றால் அவுஸ்திரேலிய அரசாங்கம் பல நடவடிக்கைகளை தவிர்க்கவேண்டும் என அந்த அமைப்பு தெரிவ…
-
- 1 reply
- 187 views
- 1 follower
-
-
ஹமாஸ் பெண்களை எவ்வாறு நடத்துகிறது? சுரங்கப் பாதையில் உணவு, பாதுகாப்பு எப்படி? மீண்டு வந்தவர் பேட்டி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 2 பேரை இன்று அதிகாலை விடுவித்தது. அவர்கள் 79 வயதான நூரித் கூப்பர் மற்றும் 85 வயதான யோஷேவேத் லைஃப்ஷிட்ஸ் ஆகியோர் ஆவர். ஆனால் இவர்களது கணவர்கள் இன்னும் ஹமாஸ் பிடியிலேயே இருக்கிறார்கள். இதன் மூலம் ஹமாஸ் விடுவித்திருக்கும் பணயக் கைதிகளின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்திருக்கிறது. அக்டோபர் 7ம் தேதி நடைபெற்ற திடீர் தாக்குதலுக்கு பிறகு, ஹமாஸ் குழுவினரால் 222 பேர் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. அவர்களில் 20 குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 2…
-
- 24 replies
- 1.4k views
- 1 follower
-
-
கனடாவின் ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் அதன் துணைத் தூதரகங்களாக விளங்கும் ரொறன்ரோ மற்றும் வான்கூவர் ஆகிய அலுவலகங்களில் விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க முன்னர் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பரிசீலனைகள் மற்றும் கனடியர்களின் பிரயாணத் தேவைகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு பாதுகாப்பு நிலைமையை பரிசீலித்த பிறகு இது தொடர்பாக கனடாவின் சமீபத்திய நடவடிக்கைகள் ஆகியவற்றையும் கவனத்தில் எடுத்து தற்போது கனடியர்களுக்கான விசா சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் 26முதல் அமுலுக்கு வரும் பின்வரும் விசா வகைகள் நுழைவு விசா வணிக விசா மரு…
-
- 0 replies
- 437 views
-
-
Published By: RAJEEBAN 25 OCT, 2023 | 12:03 AM ஹமாஸ் ஒக்டோபர் ஏழாம் திகதி மேற்கொண்ட தாக்குதலிற்கான வரலாற்று சூழ்நிலைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஆற்றிய உரைக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் அவர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் கூட்டமொன்றில் உரையாற்றிய அன்டனியோ குட்டரஸ் ஹமாசின் தாக்குதல் வெற்றிடமொன்றில் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மக்கள் 56 வருட மூச்சுதிணறவைக்கும் ஆக்கிரமிப்பிற்குட்படுத்தப்பட்டுள்ளனர். தங்கள் நிலங்கள் ஆக்கிரமிப்பாளரினால் பறிபோவதையும் வன்முறையில் சிக்குண்டுள்ளதையும் பார்த்துள்ளனர் என ஐக்கியநாடுகள் நாடுகள் செயலாளர் நாயகம…
-
- 6 replies
- 413 views
- 1 follower
-
-
காசாவின் நிலை -எங்கள் கூட்டு மனச்சாட்சி மீதான கறை – நாளாந்தம் 400 சிறுவர்கள் கொல்லப்படுகின்றனர் – காயமடைகின்றனர் – யுனிசெவ் Published By: RAJEEBAN 25 OCT, 2023 | 07:43 AM காசாவில் கடந்த 18 நாட்களில் கொல்லப்பட்ட சிறுவர்கள் குறித்த விபரங்களை யுனிசெவ் அமைப்பின் மத்திய கிழக்கிற்கான இயக்குநர் வெளியிட்டுள்ளார். காசாவில் கடந்த 18 நாட்களில் 2346 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் 5364 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள அடெலே கொடர் நாளாந்தம் 400 பாலஸ்தீன சிறுவர்கள் கொல்லப்படுகின்றனர் அல்லது காயமடைகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். காசாவில் காணப்படும் நிலை எங்கள் கூட்டு மனச்சாட்சி மீதான கறையாகும் என தெரிவித்துள்ள யுனிச…
-
- 1 reply
- 654 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் பேலி பதவி, பாதுகாப்பு செய்தியாளர், இஸ்ரேல் 25 அக்டோபர் 2023, 10:12 GMT புதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்கா தடையற்ற ஆதரவை இஸ்ரேலுக்கு தொடர்ந்து தருவதாக உறுதியளித்துள்ளது. அதற்காக தனது ராணுவ உதவியையும் அளித்துள்ளது. ஆனால் இப்பகுதியில் கடந்த காலச் சிக்கல்களின் வடுக்கள் இன்னும் உணரப்படுவதால், அமெரிக்காவின் ஈடுபாட்டிற்கான வரம்பு எவ்வளவு தூரம் உள்ளது? இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுக்கு தனது முதல் எதிர்வினையில், அமெரிக்க அதிபர் பைடன், அமெரிக்கா யார் பக்கம் என்பதை தெளிவுபடுத்தினார்: "அமெரிக்கா இஸ்ரேலுக்கு பின்னே பக்கப…
-
- 0 replies
- 293 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் பனிப்பொழிவால் விபரீதம்: 168 வாகனங்கள் மோதி சங்கிலித்தொடர் விபத்து – 8 பேர் பலி அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தின் தெற்கு பகுதியில் மிகப்பெரிய சதுப்பு நிலம் காணப்படுகிறது. இங்கு ஏற்பட்ட தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதற்கிடையே அங்கு காலையில் கடும் பனிப்பொழிவு உருவானது. இந்த பனிப்பொழிவுடன் தீயில் இருந்து வெளியேறிய புகையும் சேர்ந்தது. எனவே அந்த பகுதியில் உள்ள சாலை முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. ஒன்றன்பின் ஒன்றாக மோதின இதனால் சாலையில் முன்னால் வரும் வாகனங்களை பார்க்க முடியாத அளவுக்கு மூடுபனி உருவானது. அப்போது அபாயகரமான வேதிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று அந்த வழியாக சென்றது. மூடுபனி காரணமாக எதிரே வந்த வா…
-
- 1 reply
- 471 views
-
-
இலங்கையை இராணுவ தளபாட விநியோக தளமாக பயன்படுத்துவதற்கு சீனா முயற்சி- பென்டகன் அறிக்கை Published By: RAJEEBAN 23 OCT, 2023 | 11:36 AM இலங்கையை இராணுவ தளபாட விநியோகத்திற்காக பயன்படுத்துவது குறித்து சீனா ஆராய்ந்துள்ளது என பென்டகன் தெரிவித்துள்ளது. சீனா தனது உலகளாவிய இராணுவ தளங்களை விஸ்தரிக்க முயல்கின்றது என தெரிவித்துள்ள பென்டகன் சீனா தனது இராணுவ தளபாட விநியோகத்திற்காக 18 நாடுகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. இராணுவ நடவடிக்கைகளிற்கான தேவை எழும்போது சீனா இராணுவம் பயன்படுத்தக்கூடிய தளங்களை உருவாக்குவது குறித்தே சீனா கவனம் செலுத்துகின்றது. சீனா இராணுவ தளபாட விநியோகத்திற்கான தளங்கள…
-
- 3 replies
- 340 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 7 நிமிடங்களுக்கு முன்னர் அக்டோபர் 23-ஆம் தேதியின் 24 மணி நேரத்தில் மட்டும் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் குழு நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே 24 மணிநேரத்தில் 400 ‘பயங்கரவாத இலக்குகளைத்’ தாக்கி ஹமாஸ் குழுவின் பல தளபதிகளைக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருக்கிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அக்டோபர் 23-ஆம் தேதிகாஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் குழு நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது …
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தெற்கு சீன கடல் அல்லது மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனாவும் பிலிப்பைன்ஸும் போட்டியிட்டு வருகின்றன. 19 நிமிடங்களுக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை சீன கடற்படையின் கடலோரக் காவல் கப்பலுக்கும் பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் கப்பலுக்கும் இடையே நடைபெற்ற மோதல் வீடியோவைக் கவனமாகக் கவனியுங்கள். மோதலின் போது, ஒரு கப்பலின் பின்புறம் மற்றொரு கப்பலின் மேல் மோதும்போது, அதற்கிடையில் ஒரு பிலிப்பைன்ஸ் தொலைக்காட்சி குழுவினர் இதனை படமாக்க கடுமையாக முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. தென் சீன கடலில் உள்ள மூழ்கிய பவளத் திட்டுகள் தொடர்பாக மணிலாவிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான மோதல் பல தசாப்…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் காசா பகுதியில் வசிக்கும் மக்களை ‘பாதுகாப்புப் காரணங்களுக்காக’ அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. காசா நகரத்தில் வசிப்பவர்களை தெற்கு பகுதிகளுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருக்கிறது. கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) அன்று ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் காசா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் 447 குழந்தைகள், 248 பெண்கள் உட்பட 1,417 பேர் உயிரிழந்துள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எதிர்தாக்குதலின் பகுதியாக, தரைவழித் தாக்குதல் நடத்த காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள், கனரக பீரங்கி…
-
- 20 replies
- 1.7k views
- 1 follower
-
-
1980 களின் பிற்பகுதியில் ஹிந்தியாவின் பிராந்திய நலனை முன்னிலைப்படுத்தி.. புளொட் கும்பலை வைத்து.. ஹிந்திய உளவு அமைப்பின் உதவியோடு செய்யப்பட்ட இராணுவப் புரட்சி.. பின் அதை ஒடுக்கப் போவதாகச் சொல்லி மாலைதீவில் இறங்கிய ஹிந்தியப்படை.. இது நாள் வரை அங்கு பல்வேறு இராணுவ விமானப்படை தேவைகளுக்காகத் தங்கி இருக்கிறது. இந்தச் சம்பவத்தை வைத்து ஹிந்தியா உலக அரங்கில் தமிழீழ விடுதலைக்காகப் போராடிய.. அனைத்து ஈழத்தமிழ் இயக்கங்களையும் பயங்கரவாதிகள் என்று சித்தரித்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது மாலைதீவு அதிபராக தெரிந்தெடுக்கப்பட்டிருக்கும். மொகமட் முய்ஸ்சு.. இவ்வாறு தங்கியுள்ள ஹிந்தியப் படைகளை வெளியேற்றப் போவதாக அறிவித்துள்ளதுடன்.. இந்த அறிவிப்பை சீனா வரவேற்றிருக்கிறது. …
-
- 6 replies
- 685 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் 5ஆம் வகுப்பிலிருந்து 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களின் விஞ்ஞான ஆர்வத்தை ஊக்குவிக்கவும், உலகில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த கூடிய கண்டுபிடிப்புகளில் அவர்கள் தங்கள் அறிவாற்றலை செலுத்தவும், “3 எம் அண்ட் டிஸ்கவரி எஜுகேஷன்” (3M and Discovery Education) எனும் அமைப்பால் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. PauseUnmuteFullscreen இதில் அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தின் அன்னண்டேல் பகுதியை சேர்ந்த 14 வயதான ஹேமன் பெகேல் (Heman Bekele) எனும் 9ஆம் வகுப்பு மாணவன் கலந்து கொண்டான். ஆபிரிக்க நாடான எதியோப்பியாவில் பிறந்து, 4 வயதில் அமெரிக்காவிற்கு பெற்றோருடன் வந்த ஹேமன் அமெரிக்காவிலேயே தொடர்ந்து கல்வி பயின்று வருகிறான். ஹேமன், உயிரி…
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 24 OCT, 2023 | 04:49 PM ஜேர்மனியின் கடற்பரப்பில் இரண்டுசரக்குகப்பல்கள் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின்றன. ஜேர்மனியின் வடக்குகிழக்கு கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரிட்டன் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த வெரிட்டி என்ற கப்பல்பஹாமாவை சேர்ந்த பொலைசி என்ற கப்பலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெரிட்டி கப்பல் மூழ்கியுள்ளது அதன் ஏழு பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என ஜேர்மன் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆறுபேர் காணாமல்போயுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/167667
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கனடா மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட கசப்பைத் தொடர்ந்து 41 கனடா தூதரக அதிகாரிகள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர். இந்தியா இரண்டு வாரங்களுக்கு முன்பு கனடாவை அதன் தூதரக ஊழியர்களை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. அவர்கள் தங்கியிருந்தால் அவர்களுக்கான ராஜாங்க சட்ட விலக்குகளை நீக்கிவிடப் போவதாகவும் இந்தியா கூறியிருந்தது. கனடா இதை "சர்வதேச சட்ட மீறல்" என்று கூறியது ஜூன் 18 ஆம் தேதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து உறவுகளில் பதற்றம் ஏற்பட்டது. இந்த குற்…
-
- 6 replies
- 455 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இஸ்ரேல் சென்று நேரில் சந்தித்தார். 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உண்மையான நண்பர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். அமெரிக்க அதிபரின் இஸ்ரேல் பயணத்தின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். இஸ்ரேலுக்கு பயணம் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். போர் நடக்கும் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் பயணம் மேற்கொள்வது வழக்கமான ஒன்றல்ல. எனினும் தன்னுடைய நேரடி சந்திப்பு சில தீர்வுகளை கொண்டு வரும் என்ற நோக்கில் அமெரிக்க அதிபர் இந்த பயணத்தை மேற்கொண்டார். …
-
- 7 replies
- 582 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மேற்கு கரையில் குடியேறிய இஸ்ரேலியர்கள் பாலத்தீன விவசாயியை கற்களால் தாக்கும் காட்சி. (2020 அக்டோபரில் எடுக்கப்பட்டது) 22 அக்டோபர் 2023, 09:01 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் அபேத் வாடிக்கு தனது தொலைபேசியில் செய்தி வந்தபோது, அவர் இறுதிச் சடங்கிற்காக தனது வீட்டில் இருந்து கிளம்பிக்கொண்டிருந்தார். முகமூடி அணிந்த ஒரு குழுவினர் கோடரிகள், பெட்ரோல் டப்பா மற்றும் செயின்சாவுடன், ஹீப்ரு மற்றும் அரேபிய மொழியில் மிரட்டும் ஒரு வீடியோ அது. "குஸ்ரா கிராமத்தின் சாக்கடையில் உள்ள அனைத்து எலிகளுக்கும், நாங்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறோம், நாங்கள் உங்களுக்காகத் துக்…
-
- 2 replies
- 368 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் (வெடிமருந்தைக் கண்டுபிடித்தவரும், நோபல் பரிசை நிறுவியவருமான ஆல்ஃப்ரட் நோபலின் பிறந்த தினம் அக்டோபர் 21) உலக அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும் செயல்படும் தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் உலகிலேயே வழங்கப்படும் மிக உயரிய விருது அமைதிக்கான நோபல் பரிசு. ஆனால் இந்த விருதை நிறுவியவர்தான் பல போர்களுக்காகவும் வெடிகுண்டுகளைத் தயாரிக்க உதவிய டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். அவர் தான் ஆல்ஃப்ரட் நோபல் என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர். இந்த முரண் எப்படிச் சாத்தியமானது? யார் இந்த ஆல்ஃப்ரட் நோபல்? அவர் தன் வாழ்நாளில் செய்தது என்ன? யார் இந்…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தாட் வான் பாதுகாப்பு கவசத்தை மத்திய தரைக் கடலுக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு 2 விமானம் தாங்கிக் கப்பல், மற்றும் ஜெட் விமானங்களை அமெரிக்கா அனுப்பியிருந்தது. தற்போது, அவற்றுடன் தாட்(THAAD) என்னும் வான் பாதுகாப்பு கவசத்தை மத்திய தரைக் கடலுக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது தாட் அமைப்பு, குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கக் கூடியது. இதுகுறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின், கூடுதல் படையினர் எந்த நேரத்தில…
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 22 OCT, 2023 | 10:15 AM கடந்த இரண்டு வாரகாலமாக இஸ்ரேல் தீவிரமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில் காசா சிறுவர்கள் முன்னரை விட அதிகளவு மன அழுத்தத்தை வெளிப்படுத்துகின்றனர் என பெற்றோர்களும் உளவியல் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். காசாவின் 2.3 மில்லியன் சனத்தொகையில் சிறுவர்கள் என குறிப்பிட்டுள்ள ரொய்ட்டர் இவர்களில் பலர் தங்கள் வீடுகளில் இருந்து தப்பியோடியுள்ள நிலையில் ஐநா அகதி முகாமில் குடிநீரும் உணவும் இன்றி தொடர்ச்சியான குண்டுவீச்சின் கீழ் வாழ்கின்றனர் என தெரிவித்துள்ளது. சிறுவர்கள் வலிப்பு படுக்கையில் சிறுநீர்கழித்தல் பயம் ஆக்ரோசம் நடவடிக்கைகளில் பதற்றம் பெற்றோர் அருகிலேயே இருக்கவேண்டும…
-
- 2 replies
- 212 views
- 1 follower
-
-
பாலஸ்தீனத்தில் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்த பஹ்ரைன் தனியார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்த இந்தியரான டாக்டர் சுனில் ராவ் பஹ்ரைன் காவல்துறையால் இன்று -19- கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் டாக்டர் சுனில் ராவ், மருத்துவமனை நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
-
- 23 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நதீன் யூசிஃப் பதவி, பிபிசி நியூஸ், கனடா 28 நிமிடங்களுக்கு முன்னர் கனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்திய தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியுள்ளது. கனடாவின் குற்றச்சாட்டை இந்திய அரசு மறுத்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், கடந்த ஜூன் 18ஆம் தேதியன்று சீக்கிய குருத்வாராவுக்கு வெளியே நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். …
-
- 44 replies
- 4.1k views
- 3 followers
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை குறிவைத்து ‘பொன்ஸி’ மோசடியில் ஈடுபட்ட ‘நண்பன் வென்ச்சர்ஸ்’ நிறுவனத்தை முடக்கும் நடவடிக்கைக்கு அனுமதி பெற்றுள்ளதாக அமெரிக்காவின் செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் கமிஷன்(எஸ்இசி) அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பொன்ஸி என்பது ஒரு முதலீட்டு மோசடி திட்டம். அதாவது, புதிய முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று, அதிலிருந்து பணத்தை எடுத்து பழைய முதலீட்டாளர்களுக்கு கொடுப்பது. இந்தியாவில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட கோபால கிருஷ்ணன், மணிவண்ணன் சண்முகம், சக்திவேல் பழனி ஆகியோர் இணைந்து அமெரிக்காவில் நண்பன் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தை …
-
- 0 replies
- 497 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் நடத்திய யூத அமைப்புக்களைச் சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைதுகள் தொடர்வதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். நாடாளுமன்ற பகுதியில் போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லாத நிலையில், அங்குள்ள நாடாளுமன்ற அலுவலக கட்டடமான "கேனான் ஹவுஸ்" அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்த பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டக்காரர்கள் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், நாடாளுமன்றமும் …
-
- 0 replies
- 296 views
- 1 follower
-