உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26841 topics in this forum
-
எகிப்தில் பண்டைய கல்லறை ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அகழ்வாராய்ச்சி நடக்கும் இடம் எகிப்தில் மன்னர்களின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இடத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்லறையை பார்ப்பதற்கு எகிப்திய அதிகாரிகள் முதல் தடவையாக ஒரு தொகுதி பொதுமக்களை அனுமதித்துள்ளனர். 80 ஆண்டுகளுக்குப் முன்னர் ருடாங்கமன் என்பவரது கல்லறை இதே இடத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பின்னர் நடந்துள்ள மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு இது என்று இந்த கல்லறை கண்டுபிடித்த அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மூவாயிரம் ஆண்டுகள் மனிதர்களின் கண்களில் இருந்து மறைந்திருந்த ஒரு காட்சி இது என்று இதனை வர்ணித்த லக்ஸரில் அந்த இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் ஒர…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
-
அரசு ஊழியர்கள் மாநாட்டில் ஜெயலலிதா கூறிய கதை சென்னையில் நடந்த அரசு ஊழியர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது ஒரு கதையை கூறினார். அவர் பேசியதாவது:- நல்லாட்சியின் அடையாளம் அரசின் திட்டமிட்ட பயன்கள், ஏழை எளிய மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்திட, அந்த அரசின் சேவை செயலாக்க ஏற்பாடு மேம்படுத்தப்பட வேண்டும் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு கோட்பாடு ஆகும். ஒரு புறம், அரசு அலுவலர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அதன் வாயிலாக அவர்கள் மக்களுக்கு மேலும் சிறப்பாக சேவை ஆற்ற ஊக்கம் அளித்திட வேண்டும் என்னும் நிலை; மறுபுறம், ஏழை எளிய மக்களுக்கு போதிய பயன்கள் உரிய நேரத்தில் சென்றடைவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்னும் நிலை. இந்த இரண்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
வேட்டியை உருவிய "உடன்பிறப்புகள்' தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொரு கட்சியினரின் செயல்களும், நடந்து கொள்ளும் விதமும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். பல தேர்தல் கூட்டங்களில் வேட்டி உருவுதல், சட்டையை கிழித்தல் போன்றவை நடக்கும். இவை காங்கிரஸ் கட்சியில் தான் அதிகமாக இருக்கும். இன்னும் காங்கிரசில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காத நிலையில், தி.மு.க., உடன்பிறப்புகள் வேட்டி உருவும் "திருவிழாவுக்கு' பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். சென்னையை அடுத்த பரங்கிமலை கன்டோன்மெண்ட் பகுதியில் தி.மு.க., பொதுக் கூட்டம் நடந்தது. கட்சியின் சார்பில் முக்கிய பிரமுகர்கள் யாரும் வராததையடுத்து, உள்ளூர் உடன் பிறப்புக்களே பேசி முடித்தனர். இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் கன்டோன்மென்ட் தி.மு.க., நகர செயல…
-
- 0 replies
- 1.3k views
-
-
அகதிகள் தமிழகம் வருகை அதிகரிப்பு முகாமிலுள்ளவர்களுக்கு கட்டுப்பாடு திண்டுக்கல் : இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இலங்கையில் நடக்கும் கலவரத்தால் அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அகதிகள் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மறுவாழ்வு சிறப்பு ஆணையர் ராஜ்குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள இனக்கலவரத்தினால் நிவாரணம் கோரி இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு தற்காலிக தங்குமிடம், பணிக்கொடை, மான்ய விலையில் அரிசி, 2 ஆண்டிற்கு ஒரு முறை பாத்திரங்கள், பிளஸ் 2 வரை இலவசக்கல்வி, கல்லுõரி படிக்க பணிக்கொடை ஆகியவை வழங்கப்படுகிறது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகம் முழுவதும் காதலர் தினம் வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் காதலர் தினம் பிரபலமாகி விட்டதால் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை காதலர்கள்ஆவலோடு எதிர் நோக்கி உள்ளனர். இந்திய கலாச்சாரத்துக்கு காதலர்தினம் எதிரானது என்று கூறி பாரதீய ஜனதா கடந்த சில ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதே போல இந்த ஆண்டும் காதலர் தினத்துக்கு பாரதீய ஜனதா புதுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளது. காதலர் தினத்தை கொண்டாடும் காதல் ஜோடியை பிடித்து போலீசார் உதவியுடன் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று பீகார், ஜார்கண்ட் மாநில பாரதீய ஜனதாவின் மாணவர் பிரிவான அகில்பாரதீய வித்யாத்தி பரிஷத் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறும்போது நாங்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
எகிப்துக்குச் சொந்தமானதும் சவுதியரேபியாவின் Duba துறைமுத்தில் இருந்து கடந்த வியாழன் புறப்பட்டதுமான பயணிகள் கப்பல் செங்கடலில் 1400க்கும் மேலான பயணிகளுடன் மூழ்கிவிட்டது. மேலும் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன..! http://news.bbc.co.uk/1/hi/world/middle_ea...ast/4676916.stm
-
- 9 replies
- 2.4k views
-
-
ஆதிமனிதன் இறந்தது எவ்வாறு? பொதுவாக மனிதர்கள் தான் வனவிலங்குகளை வேட்டையாடிக் கொன் றார்கள் என்ற நம்பிக்கை நிலவி வந்தது. ஆனால் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்த குரங்கு மனிதன், பறவைகளால் வேட்டையாடிக் கொல்லப் பட்டான் என்பதை நிரூபித்துள்ளார் லீருபர்ஜர் என்ற ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் தொல்படிவ மானிடவியல் அறிஞர். டவுங் குழந்தை, எனப்படும் மனித மூதாதையரின் தொல் படிவுகள் 1924ல் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே அந்த மனிதன் எவ்வாறு இறந்திருப்பான் என்ற விவாதம் நடை பெற்றுவந்தது. ஒரு புலியோ, ஈட்டி போன்ற கூர்மையான பற்களை உடைய பூனை போன்ற விலங்கோ தான் ஆதிமனிதனைக் கொன்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் யூகித்து வந்தனர். ஆனால், ஆதிமனிதனை புலி அடித்துக் கொல்லவில்லை. ஒரு ப…
-
- 4 replies
- 2k views
-
-
வீட்டிலிருந்து உலகம் வரை சகல பூசல்களையும் தீர்க்கும் `அருமருந்து' சி. வையாபுரி ஆங்கிலேயர்களின் காலனி நாடுகளில் ஒன்றாய் நலிந்து கிடந்த இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவது பற்றி நடந்த இங்கிலாந்து பாராளுமன்ற விவாதம் ஒன்றில் பேசிய வான்டர்டன் பிரபு காந்தியைக் கடுமையாக விமர்சித்திருந்தார். காந்தியத்தில் பற்றுக் கொண்டிருந்த அகதா ஆரிசன் என்பார், இங்கிலாந்திலிருந்து காந்திக்குக் கடிதம் மூலம் இதை விபரித்திருந்தார். `என் கருத்திலும் செயலிலும் அசைக்க இயலாத உறுதியுடன் நான் இருக்கின்றபோது, என்னைப்பற்றிப் புகழ்ந்தோ இகழ்ந்தோ யார் எங்கு பேசினால் என்ன?' என்று இந்தியா சுதந்திரம் அடைந்த அந்த ஆகஸ்ட் 15 ஆம் நாள் அகதாவுக்கு எழுதிய பதிலில் தெரிவித்துள்ளார் காந்தியடிகள். பெரு…
-
- 4 replies
- 1.7k views
-
-
பலஸ்தீன தேசத்தில் நடந்த தேர்தலில் தீவிரவாதக் கட்சியான கமாஸ் (Hamas), பலஸ்தீன விடுதலை இயக்க (PLO) சார்புடைய ஆளும் தரப்பை தோற்கடித்து பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதாக வரும் செய்திகளை அடுத்து கமாஸை பயங்கரவாதப் பட்டியலில் வைத்துள்ள இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்றவை விழி புதுங்கி நிற்கின்றன..! கமாஸ் தற்போதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அழுத்ததுக்குப் பணிந்து ஆயுதங்களைக் களையாது பலஸ்தீனத்தில் இஸ்ரேலின் வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்துவரும் ஒரு பலஸ்தீன சார்பு விடுதலை இயக்கமாகும்..! இதற்கிடையே கமாஸுடன் தாம் தொடர்புகளை வைக்கப் போவதில்லை என்று இஸ்ரேல் அமெரிக்கா மற்றும் அமெரிக்க வால்பிடி ஐரோப்பிய யூனியன் கருத்துத் தெரிவித்துள்ளன. மேற்குலக சார்பு பலஸ்தீன…
-
- 6 replies
- 2.9k views
-
-
முகம்மது நபி கேலிச் சித்திரம்: பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் பாகிஸ்தானில் டென்மார்க் கொடி எரிக்கப்படுகிறது இஸ்லாமிய இறைதூதர் முகம்மதுவின் கேலிச் சித்திரம் வேறு சில பத்திரிகைகளில் மறு பிரசுரம் ஆகியிருக்கும் நிலையில் ஜும்மா தொழுகை நாளான இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென உலகில் பல இடங்களில் முஸ்லிம்களிடம் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. முகம்மதுவை சித்தரிப்பதே மத நிந்தனை என்கிறது இஸ்லாம். கேலிச் சித்திரத்திற்காக உலக அளவில் முஸ்லிம்கள் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தும் நாளாக இன்றைய தினம் அமைய வேண்டுமென வளைகுடாப் பகுதியில் வாழும் முன்னணி இசுலாமிய மதகுரு யூசுஃப் அல் கரதாவி கூறியுள்ளார். கார்டூன் முதலில் பிரசுரமான ட…
-
- 4 replies
- 2.4k views
-
-
அனுமான் கோயிலில் ஒரு பெண்ணின் கையை பிடித்து தவறாக நடக்க முயன்ற பூசாரியை, கோயில் வெளியே இழுத்துப்போட்டு, பெண்களே செருப்படி தந்தனர். ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டம் முதாப்பள்ளி என்ற பகுதியில் பிரபலமான அனுமான் கோயில் உள்ளது. அங்கு பூசாரியாக இருப்பவர் சேகர். வயது 35. கோயிலுக்கு முக்கிய விசேஷ நாட்களில், பெண்கள் கூட்டம் அதிகம் இருக்கும். உள்ளூரில் பெண்கள் அடிக்கடி கோயிலுக்கு வருவர். அப்படி வந்து கொண்டிருந்தவர் தான் இந்த 25 வயது பெண். அவர் கணவர், சமீபத்தில் தான் துபாயில் வேலை கிடைத்து சென்றுள்ளார். அந்த பெண்ணின் கணவர் பற்றிய விவரம் எல்லாம் அடிக்கடி பூசாரியிடம் சொல்லி, கடவுளிடம் வேண்டிக்கொண்டு கிளம்புவார். இப்படி பழக்கத்தை வைத்துக்கொண்ட பூசாரியிடம், திடீர் என்று …
-
- 27 replies
- 4.6k views
-
-
மகனை திருத்த தாய் கொடுத்த சாராயம் நான் தினசரி குடிப்பது உண்டு. அன்று நல்ல மழை பெய்து கொண்டு இருந்தது. பாதி குடி போதையில் வீட்டுக்கு வந்தேன். எனது வீட்டில் மனைவி, பிள்ளைகள் அனைவரும் பக்கத்து தெருவில் ஒரு விஷேசத்துக்கு சென்று விட்டார்கள். வீடு பூட்டி இருந்தது. அறைகுறை போதையில் இருந்த நானும் மேலும் ஒரு ரவுண்டு தண்ணி அடிக்க வேண்டும் என்று விரும்பினேன். எனது சட்டை பாக்கெட் காலியாக இருந்தது. வீட்டில் பணம் இருந்தும், வீடு பூட்டி இருப்பதால் அரை போதையில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனது தாய் வேறு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இட்லி கடை நடத்தி அதில் வரும் வருமானத்தில் 100, 50 நோட்டுக்களை சுருட்டி தன் சுருக்குப் பையில் போட்டு வைத்து இருந்தாள். நான் கொஞ்ச காலம் என் தாய…
-
- 6 replies
- 10.9k views
-
-
சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டம் என்கிற பெயரில் சிறிலங்கா அரசாங்கமும் இராணுவமும் போருக்கான ஒத்திகையை நடத்தியுள்ளன. சுதந்திர நாள் உரையாற்றிய பின்னர் அரச தலைவர் மகிந்த ராஜபக்சஇ இராணுவத்தினரது அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இது வழமையான ஒரு நடவடிக்கையாக இருப்பினும் இராணுவ அணிவகுப்பு தொடர்பாக சிறிலங்காவின் தொலைக்காட்சியில் பேசிக்கொண்டிருந்த வர்ணணையாளர்இ "நிலத்திலும் கடலிலும் வானிலும் நாங்கள் பலமானவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது எங்கள் இராணுவ அணிவகுப்பு" என்று கூறியுள்ளார். சிறிலங்கா விமானப் படையின் எம்.ஐ.-24 ரக விமானமும் தாக்குதல் உலங்கு வானூர்திகளும் இஸ்ரேலிய தயாரிப்பு கிபீர் ஜெட் விமானங்களும் அணிவகுத்தன. இவை அனைத்துமே 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த …
-
- 7 replies
- 1.9k views
-
-
ஐ.நா. பாதுகாப்பு குழுவில் நிரந்தர இடம்பெற இந்தியாவிற்கு தார்மிக உரிமை உள்ளது பிரதமர் மன்மோகன் சிங் புதுடில்லி, ""ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தைப் பெற இந்தியாவுக்கு தார்மிக உரிமை உள்ளது. சர்வதேச கடமை, பொறுப்பு, திறன் போன்றவற்றால் உலக நாடுகள் இந்தியாவை அங்கீகரிப்பது அதிகரித்து வருகிறது. எனினும், நிரந்தர இடம்பெறுவதில் சில தடைகள் உள்ளன'' என்று பிரதமர் மன்மோகன் கூறியுள்ளார். நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மன்மோகன் அளித்த பதில்கள் வருமாறு: வெளியுறவு மற்றும் தேசியப் பாதுகாப்புத் துறைகளில் இந்த அரசு பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உலக நாடுகள் இந்தியாவை மிகுந்த நட்புணர்வுடன் அணுகச் செய்வதற்கு எங்கள் அரசு பல முக்கிய நடவடிக்கைக…
-
- 1 reply
- 1.2k views
-
-
கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்ததால் மனம் உடைந்த பெண் தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். சென்னை அருகே உள்ள பாடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பானுமதி. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். செல்வராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணுக்கும் இடையே தப்பான"காதல்" ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பானுமதிக்குத் தெரிய வந்துள்ளது. கணவரின் தவறான தொடர்பால் மனம் உடைந்த பானுமதி, கணவர் வெளியே சென்ற நேரமாக பார்த்து தனது இரு மகன்களுடன் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். thatstamil ---------…
-
- 3 replies
- 1.6k views
-
-
கனடாவின் பாரளுமன்ற தேர்தல் இன்று காலையிலிருந்து இரவு 8.30 வரை நடைபெற்றது. தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்
-
- 17 replies
- 3.3k views
-
-
சன் டிவியை முடக்க ஜெ. புதிய சட்டம்: பர்னாலாவிடம் கருணாநிதி புகார் சன் டிவி குழுமத்தைச் சேர்ந்த சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் மற்றும் ஹாத்வே கேபிள் நிறுவனத்தை கையகப்படுத்த தமிழக அரசு அதிரடியாக ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை எஸ்.சி.வி எனப்படும் சுமங்கலி கேபிள் விஷன் (சன் டிவி குழுமத்தைச் சேர்ந்தது) நிறுவனம்தான் பன்முக கேபிள் இணைப்புகளைக் கொடுத்து வருகிறது. தமிழகத்தில் 80 சதவீத வீடுகளுக்கு சுமங்கலி கேபிள் விஷன் மூலமாகத் தான் சேட்டிலைட் டிவி இணைப்பு தரப்பட்டுள்ளது. இந் நிலையில் சட்ட அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டசபையில் ஒரு சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: பன்முக கேபிள் இணைப்புகள் நடத்துவோர் மற்றும் ஆப்டிகல் …
-
- 14 replies
- 3.1k views
-
-
பெனாசீர் பூட்டோவைக் கைதுசெய்யக் கோரியுள்ளது சர்வதேச பொலிஸ் பாகிஸ்தான் நாட்டு முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ அவர்களை கைதுசெய்ய கோரி, சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போல், உலகம் முழுவதும் தகவல் அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி இண்டர்போல் அமைப்பு, ரெட் நோட்டீஸ் எனப்படும் இந்த தகவலை அனுப்பியுள்ளது என இண்டர்போல் அமைப்பிற்கு பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பெனாசீர் பூட்டோ மற்றும் அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் பாகிஸ்தான் நாட்டில் தேடப்பட்டு வருகின்றனர். பெனாசீர் பூட்டோ தற்பொழுது பிரித்தன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் வசித்து வருகின்றார். பூட்டோ தற்பொழுது அமெரிக்க பயணத்தினை மேற்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
வாஷிங்டன் மேற்கொள்கின்ற சட்டவிரோதமான நடைமுறையான கைதிகளை மூன்றாவது நாடுகளில் கடத்துதல் தொடர்பாக தகவலை தர வேண்டும் என்று ஐரோப்பா விடுத்த வேண்டுகோளுக்கு பதில் தருகின்ற வகையில் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் அந்த நடைமுறை நீடிக்கும் என்று தெளிவுபடுத்தினார். ஐரோப்பிய விமர்சகர்கள் மீது அதே குற்றச்சாட்டை திருப்பிப்போடும் முயற்சியில், அத்தகைய கோரிக்கைகளை ஐரோப்பா தொடர்ந்து எழுப்பிக் கொண்டு இருக்குமானால் வாஷிங்டன் ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்கள் விமான நிலையங்களை CIA விமானங்கள் மூன்றாவது நாடுகளுக்கு கைதிகளை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு அனுமதித்ததையும் மற்றும் CIA இரகசிய சிறைகளை நடத்துவதை அனுமதித்ததிலும் உடந்தையாக செயல்பட்டதை அவர் எடுத்துக்காட்டினார். மூன்றாம் தரப்பு நாடு…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஃபிடல் காஸ்ட்ரோ ரஸ் (பிறப்பு:13, ஆகஸ்ட் 1926) கியூபாவின் 20-வது குடியரசுத் தலைவர். 1959-1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் குடியரசுத் தலைவராகவும் இருந்து வருகிறார். கியூபாவின் ஹோல்கின் மாகாணம், பைரன் என்ற இடத்தில் பிறந்தவர் காஸ்ட்ரோ. இவரது பெற்றோர் ஸ்பெயினில் இருந்து குடியேறியவர்கள். ஹவானா பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வி பயின்ற காஸ்ட்ரோ மாணவப் பருவத்திலேயே அரசியல் ஈடுபாடு கொண்டார். 1947-ல் சீர்கேடு அடைந்த அரசு நிர்வாகத்தை எதிர்த்து, மறுசீரமைப்பைக் கோரிய கியூப மக்கள் கட்சியில் இணைந்தார். சட்டக் கல்வி முடித்து வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட்ட காஸ்ட்ரோ, கியூபாவில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்து குரல் கொடுத்தார். கியூப மக்கள் கட்சித் தலைவராக இருந்தவர் மரணமட…
-
- 1 reply
- 1.3k views
-
-
போலியான கல்லுக்குள் ஒழித்து வைக்கப்பட்டுள்ள உளவுத்தகவல்களை பரிமாறப் பயன்படும் இலத்திரனியல் டிவைஸ்..! ரஷ்சியாவில் உள்ள பிரித்தானிய தூதராலய தூதுவர் உட்பட சிலர் பிரிட்டனுக்காக ரகசிய அதிநவீன இலத்திரனியல் உபகரணங்களை (ரான்ஸ்மிற்றர்கள்) போலிக் கல் ஒன்றுக்குள் ஒழித்து வைத்து உளவு பார்த்தது ரஷ்சிய உளவுத்துறையான எப் எஸ் பி (FSB) யால் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த உளவாளிகளுக்கும் ரஷ்சியாவில் இயங்கும் சில அரசுசாரா தொண்டர் நிறுவனங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் ரஷ்சியா அரசு சாரா வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்திய போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதை மனத உரிமை மீறல் என்ற தொனியில் எதிர்த்து …
-
- 2 replies
- 1.5k views
-
-
திமுகவில் சேருகிறாரா விஜய்? அரசியலில் ஏபிசிடி கூட எனக்குத் தெரியாது. நான் திமுகவில் சேரப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் பலரின் வீடுகளில் அதிரடி வருமான வரி சோதனை நடந்தது. இதில் அதிகம் சோதனைக்குள்ளானது நடிகர் விஜய்தான். அவரது வீடுகள், கல்யாண மண்டபங்களில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையின்போது கோடிக்கணக்கான பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந் நிலையில், விஜய் திடீரென டெல்லியில் நடந்த பொங்கல் சிறப்பு தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது தமிழகத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம் தேசிய அளவில், மத்திய அரசு அளவில் நடை…
-
- 17 replies
- 3.1k views
-
-
லண்டனுக்கு வந்த திமிங்கிலம் தேம்ஸ் நதியூடாக லண்டனின் மத்திய பிரதேசத்திற்குள் 5 மீற்றர் நீளமான திமிங்கிலம் உட்பிரவேசித்துள்ளது. வழக்கமாக வடக்கு அட்லாண்டிக் பகுதியின் ஆழ்கடல் பிரதேசங்களில் சிறு கூட்டமாக காணப்படும் இந்த சிறிய வகை திமிங்கிலம் தேம்ஸ் நதிக்கு வந்தது அதிசயமாக கருதப்படுகின்றது. இந்த அரிய காட்சியை காண தேம்ஸ் நதியருகே நேற்று பெருந்தொகையான மக்கள் கூடியிருந்தனர். இதனை பாதுகாப்பான முறையில் மீண்டும் கடலுக்கு அழைத்து செல்வதற்காக முயற்சியில் கடல் வாழ் உயிரினங்களை காக்கும் அமைப்பு ஈடுபட்டுள்ளது. நேற்று இந்த செய்தியே பிரத்தானிய தொலைக்காட்சிகளில் பரபரப்பான விடயமாக இருந்ததுடன் பல தொலைக்காட்சிகளில் திமிங்கிலம் பயணம் செய்வதை நேரடி ஒளிபரப்பாக காண கூடியதாக இருந்தது. …
-
- 21 replies
- 3.9k views
-