Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆஸ்திரேலியாவில் பூமிக்கு அடியில் வாழும் மக்கள் - ஏன் தெரியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,கிளேர் ரிச்சர்ட்சன் பதவி,பிபிசி ஃப்யூச்சர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் கூபர் பெடி, ஆஸ்திரேலியாவின் ஒபல்(Opal) எனப்படும் தாதுக்கல் சுரங்கத் தொழிலின் மையமாக உள்ளது. இப்போது, அங்கு வசிப்பவர்களில் 60% பேர் நிலத்துக்கு அடியில் தான் வாழ்கின்றனர். மேலும், இந்த நகரம் வளம்குன்றா வாழ்க்கையைப் பொறுத்தவரை முன்னணியில் உள்ளது. கொப்புளிக்கும் வெப்பநிலையோடு, நாட்டின் தொலைதூரத்தில், எளிதில் அணுகமுடியாத வகையில் அமைந்துள்ளது. வழக்கமாக உள்ளூர் ஒபல் தாதுக்கல் சுரங்கங்களில் இருந்து மெல்லிய சிவ…

  2. கோடீஸ்வரராக காட்டிக்கொண்டு மோசடி செய்த ஹஸ்பப்பிக்கு 11 வருட சிறை! அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு By DIGITAL DESK 3 08 NOV, 2022 | 03:06 PM தன்னை பெரும் கோடீஸ்வரராக, சமூகவலைத்தளங்களில் காட்டிக்கொண்டு, பலரிடம்மோசடி செய்த நைஜீரிய இன்ஸ்டாகிராம் பிரபலமான ஹஸ்பப்பி எனும் நபருக்கு அமெரிக்க நீதிமன்றமொன்று 11 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தனி ஜெட் விமானம், ஆடம்பர ரோல்ஸ் ரோய்ஸ் கார்கள், உல்லாச ஹோட்டல்களில் விடுதிகளில் விருந்து, விலை உயர்ந்த ஆடை அணிகலன்கள் என தனது ஆடம்பர வாழ்க்கையை, இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவு செய்து பிரபலமானவர் ஹஸ்பப்பி. நைஜிரியரான ஹஸ்பப்பி (Hushpuppi) ), மலேஷியா மற்றும் துபாயிலும் வசித்தார். …

  3. சரிந்த சுரங்கம், காபி தூளை சாப்பிட்டு 9 நாட்களாக உயிரைப் பிடித்திருந்த தொழிலாளர்கள் - எங்கே? பென் டொபையாஸ் பிபிசி நியூஸ் 7 நவம்பர் 2022 பட மூலாதாரம்,NEWS1 தென் கொரியாவில் இடிந்து விழுந்த துத்தநாக சுரங்கத்தில் ஒன்பது நாட்களாகச் சிக்கி, காபி பவுடரைச் சாப்பிட்டு உயிர் பிழைத்துக் கொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். 62, 56 வயதுடைய ஆண்கள், நெருப்பு மூட்டி, நெகிழியால் கூடாரம் அமைத்து வெப்பத்தைத் தக்க வைத்து இருந்ததாக நம்பப்படுகிறது. அவர்களுடைய உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிச…

  4. துட்டன்காமூன் மட்டுமே தனது ஆட்சிக்கு அப்பால், தனது நாட்டைப் பாதுகாத்து கவனித்துக்கொண்ட ஒரே பார்வோ மன்னன். துட்டன்காமூன் மட்டுமே தனது ஆட்சிக்கு அப்பால், தனது நாட்டைப் பாதுகாத்து கவனித்துக்கொண்ட ஒரே பார்வோ மன்னன்., ஏனெனில் அவர் தொடர்ந்து கொடையளிப்பவராக இருந்தார். 2022 துட்டன்காமுனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இவை அனைத்தும் 1922ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதிதான் தொடங்கியது. எகிப்தின் லக்சரில் உள்ள கிங்ஸ் பள்ளத்தாக்கில் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹோவர்ட் கார்ட்டர் மற்றும் அவரது குழுவினருக்கு தண்ணீர் எடுக்கும்போது ஒரு சிறுவன் கல் தடுக்கி விழுந்தான். அந்த செயல்தான், கார்ட்டர் மற்றும் அவரது த…

  5. 23000 கிலோ எடையுடைய சீனாவின் ரொக்கெட் பசிபிக் கடலில் விழுந்தது By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 10:26 AM சீனாவின் கட்டுபாட்டை இழந்த 23 தொன் ரொக்கெட்டின் உதிரிப்பாகங்கள் பூமியின் பசிபிக் கடலில் விழுந்துள்ளது. சீனா விண்வெளியில் தனக்கு என்று விண்வெளி ஆராய்ச்சி கூடத்தைக் கட்டி வருகிறது. இந்த நிலையில் அதற்காக மெங்க்டியன் என்ற கடைசி தொகுதி பூமியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி ரொக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. அதற்கு லாங் மார்ச் 5பி என்று பெயர் சூட்டப்பட்டது. தானாக தரையிறங்கும் இயக்கம் சரியாக வடிவமைக்கப்படாததால் லாங் மார்ச் 5பி (Long March 5B )கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விண்வெளி பாதையில் நுழைந்தது…

  6. எண்ணெய் திருட்டு விவகாரம் - கப்பலை விசாரணைக்கு உட்படுத்துகின்றது நைஜீரியா – 8 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் By RAJEEBAN 07 NOV, 2022 | 10:18 AM இலங்கை பணியாளர்கள் உட்பட பலர் சம்பந்தப்பட்ட கப்பல் விவகாரம் குறித்து நைஜீரியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. எண்ணெய் திருட்டில் ஈடுபட்டதாக ஈக்குவடோரியல் கினியாவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பல் தொடர்பிலேயே நைஜீரியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஹெரோய்க் எடன் என்ற பாரிய எண்ணெய்கப்பலில் 8 இலங்கையர்கள் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நைஜீரியாவில் எண்ணெய் திருட்டில் ஈடுபட்டதாக குறிப்பிட்ட கப்பலை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக ஈக்குவடோரியல் கினியா விசாரணைகளை …

  7. ஏரியில் விழுந்து நொருங்கிய பயணிகள் விமானம்..! டான்சானியாவில் அதிர்ச்சி சம்பவம்! டான்சானியா நாட்டில் பயணிகளை ஏற்றி சென்ற உள்நாட்டு விமானம் ஒன்று ஏரியில் விழுந்து மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டான்சானியாவில் சுமார் 40 பயணிகள் மற்றும் விமானிகளுடன் புறப்பட்ட ப்ரெசிஷன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான உள்நாட்டு விமானம் ஒன்று புகோபா விமான நிலையம் நோக்கி புறப்பட்டது. இன்று காலை புகோபா விமான நிலையத்தை நெருங்கியிருந்த நிலையில் விமான நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாக விக்டோரியா ஏரியில் விழுந்தது. …

  8. இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான அவசரத் தேவை எழுந்துள்ளதாக ஜப்பான் அறிவிப்பு! ஜப்பானுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், அந்நாட்டு இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான, அவசரத் தேவை எழுந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார். வடகொரியாவின் தொடர்ச்சியான அணு ஆயுத ஏவுகணை சோதனை முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உள்ளிட்டவற்றின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜப்பானின் டோக்கியோவுக்கு தென்மேற்கே உள்ள சாகாமி வளைகுடாவில் ‘சர்வதேச கடற்படை திறனாய்வு’ என்ற பெயரில் நடைபெற்ற கடற்படை கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு க…

  9. அடுத்த ஆண்டு மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு பொது விடுமுறை: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு! அடுத்த ஆண்டு மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவைக் கொண்டாட ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை அளிக்கப்படும் என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து மே 8ஆம் திகதி திங்கட்கிழமை வங்கி விடுமுறை வரும் என்று சுனக் கூறினார். 73 வயதான சார்லஸ், தனது தாயார் இரண்டாம் எலிசபெத் இறந்தவுடன் தானாகவே மன்னரானார். சில நாட்களுக்குப் பிறகு, செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் நடந்த விழாவில் அவர் ஐக்கிய இராச்சியத்தின் புதிய மன்னராக முறையாக உறுதிப்படுத்தப்பட்டார். 1953ஆம் ஆண்…

  10. கடினமான காலங்களில் ஒன்றிணைந்து செயற்பட சீனா- ஜேர்மனி உறுதி! மூன்று ஆண்டுகளில் முதல்முறையாக ஜி7 நாடுகளின் தலைவர் ஒருவரின் முதல் பயணத்தின் போது ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சந்தித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், நேருக்கு நேர் சந்திப்பின் போது, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், உலக அமைதிக்காக மாற்றம் மற்றும் கடினமான காலங்களில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என உறுதி பூண்டனர். பதற்றமான காலங்களில் இரு தலைவர்களும் நேரில் சந்திப்பது நல்லது எனவும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கிற்கு சிக்கல்களை உருவாக்குகிறது என்றும் இதன்போது ஷோல்ஸ் ஸிக்கு தெரிவித்தார்.…

  11. ரஷ்யாவுக்கு ட்ரோன்களை விநியோகித்ததாக ஈரான் ஒப்புதல் By DIGITAL DESK 3 05 NOV, 2022 | 06:51 PM ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) தான் அனுப்பியதாக ஈரான் முதல் தடவையாக இன்று ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், யுக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு முன்னரே அவை அனுப்பப்பட்டவை என ஈரான் கூறியுள்ளது. யுக்ரைன் யுத்தத்துக்கு பல மாதங்களுக்கு முன்னர், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஆளில்லா விhமனங்களை ரஷ்யாவுக்கு நாம் விநியோகித்தோம் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைய்ன் அமீர் அப்தோலாஹியன் கூறினார் என ஈரானின் ஐ.ஆர்.என்.ஏ. செய்திச் சேவை தெரிவித்தது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியதாக யுக்ரைனும் அதன் மேற்கு…

  12. கனடாவில் அதிகரித்து வரும் குரங்கம்மை நோய் By T. SARANYA 05 NOV, 2022 | 10:32 AM கனடாவில் மொத்தம் 1,444 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒட்டாவா, கனடாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 9 பேருக்கு மட்டுமே புதிதாக பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தன. இந்த பாதிப்பு அதிகரிப்பும் தொடர்ந்து குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில், திடீரென தொற்று எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இதன்படி, கனடாவில் மொத்தம் 1,444 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சிகிச்சைக்காகi வைத்தியசாலையில் சேர்ந்துள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 42 ஆக உ…

  13. புட்டின் வந்தால் நான் வரமாட்டேன்: உக்ரேன் ஜனாதிபதி இந்தோனேசியாலில் நடைபெறவுள்ள ‘ஜி20’ அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு தனது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அந்த மாநாட்டு வருகைதருவாராயின் தான் வரமாட்டேன் என்று அறிவித்துள்ளார். ‘ஜி20’ அரச தலைவர்கள் மாநாடு, எதிர்வரும் 15, 16 ஆம் திகதிகளில் இந்தோனேசியாவின் ஜனாதிபதி யோகோ விடோடோவின் தலைமையில் இந்தோனேசியாவில் நடைபெறவுள்ளது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/படடன-வநதல-நன-வரமடடன-உகரன-ஜனதபத/50-306837

    • 6 replies
    • 762 views
  14. சீனாவில் பணியாற்றிய அமெரிக்க விமானப்படையின் முன்னாள் விமானவோட்டி அவுஸ்திரேலியாவில் கைது By RAJEEBAN 04 NOV, 2022 | 12:46 PM சீனாவில் பணியாற்றிய அமெரிக்க விமானப்படையின் முன்னாள் விமானியொருவர் அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க மரைன் படைப்பிரிவிற்காக பணியாற்றிய டக்கன் (54) ஒக்டோபர் 21 ம் திகதி அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சீனா மேற்குலகின் ஓய்வுபெற்ற விமானவோட்டிகளை வேலைக்கு சேர்த்துக்கொள்வது குறித்து பிரிட்டன் எச்சரிக்கை விடுத்த அதேதினத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் வேண்டுகோளை தொடர்ந்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தகவல்…

  15. பஹ்ரெய்னில் பாப்பரசர் பிரான்சிஸ் By DIGITAL DESK 3 04 NOV, 2022 | 02:12 PM பஹ்ரெனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், பஹ்ரெய்ன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபாவை சந்தித்து கலந்துரையாடினார். பாப்பரசர் பிரான்சிஸ் 4 நாள் விஜயம் மேற்கொண்டுநேற்று வியாழக்கிழமை பிற்பகல் பஹ்ரெய்னை சென்றடைந்தார். மத்திய கிழக்கு நாடான பஹ்ரெய்னுக்கு பாப்பரசர் ஒருவர் விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும். ஷாகீர் றோயல் அரண்மனையில், கலந்துரையாடலுக்கான பஹ்ரெய்ன் மன்றத்தின் நிகழ்விலும் பாப்பரசர் இன்று பங்குபற்றினார். பஹ்ரெய்ன் மன்னர் ஹமத் பின் இஸா அல் கலீபா, முடிக்குரிய இளவரசர் சல்மான் பின் …

  16. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானை உயிரிழப்பு By T. SARANYA 04 NOV, 2022 | 03:42 PM ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானை என்ற பெருமை கென்யாவில் உள்ள டிடா என்ற யானையை உயிரிழந்துள்ளது. நைரோபி, உலகில் சுமார் 50 ஆயிரம் யானைகள் உள்ளன. அவற்றில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஆப்பிரிக்காவில் உள்ளன. யானைகளை அழிவில் இருந்து காக்க பல்வேறு நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனிடையே, ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானை என்ற பெருமை கென்யாவில் உள்ள டிடா என்ற யானை கொண்டிருந்தது. 60 முதல் 65 வயது கொண்ட இந்த யானை கென்யாவின் டிசவோ கிழக்கு தேசிய பூங்காவில் வாழ்ந்து வந்தது. இந்நிலையில், வயது ம…

  17. மசகு எண்ணெய் விலை மேலும் குறைந்தது 04 NOV, 2022 | 11:28 AM உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மேலும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் எரிபொருள் கேள்வி குறைந்ததாலும் அமெரிக்காவில் வட்டி விகிதம் மீண்டும் உயரும் என்ற யூகத்தாலும் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 94.45 டொலர் வரை குறைந்துள்ளது. https://www.virakesari.lk/article/139098

  18. உக்ரைனில் 4.5 மில்லியன் மக்களுக்கு மின்சாரத் தடை! உக்ரைனில் 4.5 மில்லியன் மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். சமீபத்திய வாரங்களில், உக்ரைனிய மின் நிலையங்கள் மீது ரஷ்யா பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது. போர்க்களத்தில் தொடர்ச்சியான வலிமிகுந்த தோல்விகளுக்குப் பிறகு, ரஷ்யா முன்னணியில் இருந்து நகரங்களில் மின்சார உள்கட்டமைப்பு மீது சமீபத்திய வாரங்களில் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. ஜனாதிபதி ஸெலென்ஸ்கியின் கூற்றுப்படி, கடந்த மாதத்தில், நாட்டின் மின் நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கு அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உக்ரைனிய அரசாங்கம்…

  19. பிரித்தானிய எல்லைப் பிரச்சனைகளுக்கு எங்களைக் குறை கூறாதீர்கள்: அல்பேனிய பிரதமர்! உங்கள் குடியேற்றப் பிரச்சினைகளுக்கு எங்களைக் குறை கூறாதீர்கள் என அல்பேனியாவின் பிரதமர் குற்றம் எடி ராமா சாட்டியுள்ளார். பிரித்தானியா ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்படுவதாகக் உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பவர்களில் இப்போது அல்பேனியர்கள் மிகப்பெரிய குழுவாக உள்ளனர். தெற்கு இங்கிலாந்து புலம்பெயர்ந்தோரின் படையெடுப்பை எதிர்கொள்கிறது என்று கூறிய பிரேவர்மேன், பல அல்பேனியர்கள் நமது நவீன அடிமைச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் பிரேவர்மேன் குற்றம் சாட்டியுள்…

  20. கப்பல்களை தாக்க பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களில் கனேடிய பாகங்கள்: ரஷ்யா குற்றச்சாட்டு! கிரிமியாவில் உள்ள கருங்கடலில் ரஷ்ய கப்பல்களை தாக்க பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களில், வழிசெலுத்தல் அமைப்புகளில் கனேடிய தயாரிப்பான பாகங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள கருங்கடலில் 16 உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் ரஷ்ய கப்பல்களை தாக்க முயற்சித்ததாகவும் செவஸ்டோபோல் விரிகுடாவில் நடந்த இந்த தாக்குதலை ரஷ்ய கடற்படை முறியடித்தாகவும் ரஷ்யா கூறியுள்ளது. இதுதொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா வான்வழி வாகனங்களில் காணப்பட…

  21. துருக்கியில் பணவீக்கம் 85.51 சதவீதமாக அதிகரிப்பு By DIGITAL DESK 3 03 NOV, 2022 | 02:05 PM துருக்கியின் வருடாந்த பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 85.51 சதவீதமாக அதிகரித்துள்ளதை உத்தியோகபூர்வ தரவுகள் இன்று (03) வெளிப்படுத்தியுள்ளன. 1997 ஆம் ஆண்டின் பின்னர் துருக்கில் ஏற்பட்ட மிக அதிகளவு பணவீக்கம் இதுவாகும். துருக்கியில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கு வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை ஜனாதிபதி தாயீப் ஏர்டோவான் ஆதரித்து வருகிறார். விலை உயர்வுகளை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக உலகெங்கும் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன. ஆனால், உயர் …

  22. ஆஸி யுவதி கொலை : இந்திய நபரை கைது செய்ய உதவினால் 5 கோடி ரூபா சன்மானம் By DIGITAL DESK 3 03 NOV, 2022 | 04:28 PM அவுஸ்திரேலியாவில் யுவதியொருருவரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்படும் இந்திய இளைஞர் ஒருவரை கைதுசெய்ய உதவுபவர்களுக்கு 10 லட்சம் அவுஸ்திரேலிய டொலர் (23.22 கோடி இலங்கை ரூபா / 5.21 கோடி இந்திய ரூபா) சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்விந்தர் சிங் எனும் 38 வயதான இளைஞரே இவ்வாறு தேடப்படுகிறார். அவுஸ்திரேலியாவின் குயின்லாந்து மாநிலத்திலலுள்ள கெய்ன்ஸ் நகரில் 2018 ஒக்டோபர் மாதம் டோயாஹ் கோர்டிங்லே எனும்இ 24 வயது யுவதி மர்மமாக கொல்லப்பட்டிருந்தார். இவர் தனது நாயை அழைத்துக்கொ…

  23. வடகொரியா ஏவுகணை வீச்சு: தென்கொரியா, ஜப்பானை நோக்கி 'கண்டம் விட்டு கண்டம்' பாயும் ஏவுகணை வீச்சு டெஸ்ஸா வோங், யிவெட் டான் பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வட கொரியா ஒரு நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர். அதில் ஒன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாம் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறுகிறார். தென் கொரியாவின் பிராந்திய கடல் பகுதிக்கு அருகில் விழுந்த ஒரு ஏவுகணை உட்பட வட கொரியா புதன்கிழமை ஒரே நாளில் …

  24. இஸ்ரேல் பிரதமர் ஆகிறார் பெஞ்சமின் நேதன்யாகு By DIGITAL DESK 2 03 NOV, 2022 | 09:35 AM இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம், அந்நாட்டின் அடுத்த பிரதமராக, மீண்டும், பெஞ்சமின் நேதன்யாகு பதவி ஏற்கவுள்ளார். மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில், நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் பெஞ்சமின் நேதன்யாகு. லிகுட் கட்சியைச் சேர்ந்த இவர் 15 ஆண்டுகள் இஸ்ரேலின் பிரதமராக பதவி வகித்துள்ளார். 1996 முதல் 1999 வரையும், 2009 முதல் 2021 வரையும் இஸ்ரேலின் பிரதமராக நேதன்யாகு பதவி வகித்துள்ளார். கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி மூலம் நேதன்யாகு பிரதம…

  25. ரஷ்யாவின் பதிலடி தாக்குதல்களால் நிலை குலைந்த உக்ரைன் இரூளில் மூழ்கியது! உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட நாடு முழுவதும் ரஷ்யா பாரிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதால் மின்சாரம் மற்றும் தண்ணீர் துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் கீவ்வில் குறைந்தது இரண்டு குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளன. வடகிழக்கு நகரமான கார்கிவில், முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவில் அதன் கருங்கடல் கடற்படை மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதற்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் வந்துள்ளன. இன்று (திங்கட்கிழமை) காலை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.