உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
டென்மார்க்கில் உள்ள தூண்டில் மீனவர்கள், சுற்றுச்சூழல் சோகமாகக் கருதப்படும் நிகழ்வு ஒன்றை தவிர்க்க, தங்கள் தூண்டில்களில் மீன்களை கவரும் பூச்சிகளை ஏற்றி, தப்பிச் சென்ற வானவில் ட்ரவுட் வகை மீன்களைப் பிடிப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். வானவில் ட்ரவுட் வகை மீன்கள் ஜட்லாந்து தீபகற்பத்தில் உள்ள மீன் பண்ணை ஒன்றின் மீது சரக்கு கப்பல் மோதியதில், கடலுக்குள் தப்பி சென்றதாக மதிப்பிடப்பட்ட 80 ஆயிரம் வானவில் ட்ரவுட் வகை மீன்களை, பிடித்து ஒரு வகை மீன்களால் மற்றொரு மீன் இனத்திற்கு ஏற்பட இருக்கும் சாத்தியமான பேரழிவை தடுக்க அவர்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மூன்று கிலோ கிராம் எடை கொண்ட அந்த வானவில் ட்ரவுட் மீன்கள் , அவைகளுக்குப் பிடித்த உணவான கடல் ட்ரவுட் மீன்களின் முட்டைகளை, தின்…
-
- 3 replies
- 463 views
-
-
பிரேசில் நாட்டில் உள்ள Rodrigo de Freitas lagoon என்ற இடத்தில் உள்ள ஒரு ஏரியில் 65 டன் எடையுள்ள மீன்கள் திடீரென இறந்ததால் அவைகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. Rodrigo de Freitas lagoon என்ற இடத்தின் ஏரியில் ஆக்சிஜன் லெவல் திடீரென குறைந்த காரணத்தால், ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் திடீரென இறந்து மிதந்தன. அவைகளின் மொத்த எடை சுமார் 65 டன்களாகும். திடீரென டன் கணக்கில் மீன்கள் இறந்து, சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்தியதால் அதிர்ச்சியடைந்த அரசு, உடனே போர்க்கால அடிப்படையில் இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை நியமித்தது பிரேசில் அரசு. இந்த சம்பவத்தால் அப்பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது. …
-
- 2 replies
- 625 views
-
-
ஜி20 நாடுகளின் மாநாடு நாளை லண்டனில் ஆரம்பம் வீரகேசரி இணையம் 4/1/2009 2:12:22 PM - லண்டன் , எக்ஸல் மையத்தில் நாளை ஜி20 நாடுகளின் மாநாடு ஆரம்பமாகவுள்ளது.நான்கு நாட்கள் இடம்பெறவுள்ள ஜி20 நாடுகளின் மாநாட்டில் உலக பொருளாதார நெருக்கடி குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாம ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்துள்ளார்.இதன் போது பிரித்தானிய ஜனாதிபதி கோடன் பிரவுணை 10 டவுனிங் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பராக் ஒபாமா முதன்முறையாக லண்டன் வந்துள்ளது இதுவே முதற் தடவையாகும். இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய உயர் மட்டக் குழு லண்டன் சென…
-
- 2 replies
- 716 views
-
-
மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் நகரின் அருகில் உள்ள கோலார் டேம் என்ற இடத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை ஏழு பேர் சேர்ந்த கும்பல் கடத்தி சென்று அடித்து உதைத்ததோடு அல்லாமல் பாலியல் வன்புணர்வும் கொண்ட சம்பவம் அந்த மாநிலத்தையே உலுக்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில் கோலார் டேம் பகுதியை சேர்ந்த மகேஷ் வயது 19 மற்றும் அமர் வயது 25 ஆகிய இரண்டு இளைஞர்களும் மீன்பிடிக்க சென்றனர். அவர்களுடன் அவர்களுடைய நண்பர்கள் கைலாஷ் மற்றும் விக்ரம் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். நான்கு பேர்களும் டேமில் மீன்பிடித்து சுட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது மீன்களை பிடிப்பதற்கு குத்தகை எடுத்துள்ள நபர்களில் ஏழு பேர் கொண்ட கும்பல் திடீரென வந்து மீன்களை சாப்பிட்டுக்கொண்டிருந்த இளைஞர்களை விரட்டிப்…
-
- 2 replies
- 636 views
-
-
சீனாவில் இருந்து லண்டனுக்கு நேரடி ரயில் சேவை : 12 ஆயிரம் கிலோ மீற்றரை 18 நாட்களில் கடக்கும் ஐரோப்பாவுடனான தனது வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்காக, ரயில் சேவை மூலம் நேரடியாக லண்டனுக்கே பொருட்களை அனுப்பத் தொடங்கியுள்ளது சீனா. இதன்படி, பொருள் வர்த்தகத்தில் முன்னணியில் விளங்கும் சீனாவின் யிவு நகரில் இருந்து முதன்முறையாக ரயில் ஒன்று பொருட்களுடன் லண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளது. சுமார் 12 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவை பதினெட்டே நாட்களில் இந்தத் ரயில் கடந்து விடும் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின்போது குறித்த ரயிலானது கஸகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் ஃப்ரான்ஸ் வழியாக லண்…
-
- 11 replies
- 753 views
-
-
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அலுவலகம் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது? பட மூலாதாரம், EPA புகைப்படத்தில் இருப்பவை: 1. அமெரிக்கக் கொடி 2. சீசர் சாவேஸ் சிலை 3. அதிபர் முத்திரையிடப்பட்ட கொடி 4. குடும்பப் புகைப்படங்கள் 5. நிர்வாக உத்தரவுகள் 6. ரிசல்யூட் மேஜை 7. பெஞ்சமின் பிராங்க்ளின் ஓவியம் 8. ஹேரி ட்ரூமென் சிலை வெள்ளை மாளிகையில் இருக்கும் அமெரிக்க அதிபரின் அலுவலகம் ஓவல் ஆஃபிஸ் என்று அழைக்கப்படும். புதிய அதிபராக பதவியேற்கும் நபர், ஓவல் அலுவலகத்தில் தனக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்வார். அந்த வகையில், புதிதாக அதிபர் பதவி ஏற்று இருக…
-
- 3 replies
- 1.2k views
-
-
டேராடூன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்தின் முக்கிய புனித தலங்களில் ஒன்றான கேதர்நாத்தில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேதர்நாத்தில் சிக்கி தவித்த அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், இனிமேல் இடிபாடுகளை அகற்றுவது மற்றும் இறந்தவர்களின் சடலங்களை தேடும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. கேதர்நாத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் இன்று மதியத்துடன் தங்களது மீட்பு பணிகளை முடித்துக்கொண்டனர்.அதே சமயம் பத்ரிநாத், தரசு மற்றும் ஹர்சில் ஆகிய இடங்களில் நிலவும் மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக அப்பகுதிகளில் ஏராளமானோர் இன்னமும் சிக்கி தவித்து வருவதாக தகவல்கள் தெரிவ…
-
- 1 reply
- 395 views
-
-
`பாலின பாகுபாடு, பாலியல் வன்முறைகள்!' - சுந்தர் பிச்சைக்கு கடிதம் அனுப்பிய கூகுள் ஊழியர்கள் சே. பாலாஜி கூகுள் - சுந்தர் பிச்சை ஆல்பாபெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பணியிடத்தில் தாங்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாகவும், நிர்வாகம் குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் சுந்தர் பிச்சைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களை இப்படி தான் நடத்த வேண்டும் என்று மற்ற நிறுவனங்களுக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த கூகுள் நிறுவனத்தின் சமீபத்திய செயல்பாடுகள் வேதனை அளிப்பதாக, கூகுள் ஊழியர்கள் சமீப காலமாக மனம் குமுறி வருகின்றனர…
-
- 0 replies
- 527 views
-
-
10 இலட்சம் கார்களை திரும்ப பெறும் பென்ஸ் நிறுவனம்..! பிரிட்டனிலிருந்து முதல் கட்டமாக சுமார் 75 ஆயிரம் மெர்ஸிடிஸ்-பென்ஸ் கார்களையும், உலக நாடுகளிலிருந்து 10 இலட்சம் பென்ஸ் கார்களையும் திரும்பப் பெறுவதாக குறித்த கார் நிறுவனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் விற்பனையான பென்ஸ் கார்களில் சுமார் 51 வரையான கார்கள் தீ பிடித்துள்ளதாக எழுப்பப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து உலகமெங்கிலும் விற்கப்பட்ட சுமார் 10 இலட்சம் கற்களை அந்நிறுவனம் திரும்ப பெறுவதாக அறிவித்தது. மேலும் குறித்த தீ பிடிப்பு சம்பவங்களால் எவ்வித உயிர் சேதங்களும் இடம்பெறாத நிலையில், முதல் கட்டமாக 75 ஆயிரம்கற்களை பென்ஸ் நிறுவனம் திரும்ப பெறுவதற்கு முடிவு செய்துள்ளதாக அந்நிறுவன ச…
-
- 0 replies
- 360 views
-
-
லண்டன்: காயமடைந்தவரை அலட்சியம் செய்தாரா முஸ்லிம் பெண்? ஊடகங்களில் சர்ச்சை லண்டன் தாக்குதலின் பின், காயமடைந்த ஒருவருக்கு சிகிச்சை வழங்குவதைக் கூட கவனிக்காமல் சென்ற முஸ்லிம் பெண் குறித்து சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. லண்டன் பாராளுமன்றுக்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன், நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் தனது காரை, தேம்ஸ் நதியின் மீதிருந்த வெஸ்ட்மின்ஸ்ட்டர் பாலத்தின் மீது பாதசாரிகள் மீது மோதியும் தாக்குதல் நடத்தியிருந்தார். தாக்குதல் சம்பவங்களை புகைப்படக் கலைஞர் ஒருவர் படம் பிடித்தார். அதில் ஒரு படத்தில…
-
- 0 replies
- 399 views
-
-
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இன்று நடந்த பாஜகவின் லோக்சபா தேர்தல் பிரசார தொடக்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எங்களைப் பார்த்து திருந்தவோ அல்லது குஜராத்தைப் பார்த்து திருந்தவோ மத்திய அரசுக்கு மனம் இல்லை என்றால், பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டைப் பாருங்கள். அங்கு முதல்வர் ஜெயலலிதா திறன் வளர்ச்சிக்காக செய்துள்ள முதலீடுகளைப் பாருங்கள்.அதைப் பார்த்தாவது திருந்துங்கள் என்றார். மாலை 5.08 மணிக்குத் தனது பேச்சைத் தொடங்கினார் மோடி. முன்னதாக தன்னை சந்திக்க மேடையேறி வந்த சுதந்திரப் போராட்ட தியாகி மற்றஉம் மூதாட்டி ஆகியோரை வரவேற்ற மோடி, அவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டார். பின்னர் தனது பேச்சைத் தொடங்கினார். தனது பேச்சின் தொடக்கத்தில், ஆந்திர மாநில மக்கள் வளமும…
-
- 6 replies
- 486 views
-
-
பெங்களூர்: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பில் அனுப்பப்படும் விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்பட இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நேற்று பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக (இஸ்ரோ) செயற்கைகோள் மைய இயக்குனர் சிவகுமார், இந்திய தொலை உணர்வு செயற்கைகோள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை, ‘மார்ஸ்' திட்ட இயக்குனர் அருணன் ஆகியோர் கூட்டாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், இந்தியா சார்பில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப் படும் விண்கலம், விண்ணில் ஏவப்படும் மாதம் குறித்து அறிவித்தனர். மேலும், இது குறித்து அவர்கள் கூறியதாவது.... ‘முதல்முறையாக இந்தியா வேற்ற…
-
- 2 replies
- 841 views
-
-
டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 19-ம் தேதி அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்பார் எனத் தெரிகிறது. இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய இவர், கடந்த பிப்ரவரி மாதம் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் இந்நிலையில், அவர் தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார். கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் மறைந்த வி.என்.சொக்கலிங்கம் - வைரம் தம்பதியினரின் மகனாக 4.10.1951 நாகப்பன் பிறந்தார். கரூரில் பள்…
-
- 0 replies
- 422 views
-
-
ஆப்கானிஸ்தான்: "பஞ்ஷீர் பள்ளத்தாக்கின் முழு கட்டுப்பாடும் எங்கள் வசம்" - தாலிபன் 6 செப்டெம்பர் 2021, 03:10 GMT பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆளுகையை எதிர்க்கும் என்ஆர்எஃப் கிளர்ச்சிக்குழு ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கின் முழு கட்டுப்பாடும் எங்கள் வசம் வந்து விட்டது என்று தாலிபன் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து வடக்கே உள்ள எல்லைக்கு அருகே அமைந்துள்ளது பஞ்ஷீர் பள்ளத்தாக்கு. தாலிபன் ஆளுகைக்கு எதிரான நடவடிக்கையில் 20 வருடங்களுக்கு முன்பிருந்த அதே நிலைப்பாட்டை அங்குள்ள ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி (என்ஆப்எஃப்) என்ற கு…
-
- 0 replies
- 313 views
-
-
லண்டன் தாக்குதலில் முக்கிய குற்றவாளி பாகிஸ்தானை சேர்ந்தவன்: பகீர் தகவல் லண்டன் நகரில் ஏழு உயிர்களை பறித்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்தவன் முக்கிய குற்றவாளி என தெரியவந்துள்ளது. லண்டன்: லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் நேற்று சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தாறுமாறாக ஓடி பாலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதனையடுத்து மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடினர். கண்ணில் தென்பட்டவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த சுமார் 5…
-
- 0 replies
- 337 views
-
-
2009ம் ஆண்டில் உலக நாடுகளில் நிலநடுக்கம், காற்றுத்தீ, விமான விபத்துக்கள், உள்நாட்டுப் போர்கள் காரணமாக அதிகளவு மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழீழத்தில் சிறிலங்காப்படையினாலும் துணை போன இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளினாலும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நேற்று பசுபிக் நாடுகளில் ஒன்றான சமோவாதீவில் சுனாமியினால் 200க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இன்று இந்தோனேசியா சுமத்திரா தீவில் நில நடுக்கம் 1000க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். http://www.smh.com.au/environment/second-e...tml?autostart=1
-
- 1 reply
- 952 views
-
-
இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது படத்தின் காப்புரிமைEPA இந்தியா விடுதலை பெற்ற பிறகு மேற்கொள்ளப்பட்ட மாபெரும் வரிச் சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி வெள்ளிக்கிழமையன்று நள்ளிரவில் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன் மூலம் இந்தியா முழுவதும் நிலவிவந்த பல்வேறு விதமான மாநில அரசின் வரிகள் நீக்கப்பட்டு, ஒரே விதமான வரி விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று நடந்த சிறப்புக் கூட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இதனைத் துவக்கிவைத்தார். இந்த ஒற்றை வரிவிதிப்பின் மூலம் வரி வருவாய் உயர்வதோடு, பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என இந்திய அரசு கூறுகிறது. படத்தின்…
-
- 0 replies
- 331 views
-
-
லண்டன்: நாளை கடும் புயல் ஒன்று சுமார் 160கிமீ வேகத்தில் இங்கிலாந்தைத் தாக்க இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடந்த 1987, 2000, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்து கடும்புயல் தாக்கத்துக்கு ஆளாகியது. கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு நாளை மணிக்கு 100 மைல் அதாவது சுமார் 160 கி.மீட்டர் வேகத்தில் கடும் புயல் ஒன்று இங்கிலாந்தை தாக்க இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. எனவே, இப்புயலை எதிர்கொள்ளும் விதமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி மக்கள் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயலின் விளைவாக சுமார் 30 முதல் 40 செ.மீட்டர் மழையும், அதனைத் தொடர்ந்து பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. புயல் முன்னெ…
-
- 3 replies
- 610 views
-
-
நல்லது நடக்கும் போது பாராட்டு தெரிவியுங்கள்!!அதுவே பண்பாடு! டெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், கணிசமான இந்திய நிலத்தை சீனா மெதுவாக ஆக்கிரமித்துக் கைப்பற்றி வருகிறது. கடந்த 20 - 25 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் இந்திய நிலத்தை சீனா தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளதாம். கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில், மாநில உள்துறை அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இதில் ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், சீனாவின் ரகசியமான நில ஆக்கிரமிப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், லே பகுதி குறித்த முறையான, சரியான வரைபடம் இல்லாதது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. சரியான வரைபடம் இல்லாத காரணத…
-
- 8 replies
- 2.3k views
-
-
ஸ்ரீரங்கத்தில் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவருமான தேவே கவுடா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்தியாவின் பிரதமர் ஆகும் அனைத்து தகுதிகளும் இருக்கின்றன. தென் இந்தியாவில் இருந்து நரசிம்மராவுக்குப் பிறகு நானும் (தேவே கவுடா) பிரதமர் ஆனேன். ஜெயலலிதா இந்தியாவின் பிரதமர் ஆவதை நான் வரவேற்கிறேன். அதற்காக ஜெயலலிதாவை நான் ஆசிர்வதிக்கிறேன். ஓரின சேர்க்கை கிரிமினல் குற்றம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அப்படி மத்திய அரசு அந்த சட்டத்தை மாற்ற விரும்பினால் பாரதீய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவித்துள்ளபடி அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஆலோசித்து முடிவு எட…
-
- 0 replies
- 443 views
-
-
டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த ஆம் ஆத்மி கட்சி, அடுத்து நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்க உள்ளது. இதில் குறிப்பாக, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து, அவரது அமேதி தொகுதியில் குமார் விஸ்வாஸ் போட்டியிடுகிறார். முதற்கட்டமாக அமேதியில் வரும் 12-ம் தேதி பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் குமார் விஸ்வாஸ் மற்றும் கட்சியின் பிற உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இதுதொடர்பாக ஆம் ஆத்மியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹனுமன் சிங் கூறியதாவது:- ஆம் ஆத்மி கட்சியின் பொதுக்கூட்ட தயாரிப்பு பணிகளுக்கு இளைஞர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். நேரு-காந்தி வாரிசு அரசியலு…
-
- 0 replies
- 390 views
-
-
பிரிட்டன் எம்.பியின் இரட்டை வேடம் அம்பலப்படுத்துகிறது ரெலிகிராப் மகிந்த ஆட்சிக் காலத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரிட்டன் அரசு கடும் அதிருப்தி வெளியிட்டு வந்த நிலையில், அதே காலத்தில் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை ஒருங்கிணைத்துக் கொடுப்பதற்காக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு கோடி ரூபாவை (10 ஆயிரம் ஸ்ரே லிங் பவுண்ஸ்) மகிந்த அரசு செலவிட்டுள்ளதாக ‘தி டெலிகிராப்’ பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள் ளது. பிரிட்டனின் ஜனநாயக ஐக்கிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இயன் லெஸ்லிக்கே இவ்வாறு நிதி செலவிடப்பட்டுள்ளது. பிரிட்ட…
-
- 0 replies
- 427 views
-
-
மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை நடத்த... ரஷ்யாவும், உக்ரைனும் தீர்மானம்! போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்யாவும் உக்ரைனும் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை இந்த மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக உக்ரேனிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே நெருக்கடியை தீர்க்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவு…
-
- 0 replies
- 319 views
-
-
கேட்டலோன் சுதந்திரம்: வாக்கெடுப்பால் எந்தப் பலனும் இருக்காது என்கிறார் ஸ்பெயின் பிரதமர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA Image captionகேட்டலோனியாவின் சுதந்திர அறிவிப்பால் எந்த விளைவும் இருக்காது. கேட்டலோனியா தனது சுதந்திரம் குறித்து விடுக்கும் எந்த ஒரு பிரகடனத்துக்கும் எந்த ஒரு பலனும் இருக்காது என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் எச்சரித்துள்…
-
- 0 replies
- 401 views
-
-
அவுஸ்திரேலிய கட்சியின் தலைமைக்கு இலங்கை வம்சாவளிப் பெண் நியமனம் அவுஸ்திரேலியாவின் முன்னணி அரசியல் கட்சிகளுள் ஒன்றான ‘கிறீன்ஸ்’ கட்சியின் விக்டோரியா பிராந்திய தலைவராக இலங்கை வம்சாவளிப் பெண்ணான சமந்தா ரட்ணம் அறிவிக்கப்பட்டுள்ளார். மோர்லண்டின் முன்னாள் மேயராகப் பதவி வகித்த சமந்தா ரட்ணம், நாளை (13) உத்தியோகபூர்வமாகத் தனது பதவியை ஏற்கவுள்ளார். மேற்படி தலைமைப் பதவியில் இருந்த முன்னாள் தலைவர் கிறெக் பார்பர் பதவி விலகியதையடுத்தே அப்பதவிக்கு சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/25657
-
- 0 replies
- 462 views
-