உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
உக்ரைனின் 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க முன்னெடுத்த வாக்கெடுப்பில் ரஷ்யா வெற்றி! போரில் உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஸபோரிஸியா ஆகிய 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க முன்னெடுத்த வாக்கெடுப்பில், ரஷ்யா வெற்றிபெற்றுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து, உக்ரைனின் லுஹான்ஸ்க், கெர்சன் பகுதிகளை இணைத்துக் கொள்ளுமாறு ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அந்தப் பிராந்தியங்களின் தலைவர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்தப் பகுதிகளில் நடத்தப்பட்ட மேற்கத்திய நாடுகளால் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பில் ரஷ்யாவுடன் இணைய பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டதைத…
-
- 1 reply
- 446 views
-
-
சவுதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முகமது பின் சல்மான் நியமனம் By T. SARANYA 28 SEP, 2022 | 11:17 AM சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammed bin Salman) அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், மன்னர் கலந்துகொள்ளும் அமைச்சரவையின் வாராந்த அமர்வு இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் நடைபெறும். பட்டத்து இளவரசர் மன்னர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவை மறுசீரமைத்துள்ளார். மேலும், இராணுவ துணை அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மானை இராணுவ அமைச்சராக நியமித்து மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்தார். புதிய கல்வி அமைச்சராக யூசுப் பின் அப்துல்லா அல்-பென்யான் நியமிக்கப்பட்…
-
- 1 reply
- 353 views
- 1 follower
-
-
வடகொரியாவிடமிருந்து... இராணுவ சாதனங்களை, ரஷ்யா வாங்கியதாக... அமெரிக்கா தகவல்! பொருளாதாரத் தடைகளால் துவண்டுபோயுள்ள ரஷ்யா, ஏற்கனவே உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடகொரியாவிடமிருந்து இராணுவ சாதனங்களை வாங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நியூயோர்க் டைம்ஸ் பெற்ற இரகசிய உளவுத்துறையின் படி, ரஷ்யா வடகொரியாவிடம் இருந்து மில்லியன் கணக்கான பீரங்கி குண்டுகள் மற்றும் ரொக்கெட்டுகளை வாங்கியுள்ளது. அறிக்கை வெளிப்படுத்திய புதிய ஆயுத விநியோகங்களின் சரியான அளவு மற்றும் அளவு தெளிவாக இல்லை. போர் நீடித்து வருவதால், வடகொரியாவிடம் இருந்து கூடுதல் ஆயுதங்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் ரஷ்யா தள்ளப்படும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.…
-
- 4 replies
- 561 views
-
-
ரஷ்ய... எரிவாயு குழாய் கசிவு குறித்து, ஐரோப்பிய நாடுகள் விசாரணை! ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே இரண்டு பெரிய எரிவாயு குழாய்களில் மூன்று மர்ம கசிவுகள் குறித்து ஐரோப்பிய நாடுகள் விசாரணை நடத்தி வருகின்றன. நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 க்கு ஏற்பட்ட சேதத்திற்கான காரணம் தெளிவாக இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த கசிவுக்கு நீர்மூழ்கிக் கப்பல் பயணமே காரணம் என நோர்ட் ஸ்ட்ரீம் 1இன் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். சேதத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும், அது உடனடியாக ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை பாதிக்காது, ஏனெனில் இரண்டு குழாய்களும் செயற்படவில்லை. ஐரோப்பாவை அச்சுறுத்துவதற்காக எரிவாயு விநியோகத்தை ரஷ்யா பயன்படுத்துவத…
-
- 1 reply
- 302 views
-
-
சீனா ஜனாதிபதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? - சமூக ஊடகங்களில் பரவும் தகவலால் பரபரப்பு By RAJEEBAN 25 SEP, 2022 | 10:23 AM சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. சமீபத்தில் சங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக சமீபத்தில் சமர்ஹன்டிற்கு சென்றிருந்த சீன ஜனாதிபதி சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.எனினும் இது குறித்து சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சியோ அரச ஊடகங்களோ இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்திய அரசியல்வாதி சுப்பிரமணியன் சுவாமியும் ச…
-
- 2 replies
- 722 views
- 1 follower
-
-
அமெரிக்காவில்... உளவு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள, எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு... ரஷ்ய குடியுரிமை! முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஒப்பந்ததாரர் எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 72 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் நேற்று (திங்கட்கிழமை) கையெழுத்திட்டு வெளியிட்ட ஆணையில் எட்வர்ட் ஸ்னோவ்டனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஸ்னோவ்டனின் மனைவி, குழந்தை இருவரும் தற்போது நிரந்தர விசா பெற்றுள்ளனர். அவர்களுக்கும் விரைவில் ரஷ்யாவின் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஸ்னோவ்டனின் வழக்கறிஞர் அனடோலி குச்செரெனா, ஸ்னோவ்டனின் மனைவியும் ரஷ்ய குடியுரிமைக்க…
-
- 3 replies
- 449 views
-
-
எரிசக்தி விலை உயர்வு காரணமாக... எலக்ட்ரிக் காரை, சார்ஜ் செய்வதற்கான... செலவு அதிகரிப்பு! எரிசக்தி விலை உயர்வு காரணமாக எலக்ட்ரிக் காரை சார்ஜ் செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளது. இது ஓட்டுநர்களை எலக்ட்ரிக் கார்கள், வாங்குவதைத் தடுக்கும் என்ற அச்சத்தைத் தூண்டுகிறது என்று ஆர்ஏசி தெரிவித்துள்ளது. விரைவான பொது சார்ஜிங் நிலையங்களைப் பயன்படுத்தும் எலக்ட்ரிக் கார் உரிமையாளர்கள், ஒரு மைலுக்கு பெட்ரோலுக்கு செலுத்தும் அதே கட்டணத்தை மின்சாரத்திற்கும் செலுத்துகிறார்கள் என்று கூறுகின்றனர். வீட்டில் கார்களை சார்ஜ் செய்வது மலிவானது. ஆனால் உள்நாட்டு கட்டணங்களும் அதிகரித்து வருவதால் இது சாத்தியமில்லை. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு சமீபத…
-
- 1 reply
- 325 views
-
-
விலைவாசி உயர்வை சமாளிக்க குடும்பங்கள் திணறி வரும் நிலையில், பிள்ளைகள் உணவில்லாமல் பள்ளிக்குச் செல்வதும், நண்பர்களுக்கு அது தெரியக்கூடாது என்பதற்காக, வெறும் டிபன் பாக்ஸை வைத்துக்கொண்டு சாப்பிடுவது போல் நடிப்பதும் தெரியவந்துள்ளது. சில பள்ளிகளில், நேற்று பள்ளியில் மதிய உணவு உண்ட பிறகு வேறு உணவு இல்லாமல், மீண்டும் அடுத்த நாள் உணவை மட்டுமே நம்பியிருக்கும் பிள்ளைகளும் இருக்கிறார்களாம். லண்டனில், பள்ளிக்கு வந்த சிறுவன் ஒருவன், தன்னிடம் மதிய உணவு சாப்பிட எதுவும் இல்லாததால், வெறும் டிபன் பாக்ஸை வைத்துக்கொண்டு சாப்பிடுவதுபோல் நடித்த விடயம் குறித்த அதிரவைக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், விலைவாசி உயர்வு காரணமா…
-
- 6 replies
- 491 views
-
-
இத்தாலி பாராளுமன்ற தேர்தல்: முதல்முறையாக பிரதமராகும் பெண்! இத்தாலி பாராளுமன்ற தேர்தல்: முதல்முறையாக பிரதமராகும் பெண்! இத்தாலி நாட்டில் பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் முதல் முறையாக பெண் ஒருவர் அந்நாட்டின் பிரதமராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாலி நாட்டின் பொருளாதார நிலை மோசம் அடைந்ததை அடுத்து அந்நாட்டின் ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனை அடுத்து இத்தாலி பிரதமர் மரியோ டிராகி திடீரென பதவி விலகினார் இதனை அடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்ய நேற்று இத்தாலியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ப…
-
- 0 replies
- 219 views
-
-
சீன ஜனாதிபதியை மீண்டும் வலுப்படுத்தும் விதத்தில் சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி தனது யாப்பை வலுப்படுத்தலாம் By RAJEEBAN 26 SEP, 2022 | 03:56 PM சீன ஜனாதிபதியை மீண்டும் வலுப்படுத்தும் விதத்தில் சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி தனது யாப்பை வலுப்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்றாவது தடவையாக அதிகாரத்தில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் விருப்பத்திற்கு ஏற்ப நாடு கட்சி சமூகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விதிமுறைகள் மாற்றப்படுவதை உறுதி செய்வதற்காக தனது 20வது மாநாட்டின் போது சீன கம்யுனிஸ்ட் கட்சி தனது யாப்பில் மாற்றங்களை மேற்கொள்ளக்கூடும். ஒக்டோபர் மாதம் 9 ம் திகதி இடம்பெறவுள்ள சீன கம்ய…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவின் மிகப்பெரும் நிறுவனத்தினை இலக்குவைத்து சைபர் தாக்குதல்-10மில்லியன் வாடிக்கையாளர்களின் தரவு பறிபோயிருக்கலாம் என அச்சம் By RAJEEBAN 26 SEP, 2022 | 12:49 PM ஒப்டஸ் நிறுவனத்தின் கணிணி வலையமைப்பை இலக்குவைத்து சைபர் தாக்குதல்களை மேற்கொண்டவர்களை இனம் காண்பதற்காக வெளிநாட்டு சட்ட அமுலாக்கல் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதாக அவுஸ்திரேலிய பொலிஸ் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய டெலிகொம் நிறுவனமான ஒப்டஸ் தனது கணிணி வலையமைப்பை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல்கள் காரணமாக தற்போதைய முன்னாள் வாடிக்கையாளர்கள் குறித்த தரவுகள் களவாடப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளது. எண்ணிக்கை குறி…
-
- 1 reply
- 202 views
- 1 follower
-
-
உலகின் மிக ரகசியமான அமெரிக்க உளவுத் துறை அருங்காட்சியகத்தில் என்ன உள்ளது? கோர்டன் கொரேரா பாதுகாப்பு நிருபர், வர்ஜீனியாவில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,POOL/GETTY IMAGES அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வின் அருங்காட்சியகம், உலகின் அசாதாரணமான மற்றும் பிரத்யேகமான அருங்காட்சியகங்களில் ஒன்று. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களால் நிரம்பியுள்ள இந்த அருங்காட்சியகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. சதாம் உசேனின் லெதர் ஜாக்கெட்டையும், ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபோது அவரிடம் இருந்த துப்பாக்கியையும் இங்கு மட்டும்தான் பார்க்க முடியும். வர்…
-
- 0 replies
- 259 views
- 1 follower
-
-
ஆபாச சாட்: உலக அளவில் நடக்கும் மோசடியின் பின்னணியில் இருப்பது யார்? டுகா ஒர்ஜின்மோ பிபிசி நியூஸ், அபுஜா 23 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,IEROMIN அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபருக்கு 50 வயதிருக்கும். அவர் ஆன்லைனில் ஜிஞ்சர்ஹனி என்ற பெயர் கொண்ட மிகவும் வசீகரமான பெண்ணுடன் 'சாட்டிங்' செய்கிறார். அந்த நபர் ஜிஞ்சர்ஹனி அவர் இருக்கும் பகுதிக்கு அருகில் இருப்பது போல் நினைத்திருக்கிறார். ஆனால், உண்மையில், அவருடன் சாட்டிங் செய்வது ஒரு பெண் அல்ல. நைஜீரியாவில் உள்ள ஓர் ஆண். உலகம் முழுவதும் உள்ள ஆண்கள், இது போன்ற வசீகரமான பெண்களிடம் ஆன்லைன் மூலம் சாட் செய்ய, பல நூறு டாலரை இண…
-
- 0 replies
- 544 views
- 1 follower
-
-
ஈரானிய போராட்டக் காரர்களுக்கு... அமெரிக்கா ஆதரவு: இணையக் கட்டுப்பாடுகளை தளர்த்தப் போவதாக அறிவிப்பு! பொலிஸ் காவலில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதிக் கோரி போராட்டங்களில் ஈடுப்பட்டுவரும் போராட்டக்காரர்களுக்கு உதவப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன்படி, போராட்டங்கள் மீதான கட்டுப்பாட்டை எதிர்கொள்ள ஈரான் மீதான இணைய கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் கூறுகையில், ‘ஈரானிய மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருளில் வைக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த நாங்கள் உதவப் போகிறோம். இணையக் கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்துவது ஈரானியர்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற…
-
- 3 replies
- 316 views
-
-
உக்ரைன் போரில் பங்கேற்பதை தவிர்க்க அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடும் ரஷிய ஆண்கள் உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கி இன்றுடன் (சனக்கிழமை) 7 மாதங்கள் ஆகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. இதனால் உக்ரைனை தன்வசப்படுத்தும் ரஷியாவின் எண்ணம் ஈடேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. எனினும் இலக்கை அடையும் வரை போர் தொடரும் என ரஷிய அதிபர் புதின் திட்டவட்டமாக கூறி வருகிறார். அதை உறுதிப்படுத்தும் விதமாக உக்ரைன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த 3 லட்சம் ரஷியர்களை அணி திரட்ட உள்ளதாக அண்மையில் அறிவித்தார். போருக்காக அணி திரட்டப்படுபவர்கள் யாரும் கட்டாயப்படுத்தப்பட மட்டார்கள் என்றும், ஆயுதப்படைகளில் பணியாற்றியவ…
-
- 4 replies
- 551 views
-
-
உக்ரேனில் இரசியப் பின்வாங்கல் பின்னடைவா? 2022 செப்டம்பர் 5-ம் திகதி உக்ரேன் படையினர் இரசிய ஆக்கிரமிப்புப் படையினருக்கு எதிராக் ஓர் அதிரடித் தாக்குதலை உக்ரேனின் வட கிழக்குப் பகுதியில் உள்ள கார்கீவ் மாகாணத்தில் நடத்தி அம் மாகாணத்தின் பெரும் பகுதியை கைப்பற்றினர். உக்ரேன் கிறிமியா இரசியாவிற்கு சொந்தமானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், உக்ரேன் தனது கிழக்குப் பிராந்தியத்தில் பெருமளவு நிலப்பரப்பை விட்டுக் கொடுக்க வேண்டும், உக்ரேன் தனது படைக்கலன்களை கைவிட வேண்டும், உக்ரேன் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் இணையும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் போன்ற தனது கோரிக்கைகளை உக்ரேனை ஏற்க வைப்பதற்காக இரசியா உக்ரேன் மீது “சிறப்புப்படை நடவடிக்கை” என்னும் பெயரில் இர…
-
- 5 replies
- 947 views
- 1 follower
-
-
அசர்பைஜான்-ஆர்மீனியா நாடுகள் இடையே மீண்டும் மோதல் 49 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு தினத்தந்தி சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து வந்த இரு நாடுகளான அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா இடையே கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போர் நடைபெற்றது. பாகு, சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து வந்த இரு நாடுகளான அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா இடையே கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போர் நடைபெற்றது. 6 வாரங்கள் நடைபெற்ற இந்த போரில் ஆர்மீனியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சர்ச்சைக்குரிய நாக்ரோனா-கராபாக் மாகாணத்தை அசர்பைஜான் கைப்பற்றியது. அந்த போரில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரு நாடுகளுக்கு இடையேயான போர் ரஷியாவின் தலையீட்டையடுத்து முடிவுக்கு வந்தது. போர் முடிவுக்க…
-
- 5 replies
- 399 views
-
-
சிரிய கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் 77 பேர் உயிரிழப்பு By DIGITAL DESK 5 24 SEP, 2022 | 12:29 PM லெபனானில் இருந்து குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 77 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (22) அன்று சிரிய நாட்டவர்கள் மற்றும் லெபனான் நாட்டவர்கள் உள்ளடங்கலாக 150 பேரை ஏற்றிக்கொண்டு குறித்த படகு பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்வாறு குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு மத்தியதரைக் கடலில் கவிழ்ந்ததையடுத்து, சிரியாவின் தெற்கு துறைமுக நகரமான டார்டஸ் கடற்கரையில் வித்துக்குள்ளானவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் மீட்…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
அணு ஆயுதம் குறித்த புதின் பேச்சை உளறல் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது - ஐரோப்பிய ஒன்றியம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SHUTTERSTOCK படக்குறிப்பு, ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்த நேரிடலாம் என்று விளாதிமிர் புதின் மறைமுகமாக மிரட்டல் விடுத்தார். யுக்ரேனில் நடக்கும் மோதலில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மறைமுக மிரட்டலை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக எடுத்துகொள்ள வேண்டும் என அதன் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் கூறியுள்ளார். இந்தப் போர் ஆபத்தான கட்டத்தை எட்டியிருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார். ரஷ்யா ராணுவ அணிதிரட்டல் நடவ…
-
- 0 replies
- 659 views
- 1 follower
-
-
10 இலட்சத்திற்கும் அதிகமான கார்களை திரும்பப்பெறுகிறது டெஸ்லா By T. SARANYA 23 SEP, 2022 | 02:24 PM அமெரிக்காவில் 10 இலட்சத்து 10 ஆயிரம் கார்களை மின்னணு கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனமான டெஸ்லா திரும்பப்பெறுகிறது. டெஸ்லா கார்களின் ஜன்னல்கள் மிக வேகமாக மூடப்படுவதால் மக்களின் விரல்கள் காயமடையலாம் என்பதால் இவ்வாறு திரும்ப பெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா தலைமை நிர்வாகி எலான் மஸ்க், "திரும்ப பெறல்" என்ற சொல்லைப் பயன்படுத்துவதை டுவிட்ரில் விமர்சித்துள்ளார். அதவாது, “சொற்களஞ்சியம் காலாவதியானது மற்றும் துல்லியமற்றது. இது ஒரு சிறிய ஓவர்-தி-ஏர் மென்பொருள் புதுப்பிப்பு. எங்களுக்குத் தெரிந்த வ…
-
- 0 replies
- 234 views
-
-
கம்போடியா, மியான்மர், தாய்லாந்து மோசடி: வெளிநாட்டு வேலைக்கு சென்றவர்கள் கொடுமை செய்யப்பட்ட திகில் கதை டெஸ்ஸா வாங், புய் தூ, லாக் லீ பிபிசி நியூஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MIRROR WEEKLY படக்குறிப்பு, ஏமாற்றப்பட்ட பல்லாயிரம் பேரில் தைவான் இளைஞர் யங் வெய்பின்னும் ஒருவர் எளிமையான வெளிநாட்டு வேலை, கணிசமான சம்பளம் மற்றும் தமக்கென ஒரு ஃபிட்னெஸ் பயிற்சியாளருடன் சொகுசு விடுதியில் தங்குவதற்கும் வாய்ப்பு என யங் வெய்பின்னால் மறுக்க முடியாத வாய்ப்பு அது. கம்போடியாவில் டெலிசேல்ஸ் எனப்படும் தொலைபேசி மூலம் விற்பனை செய்யும் வேலைக்கான விளம்பரத்தைப் பார…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
ரஷ்யாவுக்கு... ஆளில்லா விமானங்களை, வழங்கிய விவகாரம்: ஈரானின்... தூதரக அங்கீகாரத்தை, இரத்து செய்தது உக்ரைன்! ஈரான் ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை கொடுத்து உதவியதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரானியத் தூதரின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் என்றும், ஈரானிய தூதரகப் பணியாளர்கள் கீவில் உள்ள ஈரானிய தூதரகப் பணியாளர்கள் குறைக்கப்படுவார்கள் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுவரை நடந்த மோதலில் மொத்தம் எட்டு ஈரானிய ஆளில்லா விமானங்களை உக்ரைனியப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நேர காளொணி உரையில் ஸெலென்ஸ்கி தெரிவித்தார். மேலும், ‘ஆறு ஈரானிய ஆளில்லா விமானங்கள் கிழக்கு மற்றும் தெற்கு கட்டளைகள…
-
- 0 replies
- 211 views
-
-
சர்வதேச சந்தைக்கு... கச்சா எண்ணை விநியோகம், நிறுத்தப்படும்: ரஷ்யா எச்சரிக்கை! தனது கச்சா எண்ணெய்க்கு ஜி-7 நாடுகள் நிர்ணயிக்கும் விலை வரம்பு நியாயமானதாக இல்லாவிட்டால், சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தப்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. உக்ரைனுக்குப் பாகிஸ்தான் ஆயுத உதவி வழங்கி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை அந்தத் தகவல் உறுதியானால், அது ரஷ்யா- பாகிஸ்தான் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் ஆலிபோவ் தெரிவித்தார். ரஷ்யாவுக்கான வருவாயையும், உக்ரைன் போருக்குத் தேவைப்படும் நிதி ஆதாரத்தையும் கட்டுப்படுத்த ரஷ்யாவின் கச்சா எண…
-
- 0 replies
- 288 views
-
-
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளன. ரஷ்யா முழுவதும் 37 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 800க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தலைநகர் மொஸ்கோவில் 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுதந்திர OVD-Info எதிர்ப்பு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்யா பின்னடைவு உக்ரைன் போர்க்களத்தில் பின்னடைவைச் சந்தித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய …
-
- 82 replies
- 4.4k views
- 2 followers
-
-
யுக்ரேன் போர்: தந்திரோபாய அணு ஆயுதம் என்றால் என்ன? அதை ரஷ்யா பயன்படுத்துமா? 47 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்ய நிலப்பரப்பை பாதுகாப்பதற்காக, தந்திரோபாய அணுக்கரு ஆயுதத்தைப் பயன்படுத்த தாம் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கூறியுள்ளார். இது, யுக்ரேன் மீது சிறியவகை அல்லது "தந்திரோபாய" அணு ஆயுதத்தை அவர் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி செய்வது, இரண்டாம் உலக போருக்குப் பிறகு நடக்கும் மிக ஆபத்தான போர்ப்பதற்ற அதிகரிப்பாக அமைந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். தந்திரோபாய அணுக்கரு ஆயுதங்கள் என்றால் என்ன? தந…
-
- 1 reply
- 254 views
- 1 follower
-