உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26864 topics in this forum
-
வட கொரியா இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை! வட கொரியா பியோங்யாங் பகுதியில் இருந்து நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. ஜப்பானின் என்.எச்.கே. தேசிய தொலைக்காட்சி இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்ட செய்தியில், வட கொரியாவிலிருந்து பல ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே இருந்தாலும் ஜப்பான் கடலில் அது தரையிறங்கியதாகவும் கூறியுள்ளது. சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6:47 மணிக்கு வட கொரியாவில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாக ஜப்பானிய கடலோரக் காவல்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுமார் 15 நிமிடங்களுக்…
-
- 11 replies
- 817 views
- 1 follower
-
-
வடக்கு அயர்லாந்து குடும்பங்கள் நவம்பரில் 400 பவுண்டுகள் எரிசக்தி ஆதரவைப் பெறும்: பிரதமர் ட்ரஸ்! வடக்கு அயர்லாந்தில் உள்ள குடும்பங்களுக்கு நவம்பர் மாதம் 400 பவுண்டுகள் எரிசக்தி ஆதரவு தள்ளுபடி கிடைக்கும் என பிரதமர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள குடும்பங்கள் மின் கட்டணத் தள்ளுபடியைப் பெறும் அதே திகதியில் ஒக்டோபர் 1ஆம் திகதிக்குப் பணம் செலுத்தப்படும் என்று பிரதமர் மேலும் கூறினார். அத்துடன், சர்ச்சைக்குரிய மினி-பட்ஜெட் பற்றிய விமர்சனங்களை ட்ரஸ் நிராகரித்தார். திறைசேரியின் தலைவரின் அறிவிப்புகள் ஸ்டெர்லிங்கின் மதிப்பில் பாரிய வீழ்ச்சிக்கும், கடன் வாங்கும் செலவுகள் அதிகரிப்பதற்கும் வழிவகுத்தது. இது வீட்டு உரிமை…
-
- 4 replies
- 620 views
-
-
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறப்புக்கான காரணம் வெளியானது! பிரித்தானியாவை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பெருமைக்குரிய ராணி இரண்டாம் எலிசபெத்தின், இறப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்ததாக அவரது இறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுளளது. ஸ்கொட்லாந்தின் நேஷனல் ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஆவணம், மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத், பிற்பகல் 3:10 மணிக்கு இறந்ததாகக் கூறுகிறது. ராணி, பிரித்தானிய நேரம் (காலை 10:10 மணி) செப்டம்பர் 8ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் உள்ள பாலேட்டரில் உள்ள பால்மோரல் கோட்டையில் உயிரிழந்தார். இறப்புக்கான காரணம் முதுமை என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் ராணியின் மகள் …
-
- 2 replies
- 394 views
-
-
காபூல் கல்வி மையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 19 பேர் பலி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காபூல் நகரிலுள்ள தஷ்த்-இ-பார்ச்சியில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை முடித்துவிட்டு வரும் முஸ்லிம்கள் (கோப்புப் படம்) ஆப்கன் தலைநகர் காபூலில் இயங்கும் ஒரு தனிப்பயிற்சி கல்வி மையத்தில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக காபூல் போலீசார் தெரிவித்துள்ளனர். நகரின் மேற்குப் பகுதியிலுள்ள தஷ்த்-இ-பார்ச்சி பகுதியிலுள்ள காஜ் கல்வி மையத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. மாணவர்கள் பயிற்சி பல்கலைக்…
-
- 2 replies
- 268 views
- 1 follower
-
-
உடையால் பற்றி எரியும் ஈரான் அமெரிக்கா வரை எதிரொலித்த 'ஹிஜாப்' By VISHNU 29 SEP, 2022 | 01:18 PM குமார் சுகுணா மதம் சார்ந்த விடயங்கள் குறித்த மதங்களை பின்தொடர்பவர்களின் நம்பிக்கைகளுக்கு உரியது அதனை யாரும் விமர்சிக்க முடியாது. ஆயினும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கட்டி காப்பாற்றப்படும் சில நம்பிக்கைகள் கால மாற்றத்துக்கு ஏற்ப மாற்றம் அடையதான் செய்கின்றன. நமது மதங்கள் கலாசாரங்கள் மரபுகள் எல்லாமே பெண்களை விட ஆண்களை ஒரு படி மேல் வைக்கின்றனவாகவே உள்ளன. இவற்றிலும் பல விஞ்ஞான உண்மைகள் மறைந்து கிடப்பதனை நாம் மறுக்க முடியாது. அதனால்தான் சில விடயங்களை ஏற்றுக்கொள்கின்றோம். ஆயினும் ஒரு பெண் எந்த உடை அணிய வ…
-
- 6 replies
- 572 views
-
-
உக்ரைனின் 4 பிராந்தியங்கள் உத்தியோகபூர்வமாக இன்று ரஷ்யாவுடன் இணைப்பு! ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் 4 பிராந்தியங்கள், உத்தியோகபூர்வமாக இன்று (வெள்ளிக்கிழமை) ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. புனித ஜோர்ஜ் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில், லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஸபோரிஸியா பகுதிகளில் தற்போது ஆட்சி செலுத்தி வரும் நிர்வாகத் தலைவர்கள், ரஷ்யாவுடன் அந்தப் பகுதிகளை இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவார்கள். இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிராந்திய நிர்வாகத் தலைவர்கள் மாஸ்கோ வந்துள்ள நிலையில் இவ் இணைப்பு விழாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் கலந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சர்ச்சைக்க…
-
- 11 replies
- 491 views
- 1 follower
-
-
நோர்ட் ஸ்ட்ரீம் கசிவு: மேற்கு கடற்கரை குழாய் பாதுகாப்பை அதிகரிக்க ஐரோப்பிய நாடுகள் தீர்மானம்! ரஷ்யாவின் நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் திட்டத்தின் இரண்டு மிகப்பெரிய கசிவுகளின் நிறுவல்களைச் சுற்றி பாதுகாப்பை அதிகரிக்கப்போவதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆகியவை ரஷ்யாவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான குழாய்களில் ஏற்பட்டுள்ள சேதம் வேண்டுமென்ற உருவாக்கப்பட்டதாக கூறியுள்ளன. ஆனால் ரஷ்யாவை நேரடியாக குற்றம் சாட்டவில்லை. முன்னதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள ரஷ்யா, இந்த சேதத்தின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதா என கேள்வியெழுப்பியுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கு நாடுகளுக்கு எதிராக எரிவா…
-
- 0 replies
- 166 views
-
-
உக்ரைனின் 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க முன்னெடுத்த வாக்கெடுப்பில் ரஷ்யா வெற்றி! போரில் உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஸபோரிஸியா ஆகிய 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க முன்னெடுத்த வாக்கெடுப்பில், ரஷ்யா வெற்றிபெற்றுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து, உக்ரைனின் லுஹான்ஸ்க், கெர்சன் பகுதிகளை இணைத்துக் கொள்ளுமாறு ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அந்தப் பிராந்தியங்களின் தலைவர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்தப் பகுதிகளில் நடத்தப்பட்ட மேற்கத்திய நாடுகளால் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பில் ரஷ்யாவுடன் இணைய பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டதைத…
-
- 1 reply
- 459 views
-
-
சவுதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முகமது பின் சல்மான் நியமனம் By T. SARANYA 28 SEP, 2022 | 11:17 AM சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammed bin Salman) அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், மன்னர் கலந்துகொள்ளும் அமைச்சரவையின் வாராந்த அமர்வு இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் நடைபெறும். பட்டத்து இளவரசர் மன்னர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவை மறுசீரமைத்துள்ளார். மேலும், இராணுவ துணை அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மானை இராணுவ அமைச்சராக நியமித்து மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்தார். புதிய கல்வி அமைச்சராக யூசுப் பின் அப்துல்லா அல்-பென்யான் நியமிக்கப்பட்…
-
- 1 reply
- 356 views
- 1 follower
-
-
ரஷ்ய... எரிவாயு குழாய் கசிவு குறித்து, ஐரோப்பிய நாடுகள் விசாரணை! ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே இரண்டு பெரிய எரிவாயு குழாய்களில் மூன்று மர்ம கசிவுகள் குறித்து ஐரோப்பிய நாடுகள் விசாரணை நடத்தி வருகின்றன. நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 க்கு ஏற்பட்ட சேதத்திற்கான காரணம் தெளிவாக இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த கசிவுக்கு நீர்மூழ்கிக் கப்பல் பயணமே காரணம் என நோர்ட் ஸ்ட்ரீம் 1இன் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். சேதத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும், அது உடனடியாக ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை பாதிக்காது, ஏனெனில் இரண்டு குழாய்களும் செயற்படவில்லை. ஐரோப்பாவை அச்சுறுத்துவதற்காக எரிவாயு விநியோகத்தை ரஷ்யா பயன்படுத்துவத…
-
- 1 reply
- 311 views
-
-
அமெரிக்காவில்... உளவு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள, எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு... ரஷ்ய குடியுரிமை! முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஒப்பந்ததாரர் எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 72 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் நேற்று (திங்கட்கிழமை) கையெழுத்திட்டு வெளியிட்ட ஆணையில் எட்வர்ட் ஸ்னோவ்டனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஸ்னோவ்டனின் மனைவி, குழந்தை இருவரும் தற்போது நிரந்தர விசா பெற்றுள்ளனர். அவர்களுக்கும் விரைவில் ரஷ்யாவின் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஸ்னோவ்டனின் வழக்கறிஞர் அனடோலி குச்செரெனா, ஸ்னோவ்டனின் மனைவியும் ரஷ்ய குடியுரிமைக்க…
-
- 3 replies
- 458 views
-
-
எரிசக்தி விலை உயர்வு காரணமாக... எலக்ட்ரிக் காரை, சார்ஜ் செய்வதற்கான... செலவு அதிகரிப்பு! எரிசக்தி விலை உயர்வு காரணமாக எலக்ட்ரிக் காரை சார்ஜ் செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளது. இது ஓட்டுநர்களை எலக்ட்ரிக் கார்கள், வாங்குவதைத் தடுக்கும் என்ற அச்சத்தைத் தூண்டுகிறது என்று ஆர்ஏசி தெரிவித்துள்ளது. விரைவான பொது சார்ஜிங் நிலையங்களைப் பயன்படுத்தும் எலக்ட்ரிக் கார் உரிமையாளர்கள், ஒரு மைலுக்கு பெட்ரோலுக்கு செலுத்தும் அதே கட்டணத்தை மின்சாரத்திற்கும் செலுத்துகிறார்கள் என்று கூறுகின்றனர். வீட்டில் கார்களை சார்ஜ் செய்வது மலிவானது. ஆனால் உள்நாட்டு கட்டணங்களும் அதிகரித்து வருவதால் இது சாத்தியமில்லை. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு சமீபத…
-
- 1 reply
- 332 views
-
-
ஜப்பானின் முன்னாள் பிரதமர், ஷின்சோ அபேக்கு... அஞ்சலி செலுத்த, அலைமோதும் மக்கள்! ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அஞ்சலி செலுத்த, மக்கள் கூட்டம் திரண்டு வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய டோக்கியோவில் உள்ள புகழ்பெற்ற விளையாட்டு மற்றும் கச்சேரி அரங்கான நிப்பான் புடோகானில் நடைபெறுகின்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக உலகெங்கிலும் உள்ள சுமார் 4,300 சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்கின்றனர். அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், அவுஸ்ரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் க…
-
- 7 replies
- 468 views
-
-
இத்தாலி பாராளுமன்ற தேர்தல்: முதல்முறையாக பிரதமராகும் பெண்! இத்தாலி பாராளுமன்ற தேர்தல்: முதல்முறையாக பிரதமராகும் பெண்! இத்தாலி நாட்டில் பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் முதல் முறையாக பெண் ஒருவர் அந்நாட்டின் பிரதமராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாலி நாட்டின் பொருளாதார நிலை மோசம் அடைந்ததை அடுத்து அந்நாட்டின் ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனை அடுத்து இத்தாலி பிரதமர் மரியோ டிராகி திடீரென பதவி விலகினார் இதனை அடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்ய நேற்று இத்தாலியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ப…
-
- 0 replies
- 231 views
-
-
விலைவாசி உயர்வை சமாளிக்க குடும்பங்கள் திணறி வரும் நிலையில், பிள்ளைகள் உணவில்லாமல் பள்ளிக்குச் செல்வதும், நண்பர்களுக்கு அது தெரியக்கூடாது என்பதற்காக, வெறும் டிபன் பாக்ஸை வைத்துக்கொண்டு சாப்பிடுவது போல் நடிப்பதும் தெரியவந்துள்ளது. சில பள்ளிகளில், நேற்று பள்ளியில் மதிய உணவு உண்ட பிறகு வேறு உணவு இல்லாமல், மீண்டும் அடுத்த நாள் உணவை மட்டுமே நம்பியிருக்கும் பிள்ளைகளும் இருக்கிறார்களாம். லண்டனில், பள்ளிக்கு வந்த சிறுவன் ஒருவன், தன்னிடம் மதிய உணவு சாப்பிட எதுவும் இல்லாததால், வெறும் டிபன் பாக்ஸை வைத்துக்கொண்டு சாப்பிடுவதுபோல் நடித்த விடயம் குறித்த அதிரவைக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், விலைவாசி உயர்வு காரணமா…
-
- 6 replies
- 495 views
-
-
சீன ஜனாதிபதியை மீண்டும் வலுப்படுத்தும் விதத்தில் சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி தனது யாப்பை வலுப்படுத்தலாம் By RAJEEBAN 26 SEP, 2022 | 03:56 PM சீன ஜனாதிபதியை மீண்டும் வலுப்படுத்தும் விதத்தில் சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி தனது யாப்பை வலுப்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்றாவது தடவையாக அதிகாரத்தில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் விருப்பத்திற்கு ஏற்ப நாடு கட்சி சமூகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விதிமுறைகள் மாற்றப்படுவதை உறுதி செய்வதற்காக தனது 20வது மாநாட்டின் போது சீன கம்யுனிஸ்ட் கட்சி தனது யாப்பில் மாற்றங்களை மேற்கொள்ளக்கூடும். ஒக்டோபர் மாதம் 9 ம் திகதி இடம்பெறவுள்ள சீன கம்ய…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவின் மிகப்பெரும் நிறுவனத்தினை இலக்குவைத்து சைபர் தாக்குதல்-10மில்லியன் வாடிக்கையாளர்களின் தரவு பறிபோயிருக்கலாம் என அச்சம் By RAJEEBAN 26 SEP, 2022 | 12:49 PM ஒப்டஸ் நிறுவனத்தின் கணிணி வலையமைப்பை இலக்குவைத்து சைபர் தாக்குதல்களை மேற்கொண்டவர்களை இனம் காண்பதற்காக வெளிநாட்டு சட்ட அமுலாக்கல் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதாக அவுஸ்திரேலிய பொலிஸ் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய டெலிகொம் நிறுவனமான ஒப்டஸ் தனது கணிணி வலையமைப்பை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல்கள் காரணமாக தற்போதைய முன்னாள் வாடிக்கையாளர்கள் குறித்த தரவுகள் களவாடப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளது. எண்ணிக்கை குறி…
-
- 1 reply
- 205 views
- 1 follower
-
-
உலகின் மிக ரகசியமான அமெரிக்க உளவுத் துறை அருங்காட்சியகத்தில் என்ன உள்ளது? கோர்டன் கொரேரா பாதுகாப்பு நிருபர், வர்ஜீனியாவில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,POOL/GETTY IMAGES அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வின் அருங்காட்சியகம், உலகின் அசாதாரணமான மற்றும் பிரத்யேகமான அருங்காட்சியகங்களில் ஒன்று. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களால் நிரம்பியுள்ள இந்த அருங்காட்சியகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. சதாம் உசேனின் லெதர் ஜாக்கெட்டையும், ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபோது அவரிடம் இருந்த துப்பாக்கியையும் இங்கு மட்டும்தான் பார்க்க முடியும். வர்…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
ஆபாச சாட்: உலக அளவில் நடக்கும் மோசடியின் பின்னணியில் இருப்பது யார்? டுகா ஒர்ஜின்மோ பிபிசி நியூஸ், அபுஜா 23 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,IEROMIN அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபருக்கு 50 வயதிருக்கும். அவர் ஆன்லைனில் ஜிஞ்சர்ஹனி என்ற பெயர் கொண்ட மிகவும் வசீகரமான பெண்ணுடன் 'சாட்டிங்' செய்கிறார். அந்த நபர் ஜிஞ்சர்ஹனி அவர் இருக்கும் பகுதிக்கு அருகில் இருப்பது போல் நினைத்திருக்கிறார். ஆனால், உண்மையில், அவருடன் சாட்டிங் செய்வது ஒரு பெண் அல்ல. நைஜீரியாவில் உள்ள ஓர் ஆண். உலகம் முழுவதும் உள்ள ஆண்கள், இது போன்ற வசீகரமான பெண்களிடம் ஆன்லைன் மூலம் சாட் செய்ய, பல நூறு டாலரை இண…
-
- 0 replies
- 554 views
- 1 follower
-
-
ஈரானிய போராட்டக் காரர்களுக்கு... அமெரிக்கா ஆதரவு: இணையக் கட்டுப்பாடுகளை தளர்த்தப் போவதாக அறிவிப்பு! பொலிஸ் காவலில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதிக் கோரி போராட்டங்களில் ஈடுப்பட்டுவரும் போராட்டக்காரர்களுக்கு உதவப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன்படி, போராட்டங்கள் மீதான கட்டுப்பாட்டை எதிர்கொள்ள ஈரான் மீதான இணைய கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் கூறுகையில், ‘ஈரானிய மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருளில் வைக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த நாங்கள் உதவப் போகிறோம். இணையக் கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்துவது ஈரானியர்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற…
-
- 3 replies
- 318 views
-
-
சீனா ஜனாதிபதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? - சமூக ஊடகங்களில் பரவும் தகவலால் பரபரப்பு By RAJEEBAN 25 SEP, 2022 | 10:23 AM சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. சமீபத்தில் சங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக சமீபத்தில் சமர்ஹன்டிற்கு சென்றிருந்த சீன ஜனாதிபதி சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.எனினும் இது குறித்து சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சியோ அரச ஊடகங்களோ இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்திய அரசியல்வாதி சுப்பிரமணியன் சுவாமியும் ச…
-
- 2 replies
- 731 views
- 1 follower
-
-
உக்ரைன் போரில் பங்கேற்பதை தவிர்க்க அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடும் ரஷிய ஆண்கள் உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கி இன்றுடன் (சனக்கிழமை) 7 மாதங்கள் ஆகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. இதனால் உக்ரைனை தன்வசப்படுத்தும் ரஷியாவின் எண்ணம் ஈடேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. எனினும் இலக்கை அடையும் வரை போர் தொடரும் என ரஷிய அதிபர் புதின் திட்டவட்டமாக கூறி வருகிறார். அதை உறுதிப்படுத்தும் விதமாக உக்ரைன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த 3 லட்சம் ரஷியர்களை அணி திரட்ட உள்ளதாக அண்மையில் அறிவித்தார். போருக்காக அணி திரட்டப்படுபவர்கள் யாரும் கட்டாயப்படுத்தப்பட மட்டார்கள் என்றும், ஆயுதப்படைகளில் பணியாற்றியவ…
-
- 4 replies
- 556 views
-
-
சிரிய கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் 77 பேர் உயிரிழப்பு By DIGITAL DESK 5 24 SEP, 2022 | 12:29 PM லெபனானில் இருந்து குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 77 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (22) அன்று சிரிய நாட்டவர்கள் மற்றும் லெபனான் நாட்டவர்கள் உள்ளடங்கலாக 150 பேரை ஏற்றிக்கொண்டு குறித்த படகு பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்வாறு குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு மத்தியதரைக் கடலில் கவிழ்ந்ததையடுத்து, சிரியாவின் தெற்கு துறைமுக நகரமான டார்டஸ் கடற்கரையில் வித்துக்குள்ளானவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் மீட்…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
அணு ஆயுதம் குறித்த புதின் பேச்சை உளறல் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது - ஐரோப்பிய ஒன்றியம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SHUTTERSTOCK படக்குறிப்பு, ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்த நேரிடலாம் என்று விளாதிமிர் புதின் மறைமுகமாக மிரட்டல் விடுத்தார். யுக்ரேனில் நடக்கும் மோதலில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மறைமுக மிரட்டலை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக எடுத்துகொள்ள வேண்டும் என அதன் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் கூறியுள்ளார். இந்தப் போர் ஆபத்தான கட்டத்தை எட்டியிருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார். ரஷ்யா ராணுவ அணிதிரட்டல் நடவ…
-
- 0 replies
- 672 views
- 1 follower
-
-
10 இலட்சத்திற்கும் அதிகமான கார்களை திரும்பப்பெறுகிறது டெஸ்லா By T. SARANYA 23 SEP, 2022 | 02:24 PM அமெரிக்காவில் 10 இலட்சத்து 10 ஆயிரம் கார்களை மின்னணு கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனமான டெஸ்லா திரும்பப்பெறுகிறது. டெஸ்லா கார்களின் ஜன்னல்கள் மிக வேகமாக மூடப்படுவதால் மக்களின் விரல்கள் காயமடையலாம் என்பதால் இவ்வாறு திரும்ப பெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா தலைமை நிர்வாகி எலான் மஸ்க், "திரும்ப பெறல்" என்ற சொல்லைப் பயன்படுத்துவதை டுவிட்ரில் விமர்சித்துள்ளார். அதவாது, “சொற்களஞ்சியம் காலாவதியானது மற்றும் துல்லியமற்றது. இது ஒரு சிறிய ஓவர்-தி-ஏர் மென்பொருள் புதுப்பிப்பு. எங்களுக்குத் தெரிந்த வ…
-
- 0 replies
- 239 views
-