Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உக்ரைனில் உயிரிழந்த, பொதுமக்களின் எண்ணிக்கை... 5,110 ஆக உயர்வு: ஐ.நா. தகவல்! ரஷ்யா படையெடுத்ததில் இருந்து உக்ரைனில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 5,110 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,752 பேர் காயம் அடைந்துள்ளனர். உக்ரைன் மீது இரவு, பகல் பாராமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது. இதனிடையே, உக்ரைன் விமானப்படை தனது முகநூல் பக்கத்தில், ரஷ்யா 3000க்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. குரூஸ் ஏவுகணைகள், வான் மேற்பரப்பு ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள், பாஸ்டன் கடலோர அமைப்பின் ஓனிக்ஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகளை ஏவி த…

    • 3 replies
    • 303 views
  2. உக்ரைனின்... பாதுகாப்பு அமைப்பின் தலைவர், வழக்கறிஞர் ஜெனரல்... பதவி நீக்கம்! இரண்டு சக்திவாய்ந்த அமைப்புகளில் பல தேசத்துரோக வழக்குகளை மேற்கோள் காட்டி, ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உக்ரைனின் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மற்றும் வழக்கறிஞர் ஜெனரலை நீக்கியுள்ளார். 60க்கும் மேற்பட்ட முன்னாள் ஊழியர்கள் இப்போது உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் பணியாற்றி வருவதாக அவர் கூறினார். சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு எதிராக மொத்தம் 651 ஒத்துழைப்பு மற்றும் தேசத்துரோக வழக்குகள் திறக்கப்பட்டுள்ளன. பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளான, இவான் பகானோவ் மற்றும் இரினா வெனெடிக்டோவா ஆகியோர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. https://athavannews.com/202…

  3. ருவாண்டாவிற்கு... புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அதிருப்தி! ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் ஆபத்தான தஞ்ச கோரிக்கை பயணங்களை நிறுத்தும் என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது. பயணங்களைத் தடுக்கும் கொள்கையாக, பிரான்ஸில் இருந்து சிறிய படகுகளில் வந்த சிலரை ருவாண்டாவில் தஞ்சம் கோர அனுப்ப கடந்த ஏப்ரல் மாதம் பிரித்தானியா முடிவு செய்தது. ஆனால், இது புலம்பெயர்ந்தவர்களால் கவனிக்கப்படாமல் போய்விட்டது என்று உட்துறை விவகாரக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் டயானா ஜான்சன் கூறினார். இந்த திட்டம் ஆபத்தான கடவுகளை நிறுத்தும் என்…

  4. 70 வயதில் புகைப்பட கலைஞர்: உலகம் சுற்றும் கொள்ளுப்பாட்டி நிக்கோலா பிரையன் பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,JENNY HIBBERT வயது வெறும் எண்ணிக்கைதான் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை வாழ்ந்து காட்டி நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ஜென்னி பாட்டி. மனவலி நிறைந்த தமது விவாகரத்துக்குப் பின், தன்னை ஒரு புகைப்பட கலைஞராக மாறிய அவர், அந்த புகைப்படக்கலையே பிற்காலத்தில் தன்னை உலகம் முழுக்க சுற்றுப்பயணத்துக்கு அழைத்துச் செல்லும் என்றோ, உலகின் மிகப்பெரிய கொன்றுண்ணிகளை நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் என்றோ எண்ணவில்லை. ஆனால் இந்த அனுபவங்கள் தன்நை தொடர…

  5. ரஷ்யாவின் முடிவால் ஜெர்மனி இருளில் மூழ்கும் அபாயம் Posted on July 18, 2022 by தென்னவள் 11 0 ஜெர்மனிக்கு நாட்டுக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை ரஷ்ய அரசு மூடியுள்ளது. இதனால் அந்நாட்டுக்குக் கிடைக்கும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட வளங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், உணவு உள்ளிட்ட பொருட்களை சார்ந்து இருக்கும் ஐரோப்பிய நாடுகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஐரோப்பாவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் ஜெர்மனி, இயற்கை எரிவாயு நெர…

  6. கட்சி உறுப்பினர்களிடையே.. கருத்துக் கணிப்பு: ரிஷி சுனக் முன்னிலை! பிரித்தானியாவில் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் நடைபெறும் போட்டி தொடர்பாக கட்சி உறுப்பினர்களிடையே எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் முன்னிலை பெற்றுள்ளார். கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதியாகத் தேர்ந்தெடுக்கும் 2 போட்டியாளர்களில் ஒருவரை கட்சியின் தலைவராகவும் நாட்டின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கவிருக்கும் கட்சி உறுப்பினர்களிடையே ஜேஎல் பார்ட்னர்ஸ் ஆய்வு நிறுவனம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துக் கணிப்பு நடத்தியது. நாடு முழுவதுமுள்ள 4,400க்கும் மேற்பட்ட கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே இந்த கருத்துக் …

  7. அமெரிக்காவின் 'ஹைதர் அலி' பிரிட்டிஷாரை வெறும் 26 நிமிடங்களில் தோற்கடித்த கதை ஃபைசல் முகமது அலி பிபிசி செய்தியாளர், டெல்லி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HULTON ARCHIVE இது 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்று. அமெரிக்க சுதந்திரப் போரின்போது, ஒரு அமெரிக்க போர்க்கப்பல், மிகப் பெரிய பிரிட்டிஷ் கப்பலான ஜெனரல் மாங்க்கை 26 நிமிட போரில் தோற்கடித்து சரணடையச்செய்தது. அமெரிக்கக் கப்பலின் பெயர் ஹைதர் அலி(Hyder Ally). மைசூர் ஆட்சியாளரான ஹைதர் அலியின் நினைவாக சிறிய மாற்றத்துடன் இது பெயரிடப்பட்டது. 'Ally' என்ற ஆங்கில வார்த்தைக்கு நண்பன் அல்லது கூட்டாளி என்று பொ…

  8. ஐரோப்பாவில் காட்டுத் தீ: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்! போர்த்துகல், ஸ்பெயின் மற்றும் தென்மேற்கு பிரான்சில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை எதிர்த்துப் போராடி வருகின்றனர். ஆனால், காட்டுத்தீ தணிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வடக்கு போர்த்துகலில், ஸ்பெயின் எல்லைக்கு அருகில் உள்ள ஃபோஸ் கோ பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி ஒருவர் உயிரிழந்தார். 12,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்ட பிரான்சின் ஜிரோண்டே பகுதியில் தற்போது, தீ பரவி வருகிறது. தெற்கு ஸ்பெயினில், கோஸ்டா டெல் சோல் அருகே, மிஜாஸ் மலைகளில் பரவிய காட்டுத் தீயில் இருந்து சுமார் 2,300பேர் வெளியேற வேண்டியிருந்தது. டோரெமோலினோஸ் கடற்கரையில் விடுமுறை…

    • 4 replies
    • 412 views
  9. 70 சதவீதம் இராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான்... ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக, உக்ரைன் குற்றச்சாட்டு! ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் 70 சதவீதம் இராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான் என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆகையால், ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அங்கீகரிக்க வேண்டும் என உக்ரைன் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, உக்ரைன் இராணுவ உபகரணங்களை சரிசெய்வதை பல்கேரியா தொடரும் என பல்கேரிய இராணுவ அமைச்சர் ஜாகோவ் கூறியுள்ளார். ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட ஹெலிகொப்டர்களின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு 2 பல்கேரிய நிறுவனங்களுக்கும், ஒரு செக் குடியரசு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரஷ்யா நிறு…

  10. சுதந்திரமான, இறையாண்மை கொண்ட... சொந்த நாட்டில் வசிக்க, பாலஸ்தீன மக்கள் தகுதியானவர்கள்: பைடன்! மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பைடன், இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையில் பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பெத்லஹேமில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் பின்னர், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைதி ஏற்படுவதற்கான நடவடிக்கையை அமெரிக்கா கைவிடப் போவதில்லை என பைடன் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, இஸ்ரேலிலிருந்து சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்த ஜோ பைடனுக்கு ஜெட்டா நகரில் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், உற்சாக வரவேற்பளித்தார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சவுதிக்கு ஜோ பைடன் பயணம் மேற்க…

  11. இத்தாலி பிரதமர், மரியோ ட்ராகியின் இராஜினாமாவை... ஏற்க மறுத்தார் ஜனாதிபதி! நாட்டின் கூட்டணி அரசாங்கத்தில் மிகப்பெரிய கட்சியான ஃபைவ் ஸ்டார் இயக்கம் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது ஆதரவை மீள பெற்றதை அடுத்து, இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி நேற்று (வியாழக்கிழமை) இராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், இத்தாலியின் ஜனாதிபதி, செர்ஜியோ மட்டரெல்லா, டிராகியின் இராஜினாமாவை நிராகரித்துள்ளார். அதற்கு பதிலாக, அரசியல் நிலைமையை மதிப்பிடுவதற்காக டிராகியை நாடாளுமன்றத்தில் உரையாற்றுமாறு கேட்டுக்கொண்டார். டிராகி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் உள்ள கட்சிகளில் ஒன்றான ஃபைவ் ஸ்டார் இயக்கம், பணவீக்கத்தைக் குறைப்பதற்கும், அதிகரித்து வரும் எரிசக்தி…

  12. இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு... ரஷ்யாவே காரணம் என உக்ரைன் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார். உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்களை தடை செய்தமை உலகம் முழுவதும் அமைதியின்மையை ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டிய உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் என குற்றம் சுமத்தியுள்ளார். சியோலில் ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் தனது உரையின் போது, Zelensky உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பில் ரஷ்யா பயன்படுத்திய தந்திரோபாயங்களில் ஒன்று "பொருளாதார அதிர்ச்சி" உருவாக்கம் என்று கூறினார். விநியோகச் சங்கிலியில் நிலவும் நெருக்கடி மற்றும் சீர்குலைவு காரணமாக உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை நாடுகள் சந்திக்கும் நிலையில், அவை அமை…

  13. நாசா... அதிகாரியின், கருத்துக்கு சீனா சீற்றம். பீஜிங்கின் விண்வெளித்திட்டமானது ‘ஒரு இராணுவ விண்வெளித் திட்டம்’ என அமெரிக்க விண்வெளி முகவரகத்தின் நிர்வாகி பில் நெல்சன் கூறியதைத் தொடர்ந்து, சீனா கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நாசா உண்மைகளை புறக்கணித்து சீனாவை கொச்சைப்படுத்துவது இது முதல் முறை அல்ல என்று கூறினார். சில அமெரிக்க அதிகாரிகள், ஏனைய நாடுகளின் இயல்பான மற்றும் நியாயமான விண்வெளிச் செயற்பாடுகளை தொடர்ந்து கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் அவதூறு செய்து வருவதாகவும், இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துகளை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்றும் அவர் கூறின…

  14. சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் ஒரு கொடூர கொலையாளி – ரகசியத்தை போட்டுடைத்த உளவுத்துறை முன்னாள் உயரதிகாரி! சவுதி இளவரசராக இருந்த முகமது பின் நயீப்பின் நீண்டகால ஆலோசகராக இருந்த அல்ஜப்ரி, சவுதி அரேபியாவின் இப்போதைய இளவரசர் ‘எம்பிஎஸ்’ என்றழைக்கப்படும் முகமது-பின்-சல்மான் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சவுதி உளவுத்துறை முன்னாள் உயரதிகாரி அல்ஜப்ரி கூறியிருப்பதாவது, “எம்பிஎஸ் கடத்தல் மற்றும் கொலைகளை மேற்கொள்ள “புலிப்படை” என்று அழைக்கப்படும் கூலிப்படையின் கொடூரமான கும்பலை நடத்துகிறார். MBS தனது மக்களுக்கும், அமெரிக்கர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த பூலோகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளார். எம்பிஎஸ் ஒரு மனநோயாளி, பச்சாதாபம் இல்லாதவர், உணர்ச்சிகளை உணரமா…

  15. ரஷ்யாவுக்கு... ஈரான், ஆயுத உதவி: அமெரிக்கா குற்றச்சாட்டு! உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு ஈரான் ஆயுத உதவி அளித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பில் பயன்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ஆளில்லா விமானங்கள் உட்பட நூற்றுக்கணக்கான ஆளில்லா வான்வழி விமானங்களை ரஷ்யாவிற்கு ஈரான் வழங்கி வருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறியுள்ளார். தங்களுக்கு கிடைத்த தகவலின்படி அவற்றை பயன்படுத்துவது குறித்து இந்த மாதத்தில் ரஷ்ய படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஈரான் தயாராகி வருகிறது என்றும் அவர் கூறினார். அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்து ஈரான் அணுசக்தி திட்…

    • 3 replies
    • 336 views
  16. அனைத்து உக்ரைனியர்களும்... ரஷ்ய குடியுரிமை: "விரைவு குடியுரிமை" திட்ட ஆணையில், கையெழுத்திட்டார் புடின்! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று (திங்கட்கிழமை) கையெழுத்திட்ட ஆணையின்படி, அனைத்து உக்ரைனியர்களும் இப்போது ரஷ்ய குடியுரிமைக்கு விரைவாக விண்ணப்பிக்கலாம். முன்னதாக, இந்த விருப்பம் உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், தெற்கு ஸபோரிஸியா மற்றும் கெர்சன் பிராந்தியங்களில் வசிப்பவர்களுக்கும் மட்டுமே திறந்திருந்தது. அவை பெரும்பாலும் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால், தற்போது உக்ரைனில் உள்ள அனைத்து மக்களும் ரஷ்ய குடியுரிமையை பெறுவதற்கு விரைவு குடியுரிமை திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆணையில் புடின் கையெ…

    • 6 replies
    • 455 views
  17. கட்சிக்காரர்களாலேயே கைவிடப்பட்ட கபடதாரி! -ச.அருணாசலம் போலித்தனம், பொய்மை, வாய்ச் சவடால், திறமையின்மை ஆகியவற்றின் அடையாளமாகிப் போன போரீஸ் ஜான்சன், பிரிட்டனை வரலாறு காணாத இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட்டார்! ஊழல் அரசியல்வாதியை உடனே தூக்கி எறிந்தனர், பிரிட்டிஷ் மக்கள்! ஜான்சனின் மூன்றாண்டு ஆட்சி குறித்த ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்! பல்வேறு ஊழல் குற்றசாட்டுகளுக்கும், விதி மீறல்களுக்கும் உள்ளான பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒருவழியாக தனது பதவியில் இருந்து விலகுவதாக வேண்டா வெறுப்பாக அறிவித்து விட்டார். 50க்கும் மேற்பட்ட தனது கட்சியின் அமைச்சர்களும், அதிகாரிகளும் ராஜினாமா செய்து நெருக்கடி கொடுத்த நிலையில் – வரலாறு காணாத பொய்களுக்கும், புனைசு…

    • 10 replies
    • 709 views
  18. பொருளாதார மந்தநிலை எனும் 'பேய்' வரப்போகிறதா?: எச்சரிக்கும் சமிக்ஞைகள் அடஹோல்ஃபா அமெரிஸஸ் பிபிசி முண்டோ சேவை 10 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES பொருளாதார மந்தநிலை என்று உலகம் அழைக்கும் அந்த 'பேய்' வரும் என்று கூறும் பொருளாதார நிபுணர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பொருளாதாரத்தை விரைவுபடுத்தும் நோக்கில் பொருளாதார பேக்கேஜ் என்ற பெயரில் அதிக செலவு செய்வது, சீனாவில் இருந்து உலகிற்கு அனுப்பப்படும் பொருட்களின் விநியோகச் சங்கிலியில் தடங்கல், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் பிற காரணங்கள் கடந்த பல தசாப்தங்களாக கண்டிராத நிலைக்கு பணவீக்கத்தை கொண்டுசென்று…

  19. போட்டி நாளுக்கு நாள் வலுவாகி வந்தாலும் இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியில் முந்தும் ரிஷி சுனக் இங்கிலாந்தில் புதிய பிரதமருக்கான போட்டி நாளுக்கு நாள் வலுவாகி வந்தாலும், அதில் ரிஷி சுனக் முந்துவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. , இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது சொந்த கட்சிக்குள்ளேயே எழுந்த எதிர்ப்பு காரணமாக கடந்த 7-ந் தேதி பதவி விலகினார். அதேநேரம் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் இந்த பதவியில் தொடருவார். பிரதமர்தான் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் என்பதால், கட்சி தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். எனவே கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை (பிரதமர்) தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்க உள்ளன. போரிஸ் ஜான்…

    • 3 replies
    • 487 views
  20. ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின்... திடீர் மரணம் காரணமாக, 12ஆம் திகதியை... தேசிய துக்க நாளாக அறிவித்தது அரசாங்கம்! இலங்கையில் எதிர்வரும் 12ஆம் திகதி அதாவது நாளைய தினம் (செவ்வாய்க்கிழமை) தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் அன்றைய தினம் பொது விடுமுறை அல்ல எனவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் திடீர் மரணம் காரணமாக இவ்வாறு துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1290581

  21. உக்ரைனிய தானியங்களை… தீயிட்டு கொளுத்தும் ரஷ்ய படைகள்: பரபரப்பு வீடியோ உக்ரைனிய தானியங்களை ரஷ்ய படைகள் வேண்டுமென்றே எரிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போர் நடவடிக்கையால், உலக நாடுகளுக்கு மற்றும் ஐநாவின் பொது உணவுத் திட்டதிற்கு வழங்கப்பட வேண்டிய உணவு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் கடுமையான உணவு பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், ஏழை நாடுகளுக்கு ஐநா வழங்கும் ரேசன் பொருள்களின் அளவினை பாதியாக குறைக்கும் அளவிற்கு தள்ளியுள்ளது. இந்தநிலையில், உக்ரைனிய தானிய வயல்களுக்கு ரஷ்ய படைகள் வெடிமருந்து வைத்து முழுவதுமாக அழி…

    • 6 replies
    • 360 views
  22. கடைசி உக்ரைனியர், நிற்கும் வரை... போர் நீடிக்கப்படலாம்: புடின் கடைசி உக்ரைனியர் நிற்கும் வரை போர் இழுக்கப்படலாம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஸ்டேட் டுமா கட்சி பிரிவுகளின் தலைவர்களுடனான சந்திப்பின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்ததாக, மாநில ஊடக தொலைக்காட்சி ரஷ்யா-24 செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இன்று அவர்கள் எங்களை போர்க்களத்தில் தோற்கடிக்க விரும்புகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். சரி, நான் என்ன சொல்ல முடியும்? அவர்கள் முயற்சி செய்யட்டும். கடைசி உக்ரைனியனும் நிற்கும் வரை மேற்குலகம் எங்களுடன் சண்டையிடத் தயாராக இருப்பதாக நாங்கள் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம். இது உக்ரைனிய மக்களுக்கு ஒரு…

  23. உக்ரைன் மீதான... முழு இராணுவ நடவடிக்கை, இன்னும்... தொடங்கவில்லை: புடின் எச்சரிக்கை! உக்ரைன் மீதான முழு இராணுவ நடவடிக்கை இன்னும் தொடங்கவில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரித்துள்ளார். ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தங்களது நிபந்தனைகளை உக்ரைன் உடனடியாக ஏற்காவிட்டால் மிக மோசமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உக்ரைனில் விவகாரத்தைப் பொருத்தவரை மேற்கத்திய நாடுகள் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்க்கும் செயலில் ஈடுபடுகின்றன. உக்ரைன் அரசாங்கதைத் தூண்டிவிட்டு, கடைசி உக்ரைனியர் சாகும்வரை அந்த நாடு போரிட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன. …

    • 1 reply
    • 273 views
  24. அடுத்த பிரித்தானிய பிரதமர் யார்? அதிகாரப்பூர்மாக... அறிவிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு! பொரிஸ் ஜோன்ஸன் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, நாட்டின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் பங்கேற்கவிருப்பதாக அதிகாரப்பூர்மாக அறிவிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதலாவதாக, அந்தப் போட்டியில் பங்கேற்கவிருப்பதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர். சூயலா பிரேவ்மேன் வியாழக்கிழமை அறிவித்திருந்தார். அவருக்கு அடுத்தபடியாக, கொரோனா தடுப்புக் குழு துணைத் தலைவர் ஸ்டீவ் பேக்கரும் அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் கிரான்ட் ஷாப்ஸும் பிரதமர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்தனர். இந்த…

  25. 15 ஆண்டுகளுக்கு பின் துருக்கிக்கு விமான சேவையை தொடங்கும் இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீன விவகாரத்தில் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் நிலவி வருகிறது. இதற்கிடையே, இஸ்ரேல் – துருக்கி இடையேயான விமான சேவையில் பல ஆண்டுகளாக அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. துருக்கியில் இருந்து இஸ்ரேலுக்கு 2 விமான நிறுவனங்களின் சேவை செயல்பாட்டில் உள்ளது. துருக்கிஸ் ஏர்லைன்ஸ் மற்றும் பிகஸ்அஸ் ஏர்லைன்ஸ் ஆகிய 2 துருக்கி விமான நிறுவனங்கள் மட்டுமே இருநாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரேல் நாட்டின் எந்த விமா…

    • 0 replies
    • 198 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.