Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உக்ரைன் போர்: முக்கிய நகரமான... செவெரோடோனெட்ஸ்க்கு செல்லும், ஒவ்வொரு பாலமும் அழிப்பு ! உக்ரேனிய நகரமான செவெரோடோனெட்ஸ்கிற்கு செல்லும் அனைத்து பாலங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். நகரத்திற்கான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், பொருட்களை வழங்குவது மற்றும் பொதுமக்கள் வெளியேற்றுவதும் கடினமாகியுள்ளதாகவும் கூறியுள்ளார். உக்ரைனின் கிழக்கு நகரத்தில் கடுமையான போர் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு ரஷ்ய பீரங்கி படையினர் வெளியேற்றியதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர். பல வாரங்களாக செவெரோடோனெட்ஸ்கைக் கைப்பற்றுவது ரஷ்யாவின் முக்கிய இராணுவ இலக்காக இருந்த நிலையில் அனைத்து பாலங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நகரத்தின்…

  2. பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய... ஒப்பந்தத்தின் சில பகுதிகளை அகற்ற, பிரித்தானியா தீர்மானம். 2019 இல் கொண்டுவரப்பட்ட பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய ஒப்பந்தத்தின் சில பகுதிகளை அகற்றுவதற்கான திட்டங்களை இங்கிலாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கிரேட் பிரிட்டனில் இருந்து வடக்கு அயர்லாந்திற்குச் பொருட்களை எடுத்துச் செல்வதை எளிதாக்கும் முயற்சியில் வடக்கு அயர்லாந்து அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் இந்த நடவடிக்கையை எதிர்க்கின்ற போதும் ஒப்பந்தத்தில் திரும்பப் போவது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்றும் கண்டித்துள்ளது. இருப்பினும் நாட்டின் அத்தியாவசிய நலன்களைப் பாதுகாப்பதை தவிர தமக்கு வேறுவழியில்லை என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.…

  3. உலக நாடுகளிடமுள்ள... அணு ஆயுதங்களின் எண்ணிக்கை, அடுத்த 10 ஆண்டுகளில்... அதிகரிக்கும் என கணிப்பு உலக நாடுகளிடமுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் அதிகரிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு நாடுகளின் அணு ஆயுத குவிப்பு குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘எஸ்.ஐ.பி.ஆர்.ஐ. ஆண்டு புத்தகம் 2022’ என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளாக குறைந்து இருந்த அணு ஆயுத உற்பத்தி உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக மீண்டும் உயரும் என நிபுணர்கள் இதன்போது கணித்துள்ளனர். உலகளவில் தற்போது அமெரிக்கா, இந்தியா உள்பட 9 நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. …

  4. ருவாண்டாவுக்கு... நாடு கடத்தப்படவுள்ளோரின், எண்ணிக்கை குறைந்துள்ளது! பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்துக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அவ்வாறு செல்லவுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒற்றைப் புள்ளிகளாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உட்துறை அலுவலக விமானத்தை நாளை (செவ்வாய்கிழமை) புறப்பட அனுமதிப்பது குறித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் பின்னர் முடிவு செய்ய உள்ளது. கடந்த வாரம் பிரச்சாரகர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர், உயர் நீதிமன்றத்தில் அரசாங்கக் கொள்கைக்கு எதிரான தடை உத்தரவை வெல்லத் தவறிவிட்டனர். ஆனால், ருவாண்டாவின் தலைநகரான கிகாலிக்கு நாடு கடத்தப்பட…

  5. உலகில்... மிக நீண்ட காலம், அரச பதவியை வகித்த... இரண்டாமவர்: பிரித்தானிய ராணி சாதனை! உலகில் மிக நீண்ட காலம் அரச பதவியை வகித்த இரண்டாமவர் என்ற பெருமையை பிரித்தானிய ராணி எலிசபெத் பெற்றுள்ளார். 96 வயதான பிரித்தானிய ராணி எலிசபெத், பிரான்ஸில் கடந்த 1643 முதல் 1715ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த 14ஆம் லூயிஸுக்கு அடுத்தபடியாக, அதிக காலத்துக்கு அரச பதவியை வகிப்பவராகியுள்ளார். இதேவேளை கடந்த 1927 முதல் 2016ஆம் ஆண்டு வரை (70 ஆண்டுகள் 126 நாள்கள்) ஆட்சி செய்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இரண்டாவது இடத்தை ராணி எலிசபெத் பெற்றுள்ளார். கடந்த 1953ஆம் ஆண்டு மகுடம் சூட்டிய ராணி எலிசபெத், பிரித்தானியாவின் மிக நீண்டகால முடியாட்சியாளர் …

  6. ஐ.நா. பொதுசபையில் இந்திக்கு அங்கீகாரம் – இந்தியா வரவேற்பு Posted on June 12, 2022 by தென்னவள் 15 0 ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டு மொழிகளாக ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 6 மொழிகள் தவிர இதர மொழிகளிலும் ஐ.நா.வின் அறிக்கைகள், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என இந்தியா உள்ளிட்ட 80 நாடுகள் சார்பில் ஐ.நா. பொதுசபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்தத் தீர்மானம் ஐ.நா. பொதுசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பன்மொழி பயன்பாட்டை முன்மொழியும் இந்தத் தீர்மானத்தில் இந்தி, உருது மற்றும் வங்க மொழி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. …

  7. நாங்கள் இணைந்தால் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் வலிமைபெறும்- ஜெலன்ஸ்கி Posted on June 13, 2022 by தென்னவள் 3 0 உக்ரைனின் தென்கிழக்கு கெர்சன் மற்றும் ஜபோரிஜியா பிராந்தியங்களில், ரஷிய படைகளிடம் இருந்து கிராமங்கள் மற்றும் நகரங்களை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றிவிட்டதாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார். எனினும், சிவியரோடோனெட்ஸ்க் பகுதியில் இன்னும் சண்டை தொடர்ந்து நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா, உக்ரைனுக்கு சென்று ஜெலன்ஸ்கியைச் சந்தித்து பேசினார். அப்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான உக்ரைனின்…

    • 0 replies
    • 267 views
  8. சீனாவை எதிர்க்கவே... தாய்வானுக்கு, ஆயுதங்களை வழங்குகிறது... அமெரிக்கா: சீனா குற்றச்சாட்டு! சீனாவை எதிர்க்கும் போர்வையிலேயே தாய்வானுக்கு ஆயுதங்களை வழங்குவதற்காகவே அமெரிக்கா அறிவித்துள்ளது என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்க் கூறுகையில், ‘பன்முகத்தன்மை என்ற போர்வையில் அமெரிக்கா தனது நாட்டின் நலன்களை பிற நாடுகளின் மீது திணிக்கிறது. எந்த நாடும் தன் விருப்பத்தை மற்ற நாடுகள் மீது திணிக்கக்கூடாது, பிற நாடுகளை கொடுமைப்படுத்த கூடாது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்ப்பதற்காக, இந்தோ-பசிபிக் என்ற பெயரில் ஒரு சிறிய அமைப்பை அமெரிக்கா உருவாக்கும் முயற்சி, ஆசிய நாடுகள் சீனாவுக்கு தரும் ஆதரவை பறிக்கும் முயற்சியே…

  9. உக்ரேனுக்கு ஜேர்மன், பிரென்ஞ், இத்தாலிய அதிபர்கள் விஜயம் செய்ய கூடும் என ஜேர்மனிய பத்திரிகையான பில்ட் அம் சொன்ண்டக் ஐ மேற்கோள் காட்டி தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. வரவிருக்கும் G7 மாநாட்டுக்கு முன்பாக உக்ரேனிய அதிபர் செலன்ஸ்கியை இந்த மூன்று ஐரோப்பிய நாடுகளின் அதிபர்களும் கீவ் இல் சந்திப்பார்கள் என தெரிகிறது. முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கீவ் இற்கான அவரின் விஜயம் எப்போது என கேட்கப்பட்டபோது “ ஒரு புகைப்படம் எடுக்கும் சந்தர்பத்துக்காக போகும் கூட்டத்தினருடன் நான் (கீவ்) போக மாட்டேன், நான் போவதாயின் ஒரு குறிப்பிட்ட விடயத்துக்காகவே எனது விஜயம் அமையும்” என ஜேர்மன் அதிபர் சொல்ஸ் கூறியிருந்தார் என்பது கவனத்துக்கு உரியது. https://www.theguard…

    • 6 replies
    • 477 views
  10. தாய்வானை.... சீனாவிடமிருந்து பிரிக்க முயன்றால், போர் தொடங்கவும் தயங்கமாட்டோம்: சீனா எச்சரிக்கை! தாய்வானை சீனாவிடமிருந்து எந்த நாடாவது நினைத்தால் பிரிக்க நினைத்தால், அதனை எதிர்த்து போர் தொடங்கவும் தயங்கப் போவதில்லை என சீனா எச்சரித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லோய்ட் ஆஸ்டினுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்திய சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வேய் ஃபெங்கே இந்த எச்சரிக்கையை விடுத்தார். இதன்போது அவர் கூறுகையில், ‘சீனாவிடமிருந்து தாய்வானைப் பிரிக்கும் நடவடிக்கையில் எந்த நாடாவது ஈடுபட்டால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக ஒரு புதிய போரைத் தொடங்கவும் சீன இராணுவம் தயங்காது. அதற்காக எந்த விலை கொடுக்கவும் சீனா தயாராக இருக்கிறது. …

  11. புதிய அணுவாயுதங்களை உருவாக்குவதில் சீனா வெற்றியடைந்துள்ளது- முதலில் பயன்படுத்தமாட்டோம்- சீன அமைச்சர் புதிய அணுவாயுதங்களை உருவாக்குவதில் சீனா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது என தெரிவித்துள்ள சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் எனினும் தற்பாதுகாப்பு நோக்கத்துடன் மாத்திரமே அவற்றை பயன்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார். சீனா அணுவாயுதங்களை முதலில் பயன்படுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார் - அமெரிக்க பாதுகாப்புஅமைச்சர் லொயிட் ஒஸ்டினை சிங்கப்பூரில் இடம்பெறும் சங்கிரி லா பேச்சுவார்த்தைகளி;ன் போது சந்தித்தவேளை வெய் பெங்கே இதனை தெரிவித்துள்ளார். கிழக்கு சீனாவில் அணுவாயுதங்களை ஏவுவதற்கான 100 தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள சீனாவின் வெ…

  12. துப்பாக்கி வன்முறைக்கு எதிராக... ஆயிரக்கணக்கானோர், அமெரிக்காவில் போராட்டம். அமெரிக்காவில் துப்பாக்கி தொடர்பான சட்டங்களை கடுமையாக்குமாறு வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நேற்றைய தினம் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த போராட்டங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆதரவை வழங்கியுள்ள அதேவேளை துப்பாக்கி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார். டெக்சாஸ், உவால்டேவில் உள்ள ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. டெக்ஸாஸில் கடந்த மாதம் 24ஆம் திகதி நடத…

  13. புதின், ஜார் மன்னர் மகா பீட்டர்: யுக்ரேன் பற்றிய உரையில் ரஷ்ய அதிபர் தம்மை ஜார் மன்னருடன் ஒப்பிட்டுக் கொள்வது ஏன்? சாரா ரெய்ன்ஸ்ஃபோர்ட் கிழக்கு ஐரோப்பிய செய்தியாளர் 11 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஜார் மன்னர் மகா பீட்டர் தனது முன்மாதிரி என்று புதின் கூறி வருகிறார். ஜார் மன்னர் மகா பீட்டரை வியந்து போற்றுபவர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். இது பரவலாக அறியப்பட்டதுதான். ஆனால் இப்போது மகாபீட்டரைப் போன்றே தாம் செயல்படுவதாக இப்போது கருதத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. மூன்று நூற்றாண்டுகளுக்…

  14. சீனா - ரஷ்யா இடையிலான முதல் பாலம் திறப்பு ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான முதல் பாலம் திறக்கப்பட்டுள்ளது. அமுர் ஆற்றின் குறுக்கே, 19 பில்லியன் ரூபிள் செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் சுமார் 1 கிலோ மீற்றர் நீளத்தில் கிழக்கு ரஷ்ய நகரமான பிளாகோவெஷ்சென்ஸ்க்கை வடக்கு சீனாவின் ஹெய்ஹேவுடன் இணைக்கிறது. இரு நாடுகளின் வண்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பாலத்தில் வாணவேடிக்கை காட்சிக்கு நடுவில், இரு முனைகளிலில் இருந்தும் சரக்கு வாகனங்கள் பாலத்தை கடந்து சென்றன. https://www.virakesari.lk/article/129309

    • 2 replies
    • 367 views
  15. உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட்ட 3 பேருக்கு மரண தண்டனை! உக்ரைனில் கிழக்கு பகுதியில் உக்ரைன் அரசுக்கு ஆதரவாக சண்டையிட்டதற்காக பிரிட்டனைச் சேர்ந்த 2 பேர் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவர் என 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க் மக்கள் குடியரசு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கூலிப்படை நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத செயல்களுக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் உள்ளது. இந்த மூன்று பேரும் கூலிப்படையினர் என்றும், போர்க் கைதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என…

    • 31 replies
    • 2.2k views
  16. காலநிலை மாற்றம்: ஆடு, மாடுகள் ஏப்பம் விட்டால் வரி – நியூசிலாந்தின் புதிய திட்டம் 14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பசுமை இல்ல வாயுக்களில் முதன்மையானவற்றில் ஒன்றைச் சமாளிக்கும் முயற்சியில், செம்மறி ஆடுகள், மற்றும் மாடுகளை வளர்ப்போருக்கு வரி விதிக்கும் திட்டத்தை நியூசிலாந்து அறிவித்துள்ளது. விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளிடம் இருந்து வெளியேற்றப்படும் மீத்தேன் வாயுவுக்கு வரி வசூலிக்கும் முதல் நாடு இதுதான். சுமார் 50 லட்சம் மக்கள்தொகை உள்ள நியூசிலாந்தில் சுமார் ஒரு கோடி கால்நடைகள் மற்றும் 2.6 கோடி செம்மறி ஆடுகள் உள்ளன. நாட்டின் மொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் கி…

  17. ஜஸ்டின் பீபருக்கு வந்த ராம்சே ஹன்ட் நோய்: 'முகத்தின் ஒரு பக்கம் அசையவில்லை' 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,INSTAGRAM/JUSTIN BIEBER படக்குறிப்பு, தனது கண்ணில் ஏற்பட்ட பிரச்னையைக் காட்டும் ஜஸின் பீபர் பாடகர் ஜஸ்டின் பீபர் இந்த வாரம் நிகழ்ச்சிகளை ரத்து செய்த பின்னர், தான் முக வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 28 வயதான அவர், இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில், ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் நோய் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறினார். "இந்தக் கண் இமைக்காமல் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். என் முகத்தின் இந்தப் பக்கத்தில் என்னால் சிரிக்க முடியாது. ஏனெனில், என் முகத்தின்…

  18. உக்ரேனில் கொலரா பரவும் ஆபத்து பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காத நிலையில், உக்ரேனின் மரியுபோல் நகரில் கொலரா நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உக்ரேன் போரால், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் போய் விட்ட துறைமுக நகரமான மரியுபோலில் தற்போது ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் உள்ளனர். அங்குள்ள பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் அங்கு கொலரா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றி இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்கையில், “ரஷ்யா தான் ஆக்கிரமித்துள்ள மரியுபோலில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர போராடுகிறது. பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. தொலைபேசி மற்றும் இணைய சேவைகளில் பெரும் இடையூறு தொடர்கிறது.…

  19. உக்ரைன், மால்டோவா, ஜோர்ஜியா... ஐரோப்பிய ஒன்றியத்தின், உறுப்பினர் நாடுகளாக மாறுமா? உக்ரைன், மால்டோவா மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் நாடுகளாக வரவேற்க வேண்டுமா என்பதை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இந்த மாத இறுதியில் முடிவு செய்ய உள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மூன்று முன்னாள் சோவியத் குடியரசுகளை போரின் முதல் வாரங்களில் அவசரகால விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தூண்டியது. உக்ரைனின் வாய்ப்புகள் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. மேலும் மால்டோவாவுக்கும் வாய்ப்புகள் உள்ளது. ஜோர்ஜியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய கடுமையாக முயற்சிக்கின்றது. அரசியல் சீர்திருத்தங்கள் முதல் தடையற்ற வர்த்தகம் வரை அனைத்திலும் ஐரோப்பிய ஒன்றியத்…

  20. கட்டாய மரண தண்டனையை... இரத்து செய்வதாக, மலேசியா அறிவிப்பு! கட்டாய மரண தண்டனையை இரத்து செய்ய ஒப்புக்கொண்டதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில், கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயமாக உள்ளது. 2018ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த ஒரு சீர்திருத்தக் கூட்டணி மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்வதாக அறிவித்தது, ஆனால் அரசியல் போட்டியாளர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களின் எதிர்ப்பால் திட்டம் ஸ்தம்பித்தது. அப்போதிருந்து, மரண தண்டனை கட்டாயமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே அதை குறைக்க வேண்டும் என்ற நீர்த்துப்போன திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால், தற்போது கட்ட…

  21. வடகொரியா... மீண்டும் ஒரு புதிய அணுசக்தி, சோதனையை நடத்துவதை... நாங்கள் விரும்பவில்லை: சீனா! வடகொரியா மீண்டும் ஒரு புதிய அணுசக்தி சோதனையை நடத்துவதை தாங்கள் விரும்பவில்லை என சீனா தெரிவித்துள்ளது. வடகொரியா எந்த நேரமும் அணு ஆயுத சோதனையை முன்னெடுக்கலாம் என அமெரிக்க எச்சரித்திருந்த நிலையில், சீனாவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஐ.நாவுக்கான சீன தூதர் ஜோங் ஜுன் கூறுகையில், ‘வடகொரியா மீண்டும் ஒரு புதிய அணுசக்தி சோதனையை நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை. அணு ஆயுத ஒழிப்பு என்பது சீனாவின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். நாங்கள் வடகொரியாவிம் மற்றொரு சோதனையை பார்க்க விரும்பவில்லை. என்ன நடக்கும் என்று பொறுந்திருந்து பார்ப்போம். ஆனால், என்ன நடக…

  22. ஒவ்வொரு நாளும்... 100 முதல் 200 உக்ரைனிய துருப்புக்கள், கொல்லப் படுகின்றனர்! ஒவ்வொரு நாளும் 100 முதல் 200 உக்ரைனிய துருப்புக்கள் முன்வரிசையில் கொல்லப்படுவதாக, உக்ரைனிய ஜனாதிபதியின் மூத்த உதவியாளர் மைக்கேலோ போடோலியாக் தெரிவித்துள்ளார். அத்துடன், கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யாவுடன் போராட உக்ரைனுக்கு நூற்றுக்கணக்கான மேற்கத்திய பீரங்கி அமைப்புகள் தேவை என அவர் மேலும் கூறினார். ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க உக்ரைன் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘ரஷ்யப் படைகள் அணுசக்தி அல்லாத அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துகின்றன. கனரக பீரங்கி, பல ரொக்கெட் ஏவுதள அமைப்புகள் மற்றும் விமானப் போக்குவரத்து…

  23. உணவு நெருக்கடி... பல ஆண்டுகளுக்கு, நீடிக்கலாம்: உலக வர்த்தக மையம் எச்சரிக்கை! ரஷ்ய- உக்ரைன் போரில் தொடங்கிய உணவு நெருக்கடி பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என, உலக வர்த்தக மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து உலக வர்த்தக மையத்தின் தலைமை இயக்குனர் எங்கோசி ஒகொன்ஜோ-இவேலா கூறுகையில், ‘குறிப்பாக, கோதுமை மற்றும் உரங்கள் பற்றாக்குறையால் ஆபிரிக்க நாடுகள் கடுமையாக பாதிக்கப்படலாம். லட்சக்கணக்கிலான டன்கள் அளவுக்கு தானியங்கள் சேமிப்புக் கிடங்களில் கிடத்தப்பட்டுள்ளன. அவை போர் காரணமாக உக்ரைன் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தானியங்களின் விலை உயர்வது உண்மையில் வேதனைக்குரியது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கோதுமை விலை 59 சதவீதம் உ…

  24. ஜேர்மனியில்... குரங்கு அம்மை தொற்றுக்கு எதிரான, தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு... பரிந்துரை! ஜேர்மனியில் குரங்கு அம்மை தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு சுகாதார நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. எனினும், அத்தகைய தடுப்பூசிகளின் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால், குரங்கு அம்மை தொற்று அபாயம் நிறைந்தவர்களுக்கு மட்டும் அந்தத் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. பாலியல் ரீதியில் புதியவர்களுடன் நெருங்கிப் பழகுவோருக்கு அந்த நோய்த்தொற்று அபாயம் அதிகமிருப்பதாகவும், இதுவரை அந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அந்த வகையைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. ஜேர்மனியில் 130க்கும்…

  25. வடகொரியா... எப்போது வேண்டுமானாலும், அணுகுண்டு சோதனை நடத்தலாம் – அமெரிக்க அதிகாரி எச்சரிக்கை வடகொரியா எந்த நேரத்திலும் ஏழாவது அணுகுண்டு சோதனையை நடத்தலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். பியாங்யாங் ஞாயிற்றுக்கிழமை எட்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் வட கொரியாவுக்கான அமெரிக்க விசேட பிரதிநிதி சுங் கிம் இந்த எச்சரிக்கையை விடுத்தார். அத்தகைய அணு ஆயுதச் சோதனைக்கு “விரைவான மற்றும் வலிமையான பதில்” அளிக்கப்படும் என அமெரிக்க இராஜாங்க பிரதி செயலாளர் வெண்டி ஷெர்மன் தெரிவித்துள்ளார். வடகொரியா கடந்த ஐந்து ஆண்டுகளாக அணு ஆயுத சோதனையை நடத்தவில்லை என்றாலும் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.