Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரான்ஸ் கடற்கரையில்... சுகாதாரம்- கடல்வாழ் உயிரினங்களை, பிரித்தானியா அச்சுறுத்துகிறது: யூரோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்! சானல் மற்றும் வட கடலில் மூலக் கழிவுநீரைக் கொட்ட அனுமதிப்பதன் மூலம் பிரான்ஸ் கடற்கரையில் சுகாதாரம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பிரித்தானியா அச்சுறுத்துகிறது என்று மூன்று யூரோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 50 கடற்கரைகளுக்கு மாசு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கழிவுநீர் பெருக்கெடுத்து ஆறுகள் மற்றும் கடலில் கலக்கிறது. சுற்றுச்சூழல் பொறுப்புகளை பிரித்தானியா புறக்கணிப்பதாகவும், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீன்பிடித்தலை ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் பிரான்ஸ் யூரோ ந…

    • 8 replies
    • 470 views
  2. புலம் பெயர்ந்தோரின்... வருகையைக் கண்காணிக்க, பிரித்தானியா வரும்... அல்பேனிய பொலிஸார்! பிரித்தானியா மற்றும் அல்பேனிய அரசாங்கத்திற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, புலம்பெயர்ந்தோரின் வருகையைக் கண்காணிக்க அல்பேனிய பொலிஸார் குழுவொன்று பிரித்தானியா வரவுள்ளது. சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு செல்வோரை விரைவாக அகற்ற உதவுவதற்காக மூத்த சட்ட அமுலாக்க அதிகாரிகளை பிரித்தானியாவுக்கு அனுப்புவதன் மூலம் அல்பேனியா ஆதரவளிப்பதாக உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. அல்பேனிய அதிகாரிகள் அதிகாரிகளுக்கு தகவல் மற்றும் ஆதரவு செயலாக்கத்தையும் வழங்குவார்கள் என்று உட்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் கால்வாய்களை கடக்கும் புலம்ப…

  3. உலகிலேயே... முதல் முறையாக, "ஹைட்ரஜனை" எரிபொருளாகக் கொண்டு.. இயங்கும் ரயில் சேவை, ஜேர்மனியில் ஆரம்பம்! உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் இரயில்களின் சேவை ஜேர்மனியில் நேற்று (புதன்கிழமை) தொடங்கப்பட்டது. லோயர் சாக்ஸோனி மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ள 14 ஹைட்ரஜன் ரயில்கள் மூலம், 4 நகரங்களை இணைக்கும் 100 கி.மீ. இரயில் பாதையில் இந்த சேவை வழங்கப்படுகிறது. பிரெஞ்சு நிறுவனமான அல்ஸ்டோம் தயாரித்த ரயில்கள், குக்ஸ்ஹவன், ப்ரெமர்ஹேவன், ப்ரெமர்வோர்டே மற்றும் பக்ஸ்டெஹூட் ஆகிய வடக்கு நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் பிராந்திய ரயில் நிறுவனமான எல்.என்.வி.ஜி.ஆல் இயக்கப்படுகிறது. இதுவரை பயன்படுத்தப்பட்ட டீசல் இரயில்களுக்…

  4. யுக்ரேன் போர்: ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல் - 22 பேர் பலி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சேப்லைனில் நடத்தப்பட்ட தாக்குதலில் மக்கள் குடியிருந்த வீடு ஒன்றும் நாசமானது. யுக்ரேன் ரயில் நிலையம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி 6 மாதம் நிறைவடையும் நாளில் இந்த தாக்குதல் நடந்திருப்பதாகவும் யுக்ரேன் கூறியுள்ளது. யுக்ரேன் நாட்டின் கிழக்குப் பகுதியை சேர்ந்த சேப்லைன் நகரில் நடந்த இந்த தாக்குதலில், வண்டி ஒன்றில் வந்துகொண்டிருந்த 5 பேர் தீப்பிடித்து எரிந்து இறந்தனர். இந…

  5. மலேசிய அரசியல்: சிறையில் முன்னாள் பிரதமர் நஜிப்; இனி என்ன நடக்கும்? - விரிவான அலசல் சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, நஜிப் ரஸாக் மலேசிய வரலாற்றில் கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு சில வழக்குகள் மட்டுமே ஒட்டுமொத்த நாட்டையும் உற்று கவனிக்க வைத்தன எனலாம். அந்த வரிசையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் மீதான ஊழல் வழக்குகளுக்கு அந்த பட்டியலில் நிச்சயம் இடமுண்டு. முன்பொரு சமயம், மங்கோலிய பெண் அல்தான் தூயா வழக்கிலும் நஜிப்பின் பெயர் அடிபட்டது. எனினும் அந்த நெருக்கடியில் இருந்து அவர் பின்னர் தப்பித்தா…

  6. கோட்டா தாய்லாந்தில் தங்கியிருக்கும் நிலையில் தாய்லாந்து பிரதமரின் பதவியும் பறிபோனது! தாய்லாந்தின் பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவின் பதவிக்காலத்தை இடைநிறுத்த அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று (24) தீர்மானித்துள்ளது. பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவின் பதவிக்காலம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த மனு மீது அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த மனுவை விசாரித்த அரசியல் சாசன நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகள் பிரதமருக்கு எதிராக 5:4 என்ற விகிதத்தில் வாக்களித்தனர், அதன்படி பிரதமரின் பதவிக்காலம் நேற்று செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 23, 2022 உடன் முடிவடைந…

  7. சிங்கப்பூரில் ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டம் ரத்தாகிறது உலகின் பெரும்பாலான நாடுகளில் ஓரின சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டம் இன்னும் அமலில் உள்ளன. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் ஓரினச் சேர்க்கை பற்றிய புரிந்துணர்வு அறிவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் வளர்ந்து வருவதன் காரணமாக பல நாடுகள் ஓரின சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கி வருகின்றன. ஆசியாவில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் ஓரின சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் ஓரின சேர்க்கையை குற்றமாக கருதும் 337ஏ சட்டப்பிரிவை ரத்து செய்ய உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் த…

  8. "ஸபோரிஷியா" அணுமின் நிலையத்திலிருந்து... வெளியேற முடியாது: ரஷ்யா திட்டவட்டம்! தெற்கு உக்ரைனில் உள்ள ஸபோரிஷியா அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஐ.நா.அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு, ஸபோரிஷியா அணுமின் நிலைய வளாகத்தை இராணுவமற்ற பகுதியாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இதனை ரஷ்யா நிராகரித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தகவல் மற்றும் செய்திப் பிரிவு இணை இயக்குநர் இவான் நெசயெவ் கூறுகையில், ‘உக்ரைனின் ஸபோரிஷியா நகரிலுள்ள அணு மின் நிலையத்தைஇ ராணுவமற்ற பகுதியாக்க வேண்டும் என்று ஐ.நா.வும் பிற நாடுகளும் விடுக்கும் கோரிக்கை நிறைவேற்ற முடியாதது ஆகும். அவ்வாறு அந்…

  9. புடினின்.. நெருங்கிய நண்பரின் மகள், கார் குண்டு வெடிப்பில் உயிரிழப்பு! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரான அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினா கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளார். 29 வயதான தர்யா டுகினா மாஸ்கோவிற்கு வெளியே ஒரு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, குண்டு வெடிப்பில் உயிரிழந்ததாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. ‘புடினின் மூளை’ என்று அழைக்கப்படும் அவரது தந்தை ரஷ்ய தத்துவஞானி அலெக்சாண்டர் டுகின் தாக்குதலின் நோக்கமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. டுகின், ரஷ்ய ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் என நம்பப்படும் ஒரு முக்கிய அதி-தேசியவாத சித்தாந்தவாதி ஆவார். அலெக்சாண்டர் டுகினும் அவரது மக…

    • 65 replies
    • 3.1k views
  10. ஜுலு ராஜ்ஜியம்: நாடும், அதிகாரமும் இல்லாத இந்த மன்னர் பதவிக்கு ஏன் இத்தனை சண்டை, இவ்வளவு பெருமை? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஜுலு ராஜ்ஜியத்தின் புதிய மன்னர் மிசுசுலு கா ஸ்வெலிதினி ஓராண்டு நீடித்த குடும்ப சண்டைக்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவில் நடந்த பாரம்பரிய விழாவில் மிசுசுலு கா ஸ்வெலிதினி ஜுலு மன்னராக முடிசூட்டப்பட்டார். ஜுலு என்பது தென்னாப்பிரிக்காவின் ஒரு பழங்குடி இனம். அதற்கென தனி நாடோ, எல்லையோ இப்போது இல்லை. 48 வயதான புதிய மன்னர், முந்தைய மன்னரின் மகன். ஆனால் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர், அவர் முறையான வாரிசு இல்லை என்றும் மறைந்த மன்னரின்…

  11. "சபோரிஜியா" அணுமின் நிலையத்தை... ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய, ரஷ்யா இணக்கம். சபோரிஜியா அணுசக்தி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய ஐ.நா அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். விளாடிமிர் புடினுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலின் பின்னர் கிரெம்ளின் இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஜபோரிஜியா அணுசக்தி வளாகம் மார்ச் தொடக்கத்தில் இருந்து ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளபோதும் உக்ரேனிய தொழில்நுட்ப நிபுணர்களே இயக்குவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் அறிக்கையை வரவேற்றுள்ள, ஐ.நா.அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர், ஆலைக…

  12. மது விருந்தில் டான்ஸ்: சர்ச்சையில் பின்லாந்து பிரதமர்! Aug 19, 2022 13:59PM IST பின்லாந்து நாடு கல்விக்காகவும் அங்குள்ள கல்விமுறைக்காகவும் பெரிதும் பேசப்படும் நாடு. இங்குள்ள கல்வி திட்டங்கள் பல நாடுகளுக்கு முன் மாதிரியாக இருக்கிறது. பின்லாந்தின் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சி சார்பில் பிரதமராக, சன்னா மரீன் பதவி வகித்து வருகிறார். உலகிலேயே மிகக் குறைந்த வயதில் பிரதமர் பதவிக்கு வந்த பெருமை இவருக்கு உண்டு. 2019ஆம் ஆண்டு பின்லாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றார். பதிவியேற்றதிலிருந்தே பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகிவருகிறார். அப்படித்தான் இப்போது அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு சன்னா மரீன் ஆட்டம் போடும் வீடி…

  13. "விருந்து காணொளி" வைரல்: போதைப் பொருள் பரிசோதனையை... மேற்கொண்டார் ஃபின்லாந்து பிரதமர்! இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஃபின்லாந்து பிரதமராக இருந்துவரும் சன்னா மரின், விருந்தொன்றில் கலந்துக்கொண்ட காணொளியொன்று வெளியானதைத் தொடர்ந்து, போதைப் பொருள் பரிசோதனையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். வெளிப்படையான காதலுக்காக அடிக்கடி விமர்சனங்களுக்கு இலக்காகி வரும், சன்னா மரின், ஒரு விருந்தில் பாடுவது, நடனம் செய்வது மற்றும் குடிப்பது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதனைத்தொடர்ந்து, 36 வயதான சன்னா மரின், சில அரசியல்வாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர்கள், சன்னா மரின் போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரினர். இதற…

  14. ரஷ்யாவில்... 10 குழந்தைகள், பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு... ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன், பெரும் தொகை பரிசு! ரஷ்யாவில்... 10 குழந்தை அல்லது அதற்கு அதிகமான, குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு... ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் பெரும் தொகை பரிசாக வழங்கப்படும் என்று ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புடின் வெளியிட்டுள்ள ஆணையில், ‘ரஷ்யாவில் 10 குழந்தை அல்லது அதற்கு அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் 1 மில்லியன் ரூபிள் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இந்த விருதை 10 அல்லது மேற்பட்ட குழந்தையை பெற்ற ரஷ்ய குடிமகள் மட்டுமே பெறமுடியும். தகுதி பெற்ற பெண்களுக்கு அவர்களின் 10ஆவது குழந்த…

    • 38 replies
    • 1.3k views
  15. ரஷ்யாவுடன்... கிரீமியா தீபகற்பத்தை, இணைக்கும் பாலம்... தகர்க்கப்பட வேண்டும்: உக்ரைனின் கருத்தால் பரபரப்பு! ரஷ்யாவுடன் கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் பாலம் தகர்க்கப்பட வேண்டும் என உக்ரைன் கூறியுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைய தினங்களாக ஆக்கிரமிப்பு கிரீமியாவில் தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில், உக்ரைனின் இந்த கருத்து ரஷ்யாவை மேலும் கோபமடைய வைத்துள்ளது. கிரீமியா தீபகற்பத்தை தங்களது பகுதியுடன் இணைத்து ரஷ்யா கட்டியுள்ள பாலம் சட்டத்துக்கு விரோதமானது என்பதால் அந்த பாலம் தகர்க்கப்பட வேண்டியது அவசியம் என உக்ரைனின் ஜனாதிபதியின் ஆலோசகர் மிகய்லோ பொடோலியக் தெரிவித்துள்ளார். அத்துடன், ரஷ்யா தாமாக முன்வந்து அ…

    • 26 replies
    • 1k views
  16. ஆப்கானிஸ்தானில்... பிரபல மசூதியில், குண்டுவெடிப்பு: 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு- 40பேர் காயம்! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பிரபல மசூதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மேலும் 40பேர் காயமடைந்தனர். காபூலின் கைர்கானா பகுதியில் அமைந்துள்ள ஒரு மசூதியில் நேற்று (புதன்கிழமை) மாலை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது பயங்கர சத்தத்துடன் இந்த குண்டுவெடித்துள்ளது. மேலும் அவசரகால தன்னார்வ தொண்டு நிறுவனம், நகரின் ஒரு மருத்துவமனையில் மட்டும், 5 குழந்தைகள் உட்பட 27 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில்,…

  17. எஸ்ரா மில்லர்: மனநல சிகிச்சையை நாடுவதாக வெளிப்படையாக அறிவித்த சூப்பர் ஹீரோ - தயக்கம் உடைகிறதா? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எஸ்ரா மில்லர் ஹாலிவுட்டில் டி.சி காமிக் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் எஸ்ரா மில்லர் தனக்கு ஏற்பட்டுள்ள "சிக்கலான மனநல பிரச்னைகளுக்காக" சிகிச்சையை நாடியுள்ளதாக அறிவித்துள்ளார் என்கிறன ஊடகச் செய்திகள். தன்னுடைய சமீபத்திய நடவடிக்கைகளால் "வருத்தம்" அடைந்தவர்களிடம் தான் மன்னிப்பு கோருவதாக, பால்புதுமையரான எஸ்ரா மில்லர் தெரிவித்துள்ளார். 29 வயதான எஸ்ரா மில்லர் மீது, சமீபத்தில் அமெரிக்காவின் வெர்மாண்…

  18. தாய்லாந்தில்... 17 இடங்களில், குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள். தெற்கு தாய்லாந்தில் இன்று 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பல்பொருள் அங்காடிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை குறிவைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களினால் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1295076

    • 9 replies
    • 997 views
  19. அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின்... தாய்வானுக்கான, விஜயத்தின் எதிரொலி: சீனா மீண்டும் போர்ப் பயிற்சி! அமெரிக்காவின் நாடாளுமன்றக் குழு தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டதற்கு எதிர்வினையாற்றும் வகையில், சீனா இராணுவம் மீண்டும் தாய்வான் தீவைச் சுற்றிலும் போர்ப் பயிற்சியை தொடங்கியுள்ளது. தாய்வான் தீவைச் சுற்றிலும் போரில் ஈடுபடுவதற்கான தங்களது பல்வேறு படைகளின் தயார் நிலையை உறுதி செய்துகொள்வதற்காக இந்தப் போர்ப் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக சீன இராணுவத்தின் கிழக்கு மண்டல படைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் ஷீ யீ தெரிவித்தார். மேலும், தாய்வான் பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் குலைப்பதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இத…

  20. அமெரிக்காவை ஏமாற்றி தாலிபன்களிடம் ஹெலிகாப்டரை ஒப்படைத்த ஆப்கன் பைலட் இனாயதுல்லா யாசினி மற்றும் சுவாமிநாதன் நடராஜன் பிபிசி உலக சேவை 15 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,MOHAMMAD EDRIS MOMAND "சிலர் என்னுடன் மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்கலாம். கருத்துக்கள் வேறுபடலாம். ஆனால் நான் அவர்களுக்கு இதை சொல்லிக் கொள்கிறேன். நாடு ஒரு தாயைப் போன்றது. அதற்கு யாரும் துரோகம் செய்யக்கூடாது," என்கிறார் முகமது எட்ரிஸ் மொமண்ட். அமெரிக்காவில் விரிவான பயிற்சி பெற்ற ஆப்கானிய ராணுவ விமானிகளில் மொமண்ட் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தாலிபன்கள் அந்த நாட்டைக் கைப்பற்றியபோது, அவர் தனது அமெரிக்க க…

  21. வட கொரியாவுடன்... விரிவான, ஆக்கபூர்வமான... இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதாக, ரஷ்யா உறுதி! வட கொரியாவுடன் விரிவான மற்றும் ஆக்கபூர்வமான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதாக ரஷ்யா உறுதியளித்துள்ளது வடகொரியாவின் விடுதலை தினத்தன்று தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு அனுப்பிய கடிதத்தில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த நடவடிக்கை இரு நாடுகளின் நலன்களுக்காக இருக்கும் என்று கூறினார். இதையொட்டி, இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை வென்றதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாக கிம் கூறினார். அவர்களின் ‘தோழமை நட்பு’ மேலும் வலுவடையும் என்று அவர் கூறினார். வட கொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ.இன் அறிக்கையின்படி, விரிவாக்கப்பட்ட இருதரப்பு உறவுக…

    • 2 replies
    • 275 views
  22. ஆங் சான் சூகிக்கு மேலும் 6 வருட சிறைத்தண்டனை Digital News Team 2022-08-15T18:03:42 மியான்மாரில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட தலைவி ஆங் சான் சூகி திங்கள்கிழமை (15) இராணுவ நீதிமன்றத்தால் மேலும் 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே கிடைத்த 11 ஆண்டுகள் கூடுதலாக மேலும் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.நோபல் பரிசு பெற்ற 77 வயதான ஆங் சான் சூகி, அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். அவரது தண்டனைக்கு எதிராக சூகி மேன்முறையீட செய்வார் என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.விசாரணை மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெற்றது. ஊடகங்களுக்கோ பொதுமக்களுக்கோ உள்நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. சூகியின் சட்டத்தரணிகளிற்கும் தகவல்களை வெளியி…

  23. அமெரிக்காவின், 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு.. மீண்டும் தாய்வானுக்கு பயணம்! அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழவை) தலைவர் நான்சி பெலோசி தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டு 12 நாட்களே ஆன நிலையில், அமெரிக்க மேலவை உறுப்பினரான ஜனநாயக கட்சியின் எட் மார்கே தலைமையில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும் தாய்வானுக்கு சென்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தைபே விமான நிலையத்தில் அமெரிக்க அரசாங்கா விமானம் வந்திறங்கிய காட்சிகளை தாய்வான் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, 2 நாட்ள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இதன்போது, இருதரப்பு உறவுகள், பிராந்திய பாதுகாப்பு…

    • 10 replies
    • 600 views
  24. அணுமின் நிலையத்தில் உள்ள... ரஷ்ய வீரர்களுக்கு, எச்சரிக்கை விடுகின்றார்... உக்ரைன் ஜனாதிபதி ! முற்றுகையிடப்பட்டுள்ள சபோரிஜியா அணுமின் நிலையத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தும் ரஷ்யப் படையினர் பாதுகாப்புப் படையினரால் குறிவைக்கப்படுவார்கள் என உக்ரைன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார். மார்ச் மாதம் நடந்த கடும் சண்டைக்குப் பின்னர் ரஷ்யா குறித்த ஆலையை இராணுவ தளமாக மாற்றி, அதை அணு ஆயுத அச்சுறுத்தலாக பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சபோரிஜியா, தெற்கு உக்ரேனிய நகரமான நிகோபோலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இந்த தளம் ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்தாலும், உக்ரேனிய தொழில்…

    • 24 replies
    • 1k views
  25. சல்மான் ருஷ்டி யார்? முகமது நபியை அவமதித்ததாக முஸ்லிம்களின் வெறுப்புக்கு ஆளானது ஏன்? 13 ஆகஸ்ட் 2022, 02:27 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, 1993-இல் சல்மான் ருஷ்டி பிரிட்டனின் கிங் கல்லூரி தேவாலயத்துக்கு முன்பு எடுத்த படம் நியூயார்க்கில் கத்தியால் குத்தப்பட்ட சர் சல்மான் ருஷ்டிக்கு கடந்த அரை நூற்றாண்டாகவே தனது இலக்கியப் பணியின் காரணமாக கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன. பிரிட்டிஷ் நாவலாசிரியரான சல்மான் ருஷ்டியின் பல புத்தகங்கள் இலக்கிய உலகில் பிரபலமானவை. அவரது இரண்டாவது நாவலான 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' 1981ஆம் ஆண்டில் புக்கர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.