உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27007 topics in this forum
-
இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கு: பங்கேற்க அழைக்கப்படாத நாடுகள் எவை தெரியுமா? இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சில நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. பிரிட்டனின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த இங்கிலாந்தின் முன்னாள் அரசத் தலைவரும், கொமன்வெல்த் நாடுகளின் தலைவருமான இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96வது வயதில் செப்டம்பர் 8 ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் உள்ள பல்மோரல் கோட்டையின் கோடைகால இல்லத்தில் காலமானார். அவரது உடல் செப்டம்பர் 19ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அடக்கம் செய்யப…
-
- 7 replies
- 942 views
-
-
தாய்வானில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது, இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த நிலநடுக்கம் மதியம் 2:44 மணிக்கு (06:44 GMT) டைடுங் நகருக்கு வடக்கே 50 கிமீ (30 மைல்) தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடம் மற்றும் ஒரு கடை இடிந்து விழுந்தது . மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக உள்ளூர் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. கிழக்கு தாய்வானில் உள்ள டோங்லி ரயில் நிலையத்தின் ஒரு பகுதி இடி…
-
- 0 replies
- 213 views
-
-
போர் தொடுப்பதற்கான காலம் அல்ல இது’ - அதிபர் புதினிடம் கூறிய பிரதமர் மோடிக்கு அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டு By Rajeeban 18 Sep, 2022 | 11:29 AM போர் தொடுப்பதற்கான காலம் அல்ல இது ’ என ரஷ்ய அதிபர் புதினிடம் நேரடியாக தனது கருத்தை நாசுக்காக தெரிவித்த பிரதமர் மோடியை அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகருக்கு சென்றிருந்தார். இதில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, கரோனா தொற்று காலத்துக்குப்பின், உல…
-
- 1 reply
- 224 views
-
-
வறுமையில் வாடும் வடகொரியா By DIGITAL DESK 5 16 SEP, 2022 | 01:58 PM ஐங்கரன் விக்கினேஸ்வரா “அமெரிக்காவுக்கு எதிராக அணுவாயுத தாக்குதலை நடத்த வடகொரியா முழுஅளவில் தயாராக இருக்கிறது” என்று அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜொங் உன் தலைநகர் பியோங்யாங்கில் அதிரடியாக கூறினார். கொரிய போரின் 69ஆவது ஆண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கூற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். “போர் நடைபெற்று 70ஆண்டுகளுக்கு பின்னரும் தென்கொரியாவுடன் இணைந்து வடகொரியாவுக்கு எதிராக ஆபத்து நிறைந்த, சட்டவிரோத பகைமை விளைவிக்கும் செயல்களில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா தனது செயல்களுக்கு ஆதரவு சேர்க்கும் வகைய…
-
- 0 replies
- 370 views
- 1 follower
-
-
உக்ரைனுக்கு மேலும் 600 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத உதவி -அமெரிக்கா அறிவிப்பு -சி.எல்.சிசில்- உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாத இறுதியில் இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய போர் 6 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்படைந்துள்ள உக்ரைனுக்கு இராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 600 மில்லியன் டொலர் இராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனிய இராணுவத்துக்கு உதவுவதற்கான இந்த நடவடிக்கை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ரொக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுத…
-
- 14 replies
- 528 views
- 1 follower
-
-
உக்ரைன் போரில்... இரசாயன- தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது: ரஷ்யாவுக்கு, பைடன் எச்சரிக்கை! உக்ரைன் போரில் இரசாயன அல்லது தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சிபிஎஸ் நியூஸ் உடனான நேர்காணலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே பைடன் இதனைத் தெரிவித்தார். இதன்போது, ஜனாதிபதி பைடனிடம், உக்ரைனில் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டால், ஜனாதிபதி புடினிடம் என்ன சொல்வீர்கள் என்று கேட்கப்பட்டது. ‘வேண்டாம், வேண்டாம், வேண்டாம்,’ என்பது ஜனாதிபதி பைடனின் பதில். அப்படியொரு கோட்டைத் தாண்டினால் புடினுக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்று பைடனிடம்…
-
- 1 reply
- 267 views
-
-
எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு – உலகத் தலைவர்கள் உட்பட 2,000க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் லண்டன் வருகை! http://www.samakalam.com/wp-content/uploads/2022/09/download-9.jpg ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வருகின்றனர். இரவிலும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் ராணியின் மீதுள்ள அன்பை வெளிக்காட்ட அஞ்சலி செ…
-
- 0 replies
- 224 views
-
-
உக்ரைனின்... சமீபத்திய எதிர்த்தாக்குதல், ரஷ்யாவின் திட்டங்களை... மாற்றாது: புடின் கேலி! உக்ரைனின் சமீபத்திய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவின் திட்டங்களை மாற்றாது என்று விளாடிமிர் புடின் தனது முதல் பொதுக் கருத்தை கூறியுள்ளார். ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, வடகிழக்கு கார்கிவ் பகுதியில் ஆறு நாட்களில் 8,000 சதுர கிமீ (3,088 சதுர மைல்கள்)க்கு மேல் கைப்பற்றியதாக உக்ரைனியப் படைகள் கூறுகின்றன. ஆனால், தான் அவசரப்படவில்லை என்றும், உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதாகவும் புடின் கூறினார். ரஷ்யா இதுவரை தனது முழுப் படைகளையும் அனுப்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ‘டான்பாஸில் எங்கள் தாக்குதல் நடவடிக்கை நிற்கவில்லை. அ…
-
- 0 replies
- 269 views
-
-
உலகின் மிக உயரமான 14 சிகரங்களை இரு தடவைகள் அடைந்து சாதனை படைத்த நபர் By VISHNU 15 SEP, 2022 | 04:26 PM நேபாளத்தைச் சேர்ந்த மலையேற்ற வழிகாட்டி ஒருவர், உலகிலுள்ள 8,000 மீற்றர்களுக்கு அதிக உயரமான சிகரங்கள் அனைவற்றினதும் உச்சிகளை இரு தடவைகள் அடைந்த சாதனையை படைத்துள்ளார். 8,000 மீற்றர்களுக்கு அதிக உயரமான 14 சிகரங்கள் உள்ளன. இச்சிகரங்கள் அனைத்தினதும் உச்சிகளை அடைந்தவர்களின் எண்ணிக்கை 50 இற்கும் குறைவாகும். இவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த சானு ஷேர்பா, இச்சிகரங்களில் இரு தடவைகள் ஏறிய உலகின் முதல் மனிதராக விளங்குகிறார். பாகிஸ்தானிலுள்ள காஷ…
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
கௌதம் அதானி உலகின் இரண்டாவது பணக்காரரானார் - இந்தியாவின் மிகப் பெரிய துறைமுக முதலாளி 11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலகிலேயே இரண்டாவது பெரிய பணக்காரராக கௌதம் அதானி மாறியுள்ளதாக ஃபோர்பஸ் பத்திரிகை தெரிவிக்கிறது. அமேசானின் ஜெஃப் பெசோஸ், எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் ஆகிய உலக பணக்காரர்களை பின்னுக்கு தள்ளி கௌதம் அதானி இரண்டாவது இடம் பெற்றிருக்கிறார். உலக பணக்காரர்களின் பட்டியலில் 273.5 பில்லியன் டாலர் மதிப்புடன் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். கடந்த மாதம் அர்னால்ட்-யை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடம் பெற்றிருந்த கௌதம் அதானி, ஜெஃப் பசோஸ்-க்கு அடுத்…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
பிரிட்டிஸ் மகாராணியின் மரணம் அவரது பேரப்பிள்ளைகளை ஐக்கியப்படுத்துமா? By RAJEEBAN 15 SEP, 2022 | 12:27 PM இரண்டாவது எலிசபெத் மகாராணிக்கு இறுதிவிடையளிப்பதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் லண்டனில் கூடியுள்ள நிலையில் இந்த துயரமான தருணம் அரசகுடும்பத்தை மீண்டும் ஒன்று சேர்த்துள்ளது. எனினும் மகாராணியின் மரணம் அரச குடும்பத்திற்குள் காணப்பட்ட பிளவுகளிற்கு முடிவு காணுமா என்பதை உறுதியாக தெரிவிக்க முடியவில்லை என வனிட்டி பெயரின் செய்தியாளர் கட்டி நிக்கலொஸ் தெரிவித்துள்ளார். அனைத்து கருத்துவேறுபாடுகளிற்கும் தீர்வு காணப்படும் எல்லாம் சரியாகிவிடும் என்பதை நான் உங்களிற்கு தெரிவிக்க விரும்புகின்றேன் என கட்டி நிக்கலொஸ் தெரிவித்த…
-
- 5 replies
- 414 views
- 1 follower
-
-
பூமியில் உயிர்களைப் பாதுகாக்கும் உலகளாவிய ஒத்துழைப்பு “சர்வதேச ஓசோன் தினமான இன்றாகும்” By VISHNU 16 SEP, 2022 | 10:23 AM சூரிய ஒளிப்பிளம்பின் ஒரு பகுதியான புறஊதாக் கதிர்வீச்சைத் தடுத்து நிறுத்தி புவியைக்காத்து வரும் வளையமே ஓசோன் (ozone) படலமாகும். அதாவது பூமியை போர்த்தி இருக்கும் ஒரு மெல்லிய வாயுப்படலம் எனலாம். கடல் மட்டத்தில் இருந்து 20கிலோமீற்றர் தொடக்கம் 50கிலோமீற்றர் வரை உள்ள பகுதியில் தான் ஓசோன் உள்ளது. ஓசோன் என்பது மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்திருக்கும் மூலக்கூறாகும். இது வளிமண்டலத்தின் மேல், வாயுநிலையில் காணப்படுகின்றது. இதுஈரணு ஒட்சிசன் மூலக்கூறு போல் நிலையான தன்மை இல்லாதது. இலகுவாக சிதைந்துவிடும் தன்மை கொண்டது. 184…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
உக்ரைனுக்கு... அமெரிக்கா, 600 மில்லியன் டொலர்கள்... இராணுவ ஆயுத உதவி! ரஷ்யாவுக்கு எதிராக போரிட, உக்ரைனுக்கு 600 மில்லியன் டொலர்கள் இராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜனாதிபதி வரைவு ஆணையத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உதவியை அங்கீகரித்தார். இது அமெரிக்க பங்குகளில் இருந்து அதிகப்படியான ஆயுதங்களை மாற்றுவதற்கு ஜனாதிபதியை அனுமதிக்கும். இந்த தொகுப்பில் ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ரொக்கெட் சிஸ்டம்ஸ் (ஹிமார்ஸ்), நைட் விஷன் கண்ணாடிகள், கிளேமோர் கண்ணிவெடிகள், கண்ணிவெடிகளை அகற்றும் கருவிகள், 105மிமீ பீரங்கிச் சுற்றுகள் மற்றும் 155மிமீ துல்லியமான வழிகாட்டப்பட்ட பீரங்கிச் சுற்றுகள் ஆகியவை அடங்கும் என்று பெ…
-
- 0 replies
- 161 views
-
-
சுவீடன் பிரதமர்... மாக்டலேனா ஆண்டர்சன், பதவி விலகப் போவதாக அறிவிப்பு! கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் தனது அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, தான் பதவி விலகப் போவதாக சுவீடன் பிரதமர் தெரிவித்துள்ளார். 55 வயதான மாக்டலேனா ஆண்டர்சன் இன்று (வியாழக்கிழமை) அதிகாரப்பூர்வமாக இராஜினாமா செய்வதாக கூறினார். மிதவாதக் கட்சியின் தலைவர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் இப்போது அரசாங்கத்தை அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்கள், அவரது கட்சியான மிதவாதிகள், சுவீடன் ஜனநாயகக் கட்சியினர், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர் மற்றும் லிபரல் கட்சிகளுடன் இணைந்து 349 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 176 இடங்களைப் பிடிக்கு…
-
- 0 replies
- 233 views
-
-
சிறு காயங்களுடன்... உயிர் தப்பினார், உக்ரைன் ஜனாதிபதி! உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமீர் ஸெலென்ஸ்கி கார் விபத்தில் சிக்கி, சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து அண்மையில் மீட்கப்பட்ட பகுதிகளுக்கு ஸெலென்ஸ்கி திடீர் பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தின் ஒரு பகுதியான இஸியம் நகருக்கு அவர் சென்றார். போரால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அந்த நகரின் எரிந்துபோன நகராட்சி தலைமையகம் எதிரே உக்ரைன் கொடி ஏற்றி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. போர்க்களப் பயணத்திற்குப் பிறகு ஸெலென்ஸ்கியின் கார் வியாழக்கிழமை அதிகாலை மற்றொரு வாகனத்துடன் மோதியது, இதில் அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக…
-
- 2 replies
- 445 views
-
-
வெளிநாட்டில் தலையிட... ரஷ்யா, இரகசியமாக... $300 மில்லியன் செலவிட்டது – அமெரிக்கா. 24 க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியல் மீது செல்வாக்கு செலுத்த ரஷ்யா 2014 ஆம் ஆண்டு முதல் 30 மில்லியன் டொலருக்கு மேல் இரகசியமாக செலவிட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. செவ்வாயன்று வெளியிடப்பட்ட அமெரிக்க உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. வெளிநாட்டில் அமெரிக்கா தலையிடுவதாக மொஸ்கோ பலமுறை குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து ரஷ்யா பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. இதேவேளை கண்டறியப்படாத வழக்குகளில் ரஷ்யா மேலதிக நிதிகளை இரகசியமாக மாற்றியிருக்கலாம் என்றும் அமெரிக்க…
-
- 1 reply
- 464 views
-
-
ஷாங்காய் மாநாட்டில் இந்தியாவும் சீனாவும் பேசிக்கொள்ளப் போவது என்ன? ஜூபைர் அகமது பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதின் - மோதி - ஷி ஜின்பிங் செப்டம்பர் 15-16 தேதிகளில் உஸ்பெகிஸ்தானின் வரலாற்று சிறப்புவாய்ந்த நகரமான சமர்கண்டில் நடைபெறும் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், இந்திய சீன எல்லை மோதல்களுக்குப் பிறகு, முதல்முறையாக சந்திக்க உள்ளனர். 2020இல் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் நேரிட்ட மோதல்களுக்கு பிறகு இரு நாடுகளின் தலைவர்களும் மற்ற தலைவர்களுடன் ஒரே மேடையில் அமரப்போகி…
-
- 1 reply
- 256 views
- 1 follower
-
-
தாய்வான், நடவடிக்கையைத் தடுக்க... சீனாவிற்கு, பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து... அமெரிக்கா பரிசீலனை. தாய்வான் மீதான படையெடுப்பதைத் தடுக்க சீனாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அறிவிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. தாய்வான் கடற்பரப்பில் இராணுவ பதட்டங்கள் அதிகரித்து வருவதால், சீனப் படையெடுப்பு குறித்த அச்சங்களுக்கு மத்தியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. தொலைத்தொடர்பு சாதனங்கள் போன்ற முக்கியமான தொழில்நுட்ப கருவிகள் மீதான முன்னர் இருந்த தடைகளுக்கு மேலதிகமாக இந்த தடையை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகின்றது. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை விட சீனாவின் மீது தடைகள் விதிக்கப்படுவது மிகவும் சிக்கலான நடவடிக்கை என அமெரிக்க…
-
- 3 replies
- 247 views
-
-
மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கிற்கு... ரஷ்யா, மியன்மார் மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு... அழைப்பு விடுக்கப் படவில்லை. இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கிற்கு ரஷ்யா, மியன்மார் மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில், உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலாரசுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ரோஹிங்கியா முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ததற்காக இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. https://athavannews.com/2022/1299023
-
- 6 replies
- 307 views
-
-
திருடுபோன ரூ.8 கோடி மதிப்பிலான நாணயத்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேல் மீட்டது எப்படி? ரஃபி பெர்க் பிபிசி நியூஸ் 13 செப்டெம்பர் 2022 பட மூலாதாரம்,MIRI BAR, ISRAEL ANTIQUITIES AUTHORITY தொலைந்து போன 10 லட்சம் டாலர் மதிப்புள்ள பண்டைய கால நாணயத்தை கண்டுபிடிப்பதற்கான பணி பல நாடுகளைக் கடந்து இறுதி கட்டத்தை அடைய 20 ஆண்டுகள் பிடித்திருக்கிறது. "வரலாற்றின் அரிய வகைப் பொருள் கடைசியாக அதன் தாய்நாட்டுக்குச் செல்கிறது," என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் இதற்கான விழாவில் முத்தாய்ப்பாக தெரிவித்துள்ளார். 2000 ஆண்டுகளுக்கு முன்பு யூத கிளர்ச்சியின்போது தயாரிக்கப்பட்ட உயர்ந்த…
-
- 1 reply
- 287 views
- 1 follower
-
-
வயோதிபரை தாக்கிக் கொன்ற செல்லப்பிராணியான கங்காரு By T. SARANYA 13 SEP, 2022 | 09:37 PM அவுஸ்திரேலியாவில் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த கங்காரு, முதியவர் ஒருவரை தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய நாட்டின் தெற்கு பெர்த் நகரின் ரெட்மவுண்ட் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் எடஸ் (வயது 77). இவர் தனது வீட்டில் 3 வயது நிரம்பிய கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், பீட்டரை அவர் வளர்த்து வந்த கங்காரு நேற்று கடுமையாக தாக்கியுள்ளது. கால்களால் அவரை கடுமையாக அடித்துள்ளது. இதில், படுகாயமடைந்த பீட்டர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தார். அப்போது, பீட்டரின்…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
டுபாயில் புதிய ஹிந்து கோயில்: அலைமோதும் பக்தா்கள் கூட்டம் டுபாயில் திறக்கப்பட்டிருக்கும் புதிய ஹிந்து கோயிலைக் காண பக்தா்கள் கூட்டம் அலைமோதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டுபாயில் ஜெபெல் அலி பகுதியில் அமைந்திருக்கும் குருநானக் தா்பாா் என்ற சீக்கிய கோயிலுக்கு அருகே இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் 16 தெய்வங்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையான சிலைகள் கோயிலின் பிரதான கருவறையிலேயே வைக்கப்பட்டுள்ளன. கருவறையின் மேற்பகுதி மாடம் விரிந்த நிலையிலான இளஞ்சிவப்பு நிறத்தில் முப்பரிமாண வடிவிலான தாமரைப் பூ வரையப்பட்டுள்ளது. இந்தக் கோயில், அதிகாரபூா்வமாக தசரா தினமான அக்டோபா் 5-…
-
- 0 replies
- 356 views
-
-
ரஷ்யப் படைகள் பின்வாங்கின: முக்கிய நகரங்களை மீட்ட யுக்ரேன் ஹ்யூகோ பச்சேகா (கீயவ் நகரில் இருந்து) & மேட் மர்ஃபி (லண்டனில் இருந்து) பிபிசி நியூஸ் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் மீட்டெடுத்த ஒரு பகுயில் அந்நாட்டுப் படை வீரர். யுக்ரேனின் அதிவேக பதில் தாக்குதல்களுக்கு மேலும் பலன் கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள சில முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கின. இது குறித்துக் கூறிய யுக்ரேன் அதிகாரிகள், குபியான்ஸ்க் நகருக்குள் தங்கள் படையினர் சனிக்கிழமை நுழைந்…
-
- 30 replies
- 1.5k views
-
-
1986-ல் எலிசபெத் ராணி எழுதிய கடிதம்: 2085-ல் திறக்கப்படுவதற்கான சுவாரஸ்யப் பின்னணி ராணி இரண்டாம் எலிசபெத் சிட்னி: ராணி எலிசபெத்தால் சிட்னி நகர மக்களுக்காக எழுத்தப்பட்ட கடிதம் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதாக ஆஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனை ஆளும் பொறுப்பை ஏற்றிருந்த இரண்டாம் எலிசபெத் ராணி, கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். அன்னைக்கு அஞ்சலி செலுத்திவிட்டுப் புதிய மன்னராகப் பொறுப்பேற்றிருக்கிறார் 73 வயது நிரம்பிய மூன்றாம் சார்லஸ். இந்த நிலையில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. ராணி எ…
-
- 3 replies
- 462 views
-
-
வட கொரியாவுடன்... விரிவான, ஆக்கபூர்வமான... இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதாக, ரஷ்யா உறுதி! வட கொரியாவுடன் விரிவான மற்றும் ஆக்கபூர்வமான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதாக ரஷ்யா உறுதியளித்துள்ளது வடகொரியாவின் விடுதலை தினத்தன்று தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு அனுப்பிய கடிதத்தில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த நடவடிக்கை இரு நாடுகளின் நலன்களுக்காக இருக்கும் என்று கூறினார். இதையொட்டி, இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை வென்றதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாக கிம் கூறினார். அவர்களின் ‘தோழமை நட்பு’ மேலும் வலுவடையும் என்று அவர் கூறினார். வட கொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ.இன் அறிக்கையின்படி, விரிவாக்கப்பட்ட இருதரப்பு உறவுக…
-
- 2 replies
- 278 views
-