Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உக்ரைனுக்கு எதிரான போரில்... ரஷ்யா 25வீத படைகளை, இழந்துள்ளது -அமெரிக்கா தகவல் உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யாவின் நிலை குறித்து அமெரிக்கா சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா 25வீத படைகளை இழந்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பலம் குறைந்து வருகிறதென்றும் இந்த சமயத்தில் உக்ரைனுக்கு தேவையான இராணுவ உதவிகளை அனுப்பிவைப்போம் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது. அதேசமயம் உக்ரைனின் மரியுபோல் நகரத்தை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா, இன்றைக்குள் உக்ரைன் படைகள் சரணடையாவிட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277646

  2. ரஷ்யா மீதான... அடுத்தக்கட்ட பொருளாதார தடைகள், பலப்படுத்தப்படும்: பிரான்ஸ்! உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்யா மீது அடுத்தக்கட்ட பொருளாதார தடைகள் பலப்படுத்தப்படும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான புதிய தடைகளை விதிப்பது பற்றி அமெரிக்கா மற்றும் முக்கியமான ஐரோப்பிய நாடுகள் இடையே விவாதிக்கப்பட்டதாகவும் எதிர்வரும் நாட்களில் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் பலப்படுத்தப்படும் எனவும் பிரான்ஸ் வெளியுறவுத்துறை செயலாளர் கிளமெண்ட் பியுன் தெரிவித்துள்ளார். மேல…

  3. அசாஞ்சேவை... அமெரிக்காவிற்கு நாடு கடத்த, பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரித்தானிய நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் தொடர்பான இரகசிய ஆவணங்களை வெளியிட்டமை தொடர்பாக அசாஞ்சே விசாரணையை எதிர்கொண்டுள்ளார். இந்த குற்றத்திற்காக அமெரிக்காவில் அவருக்கு 175 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் அவரை நாடுகடுத்தும் முடிவை எடுக்க பிரித்தானிய உள்துறை அமைச்சின் செயலாளர் பிரித்தி படேலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தி படேல் அதற்கு அனுமதி வழங்கினால் உயர் நீதிமன்றத்தில் மேல…

  4. ஷங்காயில்... நடைமுறையில் உள்ள, கொவிட் முடக்கநிலை கட்டுப்பாடுகளில் தளர்வு! அதிகரித்து வரும் இறப்புகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான புதிய தொற்றுகள் இருந்தபோதிலும் ஷங்காய், அதன் கொவிட் முடக்கநிலை கட்டுப்பாடுகளை மேலும் எளிதாக்கியுள்ளது. மூடல்கள் மற்றும் உணவுப் பற்றாக்குறையால் வணிகங்களும் குடியிருப்பாளர்களும் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் நாட்டின் மிக மோசமான வைரஸ் தொற்றுப் பரவரை எதிர்கொண்ட ஷங்காய், கடந்த மாதம் முதல் அதன் 25 மில்லியன் மக்களை தங்கள் வீடுகளுக்குள் முடக்கி வைத்துள்ளது. ஆனால் வேகமாக பரவும் ஓமிக்ரோன் மாறுபாட்டால் இயக்கப்படும் எழுச்சி, ஒரு தொற்றுநோயைத் தடுப்பதற்கான …

  5. குரான் எரிப்பு விவகாரம்: சுவீடனில், நான்காவது நாளாக... தொடரும் மோதல்கள்! தீவிர வலதுசாரி, புலம்பெயர்ந்த எதிர்ப்புக் குழுவினால் வெளிப்படையாக குரான் எரிக்கப்பட்டதால் தூண்டப்பட்ட மோதல்கள், பல சுவீடன் நகரங்களில் நான்காவது நாளாக மோதல்களுக்கு வழிவகுத்துள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிழக்கு நகரமான நோர்கோபிங்கில் கலவரக்காரர்கள் மீது பொலிஸார் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த மோதலின் போது, பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது மற்றும் குறைந்தது 17பேர் கைது செய்யப்பட்டனர். சனிக்கிழமையன்று, தெற்கு நகரமான மால்மோவில் தீவிர வலதுசாரி பேரணியின் போது பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்க…

    • 4 replies
    • 492 views
  6. சிங்கப்பூர் தனது 4வது பிரதமரை தேர்வு செய்துள்ளது. 4 வருட கடுமையான, கடினமான செயல்திறன் குறியீட்டு மதிப்பாய்வின் பிரகாரம் 4 சிறந்த வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இறுதியாக, சிங்கப்பூரின் 4வது பிரதமராக திரு. லாரன்சு வோங் தேர்ந்தெடுக்கப்பட்டார். திரு.வோங், கார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இரட்டைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார், குணாதிசயம், செயல்திறன், நேர்மை, தரம் மற்றும் வேலை KPI ஆகியவற்றில் அதிக மதிப்பெண் பெற்ற பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டார். சில KPI (Key Performance Indicator) இன் உதாரணங்கள்... 1. பொது புகார்கள். 2. போலீசு போக்குவரத்து சம்மன். 3. பொது அழைப்பு. 4. இன வெறுப்பு அறிக்கைகள். 5. ஊழல் / லஞ்சம். 6. சட்ட நீதிமன…

    • 5 replies
    • 651 views
  7. ஆப்கானிஸ்தானில்... பாடசாலைக்கு அருகாமையில், தற்கொலை குண்டுத்தாக்குதல்: 6பேர் உயிரிழப்பு- 11பேர் காயம்! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஆண்கள் பாடசாலைக்கு வெளியே நடத்தப்பட்ட இரட்டை தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர் மற்றும் 11பேர் காயமடைந்தனர். நகரின் மேற்கில் ஷியாக்கள் ஆதிக்கம் செலுத்தும் அப்துல் ரஹீம் ஷாஹித் உயர்நிலைப் பாடசாலைக்கு அருகாமையில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தது. இந்த தாக்குதல்களில், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அருகில் இருந்த தனியார் பிரத்தியேக கல்வி நிலையம் மீதும் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட…

  8. வடகொரியாவுடன்... எந்த நிபந்தனையுமின்றி, பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயார்! வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டுமென அமெரிக்காவும், தென் கொரியாவும் வலியுறுத்தியுள்ளன. வடகொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி சங் கிம், கொரிய தீபகற்பத்துக்கான தென் கொரியாவுக்கான சிறப்புப் பிரதிநிதி நோ கியு-டுக்கை சியோலில் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்புக்கு பிறகு கருத்து தெரிவித்த வடகொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி சங் கிம், ‘வடகொரியாவின் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடியை அளிக்க வேண்டும் என ஒப்புக்கொண்டுள்ளோம். வடகொரியாவுக்கான எதிரான நோக்கம் எ…

  9. தினசரி நோய்த்தொற்றுகளில் வீழ்ச்சி: பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்குகிறது ஜேர்மனி! ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாட்டிலிருந்து மெதுவாக மீண்டு வரும் ஜேர்மனி, பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கவுள்ளது. ஜேர்மனியின் தலைவர்கள் நேற்று (புதன்கிழமை) நாட்டின் பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மார்ச் 20ஆம் திகதிக்குள் முடிவுக்கு கொண்டுவருவதற்கான திட்டங்களை அறிவித்தனர். இதனை உறுதிப்படுத்திய அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், கூட்டாட்சி மாநிலங்களின் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு, கொவிட்-19 தொடர்பாக ஜேர்மனி அதிக நம்பிக்கையுடன் எதிர்நோக்கத் தயாராக இருப்பதாக கூறினார். இருப்பினும், தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று அவர் எச்சரித்தார். ஓ…

  10. பிரதமர் பொரிஸ்- நிதியமைச்சர் ரிஷி சுனக் உள்ளிட்ட 13 பேருக்கு, ரஷ்யா பயணத் தடை! பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், நிதியமைச்சர் ரிஷி சுனக் உள்ளிட்ட 13 பேருக்கு ரஷ்யா பயணத் தடை விதித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைன் விவகாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யாவுக்கு எதிரான செயல்களை செய்து வரும் 13 பிரித்தானிய அரசியல் தலைவர்கள் ரஷ்யா வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. பிரதமர் பொரிஸ் ஜோன்சன், நிதியமைச்சர் ரிஷி சுனக், உட்துறை அமைச்சர் பிரீத்தி படேல், அட்டர்னி ஜெனரல் சுயெல்லா பிராவேர்மன், துணை பிரதமர் டொமினிக் ராப், வெளியுறவுத் துறை இணையமைச்சர் லிஸ் டிரஸ் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். …

  11. உக்ரைனில்... புட்டின், இனப்படுகொலையை நடத்துகின்றார்... என அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம் உக்ரைனில் சர்வாதிகாரியான விளாடிமிர் புடின் இனப்படுகொலையை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன்முறையாக தெரிவித்துள்ளார். மேலும் உக்ரேனியனாக இருக்க முடியும் என்ற எண்ணத்தை புடின் துடைக்க முயற்சிக்கிறார் என்பதும் தெளிவாகின்றது என ஜோ பைடன் குறிப்பிட்டார். அத்தோடு உக்ரைனில் ரஷ்யர்கள் செய்த கொடூரமான விடயங்கள் குறித்து இன்னும் பல சான்றுகள் வெளிவருவதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த சான்றுகள் தொடர்பாக ஆராய சர்வதேச வழக்கறிஞர்களிடம் வழங்குவோம் என்றும் ஆனால் படுகொலை என்பது தனக்கு உறுதியாக தோன்றுவதாகவும் பைடன் குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1…

  12. உக்ரேனுக்கு சொந்தமான 470 டிரோன்கள், 998 பீரங்கி துப்பாக்கிகள் அழிப்பு - ரஷ்யா Published by T. Saranya on 2022-04-18 உக்ரேனில் இராணுவ நடவடிக்கையை தொடங்கிய நாள் முதல் அந்நாட்டுக்கு சொந்தமான 470 டிரோன்களை தாக்கி அழித்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 136 விமானங்கள், 249 விமான ஏவுகணை தடுப்பு அமைப்புகள், 2 ஆயிரத்து 308 யுத்த தாங்கிகள் மற்றும் கவச போர் வாகனங்கள், 254 பல ஏவுகணை தாக்குதல் அமைப்புகள், 998 பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் சிறிய பீரங்கிகள், 2 ஆயிரத்து 171 சிறப்பு இராணுவ வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் தாக்கி அழித்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இகோர் கோனாஷென்கோவ் (igor konashenkov) தெரிவித்துள்…

  13. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளம், நிலச்சரிவு ; 443 பேர் பலி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 443 ஆக அதிகரித்துள்ளது. கடற்கரை நகரமான டர்பன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதீத கனமழை பெய்ததால்,வீதிகள், மேம்பாலங்கள், துறைமுகம் உள்ளிட்ட கட்டமைப்புகள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். படங்கள்…

  14. உக்ரைன் வீரர்களை.. சரணடையுமாறு, ரஷ்யா கோரிக்கை! மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்கள் சரணடைய வேண்டும் என்றும் எதிர்த்து போரிட்டால் கொல்லப்படுவார்கள் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில், ”மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்கள், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்தால், அவர்களின் உயிர்களுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். சரணடைய மறுத்து தொடர்ந்து சண்டையிட்டால், முற்றிலும் அழித்துவிடுவோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள், அங்கு துறைமுக பகுதியான மரியுபோல் நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. உக்ரைன் …

  15. அணுசக்தி திறன்களை அதிகரிக்க... ஏவுகணை சோதனையை கண்காணிக்கும், கிம் ஜோங் உன்! நாட்டின் அணுசக்தித் திறன்களை உயர்த்தும் நோக்கில் புதிய வகை ஏவுகணை சோதனையை வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன், கண்காணித்ததாக வட கொரிய மாநில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் கொரிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, வட கொரியா விரைவில் அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கும் அறிகுறிகளுக்கு மத்தியில் இந்த அறிக்கை வந்துள்ளது தென் கொரியாவின் இராணுவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வடக்கின் கிழக்கு கடற்கரையிலிருந்து கடலை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதைக் கண்டறிந்ததாகக் கூறியது. ஏவுகணைகள் சுமார் 110 கிமீ (70 மைல்கள்) 25 கிமீ அபோஜி மற்றும் அதிகபட்ச வேகம் மேக் 4க்குக் க…

  16. மரியுபோல் நகரம் முற்றிலும் அழிப்பு – ரஷியா மரியுபோலின் முழு நகர்ப்புறமும் உக்ரைனிய படைகளில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்டது, மேலும் சில வீரர்கள் மட்டுமே அதன் புறநகரில் உள்ளனர் என ரஷியா கூறுகிறது. data:;base64,<svg xmlns= மரியுபோல் நகரின் முழுப் பகுதியும் உக்ரைனின் படைகளிடம் இருந்து அகற்றப்பட்டது என்றும் மேலும் சில வீரர்கள் மட்டுமே அதன் புறநகரில் உள்ளனர் என்று ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. மரியுபோலில் எவரும் நுழையவோ புறப்படவோ தடை விதிக்கப்படலாம் என்று அந்த நகரின் முழு கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டுள்ள ரஷிய படையினர் முடிவு செ…

    • 3 replies
    • 465 views
  17. கொலம்பியா, தெற்கு கரோலினா, வணிக வளாகத்தில் சனிக்கிழமை பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் காயமடைந்தனர் மற்றும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். கொலம்பியானா சென்டர் மால் வளாகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கொலம்பியா காவல்துறை தலைவர் வில்லியம் எச். "ஸ்கிப்" ஹோல்ப்ரூக் கூறினார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றார். ஆயுதம் ஏந்திய மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக ஹோல்ப்ரூக் கூறினார், இருப்பினும் எத்தனை பேர் உண்மையில் ஆயுதம் ஏந்தினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு தற்செயலான தாக்குதல் அல்ல என்று போலீசார் நம்புகிறார்கள், என்றார். https://www.cnn.com/2022/04/16/us/…

  18. மேற்கத்திய ...ஆயுதங்களை ஏந்திய, விமானத்தை... சுட்டு வீழ்த்தியதாக, ரஷ்யா கூறுகிறது மேற்கத்திய நாடுகளால் அனுப்பப்பட்ட ஆயுதங்களை ஏற்றிச் சென்ற உக்ரைன் இராணுவ விமானத்தை வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தென்மேற்கு உக்ரைனில் உள்ள ஒடெசா நகருக்கு வெளியே இந்த தாக்குதல் நடந்ததாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரல் இகோர் கொனாஷென்கோவ் கூறியுள்ளார். ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான TASS வெளியிட்ட இந்த செய்தியின் உண்மைத்தன்மை மற்றும் ஏதேனும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை செய்திகள் வெளியாகவில்லை. கடந்த 24 மணி நேரத்தில், ரஷ்ய விமானப் பிரிவுகள் உக்ரேனிய இராணுவத் துருப்புக்கள் மற்றும் பல இடங்களைத் தாக்கியதாகவு…

  19. சரணடையும்... உக்ரைன் இராணுவ வீரர்களின், உயிருக்கு உத்திரவாதம் – ரஷ்யா சில மணி நேரத்தில் சரணடையும் உக்ரைன் இராணுவ வீரர்களின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை விட்டுச் சென்றால்.அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்ஸின் கோட்டையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. அவ்வாறு செய்பவர்கள் ஜெனிவா போர்க் கைதிகள் தொடர்பான உடன்படிக்கையின்படி நடத்தப்படுவார்கள் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் குறித்த ஒப்பந்தத்தின் விவரங்களை உக்ரேனியர்களுக்கு ரஷ்யப் படைகள் ஒரே இரவில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒளிபரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும் உக்ரேனிய …

  20. யுக்ரேன் மோதல்: 'ரஷ்ய வீரர்கள் என்னை பாலியல் வல்லுறவு செய்தனர், என் கணவரையும் கொன்றனர்' யோகிதா லிமாயே பிபிசி நியூஸ், கீயவ், யுக்ரேன் 15 ஏப்ரல் 2022 காணொளிக் குறிப்பு, தன் கதையை விவரிக்கும் அன்னா ரஷ்யர்கள், கீயவ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரும்பிச் சென்று விட்டனர், ஆனால் அவர்கள் இந்த நகரில் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இனி எப்போதும் மீள முடியாதவர்களிடையே ஆழமான காயத்தை விட்டுச் சென்றுள்ளனர். இங்கே யுக்ரேனிய பெண்கள் ரஷ்ய படையெடுப்பு வீரர்களால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட நேரடி பாதிப்புக்குள்ளானவர்களின் வாக்குமூலத்தையும் அது பற்றிய ஆதாரங்களையும் பிபிசி நேரடியா…

  21. படையெடுப்பு தொடங்கியதில்... இருந்து, 3,000 உக்ரைன் துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு. ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 3 ஆயிரம் உக்ரேனிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் 10 ஆயிரம் பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார். இதேவேளை நாட்டில் ரஷ்ய அணுசக்தி தாக்குதலின் அச்சுறுத்தலைப் பற்றியும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்னர் சுமார் 1,300 உக்ரேனிய துருப்புக்கள் இறந்ததாகவும் அதிகமான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறியிருந்தார். இருப்பினும் பொதுமக்களை உள்ளடக்காத இந்த புள்ளி…

  22. உக்ரைனுக்கு, மனிதாபிமான... உதவி வழங்குவதில், குறிப்பிடத்தக்க சவால் – பெரிய பிரித்தானியா. ரஷ்ய துருப்புக்களால் உக்ரைனின் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதம் மனிதாபிமான உதவிகளை வழங்கும் செயற்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய துருப்புக்கள் வடக்கு பிராந்தியத்தில் இருந்து வெளியேறியபோது பாலங்களை குண்டுகள் வைத்து அழித்ததாகவும், கண்ணிவெடிகளை புதைத்தாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக 285,000 மக்கள் வசிக்கும் நகரத்தில் காணப்படும் ஒரேயொரு ஆற்றின் குறுக்குவழி பாலத்தையும் ரஷ்ய துருப்புக்கள் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடக்கின் பல பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குபவர்கள் குறிப்பிடத்தக்க சவாலை எதிர் கொண்டுள்ளதாக ப…

  23. கருங் கடலில் உள்ள... ரஷ்ய போர்க்கப்பலை, அழித்துவிட்டதாக... உக்ரைன் அறிவிப்பு கருங்கடலை பாதுகாக்கும் நெப்டியூன் ஏவுகணைகள் ரஷ்யக் கப்பலுக்கு மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரைன் ஆளுநர் மக்சிம் மார்சசென்கோ தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 50-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன. இந்நிலையில், கருங்கடலில் உள்ள…

  24. எல்லையோர நகரங்களில்... குண்டுவீசி, உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக... ரஷ்யா குற்றச்சாட்டு உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 51ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், ரஷ்யாவின் எல்லையோர நகரங்களில் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனின் இந்த தாக்குதலில் குழந்தை உட்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய விசாரணை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனரக ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ரஷ்ய வான் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த உக்ரைனின் 2 இராணுவ ஹெலிகொப்டர்கள், பிரையன்ஸ்க் (Bryansk) பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடங்களின் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய விசாரணை குழு தெரிவித்துள்ளது. ரஷ்ய எல்லைக்குள் உக…

  25. மேற்கத்தைய நாடுகளின்... தடைகளுக்கு மத்தியில், ரஷ்யாவுடனான வர்த்தக உறவை... அதிகரித்தது சீனா. ரஷ்யாவுடனான சீனாவின் வர்த்தக நடவடிக்கைகள் கடந்த மாதம் கடுமையாக அதிகரித்துள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது மார்ச் மாதத்தில் ரஷ்யாவுடனான ஒட்டுமொத்தமாக 11.67 பில்லியன் டொலர் வர்த்தகத்தை சீனா மேற்கொண்டுள்ளதாக சீன சுங்கத் திணைக்கள தரவு காட்டுகிறது. சீனாவிற்கு எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் விவசாயப் பொருட்களின் முக்கிய ஆதாரமாக ரஷ்யா உள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து ரஷ்யா மீதான மேற்குலக நாடுகளின் தடைகளை பலமுறை தொடர்ந்தும் சீனா விமர்சித்து வருகின்றது. மேலும் குறித்த படையெடுப்பு தொடங்குவதற்கு முன்னர், சீனாவும் ரஷ்யாவு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.