Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பொருளாதார தடைகள்... "பூமராங்" போன்றவை: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்! உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளுக்கு சீனா ஜனாதிபதி ஸி ஜின்பிங் கண்டனம் தெரிவித்துள்ளார். சீனா, ரஷ்யா, பிரேஸில் மற்றும் இந்தியா, உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக மன்ற கூட்டத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சீனாவில் காணொளி முறையில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் போது, அவர் உரையாற்றுகையில், ‘பொருளாதார தடைகள் பூமராங் போன்றவை. இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பானவை. சர்வதேச நிதி அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் உலகப் பொருளாதாரத்தை அரசியலாக்குபவர்கள் மற்றும் வேண்டுமென்றே பொருளாதாரத்…

  2. ஈலோன் மஸ்க்குடன் உறவை முறித்துக் கொண்ட திருநங்கை மகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தன்னுடைய பெயரையும் பாலினத்தையும் மாற்றக்கோரி உலகின் பெரும் பணக்காரர் ஈலோன் மஸ்க்கின் மகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் ஒரு திருநங்கை. மேலும், "தன் தந்தையுடன் இனி எவ்வித உறவையும் பேண விரும்பவில்லை" என அவர் தெரிவித்துள்ளார். 18 வயதான அவர் தன்னை பெண் ஆக அங்கீகரிக்குமாறும் தன் பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்ற அனுமதி கோரியும் அம்மனுவை தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, அவருடைய பெயர் சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் ஆக இருந்தது. பெயர் மாற்றம் மற்றும் புதிய பிறப்பு சான்ற…

  3. லிதுவேனியா... விதித்துள்ள தடையை, உடனடியாக மீள பெறாவிட்டால்... கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ரஷ்யா எச்சரிக்கை! லிதுவேனியா விதித்துள்ள தடையை உடனடியாக மீள பெறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளதன் பின்னணியில் அதை காரணம் காட்டி தற்போது ரஷ்ய பொருட்களை ரயில் பாதை வழியாக கலினின்கிரேட்க்கு கொண்டு செல்ல லிதுவேனியா திடீரென தடை விதித்துள்ளது. இதனால் கட்டுமான பொருட்கள், நிலக்கரி உட்பட முக்கிய பொருட்களை கலினின்கிரேட்க்கு கொண்டு செல்ல முடியாத நிலை ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. லிதுவேனியாவின் இந்த முடிவை ரஷ்யா கடுமையாக எதிர்த்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை …

  4. சீன விமானங்களை... எச்சரிக்க, ஜெட் விமானங்களை அனுப்பியது தாய்வான். நாட்டின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த 29 சீன விமானங்களை எச்சரிக்க தாம் நடவடிக்கை எடுத்ததாக தாய்வான் அறிவித்துள்ளது. செவ்வாயன்று சீனப் போர் விமானங்களின் ஊடுருவல் தைபே மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தின் பிற்பகுதியிலிருந்து சீனாவின் மிகப்பெரிய வான் பாதுகாப்பு மண்டல மீறலை இந்த ஊடுருவல் குறிக்கிறது. அதன்படி நேற்று சீனாவின் 17 போர் விமானங்கள், ஆறு H-6 குண்டுவீச்சு விமானங்களும் நீர்மூழ்கி எதிர்ப்பு, வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களும் ஊடுருவியதாக தாய்வான் அறிவித்துள்ளது. சீன விமானங்களை எச்சரிக்க தமது போர் விமானங்களை …

  5. ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பக்திகா மாகாணத்தில் குறைந்தது 250 பேர் பலி 32 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFGHAN GOVERNMENT NEWS AGENCY ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் நிகழ்ந்த வலுவான நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பக்திகா மாகாணத்தில் வீடுகள் இடிந்துகிடப்பதையும், காயமடைந்தவர்கள் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 250 பேர் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டதாகவும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் ஓர் உள்ளூர் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார். சுமார் 150 பேர் காயமடைந்துள்ளனர். தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் …

  6. "பாலிஸ்டிக்" ஏவுகணை எதிர்ப்பு... தொழில்நுட்ப சோதனையை, வெற்றிகரமாக சோதித்தது சீனா! பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக சீனா தெரிவித்துள்ளது. பாலிஸ்டிக் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் தொழில்நுட்ப சோதனையை சீனா நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இந்தச் சோதனை மூன்று கட்டங்களைக் கொண்டதாகும். இது தற்காப்பு சோதனைதானே தவிர எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. இந்த வகையில் இது 6ஆவது சோதனையாகும். இதுதொடர்பாக சீன பாதுகாப்பு நிபுணர் கூறுகையில், ‘இதுபோன்ற சோதனைகளின் மூலம் சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்புத் திறன் வலுவடைந்து வருகிறது. சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு பங்களிக்கும் …

  7. பிரான்சில் இடதுசாரிகள், தீவிர வலதுசாரிகள் முன்னிலை: மக்ரோங் கட்சி பெரும்பான்மை இழந்தது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இடதுசாரி கூட்டணி மற்றும் தீவிர வலதுசாரிகளின் எண்ணிக்கை அதிகமானதால், பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் தனது கட்டுப்பட்டை இழந்தார். ஒரே நேரத்தில், பிரான்சிலும், கொலம்பியாவிலும் இம்மானுவேல் மக்ரோங், மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள், இடதுசாரி கூட்டணி மற்றும் தீவிர வலதுசாரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் அவரது கட்சி பெரும்பான்மை இழந்தது. இந்நிலையில், அ…

  8. உலக அகதிகள் தினம்: அகதிகள், புலம் பெயர்ந்தோர், குடியேறிகள், தஞ்சம் கோரிகள் என்ன வேறுபாடு? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில் இருந்த 4 பேர் கொண்ட இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற விரும்பாததால் அவர்களை கிறிஸ்துமஸ் தீவில் உள்ள முகாமில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அவர்களுக்கு ஆதரவாக மெல்பர்ன் நகரில் நடந்த ஒரு போராட்டம். கடந்த இரண்டு தசாப்தங்களில், மனிதர்கள் ஓரிடத்தில் இருந்து வேறிடம் சென்று வாழ்வது இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளது. 2000இல் 17 கோடியே 30 லட்சம் பேர் தாய் நாட்டிற்கு வெளியே வாழ்ந்தததாகவும், 2020-ல் அந்த எண்ணிக்கை 28 …

  9. எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும்... நட்பு நாடுகள், உக்ரைனை.... கைவிட்டு விடக்கூடாது: நேட்டோ பொதுச் செயலர்! எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், நட்பு நாடுகள் உக்ரைனைக் கைவிட்டுவிடக்கூடாது என என நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் தெரிவித்துள்ளார். ஜேர்மனி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைன் போர் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அது, பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம். எனவே, அதற்கேற்ப நாம் நம்மை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். உக்ரைன் போர் மிக நீண்ட காலத்துக்கு நடைபெறுவதால் நேட்டோ உறுப்பு நாடுகளும் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு தற்போது அளித்து வரும் ஆதரவைக்…

    • 6 replies
    • 447 views
  10. உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம்! மின்னம்பலம்2022-06-19 உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 135ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்தியா மூன்று இடங்கள் முன்னேறியுள்ளது. சர்வதேச சிந்தனைக் குழுவான இன்ஸ்டிட்யூட் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ் வெளியீட்டுள்ள குளோபல் பீஸ் இன்டெக்ஸ் 2022 பட்டியலின்படி, உலகின் மிக அமைதியான நாடுகளில் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும், அயர்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து கடந்த இரண்டு வருடங்களாக இரண்டாம் இடத்தை பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு மற்றும் சர்வதேச மோதல்கள், சமூக பாதுகாப்பு அளவு உள்ளிட்ட 23 அளவுகோல்களைக் கொ…

  11. ரஷ்யாவிற்கு எதிரான... பொருளாதாரத் தடைகளால், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு... 400 பில்லியன் டொலர்கள் இழப்பு: புடின் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளால் ஐரோப்பிய ஒன்றியம் 400 பில்லியன் டொலர்களை இழக்க நேரிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். வருடாந்திர செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய போதே புடின் இதனைத் தெரிவித்தார். மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு மேற்கு நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் ‘முட்டாள்தனம் மற்றும் சிந்தனையற்றவை’ என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறினார். அத்துடன், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தாக்குதல் ஆரம்பத்திலிருந்தே வெற்றிபெற வாய்ப்பில்லை எனவும் கட்ட…

  12. 10,000 உக்ரைன் வீரர்களுக்கு... ஒவ்வொரு 120 நாட்களுக்கும், போர் பயிற்சியை... பிரித்தானியா வழங்கும்: பிரதமர் பொரிஸ்! ஒவ்வொரு 120 நாட்களுக்கும் 10,000 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறன் கொண்ட உக்ரைன் படைகளுக்கு ஒரு பெரிய பயிற்சி நடவடிக்கையை தொடங்க பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் முன்வந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) உக்ரைனுக்கு சென்ற பிரதமர் பொரிஸ் ஜோன்சன், அங்கு உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்து உரையாடிய போது இந்த வாக்குறுதியை அளித்தார். இதன்போது பிரதமர் பொரிஸ் கூறுகையில், ‘இன்றைய எனது வருகை, இந்தப் போரின் ஆழத்தில், உக்ரைனிய மக்களுக்கு ஒரு தெளிவான மற்றும் எளிமையான செய்தியை அனுப்புவதாகும். பிரித்தானியா உங்களுடன் உள்ளது, இறுத…

  13. உக்ரைனுக்கு... ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து, வழங்கப்பட வேண்டும்: ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை! உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ‘ஐரோப்பிய மதிப்புகள் மற்றும் தரங்களுக்கு ஏற்ப வாழ உக்ரைன் தனது விருப்பத்தையும் உறுதியையும் தெளிவாக நிரூபித்துள்ளது’ என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறினார். பின்னர் ஒரு ட்வீட்டில், ‘ஐரோப்பியக் கண்ணோட்டத்திற்காக உக்ரேனியர்கள் இறக்கத் தயாராக உள்ளனர். அவர்கள் எங்களுடன் ஐரோப்பியக் கனவுடன் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.’ என உர்சுலா வான் டெர் லேயன் பதிவிட்டுள்ளார். அடுத்த வியாழன் மற்றும் வெள்ளியன்று பிரஸ்ஸல்ஸ…

  14. ஜூலியன் அசாஞ்சேவை.... அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு, பிரித்தானியா ஒப்புதல்! கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரித்தானிய உட்துறைச் செயலர் பிரித்தி படேல் ஒப்புதல் அளித்துள்ளார். உளவு பார்த்தல் குற்றச்சாட்டு உட்பட 18 வழக்குகளில் ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்க அதிகாரிகளால் தேடப்படுகிறார். எவ்வாறாயினும், பல மேல்முறையீட்டு வழிகள் அசாஞ்சிற்கு திறந்தே உள்ளன. அந்த முடிவை எதிர்த்து முறையீட 14 நாட்கள் அவகாசம் உள்ளது. ‘நேற்று (வெள்ளிக்கிழமை) நீதவான் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் இரண்டின் பரிசீலனையைத் தொடர்ந்து, ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த உத்தரவிடப்பட்டது. அசாஞ்ச…

  15. எல் சால்வடோர்: பிட்காயின் மூலம் அன்றாட தேவைகளை வாங்கும் உலகின் முதல் நாடு ஜோ டைடி பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, பிட்காயின் மூலம் இந்த நாட்டில் எதையும் வாங்கலாம் நொறுக்குத்தீனிகள் முதல் பெட் ரோல்,டீசல் உட்பட வீடுகள் வரை என அனைத்தையும் எல் சால்வடோரில் நீங்கள் பிட்காயின்கள் மூலம் வாங்க முடியும். எல் சாண்டே கடற்கரை நகரம் சுமார் 3,50,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை பெற்று பிட்காயின் பீச் என்ற பெயரையும் பெற்றுள்ளது. இந்த அரசு எப்போது, எந்தப் பணத்தைக் கொண்டு பிட்காயின்களை வாங்கினார்கள் என்பதே எங்களுக்குத் தெர…

  16. மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை... அதிகார பூர்வமாக அறிமுகப்படுத்தியது சீனா! சீனா தனது மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி, கப்பலுக்கு ஃபுஜியான் என்று பெயரிட்டுள்ளது. சீனாவின் சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட போர்க்கப்பல் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஷாங்காய் நகரில் உள்ள சீனா ஸ்டேட் ஷிப் பில்டிங் கார்ப்பரேஷன் (சிஎஸ்எஸ்சி) கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுவந்தது. இந்த நிலையின் கப்பல் கட்டும் பணிகள் முழுமையடைந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) கப்பல் கடலில் இறக்கப்பட்டது. ஃபுஜியான் சீனாவின் முழு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் இதுவாகும். கப்பல் 80,000 டன்களுக்கும் அதிகமான இடப்பெயர்ச்சியை…

  17. ரஷ்யாவின்.... தாக்குலுக்கு உள்ளான, உக்ரைனிய பகுதிகளை பார்வையிட்ட... 4 முக்கிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்! ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் 4 முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் அந்த நாட்டுக்கு விஜயம் செய்துள்ளனர். போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன்ங், ஜேர்மனி அதிபர் ஒலாஃப் ஷோல்ஸ், இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி, ருமேனியா ஜனாதிபதி க்ளாஸ் லொஹானிஸ் ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) விஜயம் செய்தனர். போலந்திலிருந்து வீதி வழியாக தலைநகர் கீவ்வுக்கு வந்த அவர்கள், ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து, பின்னர் அவர்கள் பின்வாங்கிச் சென்ற பகுதிகளைப் பார்வையிட்டனர். முதலில் கீவ…

  18. ஆப்கானிஸ்தான் பொருளாதார நெருக்கடி: வீசப்பட்ட ரொட்டித் துண்டுகளை உண்ணும் மக்கள் செகுந்தெர் கிர்மானி பிபிசி செய்திகள், காபூல் 6 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, முன்பை விட அதிகமான பழைய ரொட்டிகளை கடைகளில் விற்பனை செய்கின்றனர். ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள சந்தை ஒன்றில், நீல நிற மாடத்தைக் கொண்ட மசூதியின் முன்பு உள்ள கடையொன்றில், பழைய மற்றும் மிச்சம் மீதியான 'நான்' எனப்பபடும் ரொட்டிகள் நிரம்பிய பெரிய ஆரஞ்சு நிற மூட்டைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய மிஞ்சிய ரொட்டிகள் வழக்கமாக கால்நடைகளுக்கே உணவாக அளிக்கப்படும். ஆனால், இப்போது அவற்றை சாப்பிடும்…

  19. குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் – உலக சுகாதார நிறுவனம் ஆலோசனை ஆப்பிரிக்காவில் காணப்பட்ட குரங்கம்மை நோய் இன்று உலகம் முழுவதும் பரவிக்கொண்டே இருக்கிறது. இந்த நோய் இதுவரை 39 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது. உலகளவில் 3,100க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். 72 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 29 உயிரியலாளர்கள் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு, கடந்த வாரம் குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் சூட்ட வேண்டும் என பொது அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து அவர்கள் அளித்த விளக்கத்தில், “குரங்கு அம்மை வைரஸ் பரவல், ஆப்பிரிக்காவுடன் தெளி…

    • 0 replies
    • 198 views
  20. நவீன ஏவுகணை தடுப்பு ஆயுதங்களை... வழங்குவதில், நட்பு நாடுகள்... தாமதிப்பதில் நியாயமில்லை: உக்ரைன் ஜனாதிபதி! உக்ரைனுக்கு நவீன ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள் தேவை என்ற நிலையில் அவற்றை வழங்குவதில் நட்பு நாடுகள் தாமதிப்பதில் நியாயமில்லை என உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். முக்கிய நகரங்களை கைப்பற்றுவதில் ரஷ்யப் படைகள் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில், உக்ரைன் ஜனாதிபதியின் இந்த கருத்து வெளிவந்துள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ரஷ்யாவின் ஏவுகணைகள், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சீவிரோடோநெட்ஸ்க் நகரில் கடைசி பாலத்தையும், ரஷ்ய படைகள் தகர்த்தபின், அங்குள்ள மக்களை உக்ரைன் ராணுவம் அப்புறப்படுத்த…

  21. "செவெரோடொனட்க்ஸ்" இரசாயன ஆலையில்... சிக்கியுள்ள பொதுமக்கள், வெளியேற பாதுகாப்பான வழித்தடத்தை ஏற்படுத்துவதாக... ரஷ்யா அறிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனின் செவெரோடொனட்க்ஸ் நகர இரசாயன ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்காக, பாதுகாப்பு வழித் தடத்தை ஏற்படுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. தற்போது அந்த நகரின் பெரும்பாலான பகுதிகள் ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அஸோட் என்றழைக்கப்படும் அந்த ரசாயன ஆலையின் சுரங்க அறைகளில் உக்ரைன் படையினருடன் 500க்கும் மேறப்பட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அஸோட் இரசாயன ஆலைக்குள் சிக்கியிருக்கும் பொதுமக்கள், அங்கிருந்து வெளியேறுவதற்கு வசதியாக பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்த…

    • 1 reply
    • 238 views
  22. உக்ரைன் போர்: செவெரோடோனெட்ஸ்கில்... ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அத்தியாவசியப் பொருட்களின்றி தவிப்பு! உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் நகரில் அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துவிட்ட நிலையில், அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. அவர்களில் பலர் நகரின் அசோட் இரசாயன ஆலைக்கு கீழே உள்ள பதுங்கு குழிகளில் தங்கியுள்ளனர். நகரத்திற்கு வெளியே செல்லும் கடைசி பாலம் இந்த வார தொடக்கத்தில் சண்டையில் அழிக்கப்பட்டது. இது உள்ளே மீதமுள்ள 12,000 குடியிருப்பாளர்களை திறம்பட சிக்க வைத்தது. பல வாரங்களாக செவெரோடோனெட்ஸ்கைக் கைப்பற்றுவது ரஷ்யாவின் முக்கிய இராணுவ இலக்காக இருந்து வருகிறது, இது இப்போது நகரத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத…

  23. இந்திய கோதுமைக்கு தடை! இந்திய கோதுமைக்கு ஐக்கிய அரபு அமீரகம் 4 மாதம் தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் கோதுமையை ஏற்றுமதி, மறு ஏற்றுமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிக தடை விதித்துள்ளது. ஏற்றுமதி, மறு ஏற்றுமதிக்கு தடை விதிக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சரகம் உத்திரவிட்டுள்ளது. அடுத்த 4 மாதங்களுக்கு இந்திய கோதுமைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சரகம் தடை விதித்துள்ளது. இந்தியாவின் கோதுமை, கோதுமை மாவை மறு ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. சர்வதேச நிலவரங்களால் ஏற்பட்டுள்ள வர்த்தக சூழலை கருத்தில் கொண்டு நடவடிக்கை எனத் தகவல் வெளியாகியுள்ளது. http://tamil.ad…

    • 3 replies
    • 727 views
  24. வடக்கு புர்கினா பாசோவில்... ஆயுததாரிகள் தாக்குதல்: 50 பேர் கொலை. வடக்கு புர்கினா பாசோவில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக அரசாங்க பேச்சாளர் தெரிவித்தார். அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎல் (ஐஎஸ்ஐஎஸ்) ஆகியவற்றுடன் தொடர்புடைய போராளிகள் உள்ள எல்லைப் பகுதிகளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இடையில் செனோ மாகாணத்தின் குறித்த பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவோடு இரவாக Seytenga கிராமம் தாக்கப்பட்டதை அடுத்து, இராணுவம் இதுவரை 50 உடல்களைக் கண்டுபிடித்துள்ளது என அரசாங்கம் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இந்த தாக்குதலைக் கண்டித்துள்ள அதேவேளை ந…

  25. கியூபாவில், போராடியவர்களுக்கு... 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை ! கியூபா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக சிலருக்கு 25 ஆண்டுகள் உட்பட 381 பேருக்கு தண்டனை விதித்துள்ளது. 297 பேர் தேசத் துரோகம், பொதுக் குழப்பம், தாக்குதல் அல்லது கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் சுதந்திரம் வேண்டும் என கோஷமிட்டே நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், விலைவாசி உயர்வு மற்றும் உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையை சுட்டிக்காட்டி இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. தண்டனை விதிக்கப்பட்டவர்களில் “16 முதல் 18 வயதுடைய 16 இளைஞர்களும்” அடங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.