Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தலிபான்கள் பதவியேற்றதற்கு பிறகு... ஆப்கானில் முதல் குண்டுவெடிப்பு: 12பேர் உயிரிழப்பு- 32பேர் காயம்! ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆப்கானிய உட்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் காரி சயீத் கோஸ்டி தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காபூலின் ஈட்கா மசூதியில் மக்களின் அதிக நடமாட்டம் இருந்த வேளையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. தலிபான்கள் இரண்டு தசாப்த கால மோதலில் தங்கள் வெற்றியை கொண்டாடுவதற்காக நகரத்திற்கு வெளியே முதல் பெரிய கூட்டத்தை நடத்தியபோது ஈட்கா மசூதியின் நுழைவாயிலுக்கு வெளியே இந்…

  2. பிரான்ஸை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா : அன்டனி பிளிங்கன் பாரிஸ் விஜயம் கடந்த மாதம் வொஷிங்டன் மற்றும் லண்டனுடனான உடன்படிக்கைக்கு ஆதரவாக அவுஸ்ரேலியா பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததை அடுத்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இடையேயான உறவுகள் வலுவிழந்தது. இந்நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை பிரான்ஸிற்கு செல்லத் திட்டமிட்டுள்ளார். இந்த விஜயத்தின் போது பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான கூட்டத்திற்கு தலைமை தாங்குவதுடன் பிரெஞ்சு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என இராஜாங்க அமைச்சின் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். பிளிங்கனுடன் அமெரிக்க காலநிலை தூதுதர் ஜோன் கெர்…

  3. பண்டோரோ பேப்பர்ஸ்: பிரபல உலக தலைவர்களின் ரகசிய சொத்துகள் - அம்பலப்படுத்தும் புலனாய்வு பேண்டோரா பேப்பர்ஸ் செய்திக் குழு பிபிசி பனோரமா 2 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவெளியில் பெரிதும் மதிக்கப்படும் உலக தலைவர்கள், மன்னர்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள் என பலரும் ரகசியமாகவும் குறுக்கு வழிகளிலும் பணத்தையும் சொத்துகளையும் குவித்திருப்பது அம்பலமாகி இருக்கிறது. ஜோர்டான் மன்னர், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் என பலரும் இதில் சிக்கியிருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்ட தலைவர்கள் வரி ஏய்ப்புக்கு உதவும் வெளிநாட்டு ரகசிய நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பது…

  4. ருமேனியா மருத்துவமனை தீவிபத்து: குறைந்தது ஒன்பது பேர் உயிரிழப்பு! ருமேனியாவிலுள்ள மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்தில் நாட்டில் சுகாதார வசதிகளில் நடந்த மூன்றாவது கொடிய சம்பவம் இதுவாகும். தென்கிழக்கு துறைமுக நகரமான கான்ஸ்டன்டாவில் உள்ள மருத்துவமனையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் இந்த தீ சம்பவம் பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து கூடுதல் தீயணைப்பு குழுக்களை வரவழைத்ததாக அதிகாரிகள் தெர…

  5. பிரான்ஸை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா : அன்டனி பிளிங்கன் பாரிஸ் விஜயம் கடந்த மாதம் வொஷிங்டன் மற்றும் லண்டனுடனான உடன்படிக்கைக்கு ஆதரவாக அவுஸ்ரேலியா பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததை அடுத்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இடையேயான உறவுகள் வலுவிழந்தது. இந்நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை பிரான்ஸிற்கு செல்லத் திட்டமிட்டுள்ளார். இந்த விஜயத்தின் போது பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான கூட்டத்திற்கு தலைமை தாங்குவதுடன் பிரெஞ்சு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என இராஜாங்க அமைச்சின் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். பிளிங்கனுடன் அமெரிக்க காலநிலை தூதுதர் ஜோன்…

    • 0 replies
    • 355 views
  6. கருக்கலைப்பு உரிமை : அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கருக்கலைப்புக்கான அணுகலை கடுமையாக கட்டுப்படுத்தும் டெக்சாஸ் மாநிலத்தின் ஒரு புதிய சட்டத்திற்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெறுகின்றது. 1973 ஆம் ஆண்டு நாடு முழுவதும் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கபட்டுள்ளது. இந்நிலையில் அதனை தொடருமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். https://athavannews.com/2021/1242604

  7. பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி... நிக்கோலஸ் சர்கோஸிக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை! முறைகேடாக தேர்தல் நிதி பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் 66 வயதான நிக்கோலஸ் சர்கோஸி இந்த குற்றச்சாட்டை மறுத்தார். அவர் மேல்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாகப் பொறுப்பு வகித்த சர்கோஸி, 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். அப்போது, அனுமதியளிக்கப்பட்ட 22.5 மில்லியன் யூரோக்களை விட அதிகமாக இரு மடங்கு தேர்தல் நிதி திரட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக நடைபெற்…

  8. தாய்வான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் அத்துமீறி நுழைந்த 38 சீன இராணுவ ஜெட் விமானங்கள்! தாய்வான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் 38 சீன இராணுவ ஜெட் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக, தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது இன்றுவரை பெய்ஜிங்கின் மிகப்பெரிய ஊடுருவல் என விபரிக்கப்படுகின்றது. அணுசக்தி திறன் கொண்ட வெடிகுண்டுகள் தாங்கும் விமானம் உட்பட பல போர் விமானங்கள் தங்களது வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் இரண்டு முறை நுழைந்தது என்று பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு பதிலளித்த தாய்வான், அதன் ஜெட் விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தியது. சீனா, ஜனநாயக தாய்வானை பிரிந்த மாகாணமாக பார்க்கிறது. ஆனால் தாய்வான் தன்னை ஒரு இறையாண்மை…

  9. கோவிஷீல்ட் ,சினோவெக் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அவுஸ்திரேலியா அனுமதி Published by T. Saranya on 2021-10-01 13:08:56 அவுஸ்திரேலியா முழுவதும் 80 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதயைடுத்து உலகின் மிக தீவிரமான தொற்றுநோய் எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தத் ஆரம்பித்துள்ளது. அந்தவகையில், இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் மற்றும் சீனாவில் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள சினோவெக் ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள் அவுஸ்திரேலியா நாட்டுக்கு பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரு தடுப்பூசிகளையும் அங்கீகரிப்பதனால் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க தடையை நீக்கும் என கூறப்ப…

  10. ஆளில்லா விமானத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டால்... அமெரிக்கா மோசமான விளைவுகளை சந்திக்கும்: தலிபான்கள்! ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, ஆளில்லா விமானத் தாக்குதல்களை முன்னெடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர். முன்னதாக ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நிலைகள் மீது தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு தலிபான்களின் அனுமதி தேவையில்லை என அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பீ கூறியிருந்த நிலையில், இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதுகுறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாகித் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானின் வான்வெளி அமெரிக்க ஆளில்லா விமானங்களால் ஆக்கிரமிக்கப்படுவதால் அனைத்து சர்வதேச உரிம…

  11. பர்லோ திட்டம், நிறைவுக்கு வருகின்றது: சில துறைகள் ஆதரவு தொடர வேண்டும் என கோரிக்கை! பிரித்தானியாவின் ஃபர்லோ திட்டம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகின்ற நிலையில், மோசமாக பாதிக்கப்பட்ட சில துறைகள் ஆதரவு தொடர வேண்டும் என கோருகின்றன. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபர்லோ திட்டம், கொவிட் தொற்றினால் பெரும்பகுதிகளை மூட அரசாங்கம் கட்டாயப்படுத்திய பின்னர் 11.6 மில்லியன் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கி உதவியது. ஜூலை மாத இறுதியில் அது இன்னும் 1.6 மில்லியன் தொழிலாளர்களின் வருமானத்தை ஆதரித்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் திறைசேரியின் தலைவர், 70 பில்லியன் யூரோ திட்டத்திற்கு பெருமை படுவதாகவும் ஆனால் இப்போது அதை மூடுவதற்கு சரியான…

  12. வடக்கு அயர்லாந்தில்... ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு, ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கொவிட் சான்றிதல்! வடக்கு அயர்லாந்தில் வசிக்கும் மற்றும் தடுப்பூசி போடப்பட்ட ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு, ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கொவிட் சான்றிதல் வழங்கப்படவுள்ளது. சர்வதேச பயணத்தை அனுமதிக்கும் தடுப்பூசி கடவுச்சீட்டு, ஜூலை மாதம் அயர்லாந்து குடியரசில் நடைமுறைக்கு வந்தது. இந்தநிலையில், டிஜிட்டல் கொவிட் சான்றிதல் அணுக வடக்கு அயர்லாந்தில் உள்ளவர்கள், தற்போது ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம். வடக்கு அயர்லாந்தில் உள்ள பெரும்பாலான ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் குடியரசிற்கு வெளியே தடுப்பூசி போடப்பட்டதால் சான்றிதழை அணுக முடியவில்லை. இந்த நடவடிக்கை இரண்ட…

  13. மீன்பிடி அனுமதி குறித்து... பிரான்ஸ் – பிரித்தானியாவிற்கு இடையில் முறுகல் பிரெக்சிற் ஒப்பந்தத்திற்கு பிந்தைய மீன்பிடி உரிமைகள் தொடர்பாக பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தனது கடற்பரப்பில் மீன் பிடிக்க 47 விண்ணப்பங்களில் வெறும் 12 சிறிய கப்பல்களுக்கு மட்டுமே உரிமங்களை வழங்கியுள்ளது. இந்நிலையில் மீன்பிடி விவகாரம் அரசியல் நோக்கங்களுக்காக பிணைக் கைதிகள் போன்று நடத்த கூடாது என்று பிரான்ஸ் கடல்த்துறை அமைச்சர் அன்னிக் ஜிரார்டின் கூறியுள்ளார். இருப்பினும் மீதமுள்ள விண்ணப்பங்கள் குறித்து தொடர்ந்தும் பரிசீலித்து வருவதாக இங்கிலாந்து செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1241830

  14. ஆப்கானிஸ்தானில், 2,500 வீரர்களை வைத்திருக்குமாறு... பைடனுக்கு அறிவுறுத்தல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்புகளைத் தொடர்ந்து வைத்திருக்குமாறு ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக அமெரிக்க உயர் இராணுவத் தலைவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இருந்து மக்களை அவசரமாக வெளியேற்றியமை குறித்து நடத்தப்பட்டுள்ள விசாரணையிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுமார் 6 மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணையில் 2,500 வீரர்களை ஆப்கானிஸ்தானில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியதாக ஜெனரல் மார்க் மில்லி, ஜெனரல் ப்ரான்க் மெக்கன்ஸி ஆகிய இருவரும் கூறினர். ஆனால் அவ்வாறு ஆலோசனை பெற்றதாகத் தமக்கு நினைவு இல்லை என ஜனாதிப…

  15. அவுஸ்ரேலியாவில்... தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு, சில கட்டுப்பாடுகள்! அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் முடக்க நிலை முடிவுக்கு வரும்போது தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாத நடுப்பகுதியிலிருந்து சிட்னியில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் சமூக ஒன்றுகூடல்கள் சிலவற்றில் கலந்துகொள்ள முடியாது என நியூ சவுத் வேல்ஸ் மாநில முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் டிசம்பரிலிருந்து கடைகள், உணவகங்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்றவற்றில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். https://athavanne…

  16. ஜப்பானின் புதிய பிரதமராகிறார் ஃபுமியோ கிஷிடா ஜப்பானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கிஷிடா ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (எல்.டி.பி) தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் அடுத்த பிரதமராக உள்ளார். 2020 செப்டம்பரில் பதவியேற்று ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய பின்னர் பதவி விலகும் கட்சித் தலைவர் பிரதமர் யோஷிஹிட் சுகாவை கிஷிடா இந்த வெற்றியின் மூலம் மாற்றுவார். முன்னதாக பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர் பதவிகளை வகித்த பிரபல தடுப்பூசி அமைச்சரான டாரோ கோனோவை தோற்கடிக்க கிஷிடா புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் 257 வாக்குகளை பெற்றார். புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 4 ம் திகதி நடைபெற உள்ளது. …

  17. பிரான்ஸ் ஜனாதிபதி மீது... முட்டை வீச்சு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் லியோன் நகரில் நடைபெற்ற சர்வதேச உணவு கண்காட்சியில் ஜனாதிபதி நேற்று கலந்துகொண்டார். கூட்டத்தின் நடுவே அவர் நடந்துசென்றபோது அவர்மீது முட்டை வீசப்பட்டதாகவும் அதன்பின்னர் அங்கிருந்த மெய்ப்பாதுகாவலர்கள் பாதுகாப்பை பலப்படுத்தி குறித்த நபரை மடக்கி பிடித்தனர். இதேவேளை, முன்னதாக கடந்த ஜூனில் ஜனாதிபதியை ஒருவர் எதிர்பாராத விதமாக கன்னத்தில் அறைந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1241797

  18. புதிய ‘ஹைப்பர்சொனிக் ஏவுகணையை’ ஏவியதாக வட கொரியா அறிவிப்பு Hwasong-8 என்ற புதிய ஹைப்பர்சொனிக் ஏவுகணையை நேற்று செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது. குறித்த புதிய ஏவுகணை அதன் ஐந்து ஆண்டு இராணுவ மேம்பாட்டு திட்டத்தில் வகுக்கப்பட்ட மிக முக்கியமான புதிய ஆயுத அமைப்புகளில் ஒன்றாகும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அணுசக்தி திறன்களைக் கொண்டுள்ள புதிய ஏவுகணையை மூலோபாய ஆயுதம் என அழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பரிசோதனையுடன் இந்த மாதம் மட்டும் வட கொரியா நடத்திய மூன்றாவது சோதனை இது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1241773

  19. நைஜீரியாவில் மர்ம நபர்களின் துப்பாக்கி சூட்டில் 40 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு நைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த படையினர், சம்பவ பிரதேசத்திற்கு சென்று பதில் தாக்குதல் நடத்தி அக்குழுவினரை விரட்டியுள்ளனர். இதன் பின்னர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த 3 வீடுகளில் தீயணைக்கப்பட்டதுடன், அவ்வீடுகளிலிருந்து 6 பேர் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்ட…

  20. கிளாயர் ப்ரெஸ் பிபிசி உலக சேவை ஆஃப்கானிஸ்தானில் பெண்ணுரிமையின் முன்னோடிகள் அவர்கள். நீதியின் காவலர்களாக, மிகவும் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும் நியாயம் தேடித்தந்தவர்கள். ஆனால் இப்போது ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த சுமார் 200 பெண் நீதிபதிகள் தாலிபன் ஆட்சியின்கீழ் தண்டனைக்கு பயந்து தலைமறைவாகியிருக்கிறார்கள். ஆஃப்கானிஸ்தானில் ஆறு இரகசிய இடங்களிலிருந்து பெண் நீதிபதிகள் பிபிசியிடம் பேசினார்கள். பாதுகாப்புக் கருதி அவர்களது பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. பாலியல் வன்புணர்வு, கொலை, சித்ரவதை போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களுக்காக் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு எதிராகக் குற்றத்தீர்ப்பு வழங்கியிருக்கிறார் நீதிபதி மசூமா. ஆனால் அவர் வாழும் நகரம் த…

  21. ஜேர்மனியில்... மேர்க்கலுக்குப் பின்னர், யார் ஜனாதிபதி – தீர்மானம்மிக்க தேர்தல் இன்று அங்கெலா மேர்க்கலுக்குப் பின்னர் யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தல் இன்று ஜேர்மனியில் நடைபெறவுள்ளது. இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வருகின்ற நிலையில், பிரசாரத்திற்கான இறுதித் தினமான நேற்று, ஜனாதிபதி பதவிக்காகப் போட்டியிடும் அரசியல்வாதிகள் நாடு முழுவதும் பாரிய பிரசாரங்களில் ஈடுபட்டனர். பதவியிலிருந்து நீங்கிச்செல்லும் ஜனாதிபதி அங்கெலா மேர்க்கெலின் வலதுசாரி கட்சிக்கும், சமூக ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் வழமைக்கு மாறாக கடும் போட்டி நிலவுமென கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலில் சமூக ஜனநாய…

  22. ஜோ பைடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார். பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அனுமதியளித்துள்ளது. இதனை தொடர்ந்து பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளும் தொடங்கியுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய் தொற்று அபாயம் உள்ள இளைஞர்கள் 3-வது தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்றும் முதல் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 மாதத்துக்கு பின் 3-வது டோசை போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் நேற்று திங்கட்கிழமை செலுத்திக்கொண்டார்…

  23. ஆப்கானில்... பயங்கரவாத நிலைகள் மீது, தாக்குதல் நடத்த தலிபான்களின் அனுமதி தேவையில்லை: அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நிலைகள் மீது தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு தலிபான்களின் அனுமதி தேவையில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கான் போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தலிபான்கள் வலியுறுத்தியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பீ கூறுகையில்,’பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு உள்ளது. அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதுவரை, ஆப்கானிஸ்தானி…

  24. நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாலிபன்கள் 2001இல் ஆட்சியை இழந்தபின் முடிதிருத்தும் நிலையங்கள் ஆப்கனில் பிரபலமாகின. சிகை திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச் சவரம் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் கலைஞர்களுக்கு தாலிபன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் தாலிபன் தெரிவித்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தாலிபன் அரசின் மத காவல்துறை தெரிவித்துள்ளது. இதே மாதிரியான உத்தரவுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தலைநகர் கா…

  25. ஜேர்மனியில் ஆட்சியை கைப்பற்றும் மத்திய - இடதுசாரி ஜனநாயக கட்சி ஜேர்மனி தேர்தலின் முதன்மை பெறுபேறுகளின்படி அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மேர்கலின் கட்சியை மத்திய-இடதுசாரி ஜனநாயக கட்சி தோற்கடித்துள்ளது. ஜேர்மனியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கிறது. அங்கு மத்திய இடதுசாரி கொள்கை கொண்ட சோஷியல் ஜனநாயக கட்சி வெற்றிபெற்றுள்ளது. மத்திய இடதுசாரி கொள்கை கொண்ட சோஷியல் ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் நிதி அமைச்சர் ஒல்ஃப் ஸ்கால்ஸ் போட்டியிட்டார். ஜேர்மனி பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை மத்திய வலதுசாரி கொள்கை கொண்ட கட்சியான சிடியூ சிஎஸ்யு கட்சியின் அரசியல் தலைவர் ஏஞ்சலா மேர்கல் போட்டியிடவில்லை. நாட்டின் தலைவராக அதாவது சான்ஸ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.