Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஈரானில் பதவியேற்பு விழாவில் ஆளுநர் மீது தாக்குதல் ஈரானில் பதவியேற்பு விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த ஆளுநரை மர்மநபர் ஒருவர் தாக்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அபிதின் கோரம் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான பதவியேற்பு விழாவில் அபிதின் கோரம் மேடையில் பேசிக் கொண்டிருந்த வேளையில், திடீரென அவ்விடத்துக்கு வந்த மர்மநபர் ஆளுநரின் பின்னந்தலைக்கு தாக்கியுள்ளார். அதன் பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அந்த நபரை தடுத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் தனிப்பட்ட வெறுப்புக் காரணமாக நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அத்துடன்,இந்தத் தாக…

  2. பிரித்தானியாவில் மர்ம கும்பலொன்றினால் இன்று மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில், Brentwood நகரத்தில் உள்ள Regency Court பகுதியில் மர்ம கும்பலொன்றினால் 3 பேர் கொடூரமாக தாக்கப்பட்டு ஆபத்தில் உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அவரச உதவிகளுடன் சென்ற பொலிஸார், பாதிக்கப்பட்ட்டவர்களை காப்பாற்ற முயற்சித்த போதிலும், அவர்களில் இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,மற்றுமொரு சிறுவர் சிகிச்…

  3. தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும்: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீனாவுக்கு எச்சரிக்கை! சீனாவில் இருந்து தாய்வான் வளர்ந்து வரும் இராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையில், தாய்வானை பாதுகாக்க அமெரிக்கா உறுதி கொண்டுள்ளது என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சி.என்.என். நடத்திய டவுன் ஹால் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி பைடனிடம், சீனா தனது சொந்தம் என்று கூறிக்கொள்ளும் தாய்வானை பாதுகாக்க அமெரிக்கா முன்வருமா என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜோ பைடன், ‘ஆமாம், அதைச் செய்ய எங்களுக்கு ஒரு கட்டாயம் உள்ளது’ என பதிலளித்தார். மேலும், அவர் கூறுகையில், சீனா மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருக்கப் போகிறார்களா என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை ஏனென…

  4. நைஜீரியாவில் உள்ள சிறையில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் – 800 கைதிகள் தப்பியோட்டம்! நைஜீரியாவின் ஓயோ மாகாணத்தில் உள்ள சிறையில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 800 கைதிகள் தப்பியோடியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர ஆயதங்களுடன் சிறையை சுற்றிவளைத்து மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குண்டுகளை கொண்டு சிறைச் சுவர்களை தகர்த்து 800 கைதிகளை மர்ம கும்பல் தப்பிக்க வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தப்பியவர்களில் 262 பேரை மீண்டும் கைது செய்துள்ளதாகவும் ஏறத்தாழ 575 பேரை தேடும் பணி நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டில் 3ஆவது முறையாக சிறையை தகர்த்து கைதிகள் தப்பிக்கும் சம்பவம் இதுவென்பது குறிப்ப…

  5. வரலாறு: ஆப்ரிக்காவின் இரக்கமில்லா கன்னிப்பெண் மெய்க்காப்பாளர்கள் - அதிகம் அறியப்படாத பழங்குடி சமூகம் ஃப்லோர் மெக்டொனால்டு பிபிசி ட்ராவல் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CHRIS HELLIER/GETTY IMAGES படக்குறிப்பு, பெனின் பெண் போராளிகளை அமேசான்கள் என்று ஐரோப்பியர்கள் அழைத்தனர். அமேசான் என்பது கிரேக்க புராணத்தில் கூறப்பட்டுள்ள இரக்கமற்ற போர் வீரர்களைக் குறிக்கும். (உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது…

  6. கொரோனா வைரஸ்: டெல்டா பிளஸ் புதிய கொரோனா திரிபு அதிவேகமாக பரவக் கூடியதாக இருக்கலாம் மிஷெல் ராபர்ட்ஸ் சுகாதார ஆசிரியர், பிபிசி இணைய செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொரோனா வைரஸ் - மாதிரிப் படம் கொரோனா வைரசின் புதிய திரிபை சிலர் 'டெல்டா பிளஸ்' என்று அழைக்கிறார்கள். அத்திரிபு வழக்கமான டெல்டா திரிபை விட எளிதாக பரவக்கூடியதாக இருக்கலாம் என பிரிட்டனைச் சேர்ந்த நிபுணர்கள் தற்போது கூறுகின்றனர். யூகே ஹெல்த் செக்யுரிட்டி ஏஜென்சி எனப்படும் சுகாதார பாதுகாப்பு அமைப்பு, இத்திரிபை 'ஆய்வில் உள்ள திரிபு' என வகைப்படுத…

  7. பல வருடங்களுக்கு பின் வைத்தியசாலையில் ஒரு இரவை கழித்தார் எலிசபெத் மகாராணி பிரிட்டனின் 95 வயதான எலிசபெத் மகாராணி பல வருடங்களுக்கு பின்னர் முதல்முறையாக ஒரு இரவை வைத்தியசாலையில் கழித்துள்ளார். ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்காக லண்டனில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகாராணி, புதன்கிழமை இரவை வைத்தியசாலையில் கழித்துள்ளார். பின்னர் அவர் வியாழன் மதிய உணவு நேரத்துக்கு பின்னர் வின்ட்சர் கோட்டைக்கு திரும்பியுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. மகா ராணியின் இந்த மருத்துவ பரிசோதனைகளினால் வடக்கு அயர்லாந்திற்கான புதன்கிழமை விஜயமும் இரத்து செய்யப்பட்டது. 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு ராணி வைத்தியசாலையில் ஒரு இரவை கழித்தது இதுவே முதல…

  8. சீனா தாக்கினால் தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும் - ஜோ பைடன் உறுதி தாய்வானை பாதுகாப்பதில் எமக்கு அர்ப்பணிப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ஜோ பைடன், சீனா தாக்கினால் தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும் என்றும் கூறியுள்ளார். சி.என்.என். டவுன் ஹாலில் வியாழக்கிழமை நடைபெற்ற நேரடி உரையாடலின்போது, தாய்வானை பாதுகாப்பதாக உறுதியளிக்க முடியுமா என்று கேள்வி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் தொகுப்பாளரினால் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஆம், நான் சீனாவுடனான பனிப்போரை விரும்பவில்லை - நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்பதை சீனாவுக்குப் புரியவைக்க விரும்புகிறேன், நாங்கள் எங்கள் கருத்துக்களை மாற்றப்போவதில்லை" என்று பைடன் சி.என்.என்னின் பால்டிமோர் நகர் தொகுப்பாள…

  9. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 'ட்ரூத் சோஷியல்' (TRUTH Social) என்ற புதிய சமூக ஊடக வலைதளத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். "பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் கொடுங்கோன்மைக்கு எதிராக இந்த தளம் நிற்கும்" என்று கூறிய அவர், அமெரிக்காவில் எதிர்ப்புக் குரல்களை அந்த நிறுவனங்கள் அமைதிப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். அமெரிக்க அதிபர் போட்டிக்கு டிரம்ப் முன்னின்றபோது, அதில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்காற்றின. அவர் அதிபராக பதவி வகித்த காலத்தில், உலகை தொடர்பு கொள்ளும் சாதனமாக சமூக ஊடகங்களையே அவர் பயன்படுத்தினார். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வாரங்களில் டிரம்ப் ட்விட்டர் நிறுவனத்தால் தடை செய்யப்பட்டார். அமெரிக்க செனட் இயங்கி வந்…

  10. “கோவிட் நெருக்கடி 2022ஆம் ஆண்டு வரை நீளும்” – உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கைக்கு காரணம் என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஏழை நாடுகளுக்கு தேவையான கொரோனா தடுப்பு மருந்து கிடைக்காத காரணத்தால் கொரோனா தொற்று நெருக்கடி மேலும் ஒரு வருடத்திற்கு தொடரலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் பொருள், கொரோனா நெருக்கடி `வெகு சுலபமாக 2022 வரை நீளும்` என உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த தலைவரான ப்ரூஸ் அல்வேர்ட் தெரிவித்துள்ளார். பிற நாடுகளுடன் ஒப்பிட்டால் ஆப்ரிக்காவில் வெறும் 5 சதவீதம் பேருக்குதான் தடுப்பு மருந்து கிடைத்துள்ளது. இது பிற நாடுகளில் 40 சதவீதமாக உள்ளது. …

  11. பயங்கரவாத கூலிப்படையை உருவாக்க முயன்ற... முன்னாள் ஜேர்மன் வீரர்கள் கைது யேமனின் உள்நாட்டுப் போரில் சண்டையிட பயங்கரவாத கூலிப்படையை உருவாக்க முயன்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு முன்னாள் ஜேர்மன் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு ஜேர்மனியில் பொலிஸார் நடத்திய சோதனையை அடுத்து, கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வீரர்களைக் கொண்ட ஒரு தனியார் இராணுவத்திற்கு 150 ஆட்களை நியமிக்க அவர்கள் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. யேமனில் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சவுதி அரேபியா அரசுக்கு அவர்கள் தங்கள் சேவைகளை வழங்க விரும்பினர் என்றும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர். சவுதி அரேபியாவி…

  12. புதிய ஏவுகணை சோதனை வெற்றி – வடகொரியா நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட தமது புதிய ஏவுகணை சோதனை வெற்றியளித்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. வட கொரியா சமீபத்திய வாரங்களில் ஹைப்பர்சொனிக் மற்றும் நீண்ட தூரம் செல்லும் ஏவுகணை என பலவிதமான ஆயுத சோதனைகளை நடத்தி வருகின்றது. ஜப்பான் கடல் என்றும் அழைக்கப்படும் கிழக்கு கடலில் மற்றுமொரு ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டதாக தென்கொரியா நேற்று குற்றம் சாட்டியிருந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ள வடகொரியா, குறித்த ஏவுகணை புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டது என தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஏவுகணை கடந்த வாரம் வட கொரியாவில் நடந்த பாதுகாப்பு கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்…

  13. ஆப்கான் பொருளாதார வீழ்ச்சி அண்டை நாடுகளை பாதிக்கும் - சர்வதேச நாணய நிதியம் ஆப்கானிஸ்தானின் பொருளாதார பிரச்சினைகள் அண்டை நாடுகளான துருக்கி மற்றும் ஐரோப்பாவை பாதிப்பதுடன் அகதிகள் நெருக்கடியை ஊக்குவிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஆப்கான் பொருளாதாரம் 30% வரை பாதிப்படையும் -இது மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் தள்ளும் மற்றும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தும். ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகள் வர்த்தகத்திற்காக அதன் நிதியை நம்பியிருப்பதால் மேலும் பாதிக்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்பட்டு, மனிதாபிமானமற்ற உதவிகள் நிறுத்தப்பட்டதால், ஆப்கானிஸ்தானுக்கு பண வரவுகள் அனைத்தும் வற…

  14. UPDATE ; சிரியாவில் இராணுவ பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் பலி சிரியா தலைநகர் டமாஸ்கஸில் புதன்கிழமை அதிகாலையில் இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தினை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரு குண்டுத் தாக்குதல்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை காலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலினால் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சிரிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. சிரிய அரசு தொலைக்காட்சி மத்திய டமாஸ்கஸில் எரிந்த பேருந்தின் காட்சிகளைக் வெளிக்காட்டியுள்ளது. பொது மக்கள் வேலை மற்றும் பாடசாலைக்கு செல்லும் பரபரப்பான நேரத்தில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. ஒரு காலத்தில் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட புறநகர்ப் பகுதிகளை அரசுப் படைகள் கைப்பற்றிய ப…

  15. ஆக்கஸ்: தென்கிழக்கு ஆசியாவில் வல்லரசுகளின் போட்டி அதிகரிக்கக்கூடுமென இந்தோனேசியா- மலேசியா கவலை! ஆக்கஸ் முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியால், தென்கிழக்கு ஆசியாவில் வல்லரசுகளின் போட்டியை அதிகரிக்கக்கூடும் என இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகள் கவலை கொண்டுள்ளன. மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லாவை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்துப் பேசிய பின்னர், இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அண்டைய நாடான அவுஸ்ரேலியா உருவாக்குவது தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்குள் பிற நாடுகள் அடிக்கடி வருவதற்குத் தூண்டும். இதன்மூலம் வல்லரசு போட்டி அதிகரிக்கக…

  16. ஜப்பான் கடற்கரையில்... கண்டம் பாயும், ஏவுகணையை... பரிசோதித்தது வடகொரியா ஜப்பான் கடற்கரையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரியா மற்றும் ஜப்பானின் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். வட கொரியாவின் கிழக்கில் உள்ள சின்போ துறைமுகத்தில் இருந்து ஒரு ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் கூறியுள்ளனர். குறித்த ஏவுகணை ஜப்பான் கடல் என அழைக்கப்படும் கிழக்கு கடலில் தரையிறங்கியது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை மிகவும் வருந்தத்தக்கது என ஜப்பானின் பிரதமர் தெரிவித்துள்ளார். சமீபத்திய வாரங்களில், வடகொரியா ஹைப்பர்சொனிக் மற்றும் நீண்ட தூர கப்பல் ஏவுகணைக…

  17. பாக்தாத் முதல் கோராசான் வரை, தாக்குதல் தொடரும்: ஐ.எஸ். அமைப்பு எச்சரிக்கை! பாக்தாத் முதல் கோராசான் வரை தாக்குதல் தொடரும் என ஐ.எஸ். அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஷியா முஸ்லிம்கள் எங்கும் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவார்கள். பாக்தாத் முதல் கோராசான் வரை இந்தத் தாக்குதல் தொடரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல்க…

  18. ஈரானின், அணு ஆயுத தயாரிப்பை தடுத்து நிறுத்த... இராணுவ ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்: ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை! ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை தடுத்து நிறுத்த இஸ்ரேல் இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்காது என இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் யாயிர் லாபி தெரிவித்துள்ளார். அமெரிக்கா வந்துள்ள யாயிர் லாபி, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். தேவைப்பட்டால் இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளையும் எடுக்க இஸ்ரேல் தயங்காது. தீய சக்திகளிடமிருந்து உலகைப் பாதுகாக்க நாட…

  19. சூடான்: நெருக்கடி தீவிரமடைவதால் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை கோரும் போராட்டக்காரர்கள் சூடான் நாட்டு ஆட்சி அதிகாரத்தை இராணுவத்தினர் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் கைப்பற்ற வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். சூடான் தலைநகரான கார்டோமில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே, நேற்று (சனிக்கிழமை) இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டின் அரசியல் சூழல் மோசமடைந்து வருவதால் போராட்டக்காரர்கள் இராணுவ ஆட்சிக்கு கோரிக்கையை விடுத்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் அல் பஷீரின் ஆதரவாளர்கள் என கூறப்பட்டவர்களின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை முறியடிக்கப்பட்டதிலிருந்து நாட்டில் நெருக்கடி மேலும் மோசமாகிவிட்டது. 2019ஆம் ஆண்டு ஒமர் அல் பஷீரின் ஆட்சி கலைக்கப்பட்ட பின், …

  20. பிரிட்டிஷ் எம்.பி டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் பலி - என்ன நடந்தது? 15 அக்டோபர் 2021, 14:41 GMT புதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UK PARLIAMENT கன்சர்வேடிவ் எம்.பி. சர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். பிரிட்டன் உள்ளூர் நேரப்படி பகல் 12 மணியளவில் லீ-ஆன்-சீ-யில் எம்.பி சர் டேவிட் அமேஸ் கத்தியால் குத்தப்பட்டதாக தங்களுக்கு தகவல் வந்ததாகவும் அதன் பேரில் ஒருவரை கைது செய்ததாகவும் எஸ்ஸெக்ஸ் காவல்துறையினர் தெரிவித்தனர். பிடிபட்ட நபரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்…

  21. பெய்ரூட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ; ஆறு பேர் பலி, 32 பேர் காயம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர். ஷியா முஸ்லிம் குழுக்களான ஹிஸ்புல்லா மற்றும் அதன் ஆதரவாளர்கள் ஆகியோர் கடந்த ஆண்டு நகரத்தின் துறைமுகத்தில் நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பை விசாரித்த நீதிபதிக்கு எதிராக வியாழக்கிழமை திரண்டதால் இந்த துப்பாக்கி சூடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. லெபனான் படைகள் ( Lebanese Forces) பிரிவைச் சேர்ந்த வீரர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். 219 பேரைக் கொன்ற பெய்ரூட் துறைமுக வெடிப்பு தொடர்பான விசாரணையை பெரும் பதற்றம் சூழ்ந்துள்ளது. நீதிபதி பக்கச்சார்பானவர் என்…

  22. பிரித்தானியாவில்... 2020ஆம் ஆண்டு நடுப்பகுதியில், எயார் டாக்ஸி: வெர்டிகல் எயிரோஸ்பேஸ் திட்டம்! பிரித்தானியாவில் 2020ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எயார் டாக்ஸிகள் வானை அலங்கரிக்கும் என வெர்டிகல் எயிரோஸ்பேஸ் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெர்டிகல் எயிரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீபன் ஃபிட்ஸ்பேட்ரிக் கூறுகையில், ‘2025ஆம் ஆண்டு இந்த டாக்ஸி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இதற்காக அமெரிக்காவின் பிளான்க் செக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். 193 கிமீ தூரம் வரை, சுமார் 4 பேரை ஏற்றிச் செல்லும் இந்த டாக்ஸி திட்டத்தில் உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. ஏவவான், ஹனிவெல், ரோல்ஸ்ராய்ஸ் மற்றும…

  23. குர்துப் படையினர்... தங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்க, அமெரிக்கா- ரஷ்யா தவறிவிட்டது: துருக்கி! சிரியாவில் குர்துப் படையினர் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்க அமெரிக்காவும் ரஷ்யாவும் தவறிவிட்டதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் காவுசோகுலு கூறுகையில், ‘துருக்கி மீது சிரியாவின் குர்துப் படையினர் அண்மையில் நடத்தியுள்ள தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் ரஷ்யாவும்தான் பொறுப்பேற்க வேண்டும். காரணம், எங்கள் மீது தாக்குதல் நடத்தாமல் குர்துப் படையினரைக் கட்டுப்படுத்தப் போவதாக அளித்த வாக்குறுதியை அவர்கள் மீறிவிட்டனர். குர்துப் படையினர் எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்தப்படும் சிரியா எல…

  24. தாய்வானில் 13 மாடி கோபுரத் தொகுதியில் தீ விபத்து: 46பேர் உயிரிழப்பு- பலர் காயம்! தெற்கு தாய்வானில் 13 மாடி கோபுரத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 46பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் காவோசியுங் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 79பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இதில் 14பேர் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் தீயணைப்பு துறை தெரிவித்தது. நான்கு மணி நேர கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் கூறினர். இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னமும் தெளிவாக தெரியாத…

  25. (சிஎன்என்) முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் கலிபோர்னியா பல்கலைக்கழக இர்வின் மருத்துவ மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கோவிட் அல்லாத தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். யுசி இர்வின் மருத்துவ மையத்தின் மருத்துவத் தலைவர் டாக்டர் அல்பேஷ் அமீனின் வியாழக்கிழமை மாலை ஒரு கூட்டு அறிக்கையின்படி, அவர் ஐசியூவில் நெருக்கமான கண்காணிப்புக்காக அனுமதிக்கப்பட்டு, IV நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் திரவங்களை வழங்கினார். தொடர்ந்து கண்காணிப்பதற்காக அவர் மருத்துவமனையில் இருக்கிறார். கிளிண்டனின் தனிப்பட்ட முதன்மை மருத்துவர் டாக்டர் லிசா பார்டாக். "இரண்டு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, அவரது வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, மேலும் அவர் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு நன்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.