Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்கா தலைமையில் கூடிய சீன எதிர்ப்பு கூட்டணி 12 Views ஆசியாவின் நேட்டோ என அழைக்கப்படும் நான்கு நாடுகளின் கூட்டணித் தலைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (12) முதல் தடவையாக ஒன்றாக கூடி கலந்துரையாடியுள்ளனர். காணொளி ஊடாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹரிஸ், யப்பான் பிரதமர் ஜோசிகைட் சூகா, அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிஸன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். கோவிட்-19 நெருக்கடி தொடர்பான விடயங்கள் ஆரயப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் படைத்துறை வளர்ச்சிளை தடுக்கும் நடவடிக்கைகளும் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தெரிவிக…

  2. பிரேசிலின் கொரோனா நெருக்கடி : உலகின் பிற பகுதிகளுக்கு அச்சுறுத்தலாக மாறி வருவது ஏன்? பிரேசிலைத் தாக்கிய கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த நாடு இப்போது 70,000-க்கும் அதிகமான பாதிக்கப்பட்டவர்களை, தினசரி 2,000 இறப்புகளையும் பதிவு செய்கிறது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழக தரவுகளின்படி, பிரேசில் கடந்த வாரம் 4,75,503 புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களையும் 11,009 இறப்புகளையும் பதிவு செய்தது. இவை இரண்டும் மிக உயர்ந்தவை. மார்ச் 10 அன்று, இந்த நாட்டில் 2,286 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன. இது ஒரு நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான எண்ணிக்கை என்று Reuters தெரிவித்துள்ளது. மேலும் இது, 80,000 புதிய பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் …

  3. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானியா பொருட்களின் ஏற்றுமதி வீழ்ச்சி! ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானியா பொருட்களின் ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் 40.7 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இறக்குமதி 28.8 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் புதிய வர்த்தக விதிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இந்த புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது. கூர்மையான வீழ்ச்சி இருந்தபோதிலும், இது தற்காலிக காரணிகளின் விளைவாக இருக்கலாம் என்று தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் கூறியுள்ளது. இதற்கிடையில், மூன்றாவது முடக்கநிலை நடைமுறைக்கு வந்ததால், ஜனவரி மாத…

  4. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பிரஜையொருவக்கு குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 44 வயதான சம்பத் சமரநாயக்க என்பவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (2018) பிரிஸ்பேனின் இரவு விடுதியொன்றில் தன்னை, டெக்ஸி வாகன சாரதியாக போலியாக அடையாளம் காட்டி, ஐந்து பெண்களை அழைத்துச் சென்றுள்ளதுடன், அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர் மீது பிரிஸ்பேன் மாவட்ட நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமைகள், சுதந்திரத்தை பறித்தல், அநாகரீகமான செயல்கள் மற்றும் பொதுவான தாக்குதல் உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது. இந் நிலையில் வியாழக்கிழமை 18 குற…

    • 2 replies
    • 582 views
  5. உலகளவில் ஒரு தலைமுறையே பாதிக்கப்படும் அபாயம்- யுனிசெஃப் எச்சரிக்கை! குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் வளர்ச்சியை அளவிடும் குறிகாட்டிகள் அனைத்தும் கடந்த ஒரு வருட கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் யுனிசெஃப் அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது. பாடசாலைகள் மூடப்பட்டமை, வறுமை, கட்டாயத் திருமணங்கள் மற்றும் மன அழுத்தம் ஆகியவை சிறார்களின் வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், ஒரு தலைமுறையே இதனால் பாதிக்கப்படும் என்றும் யுனிசெஃப் குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில், பசி, தனிமை, துஷ்பிரயோகம், பதற்றம், வறுமையில் வாடும் மற்றும் திருமணத்திற்குத் தள்ளப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என ய…

  6. சீனாவின் சைபர் தாக்குதல்கள்... சைபர் போருக்கான அறிகுறியா? பிரசன்னா ஆதித்யா Cyber Warfare சீனா தங்கள் நாட்டு இணையத்தைச் சுற்றி Great Firewall of China-வை உருவாக்கியிருக்கிறது. ஆனால், இந்தியாவிடமோ எந்த தற்காப்புத் திட்டமோ அல்லது தாக்குதல் திட்டமோ இல்லை. இந்தியா விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. இரண்டாம் உலகப் போரை அடுத்து, உலகில் பெரும் சேதத்தை விளைவிக்கும் வகையில் எந்தப் போரும் நிகழவில்லை. போர் என்று வந்துவிட்டால் அது அதைத் தொடர்புடைய அனைத்து நாடுகளையும் பாதிக்கும். இரண்டாம் உலகப் போர் மாதிரியான இன்னொரு போர் உலகில் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு குறைவுதான். ஏனெனில் அதனால் ஏற்படக்கூடிய சேதங்களையும், பாதிப்புகளையும் அனைத்து நா…

    • 1 reply
    • 907 views
  7. அபூர்வ வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு! சுவிஸ் எல்லையிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இத்தாலிய கிராமம் ஒன்றில், அபூர்வ வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் எல்லைக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அபூர்வ வகை கொரோனா வைரஸ், இதற்கு முன்னர் தாய்லாந்தில் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபூர்வ வகை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர் அண்மையில் எகிப்திலிருந்து வருகை தந்துள்ளதாக கருதப்படுகிறது. http://athavannews.com/அபூர்வ-வகை-கொரோனா-வைரஸ்-க/

  8. அரச குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஹரி- மேகன் மார்க்கல்! பிரித்தானிய இளவரசரும் சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹரி மற்றும் அவரது மனைவியும் சீமாட்டியுமான மேகன் மார்க்கல் ஆகிய இருவரும் அரச குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், தங்களது தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சவால்கள் குறித்தும் பகிர்ந்துக் கொண்டுள்ளனர். பிரபல அமெரிக்க தொலைக்காட்சியான சிபிஎஸ் ப்ரைம்டைம் ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய இரண்டு மணி நேர நேர்காணலில் வெளியிட்ட விபரங்கள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன. அரச குடும்ப வாழ்க்கை குறித்த மேகனின் கருத்துக்களை ஓப்ரா கேட்டபோது, ‘நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை. இதை நான் ஹரியிடம் கூறுவ…

  9. புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு துனிசிய கடற்பரப்பில் கவிழ்ந்ததில் 39 பேர் பலி சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் தெற்கு துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸ் கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை மூழ்கி விபத்துக்குள்ளானதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலோர காவல்படை 165 பேரை மீட்டது, மேலும் தப்பிப்பிழைத்தவர்களுக்கான தேடல்கள் ஸ்ஃபாக்ஸ் கடற்கரையில் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்று துனிசிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மொஹமட் ஜெக்ரி தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்த அனைத்து குடியேற்றவாசிகளும் சகாரா-கீழமை ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார். துனிசிய துறைமுக நகரமான ஸ்பாக்ஸுக்கு அருகிலுள்ள கட…

  10. உய்குர் இன முஸ்லீம்களைச் சீனா இனப்படுகொலை செய்துள்ளதாக அறிக்கை வெளியானது! உய்குர் இன முஸ்லீம்களை சீனா இனப்படுகொலை செய்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சிந்தனைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளதாகவும், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜின்ஜியாங் பகுதி தடுப்பு முகாம்களின் தாயகமாக இருப்பதாகவும் அங்கு வைக்கப்பட்டுள்ள முஸ்லீம் பெண்கள் பாலியல் வன்கொடுமை, பொது அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும் அந்த அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளத…

  11. எக்குவடோரிய கினியா வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 98 ஆக உயர்வு மத்திய ஆபிரிக்க நாடான எக்குவடோரிய கினியின் முக்கிய நகரமான பட்டாவில் அமைந்துள்ள இராணுவ தளமொன்றில் ஏற்பட்ட தொடர்ச்சியான வெடி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்வடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். அதேநேரம் கடலோர நகரமான பட்டாவில் உள்ள 'Nkoantoma' என்ற இராணுவத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் சுமார் 615 பேர் காயமடைந்தனர். 1979 முதல் நாட்டின் ஜனாதிபதியாகவுள்ள தியோடோரோ ஒபியாங் நுயெமா, டைனமைட்டைக் கையாள்வது தொடர்பான “அலட்சியம்” தான் பேரழிவிற்கு காரணம் என்றும், வெடிப்புகள் பட்டாவில் உள்ள அனைத்து வீடுகளையும் கட்டிடங்களையும் சேதப்படுத்தியதாகவும் …

  12. சுவிற்சர்லாந்தில் மூன்று முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கான சட்டமூலங்களுக்கான பொதுசன வாக்கெடுப்பு இன்று நடைபெற்றாலும் அதில் முக்கியமாக மக்கள் பேசுபொருளாக இருப்பது பர்தா எனப்படும் முகத்தை மூடும் ஆடைகளை அணிவதை தடை செய்வதற்கான சட்டமூலம் ஆகும். இச்சட்டத்தின் பிரகாரம் பொது இடங்களில் முகத்தை மூடும் ஆடைகளை எவரும் அணிய முடியாது. இருந்தாலும் சுகாதாரகாரணங்கள்,காலநிலை, வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். சுவிற்சர்லாந்தில் பல ஆண்டுகளாக இத்தடை சட்டமூலம் பற்றிய பல வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்டமூலத்திற்கு ஆதரவான தரப்பினர் மூன்று வாதங்களை முன்வைக்கின்றார்கள். அதன் கருத்தில், முகத்தை மறைப்பது ஒரு சுதந்திர சமுதாயத்தில் ஒன்றாக வாழ…

    • 7 replies
    • 1.1k views
  13. சிங்கப்பூர் வளர்ச்சிக்கு இதான் காரணம்!! Law Minister-ஆக கலக்கும் தமிழர் பேட்டி

    • 0 replies
    • 504 views
  14. உலகின் மிகச் சுதந்திரமான நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு மூன்றாம் இடம்! உலகின் மிகச் சுதந்திரமான 10 நாடுகளின் பட்டியலில், கனடாவுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. 210 நாடுகளை உள்ளடக்கிய ஃப்ரீடம் ஹவுஸின் இந்த ஆய்வில், அரசியல் உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் அணுகுவதன் மூலம் தரம் தீர்மானிக்கப்பட்டது. இதில் பின்லாந்து, நோர்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் 100 மதிப்பெண்களைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்தன. நியூசிலாந்து 99 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது. நெதர்லாந்து, உருகுவே மற்றும் கனடா ஆகிய நாடுகள் 98 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தது. கனடாவுக்கு குறிப்பாக, அரசியல் உரிமைகளுக்காக 40 க்கு 40 மற்றும் சிவில் உரிமைகளுக்காக 60க்கு 58 வழ…

  15. சீனாவுக்குச் செல்லும் பயணிகளுக்கு குதவழி (மலம்) கோவிட் பரிசோதனை? சீனாவுக்குச் செல்லும் சர்வதேச பயணிகளில் குத வழி (மலம்) கோவிட் பரிசோதனை? சீனாவின் சில நகரங்களுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகளை அதிகாரிகள் குத வழி கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்துவதாகக் கிடைத்த செய்திகளைத் தொடர்ந்து பல நாடுகள் கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றன. இந்த வாரம் தனது குடிமக்களில் இப்படியான பரிசோதனைகளைச் செய்ததாகவும் இதனால் அவர்கள் உளவியல் ரீதியாக மோசமான பாதிப்புக்களை எதிர்கொண்டதாகவும், யப்பானிய அரசு முறைப்பாடொன்றைச் செய்துள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. பெப்ரவரி மாதத்தில் சில அமெரிக்க ராஜதந்திரிகள் இப்படியான பரிசோதனைகளைச் செய்யும்படி வற்புறுத்தப்பட்டதாகவும…

  16. கொரோனா நிவாரண நிதியாக அமெரிக்கர்களுக்கு தலா 1400 டாலர் வழங்கும் பணி துவக்கம் - ஜோ பைடன் அறிவிப்பு வாஷிங்டன், உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.‌ அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.‌ இதனிடையே தற்போதைய ஜனாதிபதி டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்சினையைக் கையாளுவேன் என்ற பிரசாரத்தின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் கடந்த ஜனவரி 20-ம்…

  17. ஐந்தாவது நாளாகவும் பற்றி எரியும் லெபனான் லெபனானின் பராமரிப்பாளர் பிரதம அமைச்சர் ஹசன் டயப், ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தனது கடமைகளை செய்வதை நிறுத்தப்போவதாக அச்சுறுத்தியதால், எதிர்ப்பாளர்கள் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக லெபனான் முழுவதும் வீதிகளை முடக்கி, டயர்கள் மற்றும் தளபாடங்களுக்கு தீ வைத்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். சனிக்கிழமையன்று புதுப்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் லெபனான் நாணயத்தின் சரிவு குறித்த கோபத்தின் மத்தியில் எழுச்சி பெற்றது. லெபனானின் நாணய சரிவின் விளைவாக விலைகள் கூர்மையாக அதிகரித்துள்ளன, அதே போல் எரிபொருள் ஏற்றுமதிகளின் வருகையும் தாமதமாகி, நாடு முழுவதும் அதிக மின்வெட்டுக்கு வழிவகுக்கி…

  18. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல் பிரேஸிலில் பரவும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் தடுப்பூசி மருந்தான சினோபார்ம் போதிய கொரோனா எதிர்ப்பு சக்திகளை உருவாக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்த கேள்விக்கு சினோபார்ம் நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளுக்கு சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகளை சீனா ஏற்றுமதி செய்து வருகிறது. https://athavannews.com/உருமாற்றம்-அடைந்த-கொரோனா/

  19. திருத்தந்தை பிரான்சிஸ் இன்று ஈராக்குக்கு திருப்பயணம் 19 Views உலக கத்தோலிக்க மக்களின் ஆன்மீகத் தலைவர் 84 வயதுடைய திருத்தந்தை பிரான்சிஸ், போரினால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட ஈராக் நாட்டுக்கு இன்று ‘அமைதிக்கான திருப்பயணி’ யாக தனது திருப்பயணத்தை மேற்கொள்கிறார். கோவிட்-19 நோய்த்தொற்று உலகை ஆக்கிரமித்ததன் பின்னர் திருத்தந்தை ஆரம்பிக்கும் முதலாவது திருப்பயணம் இதுவாகும். திருத்தந்தையின் ஈராக் திருப்பயணத்தைக் கௌரவிக்கும் முகமாக ஈராக்கின் இஸ்லாம் ஆயதக்குழுக்களில் ஒன்றான ‘குருதிப்படையின் பாதுகாவலா’ என அறியப்படும் (Gurardians of Blood Brigade) ஓர் போராட்டக்குழு தற்காலிக ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை அறிவித்திருக்கின்றது. …

  20. மியன்மாருக்கான அமெரிக்காவின் மற்றொரு பலத்த அடி அமெரிக்க வணிகத் துறை வியாழக்கிழமை மியன்மாரின் பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் இரண்டு வணிக நிறுவனங்களை அதன் வர்த்தக தடுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. அதேநேரம் அமெரிக்க வர்த்தகத் துறை மியான்மருக்கு எதிரான அதிக ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் அறிவித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஏற்றுமதி நிர்வாக விதிமுறைகளுக்கு உட்பட்ட பொருட்களை பர்மிய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பர்மிய உள்துறை அமைச்சகம், ஆட்சி மாற்றத்திற்கு பொறுப்பான நிறுவனங்கள் மற்றும் சொந்தமான மற்றும் இயக்கப்படும் இரண்டு வணிக நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்துகிறது. தற்போதைய இராணுவ அரசாங்கத்தின் நியாயத்தன்மையை…

  21. ஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவுதி அரசாங்கம்! புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என சவுதி அரேபியா அரசாங்கம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில், ‘புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். அவ்வாறு சான்றளிக்காதவர்களுக்கு கட்டாயத் தடுப்பூசி போடப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சவுதியில் உள்ளவர்கள் மட்டுமே ஹஜ் சென்று வரும் நிலையில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை அனுமதிப்பது குறித்து அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ‘தடுப்பூசி என்பது எதிர்வரும் ஹஜ் புனித பயண அனுமதி பெறுவதற்கான முக்கிய ந…

  22. நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, நடுவானில் பற்றி எரிந்த போயிங் 777 ரக விமான எஞ்சின் அமெரிக்க விமான நிறுவனமான போயிங்கின் 777 ரக விமானத்தின் எஞ்சின் எரிந்து நடுவானில் அதன் பாகங்கள் வெடித்துச்சிதறிய சம்பவம் காரணமாக, அத்தகைய இயந்திர கோளாறு சாத்தியம் மிகுந்த 777 ரகத்தைச் சேர்ந்த 128 விமானங்களை தரையிறக்க போயிங் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை டென்வரில் இருந்து ஹோனோலூலு நகர் நோக்கி யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 777 ரக விமானம் 231 பயணிகளுடன் புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த விமானத்தின் எஞ்சின் பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதனால், அ…

  23. மேகனுக்கு... இங்கிலாந்து நாளிதழ் நஸ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டது தொடர்பாக மேகனுக்கு இங்கிலாந்து நாளிதழ் நஸ்டஈடு வழங்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஹரி – மேகன் மேர்க்கல் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர். வின்ட்சர் கோட்டை தேவாலயத்தில் இவர்களது திருமணம், கோலாகலமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடிகை மேகன், இளவரசி மேகன் ஆக மாறினார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஹரி – மேகன் தம்பதி இங்கிலாந்து அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்து அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் குடியேறினர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், மேகன் மீண…

  24. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீது ஏவுகணை தாக்குதல் ஜெட்டா வுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் ம் ஈது ஏமனின் ஹவுத்தி படைகள் ஏவுகணையை வீசியதாக ஹவுத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்தார், ஆனால் சவுதி அதிகாரிகளிடமிருந்து உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை.இத்தாக்குதலில் அரம்கோவில் உள்ள ஒரு நிலையம் வெடித்து சிதறியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹவுத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரியா டுவிட்டர் பதிவில், ஏவுகணையைப் பயன்படுத்தி விடியற்காலையில் இந்த தாக்குதல் நடந்தது என்றும், அதன் இலக்கை விரிவாக விவரிக்காமல் தாக்கி…

  25. சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று ஆஃப்கன் பெண் ஊடகவியலாளர்கள்... அதிர்ச்சியில் உலக நாடுகள்! சு.கவிதா Guns (Representational Image) ( Image by Clker-Free-Vector-Images from Pixabay ) ஊடகங்களில் பணியாற்றுபவர்களுக்கு பாதுகாப்பே இல்லாத ஒரு நாடாக ஆஃப்கானிஸ்தான் இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் ஊடகத் துறையில் பணியாற்றும் 15 பேர் ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்டிருக்கின்றனர். செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்களைக் குடியமர்த்தும் முயற்சியில் ஈடுபடும் அளவுக்கு ஒரு பக்கம் உலகம் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டு இருந்தாலும், வேலைக்குச் செல்வதில் ஆரம்பித்து வாகனம் ஓட்டுவதற்கான அனுமதியைப் பெறுவதுவரை ஒவ்வோர் அடிப்படை உரிமைக்கும் பெண்களில் பலர் போராடவே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.