Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்த பகுதி கண்டுபிடிப்பு- கடலில் விழுந்து வெடித்தது என தகவல்கள் Digital News Team இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என கருதப்படும் பகுதியை கண்டுபிடித்துள்ளதாக இந்தோனேசிய அதிகரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசிய தலைநகரிலிருந்து புறப்பட்ட விமானம் ஜகார்த்தா கடலில் விழுந்து நொருங்கியிருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. 62 பேருடன் புறப்பட்ட ஸ்ரீவிஜய எயர் ஜெட் புறப்பட்டசில நிமிடங்களில் ராடரிலிருந்து காணாமல்போயுள்ளது. இந்நிலையிலேயே விமானம் கடலில் விழுந்த பகுதியை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட கப்பல்களையும் கடற்படையி…

  2. ஜோ பைடன் பதவி ஏற்க முன்னர்... நாடு முழுவதும் ஆயுதப் போராட்டங்கள் – புலனாய்வுப்பிரிவு எச்சரிக்கை அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்க முன்னர் நாடு முழுவதும் ஆயுதப் போராட்டங்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புலனாய்வுப் பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். இந்தப் பின்னணியில் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் ஆயுதப் போராட்டங்களை நடத்துவற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு எச்சரித்துள்ளது. எனினும் தான் பதவியேற்பதற்கு அச்சப்படவில்லை என ஜோ…

  3. கொரோனாவின் உருவாக்கம் குறித்து 14ஆம் திகதி சீனாவில் விசாரணை கொரோனா வைரஸ் உருவான விதம் குறித்து நேரடி விசாரணை நடத்துவதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு 14ஆம் திகதி சீனாவுக்கு நேரில் செல்கிறது. உலக சுகாதார நிறுவன நிபுணர் குழுவின் வருகைக்கு சீனா நேற்று அனுமதி அளித்தது. இதை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து எதிர்வரும் 14ஆம் திகதி உலக சுகாதார நிறுவனத்தின் 10 பேர் கொண்ட நிபுணர் குழு, சீனாவுக்கு சென்று நேரடி விசாரணை நடத்தும் என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. அக்குழு உகான் நகருக்கு செல்லும்போது, சீன நிபுணர்களும் உடன் செல்வார்கள் என்றும் கூறியுள்ளது. இதன்மூலம் கொரோனா உருவானது பற்றிய விசாரணையில் நிலவிய தாமதம் முடிவுக்கு வந்துள்ளது.…

  4. நேரம் வியாழன் இரவு 11 ; ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரிட்டன் நான்கு வருடங்கள், 27 வாரங்கள் மற்றும் இரண்டு நாட்களுக்குப் பிறகு நாட்டைப் பிளவுபடுத்திய வாக்கெடுப்புக்குப் பின்னர் பிரிட்டன் வியாழக்கிழமை இரவு ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுப் பாதையில் இருந்து வெளியேறியது. இது பிரிட்டனை அரசியல் ரீதியாகப் பிரித்து, நவீன காலங்களில் உலக அரங்கில் நாட்டின் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. பிரிட்டனின் வெளியேற்றமானது ஒரு சுயாதீனமான உலக சக்தியாக புதிய வாய்ப்புகளைத் தொடர நாட்டை விடுவிக்கும் என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர். எனினும் விமர்சகர்கள் இது அதன் நெருங்கிய அண்டை நாடுகளுடனான பல தசாப்த கால ஒருங்கிணைப்பை மாற்றியமைக்கிறது மற்றும் பிரிட்டனை உடைப்…

  5. லண்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றினால் 30 பேருக்கு ஒருவர் வீதம் பாதிப்பு! லண்டனில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றினால் 30 பேருக்கு ஒருவர் வீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார். வைரஸின் பரவல் வெகுவாகக் குறைக்கப்படாவிட்டால், அடுத்த இரண்டு வாரங்களில் நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாமல் போய்விடுவோம் என்பதுதான் உண்மை’ என அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘நாங்கள் ஒரு பெரிய சம்பவத்தை அறிவிக்கிறோம், ஏனெனில் இந்த வைரஸ் எங்கள் நகரத்திற்கு அச்சுறுத்தல் நெருக்கடி நிலையில் உள்ளது. இப்போது நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், எங்கள் என்ஹெச்எஸ் (தேசிய சுகாதார சேவை) அதிகமாகிவிடக்கூடும். மே…

  6. அனைவரின் முன்னால் நம்மை சிறுமைப்படுத்துவது என்றால் அது என்ன நிறவெறி? சிட்னி நிறவெறி குறித்து அஸ்வின் கடும் வேதனை Digital News Team கருப்பினத்தவர், இந்தியர்கள், ஆசியர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு எதிராக நிறவெறி வசைபாடும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் குறித்து அஸ்வின் கடும் வேதனையுடன் பேட்டியில் கண்டனம் தெரிவித்துள்ளார். சிட்னியில் குறிப்பாக ரசிகர்களில் ஒருபிரிவினர் படுமோசமாக நடந்து கொள்வது வழக்கமாகி வருகிறது, அன்று பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு எதிராக நிறவெறி வசையை, கேலியைக் கட்டவிழ்த்து விட்டனர் சிட்னி ரசிகர்கள், ஆஸ்திரேலியாவில் இது மிகவும் சீரியசாகப் பார்க்கப்படும் விஷயம், புகார் தெரிவித்தால் ரசிகர்கள் மீது கடும் நடவடிக்க…

  7. போப் பிரான்சிஸின் தனிப்பட்ட வைத்தியர் உயிரிழப்பு போப் பிரான்சிஸின் தனிப்பட்ட வைத்தியர் கொவிட் தொடர்பான சிக்கல்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக வத்திக்கான் செய்தித்தாளான 'L'Osservatore Romano' ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் போப்பாண்டவரின் தனிப்பட்ட வைத்தியராக ஃபேப்ரிஜியோ சோகோர்சி நியமிக்கப்பட்டார். 78 வயதான வைத்தியர் ஃபேப்ரிஜியோ சோகோர்சி, ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். வத்திக்கான் பிரஜைகளுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போப் பிரான்சிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். …

  8. அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவருக்கு கொரோனா Digital News Team அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். இலங்கை தூதரகத்தின் நான்கு பணியாளர்களும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவிற்கான இலங்கை தூதரகம் இதனை அறிவித்துள்ளது. Thinakkural.lk

  9. வட கொரியா கிம் வம்ச ஆட்சி: தாத்தா, மகன், பேரன் சர்வாதிகாரப் பரம்பரை காலூன்றியது எப்படி? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிம் இல் சங் வட கொரியா ஒரு கம்யூனிச நாடு. சமத்துவத்தை வலியுறுத்தும் கம்யூனிச சித்தாந்தம் ஒரு நாட்டில் தாத்தா, மகன், பேரன் என்று வாரிசுரிமை ஆட்சிக்கு வழிவகுக்குமா? என்று நீங்கள் ஆச்சரியத்தோடு கேட்கலாம். ஆனால், வட கொரியாவில் அப்படித்தான் நடந்திருக்கிறது. வட கொரியாவின் நிறுவனர் கிம் இல் சங் ஆட்சி. பிறகு அவரது மகன் கிம் ஜோங் இல் ஆட்சி. பிறகு தற்போது…

  10. வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுனரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், கல்விமானுமாகிய கலாநிதி சுரேன் ராகவன், சிறிலங்கா நாடாளுமன்றில் அண்மையில் ஆற்றியிருந்த உரை கனடா வாழ் தமிழ் மக்களின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றது. கலாநிதி ராகவன் தனது நாடாளுமன்ற உரையின் மூலம் கனடா வாழ் தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளதாகவும், கனடா தமிழ் மக்களை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் காட்டிக்கொடுத்துவிட்டதாகவும், கனடா மக்கள் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பதிவு செய்து வருகின்றார்கள். இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப் படுகொலையே என்று வலியுத்தி கனடா ஒன்ராரியோ சட்டசபையில் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்’ தொடர்பான 104 என்ற சட்டமூலம் முன்மொழியப்பட்டிருந்தத…

  11. ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன்- ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20ஆம் திகதி ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார். ஜோ பைடனின் வெற்றியை காங்கிரஸ் உறுதிப்படுத்திய நிலையில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் புதன்கிழமை வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில், ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தாமதித்து வன்முறைக்கு கண்டனம் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வன்முறைச் சம்பவம் உலகத் தலைவர்களின் கண்டனங்களுக்கும் உள்ளாகியுள்ளது. இதேவேளை, தமது பதவிக்காலத்தில், தமது குடும்பத்தினர், ஆலோசகர்கள் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஏதேனும் குற்றம் செய்திருந்தால் அதற்கான மன்னிப்புப் பட்டிய…

    • 2 replies
    • 560 views
  12. நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள் – பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பெண் உயிரிழப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கட்டடத்தினுள் நுழைந்தவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றாலும் அதனை ட்ரம்பும் அவரது ஆதரவாளர்களும் ஏற்க மறுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அவையில் இருந்தனர். அதேநேரத்தில், ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்…

    • 26 replies
    • 2.1k views
  13. டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கிய டுவிட்டர் நிறுவனம்: ஆதரவாளர்கள் அதிர்ச்சி வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்து, சான்று அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டம் 6-ந் தேதியன்று நடைபெற்றது. அப்போது, தோல்வி அடைந்த தற்போதைய ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு, நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, வன்முறையில் இறங்கினர். துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு நிலைமை விபரீதமானது. துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க வரலாற்றில் முன் எப்போதும் நடந்திராத வகையில் அரங்கேறிய வன்செயல்கள், ஜனநாயக…

  14. கொறோணாவைரஸின் மூலத்தை அறியச் சென்ற உலக சுகாதார நிறுவன நிபுணர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு கொறோணாவைரஸின் மூலத்தைத் தேடி ஆராய்ச்சிக்காக வூஹானுக்குப் பயணம் செய்யவிருந்த உலக சுகாதார நிறுவன நிபுணர்களுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது. சீனாவின் இந் நடவடிக்கை தனக்கு மிகவும் ஏமாற்றம் தருவதாக அவ்வமைப்பின் தலைவர் ரெட்றோஸ் அடனோம் கெப்றியேசுஸ் தெரிவித்துள்ளார். கொறோணாவைரஸ் எங்கிருந்து உருக்கொண்டது என்பதனை அறிவதற்காக 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவைச் சீனாவின் வூஹான் மாகாணத்திற்கு அனுப்ப உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டிருந்தது. இதன் முதற்கட்டமாக இக்குழுவிலுள்ள இருவர் முதலில் சீனாவிற்குச் செல்வதற்காக சீனா, உலக சுகாதார நிறுவனம், இடைத் தரிப்பு நாடுகள் ஆகியவற்றிடையே போக்குவர…

  15. டொனால்ட் ட்ரம்ப்பை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பித்தது ஈராக் நீதிமன்றம்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பித்து ஈராக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஈரானின் புரட்சிப் படைத்தளபதி காசிம் சோலெய்மனியை ஆள் இல்லா விமானம் மூலம் அமெரிக்க இராணுவம் ரொக்கெட் தாக்குதல் நடத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கிலேயே இன்று (வியாழக்கிழமை) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தளபதி காசிம் சோலெய்மனி, அவரின் மருமகன் முகந்திஸ் உள்ளிட்ட ஒன்பது பேர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாம் திகதி ஈராக்கின் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அமெரிக்கர்களைக் கொல்வதற்கு சோலெய்மனி திட்டமிட்டதால் அவரைக…

  16. டிரம்பின் அடுத்த திட்டம்: அச்சத்தில் அமெரிக்கவாழ் தமிழர்கள் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்து புதிய அதிபராக ஜோ பைடனின் வெற்றியை அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ள வேளையில், இந்த சம்பவம் குறித்து அங்கு வாழும் இந்தியர்கள் தங்களின் உணர்வுகளை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்கள். வாஷிங்டன் பல்கலைக்கழக முன்னாள் டீன் ஆர்.சி.சரவணபவன், ”மக்கள் மாக்களாக வெகுநேரம் ஆகாது என்பதற்கு அமெரிக்க கேப்பிட்டலில் புதன்கிழமை நிகழ்ந்த காட்சிகளே சாட்சி. டிரம்ப் தனது அரசியல் ஆதாயத்திற்காக மக்களை உணர்ச்சிவயப்படுத்தி, பொய்களைப் புகுத்தி, மக்களாட்சியின் அடிப்படை நாகரிகத்த…

  17. அமெரிக்க கேப்பிட்டல் வன்முறை: 207 வருட பழைய வரலாறு தெரியுமா? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க கேப்பிட்டல் கட்டடத்தில் புதன்கிழமை நடந்த வன்முறை போல 207 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஆளும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களால் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நிகழ்ந்த வன்முறைதான் உலகம் முழுக்க வியாழக்கிழமை தலைப்புச் செய்திகளாகின. இந்த சம்பவத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் மருத்துவ அவசரநிலை காரணமாக உயிரிழந்திருக்கலாம் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன. உ…

  18. மலேசிய காட்டில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி இறந்தது எப்படி? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FAMILY HANDOUT மலேசிய காட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் அவர் உயிரிழந்தது தொடர்பான காரணத்தை, தவறான சாகச பயணத்தின்போது ஏற்பட்ட விபத்து என்று விசாரணை நடத்தியவர் தெரிவித்துள்ளார். தென்மேற்கு லண்டனில் பால்ஹாமை சேர்ந்த 15 வயதான நோரா குவோய்ரின், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஈக்கோ-விடுதியில் இருந்து காணாமல் போய் 9 நாட்கள் கழித்து காட்டுக்குள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மரணத்துக்கான காரணத்தை அறிய அவரது உடல் பகுதிகளை ஆய்வு செய்ய …

  19. இந்தியாவின் சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவல்:டெல்லியில் கண்காணிப்பு மையம் அமைப்பு Digital News Team உலகெங்கும் கொரோனா வைரஸை அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், இந்தியாவில் புதிய உயிர் கொல்லி நோய் கிளம்பியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவி வருகிறது.இதனால் ஏராளமான பறவைகள் இறந்துள்ளதுடன் நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில் டெல்லியில் கண்காணிப்பு மையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் மேற்கொள்ளப்படும் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குற…

  20. அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் அகதிகள் கலவரம் – கட்டிடங்களிற்கு தீ மூட்டினர் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் முகாமின் கட்டிடங்களிற்கு தீ மூட்டியுள்ளனர். செவ்வாய்கிழமை இரவு இரண்டு கட்டிடங்கள் தீமூட்டப்பட்டன என தடுப்பு முகாமிற்குள் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. தடுப்புமுகாமின் கட்டிடமொன்றின் உச்சியில் இருவர் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முகாமில் தாங்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கோரினோம் அதற்கு அனுமதி மறுக்…

  21. வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது முடக்கம் 5 ஜனவரி 2021, 07:44 GMT பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, போரிஸ் ஜான்சன் (கோப்புப்படம்) இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது முடக்க கட்டுப்பாடுகள் தொடங்குவதால், பெரும்பாலான மக்கள் அனுமதிக்கப்பட்ட சில காரணங்களைத் தவிர வீட்டிலேயே இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வடக்கு அயர்லாந்தில் இணையவழி கற்றல் தொடர்ந்து அமலில் இருக்கும். இங்கிலாந்தில் இந்த பொது முடக்க க…

  22. இந்திய குடியரசு தினம்: போரிஸ் ஜான்சனின் பயண ரத்தால் தலைமை விருந்தினரின்றி விழா பரணி தரன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எதிர்வரும் இந்திய குடியரசு தினத்தின்போது தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென தனது பயணத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டதால், இந்த ஆண்டின் குடியரசு தினம் தலைமை விருந்தினரின்றி நடக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. உலகை புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ், தற்போது புதிய திரிபுவாக உருப்பெற்று பிரிட்டனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்கு புதிய கொரோனா வைர…

  23. தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான் Digital News Team வளைகுடாவில் தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியுள்ளது. வளைகுடா கடற்பரப்பில் ஈரானின் புரட்சிகர காவல்படையினர் தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளனர் என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வளைகுடாவை இரசாயனங்களால் அசுத்தப்படுத்திக்கொண்டிருந்த தென்கொரிய எண்ணெய்கப்பலை ஈரானின் புரட்சிகர காவல்படையினர் கைப்பற்றியுள்ளனர் எனஈரானின் தொலைக்காட்சி உட்பட பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹங்குக்செமி என்ற கப்பலை ஈரானின் புரட்சிகர காவல்படையினர் பாதுகாப்பாக அழைத்துவருவதை டஸ்னிம் செய்தி முகவர் அமைப்பு காண்பித்துள்ளது. தென்கொ…

  24. Digital News Team கொரோனா வைரஸ் தாக்கம் கென்யாவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து அந்நாட்டில் பாடசாலைகள் 9 மாதங்களின் பின் திறக்கப்பட்டுள்ளன. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் ஆபிரிக்க நாடுகளிலும் பரவியுள்ளது. ஆனால், பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆபிரிக்க நாடுகளில் இது பெருமளவு கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் 2020 மார்ச் மாதத்தில் தான் வைரஸ் ஆபிரிக்க நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. குறிப்பாக, ஆபிரிக்க நாடான கென்யாவில் மார்ச் மாதத்துக்குப் பின்னரே கொரோனா பரவியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டில் 2020 மார்ச் மாதம் முதலே பாடசாலைகள் காலவரையறையின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.