Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜெனீவா: 2009ல் உலகளவில் தொற்றுநோயை ஏற்படுத்திய பன்றிக் காய்ச்சலை விட கொரோனா வைரஸ் 10 மடங்கு ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவில் முதன்முதலில் ‛பன்றிக்காய்ச்சல்' அல்லது ‛எச் 1 என் 1' நோய்த்தொற்று கண்டறிப்பட்டது. இதில் 18,500 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், லான்செட் மருத்துவம், ஆப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நிகழ்ந்த இறப்புகளை உலக சுகாதார அமைப்பு மதிப்பிடவில்லை எனவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 1,51,700 முதல் 5,75,400 வரை இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெ…

    • 2 replies
    • 400 views
  2. கொரோனா வைரஸ் தாக்கம் – அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை 23000 ஐ கடந்தது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மிக மோசமான மற்றும் இந்த வாரம் கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் உச்சத்தை எட்டக்கூடும் என அதிகாரிகளை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய மக்கள்தொகை கொண்ட அமெரிக்கா, வேறு எந்த நாட்டையும் விட கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அதிகமான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. இன்றைய நிலவரப்படி மொத்தம் 587,155 பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக மக்கள் தொகை கொண்ட குறிப்பாக 8.4 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நியூயோர்க்கில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளது…

  3. அத்துமீறும் சீனா – வலுக்கட்டாயமாக வெளியற்றப்படும் ஆபிரிக்கர்கள் சீனாவில் தங்கியிருந்த மாணவர்கள் உட்பட்ட ஆபிரிக்கர்கள் அவர்களது சொந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளை ஆட்கொண்டு பல்லாயிரக்கணக்கான மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனினும் குறித்த வைரஸ் தோற்றம் பெற்ற சீனாவில் அதன் பாதிப்பு மிக வேகமாக குறைவடைந்து ஹூபே மாகாணம் உள்ளிட்ட முழு நாடும் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. எனினும் கொரோனா வைரஸ் மீண்டும் அந்நாட்டில் பரவாமல் இருக்க சீன அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் நீண்ட நாட்களாக முடக்கப்பட்டிருந்த ஆபி…

  4. கொவிட்-19 வைரஸ் பரவாது தடுப்பதற்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்கள் நீண்ட நாட்களாக வீட்டில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பொழுதுபோக்குகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை விரக்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்தின் தேசிய ஆய்வுகூடம் என்பன இணைந்து புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளன. இதன்படி விண்வெளி ஆய்வில் ஆர்வம் உள்ள சிறார்களுக்கு ஒன்லைன் மூலம் அது தொடர்பான பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது. இப் பயிற்சியினை எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி வரை சிறார்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. https://news.lankasri.com/science/03/2240…

  5. இந்தோனேசிய கிராமொன்று சமூகவிலக்கல் கட்டுப்பாடுகளை பேணுவதற்கான பேய்கள் போன்று வேடமிட்ட தொண்டர்களை பயன்படுத்துகின்றது. மக்கள் வீடுகளில் இருப்பதை உறுதி செய்வதற்காக ஜாவா தீவின் கெபு கிராமத்தவர்கள் இந்த தந்திரோபாயத்தை பயன்படுத்துகின்றனர். பேய்களை போல வேடமிட்டவர்களை பயன்படுத்தும் தந்திரோபாயம் வெற்றியளிக்க ஆரம்பித்துள்ளது என தெரிவித்துள்ள கிராமத்தவர்கள் மக்கள் வீடுகளில் இருந்து வருவது கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர். பேய்கள் தோன்றிய பின்னர் பெற்றோரும் குழந்தைகளும் வீடுகளில் இருந்து வெளியேறுவதை குறைத்துக்கொண்டுள்ளனர் என கிராமத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் ஆபத்தை மக்கள் உணரச்செய்வதற்காக இந்த முயற்சி என உள்ளுர் …

    • 0 replies
    • 364 views
  6. கொரோனோவுக்கு ஏழு விதமான தடுப்பூசிகளை கண்டுபிடிக்க கோடிக்கணக்கான டாலர் நிதி அளிக்க உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமது பெயரிலும் மனைவி மெலிண்டா பெயரிலும் உள்ள அறக்கட்டளைகள் இந்த கோடிக்கணக்கான டாலரை அளிக்கும் என்றார் அவர். ஒன்று முதல் ஒன்றரை வருட காலத்தில் 7 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றில் சிறந்த 2 தடுப்பூசிகள் உலக பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் என்ற அவர் எஞ்சிய 5 தடுப்பூசிகள் தொடர்ந்து ஆய்வக பரிசோதனையில் தொடர நிதி வழங்கப்படும் என்றார். கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் இருப்பதை சுட்டிக்காட்டிய பில்கேட்ஸ், தடுப்பு நடவடிக்கையாக அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்…

  7. எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தடுப்புக்கான ஒத்துழைப்பில் சீனா ஆக்கப்பூர்வமாகப பங்காற்றும் - பில்கேட்ஸ் பெய்ஜிங் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பிறப்பிடம் சீனா என்று கூறப்படுகிறது. இருப்பினும் சீனா கொரோனா வைரஸை முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது.இது குறித்து சீன ஊடகம் ஒன்றிற்கு பில்கேட்ஸ் அளித்துள்ள பேட்டியில், இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட கண்டிப்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால், மக்கள் அனைவரும் பல்வேறு இன்னல்களைக் கடந்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணி பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. தற்போது, சீனாவில் பணி மற்றும் உற்பத்தி செயல்கள் மீட்…

  8. சீனாவில் மீண்டும் அதிகரிக்கின்றது நோயாளிகளின் எண்ணிக்கை- ரஸ்ய எல்லை நகரம் குறித்து அச்சம் கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கின்றது என தெரிவித்துள்ள சீனா ஞாயிற்றுக்கிழமை 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 108 பேரில் 98 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என தெரிவித்துள்ளனர். சீனாவின் புதிய வைரஸ் மையமாக ரஸ்ய எல்லையில் உள்ள அதன் நகரம் மாறும் ஆபத்து உருவாகியுள்ளது. சீனா ரஸ்ய எல்லையிலுள்ள ஹெய்லோங்ஜியாங் மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவிலிருந்து ஹெய்லோங்ஜியாங் மாகாணத்திற்குள் நுழைந்தவர்களில் 48 பேரிற்கு நோய் தொற்று உள்ளமை கண்டுபிடிக்…

  9. ``இப்படி ஒரு நோய்த்தொற்று பரவிக்கொண்டிருக்கும் வேளையில், இது போன்ற செய்கைகள் எங்களை திகைப்புக்கு உள்ளாக்குகிறது. இது போன்ற சிலரின் நடவடிக்கைகளால்தான் சமூகப்பரவல் மிகவேகமாக நடந்து வருகிறது.” உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தொற்று அதிக அளவில் பரவிவரும் சூழலில், இருமும்போதோ தும்மும்போதோ கைக்குட்டையைப் பயன்படுத்துங்கள் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கனடாவின் வான்கோவர் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்ட்டைப் பயன்படுத்திய ஒருவர், லிஃப்ட்டிலிருந்து வெளியேறும் முன்பு, அங்கிருக்கும் பட்டன்களில் எச்சிலை உமிழ்ந்துவிட்டுச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ அங்கிருப்பவர்களிடையே அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படு…

  10. அமெரிக்காவில் பொருளாதாரத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி செயல்பட்டதைத் தவிர, சுகாதாரம் மற்றும் கொரோனா தொற்று தொடர்பாக உளவுத்துறையும், சுகாதார அமைப்பும் பல முறை எச்சரிக்கை விடுத்தும் அதனை அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கண்டுகொள்ளாமல் சொந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை படுகுழியில் தள்ளிவிட்டிருக்கிறார் என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை உலுக்கிக் கொண்டிருக்கிறது. அந்நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 60,433 ஆயிரமாக அதிகரித்துள்ளதுடன், பலி எண்ணிக்கை 22,115ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதுடன், தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை பன்மடங்காகிக் கொண்டிருக்கி…

  11. கொரோனா வைரஸை காட்டிலும் மோசமான மற்றும் பொருளாதார ரீதியில் சரிவை ஏற்படுத்தும் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மேலும் புரட்டி போடவுள்ளதாக வெளியான தகவலால் ஆடிப்போயுள்ளது அமெரிக்கா. கொரோனாவால் வல்லரசு நாடான அமெரிக்காவில் கட்டுக்கடங்காத நிலையில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் கொரோனாவால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 ஆயிரம் பேருக்கு மேல் இறந்துவிட்டனர். அமெரிக்கா கொரோனாவை தடுக்க முடியாமல் திண்டாடி வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டு மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதுவும் குறிப்பாக புளோரிடா மாகாண மக்களுக்கு! கொரோனாவை விட மோசமான ஒன்று வரும் ஜூன் மாதம் வரபோகிறது. அதுதான் அட்லாண்டிக்கில் ஏற்படவுள்ள புயல் ச…

  12. பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் கிசிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் 55 வயதான பொறிஸ் ஜோன்சன் கடுமையாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பொரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் சிகிச்சை எடுத்து வந்தார். திடீரென மத்திய லண்டனில் உள்ள சென் தோமஸ் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட பின்னர், ஜோன்சனுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுவதால், அவர் த…

  13. ஈராக்கில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியைப் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கொல்லப்பட்ட ஈரான் தளபதி காஸிம் சுலைமானியின் நண்பரும், ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியுமான ஷேக் முகமது அல் கவ்தாராணி என்பவரை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில் சுலைமானியின் கொலைக்குப் பின் ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஷேக் முகமது அல் கவ்தாராணி பற்றிய தகவல்களைத் தருவோருக்கு 10 மில்லின் டாலர் வெகுமதியாகத் தரப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. https://www.polimernews.com/dnews/106666/ஹிஸ்ப…

    • 0 replies
    • 487 views
  14. கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு உலகளவிய ஐக்கியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்து அச்சம் வெளியிட்டுள்ளார். பரிசுத்த பாப்பரசர் தனது உயிர்த்த ஞாயிறு செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். இது அலட்சியத்திற்கான அக்கறையின்மைக்காண தருணமில்லை என குறிப்பிட்டுள்ள பரிசுத்த பாப்பரசர் உலகம் துயரத்தில் சிக்கியுள்ளதால் ஐக்கியப்படவேண்டிய தேவையுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த வருடத்தின் உயிர்த்த ஞாயிறு செய்தியென்பது நம்பிக்கையை அடிப்படையாக கொண்டதாக காணப்படவேண்டும் என தெரிவித்துள்ள பரிசுத்த பாப்பரசர் மக்கள் நெருக்கடிக்குள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு உதவுவதற்கும்,பின்னர் இயல்பு வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு உதவுவத…

    • 3 replies
    • 586 views
  15. உலகம் முழுதும் சீரியஸ் கரோனா வைரஸ் நோயாளைகளை மீட்க வென்ட்டிலேட்டர்கள் நோக்கி அதிகம் ஓடும் காலக்கட்டத்தில் நியூயார்க்கில் சில மருத்துவர்கள் வென் ட்டிலேட்டர்களைக் கண்டு அச்சப்படத் தொடங்கியுள்ளனர். சில மருத்துவமனைகளில் வென் ட்டிலேட்டர்களினால் ஏற்படும் கரோனா மரணங்கள் எண்ணிக்கை வழக்கத்துக்கு அதிகமாக இருப்பதால் இந்த மெஷின்கள் சில நோயாளிகளுக்கு ஆபத்தாக இருப்பதாக கவலையடைந்துள்ளனர். மருத்துவர்கள் இன்னமும் கூட தாங்கள் கற்றுக் கொண்டுதான் சிகிச்சை அளிக்கிறோம் என்கின்றனர், ஏனெனில் அனுபவத்தின் அடிப்படையிலும், நிகழ் நேர தரவுகளின் அடிப்படையிலும்தான் கரோனாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். வென் ட்டிலேட்டர்கள் நுரையீரல் தோல்வி அடையும் நோயாளிகளுக்கு பிராணவாயுவை அளிக்கும் கர…

  16. 99 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர் – சீனாவில் இரு மடங்காகும் அதிகரிப்பு! சீனாவில் நேற்று (சனிக்கிழமை) மட்டும் 99 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது முந்தைய நாளினை விட இரட்டிப்பான அதிகரிப்பு என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் 6 ஆம் திகதிக்கு பின்னர் இது மிகப்பெரிய தினசரி எண்ணிக்கை என்றும் ஏறக்குறைய அனைத்து புதிய தொற்றுநோயாளிகளும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை உள்ளடக்கியது. குறிப்பாக 99 வழக்குகளில் இரண்டு மட்டுமே உள்நாட்டில் பரவின என சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை சீனாவின் வணிக மையமான ஷாங்காயிலும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கே கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று (11) நகர…

  17. அமெரிக்காவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அந்நாட்டில் பலி எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து, அமெரிக்காவில் தங்கியிருக்கும் தங்கள் நாட்டுப் பிரஜைகளை அந்தந்த நாடுகள் உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு அழைக்க மறுக்கும் அல்லது அழைத்துக் கொள்வது தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கா நாடுகளுக்கு உடனடியாக விசா தடைகளை போட வேண்டிய நிலை வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் என்னும் கொள்ளை நோய் காலக்கட்டத்தில் அமெரிக்காவிலிருந்து தங்கள் நாட்டு குடிமக்களை அழைத்துக் கொள்ளாத அல்லது அழைத்துக் கொள்ள மறுக்கும் அல்லது போக்கு காட்டும் நாடுகள் மீதான…

  18. மனித நடமாட்டமற்ற தீவில் புதைக்கப்படும் உடல்கள் கொரோன வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அச்சம் தரும் விதத்தில் அதிகரித்துள்ளதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை ஹார்ட் ஐலன்ட் என்ற பகுதியில் புதைக்கும் நடவடிக்கைகளை நியுயோர்க் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். தொழிலாளர்களை பயன்படுத்தி இந்த உடல்களை புதைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். 19 ம் நூற்றாண்டு முதல் உறவினர்கள் எவருமற்ற அனாதைகளின் உடல்களை இந்த தீவிலேயே அதிகாரிகள் புதை;து வந்துள்ளனர். வழமையாக வாரத்திற்கு 25 உடல்கள் இந்த தீவில் புதைக்கப்படும் என தெரிவித்துள்ள ரொய்ட்டர் சிறைக்கைதிகளிற்கு சிறிய கூலியை வழங்கி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது வழமை எனவும் குறிப்பிட்டுள்ளது. …

    • 2 replies
    • 542 views
  19. ’கொவிட்-19 இன் 2 ஆவது அலை புதிய சவால்களை ஏற்படுத்தும்’ கொவிட்-19 வைரஸ் தொற்று நோயின் இரண்டாவது அலை ஏற்படவுள்ளதாகவும் அது, புதிய சவால்கள் மற்றும் புதிய சிரமங்களை ஏற்படுத்தும் என, சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில், சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்திச் சேவையான ஷிங்சூவா வெளியிட்டுள்ள செய்தியில், உயர்மட்டத் தீர்மானங்களை எடுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நேற்று (08) கூடிய போதே சீன ஜனாதிபதி இதனை குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து சென்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஸ்திரமின்மை மற்றும் நிச்சயமற்ற பல காரணிகள் தலைத்தூக்கி வருகின்றன எனவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சீனாவில…

  20. சீனாவில் வாழும் ஆபிரிக்க இனத்தவர்கள் தாங்கள் இனவெறி நடவடிக்கைகளை எதிர்கொள்வதாக கவலை வெளியிட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து கொரோனா வைரஸ் குறித்து சீன அரசாங்கம் எச்சரித்துள்ளதை தொடர்ந்து வெளிநாட்டவர்களிற்கு எதிரான உணர்வுகள் அதிகரித்துள்ளன. சீனாவின் குவாங் சூ நகரில் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன் ஹோட்டல்களிற்குள் நுழைவதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டடுள்ளது. பல ஆபிரிக்க இனத்தவர்கள் தாங்கள் வெளிநாடுகளிற்கு செல்லவில்லை,கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகொள்ளவில்லை என தெரிவித்துள்ள போதிலும் தாங்கள் இந்த நிலையை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். நாங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளோம், கண…

    • 0 replies
    • 438 views
  21. மீண்டும் தலைதூக்கும் புதிய ’எபோலா’ வைரஸ் Editorial / 2020 ஏப்ரல் 11 , மு.ப. 09:09 - 0 - 496 50 நாள்களுக்கு பின்னர் கொங்கோ நாட்டில் ஒருவருக்கு எபோலோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி புதிய எபோலோ வைரஸ் தொற்று கிழக்கு கொங்கோவின் பெனி நகரில் 26 வயதான இளைஞருக்கு உறுதியானது. அதன் பின்னர் 50 நாள்களுக்கு பின்னர் மீண்டும் வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் எபோலா வைரஸால் கொங்கோவில் 2,200 பேர் பலியானார்கள். வரலாற்றின் 2ஆவது மிக மோசமான எபோலா தொற்றின் மய்யமாக இருந்த பெனிநகரில் புதிதாக ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கொங்கோவை உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண…

    • 0 replies
    • 469 views
  22. சீனாவில் இறைச்சி விலங்குகள் குறித்த புதிய வரைவு பட்டியல் .. சீனாவில் இறைச்சிக்காக வளர்க்க வேண்டிய விலங்குகள் குறித்த புதிய வரைவு பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.வூகானில் இருக்கும் ஈரபதம் நிறைந்த கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தை விலங்குகளிடம் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, எந்த விலங்குகளை இறைச்சிக்கு வளர்க்கலாம் என்ற வரைவு பட்டியலை வெளியிட்டுள்ளது. இறைச்சிக்கு பன்றிகள், பசுக்கள், கோழிகள், ஆடுகள், மான்கள், தீக்கோழிகள், ஒட்டக இன அல்பாகா விலங்கு ஆகியவற்றை வளர்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நரி, கீரிப்பிள்ளை, காட்டு எலி ஆகியவற்றை வளர்க்கலாம், ஆனால் இறைச்சிக்கு பயன்படுத்த கூடாது என கூறப்பட்டுள்ளது. கெ…

    • 1 reply
    • 950 views
  23. கொரோனாவால் சூழப்பட்ட நியூயோர்க் – நாடுகளின் பாதிப்பு எண்ணிக்கையை, தனி ஒரு மாநிலம் முந்தியது!!! கொரோனோ வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் தனிப்பட்ட பாதிப்புகளை அமெரிக்காவின் தனி ஒரு மாநிலமான நியூயோர்க் முந்திச் சென்றுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. கோவிட் -19 இன் பரவுகை ஆரம்பிக்கப்பட்ட பின் நேற்று வியாழக்கிழமை 10,000 பேர் புதிதாக இனம் காணப்பட்டு உள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 159,937 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்பெயினின் 153,000 பேர் மற்றும் இத்தாலியின் 143,000 பேர் என்ற எண்ணிக்கைகளை விட அதிகமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் த…

  24. கொரோனாவால் இத்தாலியில் 100 வைத்தியர்கள் உயிரிழப்பு இத்தாலி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சையளித்த 100 வைத்தியர்கள் உயிரிழந்துள்ளார்கள். வைத்தியர்கள், தாதியர்களுக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கொரோனாவுக்கு எதிராக போராடுவதாக அந்நாட்டு வைத்தியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 18,279 பேர் உயிரிழந்துள்ளனர். 1,43,626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இத்தாலியில் கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் …

  25. மனித இனத்துடன் பரிணாம வளர்ச்சி ரீதியாக நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படும் மனிதக் குரங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மனிதர்கள் எவ்வாறு முடக்கப்பட்டிருக்கிறார்களோ, அதேபோல மனிதக் குரங்குகளும் அவற்றின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற முடியாத வகையில் முடக்கப்பட்டுள்ளன. இதனால், மனிதக் குரங்குகள், ஒராங்குட்டான் போன்றவை இருக்கும் உயிரியல் பூங்காக்கள் ஆப்பிரிக்காவில் மூடப்பட்டுள்ளன. அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம் என்பதால் மனிதர்களிடம் இருந்து, அவற்றுக்கு பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இவை மூடப்பட்டுள்ளன. எனினும், மனிதர்களிடம் இருந்து மனிதக் குரங்குகளுக்கு வைரஸ் பரவுமா என…

    • 0 replies
    • 296 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.