உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
தனிமைப்படுத்தலிற்கான வேண்டுகோளை மீறி அவுஸ்திரேலியாவில் கடற்கரையில் குவிந்த மக்கள் - பொறுப்பற்ற செயல் என கண்டனம் சுய தனிமைப்படுத்தலிற்கான வேண்டுகோளை புறக்கணித்து பொன்டி கடற்கரையில் பெருமளவு மக்கள் கூடியதால் நியுசவுத்வேல்ஸ் அரசாங்கம் அந்த கடற்கரையை மூடியுள்ளது. அவுஸ்திரேலியாவின் காலநிலை காரணமாக பெருமளவு மக்கள் பொன்டி கடற்கரையில் கூடியுள்ளனர். பொன்டி கடற்கரையில் பெருமளவுமக்கள் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. பலர் இதனை கடுமையாக விமர்சித்துள்ளனர். இதனை தொடர்ந்து நியுசவுத்வேல்சின் காவல்துறை அமைச்சர் உடனடியாக கடற்கரை பகுதியைமூடுமாறு உத்தரவிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் பெருமளவு மக்கள் சமூக தனிமைப்படுத்தலிற்காக கடும் முயற்சிகளை…
-
- 2 replies
- 529 views
-
-
இத்தாலியில் கொரோனா வைரஸினால் உயிரிழப்பு அதிகரித்ததையடுத்து இராணுவம் களமிறக்கியது கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவை விட இத்தாலியில் அதிகரித்துள்ளது.இத்தாலியில் கொரோனா வைரஸின் கோரத் தண்டவத்தினால் ஒரே நாளில் 627 உயிர் காவு கொள்ளப்பட்டுள்ளன. இதனையடுத்து பல நகரங்களை முடக்குவதற்கு உடனடியாக இராணுவம் களமிறக்க ப்பட்டுள்ளது.இராணுவத்தை பயன்படுத்துவதற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன,114 படையினர் லொம்பாடியில் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் இது தாமதமான நடவடிக்கை ஆனால் அவசியமானது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினால் வடபகுதியில் பெரும் குழப்ப நிலை காணப்படுகின்றது, மருத்துவமனைகள் நோயாளி…
-
- 3 replies
- 715 views
-
-
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலமாக கொரோனா பரவுவது சீனாவுக்கு புதிய தலைவலியாக மாறி உள்ளது. சீனாவில் உள்நாட்டு பரவல் கட்டுக்குள் வந்து விட்டது. இரண்டாவது நாளாக இன்று அங்கு உள்நாட்டவர் இடையே புதிய தொற்று எதுவும் ஏற்படவில்லை .ஆனால், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலமாக இப்போது அங்கு 228 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து பயண கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார சோதனை முறைகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு சீன அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஐரோப்பா, வட அமெரிக்க நாடுகளில் படித்து நாடு திரும்பும் மாணவர்கள் வாயிலாக கொரோனா தொற்று இறக்குமதியாகிறது. இவர்களில் பெரும்பாலோனோர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பலவேறு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதால் …
-
- 0 replies
- 392 views
-
-
கரிஷ்மா வாஸ்வானி பிபிசி செய்தியாளர், சிங்கப்பூர் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று இருக்க வாய்ப்பிருக்கும் நபர்களை கண்டறிய துப்பறிவாளர்களின் உதவியை பயன்படுத்தியுள்ளது அந்நாடு. இதனால் கொரோனா பாதிப்பு இருக்கும் வாய்ப்பிருப்பவர்களை, வைரஸ் தொற்று பரவுவதற்கு முன்பாகவே கண்டுபிடித்துவிடுகிறது. இது எப்படி சாத்தியம…
-
- 0 replies
- 356 views
-
-
மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயாளிகள்உறவுகள் எவருமின்றி அனாதைகளாக மரணிப்பதே மிகவும் வேதனையளிக்கின்றது என இத்தாலியின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஓய்விற்கு பின்னர் மீண்டும் சேவையாற்ற திரும்பியுள்ள மருத்துவர் ரோமானோ பாவேலுசி மக்கள் அநாதைகள் போன்று மருத்துவமனைகளில் உயிரிழப்பதே சகித்துக்கொள்வதற்கு கடினமான விடயமாக உள்ளதாகவும் தான் இதனை முன்னர் எதிர்கொண்டதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் நேசத்திற்குரியவர்கள் எவருமின்றி மரணிப்பதை பார்ப்பதாக தெரிவித்துள்ள இத்தாலி மருத்துவர்கள் அவர்கள் இறுதியாக தொலைபேசிகள் மூலம் தங்கள் உறவுகளுடன் இறுதி வார்த்தைகளை பேசுகின்றனர் என தெரிவிக்கின்றனர். சிறிய ஒக்லிபோ மருத்துவமனையில் மிக நீண்ட நேரம் பணியாற்றும் 70 மருத்துவர்களில…
-
- 1 reply
- 371 views
-
-
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: கனடாவும் அமெரிக்காவும் எல்லையை மூடுகிறது! கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை நாடுகளான கனடாவும், அமெரிக்காவும் எல்லையை மூடுவது தொடர்பாக முடிவெடுத்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கனடா பிரதமர் ட்ரூடோவும் நேற்று (புதன்கிழமை) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அத்தியாவசியப் பொருட்களை தவிர மற்ற எந்த பொருட்களையும் இருநாடுகளும் தற்காலிகமாக பகிர்ந்து கொள்வதில்லை என முடிவெடுக்கப்பட்டது. மேலும், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக இருநாடுகளும் எல்லையை மூடுவது என்றும், தேவையின்றி மக்கள் எல்லை தாண்டி செல்வதை கட்டுப்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கனேடிய ப…
-
- 1 reply
- 424 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று: பிரான்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327ஆக உயர்வு! உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால், பிரான்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 108பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரே நாளில் 1861இனால் அதிகரித்து மொத்மாக 10,995ஆக உயரந்துள்ளது. இதற்கிடையில், பிரான்ஸ் மக்களில் பலர் நிலைமையின் ஆபத்தை உணராமல் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதாக ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அதிருப்தி கொண்டுள்ளார். உள்ளிருப்பு உத்தரவை மீறிப் பலர் வீதிகளிலும், கடற்கரையிலும், பூங்காவிலும் திரிவதாகவும், இது நிலைமையின் தீவிரத…
-
- 0 replies
- 237 views
-
-
லண்டன் நகரம் முடக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை : பிரதமர் அலுவலகம் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் லண்டன் நகரம் முடக்கப்படுவதற்கான வாய்ப்புகள் எதுவுமில்லை என தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம் தலைநகருக்கு உள்ளேயும் வெளியேயும் போக்குவரத்து தடை செய்யப்பட உள்ளது என்ற வதந்திகளையும் நிராகரித்துள்ளது. லண்டன் நிலக்கீழ் ரெயில் சேவைகளின் 40 நிலையங்கள் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து லண்டனுக்கான போக்குவரத்து இணைப்புகளை மூட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பல தகவல்கள் வந்திருந்தன. லண்டனில் போக்குவரத்து வலையமைப்பை மூடுவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை, லண்டனுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்வதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட…
-
- 1 reply
- 326 views
-
-
பத்தாயிரம் உயிர்களை பறிக்க நெருங்கும் கொரோனா வைரஸ்! உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்குகின்றது. இதற்கமைய உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,800ஆக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 243,000ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர கொரோனா வைரஸ் தொற்றினால் ரஷ்யாவிலும், மெக்சிகோவிலும் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ரஷ்யாவில் இதுவரை 147 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல, மெக்சிகோவிலும் 118 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரி தெரி…
-
- 2 replies
- 416 views
-
-
கொரோனாவின் கோரத்தாண்டவம் – ஒரேநாளில் 427 பேர் உயிரிழப்பு! கொவிட் – 19 எனப்படும் கொகொரோனா வைரஸ் தொற்று நோயினால் ஏனைய நாடுகளை விட இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இத்தாலியில் ஒரே நாளில் 427 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது. இதுவரையில் இத்தாலியில் மொத்தமாக 3405 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் இதுவரை 3245 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 35 ஆக உயர்வடைந்துள்ளது. இத்தாலி கடந்த…
-
- 0 replies
- 606 views
-
-
அமெரிக்காவில் 50 மாகாணங்களுக்கும் பரவியது கொரோனா வைரஸ்: 150இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவின், 50 மாகாணங்களுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8700ஆக உயர்ந்துள்ளதுடன், 150இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த பெப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்றினால் முதல் உயிரிழப்பு பதிவானது. ஒரு மாதத்துக்குள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 100ஐத் எட்டியுள்ளது. நியூயோர்க் மற்றும் வொஷிங்டன் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும், பாடசாலை கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 178 views
-
-
கொரோனா வைரஸ் பரவல் எப்போது உச்சத்தை அடைந்து, தணியத் தொடங்கும் என்பது தொடர்பான ஆய்வுகளில் வெவ்வேறு விதமான முன்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் சீனாவில் இந்நோய்க்கு 65 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தை அடைந்துவிட்டால், அதன் பிறகு குறையத் தொடங்கிவிடும். எனவே, இதுதொடர்பான ஆய்வுகள் சீனாவிலும், சீனாவுக்கு வெளியேயும் மேற்கொள்ளப்படுகின்றன. பிப்ரவரி இறுதிக்குள் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டு விடும் என்று, 2003ஆம் ஆண்டில் சார்ஸ் கொரோனா வைரஸை கண்டறிந்த மருத்துவ அறிஞர் Zhong Nanshan தலைமையிலான குழு, கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி தெரிவித்திருந்தது. இதற்கேற்ப சீனாவில் கொரோனா தொற்று மார்ச்சில் தணிந்துள்ளது. அதேசமயம், கொரோனா வைரஸ் …
-
- 0 replies
- 262 views
-
-
p>ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு ஈரானியர் கொரோனா வைரஸினால் உயிரிழப்பதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள ஈரானிய சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 50 ஈரானியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவளை ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 149 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள்தாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானில் மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளாகி 1,284 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18,407 பேர் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Photo Credit : CNN https://www.virakesari.lk/article/78252
-
- 1 reply
- 530 views
-
-
இத்தாலியில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாள முடியாதநிலை தோன்றியுள்ளதை தொடர்ந்து அரசாங்கம் இராணுவத்தின் உதவியை நாடியுள்ளது. நீண்ட வரிசையில் இராணுவவாகனங்களில் உடல்கள் ஏற்றப்பட்டு மயானங்களிற்கு கொண்டு செல்லப்படுவதை காண்பிக்கும் காட்சிகள் இத்தாலியின் பெர்காமோ நகரிலிருந்து வெளியாகியுள்ளன. 15 வாகனங்களையும் 50 படையினரையும் பயன்படுத்தி உடல்களை அப்புறப்படுத்தி வருவதாக இத்தாலியின் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் உடல்களை இராணுவவாகனங்கள் கொண்டு செல்லும் காட்சிகள் இத்தாலி சந்தித்துள்ள இழப்பை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன நீண்ட வரிசையில் இராணுவவாகனங்கள் உடல்களுடன் செல்வதை காண்பிக்கும்…
-
- 2 replies
- 576 views
-
-
பல நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானோர் பங்குபற்றிய கொரோனா வைரஸ் தொடர்பான வெகுஜன பிரார்த்தனை நிகழ்வானது நேற்றைய தினம் பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது. பங்களாதேஷின் ராய்பூரில் இடம்பெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்வின்போது சுமார் 10,000 முஸ்லிம்கள் வரை கலந்து கொண்டதாக உள்ளூர் காவல்துறை தலைவர் டோட்டா மியா ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இந்த பிரார்த்தனை நிகழ்வில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரை கலந்து கொண்டிருக்கலாம் என பி.பி.சி. செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக உலக நாடுகள் வெகுஜன கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. அதேபோன்று பங்களாதேஷில் பாடசாலைகள் என்பவை ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையி…
-
- 0 replies
- 464 views
-
-
கர்ப்பம் தரித்த 20 வாரங்களுக்குள் பெண்ணொருவர் தனது கருவை கலைப்பதற்கான உரிமையை வழங்கும் மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1977ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்தின் குற்றவியல் சட்டத்தின்படி, குற்றமாக கருதப்பட்டு வரும் கருக்கலைப்பை அதிலிருந்து நீக்குவதற்கான வாக்கெடுப்பு நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் 68க்கு 51 என்ற கணக்கில் கருக்கலைப்பை குற்றமற்றதாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்புவரை, கர்ப்பம் தரித்த பெண்ணொருவரின் உடல் நலனுக்கு "மி…
-
- 1 reply
- 761 views
-
-
சீனாவில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் நேற்று அடையாளம் காணப்படவில்லை! சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலானது கொரோனா தொற்று தொடர்பில் சீனாவில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கடந்த பல வாரங்களில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் பேர் வரை புதிய கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டு வந்திருந்தினர். இதனால் சீன அரசாங்கம் பல மாதங்களாக நாட்டின் பல பகுதிகளை தனிமைப்படுத்தியும், பயணக் கட்டுப்பாடுகள் என்பவற்றையும் விதித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரிதும் போரடி வந்தது. இந் நிலையில் அண்மைய நாட்களில் சீனாவில் புதிய கொ…
-
- 1 reply
- 327 views
-
-
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க அமெரிக்கா புதிய வியூகம்! அமெரிக்காவில் கொரோனா வரைஸ் பரவிவரும் நிலையில் மக்களின் மருத்துவப் பரிசோதனைகளை இராணுவக் கப்பல்களில் நடத்தவுள்ளது. அந்தவகையில், இரு பெரும் இராணுவக் கப்பல்களை அமெரிக்கா மருத்துவமனைகளாக மாற்றி வருகிறது. USNS comfort மற்றும் USNS mercy ஆகிய இரண்டு கப்பல்கள் மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன. உள்ளூர் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தால் இந்த இரண்டு கப்பல்களும் நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றப்படும். நியூயோர்க், வோஷிங்ரன் ஆகிய இருபெரும் நகரங்களுக்கும் இந்த கப்பல்களின் மருத்துவ சேவை தேவைப்படலாம் என்பதோடு ஒவ்வொரு கப்பலிலும் ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வசதி உள்ளது. இதன் மூலம் மருத்துவமனை…
-
- 0 replies
- 339 views
-
-
கொரோனா தொற்றுக்கு 60 நாட்களில் தடுப்பூசி சோதனை செய்யப்பட்டது மிகப் பெரும் சாதனை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம், கொரோனாவை முன்னறிவிப்பில்லாத எதிரி என்றும் உலகத்தினர் அனைவருக்கும் பொதுவான எதிரி என்றும் வர்ணித்தார். கொரோனா பாதிப்புத் தொடங்கி 60 நாட்களுக்குள் அதற்கான தடுப்பூசி சோதனை செய்யப்பட்டது நம்பமுடியாத மிகப் பெரும் சாதனை என்றும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். இதற்காக பாடுபட்ட ஆராய்ச்சியாளர்களைத் தாங்கள் பாராட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், கொரோனாவுக்கான எதிர் போட்டியில் உலகம் இறுதியில் வெற்றி பெறும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். https://www.polimer…
-
- 1 reply
- 512 views
-
-
கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலியாகினர். இதையடுத்து அங்கு பலியானோர் எண்ணிக்கை 2978 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலை தவிர்க்க முகமூடி அணிந்துள்ள ஊழியர்கள் ரோம்: சீனாவில் உருவாகி 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவை தொடர்ந்து கொரோனா வைரசால் நிலை குலைந்திருக்கும் நாடுகளில் முக்கியமானது இத்தாலி. இத்தாலி நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 475 பேர் பலியாகி விட்டனர். இதன்மூலம் அங்கு பலி எணணிக்கை 2,978 ஆக அத…
-
- 3 replies
- 548 views
-
-
கொரோனா வைரஸ் இந்த ரத்தவகை கொண்டவர்களை எளிதில் தாக்கும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கோப்பு படம் வுகான்: சீனாவில் கொரோனா தாக்கியவர்களை வைத்து வுகானில் இருக்கும் ஷோங்னான் மருத்துவமனை நிர்வாகம் முக்கியமான ஆராய்ச்சியை செய்துள்ளது. கொரோனா தாக்கிய 2500 பேரை கொண்டு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு பழக்கம், பணிகள், அன்றாட செயல்கள், ரத்த மாதிரி, முந்தைய நோய் தாக்குதல் என்று பல விஷயங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர்.இந்த நிலையில் இதில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா பாதித்த 2500 பேரில் 65 சதவீதம் பேர் ‘ஏ’ ரத்த வகையை சேர்ந்த…
-
- 2 replies
- 1.7k views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் வேட்பாளராக, அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. ஜனநாயக கட்சியில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், தொடர்ந்து முன்னேறி வருகிறார். அதனால், இவ்விருவரும், அதிபர் தேர்தலில் போட்டியிடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.1,330 பேர் ஆதரவுஅமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதற்கான கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்யும், 'காகஸ் மற்றும் பிரைமரி' தேர்தல்கள் நடந்து வருகின்றன. இதன்படி, ஒவ்வொரு மாகாணத்திலும், கட்சி பிரமுகர்கள் ஓட்டளித்து, வேட்பாளரை தேர்வு செய்வர். குடியரசு கட்சியில், மொத்தமுள்ள, 2,550 பிரமுகர்களில், 1,276 பேரின் ஆதரவு பெறுபவரே வேட்பாளராக அறிவிக்கப்படுவார். இந்நிலையில், தன் சொந…
-
- 0 replies
- 312 views
-
-
உலக மக்களை தாக்கிவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் பிரித்தானியாவில் மட்டும் ஒரே நாளில் 33 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 104 என அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு புதிதாக 676 பேர் இலக்காகியுள்ள நிலையில், இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 2,626 என அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் இந்த வார இறுதிக்குள் மூடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதே முடிவை பிரித்தானியாவும் மெற்கொள்ளுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையிலேயே வே…
-
- 0 replies
- 553 views
-
-
ஆகஸ்ட் மாதம் வரை கொரோனா நீடிக்கும் - அதிர்ச்சி தகவல்! சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 150 க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 98 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 108 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 ஆயிரத்து 300 க்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அமெரிக்காவில் கொரோனாவ…
-
- 0 replies
- 389 views
-
-
கொரோனா பாதித்த முதியவர்களை கைவிடுகிறதா இத்தாலி அரசு? | Italy not to treat elderly persons affected by Corona | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online Web Team Published : 16,Mar 2020 10:42 AM கொரோனா பாதித்த 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் உயிரிழந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு இத்தாலி அரசு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தீவிர சிகிச்சை பிரிவில் இடப…
-
- 0 replies
- 493 views
-