உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த மக்கா பெரிய பள்ளிவாசலின் புனித கஃபாவை சூழவுள்ள பகுதி கடந்த சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. புனித கஃபாவை ஏழு தடவைகள் சுற்றிவரும் ஆண்டு முழுவதும் மேற்கொள்ள முடியுமான உம்ரா வழிபாட்டை சவூதி நிர்வாகம் கடந்த வாரம் இடைநிறுத்தியதோடு கஃபாவை சுற்றியுள்ள பகுதியும் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் உம்ரா அல்லாத வழிபாட்டுக்காக கஃபாவை வலம்வரும் பகுதியை திறப்பதற்கு மன்னர் சல்மான் சனிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக சவூதி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கஃபாவை வலம் வருவதை காணமுடிந்தபோதும் உம்ரா வழிபாட்டை பூர்த்தி செய்வதற்கான கஃபாவை நெருங்கிய பக…
-
- 0 replies
- 364 views
-
-
கொரானா வைரஸ் உச்சம்: ஈரானில் உயிரிழப்பு அதீத அதிகரிப்பு- எல்லையை மூடியது ஈராக் உலகை அட்டிப்படைக்கும் கொரோனா வைரஸால் ஈரானில் மாத்திரம் 194 பேர் இதுவரை இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்போது 6,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரான் நாட்டுடனான எல்லையை ஈராக் அரசு மூடியுள்ளது. வைரஸ் தோன்றிய சீனாவுக்கு வெளியே நோயால் இறந்தவர்களில் அதிக எண்ணிக்கையில் ஈரான் உள்ளது. ஈரானியர்களின் அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜஹான்பூரால், அனைத்து பெரிய கூட்டங்களையும் தவிர்த்து வீட்டில் இருக்குமாறு அறிவிறுத்தியுள்ளார். மேலும், ஐரோப்பிய நாடுகளுக்கான அனைத்து விமான சேவைகளையும் ஈரான் எயார் நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. இ…
-
- 0 replies
- 267 views
-
-
கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக உயர்வு: இத்தாலியில் அதிதீவிரம், சீனாவில் குறைவு உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா ரைவஸின் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827ஆக அதிகரித்துள்ள நிலையில் சீனாவில் நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் அதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது. ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 976 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 ஆயிரத்து 129 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சீனாவில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வந்தநிலையில் தற்போது நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. நேற்றைய க…
-
- 1 reply
- 344 views
-
-
வெயிலுக்கு கொரோனா வைரஸ் பரவாதா? உண்மை என்ன? உலக சுகாதார நிறுவனம் ஷாக் விளக்கம் வெப்பமான சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவாது என்பது இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் யாரும் அந்தக் கருத்தை நம்பி, அலட்சியத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் (who) தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது உலகம் முழுவதும் ஒரு லட்சம் பேரை தாண்டி உள்ளது. சுமார் 3500க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதேபோல் தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா, சிங்கபூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட…
-
- 0 replies
- 516 views
-
-
எம்.எச். 370 என்ற மலேசிய ஏயர்லைன்ஸ் விமானம் மாயமாகி இன்றுடன் ஆறு வருடங்கள் ஆகியுள்ளன. இந் நிலையில் விமானத்தில் பயணித்த 239 நபர்களின் உறவினர்கள் காணாமல்போன விமானத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து பீஜிங்கிற்கு செல்லும் வழியில் எம்.எச். 370 என்ற மலேசிய விமானம் மயமாகி போனது. இதன் பின்னர் சர்வதேச நாடுகளுடன் இணைந்து மலேசிய அரசாங்கம் விமானத்தை தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்தருந்த நிலையில் எந்த தடையங்களும் கிடைக்காதமையினால் தேடல் நடவடிக்கையானது 2018 ஆம் ஆண்டில் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது வரை குறித்த விமானத்தின் மாயமானது உல…
-
- 1 reply
- 470 views
-
-
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பயண வரலாறு இல்லாத பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று! பிரிட்டிஷ் கொலம்பியாவில் பயண வரலாறு இல்லாத பெண்னொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃப்ரேசர் ஹெல்த் பிராந்தியத்தில் வசிக்கும் 50 வயதான பெண்ணுக்கே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், குறித்த பெண் மற்ற கொரோனா வைரஸ் நோயாளிகளுடனோ அல்லது நோய் ஹொட் ஸ்பொட்களிலிருந்து திரும்பும் நபர்களுடனோ தொடர்பு கொள்ளவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நோயாளி எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பது குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி கூறுகின்றார். பிரிட்டிஷ…
-
- 1 reply
- 405 views
-
-
கொரோனாவினால் தனிமைப்படுத்தப்பட்ட மையமாகப் பயன்படுத்தப்பட்ட கட்டடம் இடிந்து வீழ்ந்தது – 4 பேர் உயிரிழப்பு! தென்கிழக்கு சீன துறைமுக நகரமான குவான்ஜோவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின்போது சுமார் 70 பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் அதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 5 மாடிகள் கொண்ட கட்டடமே இடிந்து வீழ்ந்ததாகவும் இந்நிலையில் இன்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 47 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் தற்போது மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்…
-
- 0 replies
- 220 views
-
-
லோம்பார்டி மற்றும் 14 மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் வசிக்கும் எவருக்கும் பயணம் செய்ய சிறப்பு அனுமதி தேவைப்படும். மிலன் மற்றும் வெனிஸ் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பள்ளிகள், ஜிம்கள், அருங்காட்சியகங்கள், இரவு விடுதிகள் மற்றும் பிற இடங்களை மூடுவதாகவும் பிரதமர் கியூசெப் கோன்டே அறிவித்தார். கடுமையான நடவடிக்கைகள் ஏப்ரல் 3 வரை நீடிக்கும். இத்தாலி ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் வழக்குகளைக் கண்டது மற்றும் சனிக்கிழமையன்று நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளன. கடுமையான புதிய தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் இத்தாலிய மக்கள்தொகையில் கால் பகுதியையும் அதன் பொருளாதாரத்தை ஆற்றும் நாட்டின் ஒரு பகுதியையும் பாதிக்கின்றன. இத்தாலியில் இறந்தவர்களி…
-
- 1 reply
- 407 views
-
-
ரியாத்: சவூதி அரேபியாவில், மன்னரின் சகோதரர் உட்பட, அரச குடும்பத்தைச் சேர்ந்த, மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சவூதி அரேபியாவின் அரச குடும்பத்தில், தற்போது மகுடம் சூட்டியிருப்பவர் இளவரசர் முகமது பின் சல்மான். இவர் அரச குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளார்.இந்த கைது நடவடிக்கை, அவரது ஆட்சிக்கான அச்சுறுத்தலை அகற்றி, அதிகாரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கையாக கருதப்படுகிறது. இதன்படி, மன்னர் சல்மானின் சகோதரரான இளவரசர் அகமது பின் அப்துல் அஸிஸ் அல்-சவுத் மற்றும் மன்னரின் மருமகன் இளவரசர் முகமது பின் நயீப் ஆகியோர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர்களின் வீடுகளுக்குள், நேற்று முன்தினம் அதிகாலையில் புகுந்த காவல்துறையினர்,…
-
- 0 replies
- 409 views
-
-
சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஹோட்டல்இடிந்துவிழுந்ததில் 70 பேர் உள்ளே சிக்குண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் பியுஜியான் பிராந்தியத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/119214/china-hotel-collapse.jpg மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளிற்குள் மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.ஐந்து மாடி கட்டிடமொன்றே இடிந்துவிழுந்துள்ளது. இரண்டு மணித்தியாலத்தில் 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிகளின் உத்தரவை தொடர்ந்து குறிப்பிட்ட கட்டிடத்தில் தனது சகோதரியும் வேறு உறவினர்கள…
-
- 0 replies
- 237 views
-
-
ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் கொரோனா வைரசிற்கு பலி ஈரானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளார் என அந்த நாட்டின் செய்திச்சேவையொன்று தெரிவித்துள்ளது. தலைநகர் டெஹ்ரானை சேர்ந்த பட்டமே ரபார் என்ற நாடாளுமன்ற உறுப்பினரே உயிரிழந்துள்ளார். ஈரானில் 124 பேர் வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ள நிலையிலேயே பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் மரணம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. ஈரானின் ஆன்மீக தலைவரிற்கு ஆலோசனை வழங்கும் குழுவின் உறுப்பினர் ஒருவர் மார்ச் இரண்டாம் திகதி கொரோனவைரஸ் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த உயிரிழப்புகள் ஈரானின் அரசாங்க ஸ்தாபனங்களிற்குள் வைரஸ் பரவிவருவதை வெளிப்படுத்தியுள்ளன. https://www.virakes…
-
- 12 replies
- 1.2k views
- 1 follower
-
-
மாஸ்கோ: சிரியாவின் வடமேற்குப் பகுதிகளில், துருக்கி ஆதரவு பெற்ற சிரியா புரட்சி படைக்கும், சிரியா அரசுக்கும் இட்லிப் பகுதியில் சண்டை நடந்து வருகிறது. இதனால், அங்குள்ள ஐந்து லட்சம் மக்கள், சிரியா - துருக்கி எல்லையில், அடைக்கலம் புகுந்து வருகின்றனர். புரட்சிப் படையை ஒடுக்க, சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள், ரஷ்யாவின் உதவியுடன் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. இந்நிலையில், இட்லிப் மாகாணத்தில் புரட்சியாளர்கள் மீது, சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில், துருக்கி ராணுவ வீரர்கள், 33 பேர் கொல்லப்பட்டனர். இதனால், துருக்கி - சிரியப் படைகளுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது. இதில் பொதுமக்கள் பலரும் கொல…
-
- 0 replies
- 401 views
-
-
ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் மேற்கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை தடுக்கும் அந்த நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை அது திரும்பப் பெற்றுள்ளது. இதன்படி 2003 மே மாதம் தொடக்கம் தலிபான்கள், ஆப்கான் அரசு மற்றும் அமெரிக்க துருப்புகளின் செயற்பாடுகள் ஆய்வுக்கு உட்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணையாத நிலையில் அதன் அமெரிக்க பிரஜைகள் மீதான அதிகாரித்தை அமெரிக்க அங்கீகரிப்பதில்லை. எனினும் ஆப்கானிஸ்தான் அந்த நீதிமன்றத்தின் உறுப்பு நாடாக உள்ளது. …
-
- 0 replies
- 325 views
-
-
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், மருத்துவமனைகளில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாததால், அதில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலை இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உண்மையில் வைரஸ் அச்சுறுத்தல் குறித்த தீவிரத்தை பல உலக நாடுகள் இன்னமும் அறியவில்லை என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டி இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் உலக…
-
- 0 replies
- 487 views
-
-
துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமத் மீது அவரது மனைவி பிரிட்டன் நீதிமன்றத்தில் முன்வைத்த, "கடத்தல், திரும்பி வருமாறு கட்டாயப்படுத்துதல், சித்ரவதை மற்றும் அச்சுறுத்தல் விளைவித்தல்" முதலிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) துபாயின் கோடீஸ்வர ஆட்சியாளரான ஷேக் முகமத் பின் ரஷீத் அல்-மக்தூம் மீது அவரது முன்னாள் மனைவி இளவரசி ஹயா பின்த் அல்-ஹுசைனால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பிரிட்டனின் உயர் நீதிமன்றத்தின் தொடர் தீர்ப்புகளின் மூலம் நிறுவப்பட்ட உண்மையாக மாறியுள்ளது. உயிருக்கு பயப்படுவதாக தனது நண்பர்களிடம் கூறிய துபாயின் இளவரசி கடந்த ஆண்டு அந்நாட்டிலிருந்து தனது இரண்டு மகள்களுடன் தப்பித்து பிரிட்டன் சென்றார். இதைத்தொடர்ந்து கடந்த எட்டு…
-
- 0 replies
- 391 views
-
-
ஜேம்ஸ் கல்லஹர் பிபிசி உடல்நல மற்றும் அறிவியல் செய்தியாளர் கொரோனா வைரஸ் இதுவரை 70க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இது மேலும் பரவும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இப்போது வரை கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்கான மருந்து ஏதும் தயாராகவில்லை. ஆனால் இந்த நிலை எப்போது மாறும்? கொரோனாவுக்கு தடுப்பு மருந்து எப்போது வரும்? ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்து உருவாக்கிவிட்டனர். அதை விலங்குகள் மேல் பரிசோதிக்கவும் தொடங்கிவிட்டார்கள். அது வெற்றி பெற்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் மனிதர்களிடம் பரிசோதனை நடத்துவது தொடங்கும். இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்குள் ஆராய்ச்சியாளர்கள் இதை உருவாக்கிவிட்டாலும் அதன் பிறகு அதை பெருமளவில் தயாரிக்கும் பெரிய பணி இருக்…
-
- 0 replies
- 568 views
-
-
கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாட்டிகனில் முதல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வாட்டிகனில் கொரோனா தொற்று இருப்பவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவைத் தவிர வேறு பிரிவுகள் மூடப்பட்டுள்ளன வாட்டிகனில் கொரோனா தொற்று இருப்பவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவைத் தவிர வேறு பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இரு கடலோர பகுதிகளிலும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்யும் சோதனை கருவிகள் போதுமான அளவு கைவசம் இல்லை என்பதை வெள்ளை மாளிகை ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போது நாட்டில் தே…
-
- 0 replies
- 401 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் நடுங்கி வரும் வேளையில், இந்த உயிர்கொல்லியால் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா என்னும் கொடூரனை உலகம் முழுவதும் பரப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. வூகானில் இருந்து தான் சீனாவின் பல பகுதிகளுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது. இதுவரை கொரோனாவிற்கு 3800-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா சீனாவிலிருந்து உருவானது. வூகான் விலங்கு சந்தையில் விற்கப்பட்ட வௌவால் காரணமாக தான் இது தோன்றியது. இதற்கு முக்கிய காரணம் சீனர்களின் வித்தியாசமான உணவு பழக்கவழக்கங்களே என்ற குற்றச்சாட்டு உலக மக்களால் பரவலாக முன் வைக்கப்பட்டது. ஆன…
-
- 3 replies
- 634 views
-
-
துனிசியா நாட்டின் தலை நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் நபர் ஒருவர் தற்கொலை குண்டுத்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு குறித்த தாக்குதலில் தற்கொலை குண்டுதாரியை தவிர வேறு யாரும் உயிரிழக்கவில்லையென தெரிவித்த அதிகாரிகள் 5 பேர் மாத்திரம் காயமடைந்து வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாக தெரிவித்தனர். இவ்வாறான தாக்குதல்கள் துன்சானியாவில் தொடர்ந்துள்ள நிலையில் சுற்றூலாப் பயணிகள் மீதும் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் மீதும் இத் தாக்குதல்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கலாம் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை …
-
- 0 replies
- 273 views
-
-
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – 148 பேர் இத்தாலியில் உயிரிழப்பு! கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரையில் மூவாயிரத்து 340 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மேலும் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியிலும் கொரானோ பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது. சீனாவிற்கு வெளியே, இந்த வைரஸ் தாக்கம் காரணமாக அதிகளவானவர்கள் இத்தாலியில் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மாத்திரம் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் 58 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 74 …
-
- 1 reply
- 801 views
-
-
மருந்து வாங்குவதற்கான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும்: கொரோனாவால் சிக்கித் தவிக்கும் ஈரான்! ஈரானுக்கு தேவையான பொருட்களை வாங்க, மருந்து வாங்குவதற்கான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி கோரியுள்ளார். உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது ஈரானிலும் மிக வேகமாக பரவி உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. இதனால், பொருளாதார தடைக்கு உள்ளாகியுள்ள ஈரான், மருந்து உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், தேவையான பொருட்களை வாங்க, மருந்து வாங்குவதற்கான தடைகளை நீக்க வேண்டுமென அமெரிக்காவிடம் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கொரோனா நாட்டின் அ…
-
- 0 replies
- 474 views
-
-
தென்கொரியா- அமெரிக்காவில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்! உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது தென்கொரியா மற்றும் அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகின்றது. இதன்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. இதில் இதில் 11பேர் வொஷிங்டனை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் கலிபோர்னியாவை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் தொற்று இலக்கானவர்களின் எண்ணிக்கை 225ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, சீனாவிற்கு வெளியே மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவரும் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், 518பேர் புதிததாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக தென…
-
- 0 replies
- 232 views
-
-
“ஒரு வியட்நாம் பிரஜையாக நாங்கள் அனுப்பிய செய்தி உலகம் முழுவதும் சரியாக சென்று சேருவது மகிழ்ச்சி” என்று பெருமிதப்படுகிறார் இன்னொரு ட்விட்டர் பயனர். “ஒரு வியட்நாம் பிரஜையாக நாங்கள் அனுப்பிய செய்தி உலகம் முழுவதும் சரியாக சென்று சேருவது மகிழ்ச்சி” என்று பெருமிதப்படுகிறார் இன்னொரு ட்விட்டர் பயனர். கொரோனா வைரஸ் வருவதற்கு முன்னரே நம்மை எப்படி தற்காத்துக் கொள்வது என்பதுதான் தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது. அதை மக்களுக்கு எளிமையாக சொல்ல வியட்நாமைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஒருவர் வித்தியாசமான நடன வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ஒருவர் கொரோனாவிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, எப்படி கை கழுவ வேண்டும் என்று நடனத்தின் வாயிலாகவே சொல்லித் தரப்படுகிறது.…
-
- 1 reply
- 438 views
-
-
அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தை அடுத்தடுத்து தாக்கிய இரு பலத்த சூறாவளிகளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். டென்னசியின் மிகப்பெரிய நகரான நஷ்வில்லேவில் வீடுகள் மற்றும் ஏனைய கட்டடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லாமல் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே இந்த சூறாவளிகள் தாக்கி இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காயமடைந்த 150 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு யுத்த வலயம் போல் அந்த நகர் காணப்படுவதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் விபரித்துள்ளனர். இதனால் 44,000 இற்கும் அதிகமானவர்கள…
-
- 0 replies
- 281 views
-
-
கொரோன வைரஸ் காரணமாக சர்வதேச ரீதியில் சுமார் 300 மில்லியன் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பாடசாலைகளிற்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. 13 நாடுகள் பாடசாலைகளை மூடியுள்ளன என தெரிவித்துள்ள யுனெஸ்கோ 9 நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளன இதன் காரணமாக 290.5 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. நெருக்கடி நிலையின் போது பாடசாலைகள் புதிய விடயமல்ல என்ற போதிலும் தற்போது முன்னொரு போதும் இல்லாத வேகத்தில் அளவிலும் பாடசாலைகள் மூடப்படுகின்றன என யுனெஸ்கோவின் தலைவர் ஆட்ரி ஆசோலே தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடர்ந்தால் கல்வி கற்ப…
-
- 0 replies
- 348 views
-