Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலக நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியில் சவுதியுடன் அமெரிக்கா கூட்டணி! ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலை தொடர்பில் உலக நாடுகள் கடுமையாக விமர்சித்து வருகின்ற நிலையில், சவுதி அரேபியா தமது உறுதியான பங்குதாரர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பெருமளவு நிதியொதுக்கீட்டில் பல முதலீடுகளை மேற்கொள்ள சவுதி அரேபியா இணக்கம் தெரிவித்துள்ளதென்றும் ஜனாதிபதி ட்ரம்ப் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் கஷோகியின் மரணம் தொடர்பாக சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசரான மொஹமட் பின் சல்மான் அறிந்திருப்பார் என ஏற்கனவே ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் சவுதி அரேபியாவுடன் அமெரிக்கா சிறந்த உறவை பேணி வருவதாக ஜனாதிபதி ட்ரம்ப் …

  2. உலக நாடுகளின் மாபெரும் சந்தேகத்துக்கு பதிலளித்தது சீனாவின் சர்ச்சைக்குரிய ஆய்வுகூடம்! by : Litharsan உலககையே பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் குறித்து சீனாவை பல்வேறு நாடுகள் விமர்சித்து வருவதோடு சந்தேகத்தையும் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸை மனிதனால் உருவாக்க முடியாது என வுஹானில் உள்ள சர்ச்சைக்குரிய சீன ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ், வுஹான் நகரில் உள்ள விலங்குகள் சந்தையில் தோன்றியதாகக் கூறப்பட்டுவந்தது. எனினும் மற்றொரு பக்கத்தில் இந்த வைரஸ் வுஹான் நகரில் உள்ள வைரலொஜி இன்ஸ்ரிரியூட் ஆய்வுக்கூடத்தில…

    • 0 replies
    • 432 views
  3. ஆசியாவில் இனி ஆயுதப் போர் நடைபெறக்கூடாது.. அமெரிக்கா..!! சிறுபான்மை மக்கள் படுகொலைகள் முடிவுக்கு வரவேண்டும்.. மணிக்கு 6000 கி.மீ வேகத்தில் சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் அமெரிக்காவின் புதிய அதிவேக ஏவுகணை கடந்த வியாழனன்று வெற்றிகரமாக பரிசீலிக்கப்பட்டது. உலகத்தின் முக்கிய இலக்குகளை ஒரு மணி நேரத்தில் தொட்டுவிடக்கூடிய மேற்கண்ட ஏவுகணை அமெரிக்க இராணுவ பிரிவான பென்ரகனின் இன்னொரு இமாலய சாதனை என்று வர்ணிக்கப்படுகிறது. அட்வாண்ஸ் கைப்பசொனிக் வெப்பன்ஸ் என்று இது அழைக்கப்படுகிறது. கடந்த வியாழனன்று அதிகாலை 13.30 மணிக்கு ஹவாயில் இருந்து ஏவப்பட்டது. சுமார் அரை மணி நேர இடைவெளியில் பசுப்பிக்சமுத்திரத்தில் உள்ள 3700 கி.மீ தூர இலக்கை இது தகர்த்துத்தள்ளியது. இந்த ஏவுகணையானது ஒலியின் வ…

  4. பிரிட்டனில் சமீபத்தில் பார் மற்றும் உணவு விடுதிகளில் ஊழியர்களுக்கு டிப்ஸ் வழங்குவதை தடை செய்வதற்கான சட்டங்கள் குறித்த விவாதங்களின் அரசியல் கட்சிகள் ஈடுபட்டன. பிரிட்டன் போன்று வேறு எந்த நாடும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாது. 17ஆம் நூற்றாண்டில் 'டிப்ஸ்' வழங்கும் கலாசாரத்தை உருவாக்கியது பிரிட்டன் மக்கள்தான் என நம்பப்படுகிறது. உண்மையில் அடித்தட்டு வர்க்க மக்களுக்கு சிறிய சன்மானமாக வழங்குவதில் இருந்து இது தொடங்கப்பட்டது. எனினும், பல்வேறு நாடுகளில், பல்வேறு முறைகளில் டிப்ஸ் வழங்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. ஆனால், சில நாடுகளில் ஒருவருக்கு டிப்ஸ் வழங்குவது என்பது அவர்களை அவமதிக்கும் செயலாக கருதப்படுகிறது. அமெரிக்கா அமெரிக்காவில் நகைச்சுவையாக இப்ப…

  5. உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வரும் தி எக்னாமிஸ்ட் என்ற பத்திரிகை 2013 ஆம் ஆண்டில் எந்த நாட்டில் பிறந்தால், இன்பமாக வாழலாம் என்ற கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் வழக்கம்போல் சுவிட்சர்லாந்து முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளது. சுவிஸை அடுத்து நார்வே, சுவீடன் மற்றும் டென்மார்க் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது. சென்ற வருடம் ஐந்தாம் இடத்தை பிடித்திருந்த கனடா, இவ்வருடம் நான்கு இடங்கள் பின் தள்ளி, ஒன்பதாவது இடத்தையே பெற்றுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா, முதல் 10 இடங்களில் ஒன்றாக இருக்க முடியவில்லை. அதற்கு 16வது இடமே கிடைத்துள்ளது. அமெரிக்கா 1988 ஆம் வருடம் முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் மற்றும் …

  6. உலக நாடுகளில், வைரஸைப் பரப்புவதற்காக... 5 ஆண்டுகளுக்கு முன்பே அதை தயாரித்த சீனா! கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே சார்ஸ் கொரோனா வைரஸ் போன்ற உயிரி ஆயுதத்தை தயாரிக்க சீன இராணுவம் திட்டமிட்டதாக இரகசிய தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி பெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, சீனாவின் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் பரவியதாகவும் இது சீன விஞ்ஞானிகள் செயற்கையாக தயாரித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அந்நாடு மறுத்தது. இந்த நிலையில், சார்ஸ் கொரோனா வைரஸ் என்ற வைரசை செயற்கையாக உருவாக்கி, அதை உயிரி ஆயுதமாக பயன்படுத்த சீனா திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான சீன …

  7. உலக நாடுகளுக்கு அமெரிக்கா உத்தரவிட முடியாது: புதிய பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் புதிய மந்திரியாக சக் ஹேகல் நேற்று பதவி ஏற்றார். பின்னர் பென்டகனில் பணிபுரிபவர்களுக்கு உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:-நாம் உலகின் பலம் மிக்க நாடாக இருக்கிறோம். அந்த பலத்தை எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பதே முக்கியம். நாம் மற்ற நாடுகளுக்கு உத்தரவிட முடியாது. நட்பு நாடுகளுடன் இணைத்து, தலைமை ஏற்று செயல்பட வேண்டும். அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் இதனை தனியாகச் செய்ய முடியாது. மற்ற நாடுகளை நாம் புத்திசாலித்தனமாக வழிநடத்த வேண்டும். நமது நாட்டிற்காகவோ, நமது நட்பு நாடுகளுக்காகவோ வளங்களைப் பயன்படுத்தும் போது புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ந…

  8. வாஷிங்டன்: மற்ற நாடுகளை விட பெரிய அளவில் ராணுவத்தை கட்டமைத்து வரும் சீனா, உலகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப் கூறியதாவது: மற்ற நாடுகளை விட வேகமாக ராணுவத்தை கட்டமைத்து வரும் சீனா, உலகிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதற்காக, அந்த நாடு அமெரிக்க பணத்தை பயன்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் 500 பில்லியன் டாலர் பணத்தை, சீனா எடுத்து கொள்ள அமெரிக்க முன்னாள் அதிபர்கள் அனுமதித்தனர். எங்களின் அறிவுசார் சொத்துரிமையையும் சீனா திருடவும் அனுமதித்தனர். ஆனால், அதனை நான் விட மாட்டேன். வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்காவும் சீனாவும் செயல்பட்டு வருகின்றன. சீன பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருக…

    • 0 replies
    • 489 views
  9. உலக நாடுகளுக்கு பயங்கரவாதம்தான் தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது என்று பிரதமர் மோடி வியாழக்கிழமை வேதனை தெரிவித்தார்.இராக், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகள் அண்மையில் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பலியான நிலையில், பிரதமர் மோடி தெரிவித்துள்ள இந்தக் கருத்து சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சுற்றுப்பயணம்: ஆப்பிரிக்க நாடுகளுக்கான 5 நாள் அரசு முறைப் பயணத்தை தொடங்கிய மோடி, முதலாவதாக மொசாம்பிக் நாட்டுக்கு வியாழக்கிழமை சென்றார். அந்நாட்டின் தலைநகர் மபுடோவில் அமைந்துள்ள விமான நிலையத்தில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து மொசாம்பிக் அதிபர் பிலிப் நியூசியை மோடி சந்தித்துப் பேச…

  10. உலக நாடுகளுக்கு போப் ப்ரான்சிஸ் வேண்டுகோள் அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகளுக்கு இடையே மூன்றாவது நாடுகள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று போப் ப்ரான்சிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வட கொரியா அணு ஆயுத சோதனை மேற்கொள்வதை அமெரிக்கா விரும்பவில்லை. அதனால் வட கொரியா அணு ஆயுத சோதனை மேற்கொள்வதை தடுக்க அமெரிக்கா பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறது. இருப்பினும் வட கொரியா, அமெரிக்காவின் எதிர்ப்புக்கு அஞ்சாமல் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் அமெரிக்கா தனது கடற்படையை கொரிய தீபகற்ப பகுதியில் கொண்டு நிறுத்தியது. இந்த செயல் வட கொரியாவிற்கு ஆத்திரத்தை மூ…

  11. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – 148 பேர் இத்தாலியில் உயிரிழப்பு! கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரையில் மூவாயிரத்து 340 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மேலும் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியிலும் கொரானோ பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது. சீனாவிற்கு வெளியே, இந்த வைரஸ் தாக்கம் காரணமாக அதிகளவானவர்கள் இத்தாலியில் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மாத்திரம் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் 58 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 74 …

    • 1 reply
    • 801 views
  12. உலக நாடுகளை எச்சரிக்கும் ஈரான்! இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு உதவி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் எச்சரித்துள்ளது. அத்துடன் தனது வான்பரப்பினை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்த அனுமதியளிக்கும் நாடுகள் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை சந்திக்கும்’’ என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. https://athavannews.com/2024/1403918

  13. உலக நாடுகளை எச்சரிக்கும் வடகொரியா! ஹைப்பர்சோனிக் வார்ஹெட் பொருத்தப்பட்ட புதிய திட எரிபொருள் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த மற்றும் கடினமான ஆயுதங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை வடகொரியா மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அதன் முதல் இராணுவ உளவு செயற்கைக் கோளை ஏவியதை அடுத்து பிராந்தியத்தில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன. பசிபிக் பகுதியில் அமெரிக்கா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகலின் பிரசன்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வடகொரியா, அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் திறனை மேம்படுத்துவதாக உறுதியளித்த…

  14. உலக நாடுகளை ஏமாற்றியுள்ள சீனா: அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையில் முக்கிய தகவல்! by : Litharsan கொரோனா வைரஸால் நேரிட்ட உண்மையான உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை சீனா மறைத்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவின் பிறப்பிடமான சீனாவை விட அமெரிக்காவில் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகளவில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசிடம் கடந்த வாரம் அந்நாட்டு உளவுத் துறை அளித்துள்ள அறிக்கையில், சீனா வேண்டுமென்றே உண்மையான தகவல்களை மறைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த சீனாவின் புள்ளி விவரங்கள் போலியானவை எனத் தெரிவி…

  15. உலக நாடுகளை நடுங்கச் செய்யும் ட்ரம்பின் புதிய வரி; இலங்கை பொருட்களுக்கு 44% வரி! அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 10% குறைந்தபட்ச வரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (02) அறிவித்தார். இதன் மூலம் அவர், பல நாடுகளின் பொருட்களுக்கு மிக அதிக வரிகளுடன், பணவீக்கத்தை அதிகரித்து அமெரிக்க மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் அச்சுறுத்தலான உலகளாவிய வர்த்தகப் போரை அதிக அளவில் தொடங்கியுள்ளார். எதிர்பாராத விதமாக அதிக வரி விகிதங்களுடன் தங்களை இணைத்துக் கொண்ட பல நீண்டகால அமெரிக்க நட்பு நாடுகளிடமிருந்து குழப்பமான கண்டனத்தைப் பெற்ற இந்த கடுமையான வரிகள், உலகின் மிகப்பெரிய நுகர்வோர் பொருளாதாரத்தைச் சுற்றி புதிய தடைகளை எழுப்புவதாக உறுதியளிக்…

  16. உலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும்: WHO வேண்டுகோள் by : Anojkiyan உலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜெனீவாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமான ஐ.நா.வின் முக்கிய அமைப்பான உலக சுகாதார அமைப்பின் 73ஆவது கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “உலக நாடுகளிடம் நான் கேட்டுகொள்வதெல்லாம், கொரோனா வைரஸால் எளிதில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வைரஸின் ஆபத்தை எதிர்த்து நாம் நீண்டகாலம் பயணிக்க வேண்டியுள்ளது. ஆதலால் உலக நாடுக…

    • 0 replies
    • 435 views
  17. உலக நாடுகள் உடனடியாக இஸ்ரேலுடனான உறவுகளை மீள்பரிசீலனை செய்து அந்த நாட்டுடனான உறவுகளை இடைநிறுத்தவேண்டும்- ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளர் வேண்டுகோள் Published By: RAJEEBAN 16 JUL, 2025 | 11:02 AM இஸ்ரேலின் காசா இனப்படுகொலையை தடுத்துநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்கவேண்டிய நேரம் இது என ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்திற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொலம்பியா தலைநகரில் இடம்பெற்ற சர்வதேச மாநாடொன்றில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குல்கள் முற்றுகையிடப்பட்டுள்ள காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு உலக நாடுகள் என்…

  18. உலக நாணய நிதியத்தில் குண்டு வெடிப்பு..! உலக நாணய நிதியத்தின் தலைமையகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில், நிதியத்தின் பணியாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள உலக நாணய நிதியத்தின் தலைமையகத்தில், இன்று காகித உறையினுடாக அனுப்பப்பட்ட வெடிகுண்டு வெடித்ததனால், தலைமையகம் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த காகித உறையை பிரித்த நிதியத்தின் பணியாளர் காயமுற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. இந்நிலையில் குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும், கடந்தவாரம் ஜேர்மனியின் நிதி அமைச்சருக்கு வெடிகுண்டுடன் அனுப்பப்பட்ட காகித உறைக்கும் எதாவது தொடர்புள்ளதா என பிரான…

  19. இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் பகலவனுக்கும் மற்றும் பகுத்தறிவாளனுக்கும் இது ஒரு செய்தியே அல்ல. நகரத்தின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் விவேக்கிற்கும், ஹரிக்கும் இது மற்றும் ஒரு செய்தியே. ஆனால் பொருளாதார வல்லுநர்களுக்கும், அரசிற்கும் இது மிகவும் தீர்கமாக கவனிக்கபட வேண்டிய செய்தி. எது அந்த செய்தி? சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தினசரிகளில் மிகச் சிறிய இடத்தை பிடித்துக் கொண்டிருந்த வணிக மற்றும் பொருளாதார செய்திகள் தற்போது ஒரு குறிப்பிடத்தக்க அளவில் தன் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. ஆனாலும் அதை நுகரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மக்கள் தொகை வகிதாசாரப்படி மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் காணவில்லை. ஏன் இந்த செய்திகள் தனி மனித அளவில் அத…

  20. “என் மகன் ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்தது உண்மைதான்” - ஒப்புக்கொண்ட டிரம்ப் கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES டிரம்பின் மகன் - ரஷ்ய வழக்குரைஞர் சந்திப்பு தன் மகன் ரஷ்ய வழக்கறிஞர் ஒருவரை அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில் சந்தித்தார் என்பதை டொனால்ட் டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு தகவல் பெறுவதற்காக நிகழ்ந்த சந்திப்பு அது என்றும், அது சட்டப்பூர்வமானதுதான் என்றும் தான் பகிர்ந்த ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளர் டிரம்ப். படத்தின் காப்புரிமைAFP அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் ஆதிக்கம் குறித்து விசாரணை நடைபெற்…

  21. 3 லட்சம் வீரர்கள், மூன்று நாடுகள்: மிகப்பெரிய ராணுவ பயிற்சி மேற்கொள்ள இருக்கும் ரஷ்யா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். மிகப்பெரிய ராணுவ பயிற்சி மேற்கொள்ள இருக்கும் ரஷ்யா படத்தின் காப்புரிமைREUTERS ரஷ்யா மிகப்பெரிய ராணுவ பயிற்சி ஒன்றை மேற்கொள்ள இருக்கிறது. அடுத்த மாதம் நடக்க …

  22. 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய ஜெர்மனி பாதிரியார்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய ஜெர்மனி பாதிரியார்கள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜெர்மனியில் 1946ஆம் ஆண்டில் இருந்து 20…

  23. 3200 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதன் உண்ட ‘பாலாடைக் கட்டி’ கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். பாலாடைக் கட்டி படத்தின் காப்புரிமைUNIVERSITY OF CATANIA AND CAIRO UNIVERSITY பண்டைய எகிப்திய சமாதி ஒன்றை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள்,…

  24. 9/11 இரட்டை கோபுர தாக்குதலுக்குபின் திறக்கப்பட்ட சுரங்கபாதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். திறக்கப்பட்ட சுரங்கபாதை படத்தின் காப்புரிமைGETTY IMAGES சரியாக 17 ஆண்டுகளுக்குப் பின், 2001 ஆம் ஆண்டு 9/11 இரட்டை கோபுர பயங்கரவாத தாக்குதலின் போது மூடப்பட்ட சுரங்கபாதை ஒன்று மீண்…

  25. அல் கொய்தாவுக்கு வெடிகுண்டு தயாரித்தவர் கொல்லப்பட்டாரா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். அல் கொய்தாவுக்காக வெடிகுண்டு தயாரித்தவர் படத்தின் காப்புரிமைREUTERS அரேபிய தீபகற்பத்தில் அல் கொய்தாவுக்காக குண்டு தயாரிப்பவர் என சந்தேகத்திற்குரிய இப்ராஹும் அல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.