உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் வடகொரியத் தலைவரால் பரிசோதனை வடகொரியத் தலைவர் கிம் யொங் உன் தனது நாட்டால் புதிதாக நிர்மாணிக்கப்ப ட்ட நீர்மூழ்கிக் கப்பலொன்றை பார்வையிட்டு அதன் தந்திரோபாய ஆற்றல்கள் மற் றும் ஆயுத முறைமைகளை பரிசோதனை செய்ததாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.அந்த நீர்மூழ்கிக் கப்பலை கிம் யொங் உன் பரிசோதனை செய்யும்போது அவரது உத்தியோகத்தர்கள் அவரருகே நடந்து சென்று அவரால் வழங்கப்பட்ட குறிப்புகளை எழுதுவதில் ஈடுபட்டனர். கிம் யொங் உன்னின் விசேட மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அந்த நீர்மூழ்கிக் கப்பல் ஜப்பானிய கடல் என அழைக்கப்படும் …
-
- 0 replies
- 568 views
-
-
குடியேற்றவாசிகள் தொடர்பான உடன்படிக்கைக்கு 8 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் தெரிவிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 8 நாடுகள் மத்தியதரைக்கடலில் மீட்கப்படும் குடியேற்றவாசிகளின் மீள்குடியமர்த்தலை தம்மிடையே பகிர்ந்துகொள்ள இணங்கியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார். ஆனால் மேற்படி நாடுகளில் இத்தாலி உள்ளடங்கவில்லை என அவர் கூறினார். பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய உள்த்துறை மற்றும் வெளிநாட்டு அமைச்சர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியால் முன்வைக்கப்பட்ட கொள்கைக்கு ஏனைய 6 நாடுகள் ஒப்புதலை அளித்துள்ளதாக மக்ரோன் கூறினார். ஐரோப்பிய …
-
- 0 replies
- 426 views
-
-
மாற்றுப் பாலினத்தவர் பேரணியில் ஆர்வலர்கள் மீது தாக்குதல் : 25 பேர் பொலிஸாரால் கைது! போலந்தில் பேரணி நடத்திய மாற்றுப் பாலினத்தவர்களுக்கு ஆதரவான ஆர்வலர்கள் மீது பிறிதொரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது தாக்குதலில் ஈடுபட்ட 25 பேரை போலந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். மாற்றுப் பாலினத்தவர்களுக்கும் சமஉரிமை கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பியாலைஸ்டொக் நகரில் நடத்தப்படட பேரணியில் சுமார் 800 க்கும் மேற்பட்ட மாற்றுப் பாலின ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். கடந்த சனிக்கிழமை தொடக்கம் போராட்டங்களும், பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நூற்றுக்கணக்கான எதிரணி …
-
- 0 replies
- 263 views
-
-
சீன – ரஷ்ய கூட்டு வான்படை கண்காணிப்பு : பதிலடியாக விமானங்களை அனுப்பிய ஜப்பானும், தென்கொரியாவும்! சீனாவுடன் கூட்டாக இணைந்து முதன் முறையாக விமான கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடி வழங்கும் வகையில் தமது ஜெட் விமானங்களை ஜப்பானும், தென்கொரியாவும் அனுப்பியுள்ளன. ஜப்பான் கடல், கிழக்கு சீனக் கடல் பகுதியில் முன் திட்டமிட்ட பாதையில் போர் விமானங்களின் துணையோடு, நான்கு குண்டு வீசும் விமானங்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. ரஷ்ய விமானங்கள் எல்லை மீறிப் பறந்தபோது தங்கள் போர் விமானங்கள் இயந்திரத் துப்பாக்கியாலும், சுடரொளித் துப்பாக்கியாலும் (flare gun) எச்சரி…
-
- 0 replies
- 360 views
-
-
சிங்கப்பூரில் தொன் கணக்கிலான பங்கோலின் செதில்கள், யானைத் தந்தங்கள் பறிமுதல்! கொங்கோ நாட்டிலிருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாமுக்குக் கடத்தப்படவிருந்த சுமார் 12 தொன் பங்கோலின் செதில்கள், 9 தொன் அளவிலான யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேசியப் பூங்கா அமைப்புடன் இணைந்து சிங்கப்பூர் சுங்கத் துறை, குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணையகம் என்பன இந்த கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளன. மரக்கட்டைகளை ஏற்றிச் செல்வதாகக் குறிப்பிட்ட 3 கொள்கலன்களைச் சோதனையிட்ட போது, செதில்களும் தந்தங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 66 மில்லியன் சிங்கப்பூர் டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை பறிமுதல் செய்ய…
-
- 0 replies
- 308 views
-
-
சவூதியில் அமெரிக்க படைகள் மீளக் கால்பதிப்பு July 21, 2019 அதிகரித்து வரும் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவின் நலன்களை பாதுகாத்து கொள்வதற்காக அமெரிக்க படைகள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டு வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. வளைகுடா கப்பல் போக்குவரத்து பாதைகளில் பாதுகாப்பு தொடர்பாக ஈரானோடு அதிகரித்து வருகின்ற பதற்றங்களின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச பாதுகாப்பையும், நிரந்தரத்தையும் உறுதிப்படுத்தி கொள்வதற்கான இந்த நடவடிக்கைக்கு அரசர் சல்மான் அனுமதி வழங்கியுள்ளதை சௌதி அரேபியா உறுதி செய்துள்ளது. ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தபோது, 1991ம் ஆண்டு பாலைவன புயல் நடவடிக்கையோடு சவூதி அரேபியாவில் கால் பதித்த அமெரிக…
-
- 7 replies
- 1.2k views
-
-
படத்தின் காப்புரிமை Reuters பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் குறித்த பத்து சுவாரஸ்ய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். போரிஸ் ஜான்சன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தவர். பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். அரசியலில் நுழைந்தபின், நாடாளுமன்ற உறுப்பினர், லண்டன் மேயர் மற்றும் வெளியுறவு செயலர் என தற்போது பிரதமராகி இருக்கிறார். ஆனால், இவருடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் சர்ச்சைகள் கூடவே பயணப்படுகின்றன. தி ஸ்பெக்டேட்டர் என்ற பிரிட்டன் வார இதழின் ஆசிரியராக…
-
- 0 replies
- 547 views
-
-
சதீஷ் பார்த்திபன் கோலாலம்பூர், பிபிசி தமிழுக்காக மலேசியாவில் சட்ட விரோதமாகத் தங்கியுள்ள தமிழர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் தண்டனை ஏதும் இன்றி வெளியேற ஏதுவாக மீண்டும் ஒருமுறை பொது மன்னிப்பு என்ற சலுகையை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. எதிர்வரும் ஆகஸ்ட் முதல் …
-
- 0 replies
- 1k views
-
-
இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றவர் யார் என்பது இன்று அறிவிக்கப்படும். போரீஸ் ஜான்சன் புதிய பிரதமராக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து பிரிந்து செல்லும், பிரெக்சிட் ஒப்பந்தத்தை இங்கிலாந்து எம்பிக்கள் ஏற்க மறுத்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் தெரசா மே, கடந்த ஜூன் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. கன்சர்வேட்டிவ் கட்சியை பொறுத்தவரை கட்சி தலைவராக இருப் பவரே நாட்டின் பிரதமராகவும் இருப்பார். இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் லண்டன் மேய…
-
- 4 replies
- 932 views
-
-
மனுஸ் தீவிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை மீளக்குடியமர்த்த அவுஸ்திரேலியாவுக்கு வலியுறுத்தல் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள பபுவா நியூகினியின் பிரதமர் ஜேம்ஸ் மராபி தனது நாட்டின் மனுஸ் தீவில் ஸ்தம்பிதமடைந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை மீளக்குடியமர்த்த காலவரையறையொன்றை நிர்ணயிக்க அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு நேற்று வலியுறுத்தியுள்ளார். மராபி இரு மாதங்களுக்கு முன்னர் பிரதமராக பதவியேற்ற பின்னர் வெளிநாடு ஒன்றுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். அவர் அவுஸ்திரேலியாவுக்கான இந்த விஜயத்தின்போது அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிஸன் எதிர்க்கட்சித் தலைவர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் உயர்மட்ட அதிக…
-
- 0 replies
- 236 views
-
-
இரான் நாட்டில் கொல்லப்பட்ட சி.ஐ.ஏ உளவாளிகள் - டொனால்ட் டிரம்ப் என்ன சொல்கிறார்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA சி.ஐ.ஏ உளவு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது செய்துள்ளதாகவும் மற்றும் அதில் சிலருக்கு மரண தண்டனை அளித்ததாகவும் கூறுகிறது இரான். சந்தேகத்திற்குரிய அந்த நபர்கள் அணு, ர…
-
- 0 replies
- 875 views
- 1 follower
-
-
ஆங்கிலத்திறன் இருந்தும் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் முஸ்லிம்கள்! அவுஸ்ரேலியாவில் அகதிகளாக குடியேறுபவர்கள் எவராக இருந்தாலும் அங்கு அவர்கள் இயங்குவதற்கும், வேலைப் பெறுவதற்கும் ஆங்கிலத்திறன் என்பது அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. இந்த சூழலில், அவுஸ்ரேலியாவில் குடியேறியுள்ள முஸ்லீம்கள் சிறப்பான ஆங்கிலத் திறனை கொண்டிருந்தாலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு எட்டாக்கனியாகவே இருக்கின்றது என டீகின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2007ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து அவுஸ்ரேலியாவிற்கு இடம்பெயர்ந்த யூசப் கரிமி, பல்கலைக்கழகத்தில் சென்று படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டுள்ளார். ‘எனது நண்பர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்ல விரும்பி…
-
- 0 replies
- 731 views
-
-
ஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம் July 22, 2019 ஹொங்கொங் யாங் லாங் புகையிரத நிலையத்திற்குள் முகமூடி அணிந்து தடியுடன் புகுந்த பத்துக்கும் மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் அங்குள்ள மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நேற்றிரவு இ;டம்பெற்ற இந்தத் தாக்குதலில் 45 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர்கள் யார் , அவர்கள் ஏன் மக்களை தாக்கினார்கள்? என தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் போரட்டம் முடிந்து திரும்பிய மக்கள் மற்றும் பயணிகள் மீதே இவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஹ…
-
- 2 replies
- 819 views
-
-
இத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒப்படைப்பு! இத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் ஒன்று 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனிய அரசாங்கம் குறித்த ஓவியத்தினை மீண்டும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘Flower Vase’ என்பது ஓவியத்தின் பெயர். ஜோன் வான் ஹ்யூசெம் எனும் ஓவியரின் மிகச் சிறந்த ஓவியமாக அது கருதப்படுகிறது. மலர்களை மிக நுணுக்கமாக வரைவதில் வல்லவர் அவர். 1944ஆம் ஆண்டு நாஸி படைவீரர் ஒருவர் தனது மனைவிக்குப் பரிசளிக்கும் நோக்கில் குறித்த ஓவியத்தைத் திருடிச் சென்றதாய்க் கூறப்பட்டது. இந்தநிலையில் ஜேர்மனி குறித்த ஓவியத்தை இத்தாலியிடம் திருப்பிக்கொடுத்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருக…
-
- 0 replies
- 377 views
-
-
அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நாட்டின் குடியேற்ற கொள்கையில் கடுமையான போக்கை கடைப்பிடித்து வருகிறார். ‘அமெரிக்கா, அமெரிக்க மக்களுக்கே’ என்ற ெகாள்கையில் விடாப்பிடியாக இருக்கும் டிரம்ப், பிற நாடுகளில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் மீது எதிர்மறையான கருத்துக்களை கொண்டுள்ளார். இதன் காரணமாக அவ்வப்போது இனரீதியிலான கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறார். ‘ஜனநாயக கட்சியை (எதிர்க்கட்சி) சேர்ந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ அங்கேயே திரும்பி செல்ல வேண்டும்,’ என டிரம்ப் சமீபத்தில் டிவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார். இது விமர்சனத்துக்கு உள்ளானது. இத…
-
- 1 reply
- 575 views
-
-
அமெரிக்க அரசிடமும், மக்களிடமும் தன் நாட்டின் மீது ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்கி, உயர்வான எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தை பாகிஸ்தான் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு பதவியேற்ற பின், பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும் அமெரிக்காவுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் பாகிஸ்தான் மீது அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இதனால், பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த பல்லாயிரம் கோடி நிதியுதவியை கடந்த 2018 ஜனவரி முதல் நிறுத்தி விட்டார். இதனால், பாகிஸ்தானுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், 3 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வரும் பாகிஸ்தான் ப…
-
- 3 replies
- 775 views
-
-
பிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான் பிரிட்டனிலும் லைபீரியாவிலும் பதிவு செய்யப்பட்ட இரு எண்ணெய் கப்பல்களை ஈரான் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து வளைகுடாவில் பதற்றநிலை அதிகரித்துள்ளது. பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட பிரிட்டிஸ் கொடியுடன் காணப்பட்ட ஸ்டெனா இம்பெரோ என்ற எண்ணெய் கப்பலை 23 மாலுமிகளுடன் கைப்பற்றியுள்ள ஈரான் குறிப்பிட்ட கப்பல் கடல்சார் விதிமுறைகளை மீறியுள்ளது என குறிப்பிட்டுள்ளது. குறிப்பிட்ட கப்பலை ஈரானிய கடற்படையினர் பன்டர் அபாஸ் துறைமுகத்திற்கு எடுத்துசென்றுள்ளனர் என தெரிவித்துள்ள ஈரானிய செய்திச்சேவையொன்று மாலுமிகள் கப்பலிலேயே உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. ஈரானின் மீன்பிடிப்படகொன்றுடன் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்தே குறிப்பிட்ட கப்பல்…
-
- 2 replies
- 872 views
-
-
உலக பணக்காரர்கள் பட்டியல் – பின்தள்ளப்பட்டார் பில்கேட்ஸ்! உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த ‘மைக்ரோ சொஃப்ட்’ நிறுவுனர் பில்கேட்ஸ், மீண்டும் பின் தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த புளூம்பெர்க் எனும் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை அவ்வபோது வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் பல ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்தவர் ‘மைக்ரோ சொஃப்ட்’ நிறுவுனர் பில்கேட்ஸ். பில்கேட்சை, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளினார். இப்போது பிரான்சைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் எல்விஎம்எச் எனும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். இந்த ஆண்டு தான் இவரது சொத்து மதிப்பு …
-
- 0 replies
- 449 views
-
-
ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த இரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரித்துள்ளார். வியாழக்கிழமையன்று ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிக அருகே அதாவது கிட்டதட்ட 1000 யார்ட்கள் தொலைவில் இரானின் ஆளில்லா விமானம் பறந்து வந்ததால் அமெரிக்க தரப்பு தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டதா அதிபர் டிரம்ப் தெரிவித்தார். தனது ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் செய்தி குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை என்று இரான் கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. வளைகுடா பகுதியில் எண்ணெயை கடத்த முயன்றதாக ஒரு வெள…
-
- 0 replies
- 675 views
-
-
படத்தின் காப்புரிமை Reuters ஜப்பான் நாட்டில் கியோடோ மாகாணத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் ஒருவர் தீ வைத்த சம்பவத்தில் ஏறக்குறைய 26 பேர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டின் அவசரப்பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர். உள்ளூர் பத்திரிக்கை ஒன்றின்போது கூற்றுப்படி கியோடோ அனிமேஷன் ஸ்டூடியோவிற்குள் நுழைந்த, ஒருவர் அடையாளம் தெரியாத திரவத்தை வீசி நெருப்பை உண்டாக்கினார். மேலும், இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அடையாளம் தெரியாத சந்தேகத்திற்குள்ளானவர் கைது செய்யப்பட்ட…
-
- 0 replies
- 412 views
-
-
ஐரோப்பிய ஆணையத் தலைவராக முதல்முறையாக பெண்ணொருவர் தேர்வு! ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக ஜேர்மனியை சேர்ந்த உர்சுலா வொன் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்க்கல்-இன் ஆதரவைப் பெற்றுள்ள பாதுகாப்பு அமைச்சரான உர்சுலா ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள முதல் பெண்ணாவார். தற்போதைய ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன் க்ளூட் ஜுங்கர் வரும் நொவெம்பர் மாதம் 1 ஆம் திகதி பதவியிலிருந்து வெளியேறுவதையடுத்து உர்சுலா பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் அர…
-
- 0 replies
- 494 views
-
-
ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் மாயம்? ஹோர்முஜ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் திடீர் என மாயமாகியுள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் காரணமாக பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. கடந்த மே மாதம் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ச்சியாக நாசவேலை தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலின் பின்னணி அறியப்படாத நிலையில், ஈரான்தான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது. ஈரான் அதனை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில், ஹோர்முஜ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்த…
-
- 0 replies
- 527 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட்டுகளை பகிர்ந்தது தொடர்பாக, அவர் மீது கண்டனம் தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது. ''தங்கள் நிறம் குறித்த அச்சத்தை புதிய இளம் அமெரிக்கர்களிடம் டிரம்பின் இந்த கருத்துக்கள் அதிகரித்துள்ளன என்று அதிபருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஜனநாயக கட்சி அதிகாரத்தில் உள்ள இந்த சபை அதிபர் டிரம்புக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆதரவாக…
-
- 0 replies
- 428 views
-
-
பாகிஸ்தான் வான்வழியாக ஏர் இந்தியா விமானங்கள் டெல்லி வந்தடைந்தன காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாலக்கோட் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக தனது வான்வழியை இந்திய விமானங்கள் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்தது. கிரிகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க சென்றபோது, பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த இயலாத காரணத்தால் மாற்று வழியைத் தேர்வு செய்ய நேர்ந்தது. இதற்கிடையே, கர்த்தார்பூர்-குருத்வாரா ஆகிய இடங்களுக்கு இடையே வான்வழியை திறந்து விடுவது தொடர்பாக நடந்…
-
- 1 reply
- 916 views
-
-
கனடாவின் வடிவிலான நாணயத்தை, கனடா அரசு வெளியிடுகின்றது! கனடா தினத்தை கௌரவிக்கும் விதமாக ‘கனடா’ நாட்டின் வடிவிலான நாணயம் ஒன்றை வௌியிட ‘தி றோயல் கனேடியன்’ நாணய சபை தீர்மானித்துள்ளது. றோயல் கனேடியன் நாணய அச்சக சபையின் தயாரிப்பு முகாமையாளர் எரிகா மாகா இந்த தகவலை வௌியிட்டுள்ளார். வடிவமைப்பை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு புதுமையான வடிவத்தை உருவாக்க பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக் குழுக்கள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தன. அந்த வகையில் கனடாவின் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு விலங்கை அடையாளப்படுத்தும் வகையில் கலைஞரான அலிஷா கிரோக்ஸின் படைப்பில் உருவான வடிவத்தை இறுதி செய்வதற்கு அச்சக சபையின் அதிகாரிகள் தீர்மானித்தனர். http://athavannews.com/கனடாவின்-வடிவிலான-நா…
-
- 0 replies
- 535 views
-