Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆசியாவில் மக்களுக்கான உரிமைகளை வழங்குவதில் முன்னோடியாக விளங்கும் நாடாக கருதப்படும் தைவானில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு எதிரான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை அளிப்பதற்கு சாதகமான தீர்ப்பை கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியிருந்த நிலையில், பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலம் எடுக்கப்பட்ட இந்த முடிவு ஓரினச்சேர்க்கையாளர்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. 2017ஆம் ஆண்டு இதுதொடர்பான தீர்ப்பை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியபோது, இரண்டாண்டுகளில் புதிய சட்டத்தையோ …

  2. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…

  3. நிறவெறிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய ஒலிவியா 103 வயதில் மரணம் November 25, 2018 அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய 103 வயதுப் பெண்ணான ஆபிரிக்க மற்றும் அமெரிக்கருமான ஒலிவியா கூக்கர் மரணமடைந்துள்ளார் சுமார் 70 வருடங்கள் போராடிய இவர் அமெரிக்க கடலோரப்படையில் அமெரிக்காவில் இதுவரை நடந்த நிறவெறி கொண்ட தாக்குதல் சம்பவங்களிலேயே மோசமானதாக கருதப்படும், 300 கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்ட 1921ஆம் ஆண்டு நடந்த துல்சா நிகழ்விலிருந்து உயிர் தப்பித்த ஒலிவியா தொடர்ந்து கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிறவெறிக்கு எதிராக போராடி வந்தார். நீதி மற்றும் சமத்துவத்திற்காக ஓயாமல் ஒலிக்கும் குரல் என ஒலியாவின் செயல்பாட்டை அமெரிக்காவின் முதல் க…

  4. தேர்தல் தோல்வி – தாய்வான் ஆளுங்கட்சி தலைமை பொறுப்பிலிருந்து இங் வென் விலகல்! தாய்வான் உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி தோல்வியை தழுவியுள்ளது. இதனையடுத்து கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஜனாதிபதி இங் வென் இராஜினாமா செய்துள்ளார். தாய்வானின் தற்போதைய ஜனாதிபதி இங் வென்னின் ஆட்சியை மதிப்பிடும் வகையில், இத்தேர்தல் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. 22 தொகுதிகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியான கொமிந்தாங் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இதனையடுத்து கட்சி தலைமைப் பொறுப்பிலிருந்து ஜனாதிபதி விலகினார். தாம் பதவி விலகினாலும், கட்சி மறுசீரமைக்கப்பட்டு நிலையான தன்மை ஏற்படுத்தப்படுமென ஜனாதிபதி இங் வென் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2016ஆம்…

  5. ஒரு தேர்வுக்காக நாடே அமைதியாக இருக்குமாம் – எந்த நாடு என தெரியுமா? தென்கொரியாவில் கடந்த வியாழக்கிழமை அலுவலகங்கள் தாமதமாகத் திறக்கப்பட்டன. 134 விமானங்களின் நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்… ஏன்? காரணம், அன்று அந்நாட்டின் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு. தென்கொரியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின்போது மாணவர்கள் கவனச்சிதறலால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அந்த ஏற்பாடுகள் இடம்பெறும். தேர்வில் பல ஆயிரம் மாணவர்கள் கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டு தேர்வைக் கிட்டத்தட்ட 595,000 மாணவர்கள் எழுதினர். தென்கொரியப் பல்கலைக் கழகங்களில் படிக்க எப்போதுமே கடும் …

  6. "அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் அடக்குமுறைக்கு எதிராக இஸ்லாமியர்கள் ஒன்றுதிரள வேண்டும்" என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுஹானி தெரிவித்துள்ளார். ‘இஸ்லாமிய கல்விக்கூடங்களுக்கான உலகளாவிய சிந்தனையில் நெருக்கம்’ (World Forum for Proximity of Islamic Schools of Thought) என்னும் அமைப்பானது ஆண்டுதோறும் சர்வதேச கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் 32ஆவது கருத்தரங்கம் இன்று ஆரம்பிக்கப்பட்டு இம்மாதம் 26 திகதிவரை ஈரான் தலைநகரான டெஹ்ரானில் நடைபெறும். இந்த 3 நாள் கருத்தரங்கில் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி, பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் சுமார் 80 நாடுகளில் இருந்து வந்துள்ள சுமார் 350 இஸ்லாமிய அறிஞர்கள், மு…

  7. November 24, 2018 சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு செய்வதற்காக 2 நாட்கள் ஒதுக்கத் தயாராக இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததனையடுத் 4 பெண்கள் தாங்கள் சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்ய காவல்துறைப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை நேற்றையதினம் விசாரித்த நீதிமன்றம் விசாரித்த போது கேரள அரசு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட…

  8. பிரெக்சிற் குறித்த மறுபேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய ஒன்றியம் சம்மதிக்காது: பிரதமர் மே தற்போது எட்டப்பட்டுள்ள பிரெக்சிற் ஒப்பந்த வரைவு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்படின், பிரெக்சிற் ஒப்பந்தம் குறித்த மறுபேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய ஒன்றியம் சம்மதிக்காது என, பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஊடகமொன்றின் நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டு நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”பிரித்தானிய மக்களுக்கு இந்த ஒப்பந்தம் பிடிக்கவில்லை. எனவே, வேறொரு உடன்பாட்டை எட்டுவோம் என ஐரோப்பிய ஒன்றியத்திடம் நாம் உரைத்தால் அதனை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்காது. இங்கு நான் என்னைப் பற்றி சிந்தி…

  9. அவுஸ்திரேலியாவை புரட்டிப் போட்ட புழுதிப் புயல் அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் நேற்று கடுமையான புழுதிப் புயல் வீசியுள்ளது. சுமார் 500 கிலோ மீற்றர் பரப்பளவுக்கு வீசிய இந்தப் புயலில் சிட்னி முதல் பல நகரங்கள் பாதிக்கப்பட்டதுடன், வானமும் செம்மஞ்சள் நிறமாக மாறிக் காணப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், அந்த நாடு கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், இந்தப் புழுதிப்புயல் வீசியதால் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் விமானப் போக்குவரத்தும் பாதிப்படைந்தன. குறித்த புயலில் சிக்குண்டோர் சுவாசிப்பதில் சிரமத்தினை எதிர்கொண்டதுடன் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள், பொதுமக்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோள் வி…

  10. பாக்கிஸ்த்தான் கராச்சி நகரில் சீன தூதரகம் மீது பாலுசிஸ்த்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் பாக்கிஸ்த்தானின் பாலுசிஸ்த்தான் பிராந்தியத்தில், பாக்கிஸ்த்தானின் அடக்குமுறைக்கெதிராகப் போராடிவரும் விடுதலைப் போராளிகள் அமைப்பொன்று இன்று கராச்சி நகரில் அமைந்திருக்கும் சீனத் தூதரகம் மீது தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இத்தாக்குதலில் 4 தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதோடு, 3 தாக்குதலாளிகளும் கொல்லப்பட்டதாக பாகிஸ்த்தான் அரசு கூறியிருக்கிறது. பாலுசிஸ்த்தான் ஊடாக அரேபியக் கடலுக்கான தனது வழங்கல்ப் பாதையொன்றினை பாக்கிஸ்த்தான் அரசின் அனுசரணையுடன் அமைக்க பாரியளவு முதலீட்டைச் சீனா செய்துவரும் வேளையில், தங்களது தாயகம் மீதான சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்பிற்கெதிராகவும், சுரண்டலு…

  11. இனப்படுகொலை குற்றம் – கௌதமாலாவில் முன்னாள் இராணுவ வீரருக்கு 5 ஆயிரத்து 160 ஆண்டுகள் சிறை! இனப்படுகொலை குற்றத்திற்காக, கௌதமாலாவில் முன்னாள் இராணுவ வீரருக்கு 5 ஆயிரத்து 160 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1982-ம் ஆண்டு கிராமம் ஒன்றில் 171 பேர் கொன்று குவிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவருக்கே, கௌதமாலா சிட்டி நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. மத்திய அமெரிக்காவில் மெக்சிகோ நாட்டுக்குத் தென் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு கௌதமாலா. அங்கு தொடர்ச்சியாக உள்நாட்டு போர் நடைபெற்று வந்ததுடன், அது சர்வாதிகாரி எப்ரெயின் ரியாஸ் மான்ட் ஆட்சியில் 1982-ம் ஆண்டில் உச்சத்தை தொட்டிருந்தது. இதன்போது, சர்வாதிகாரியின் உத்தரவிற்கு அமைய, எக்ஸில் மா…

  12. இந்தியாவிலிருந்து பிரிட்டன் சுரண்டிச் சென்ற பணம் எவ்வளவு?! பா. முகிலன் Follow பிரிட்டன், இந்தியாவிலிருந்து சுரண்டிச் சென்ற செல்வத்தை தற்போது திரும்பச் செலுத்த நினைத்தால், அதன் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டுவிடும். பிரிட்டன், ஏறக்குறைய 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட நிலையில், அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான இந்தியர்கள் அனுபவித்தது கடுமையான வறுமையையும் பஞ்சத்தையும்தான். அதே சமயம் இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் வளத்தையும் செல்வத்தையும் சுரண்டி, பிரிட்டிஷார் தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றனர். அவ்வாறு பிரிட்டன், இந்தியாவிலிருந்து சுரண்டிச் சென்ற செல்வத்தை பிரிட்டன் தற்போது திரும்பச் செலுத்த நினைத்தால், அதன் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டுவிட…

    • 2 replies
    • 1.6k views
  13. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…

  14. ஸ்டூவர்ட் லா பிபிசி மானிட்டரிங் படத்தின் காப்புரிமை AFP/PIB Image caption இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் புதிய அதிபர் இப்ராஹிம் முகமது சோலி (வலது) மாலத்தீவுகளின் புதிய அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, சீனாவை சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறார். சீனாவை விட இந்தியாவுடன் அதிக நெருக்கம் காட்டும் புதிய அதிபர் இப்ரஹிம் முகமது சோலி தலைமையிலான மாலத்தீவுகளின் புதிய அரசு, தனது வெளியுறவுக் க…

  15. அந்தமானில் பழங்குடியினர்களால் அமெரிக்க சுற்றுலாப்பயணி கொலை November 22, 2018 அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பழங்குடியினர்களால் அமெரிக்க சுற்றுலாப்பயணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்தவாரம் அந்தமான் தீவை சுற்றிப் பார்க்க சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான 27 வயதான ஜோன் அலென் சாவ் என்பவர் அந்தமானில் வசிக்கும் பழங்குடியின மக்களை பார்வையிடுவதற்காக அங்குள்ள வடக்கு சென்டினல் தீவுக்கு உள்ளூர் மீனவர்கள் மூலம் படகில் சென்றுள்ளார். வடக்கு சென்டினல் தீவில் வசிக்கும் சென்டினல் பழங்குடியின மக்கள் வெளியுலகத்துடன் தொடர்பு இல்லாதவர்கள். அந்நியர்கள் சென்றால் அவர்களை பழங்குடியினர் தாக்குவார்கள் என்பதனால் அந்த பகுதிக்கு செல்ல அரசு தடைவிதித்துள்ளது. இந்நி…

  16. ஊழியர் பற்றாக்குறையால் திண்டாடும் மலேசிய பொலிஸ்துறை! மலேசியாவில் 65 வீதமான பொலிஸ் நிலையங்களில் ஊழியர் பற்றாக்குறை நிலவுதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேசியாவில் மொத்தமாக காணப்படும் 791 பொலிஸ் நிலையங்களில் 500 பொலிஸ் நிலையங்களில் ஊழியர் பற்றாக்குறை நிலவுகின்றது. ஒரு பொலிஸ் நிலையத்திற்கு குறைந்தது 35 பேராவது அவசியமென குறிப்பிட்டுள்ள அந்நாட்டு பொலிஸ்துறை, தற்போதைய நிலையில் பணிகளை முன்னெடுப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக கோலாலம்பூர் புக்கிட் அனாம் பகுதியின் முகாமைத்துவப் பிரிவு பணிப்பாளர் அஸ்ரி யூசுப் நேற்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். பணிக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே சேவையிலிருந்து ஓய்வுபெறும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையே ஆட்பற்றாக…

  17. இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான் . கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். நடிகர் சிவக்குமார் குடும்பம் ரூ.50 லட்சம் நிதி அறிவித்…

  18. அமெரிக்கா, கனடாவை அச்சுறுத்தும் இ கோலி படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்கா, கனடாவில் பரவிவரும் இ கோலி பாக்டீரியாவுக்கும் ரோமெய்ன் கீரைக்கும் தொடர்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இ கோலை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த 32 பேரில் 13 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், கனடாவில் 18 பாதிக்கப்பட்டுள்ளனர். நுகர்வோர்கள், சில்லறை வியாபாரிகள், உணவகங்கள் உள்ளிட்டவை தங்களிடமுள்ள ரோமெய்ன் கீரையை தூக்கியெறிய வேண்டுமென அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த கோடை…

  19. ஊட்டச்சத்து குறைபாடு: ஏமனில் மூன்று வருடங்களில் 85,000 குழந்தைகள் பலி ஏமனில் கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வரும் போரின்போது மட்டும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 85,000 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிப்பதாக முன்னணி தொண்டு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. ஏமனில் உயிரிழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, பிரிட்டனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான பர்மிங்ஹாமிலுள்ள ஒட்டுமொத்த ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைக்கு சமம் என்று 'சேவ் தி சில்ரன்' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. …

  20. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…

  21. எரிக் சொல்ஹெய்ம் இராஜினாமா ! ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச் சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சொல்ஹெய்ம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். எரிக் சொல்ஹெய்ம் அதிகாரபூர்வ பயணங்களுக்காக 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை செலவிட்டமை சுற்றுச் சூழல் அமைப்பின் தணிக்கையில் கண்டறியப்பட்டடுள்ளது. மேலும், தனது பயணங்களுக்கான செலவுத் தொகையை பெறுவதில், அவர் நெறிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாகவும் தணிக்கை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது. இந் நிலையிலேயே ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு, நிதி பற்றாக்குறையில் தவிக்கும் நிலையில், எரிக்கின் செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் அவர் போதிய கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது…

  22. பாகிஸ்தானுக்கான ராணுவ நிதியுதவியை அமெரிக்கா ரத்து செய்துள்ளது November 21, 2018 பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு போதுமான அளவுக்கு அக்கறை காட்டவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டுக்கான 166கோடி டொலர் ராணுவ நிதியுதவியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு தங்களுக்கு உதவுமாறு பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்த போதும் பாகிஸ்தான் எந்தவிதத்திலும் உதவவில்லை. அப்படி இருக்கும்போது, பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியாக 166கோடி டொலர்களை அடுத்த ஆண்டுக்கு வழங்க முடியாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு அபோட்டாபாத்தில்தான் ஒசாமா பின்லேடன் வாழ்ந…

  23. உலக நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியில் சவுதியுடன் அமெரிக்கா கூட்டணி! ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலை தொடர்பில் உலக நாடுகள் கடுமையாக விமர்சித்து வருகின்ற நிலையில், சவுதி அரேபியா தமது உறுதியான பங்குதாரர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பெருமளவு நிதியொதுக்கீட்டில் பல முதலீடுகளை மேற்கொள்ள சவுதி அரேபியா இணக்கம் தெரிவித்துள்ளதென்றும் ஜனாதிபதி ட்ரம்ப் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் கஷோகியின் மரணம் தொடர்பாக சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசரான மொஹமட் பின் சல்மான் அறிந்திருப்பார் என ஏற்கனவே ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் சவுதி அரேபியாவுடன் அமெரிக்கா சிறந்த உறவை பேணி வருவதாக ஜனாதிபதி ட்ரம்ப் …

  24. ஆப்கான் தற்கொலை குண்டுதாக்குதலில் 40 பேர் பலி ஆப்கான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 40ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காபுலின் உரனஸ் அரங்கில் இடம்பெற்றுக்கொண்டிருந்த மதஅறிஞர்களின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலிலேயே பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 40ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் இடம்பெற்றவேளை அரங்கில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களிற்கு மத்தியில் தற்கொலை குண்டுதாரி தன்னை வெடிக்கவைத்தார் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். http://www.virakesa…

  25. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.