உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26881 topics in this forum
-
பிரான்ஸ் ஜனாதிபதி விஜயம் ; ஈராக்கில் கார் குண்டு வெடிப்பில் 32 பேர் மரணம் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஸ்கான் ஹொலண்ட் உத்தியோக பூர்வ விஜயமாக ஈராக் தலைநகர் பாக்தாத் சென்றுள்ள நிலையில் அவ் நகருக்கருகே இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாத் அருகேயுள்ள சட்ர் நகரில் இன்றுகாலை கூலி வேலை செய்யும் சிலர் வேலைக்காக சாலையோரம் காத்திருந்தனர். அப்போது, அங்கு வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் வெடித்து சிதறியதில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். முன்னதாக, கடந்த சனிக்கிழமை பாக்தாத் நகரில் பிரபல சந்தை பகுதியில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் 27 பேர் பலியானது குறிப்ப…
-
- 0 replies
- 316 views
-
-
72 மணி நேரத்தில் அமெரிக்காவில் வெளியேற வேண்டும்: ரஷ்ய அதிகாரிகளுக்கு அதிபர் ஒபாமா உத்தரவு ரஷ்ய நாட்டை சேர்ந்த தூதரக அதிகாரிகள் 35 பேரை நீக்கம் செய்ததோடு, 72 மணி நேரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 8–ந் தேதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் ‘பாப்புலர் ஓட்டு’ என்று அழைக்கப்படுகிற மக்கள் ஓட்டுகளை பெருவாரியாக பெற்றாலும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ‘எல…
-
- 4 replies
- 666 views
-
-
புதுடில்லி: வெளிநாடு சென்ற இந்தியர்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி கால அவகாசம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: கடந்த நவம்பர் 9 முதல் டிசம்பர் 30 வரை வெளிநாடு சென்றிருந்த இந்தியர்கள், தங்களது பழைய ரூபாய் நோட்டுகளை 2017 மார்ச் 31ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம். இதே காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை ஜூன் 30 வரை மாற்றிக்கொள்ளலாம். இந்த சலுகை பெமா விதிமுறைப்படி வழங்கப்படுகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1681450
-
- 0 replies
- 463 views
-
-
ஜகார்தா அருகே கடல் பகுதியில் பயணிகள் கப்பல் தீப்பிடித்ததில், 20 பேர் உடல் கருகி இறந்தனர். 17-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் மாரா ஆங்கி துறைமுகத்தில் இருந்து திடங் தீவுக்கு ஸரோ எக்ஸ்பிரஸ் பயணிகள் கப்பல் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சற்று நேரத்தில் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஃபைபர் பொருட்களால் வடிவமைக்கப்பட்ட கப்பிலின் பல்வேறு பகுதிகளுக்கு தீ பரவியது. எனினும், கப்பலின் இயக்கத்தில் எந்த பாதிப்பும் இல்லை. இதனால், கப்பல் மீண்டும் ஜகார்தாவுக்கு திருப்பப்பட்டது. பேரிடர் மேலாண்மைக் குழுவினர் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு, பெரும்பாலான பயணிகளை உயிருடன் மீட்டனர். எனினும் கப்பலில் பயணம் செய்த 20 பேர் தீயில் …
-
- 0 replies
- 425 views
-
-
தேர்தல் முறைகேடு விவகாரத்தில் டிரம்பின் பாராட்டைப் பெற்ற புட்டின் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறைக்கேடுகள் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் 35 பேர் அமெரிக்காவிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டிருந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் செயற்பாடுகளை ரஷ்யா மேற்கொள்ளாது என அந்நாட்டு ஜனாதிபதி விளாமிதிர் புட்டின் கூறிய கருத்தை அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொணால்ட் டிரம்ப் பாரட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரிகின்டனின் பிரச்சாரங்கள் தொடர்பான மின்னஞ்சல்களை இணையவழி மோசடியூடாக களவாடி தரவுகளை விக்கிலீக்ஸ் மையத்திற்கு பறிமாறிய விடயத்தில் ரஷ்ய அதிகாரிகளே முன்னின்று செயற்பட்டனர் என்றும், இதற்கு …
-
- 1 reply
- 365 views
-
-
சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராம்கோபால் யாதவ் அக்கட்சியிலிருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். ராம்கோபால் யாதவை கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கும் அறிவிப்பை வெளியிட்ட சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் முலாயம் சிங் யாதவ், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த சமாஜ்வாதி கட்சியின் தேசிய மாநாடு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் தெரிவித்துள்ளார். இன்று நடந்த மாநாடு கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது என்று தெரிவித்த முலாயம் சிங் யாதவ், இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சமாஜ்வாதி கட்சியின் தேசிய மாநாடு வரும் 5-ஆம் தேதியன்று (வியாழக்கிழமை) நடைபெற…
-
- 0 replies
- 307 views
-
-
ஐ.நா.வின் புதிய பொதுச் செயலாளராக அந்தோனியோ குத்தேரஸ் இன்று பொறுப் பேற்கிறார். தற்போதைய பொதுச் செயலாளர் பான் கி-மூன் நேற்று விடைபெற்றார். கடந்த 2007 ஜனவரி 1-ம் தேதி ஐ.நா. பொதுச்செயலாளராக பான் கி-மூன் பொறுப்பேற்றார். 10 ஆண்டுகள் ஐ.நா. சபையை வழிநடத்திய அவரின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் பேசிய பான் கி-மூன், டிசம்பர் 31-ம் தேதி இரவுடன் எனது பொறுப்பு நிறைவடைகிறது. இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. புதிய பொதுச்செயலாளருடன் இணைந்து மக்கள் நலனுக்காக ஐ.நா. ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக போர்ச்ச…
-
- 0 replies
- 443 views
-
-
அணுகுண்டு ஏவுகணையில் மேம்பாடு ; வட கொரிய அதிபரின் சர்ச்சை புத்தாண்டு உரை அணுகுண்டுகளை தாங்கிச்செல்லும் திறன் படைத்த தொலைதூர ஏவுகணைகளை சோதிக்கும் திறனை வட கொரியா நெருங்கிவிட்டதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன் தெரிவித்துள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் நாட்டு மக்கள்முன் தொலைக்காட்சியில் ஆற்றிய புத்தாண்டு உரை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் மேம்பாடு இறுதி கட்டத்தில் இருப்பதாக தனது புத்தாண்டு உரையின் போது கிம் குறிப்பிட்டார். கடந்தாண்டு வட கொரியா மேற்கொண்ட ஒரு மிகப்பெரிய அணு ஆயுத பரிசோதனை உள்பட மொத்தம் இரு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. அணு ஆயுதங்களில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை வட கொரியா அடைந்துவிட்டதால் அத…
-
- 0 replies
- 263 views
-
-
தருணங்கள் 2016 2016-ன் தருணங்கள் இவை. உலகெங்கும் இந்த ஆண்டில் எவ்வளவோ நடந்திருக்கின்றன என்றாலும், வழக்கம்போல இந்தியப் பார்வையில் நம்மை அதிகம் கவனிக்கவைத்த, கலங்கவைத்த, நெகிழவைத்த மிகச் சில தருணங்களை மட்டும் இங்கே தொகுத்திருக்கிறோம். 2015 தருணங்களில், ஏகாதிபத்தியமும் பயங்கரவாதமும் நடத்தும் பயங்கர மோதல்களின் இடையில், சாமானிய மக்களின் வாழ்க்கை எப்படி சிக்கிச் சின்னாபின்னமாகின்றன என்பதைக் குறிப்பிட்டிருந்தோம். 2016-ல் கூடவே, வலதுசாரி எழுச்சியும் அவற்றுடன் சேர்ந்திருக்கிறது. சாமானிய மக்கள் இந்தப் பூவுலகை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும் என்றால், 2017-ல் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறையவே இருக்கின்றன. பொறுப்புணர்…
-
- 2 replies
- 990 views
-
-
122 ஊடகவியலாளர்களை பலியெடுத்த 2016 விடைபெற்றுச் சென்றது:- உலகம் முழுவதும் 2016ம் ஆண்டு 122 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 93 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். மற்றவர்கள் விபத்துகள், இயற்கைச் சீற்றங்களில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஆவர். இவர்களில் இந்தியாவில் மட்டும் 5 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டனர். உலக தர வரிசையில் ஈராக்கிலேயு, அதிக அளவிலான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உலக அளவில் 23 நாடுகளில் ஊடகவியலாளர்கள் கொலை, குண்டு வீச்சுத் தாக்குதல், போரின் போது நடந்த தாக்குதல் என குறி வைக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளணம் தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப…
-
- 0 replies
- 345 views
-
-
பாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் மீது பொருளாதார தடை: அமெரிக்கா அதிரடி பாகிஸ்தானின் ஏவுகணை திட்டத்தில் தொடர்புள்ள 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா அதிரடியாக பொருளாதார தடை விதித்துள்ளது. வாஷிங்டன்: பாகிஸ்தான் ஏவுகணை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் அந்த நாடு, அணு ஆயுத திட்டங்களிலும் சரி, ஏவுகணை திட்டங்களிலும் சரி, தவறாக எதுவும் செய்யவில்லை என கூறி வருகிறது. இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் அந்த நாட்டின் ஏவுகணை திட்டங்களில் தொடர்பு கொண்டிருப்பதாக கூறி, 7 நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒபாமா அரசு அதிரடிய…
-
- 1 reply
- 391 views
-
-
கண்கவர் வாணவேடிக்கையுடன் 2017 புத்தாண்டை வரவேற்ற ஆஸ்திரேலியா உலக நாடுகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து முதன்முதலில் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். அதன்படி 2017 புத்தாண்டை கண்கவர் வாணவேடிக்கையுடன் வரவேற்றுள்ளனர். 2016-ம் ஆண்டு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் 2017-ஐ மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராக இருக்கிறார்கள். அந்தந்த நாட்டு மக்கள் அவர்களின் தலைநகரில் கண்கவர் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணியாகும்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் சரியாக நள்ளிரவு …
-
- 0 replies
- 281 views
-
-
மூடப்பட்டது சார்ஜா விமான நிலையம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சார்ஜாவில் நிலவிவரும் அதிக பனிமூட்டத்தின் காராணமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையிலிருந்து சார்ஜா நோக்கி செல்லவுள்ள பயணிகள் கடும் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/14946
-
- 0 replies
- 336 views
-
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * ரஷ்ய அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றியதற்கு பதிலடியாக அமெரிக்க அதிகாரிகளை அகற்ற மாட்டோம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று அறிவிப்பு. * சிறு மோதல்களுக்கு மத்தியில் சிரிய போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இந்த சமாதானம் நிலைக்குமா? நீடிக்குமா? ஆராய்கிறது பிபிசி. * மனிதர்களின் மூட்டுவலிக்கு பரிணாம வளர்ச்சியே காரணம். இது இன்னும் மோசமாகும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
-
- 0 replies
- 295 views
-
-
அச்சமூட்டும் எரிமலை உயிர்ப்பு ; பாரிய அனர்த்தத்தை ஏற்படுத்துமா? (படங்கள் இணைப்பு) பேருவில் அமைந்துள்ள சபன்கயா எரிமலை மீண்டும் உயிர்த்துள்ளது. தற்போது இந்த எரிமலையிலிருந்து சுமார் 3500 மீட்டர் உயரத்திற்கு சாம்பல்களும், புகைகளும் கக்கப்பட்டு வருகின்றன. பெருவின் அரேக்குவைபா பிராந்தியத்தில் அமைந்துள்ள சபன்கயா எரிமலை கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 2500 மீட்டர் வரையில் சாம்பல்களையும், புகைகளையும் கக்கியிருந்ததாகவும் தற்போது 3500 மீட்டர் வரை வேகமான புகைகளும், சாம்பல்களும் கக்கப்பட்டு வருவதாகவும் பெருவின் எரிமலை அறிவியல் இடர் மேலான்மை குழு தகவல் தெரிவித்துள்ளது. குறித்த எரிமலையின் உயிர்ப்பினால் பெருவின் கபானாகொடே, டாபே, லாரி, மற்றும்…
-
- 1 reply
- 512 views
-
-
உலகம் 2016: ட்ரம்ப் பேச்சுகளில் திகைக்கவைத்த 10 தெறிப்புகள் கோப்புப் படம்: நியூயார்க் டைம்ஸ் 2016 ஆம் ஆண்டில் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவராக அறியப்பட்டிருக்கிறார் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப். ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர், ஹிலாரியை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிடுக்கிறார் என்று உறுதியானதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் இதுவரை நடந்திராத சர்ச்சைகளுடன் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்தப்பட்டு, தேர்தலும் முடிந்து அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2016-ல் டர்ம்ப்…
-
- 0 replies
- 345 views
-
-
ஒரு விநாடி தாமதமாக பிறக்கிறது புத்தாண்டு - சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு புது தகவல் இம்முறை புதுவருடம் ஒரு விநாடி தாமதமாக பிறக்க உள்ளதாக சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு தெரிவித்துள்ளது. பூமியின் நாள் ஒன்றிற்கான சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு நேரம் கணக்கிடப்படுகிறது. இது வானியல் நேரம் என்று அழைக்கப்படுகிறது. இதேபோல உலகம் முழுவதும் 400 இடங்களில் உள்ள அணு கடிகாரம் மூலம் நேரம் கணக்கிடப்படுகிறது. அது மிகவும் துல்லியமானதாகும். தற்போது அணு கடிகாரத்தை பின்பற்றியே உலகின் நேர வகையீடு நிர்ணயிக்கப்படுகிறது. பூமியானது ஒரே வேகத்தில் சுழல்வது இல்லை. நிலவின் ஈர்ப்புவிசை, புவிநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில நேரங்களில் வேகமாகவும் சில நேரங்கள…
-
- 0 replies
- 457 views
-
-
இந்தோனேசியாவில் பாரிய பூமியதிர்ச்சி இந்தோனேசியாவின் கிழக்கு பாலி பிரதேசத்தில் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பூமியதிர்ச்சி 6.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. மேலும் இப் பூமியதிர்ச்சினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/14898
-
- 0 replies
- 334 views
-
-
கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல்: துனீசிய நபர் மீது கைது ஆணை பிறப்பிக்கப்படுமா? கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்திற்குள் தீடிரென லாரியை செலுத்திய நபருடன் தொடர்பு உள்ளதாகக் கருதப்படும் ஒரு துனீசிய நாட்டு நபருக்கு எதிராகஅதிகாரப்பூர்வாமாக கைது ஆணை பிறப்பி்ப்பது குறித்து இன்று ஜெர்மனி போலீசார் முடிவு எடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் அந்த 40 வயது துனீசிய நபர் தற்காலிக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நபரின் தொலைபேசி எண், தாக்குதல் நடத்திய நபரான அனீஸ் அம்ரியின் செல்பேசியில் இருந்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஜெர்மனியில் உள்ள ஊடகங்களில், அனீஸ் அம்ரி தாக்கு…
-
- 0 replies
- 359 views
-
-
உலகில் மிக உயரமான பாலம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு : காணொளி இணைப்பு சீனா தான் அமைத்த உலகின் மிகவும் உயரமான பெய்ப்பாங்ஜியாங் பாலத்தை இன்று வியாழக்கிழமை முதல் மக்கள் பாவனைக்காக திறந்துள்ளது. தென்மேற்கு சீனாவை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள குறித்த பாலமானது தரையிலிருந்து சுமார் 1850 அடி உயரத்திலும், 4400 அடி நீளத்தில் அமைந்துள்ளது. பாலத்தின் உயரமானது 200 மாடிகட்டிடத்தின் உயரத்திற்கு சமமானதாகும் என கூறப்பட்டுள்ளது. குறித்த பாலத்திற்கான கட்டுமானப்பணிகள் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. பாலத்தை அமைப்பதற்காக சுமார் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன என சீன ஊடகங்க…
-
- 0 replies
- 424 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * பாகிஸ்தானில் தங்கியுள்ள பதினைந்து லட்சம் ஆப்கானிய அகதிகள் நாடு திரும்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. * போக்கோ ஹராமிடமிருந்து தப்பிய இவர்கள், பட்டனியின் பிடியில் சிக்கியுள்ளனர்! ஒரு லட்சம் நைஜீரியர்களுக்கு உடனடியாக உணவு தேவை என ஐ நா கூறுகிறது. * புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உலகப் பொருளாதாரம் எப்படியான சவால்களை எதிர்கொள்கிறது?ஆராய்கிறது பிபிசி.
-
- 0 replies
- 227 views
-
-
புதிய திசையில் திரும்புகிறதா அமெரிக்க - சீன உறவு? தென் சீனக் கடலின் அடிப் பரப்பில் ட்ரோன் (ஆளில்லா நீர்மூழ்கி உளவு சாதனம்) ஒன்றை சீனக் கடற்படை கைப்பற்றியுள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்வுசெய்யப்பட்ட பிறகு, சீன - அமெரிக்க உறவுகள் புதிய நிலை நோக்கிச் செல்வதை உணர்த்துவதைப் போல, இதையொட்டிய வார்த்தைப் பரிமாற்றங்கள் இருக்கின்றன. இந்த ட்ரோனை அமெரிக்கக் கடற்படை வீரர்கள் தற்செயலாக ஏவினார்களா அல்லது சீனப் பகுதியை உளவு பார்க்கவோ, சீண்டவோ மேற்கொள்ளப்பட்ட முயற்சியா என்று தெரியவில்லை. ட்ரோனைத் திருப்பித் தந்துவிடுவதாக சீனா தெரிவித்தாலும் தன்னுடைய சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக ட்ரம்ப் இதைப் பயன்படுத்திக்கொண்டார். கடலின் அடியில் விழுந்த எங்களுடை…
-
- 0 replies
- 356 views
-
-
இன்று நள்ளிரவு முதல் சிரியா முழுவதும் போர் நிறுத்தம் l சிரிய ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கிடையே யுத்த நிறுத்த உடன்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த யுத்த நிறுத்த உடன்பாடு அமலுக்கு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் ரஸ்யாவின் உதவியுடன் சிரிய ராணுவம் அலேப்போ நகரை மீட்டுள்ள நிலையில் சிரிய ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுடன் யுத்தநிறுத்தம் குறித்து ரஸ்யா பேச்சுவார்த்தை நடத்தியது. இதனை இரண்டு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளனர் என ரஸ்ய அதிபர் புதன் அறிவித்துள்ளார். அத்துடன் இரண்டு தரப்புகளும் இதனை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் சிரியா முழுவதும் போர் நிறுத்தம் ஏற்பட உள்ளதாக தெரி…
-
- 0 replies
- 302 views
-
-
ஐ.எஸ். அமைப்பிற்கு அமெரிக்கா ஆதரவளிப்பது தொடர்பான காணொளி புகைப்படங்கள் எம்மிடம் உள்ளன : துருக்கி ஜனாதிபதி அதிர்ச்சி கருத்து அமெரிக்கா ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவளிப்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக துருக்கிய ஜனாதிபதி ரிசிப் தயிப் எடோகன் தெரிவித்துள்ளார். அமெரிக்க கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு சார்பாகவே செயற்படுகின்றனர் என அண்மையில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உள்ளிட்ட டிப்பேஸ்ரூபவ் வை.பி.டி மற்றும் வை.பி.ஜி ஆகிய தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை ஊக்குவித்து வருவதற்கான ஆதார புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தன்னிடம் இருப்பதாக குற்…
-
- 0 replies
- 303 views
-