உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26712 topics in this forum
-
5 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் பெண்கள் அமைப்பினர் நடத்தி வரும் போராட்டம் வலுத்து வருகிறது. அவர்கள், டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், ராஜினாமா செய்ய அவர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக நிருபர்களிடம் நீரஜ்குமார் கூறுகையில், ‘‘எனது ராஜினாமா சமுதாயத்தில் நிகழும் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த உதவுமானால், நான் ஆயிரம் முறை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால், இதனால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படப்போவதில்லை’’ என்று தெரிவித்தார். மேலும், சிறுமி பாலியல் வல்லுறவு சம்பவம் உளவியல் சம்பந்தப்பட்டது என்றும், யாரும் ராஜினாமா செய்வதால் இதற்கு தீர்வு ஏற்படப்போவதில்லை என்றும் கமிஷனர்…
-
- 0 replies
- 386 views
-
-
வாஷிங்டன், செப். 1: இன்டர்நெட் மூலம் 8 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளின் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட செக்ஸ் படங்களை டவுன்லோடு செய்து வைத்திருந்த அமெரிக்கருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம். 10 ஆண்டுகளாக அவர் இந்த ஈனச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய கடலியல் மற்றும் தட்பவெப்பவியல் ஆணையத்தில் பணிபுரிந்து வந்த ராபர்ட் கேரீ (52) மீது 2005ல் குற்றம் சாட்டப்பட்டது. தம் மீது குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து கேரி, நாட்டை விட்டுத் தப்பியோடினார். இதையடுத்து, அமெரிக்காவில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளிகளின் படங்கள் இந்த ஆண்டு ஜனவரியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதன்பிறகு 3 நாள்கள…
-
- 5 replies
- 36.7k views
-
-
பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற நிதி முதலீட்டு நிர்வாகிகளில் ஒருவரான ஜெப்ரே எப்ஸ்டெய்னின் உடல், சனிக்கிழைமை சிறையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தமது சிறை அறையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கருத்துப்படுகிறது. 2002 முதல் 2005 வரை 18 வயதுக்கும் குறைவான பல சிறுமிகளுடன் பாலுறவு கொண்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைதான அவர் மீது, பாலுறவுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES 2005இல் அவரால் பாதிக்கப்பட்டதாக 14 வயது சிறுமி ஒருவரின் குடும்பம் புகார் கூறியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளியில் தெரியவந…
-
- 7 replies
- 1.4k views
-
-
சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்தார்- டிரம்ப் - கிளின்டனின் நண்பரிற்கு எதிராக குற்றச்சாட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் ஆகியோரின் நெருங்கிய நண்பரான கோடீஸ்வரர் ஜெவ்ரே எப்ஸ்டெய்ன் சிறுமிகளை பாலியல் நோக்கத்திற்காக கடத்தினார் என எப்பிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். 2002 முதல் 2005 வரையான காலப்பகுதியில் புளோரிடா மற்றும் நியுயோர்க்கில் பல சிறுமிகளை எப்ஸ்டெய்ன் துஸ்பிரயோகம் செய்தார் என குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள அதிகாரிகள் இது தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அதனை தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். சிறுமிகளை கடத்தினார் மற்றும் துஸ்பிரயோகம் செய்தார் என்ற இரு குற்றச்சாட்டுகளை எவ்…
-
- 0 replies
- 403 views
-
-
சிறுமியை சீரழித்த 'சாமி'க்கு 10 வருடம் சிறை! அக்டோபர் 30, 2006 வேலூர்: 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் ஆற்காடு கங்காபுரத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. சாமியாராக தன்னை அறிவித்துக் கொண்ட இந்த தண்டபாணி அப்பகுதியில் தன்னை நாடி வருவோரின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு வலிப்பு நோய்க்கு இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக திவ்யா என்ற 8 வயது சிறுமியை அழைத்து வந்தனர். அப்போது அந்த சிறுமியை சாமியார் தண்டபாணி பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு தண்டபாணி கைது செய்யப்பட்டார். அவர் மீது வேலூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக…
-
- 2 replies
- 1.1k views
-
-
சைமன் பியர்ட், 56 இளைஞர் ஆலோசகராக பணிபுரிவதாக கூறிக்கொண்டு பல இளைஞர்களுடன் பாலியல் ரீதியாக தவறாக பேசுவதையே தொழிலாக வைத்துள்ளார். இணையத்தில் இருக்கும் பொது அரட்டை அறைக்குள் சென்று இளம் வயது பெண்களை தேடி அவர்களுடன் பேசுவது பின் அரட்டையை பாலியல் ரீதியில் திசை திருப்புவது உள்ளிட்ட வேலைகளை ஆறு வாரங்களாக முனைப்புடன் செய்து வந்த இவரை ரகசியமாக படம் பிடித்தனர் ஸ்கை செய்தி குழுவினர். தான் நிருபர்களால் கண்காணிக்கப்படுகிறோம் என்பது தெரியாமல் 13 வயது சிறுமி அமியுடன் நட்புடன் முதலில் அரட்டையை துவங்கினார். முதலில் இணைய காமெராவில் தன படத்தை போட்ட சைமன் , பின் சிறுமி அமியையும் இணைய காமெராவில் வருமாறு வலியுறுத்தினார். பின்னர் சிறிது சிறிதாக பாலியல் ரீதியாக அரட்டையை திசை திரு…
-
- 6 replies
- 1.3k views
-
-
சென்னை: சிறுமியைக் கல்யாணம் செய்து அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாக 45 வயது நபரை போலீஸார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த சிறுமி பவித்ரா (15). பத்தாவது வகுப்பு மாணவியான இவர் சென்னை புறநகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 18ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து போலீஸில் பவித்ராவின் பெற்றோர் புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில், பவித்ராவை ஆயிஷா மற்றும் அவரது கூட்டாளி சதீஷ் ஆகியோர் கடத்தினர். பின்னர் கோவையைச் சேர்ந்த அப்துல் என்பவரிடம், ரூ. 50 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு விற்றுள்ளனர். சிறுமியை விலை கொடுத்து வாங்கிய அப்துல் அவரை கல்யாணம் செய்து கொண்டார். பின்னர் பவித்ராவை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றார். இதையடுத்து அவரிடமிருந்து பவித்ரா தப…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஈராக்கில் 14 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய அமெரிக்க படை வீரருக்கு 90 ஆண்டு கால சிறை [18 - November - 2006] ஈராக்கில் 14 வயதுச் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பின்னர் குடும்பத்தினருடன் சேர்த்து கொலை செய்த அமெரிக்க இராணுவ வீரருக்கு 90 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 12 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வரில் ஒருவரான ஜேம்ஸ் பார்க் கருக்கே 90 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அபீர் காசிம் அல்-ஜனாபி எனும் இந்த சிறுமியினதும் குடும்பத்தினதும் படுகொலைகளில் தனக்கு தொடர்புள்ளதை பார்க்கர் ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும், தனது முன்னாள் சகாக்களுக்கு எதிராக சாட்சியமளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறுவனின் உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி பட மூலாதாரம்,COURTESY SN SALEEM, SA SEDDIK, M. EL-HALWAGY 28 ஜனவரி 2023 2,300 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய எகிப்து நாகரிகத்தின் உயர் வகுப்பைச் சேர்ந்த பதின்ம வயது சிறுவன் ஒருவரின் உடல் தங்க இதயத்துடன் பதப்படுத்தப்பட்டிருப்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 14 அல்லது 15 வயதில் இறந்ததாகக் கருதப்படும் இந்த சிறுவனின் உடல் 1916ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டு, கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் டஜன் கணக்கான மம்மிகளுடன் வைக்கப்பட்டிருந்தது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த உடல் வல்லுநர்களால் முழுமையாக ஆய்வு செய்யப்படா…
-
- 20 replies
- 1.6k views
- 1 follower
-
-
நியூசிலாந்து: சாலை விபத்தில் சிக்கிய சிறுவனை காக்க, தன் தலைப்பாகையை (டர்பன்) கழற்றி உதவிய சீக்கிய மாணவருக்கு, பாராட்டுகள் குவிகின்றது.ஆக்லாந்தில் பிசினஸ் கோர்ஸ் படித்து வரும் ஹர்மன் சிங், 22, தன்னுடைய வீட்டில் இருந்தார். அப்போது, சாலையில் சென்ற ஆறு வயது சிறுவன் மீது கார் மோதியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டதும், வெளியில் ஓடி வந்த ஹர்மன் சிங், தலையில் இருந்த டர்பனை கழற்றி, காயமடைந்த பகுதியில் கட்டி, உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த, நியூசிலாந்து நாட்டு தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்ந்த குழுவினர், ஹர்மன் சிங்கின் வீட்டுக்கு சென்று பாராட்டு தெரிவித்தனர். ஹர்மன் சிங்கின் வீட்டில், ஒரு பிளாஸ்டிக் டேபிள், இரண்டு நாற்காலிகளுடன், தரையில் விர…
-
- 4 replies
- 329 views
-
-
சென்னை: சென்னை சாலிகிராமத்தில் 11 வயது சிறுவன் அரவிந்த் கடத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 மாணவர்கள் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் சிறுவனைக் கடத்தி பணம் கேட்டு பின்னர் அரவிந்தைக் கொலை செய்ததாக அந்த மூவரும் பேரும் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை சாலிகிராமம் லோகையா காலனியைச் சேர்ந்த அரவிந்த் செவ்வாய்க்கிழமை இரவு கடத்தப்பட்டு அன்று இரவே கொடூரமாக கொலை செய்யப்பட்டு விருகம்பாக்கம் தொலைபேசி இணைப்பகத்திற்குப் பின்னால் உள்ள புதரில் போடப்பட்டான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் அரவிந்த்தைக் கொன்ற கொடூர நபர்களைக் கண்டுபிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். 15 தனிப்படைகள் அமை…
-
- 1 reply
- 1k views
-
-
சிறுவன் தில்ஷன் சுடப்பட்ட வழக்கு:மாஜி ராணுவ அதிகாரி கைது சிறுவன் தில்ஷன் சுடப்பட்ட விவகாரத்தில்,ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராமராஜன், 60, என்பவர் கைது செய்யப்பட்டார்.சென்னை தீவுத்திடல், இந்திராநகர் குடிசைப் பகுதியைச் சேர்ந்த குமார்- கல்யாணி தம்பதியின் மகன் தில்ஷன், 13. கடந்த, 3ம் தேதி, குடியிருப்பின் அருகில் உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பாதாம் மரங்களில், பாதாம் கொட்டைகள் பறிக்கச் சென்ற போது, அங்குள்ள ராணுவ அதிகாரி சுட்டதில் இறந்தான். இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் மற்றும் ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில் சந்தேகப்படும், லெப்டினன்ட் கர்னல் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி ஒருவரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித…
-
- 0 replies
- 364 views
-
-
சிறுவன் தில்ஷானை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரி சிக்கியது எப்படி? சிறுவன் தில்ஷானை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரி ராமராஜ் பாண்டியன் சிக்கியது பற்றி சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. சேகர் கூறியதாவது: கடந்த 3ந் தேதி மதியம் 1 மணி அளவில் தீவுத்திடல் அருகே உள்ள கொடி மர சாலையில் அமைந்துள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் 13 வயது சிறுவன் தில்ஷான் துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற தமிழக முதல் அமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 6 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தை நேரில் பார்த்த சிறுவர்கள் மற்றும் சம்பவம் நடந்தபோது ராணுவ வளாகத்தில் இருந்த அ…
-
- 0 replies
- 415 views
-
-
சிறுவயதினர் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை தடுக்கும்வகையில் அமெரிக்க புலனாய்வுத்துறை சென்ற வார இறுதியில் நாடு முழுவதும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது. சமூக ஊடக தளங்களில் இது போன்ற விபச்சாரங்கள் நடைபெறுவதும், நெடுந்தொலைவு பயணங்களில் டிரக்குகள் நிறுத்தப்படும் இடங்களில் நடைபெறும் இத்தகைய காரியங்களும் சோதனையாளர்களால் கண்காணிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மூன்று தினங்களாக 230 சட்ட அமலாக்கப்பிரிவினர் 76 நகரங்களில் நடத்திய இந்த சோதனைகளில், 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 105 இள வயதினர் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள். குழந்தை விபச்சாரம் அமெரிக்கா முழுவதும் உள்ள ஒரு தொடர் அச்சுறுத்தலாகும். இ…
-
- 0 replies
- 313 views
-
-
சிறுவயதிலிருந்தே இந்தியாவை வெறுத்தேன்: ஹெட்லி டேவிட் ஹெட்லி சிறுவயதிலிருந்தே இந்தியாவை தான் வெறுத்ததாக தீவிரவாதி டேவிட் ஹெட்லி கூறியுள்ளார். மும்பை தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் டேவிட் ஹெட்லி (55), தற்போது அமெரிக்க சிறையில் இருக்கிறார். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அப்ரூவராக மாறிய ஹெட்லி, சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் மும்பை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். மூன்றாவது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி சனால் முன்னிலையில் ஹெட்லியிடம் அப்துல் வகாப் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது ஹெட்லி கூறியதாவது: …
-
- 0 replies
- 363 views
-
-
சிறுவர் உடல் வலுவூட்டல் செயற்பாடுகளுக்கான ஊக்கத்தொகை இரட்டிப்பாகும் என்கிறார் காப்பர் தங்களது கென்சவேட்டிவ் கட்சியின் ஆட்சிபீடமேறுமிடத்து சிறுவர் உடல் வலுவூட்டல் செயற்பாடுகளுக்கான ஊக்கத்தொகை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என்றும் வரவு செலவுத் திட்டம் சமப்படுத்தப்பட்ட பின்னர் இளைஞர்களுக்கான வலுவூட்டல் செயற்பாடுகளுக்கான ஊக்கத்தொகையும் அறிமுகப்படுத்தப்படும் என காப்பர் அறிவித்திருக்கிறார். கென்சவேட்டிவ் கட்சி ஆட்சிபீடமேறுமிடத்து சிறுவர் வலுவூட்டல் செயற்பாடுகளுக்கான ஊடக்கத்தொகை 500 டொலர்களிருந்து 1000 டொலர்களாக அதிகரிக்கப்படுமென்று இன்று காப்பர் அறிவித்திருக்கிறார். அதேநேரம் வரவுசெலவுத்திட்டம் சமப்படுத்தப்படுமிடத்து இளைஞர்களுக்கான புதிய உடல் வலுவூட்டல் ஊக்கத்தொகையா…
-
- 0 replies
- 732 views
-
-
சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் - அவுஸ்திரேலிய நபருக்கு 129 வருட சிறைத்தண்டனை By RAJEEBAN 09 NOV, 2022 | 12:13 PM சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு அவுஸ்திரேலியா 129 வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. பிலிப்பைன்சில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஒருவருக்கே அவுஸ்திரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. துஸ்பிரயோகங்களில் ஈடுபடும் அனைவருக்கும் ஆள்கடத்தல் காரர்களிற்கும் இந்த தண்டனை உறுதியான செய்திகளை தெரிவிக்கும் என அரசதரப்பு வழக்குரைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். யுவதிகளை கடத்தி பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டிற்காக ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்துவரு…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
கிறிஸ்தவ பாதிரியார்களினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகி பாதிப்படைந்த சிறுவர்களிடம் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். சமீபகாலமாக சில கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் பிஷப்களால் உலகளவில் சிறுவர் - சிறுமிகள் பலர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகி பாதிக்கப்பட்டுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வாடிகன் சிட்டியில் நேற்று நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் பாதிரியார்களின் பாலியல் துஸ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் நீண்ட உரையாற்றினார் போப் ஆண்டவர். கெஞ்சிக் கேட்கிறேன்... பாதிரியார்களின் பாலியல் துஸ்பிரயோகத்தை மறந்துவிடும்படி உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் உங்களுக்கு செய்த கொடுமைகளை ஒருபோதும் ஏற்…
-
- 0 replies
- 344 views
-
-
சிறுவர்களின் காதைப் பிடித்து திருகும் பிரதமர் மோடி Jan 30, 2015 Ariram Panchalingam Don't miss, Local, News Ticker, Top Slider, World 0 பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தினத்தையொட்டி வீர தீரச் செயலுக்கான விருது பெற்ற ஒரு சிறுமியின் காதைப் பிடித்து செல்லமாக திருகிய படம் இப்போது வைரலாக மாறியுள்ளது. அந்த சிறுமியின் பெயர் ரிபா தாஸ். வயது 8. பிரதமர் மோடி இவரது காதைப் பிடித்து செல்லமாக திருகியபடி போஸ் கொடுத்த புகைப்படம் பிரதமரின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திரிபுராவைச் சேர்ந்தவர் ரிபா தாஸ். தீவிபத்திலிருந்து தனது தம்பியின் உயிரைக் காத்து தீரமாக நடந்து கொண்டார். இதற்காகத்தான் அவருக்கு வீரச் செயலுக்கான விருது கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இவரது வீடு…
-
- 0 replies
- 592 views
-
-
சிறுவர்களை துஷ்பிரயோகப்படுத்தும் வகையில் செயற்பட்ட 44 பேர் அதிரடியாக கைது அவுஸ்திரேலியாவில் சிறுவர்களை துஷ்பிரயோகப்படுத்தும் பொருட்களை தயாரித்த மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக 44 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இணையத்தளத்தில் பகிரப்பட்ட படங்கள் மற்றும் காணொளி குறித்து ஒரு வருடமாக நீடித்த விசாரணையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸாரின் இந்த நடவடிக்கையினால் ஜூன் மாதத்திலிருந்து மொத்தம் 134 சிறுவர்கள் பாதிப்பிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் பெடரல் பொலிஸார் கூறியுள்ளனர். அவுஸ்திரேலியாவின் 7 மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களிலிருந்து 19 - 57 வயதுக்குட்பட்ட நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள்…
-
- 0 replies
- 426 views
-
-
சிறுவர்களை வைத்து ஆபாச படங்களை தயாரித்த கும்பல் சிக்கியது : 29 சிறுவர்கள் இனம்காணல் தமது வலையமைப்பின் மூலம் உலகத்தின் பல நாடுகளுக்கு மில்லியன் கணக்கான சிறுவர்களின் பாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விநியோகித்து வந்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் உட்பட 7 பேரை ஸ்பானிய சிவில் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த வலையமைப்பினர் சுமார் 80 சிறுவர்களை பயன்படுத்தி இவ்வாறான பாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளதாகவும் இதில் 29 சிறுவர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சிவில் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த வலையமைப்பின் தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர் 13 வயதுக்கு குறைவான சிறுவர்க…
-
- 0 replies
- 305 views
-
-
சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்களாக நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 பேர் மீட்பு வடமேற்கு நைஜீரியாவின் பாதுகாப்பு அதிகாரிகள் கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளடங்களாக சுமார் 100 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த குழு ஜூன் 8 அன்று ஜம்பாரா மாநிலத்தில் கடத்தப்பட்டது. இதன்போது நால்வரும் கொல்லப்பட்டனர். ஜம்பாரா மாநில அரசு எந்தவிதமான மீட்கும் தொகையும் இன்றி கடத்தப்பட்டவர்களை மீட்டுள்ளதாக கூறியுள்ளது. எனினும் அது தொடர்பான மேலதிக விபரங்களை வழங்கவில்லை. இந் நிலையில் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதற்கும், அதன் பின்னர் அவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்புவதற்கும் நைஜீரிய பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை…
-
- 0 replies
- 355 views
-
-
சிறை கைதிகளின் கால்களை கழுவும் போப் சனி, 23 மார்ச் 2013( 11:41 IST ) புனித வியாழனை முன்னிட்டு வரும் 28ஆம் தேதி போப் பிரான்சிஸ் ரோம் நகரில் உள்ள சிறையில் இருக்கும் 12 கைதிகளின் கால்களை சுத்தம் செய்ய இருக்கிறார். இயேசு நாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவு தனது 12 சீடர்களின் கால்களை கழுவினார். இயேசு பிரானை பின்பற்றும் விதமாக போப் ஆண்டவர்கள் இந்த பழக்கத்தை தொடர்ந்து வருகின்றனர். வழக்கமாக புனித வியாழன் அன்று வாடிகன் தேவாலயத்தில் வைத்து தான் இந்த கால் கழுவும் நிகழ்ச்சி நடந்துவந்தது.இந்நிலையில் போப் பிரான்சிஸ் கஸல் டெல் மார்மோ சிறைக்கு புனித வியாழன் மதியம் சென்று அங்குள்ள கைதிகளில் 12 பேரின் கால்களை கழுவவிருக்கிறார். http://tamil.webdunia.com/newsworld/news/int…
-
- 1 reply
- 503 views
-
-
சிறை வைக்கப்பட்டுள்ளாரா கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தாம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தம் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டு கத்தார் செளதி அரேபியா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை சுமூகமாக்க அப்போது பேச்சுவார்த்தை நடத்தி…
-
- 0 replies
- 181 views
-
-
சிறைகளில் கைதிகள் மோதல்- 40 பேர் பலி பிரேஷிலில் 4 சிறைகளில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 40 கைதிகள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகர் மனாயஸ்சில் உள்ள 4 சிறைகளில் கைதிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சிறைகள் அனைத்தும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. அதில் ஒரு சிறையில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற சிறைகளில் 25 பேர் உயிழந்துள்னர். ஆக மொத்தம் 40 கைதிகள் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு துப்பாக்கிகள் அல்லது கத்திகளை பயன்படுத்தவில்லை. சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியது என அதிகாரிகள் தெரிவித்தனர். உலகிலேயே அதி…
-
- 0 replies
- 770 views
-