உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26901 topics in this forum
-
ஜெர்மனியில் 4.5 லட்சம் அகதிகள் தஞ்சம் இந்த ஆண்டில் இதுவரை 4.5 லட்சம் அகதிகளுக்கு ஜெர்மனி அடைக்கலம் அளித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் துணை பிரதமர் சிக்மர் கேபிரியேல் கூறியதாவது: கடந்த ஜனவரி முதல் இதுவரை ஜெர்மனிக்கு 4.5 லட்சம் அகதிகள் வந்துள்ளனர். இதில் ஆகஸ்டில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேரும் செப்டம்பரில் முதல் எட்டு நாட்களில் மட்டும் 37 ஆயிரம் பேரும் வந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். ஐரோப்பிய யூனியனில் 28 நாடுகள் உள்ளன. இதில் ஜெர்மனி, சுவீடன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அகதிகளுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளன. லட்சக்கணக்கான அகதிகளை ஜெர்மனி ஏற்றுக் கொண்டுள்ளது. பிரான்ஸ், டென்மார்க், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கணிசமான அகதிகளுக்கு அடைக்கலம் அளித்துள்ளன. …
-
- 0 replies
- 505 views
-
-
எரித்திரியாவில் இருந்து மக்கள் ஏன் வெளியேறுகிறார்கள்? எரித்திரியா நாட்டு சிறுமி | படம்: ஏ.பி. உள்நாட்டு போரின் உக்கிரத்தால் இருக்க இடமில்லாமல், வாழ வழியில்லாமல் இராக், சிரியா அகதிகள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். புகலிடம் தேடி ஐரோப்பாவுக்கும் வேறு சில இடங்களுக்கும் அலைந்து திரிகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள எரித்திரியா எனும் நாட்டில் இருந்தும் மக்கள் கும்பல் கும்பலாக வெளியேறி வருகின்றனர். அங்கேயும் ஏதோ உள்நாட்டுக் கலவரமோ என நினைக்க வேண்டாம். அப்புறம் ஏன் வெளியேறுகிறார்கள் எனக் கேள்வி எழுகிறதா? இதோ அதற்கான பின்னணி.. கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கிறது. எரித்திரியா. இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 6 மில்லியன். உலகில் உள்ள வறுமையான நாடுகள…
-
- 2 replies
- 1.8k views
-
-
கனடாவில் உள்ள பிரெஞ்சுமொழி பேசும் மக்கள் பெரும்பாண்மையாகவுள்ள கியூபெக் மாகாணத்தில் சுதந்திரம், இறையாண்மைப் பேணவும், அம் மக்களின் உரிமையைப் பாதுகாக்கவும் போராடிவரும் கட்சியே புளக் கெபெக்குவா ஆகும். இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் தேசிய அரசாங்கம் அமையாவிட்டால் பெரும்பாண்மைப் பலத்தைப் பெறுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயைந்திருந்த போதும் அதற்கான தேவை ஏற்படவில்லை. அதேபோன்று சடுதியாக மாறியுள்ள கனடியத் தேர்தல் களத்தில் லிபரல்கட்சி அல்லது புதிய ஜனநாயகக் கட்சி ஆட்சியமைப்பதற்குத் தேவையான ஆசணங்களைப் பெறாதவிடத்து அவர்களிற்கு தமது ஆதரவை வழங்கி அமைச்சரவையில் இடம்பெறப் போவதாக புளக் கெபெக்குவா கட்சி தெரிவித்துள்ளது. தற்போதைய …
-
- 0 replies
- 485 views
-
-
கனேடிய மக்கள் அனைவரும் பூகம்பத்தை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் பிலன்லீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.அண்மைக்கால ஆய்வின் படி, வான்கூவர் மாகாணத்தில் 7.3 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவசரகால மேலாண்மை அலுவலகம் தகவல் தெரிவித்திருந்தது.இந்நிலையிலேயே அமைச்சர் ஸ்டீபன் பிலன்லீ இந்த அறிவிப்பை மக்களுக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும்பொழுது, சமீபத்தில் ஏற்பட்ட சூறாவளி தான் வரவிருக்கும் பூகம்பத்தின் எச்சரிக்கையாக அமைந்துள்ளதால் மக்கள் அனைவரும் அதனை எதிர்க்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.பூகம்பம் எந்நேரத்திலும்ஏற்படுவதற்கான வாய்புக்…
-
- 0 replies
- 607 views
-
-
இங்கிலாந்தை அதிக காலம் ஆண்டவர்: பூட்டி விக்டோரியாவை தோற்கடித்த எலிசபெத் லண்டன்: 25வது வயதில் ராணியான இரண்டாம் எலிசெபத் இங்கிலாந்தை அதிக காலம் ஆண்ட ராணி என்ற பெயரை எடுத்துள்ளார். இங்கிலாந்து வரலாற்றில் விக்டோரியா தான் அந்நாட்டை அதிக காலம் ஆண்ட ராணியாக இருந்தார். அவர் இங்கிலாந்தை 63 ஆண்டுகள் 7 மாதம், 2 நாட்கள், 16 மணிநேரம் மற்றும் 23 நொடிகள் ஆண்டார். இந்நிலையில் ராணி விக்டோரியாவின் சாதனையை இரண்டாம் எலிசபெத் ராணி தனது 89வது வயதில் முறியடித்துள்ளார். இங்கிலாந்தை அதிக காலம் ஆண்ட ராணி என்ற பெருமையை எலிசபெத் பெற்றுள்ளார். கேமரூன் இங்கிலாந்தை அதிக காலம் ஆண்ட ராணி என்ற பெருமையை பெற்ற எலிசபெத்திற்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வாழ்த்து தெரிவித்துள்ளார். எலிசபெத் வி…
-
- 1 reply
- 442 views
-
-
நொந்து கிடக்கும் நைஜீரியா- 1 நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால் 2014 மே மாதம் சிறை பிடிக்கப்பட்ட மாணவிகள். அபுஜாவைத் தலைநகராகக் கொண்ட நைஜீரியா மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. வடக்கில் நைஜர், தெற்கில் கினி வளைகுடா, கிழக்கில் சாட் மற்றும் காமரூன் நாடுகள், மேற்கில் பெனின் குடியரசு ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட நாடு. அங்கு சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி இது. தலைநகர் அபுஜாவின் முக்கிய சாலையின் நடுவில் வந்து நின்று கொண்டார் ஒரு முஸ்லிம் பெண்மணி. தலை முதல் கால் வரை கருப்பு வண்ணம் கொண்ட பாரம்பரிய உடை. ஆனால் அவர் தன் உடை மீது ஒரு சிறிய வெள்ளைப் பட்டையை அணிந்திருந்தார். அதில் “எங்கள் பெண்களை மீட்டுத் தாருங்கள்’’ என்ற வார்த்தைகள். “எங்களுக்கு எங்கள் மகள்கள் மீண்டும் உயி…
-
- 5 replies
- 2.5k views
-
-
இனி போர் வந்தால், பாகிஸ்தானை 4 துண்டாக.... இந்தியா, உடைக்கும்.... சொல்வது சு.சுவாமி.டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா யுத்தத்தை பிரகடனப்படுத்தாது; ஆனால் இந்த முறை யுத்தம் நடந்தால் பாகிஸ்தானை இந்தியா 4 நாடுகளாக பிளவுபடுத்திவிடும் என்று பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் கனரக ஆயுதங்களுடன் பாகிஸ்தான் தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் இந்தியாவுக்குதான் பேரிழப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப் மிரட்டல் விடுத்துள்ளார். பாகிஸ்தானின் இந்த மிரட்டல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: பாகிஸ்தானிடம் எந்த ஒர…
-
- 15 replies
- 2.3k views
-
-
British Airways plane catches fire in Las Vegas Sep 09, 2015 Ranee Mohamed Local, News Ticker, Top Slider, World 0 A British Airways plane bound for London has caught fire at Las Vegas airport, forcing the evacuation of all 172 on board on emergency slides. McCarran International airport tweeted that two people “were transported for minor injuries”.US Federal Aviation Administration spokesman Ian Gregor was quoted as saying that the plane’s left engine caught fire before take-off. The plane was seen engulfed in flames and smoke. The fire was later put out. Flight 2276 – a Boeing 777-200 – was bound for London’s Gatwick airport. There were 159 passen…
-
- 1 reply
- 418 views
-
-
கனடா- ஒழுங்கு முறையான பாதுகாப்பு திரையிடல் இல்லாது கனடா அகதிகளை ஏற்றுக்கொள்ளாதென Stephen Harperதெரிவித்தார்.அரசாங்கம் அகதிகள் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேம்படுத்த முயல்வதாகவும் ஆனால் சிரியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகளை ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளார். தீவிர வாத அமைப்பு இயக்கத்திலிருக்கும் இந்த நாடுகளில் இருந்து சரியான பாதுகாப்பு திரையிடல் இன்றி அவர்களை கனடாவிற்குள் அனுமதிக்க முடியாதென கூறியுள்ளார்.அதிகமான மக்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம் ஆனால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களிற்கு உதவுகின்றோமா என உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.“ஒரு பயங்கரவாத யுத்த வலயத்திலிருந்து மடையை திறந்து பல ஆயிரக்கணக்கான அகதிகளை ஏற்றுக்கொள்ள முட…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஜெர்மானிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் விமான ஓட்டுனர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக அதன் சேவைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தம் காரணமாக, 1000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் 140,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என லுஃப்தான்ஸா அறிவித்துள்ளது. இன்று தொடங்கிய விமானிகளின் வேலை நிறுத்தம் நாளை-புதன்கிழமையும் தொடரும் என அவர்களின் சங்கம் அறிவித்த நிலையில், விமான சேவைகள் ரத்தாவது குறித்த தகவல் வந்துள்ளது. எனினும் இந்த வேலை நிறுத்தத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள லுஃப்தான்ஸா, முன்னர் இடம்பெற்ற வேலை நிறுத்தத்தின் போது ஏற்பட்ட இழப்புகளுக்காக, தொழிற்சங்கத்தின் மீது வழக்கு தொடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. …
-
- 0 replies
- 356 views
-
-
கனடா ரொறன்ரோவில் நேற்று காலை தொடக்கம் மாலைவரை ஸ்காபுரோ நகரப் பகுதியில் தேர்தல் சுற்றுப் பயணம் செய்த கனடிய பிரதமரும் கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருமான திரு ஸ்ரிபன் கார்ப்பர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மாலையில் ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ள “கேரளா பூட்ஸ்” நிறுவனத்தில் வாடிக்கையாளர்களோடு உரையாடிய வண்ணம் பிரதமர் திரு ஸ்ரிபன் கார்ப்பர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நிறுவனத்தில் வாடிக்கையாளர்களோடு உரையாடிய வண்ணம் பிரதமர் ஸ்ரிபன் ஹார்ப்பர் மற்றும் அவரது பாரியார் ஆகியோர் அங்கு கறிவேப்பிலை பொதிகள் செய்யும் இடத்தில் மிகவும் மகிழ்ச்சியோடு பொருட்களை பொதிகள் செய்தனர். அதே நேரம் Scarborough Southwest பகுதியில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர் றொசான் நல்லரத்தினத்திற்கு ஆதரவாக …
-
- 5 replies
- 692 views
-
-
பெங்களூரு, டெல்லி விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான கம்ப்யூட்டர் என்ஜினீயர், நண்பரின் மனைவியை அடைவதற்காக தனது மனைவியை கொலை செய்த திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமானது. பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 3 விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக கடந்த சனிக்கிழமை அதிகாலையில் விமான நிலைய மேலாளருக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து 3 விமானங்களிலும் வெடிகுண்டு உள்ளதா? என்பது குறித்து அதிரடி சோதனை நடத்தப்பட்டது. புறப்பட்டு சென்ற ஒரு விமானமும் மீண்டும் தரை இறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதேபோல டெல்லி விமான நிலையத்திற்கும் மிரட்டல் வந்தது. சோதனையில் அவை வெறும் புரளி என்பது தெரியவந்தது. 2 விமான நிலையங்களிலும் 7 சர…
-
- 0 replies
- 449 views
-
-
விமான ஆணைய நிறுவனத்தில் 598 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய விமான ஆணையம் சுருக்கமாக ஏ.ஏ.ஐ. என்று குறிப்பிடப்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான இது மத்திய அரசின் மினிரத்னா அந்தஸ்து பெற்றது. தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு 400 பணியிடங்களும், ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 198 இடங்களும் உள்ளன. மொத்தம் 598 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணியிடங்களில் இட ஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவினருக்க…
-
- 0 replies
- 372 views
-
-
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பதவி மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் எதிர்கால வளர்ச்சி, எதிர்வரும் பீகார் மாநில சட்டசபை தேர்தல், நாட்டின் பொருளாதார சரிவு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் சில முக்கிய தலைவர்கள் கருதி இருந்தனர்…
-
- 1 reply
- 283 views
-
-
லெபனான், சிரியா ஆகிய இரு நாடுகளிலும் பெரும் புழுதிப்புயல் சூழ்ந்துள்ளது. இரு நாடுகளின் தலைநகரங்களான, பெய்ரூட் மற்றும் டமாஸ்கஸ் ஆகிய நகரங்களை ஒரு மஞ்சள் நிற மாசு மண்டலம் சூழ்ந்துள்ளது. மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அல்லது வெளியே வர வேண்டிய சூழல் நேரிட்டால், அறுவை சிகிச்சையின் போது மருத்துப் பணியாளர்கள் அணியும் முகமூடிகளை அணிந்து செல்லுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். திங்கட்கிழமை இரண்டு பெண்கள் லெபனானின் கிழக்குப் பகுதியில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கில் வீசிய புழுதிப்புயலில் சிக்கி இறந்தனர். சுமார் 80 பேர் சுவாசப் பிரச்சனை காரணமாக மருத்துவமனைகளுக்கு எடுத்துசெல்லப்பட்டனர் என்று செய்திகள் கூறுகின்றன. லெபனானின் தெருக்களில் அகற்றப்ப…
-
- 1 reply
- 345 views
-
-
ஒடிசா மாநிலத்தின் புனித நகரமான பூரியில் வசித்து வருபவர் மனோரஞ்சன் ஜேனா. மும்பையில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படும் இவர், தன் வீட்டில் மண்டை ஓடுகளை வைத்து மாந்திரீக வேலைகளில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதன் அடிப்படையில் போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து ஜேனாவை கைது செய்தனர். மேலும், அவரது வீட்டின் அலமாரிகளில் அடுக்கி வைத்திருந்த 27 மண்டை ஓடுகளை கைப்பற்றினர். ஆனால், அவர் மந்திர தந்திர வேலைகள் செய்ததற்கான எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. இதுகுறித்து ஜேனாவிடம் விசாரித்தபோது, தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தான் நடத்தி வந்தது ஊக்கம் அளிக்கும் மையம் என்றும் தெரிவித்தார். “கடந்த 9 ஆண்டுகளாக இந்த மண்ட…
-
- 0 replies
- 297 views
-
-
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து டெல்லிக்கு ஏர்இந்தியா நிறுவனத்தின் ஏ1–105 ரக விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 150 பேர் பயணம் செய்தனர். நேற்று இரவு டெல்லி விமான நிலையம் அருகே வந்த போது விமானத்தில் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டது. உடனே, விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அப்போது விமானத்தின் ஒரு சக்கர பகுதியில் தீப்பிடித்து ‘குபு குபு’ வென புகை கிளம்பியது. உடனே பயணிகள் வெளியேற விமானத்தின் அவசர கதவுகள் திறக்கப்பட்டன. ஆனால், அதில் ஒரு கதவு திறக்கப்படவில்லை. இதனால் பயணிகளிடையே பீதி நிலவியது. அதைத் தொடர்ந்து விமானத்தில் உள்ள சறுக்குபாதை வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அவசரமாக வெளியேற்றப்பட்டதில் 5 பயணிகள் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்ச…
-
- 0 replies
- 225 views
-
-
ஆண்டுக்கு 5,00,000 அகதிகளுக்கு புகலிடம்: ஜெர்மனி அறிவிப்பு சிரிய அகதிகளுக்கு ஜெர்மனியில் வரவேற்பு. | படம்: ஏபி ஆண்டுக்கு 5 லட்சம் என்ற எண்ணிக்கையில், அகதிகளுக்கு புகலிடம் அளிக்கவுள்ளதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜெர்மனிக்கு அகதிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டு துணைப் பிரதமர் சிக்மர் கேப்ரியேல் (sigmar gabriel )இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அரசு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஆண்டுக்கு 5 லட்சம் அகதிகளுக்கு அடுத்த சில ஆண்டுகள் தொடர்ந்து புகலிடம் அளிக்க முடியும். இதில் எங்களுக்குச் சந்தேகமில்லை. இதைவிட எண்ணிக்கை அதிகமாகக் கூட இருக்கலாம். மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வற…
-
- 46 replies
- 3.7k views
-
-
http://www.asrilanka.com/2015/09/07/29807 விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் வே. பிரபாகரனுடைய தாயாரின் அஸ்தி அடங்கிய (உடல் எரிக்கப்பட்ட சாம்பல்) மண் பானையொன்று, தனது வீட்டின் பூசையறையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் தமிழகத் திரைப்பட இயக்குநரும், ‘நாம் தமிழர்’ அமைப்பின் தலைவருமான சீமானின் புதிய குண்டை வெடிக்க வைத்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு சீமான் வழங்கிய பேட்டியொன்றிலேயே இந்தக் குண்டைப் போட்டுள்ளார். புலிகளின் தலைவர் பிரபாகரனின் தயாரான பார்வதியம்மாள் 2011 ஆம் ஆண்டு, தனது 81 ஆவது வயதில் – வல்வெட்டித்துறையில் மரணமடைந்தார். பார்வதியம்மாளின் இறுதிக் காலங்களில், அவரை – தற்போதைய வட மாகாணசபை உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் பராமரித்து வந்தார். மரணமடைந்த பார்வதியம்மாளி…
-
- 36 replies
- 4.5k views
- 1 follower
-
-
பல்லாயிரக்கணக்கான சிரிய அகதிகள் ஐரோப்பாவை நோக்கி பயணிக்கிறார்கள்பல்லாயிரக்கணக்கான சிரிய அகதிகள் ஐரோப்பாவை நோக்கி பயணிக்கிறார்கள் பல்வேறு நாட்டு எல்லைகளிலும், ரயில் நிலையங்களிலும் சிரிய அகதிகள் சிக்கித்தவிக்கும் காட்சிகள்; அதிலும் குறிப்பாக மூன்று வயது ஆலன் குர்தியின் சடலம் துருக்கிய கடற்கரையோரம் தரை ஒதுங்கிக் கிடந்த கோலம், இவை அனைத்தும் போரில் இருந்து தப்பி ஓடிவருபவர்களுக்கு மேலதிகமாக உதவ வேண்டும் என்கிற பரவலான, வலுவான கோரிக்கைகளை உருவாக்கியுள்ளது. அத்தோடு, வளைகுடா நாடுகளுக்கிடையிலான கூட்டுறவில் அங்கம் வகிக்கும் அரபு நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கடார், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகியவை தம் எல்லைக்கதவுகளை இந்த அகதிகளுக்கு திறக்க மறுக்கும் போக்குக்கு எதிர…
-
- 0 replies
- 706 views
-
-
ஜெர்மனிக்குள் வந்திருக்கும் அகதிகளால் நாடு பெரும் மாற்றத்தை சந்திக்கும் என்று அங்கெலா மெர்க்கெல் நம்பிக்கை ஜெர்மனிக்குள் குவியும் குடியேறிகளின் வருகை அடுத்துவரும் ஆண்டுகளில் நாட்டையே மாற்றிவிடும் என்று அந்நாட்டின் ஆட்சித் தலைவி அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். இதற்காக அறுநூறு கோடி அமெரிக்க டாலர் மதிப்பீட்டிலான செயற்திட்டம் ஒன்றையும் அவர் அறிவித்திருக்கிறார். அகதித்தஞ்சக் கோரிக்கைகளை வேகப்படுத்துவது மற்றும் புதிய குடியேறிகளுக்கான வீடுகளைக் கட்டுவது ஆகியவையும் இந்த திட்டங்களுக்குள் அடங்கும். குடியேறிகளின் எண்ணிக்கை மலைக்க வைப்பதாக இருப்பதாகவும் இந்த நெருக்கடியை ஜெர்மனியால் மட்டும் தனியாகத் தீர்க்க முடியாது என்றும் மேர்க்கல் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவ…
-
- 0 replies
- 305 views
-
-
மாறுகிறதா மாலத்தீவு?- 1 நம் நாட்டுக்கு மிக அருகில் உள்ள ஒரு நாடு 2040-ல் முழுவதும் கடலில் மூழ்கிவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மாலத்தீவு குறித்த இந்தத் தகவலே பதற வைக்கிறது இல்லையா? அந்த நாட்டில் சமீபத்தில் நடைபெறும் நிகழ்வுகளும் பதற்றத்தை உண்டாக்கக் கூடியவைதான். . மாலைத் தீவுகள் என்றும் அழைக்கப்படும் இந்நாடு, நமது நாட்டின் ஒரு பகுதியான லட்சத் தீவுகளுக்குத் தெற்கே உள்ளது. இலங்கையிலிருந்து தென்மேற்கே அமைந்துள்ளது. கடல் சார்ந்த ஏரி. அந்தக் கடலையும் ஏரியையும் பிரிக்கும் வகையில் பவளப் பாறைகள். இப்படி அமைந்த பகுதியை பவளத் தீவு என்பார்கள். அப்படி மொத்தம் 26 பவளத்தீவுகளைக் கொண்ட தேசம் மாலத்தீவு. தீவுகளால் அமைந்த மாலைபோல் காணப்படுவதால் தமிழில் மாலைத்தீவுகள் என்று அழை…
-
- 5 replies
- 2.8k views
-
-
படங்கள் 10- அகதிகளை நெகிழவைத்த ஜெர்மனியின் வரவேற்பு சோகத்துடன் ஜெர்மனியின் முனிச் நகரத்தை வந்தடைந்த குழந்தைகள், ஜெர்மானிய மக்களின் வரவேற்பாலும், இனிப்புகளைக் கண்டும் மெல்லச் சிரிக்கின்றனர். சிரியா, இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள காரணத்தால், அங்கு வாழும் மக்கள் அகதிகளாகி, பல்வேறு நாடுகளைத் தஞ்சம் கோரி வருகின்றனர். கடல் மார்க்கமாக பயணித்து கிரீஸ், இத்தாலி நாடுகளில் கரையேறுபவர்களுக்கு அந்நாடுகள் இடம் அளிக்க மறுத்து வருகின்றன. ஆனால் ஜெர்மனி மட்டும் அகதிகள் அனைவருக்கும் அடைக்கலம் அளித்துவருகிறது. கணக்கில்லாத உணவுப் பொருட்களையும், இனிப்புகளையும் வழங்குகிறது. குழந்தைகளுக்கு பொம்மைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. சிரியாவில் இருந்து வரும் ஆயி…
-
- 2 replies
- 841 views
-
-
அடுத்த தேர்தலில் ஆட்சியமைக்கக்கூடீய கனடாவின் மூன்று கட்சிகளின் தலைவர்களும் ரொறன்ரோவில் முகாமிட்டு தமது பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். வீட்டு உரிமையாளரின் தேனீர்க் கோப்பையில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் சிக்கியிருந்த தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதியின் வேட்பாளர் கட்சியிலிருந்தும் வேட்பாளர் பட்டியலிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், கண்சவேட்டிவ் கட்சிக்கான ஆதரவுத் தளத்தை பேணவேண்டிய அவசியம் கனடியப் பிரதமரிக்கு ஏற்பட்டுள்ளது.மற்றைய இரு தலைவர்களிற்கும் பாரிய ரொறன்ரோவின் வாக்குவங்கியின் பலத்தை அதிகரிக்கும் ஏதுவான நிலை பல்கலாச்சார சமூகம் என்றரீதியல் ஏற்பட்டுள்ளதால், அந்த வாக்குப் பலத்தை மேலும் அதிகரிக்கும் விதமான பிரச்சாரத்தில் மற்றைய இரு தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடு…
-
- 0 replies
- 326 views
-
-
சிரியாவில் உள் நாட்டு போர் காரணமாக அங்கிருந்து மக்கள் அகதிகளாக வெளியேறுகின்ற நிலையில், அவர்களுக்கு நிம்மதியான மகிழ்ச்சிகரமான வாழ்வை அமைத்து கொடுக்க எகிப்து கோடிஸ்வரர் ஒருவர் கிரேக்கம் அல்லது இத்தாலியில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதில் சிரியா அகதிகளை குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்கள். அவர்களை ஏற்க சில நாடுகள் மறுத்து வருகின்றன. இதனால், மத்திய தரைக்கடலில் செல்லும் போது படகுகள் கடலில் மூழ்கி ஏராளமான அகதிகள் மரணம் அடைகின்றனர். ஹங்கேரியில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லவிடாமல் அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சிரியா அகதிகளுக்கு இது போன்று பல்வேறு பிரச்ச…
-
- 0 replies
- 421 views
-