Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வல்லரசு நாடுகளின் கொள்ளை!! 2015-08-20 12:55:04 இலத்தீன் அமெரிக்கக் கண் டத்திலுள்ள ஒரு நாடு பெரு. அருகிலிருக்கும் ஏராளமான குட்டித்தீவுகளிலும் பாறைத்தீவுகளிலும் பல்லாண்டு காலமாக கடற்பறவைகள் தங்கி வாழ்ந்து வருகின்றன. மனித நடமாட்டம் இல்லாததால் அவற்றின் எச்ச ங்கள் அப்பகுதிகளில் மலை போல் குவிந்து கிடந்தன. இந்த இயற்கை இடுபொருளை மோப் ;பம் பிடித்த வணிகக் கப்பல்கள், இதைக் கொள்ளையடிக்க அலை யலையாய் புறப்பட்டு வந்தன. இங்கிலாந்துடன் இதர ஐரோப் ;பிய நாடுகளும் அப்போது புதி தாக முளைத்திருந்த அமெரிக்கா வும் சேர்ந்து இங்கிருக்கும் 94 தனித்தீவுகளையும், பாறைத் தீவுகளையும் சுற்றி வளைத்தன. ஒரே சமயத்தில் ஒரு தீவின் எச்ச உரங்களை ஏற்றிச் செல்ல பலநாடுகளைச் சேர்ந்த 99 கப்பல்கள் முற்றுகையிட்டிரு ந்த…

    • 0 replies
    • 984 views
  2. இரசாயன வெடிப்பு காரணமாக அண்மையில் முற்றிலுமாக சேதமடைந்த சீனா துறைமுக நிறுவனத்திலுள்ள டொயாட்டோ நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் படிப்படியாக மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அநத நிறுவனம் அறிவித்துள்ளது. வெடிப்பின் பின்னர் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டிருந்ததுடன் டொயாட்டோ நிறுவனத்தின் 67 ஊழியர்களும் பலத்த காயமடைந்திருந்தனர். அத்துடன் பல்லாயிரக்கணக்கான வாகனங்களும் சேதமடைந்திருந்தன. தியான்ஜி வெடிப்பானது 139 பேரது உயிர்களைக் காவு கொண்டிருந்ததுடன் மேலும் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இங்கு காணப்படும் டொயாட்டோ நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையில் 12,000 ஊழியர்கள் தொழில் புரிவதுடன் 2014 ஆம் ஆண்டில் மொத்தமாக 440,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தமை குறிப்ப…

  3. கனடாவில் நடைபெறும் தமிழர்களது தெரு திருவிழாவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். [Sunday 2015-08-30 21:00] கனடா ரொறன்ரோவில் முதன் முறையாக தெரு திருவிழா நெடைபெற்று வருகிறது நேற்றுநடைபெற்ற நிகழ்வில் சுமார் ஓரு மைல் துாரத்திற்கு வீதி மூடப்பட்டு நண்பகல் 12 மணிமுதல் இரவு 11 மணிவரை நடைபெற்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கூடியிருந்தனர். தமிழ் கலை கலாச்சார தமிழின வரலாற்று நிகழ்வுகள் பலவும் நடைபெற்றன. இன்றும் இரண்டாம் நாள் நிகழ்வு ஆரம்பமாகி கோலாகலமாக பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் தெரு நீளத்திற்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.. நிகழ்வுபற்றிய விரிவான செய்தி தொடரும்... http://www.sei…

    • 2 replies
    • 1.5k views
  4. ஸ்வாசிலாந்தில் அழகிப் போட்டிக்கு செல்லும் வழியில், பயங்கர விபத்து: 38 இளம்பெண்கள் பலி.பபானே: ஸ்வாசிலாந்தில் டிரக் ஒன்று கார் மீது மோதிய விபத்தில் அழகிப் போட்டிக்கு சென்று கொண்டிருந்த 38 இளம்பெண்கள் பரிதாபமாக பலியாகினர். ஆப்பிரிக்க நாடான ஸ்வாசிலாந்தின் மன்னர் மூன்றாம் ஸ்வாதியின் மனைவியை தேர்ந்தெடுக்கும் அழகிப் போட்டி வரும் திங்கட்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டியில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கன்னிப் பெண்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு கிளம்பினர். அப்படி அழகிப் போட்டியில் கலந்து கொள்ள அழகிகளை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று பபானே மற்றும் மான்சினி ஆகிய முக்கிய நகரங்கள் இடையே கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரக்கில் இருந்த 38 இளம…

  5. பேராசிரியர் கல்புர்கி படுகொலை! 30 ஆகஸ்ட் 2015 கன்னட அறிஞரும் ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்புர்கி இன்று காலை ஒன்பது மணியளவில் அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இடதுசாரி சிந்தனையாளராகவும், பகுத்தறிவுவாதியாகவும் அறியப்பட்ட பேராசிரியர் கல்புர்கி படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1980 களில் பேராசிரியர் கல்புர்கி எழுதிய நூல் ஒன்று சர்ச்சைக்குள்ளானது. லிங்காயத் சாதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அந்த நூல் திரும்பப் பெறப்பட்டது. அதன்பிறகும் எதிர்ப்பு தொடர்ந்ததால் ' இனிமேல் லிங்காயத் இலக்கியம் குறித்தோ, பசவரின் தத்துவம் குறித்தோ எதுவும் எழுதமாட்டேன்' …

  6. கார் மட்டுமா... கார் நிறுவனங்களின், சின்னங்களையும்... விட்டுவைக்காத சீனர்கள்! உலகின் மிக விலையுயர்ந்த கார்களை அப்படியே காப்பியடித்து வெளியிடுவதில் சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் கில்லாடியாக இருந்து வருகின்றன. அங்குள்ள சட்டத் திட்டங்களும், அந்த நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதால், வெளிநாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பிரச்னை எழுப்ப முடியாத நிலை இருக்கிறது. இந்தநிலையில், கார்களை மட்டுமல்ல, உலகின் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களின் லோகோ எனப்படும் அடையாளச் சின்னங்களையும் சீன நிறுவனங்கள் காப்பியடித்திருப்பதை இந்த செய்தியில் காணலாம். சீன நிறுவனங்கள் மட்டும் என்றில்லை, சில வெளிநாட்டு நிறுவனங்களின் லோகோவை சுட்டு, தங்களது அடையாளச் சின்னங்களை உருவாக்கியிருக்கும் கார் நிறுவனங்களை பற்றிய…

    • 2 replies
    • 1.1k views
  7. நம்ப வைத்து ஏமாற்றினரே...: அதிர்ச்சியில் இலங்கை தமிழர்கள்! இலங்கையில், சிங்கள கட்சிகளின் தலைவர்கள் அளித்த வாக்குறுதியை நம்பி, கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற, தமிழ் எம்.பி.,க்களுக்கு, இலங்கை மத்திய அமைச்சரவையில் உரிய வாய்ப்பு கிடைக்காது என்ற சூழல் உருவாகியுள்ளது; இதனால், தமிழர்கள் அதிர்ச்சி அடைத்து உள்ளனர். 3௦ அமைச்சர்கள் : இலங்கை அரசியலமைப்பிற்கான, 19வது திருத்தச் சட்டத்தின் படி, மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை, 30 என ஏற்கனவே நிர்ணயித்துள்ளதோடு, இணை அமைச்சர்களின் எண்ணிக்கையும் வரையறுத்துஉள்ளனர். இதே காரணம் காட்டி, ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்ற, தமிழ் எம்.பி.,க்களுக்கும், அமைச்சரவையில் போதிய பிரதிநிதித்துவம் தரப் ப…

    • 6 replies
    • 1.5k views
  8. ராமேசுவரம் தீவு கடற்பகுதியில் திருக்கை மீன்களின் வரத்து அதிகரிப்பு Ads by Google எஸ். முஹம்மது ராஃபி COMMENT · PRINT · T+ பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய அரியவகை வீணைத் திருக்கை மீன் | படம்: எஸ்.முஹம்மது ராஃபி ராமேசுவரம் தீவு கடற்பகுதியில் திருக்கை மீன்களின் வரத்து தற்போது அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் கடந்த ஆகஸ்ட் 8 முதல் தொடர்ச்சியாக 19 நாட்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டதால் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்ட விசைப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தை வாபஸ் பெற்று வியாழக்கிழமை கடலுக்குச் சென்று வெள்ளிக்கிழமை கரை திரும்பினர். கரை திரும்பிய மீனவ…

    • 0 replies
    • 1.2k views
  9. கட்டாக்: அரசு மருத்துவமனையில் ஏழு நாட்களில் 35 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த வேதனையான சம்பவம் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் மருத்துவமனயில் பிறந்த குழந்தைகள் இறக்கும் சம்பவம், தொடர்ச்சியாக நடந்து வருகிறது. நேற்று மட்டும் மருத்துவமனையில் 5 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். கடந்த 7 நாட்களில் மட்டும், மருத்துவமனையில் 35 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனையானது கிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையாகும். மருத்துவமனையில் தினமும் சுமார் 300 வரையிலான குழந்தைகள் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர். இவர்களில் 50 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையிலேய…

  10. அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் இரு தொலைக்காட்சி செய்தியாளர்கள், கேமரா முன்பாக செய்தி வழங்கிக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். டபிள்யுடிபிஜே7 என்ற தொலைக்காட்சியைச் சேர்ந்த அலிசன் பார்க்கர் என்ற 24 வயது செய்தியாளரும் அவருடைய ஒளிப்பதிவாளர் ஆடம் வார்ட் என்பவரும் கொல்லப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு நேரலை நிகழ்ச்சியில், திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதையடுத்து அந்தச் செய்தியாளரும் அவருக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தவரும் ஓடினர். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. இது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர் தேடப்பட்டுவருகிறார். பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தவர் இதில் தப்பிவிட்டதாக அந்த தொலைக்காட்சி நிலையம் த…

  11. அக்டோபர் 29ஆம் தேதி ஹர்பஜனுக்கு கால்கட்டு! இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், அக்டோபர் 29ஆம் தேதி, தனது நீண்ட நாள் காதலியான கீதா பஸ்ராவை மணக்கிறார். தற்போது 33 வயதான ஹர்பஜனும், பாலிவுட் நடிகை கீதா பஸ்ராவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். கடந்த இரு மாதங்களுக்கு முன் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தொடர்ந்து அக்டோபர் 29ஆம் தேதி, இருவருக்கும் திருமணம் நடத்த இரு வீட்டாரும் திட்டமிட்டுள்ளனர்.பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்வாரா என்ற இடத்தில், திருமணம் நடைபெறவுள்ளது. அந்த சமயத்தில் தென்ஆப்ரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணத்தில் இருக்கும். இதனால் திருமண தேதியில் ஒருநாள் முன்னதாகவோ பின்னதாகவோ மாற்றம் இருக…

  12. தென் கொரியாவிலிருக்கும் ராணுவ முகாம் மீது வட கொரியா கடந்த வியாழக் கிழமையன்று தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, தென்கொரியாவும் பதில் தாக்குதல்களை நடத்தியது. தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் 1950-53ல் நடந்த யுத்தத்தில் அமைதி உடன்படிக்கை ஏதும் ஏற்படவில்லை. போர் நிறுத்தம் மட்டுமே செய்துகொள்ளப்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் நடப்பது வாடிக்கையாக இருந்துவருகிறது. இந்நிலையில், வடகொரியா அதிபர் கிம் யொங் உண் போருக்கு தயாராகும் படி ராணுவத்திற்கு உத்தரவிட்டதை அடுத்து, வடகொரியாவின் படைகள் போருக்கான தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் தெற்கு கொரியாக்களுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்த நிலையில் வடகொரியாவின் இந்த நடவடிகை பதற்றத்தை மேலும் அதிகரித்துள…

    • 0 replies
    • 791 views
  13. 'பாகிஸ்தானின் முத்தரப்பு பேச்சுவார்த்தை கோரிக்கை ஏற்கத்தக்கது அல்ல' 'ரஷ்யாவில் ஏற்பட்ட உடன்பாட்டில், இருநாட்டு அரசுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு மட்டுமே ஒப்புக்கொள்ளப்பட்டது' (கோப்புப் படம்)தீவிரவாதம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் விவாதிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த, ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி தாங்கள் உறுதியாக உள்ளதாகவும், இது தொடர்பில் பாகிஸ்தான் தான் அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இதை தெரிவித்தார். எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆகியோர் …

  14. பிறவிப் பகைவர்கள் – பாலஸ்தீனம், இஸ்ரேல் 1 இஸ்ரேல் - பாலஸ்தீன வரைபடம். யூதர்கள் என்றவுடனே உங்கள் நினைவுக்கு வருவது என்ன? அந்த இனத்தைக் கூண்டோடு (குறைந்தபட்சம் ஜெர்மனி யிலிருந்து) ஒழிப்பதற்கு ஹிட்லர் எடுத்துக் கொண்ட முயற்சிகளா? பல நாடுகளுக்குச் சிதறினார்கள் அவர்கள். உலகின் பல பகுதிகளிலும் யூதர்கள் பரவிக் கிடந்தாலும் அவர்கள் தங்கள் சிறப்பான பங்களிப்பைப் பல விதங்களிலும் உலகிற்கு அளிக்கத் தவறவில்லை. (விஞ்ஞானி ஐன்ஸ்டீன், கம்யூனிஸத் தந்தை கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்கள் சால் பெல்லோ மற்றும் போரிஸ் பாஸ்டர்நாக், மதியூகி கிஸிங்கர் ஆகியோர் மறக்கக் கூடியவர்களா?) அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் மிகவும் செல்வாக்கான பதவிகளில் யூத இனத்தவர் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். இவ…

  15. கிரேக்கப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு ஏதுவாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். கடன் அளித்த சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மிகக் கடினமான காலகட்டம் கடந்துவிட்டதாகக் கூறியிருக்கும் சிப்ராஸ், இந்த ஒப்பந்தம் குறித்து தேசம் என்ன கருதுகிறது என்பதைச் சொல்ல அனுமதிக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார். தொலைக்காட்சியில் பேசிய சிப்ராஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். சர்வதேச நாடுகளுடன் கிரேக்கம் செய்துகொண்ட கடன் ஒப்பந்தம் குறித்து சிப்ராஸின் சீரிஸா கட்சிக்குள் கடும் எதிர்ப்பு நிலவியது. சர்வதேச நாடுகளுடன் செய்துகொண்ட கடன்…

  16. கனடா- லொட்டோ மக்ஸ் சீட்டிழுப்பில் 50மில்லியன் டொலர்களை வென்ற அல்பேர்ட்டாவை சேர்ந்த தம்பதிகள் வெற்றி பெற்ற பணத்தை தங்கள் குடும்பத்தினருடன் மீள சேர்ந்து கொள்ளவும் தங்கள் தேன்நிலவை மேற்கொள்ளவும் பயன்படுத்த போவதாக தெரிவித்துள்ளனர்.38வயதுடைய டிரக் சாரதி ஆகஸ்ட் மாதம் 7ந்திகதி அல்பேர்ட்டாவில் அட்மோர் என்ற கிராமத்தில் மூன்று லாட்டரி சீட்டுக்களை வாங்கினார்.இவரும் இவரது மனைவியான 27வயது ஷீனாவும் இந்த 50மில்லியன் டொலர்களை வென்ற தம்பதிகளாவர்.முதலாவதாக தனது தாத்தாவின் சாகுபடி நிலத்தை வாங்கி குடும்பத்தினருடன் சேர்வது முதலாவது வேலை என்று டிரக் சாரதி ஸ்கொட் தெரிவித்தார்.வெகு தொலைவில் வாழும் தனது உறவினர்களுடன் மீண்டும் சேர்ந்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.டிரக் வண்டி ஓடுவதால் எந்நே…

    • 0 replies
    • 887 views
  17. கொலைதேசமா கொலம்பியா? கொலம்பிய கால்பந்து வீரர் எஸ்கோபார் | கோப்புப்படம் கொலம்பியாவைப் பற்றி அறியத் தொடங்குவதற்குமுன் அது தொடர்பாக எழக்கூடிய ஒரு குழப்பத்தைத் தீர்த்துக் கொண்டுவிடலாம். ‘’நாங்கள்தான் கொலம்பியா. கொலம்பியாதான் நாங்கள்’’. ஒபாமாவை ஜனாதிபதியாகக் கொண்ட நாட்டினர் இப்படிச் சொல்வதுண்டு. கொலம்பியா என்பது ஒரு பெண்ணின் பெயர். தங்கள் நாட்டைப் பெண்மையின் வடிவமாகப் பார்ப்பதில் அந்த மக்களுக்கு மகிழ்ச்சி. கொலம்பியா பல்கலைக்கழகம், கொலம்பியா நதி, கொலம்பியா மாவட்டம் இத்தனையும் யு.எஸ்.ஏ.வில் உள்ளன. தலைநகரத்தின் பெயரே வாஷிங்டன் D.C. (டி.ஸி.யின் விரிவு டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா). ஆனால் இந்தத் தொடரில் கொலம்பியா என்று நாம் குறிப்பிடுவது ஒரு தேசத்தை. தென் அமெரிக்காவின் நான்க…

  18. அமெரிக்கப் பெண்ணை குறிவைத்து மிருகத்தைவிட கேவலமாக பொது இடத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபனை மும்பை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணான மர்யான்னா அப்டோ என்பவர் மும்பையில் உள்ள ஒரு பிரபல கணக்கு ஆடிட்டிங் நிறுவனத்தில் பணியாற்றியபடி, மும்பையில் வசித்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் அவர் ’கேட் வே ஆப் இந்தியா’ பகுதியில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது, சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபன் அவரது பார்வையில் படும்படி ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் நடந்து கொண்டான். அவனது எண்ணத்தின் வக்கிரத்தை இவ்வாறு வெளிப்படுத்திய அந்த காட்டுமிராண்டி, அந்த வக்கிரத்தின் வடிகாலை அந்த அமெரிக்க பெண்ணின் மீது பாய்ச்சியுள்…

    • 0 replies
    • 1.3k views
  19. அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் அதிகாரியாக முதல்முறையாக திருநங்கையை அதிபர் ஒபாமா நியமித்து உள்ளார். அமெரிக்க அதிபர் மாளிகையின் பணியாளர் தேர்வு இயக்குநராக ரஃபி பிரீட்மேன்-குர்ஸ்பேன் என்ற திருநங்கை நேற்று நியமிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்க அதிபர் மாளிகையில், அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள முதல் திருங்கை இவரே ஆவார். ரஃபி, இதற்கு முன்பு திருநங்கைகளின் சமத்துவத்துக்கான தேசிய மைய ஆலோசராக பணியாற்றியவர். திருநங்கைகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக ரஃபி பிரீட்மேன்-குர்ஸ்பேன் உறுதி பூண்டிருப்பதற்கு, ஒபாமா அரசு மதிப்பளிக்கிறது என்பதை இந்த நியமனம் பிரதிபலிக்கிறது என்று வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் வலேரி ஜாரெட் கருத்து தெரிவித்து உள்ளார். மேலும், ரஃபி பிரீட்மேன்-குர்ஸ்பேன…

  20. புதுடெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, தண்டனைக் குறைப்பு பெற்றவர்கள் இரட்டை பலன் பெற முடியாது என்று கூறியுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும், அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர். பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்த…

    • 2 replies
    • 1.1k views
  21. ஹா – ஹாங்காங் பொருளாதாரத்தில் அப்படி யோர் அப்பப்பா வளர்ச்சி! எனவே அந்த நான்கு பகுதிகளையும் ‘ஆசியப் புலிகள்’ என்று கூறுகிறார்கள். ஆண்டுக்கு ஏழு சதவீதத்துக்கும் அதிகம் என்கிற அளவில் பொருளாதார வளர்ச்சி. வெகு வேகமான தொழில் முன்னேற்றம். சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் ஆகியவற்றுடன் கைகோத்து கர்வம் பொங்க இப்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பகுதி ஹாங்காங். ஹாங்காங் என்றால் சீன மொழியில் ‘‘நறுமணம் வீசும் துறைமுகம்’’ என்று பொருள். ஆனால் இன்று அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் ‘’எங்கள் மூச்சுக் காற்றே தடை பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் நறுமணத்தை எங்கே சுவாசிப்பது?’’ என்கிறார்கள் விரக்தியோடு. அவர்களைப் பொறுத்தவரை சுதந்திரம் என்பதுதான் இப்போதைக்கு அவர்களுக்கான சுவாசம். சீனாவும…

  22. சங்காவிற்கு தூதுவர் தகைமை! August 19, 2015 தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான தகைமை கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (19) குமார் சங்கக்காரவிடம் கையளித்தார். இதற்கான நிகழ்வு ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=1879&mode=head

  23. மகாராணி எலிசபெத்தின் சாதனை இங்கிலாந்து ராணி ஆக இரண்டாம் எலிசபெத் பதவி வகிக்கிறார். இவரது தந்தை மரணம் அடைந்த பிறகு 1952–ம் ஆண்டு பெப்ரவரி 6–ம் திகதி அரசியாக ஆக பதவி ஏற்றார். அப்போது அவரது வயது 25. தற்போது அவருக்கு 89 வயது ஆகிறது. எனவே கடந்த 63 ஆண்டுகளாக இவர் ராணி ஆக பதவி வகித்து வருகிறார். மூன்று தலைமுறைக்கு முந்தைய இவரது முப்பாட்டி விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகள் ´அரசி´ ஆக இருந்துள்ளார். அவரைப் போன்று தற்போது இரண்டாம் எலிசபெத்தும் 63 ஆண்டுகள் ராணி ஆக இருந்து வருகிறார். வருகிற செப்டம்பர் 9–ம் திகதிக்குப் பிறகு இவர் இங்கிலாந்தில் நீண்ட நாள் ராணி ஆக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெறுகிறார். ஏனெனில் விக்டோரியா மகாராணி செப்டம்பர் 9–ம் திகதிதான் ´ராணி´ ஆக பதவி ஏற்றார். …

  24. விரல் சொடுக்கும் வடகொரியா கொரிய தீபகற்பத்தின் எந்தப் பகுதியில் வட கொரியா இருக்கிறது என்று யாரும் கேட்கக் கூடாது. வடபகுதியில்தான்! கொரிய தீபகற்பம் எங்கே இருக்கிறது என்று கேட்பதில் தவறில்லை. இந்தியாவிலிருந்து வடகிழக்காகப் பயணம் செய்தால், சீனா, ரஷ்யா, தென் கொரியா ஆகியவற்றைத் தாண்டினால் வட கொரியா. ‘ஜனநாயக மக்களின் கொரியக் குடியரசு’ என்று பெயர் சூட்டிக் கொண்டுள்ள வட கொரியாவின் தலைநகரம் பியாங் கியாங். தென் கொரியாவைவிட அதிக பரப்பளவு கொண்டது என்றாலும் வட கொரியாவில் மக்கள் தொகை குறைவு (தென் கொரியாவில் பாதிதான்) ஒரு நாடு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பினால் என்ன தப்பு? பிற நாடுகள் என்ன செய்யும்? பாராட்டும் அல்லது மனதிற்குள் பொறாமைப்படும். அப்படித்தானே? 2012 டிசம்பர் 12…

  25. டி கலோ ஜிரோ : 61 ஆண்டுகளாகியும் எவருமே தங்காத ஹோட்டல் Aug 15, 2015 Bella Dalima Don't miss, Local 0 இத்தாலியின் சிசிலி தீவில் 1,300 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் 300 அறைகளுடன் மிகப்பிரமாண்டமான ஹோட்டல் டி கலோ ஜிரோ அமைந்துள்ளது. ஹோட்டலின் மேல் தளத்திலிருந்து பார்த்தால், சிசிலி தீவின் அழகை முழுவதுமாக ரசிக்கலாம். ஹோட்டல் அருகே பிரசித்தி பெற்ற தேவாலயமும் பிரபலமான ஸ்பா ஒன்றும் அமைந்துள்ளது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு தவறாமல் வருகை தருகின்றனர். ஆனாலும், ரம்மியமான ஹோட்டல் கலோ ஜி ரோவில் மட்டும் இது வரை எவரும் தங்கியது இல்லை என்று கூறப்படுகிறது. இந்த ஹோட்டல் 2 முறை புதுப்பிக்கப்பட்டு 4 முறை திறப்பு விழாவும் கண்டுவிட்டது. அப்படி இருந்தும் எவரும் இங்கு…

    • 0 replies
    • 799 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.