உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26708 topics in this forum
-
அமெரிக்காவின் டென்வர் நகரைச் சேர்ந்த தாய் ஒருவர், தன் 13 வயது மகளை அவமானப்படுத்தும் வீடியோ சமூக வலை தளமான பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. வால் ஸ்டார்க் என்ற அந்த தாய் பேஸ்புக்கில் இருந்த போது, எதிர்பாராத விதமாக தன் 13 வயது மகள் கிறிஸ்டினாவும் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். காரணம், பேஸ்புக்கில் தனது வயதை 19 வயது என்று குறிப்பிட்டுள்ள கிறிஸ்டினா தன்னை ஒரு ஃப்ரீக் (சபல எண்ணம் கொண்ட குறும்புக்காரி) என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து ஆவேசமடைந்த ஸ்டார்க் தன் மகள் வீட்டுக்கு வந்ததும் அவளை தோட்டத்தில் உள்ள புல்வெளிக்கு அழைத்துச் சென்று அங்கு தயாராக இருந்த கேமரா முன் நிறுத்தினார். என்ன ஏதென்று புரியாமல் தவித்த கிறிஸ்டினாவிடம் உன்னுடை…
-
- 1 reply
- 337 views
-
-
புதுப்பிக்கவல்ல மின்சக்தியைப் பொறுத்தவரை ஜெர்மனிதான் இன்றைய நம்பிக்கை! பெர்லினில் உள்ள அமெரிக்க அகாடமியில் நான் கழித்த ஒரு வாரம் எனக்கு இரண்டு நேரெதிரான உணர்வுகளை ஏற்படுத்தியது: முதலாவது, இன்றைய ஜெர்மனிக்கு சமாதானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட வேண்டும். இரண்டாவது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சமாதான நிலைப்பாட்டிலிருந்து ஜெர்மனி மீண்டுவந்து, இன்னும் தீவிரமாகச் செயல்படக்கூடிய உலக சக்தியாக மாற வேண்டும். இரண்டையுமே நான் பாராட்டாகத்தான் சொல்கிறேன். முதல் விஷயத்தைப் பொறுத்தவரை ஜெர்மானியர்கள் தங்களின் மின்உற்பத்தியில் 30 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க சக்தியாக மாற்றியிருக்கிறார்கள். 0% என்ற நிலையிலிருந்து கடந்த 15 ஆண்டுகளில் இந்த நிலையை அடைந்திருப்பது நமது பூமி, அதன் ப…
-
- 21 replies
- 3k views
-
-
பிரிட்டனில் ஐரோப்பிய நாடுகளின் குடிமக்கள் வாக்களிக்கத் தடை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய ராஜ்ஜிய கொடிகள்ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஐக்கிய ராஜ்ஜியம் தொடர்ந்தும் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து பிரிட்டனில் நடக்கவிருக்கும் பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் யாரெல்லாம் வாக்களிக்க முடியும் என்பது குறித்து பிரிட்டிஷ் அரசு தனது நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறது. அதன்படி, பிரிட்டனில் வசிக்கும் பெரும்பான்மையான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் வாக்களிக்க இயலாது. அதேசமயம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் வசிக்கும் பிரிட்டிஷ், ஐரிஷ் மற்றும் காமன்வெல்த் நாடுகளின் குடிமக்களும் வாக்களிக்க முடியும். மேலும் ஐக்கிய ராஜ்ஜிய குடிமக்கள் நாட்டுக்கு வெளியே 15 ஆண்டுகளுக்கும் குறைவாக வசித்த…
-
- 0 replies
- 353 views
-
-
உலகின் மிகப் பெரிய மழைக் காடுகளாக அமேசான் காடுகள் இருக்கின்றன அமேசான் மழைக்காடுகள் வழியாக செல்லும் சர்ச்சைக்குரிய சீன ரயில்வே திட்டம் குறித்து பரிசீலிக்க பெரு நாடு ஒத்துக் கொண்டுள்ளது. சீனப் பிரதமரின் பெரு நாட்டுக்கான விஜயத்தின் போது இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாரத் துவக்கத்தில் இத்திட்டத்திற்கான பிரேசிலின் ஒப்புதலை சீனப் பிரதமர் லீ கேகியாங் பெற்றுள்ளார். அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரேசிலின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவிலிருந்து பெருவிய துறைமுகத்துக்கு சுமார் ஐந்தாயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவுக்குத் தேவைப்படும் மூலப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வேகமாகவும், குறைந்த செலவிலும் கப்பல் மூலம் எடுத்த…
-
- 0 replies
- 270 views
-
-
பிரிட்டனில் லேசான நிலநடுக்கம் லண்டன்: பிரிட்டனின் கென்ட் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.2 ரிக்டர் அளவில் நிகழ்ந்த இந்த இயற்கை சீற்றத்தால், பொதுமக்களின் உயிர், உடைமைக்கு பாதிப்பு இல்லை. இதுபோன்ற நிலநடுக்கம், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பகுதியில் நிகழ்வதாக, அந்நாட்டின் நிலவியல் துறையினர் தெரிவித்தனர். நேபாள நாட்டில் கடந்த மாதம் நிகழ்ந்த, 7.8 ரிக்டர் அளவு பூகம்பத்தை, கென்ட் நிலநடுக்கத்துடன் ஒப்பிடும் போது, 2.6 லட்சம் மடங்கு குறைந்த தாக்கம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1258781
-
- 0 replies
- 355 views
-
-
TRANSCRIPT OF MESSAGES THAT EXPOSED THE SICKENING PLOT This is an edited transcript of two online conversations between Y, the undercover Daily Mail reporter posing as a 16-year-old-British Muslim girl, and F, the Islamic State fixer, whom we have called Fatima. Aisha is Fatima’s younger sister, aged 16. Fatima wants Y to accompany Aisha to the Islamic State. ‘DON’T BRING ANYTHING ISLAMIC ... NO QURAN’ Y: I spoke to your friend and she said you are from London and could help me make Hijrah [travel to Islamic State]. F: How old are you? You cannot come directly to Istanbul unless you wish to get arrested. I have a proposal for you. You will be coming alone, right? You…
-
- 2 replies
- 556 views
-
-
அமெரிக்காவின் கல்ஃபோர்னியா மாகாணத்தில், தண்ணீர் பஞ்சம் முன்னேப்போதும் இல்லாத அளவில், அதிகரித்துள்ளது. நெஸ்லே நிறுவனம் தண்ணீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதை கண்டித்து ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, கடும் வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சியால், அங்குள்ள தேசிய வனப்பகுதிகளில் லட்சக்கணக்கான மரங்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால், அம்மாகாணத்தில் தண்ணீரைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவில் வறட்சி நிலவுவதால் பெருநகரங்களில் தண்ணீர் உபயோகத்தில் 25 சதவீதத்தை குறைக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்…
-
- 5 replies
- 594 views
-
-
ஆக்ரா: இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி தனது சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த தையபா என்ற 8 வயது சிறுமி 3ம் வகுப்பு படித்து வருகிறார். இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லாமல் அவரது பெற்றோர் தவித்து வந்தனர். ஷூ கம்பெனியில் கூலியாக வேலை செய்யும் தையபாவின் தந்தையால் தனது மகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. சிறுமியின் சிகிச்சைக்கு ரூ.15 முதல் 20 லட்சம் தேவைப்படுகிறது. சிறுமிக்கு டெல்லியில் தான் சிகிச்சை அளிக்க முடியும் என்றும் ஆக்ராவில் வசதி இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சிறுமி பிரதமர் மோடிக்கு கடிதம்…
-
- 0 replies
- 257 views
-
-
மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அருணாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நர்ஸ்கள். உள்படம்: அருணா படம்: விவேக் பிந்த்ரே மும்பை மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றியபோது, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, கடந்த 42 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த அருணா ஷன்பாக் (66) நேற்று காலை காலமானார். இதுகுறித்து, கேஇஎம் மருத்துவமனை முதல்வர் டாக்டர் அவினாஷ் சுபே நேற்று கூறும்போது, “அருணாவுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பரிசோதனை செய்து பார்த்தபோது அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப் பட்டது. குழாய் மூலம் உணவுப் பொருட்கள் செலுத்தப்பட்டது. இந்நிலையில்…
-
- 4 replies
- 500 views
-
-
பல்மைரா: பாலைவனத்து வெனிஸ் என்று பாராட்டப்படும் நகர் பல்மைரா நகரைப் பார்ப்பவர்களுக்கு முதலில் எழும் சந்தேகம் இந்த பாலைவனத்தின் மத்தியில் நீண்ட நெடிய தூண்களும், கலைநயமிக்க தோரணவாயில்களும் எப்படி வந்தன என்பது. பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் இந்த வழியாகச் செல்ல நேர்ந்த பயணிகள் தாங்கள் பார்த்த காட்சியைக் கண்டு மீண்டும் மீண்டும் பிரமித்தனர். சிரியாவின் பாலைவனத்தின் மத்தியில் பாழடைந்த பழம்பெரும் நகரம். மத்திய தரைக்கடலுக்கும் யுப்ரடிஸ் நதிக்கும் இடையிலான வழியில் சரிபாதி தூரத்தில் பல்மைரா அமைந்திருக்கிறது. பாலைவனத்தின் மத்தியில் இப்படியொரு செல்வச்செழிப்பு மிக்க பழம்பெரும் நகர் எப்படி உருவானது என்று வியப்பவர்களுக்கான பதில்--பாலையை ஒட்டிய பேரீச்சமர பசுஞ்சோலையின் எல்லையி…
-
- 2 replies
- 1.2k views
-
-
கனடாவில் இருந்து ISIS இயக்கத்தில் இணைய சிரியா செல்ல முயன்ற 10 வாலிபர்கள் கைது! [Wednesday 2015-05-20 22:00] ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். இயக்கத்தினர் தொடர்ந்து வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த இயக்கத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து வருகிறார்கள். இவர்களை தடுக்கும் நடவடிக்கையில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு உள்ளன. இந்தநிலையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைவதற்காக கனடாவில் உள்ள மான்டிரையல்ஸ் டுருடியு சர்வதேச விமானநிலையத்தில் இருந்து ஈராக் மற்றும் சிரியாவிற்கு செல்ல முயன்ற 10 வாலிபர்களை கனடா போலீசார் அதிரடியாக பிடித்து கைது செய்துள்ளனர். இதுகுறித்து ராயல் கனடா மவுண்டேட் போ…
-
- 0 replies
- 256 views
-
-
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அமைச்சரான அனிக் ஜிரார்டின் கம்போடியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டபோது கவர்ச்சியாக ஆடையணிந்து பலரையும் வியக்கவைத்துள்ளார். பிரெஞ்சு அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் அனிக்(50), கம்போடியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையினான உறவை பலப்படுத்துவதற்காக அண்மையில் கம்போடியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பிரான்ஸின் குடியேற்ற நாடுகளில் ஒன்றாக கம்போடியா ஒரு காலத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விஜயத்தின்போது கம்போடியாவின் வெளிவிவகார அமைச்சர் ஹோர் நம்ஹோங், பொருதார அமைச்சர் அவ்ன் பொர்ன் மொனிரொத் மற்றும் அரச தலைவர்கள், அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாடினார். இரு நாடுகளுக்கு இடையிலான பல மில்லியன் டொலர் பெறுமதியான பொருளாத…
-
- 7 replies
- 856 views
-
-
படங்கள் முகநூல்.
-
- 0 replies
- 509 views
-
-
விவசாயிகள், தொழிலாளர்களின் விவகாரங்களை கையாளுவதில் நரேந்திர மோடி அரசுக்கு 10-க்கு பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே தரமுடியும் என்று ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது மக்களவை தொகுதியான அமேதியில் 3 நாள் பயணத்தை நேற்று தொடங்கினார். பருவம் தவறிய மழை மற்றும் சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை அவர் சந்திக்க வந்துள்ளார். இத்தொகுதிக்குபட்ட ஜகதீஷ் பூரில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி யில் ரூ.200 கோடி செலவில் உணவுப் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ராகுல் காந்தி இதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி அரசு இத்திட்டத்தை ரத்து செய்தது. இந்நிலையில் நேற்று ஜகதீஷ் பூ…
-
- 2 replies
- 307 views
-
-
எகிப்து முன்னாள் அதிபருக்கு தூக்கு.... சிறை உடைத்து தப்பிய வழக்கில் அதிரடி தீர்ப்பு. கெய்ரோ: எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மோர்சி, சிறையை உடைத்து தப்பிய வழக்கில் கெய்ரோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. எகிப்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டதையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மோர்சி மீண்டும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், நாட்டை சீர்படுத்துவதற்கு மோர்சி எடுத்த சில நடவடிக்கைகளுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மோர்சியின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இ…
-
- 2 replies
- 409 views
-
-
கூலிங் கிளாஸுடன் மோடிக்கு கை கொடுத்த கலெக்டர்.. நோட்டீஸ் விட்ட சட்டிஸ்கர் அரசு! ராய்ப்பூர்: விதிகளுக்குப் புறம்பாக கூலிங் கிளாஸ் போட்டும், சாதாரண உடை அணிந்தும் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்த சட்டிஸ்கர் கலெக்டருக்கு மாநில அரசு நோட்டீஸ் விட்டு எச்சரித்துள்ளது. அந்த கலெக்டரின் பெயர் அமீத் கட்டாரியா. பஸ்தார் மாவட்ட கலெக்டர் ஆவார். பிரதமர் மோடி மே 9ம் தேதி பஸ்தாருக்கு வந்திருந்தார். அவரை முதல்வர் ரமன் சிங், காவல்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் அமீத் கட்டாரியா உள்ளிட்டோர் வரவேற்றனர். அதிகாரிகளை முதல்வர் ரமன் சிங் அறிமுகப்படுத்தினார். அப்போது கலெக்டர் அமீத் கட்டாரியா, பிரதமருக்கு கை குலுக்கினார். அவரைப் பார்த்த பிரதமர், வாங்க "தப…
-
- 7 replies
- 634 views
-
-
ஜானி டெப்பின் நாய்கள் திரும்ப அனுப்பப்பட்டன ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பின் இரண்டு செல்ல நாய்களை ஆஸ்திரேலிய அதிகாரிகள் திரும்ப அமெரிக்காவுக்கே அனுப்பிவிட்டார்கள். ஜானி டெப் ஆஸ்திரேலியாவுக்கு தனது சொந்த விமானத்தில் வந்தபோது தன் இரண்டு யார்க்ஷயர் டெர்ரியர் வகை நாய்களையும் கூடக் கொண்டுவந்திருந்தாராம். ஆஸ்திரேலிய விவசாய அமைச்சர் பார்னபி ஜோய்ஸ் இந்த முடிவை தனது டிவிட்டர் தளத்தில் " நாய்கள் போய்விட்டன" என்று ஒற்றைவரிச் செய்தி மூலம் உலகுக்கு அறிவித்தார். வியாழக்கிழமை, ஜானி டெப் அவரது நாய்களை நாட்டைவிட்டு வெளியே எடுத்துச் செல்வதற்கு 50 மணி நேர காலக் கெடுவை விவசாய அமைச்சர் விதித்தார். ஆஸ்திரேலியாவில் விலங்குகள் கட்டுப்பாட்டு விதிகளுக்கு யாரும் விதிவிலக்கல்ல என்று அமைச்சர் கூறி…
-
- 1 reply
- 319 views
-
-
ஆந்திராவில் 2400 கிராமங்களை தத்து எடுத்தனர் அமெரிக்கவாழ் இந்தியர்கள் வாஷிங்டன், ஆந்திராவில் பின்தங்கிய பகுதிகளில் விரிவான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ‘சுமார்ட் கிராமம் - சுமார்ட் உலகம்’ என்ற திட்டத்தின்படி 2400-க்கும் அதிகமான கிராமங்களை தத்துஎடுக்க அமெரிக்கவாழ் இந்தியர்கள் முடிவு எடுத்துஉள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ், சான்ஜோஸ், சிகாகோ, நியூயார்க், நியூ ஜெர்சி, வாஷிங்டன், போர்ட்லாந்த் மற்றும் டால்லாஸ் ஆகிய நகரங்களில் உள்ள இந்தியர்களை ஆந்திரபிரதேசம் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் சந்தித்து பேசினார். அப்போது ஆந்திராவில் உள்ள கிராமங்களில் முதலீடு செய்ய அவர்களை கேட்டுக் கொண்டார். ‘சுமார்ட் கிராமம் - சுமார்ட் உலகம்’ என்ற திட்ட…
-
- 0 replies
- 305 views
-
-
வாத்திகன் பாலத்தீன நாட்டை வாத்திகன் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கும் உடன்பாடு விரைவில் எட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலத்தீன் ஆகிய இரு நாடுகள் தனியாக இருப்பதே இஸ்ரேலுடனான மோதலைத் தணிக்கும் வழி என வாத்திகன் கூறியுள்ளது. இது தொடர்பிலான புதிய ஒப்பந்தத்தில் பாலத்தீனத்தில் கத்தோலிக்க தேவாலயத்தின் செயல்பாடுகள் குறித்த விடயங்களும் இடம்பெறும். இம்முடிவு தொடர்பாக இஸ்ரேல் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலத்தீனப் பகுதிகள் மீது கடந்த ஆண்டு இஸ்ரேல் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. இந்த அங்கீகாரம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இந்த வாரக் கடைசியில் பாலத்தீன அதிபர் மெஹ்…
-
- 1 reply
- 346 views
-
-
மைக்கல் ஷுமாக்கரின் விமானம்,விடுமுறை இல்லத்தை திருமதி கொரினா ஷுமாக்கர் விற்பனை செய்தார் போர்மியூலா வன் போட்டிகளில் 7 தடவைகள் உலக சம்பியனாகி சாதனை படைத்த ஜேர்மனிய வீரர் மைக்கல் ஷுமாக்கருக்கு சொந்தமான விமானமொன்றையும் ஆடம்பர விடுமுறை இல்லமொன்றையும் அவரின் மனைவியான கொரினா ஷுமாக்கர் விற்பனை செய்துள்ளார். இனிமேல் இந்த விமானத்தையும் விடுமுறை இல்லத்தையும் தமது குடும்பத்தினர் பயன்படுத்தப்போவதில்லை என்பதே இத்தீர்மானத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. பனிச்சறுக்கலில் ஈடுபட்டிருந்தபோது மூளையில் காயமடைந்த மைக்கல் ஷுமாக்கர் முழுமையாக குணமடைய மாட்டார் என கொரினா ஷுமாக்கர் ஏற்றுக்கொண்டுள்ளதை இத்தீர்மானம் வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது. 46 வயதான மைக்கல் ஷுமாக்கர், 2013 …
-
- 2 replies
- 497 views
-
-
விண்வெளியிலிருந்து திரும்பத் தாமதமாகும் என்பது சம்பந்தப்பட்ட வீரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்குப் பொருட்களைக் கொண்டுசென்ற விண்கலம் தோல்வியைச் சந்தித்ததையடுத்து, அங்கிருக்கும் மூன்று விண்வெளி வீரர்களை பூமிக்குக் கொண்டுவருவதை ரஷ்யா தள்ளிப்போட்டிருக்கிறது. இந்த மூன்று வீரர்களும் வியாழக்கிழமையன்று பூமிக்கு வந்துசேர்ந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது ஜூன் மாதத் துவக்கத்தில் அவர்களை பூமிக்கு அழைத்துவரத் திட்டமிட்டிருப்பதாக விண்வெளித் துறையின் அதிகாரியான விளாதிமிர் சோலோவ்யோவ் தெரிவித்தார். இந்த மூன்று பேருக்குப் பதிலாக வேறு வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் திட்டமும் ஜூலை மாதத்திற்கு ஒத்திப்போட…
-
- 0 replies
- 229 views
-
-
பாகிஸ்தானின் கராச்சி நகரில் பயணிகள் பஸ் மீது ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தது 41 பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன் 20 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த 6 ஆயுதம் தாங்கிய நபர்களே குறித்த பயணிகள் பஸ்ஸை வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/articles/2015/05/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B…
-
- 1 reply
- 263 views
-
-
அருண் புதூர் ஆசிய அளவில் 40 வயதுக்குட்பட்ட பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலை ‘வெல்த் – எக்ஸ்’ நேற்று வெளியிட்டது. இதில் இந்தியாவின் இளம் தொழிலதிபர் அருண் புதூர் முதலிடம் பிடித்துள்ளார். ‘செல்பிரேம்’ என்ற மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளரும் தலைவருமான அருண் (37), சென்னையில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்தவர். தற்போது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வசிக்கும் இவரது சொத்து மதிப்பு 400 கோடி டாலராக உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 25 ஆயிரத்து 580 கோடி ஆகும். அருண் பட்டப்படிப்புக்கு பிறகு 1998-ம் ஆண்டு செல்பிரேம் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது மிகப் பிரபல ‘வோர்டு புராஸஸர்’ மென்பொருளை உற்பத்தி செய்கிறது…
-
- 1 reply
- 365 views
-
-
இரு விற்பன்னர்களின் மோதலால் முடிவு செய்யப்பட்ட பிரித்தானியத் தேர்தல் தேர்தலைமுடிவு செய்த படம் பொதுவாக தேர்தல் என்றால் கட்சிகளின் கொள்கைகளின் மோதல், தலைவர்களின் திறமைகளின் மோதல் தேர்தல் கூட்டங்களில் செய்யும் பேச்சுக்களின் மோதல் என்பதை நாம் அறிவோம். ஆனால் பிரித்தானியாவில் நடந்து முடிந்த தேர்தல் பிரித்தானியா மக்களுடன் சம்பந்தமில்லாத இரு விற்பன்னர்களின் மோதலாக அமைந்தது. ஒருவர் பராக் ஒபாமாவை இரு தடவை வெற்றி பெறச் செய்த டேவிட் அக்ஸெல்றொட் மற்றவர் ஒஸ்ரேலியாவில் ஜொன் ஹோவார்டை நான்கு தடவைகள் வெற்றி பெறச் செய்த லிண்டன் குறொஸ்பி. இந்த லிண்டன் குறொஸ்பியே கொன்சர்வேர்டிவ் கட்சியின் பொறிஸ் ஜோன்ஸனை இரண்டு தடவைகள் இலண்டன் மாநகர சபைத் தேர்தலில் வெற்றி பெற வைத்தவர். இ…
-
- 7 replies
- 537 views
-
-
பாரிஸ் ரெயில் நிலையத்தில் பீரங்கி குண்டுடன் வந்த பயணியால் பீதி பாரிஸின் கார் த்யு நோர் ரெயில் நிலையம்பிரெஞ்சுத் தலைநகர் பாரிஸின் மிகவும் நெரிசல் மிகுந்த ரெயில்வே நிலையமான, கார் த்யூ நோர் ரெயில் நிலையத்தில் பயணி ஒருவர் பீரங்கி குண்டுடன் பயணிக்க வந்ததால், அதிகாரிகள் ரெயில் நிலையத்திலிருந்த அனைவரையும் அப்புறப்படுத்த நேரிட்டது. லண்டன் நகருக்கு பயணிக்கச் சென்ற இந்தப் பயணியின் முதுகில் வைத்திருந்த பையில் இந்த பீரங்கி ஷெல் குண்டு காணப்பட்டது. இந்த ஷெல் முதல் அல்லது இரண்டாம் உலகப்போர் காலத்தையது என்று நம்பப்படுவதாக பிரெஞ்சு ரெயில் நிறுவனமான, எஸ்.என்.சி.எப் ( SNCF) நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார். ரெயில் நிலையத்திலிருந்து அனைத்து பயணிகளும் அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்…
-
- 0 replies
- 360 views
-