உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26996 topics in this forum
-
பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் - தலிபானின் தலைவர்களை கைதுசெய்வதற்கு சர்வதேச நீதிமன்ற அதிகாரிகள் முயற்சி Published By: Rajeeban 24 Jan, 2025 | 12:35 PM பெண்கள் யுவதிகளை துன்புறுத்தியமைக்காகவும் அவர்களிற்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காகவும் ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர்களை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. பெண்கள் யுவதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பில் தலிபான் அரசாங்கத்தின் சிரேஸ்ட தலைவர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்…
-
- 0 replies
- 153 views
-
-
பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், சாரா ரெயின்ஸ்ஃபோர்ட், ராபர்ட் கிரீனால் பதவி, பிபிசி நியூஸ் யுக்ரேனில் போரை நிறுத்தவில்லை என்றால் ரஷ்யா மீது பல்வேறு வரிகள் விதிக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோசியலில் கருத்து பதிவிட்டிருந்த டிரம்ப், போரை நிறுத்துவதற்கான அழுத்தம் கொடுப்பதால் ரஷ்யாவுக்கும் அதன் அதிபருக்கும் தான் "ஒரு பெரிய உதவி" செய்வதாக தெரிவித்திருந்தார். 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தொடங்கிய முழு வீச்சிலான போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையை ஒரே நாளில் எடுப்பேன் என டிரம்ப் ஏற்கனவே கூறிய…
-
- 1 reply
- 283 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும்! -ட்ரம்ப் அறிவிப்பு! அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே இனி அங்கீகரிக்கப்படும் என அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ”சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாகவும், அத்துடன் இராணுவத்திலும் மாற்றுப் பாலினத்தவர்களை இணைப்பதற்குத் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாகவும், விரைவில் இது தொடர்பான உத்தரவுகளில் கையெழுத்திடவுள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் உரையில் தெரிவித்துள்ளார். …
-
-
- 6 replies
- 532 views
- 2 followers
-
-
21 JAN, 2025 | 08:30 AM உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறவுள்ளது. ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் இதற்கான உத்தரவில் கைச்சாத்திட்டுள்ளார். உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அமெரிக்கா அதிகளவு நிதியை வழங்கியுள்ளது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை பாரிஸ் காலநிலை உடன்படிக்பையிலிருந்து வெளியேறும் உடன்படிக்கையிலும் டிரம்ப் கைசாத்திட்டுள்ளார். https://www.virakesari.lk/article/204398
-
- 1 reply
- 322 views
- 1 follower
-
-
தென் கொரிய விமான விபத்து; முவான் விமான நிலையத்திலிருந்து அகற்றப்படும் கொன்கிரீட் சுவர்! 179 பேரைக் கொன்ற ஜெஜு விமான விபத்தின் எதிரொலியாக முவான் சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்ட கொன்கிரீட் சுவரினை அகற்றுவதாக தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை (22) தெரிவித்தது. போயிங் 737-800 ரக விமானம் தாய்லாந்தில் இருந்து தென்மேற்கில் உள்ள முவானுக்கு டிசம்பர் 29 ஆம் திகதி 181 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பறந்து கொண்டிருந்தது. பின்னர், அது தென்கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஓடுபாதையின் முடிவிலிருந்த கொன்கிரீட் தடுப்புச்சுவரில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த பேரழிவானது தென்கொரியாவில் இடம்பெற்ற மோசமான விமான வி…
-
- 0 replies
- 179 views
-
-
துருக்கி விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் - 76 பேர் உயிரிழப்பு! துருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 76 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். குறித்த விருந்தகத்தின் 12ஆவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 12ஆவது மாடியில் இருந்து யன்னல் ஊடாக தப்பிப்பதற்கு முயற்சித்த இருவரும் உயிரிழந்தனர். தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், 12 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேநேரம், குறித்த விருந்தகத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் துருக்கி பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. …
-
- 1 reply
- 214 views
-
-
டொலருக்குப் பதில் புதிய நாணயம்? - ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை! அமெரிக்க டொலருக்குப் பதிலாக புதிய நாணயத்தைக் கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் பொருட்கள் மீது 100 வீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டொலரின் முக்கியத்துவத்தைக் குறைப்பது குறித்து எந்த நாடாவது பரிசீலிக்குமானால், அந்த நாட்டு நிறுவனங்கள் இங்கு மேற்கொள்ளப்படும் வர்த்தகத்துக்குக் கூடுதல் வரி விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார். அதிலும…
-
- 0 replies
- 376 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஏஞ்சல் பெர்முடெஸ் பதவி, பிபிசி உலக சேவை அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் பல்வேறு திட்டங்களோடு அவர் பதவியேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, நவம்பர் 5-ஆம் தேதி அன்று, அவருடைய முதல் அதிபர் தேர்தல் பரப்புரையில் தான் பேசிய விசயங்களை அவர் நினைவு கூர்ந்தார். தேர்தல் பரப்புரையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியுடன் இருப்பதாக அவர் கூறினார். அமெரிக்காவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவேன் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். அவர் முன்மொழிந்த திட்டங்களிலும், தேர்தல் வ…
-
- 0 replies
- 348 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கு தகுதிபெற்ற ஆப்கானிஸ்தான் அகதிகளிற்கு எதிராக டிரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவினால் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. ஆப்கான் அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்கும் உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார். பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ள உத்தரவு அமெரிக்காவினால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் ஆப்கான் அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்துவதை டொனால்ட் டிரம்ப் காலவரையறையின்றி இடைநிறுத்தியுள்ளார். இந்த தீர்மானம் ஆப்கான் அகதிகள் என்ற வரையறைக்குள் வரக்கூடியவர்கள் மத்தியில் பெரும் குழப்…
-
- 0 replies
- 202 views
-
-
“உக்ரைன் போர் முடிவுக்கு வரும்” – அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப் உறுதி January 21, 2025 11:44 am அமெரிக்காவில் கடந்த 2024 நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர் ஜனவரி 20ஆம் திகதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி, பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. வழக்கமாக, வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் வளாகத்தின் திறந்தவெளியில்தான் பதவியேற்பு விழா நடைபெறும். அங்கு கடும் குளிர், மழை காரணமாக விழாவை கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்குக்கு ட்ரம்ப் மாற்றினார். இலங்கை நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு நடைபெற்ற விழாவில், அமெரிக்காவின் 47வது ஜனாதிபதி…
-
- 0 replies
- 389 views
-
-
பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ரஷ்யா சென்றுள்ள இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் முக்கிய ஒப்பந்தங்களை செய்துள்ளார். 19 ஜனவரி 2025 புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ரஷ்யாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் சில முக்கியமான ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தங்கள் இரு நாட்டு பொருளாதார மற்றும் ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும். இரு நாடுகள் மீதும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடையை விதித்திருக்கும் சூழலில், இந்த தலைவர்களின் சந்திப்பு மற்றும் ஒப்பந்தங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தலாம் என்று எதிர்ப…
-
- 0 replies
- 263 views
- 1 follower
-
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்! சிரியாவின் முன்னாள் ஜனாதிபதியும் ஆட்சி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பஷர் அல் - அஷாட்டின் தந்தையுமான ஹபீஸ் அல் - அசாட்டின் கல்லறையைக் கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து அழித்துள்ளனர். 54 ஆண்டு கால ஆட்சியைக் கவிழ்ந்துள்ள கிளர்ச்சியாளர்கள், முன்னாள் ஜனாதிபதியின் சொந்த ஊரில் உள்ள கல்லறையையே இவ்வாறு அழித்துள்ளனர். அதேநேரம், ஆட்சி கவிழ்க்கப்பட்ட சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் - அஷாட், ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். ரஷ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் இதனை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறான பின்னணியில் சிரியாவில் உள்ள பல ஆயுத களஞ்சிய சாலைகளை இலக்கு வைத்து வான்வழித்…
-
-
- 223 replies
- 14.3k views
-
-
2500 பேருக்கு ஒரே நேரத்தில் பொது மன்னிப்பு வழங்கிய பைடன் கடந்த நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார். எனவே தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தனது அதிகாரத்தை முடிந்தவரை பயன்படுத்தி முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். குற்ற வழக்கில் சிக்கிய தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு வழங்கியது, ரஷியா மீது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி கொடுத்தது உள்ளிட்டவை அதில் அடங்கும். இந்நிலையில் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் இருக்கும் ஜோ பைடன் ஒரே நாளில் 2500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். வன்முறையற்ற சாதாரண போதைப் …
-
-
- 2 replies
- 273 views
-
-
டிரம்ப் பதவியேற்ற ஓரிரு மணித்தியாலங்களில் குடியேற்றவாசிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் - சி.என்.என். Published By: Rajeeban 18 Jan, 2025 | 11:53 AM டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு சில மணித்தியாலங்களில் குடியேற்றவாசிகள் குறித்து மிகக்கடுமையான உத்தரவுகள் வெளியாகலாம் என தெரிவித்துள்ள சிஎன்என் டிரம்பின் குழுவினர் இதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர் என செய்தி வெளியிட்டுள்ளது. சிஎன்என் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர் பதவியேற்று ஒரு சில மணித்தியாலங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்…
-
- 1 reply
- 274 views
-
-
காசாவில் யுத்த நிறுத்தம் - வீதிகளில் மக்களும் ஹமாஸ் உறுப்பினர்களும் - குடும்பத்தவர்களின் கல்லறைகளிற்கு செல்லும் சிலர் –ரொய்ட்டர் Published By: Rajeeban 19 Jan, 2025 | 08:04 PM இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையிலான யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து காசாவில் மக்கள் வீதிகளிற்கு வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேவேளை சிலர் தங்கள் குடும்பத்தவர்களிற்கு கல்லறைகளிற்கு சென்றுகொண்டிருக்கின்ற அதேவேளை ஏனையவர்கள் தங்கள் இஸ்ரேலின் தாக்குதலின் பின்னர் என்ன எஞ்சியிருக்கின்றது என பார்ப்பதற்காக தங்கள் பகுதிகளிற்கு சென்றுகொண்டிருக்கின்றனர். 15மாதங்கள…
-
- 3 replies
- 326 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்மர் கடாஃபி சிறந்த கல்வியைப் பெற ராணுவத்தில் சேர முடிவு செய்தார் கட்டுரை தகவல் எழுதியவர், வலீத் பத்ரன் பதவி, பிபிசி அரபு ஜனவரி 16-ஆம் தேதி, 1970-ஆம் ஆண்டில் லிபியாவின் அதிபராகப் பதவியேற்ற மும்மர் கடாஃபி தனது ஆட்சி 42 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கப் போகின்றன என்பது குறித்தும் கற்பனை செய்திருக்க மாட்டார். கடாஃபி, ஆட்சியில் இருந்த காலத்தில், தனக்கு எதிரான அனைத்து வகையான எதிர்ப்புகளையும் கொடூரமான முறைகளில் தகர்த்தெறிந்தார். லிபியாவில் வேறு எந்த தலைமையும் உருவாக முடியாமல் போனதற்கு அவரது இந்த அணுகுமுறையே காரணமாக இருந்திருக்கலாம். ஆன…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு January 17, 2025 11:53 am ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பின்யாமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை, ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எடுப்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஹமாஸுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை கூடி ஒப்பந்தத்திற்கு அனுமதி அளிக்கும் என்றும் நெதன்யாகு அறிவித்தார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான ஒப்பந்தம் காஸாவில் போர் முடிவுக்கு வரவும் பணயக்கைதிகளை விடுவிக்கவும் வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கத்தார் பிரதமரும், வெளியுறவு அமைச்…
-
-
- 6 replies
- 581 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தும் கொள்கைகளால் பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்று ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சைமன் ஜாக் & டாம் எஸ்பினர் பதவி, பிபிசி வணிக ஆசிரியர் & செய்தியாளர் அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் உலகப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இறுதியில் அமெரிக்காவுக்கே அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. அச்சுறுத்தும் வகையிலுள்ள சுங்க வரிகள், அதிக வர்த்தக சிக்கல்களை ஏற்படுத்தலாம், முதலீடுகளைக் குறைக்கலாம், விலையை அதிகரிக்கலாம், வர்த்தகத்தைக் குழப்பலாம் மற்றும…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
வியட்நாமில் உள்ள மீனவர்கள் மற்றும் உணவகங்களில் இருந்து ஓட்டுமீன்களை வாங்கிய பின்னர், உள்ளூர் சுவையான உயிரினங்களின் பிரபலமடைந்து வருவதை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் புதிதாக ஒரு "சூப்பர்ஜெயண்ட்" கடல் பிழை இனத்தை அடையாளம் கண்டுள்ளனர். ஆழ்கடல் உயிரினம், இப்போது பாத்தினோமஸ் வதேரி என்று அழைக்கப்படுகிறது, அதன் தலை "ஸ்டார் வார்ஸ்" வில்லன் டார்த் வேடர் அணிந்திருந்த ஹெல்மெட்டுடன் ஒத்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்ததை அடுத்து அதன் பெயர் வந்தது. விஞ்ஞானிகள் செவ்வாயன்று ZooKeys இதழில் புதிய உயிரினங்களை அதிகாரப்பூர்வமாக விவரித்தனர், B. வதேரியின் உடல் அமைப்பின் சில கூறுகள் தென் சீனக் கடலில் காணப்படும் மற்ற பாத்தினோமஸ் மாதிரிகளிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன என்பதை உறுதிப்படுத்த…
-
- 0 replies
- 305 views
- 1 follower
-
-
TikTok ஒரு புதிய, சீனர் அல்லாத உரிமையாளரைக் கண்டறிய அல்லது தடையை எதிர்கொள்ள வேண்டிய ஒரு சட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது - மேலும் அதற்கு முன்னர் நிறுவனம் விற்பனையை நிறுத்துவதற்கான சிறிய அறிகுறிகளும் இல்லை. அதாவது, 170 மில்லியன் அமெரிக்கர்கள் பொழுதுபோக்கு, செய்திகள் மற்றும் சமூகத்தைக் கண்டறிய அல்லது வணிகத்தை நடத்துவதற்குப் பயன்படுத்தும் தளத்திற்கான அணுகலை இழக்க நேரிடும், டிக்டோக் பல ஆண்டுகளில் முதல் புதிய தளமாக ஆன பிறகு, அமெரிக்க சமூக ஊடகப் பிரமுகர்களுக்கு உண்மையான போட்டி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. Instagram மற்றும் YouTube. சுப்ரீம் கோர்ட் வெள்ளிக்கிழமை சட்டத்தை உறுதி செய்தது, தடையை ஒரு படி நெருக்கமாக கொண்டு வந்தது. ஆனால் தடை கா…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
"உலக அமைதி" "யாதும் ஊரே யாவரும் கேளிர்: யாதும் ஊரே யாவரும் கேளிர்" [உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நம்முடைய சகோதர சகோதரிகளே.! அது போன்று உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமக்கு சொந்தமானதே என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக நம் உலகிற்கு எடுத்துக்காட்டிவிட்டு சென்றுள்ளார் கணியன் பூங்குன்றனார்.] இன்றைய என் அனுபவத்தில், உலக சமாதானம் என்று எடுத்தவுடன் அதைப்பற்றி மட்டும் கதைப்பதில் எந்த பயனும் இல்லை. அமைதிக்கான நோபல் பரிசு 1901 மற்றும் 2022 க்கு இடையில் 140 நோபல் பரிசு பெற்றவர்களுக்கு, 110 தனிநபர்கள் மற்றும் 30 அமைப்புகளுக்கு 103 முறை வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அடைவதற்கான அவரது முயற்சிகளுக்காகவும், குறிப்பாக அண்ட…
-
- 1 reply
- 256 views
-
-
17 JAN, 2025 | 12:36 PM அமெரிக்காவில் பணபலம் படைத்த ஆதிக்ககுழுவொன்று உருவாகிவருவது குறித்து ஜனாதிபதி ஜோபைடன் தனது பிரியாவிடை உரையில் எச்சரிக்கைவிடுத்துள்ளார். மிக அதிகளவு செல்வத்தையும், அதிகாரத்தையும் தன்வசம் வைத்துள்ள சிறியகுழுவொன்று உருவாகிவருகின்றது, அவர்களின் செல்வாக்கு எங்களின் ஜனநாயகத்திற்கும், அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கும் ஆபத்தானதாக மாறியுள்ளது என ஜோபைடன் தனது பிரியாவிடை உரையில் தெரிவித்துள்ளார். அமெரிக்கர்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்தக்கூடிய அதி செல்வந்த தொழில்நுட்ப - தொழில்துறை குறித்து தனது உரையில் 82 வயது பைடன் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையிலிருந்து தனது இறுதி தொலைக்காட்சி உரையை ஆற்றிய ப…
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சஞ்சய தகல் பதவி, பிபிசி நேபாளி சேவை, லும்பினியில் இருந்து நேபாளத்தின் சமவெளிப் பகுதியில் அமைந்துள்ள புத்தரின் பிறந்த இடமான லும்பினி, 1997ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய மரபுச் சின்னமாக இருந்து வருகிறது. ஆனால், விரைவில் அழியும் நிலையிலுள்ள மரபுச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயம் நிலவுகிறது. புனித யாத்திரையின் மையத்தில் இருக்கும் மாயா தேவி கோவிலின் உள்ளே ஓர் அடையாளக் கல் அமைந்துள்ளது. 2,600 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் இங்குதான் பிறந்தார் என்று பௌத்தர்கள் நம்பும் இடத்தை அது குறிக்கிறது. கொரியா, பிரான்ஸ் உள்படப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பௌத்த ம…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க காங்கிரசில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல்வேறு வௌிநாடுகளை சேர்ந்த வெவ்வேறு மொழிகள் பேசும் கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்திய – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் சபை கூட்டம் பொங்கல் பண்டிகை தினமான நேற்று முன்தினம் கூடியது. அப்போது “அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க முடிவு செய்து” தீர்மானம் கொண்டு வ…
-
-
- 4 replies
- 330 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கௌதம் அதானியின் குழுமம் பங்குச்சந்தை சூழ்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், செரில்லன் மொல்லன் பதவி, பிபிசி நியூஸ், மும்பை ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2023இல் அதானி குழுமத்தை ஆணிவேரை அசைத்துப் பார்த்தது. இந்த நிறுவனம் தற்போது மூடப்பட உள்ளதாக அதன் நிறுவனர் அறிவித்துள்ளார். ஏன்? அவர் கூறுவது என்ன? அமெரிக்காவில் இயங்கி வந்த ஷார்ட்-செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள முக்கிய நிதி நிறுவனங்களின் மோசடி மற்றும் நிதி சார்ந்த குற்றங்கள் குறித்து அறிக்கைகளை வெளியிட்…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-