Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஸ்வீடனில் நடந்த சர்வதேச சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யாவுக்கு பதக்கம்! ஸ்வீடன் நாட்டில் நடந்த சர்வதேச சைக்கிள் ஓட்டும் போட்டியில் நடிகர் ஆர்யா பதக்கம் வென்றார். நடிகர் ஆர்யா கால்பந்து, சைக்கிள் ஓட்டும் போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்வர். ஸ்வீடன் நாட்டில் உள்ள மோட்டாலா நகரில் நடைபெறும் 'வாடேர்ன் ருன்டன்' சைக்கிள் பந்தயம் வெகு பிரபலமானது. 50வது ஆண்டாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் பங்கேற்க பிசியான நடிப்புக்கிடையே கடந்த 8 மாதங்களாக நடிகர் ஆர்யா பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் ஜுன் 12ஆம் தேதி 300 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட அந்த சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட ஆர்யா 15 மணி நேரத்தில் பந்தய தொலைவை கடந்து பரிசு வென்றார். அபாயகரமான வளைவுகள், ஏரிகள், குளங்…

  2. வெடித்தது சர்ச்சை : லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா ஸ்வராஜ்! ஐ.பி.எல். ஊழலில் சிக்கி தற்போது லண்டனில் வசித்து வரும் லலித் மோடியின் மனைவிக்கு சிகிச்சை பெற இங்கிலாந்தில் இருந்து வெளியேற அனுமதிக்குமாறு சுஷ்மா ஸ்வராஜ் பரிந்துரை செய்த விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவில் ஐ.பி.எல். என்ற கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தி பின்னர் ஊழல் புகாரில் சிக்கிய லலித் மோடி இங்கிலாந்துக்கு தப்பி ஓடி அங்கேயே வசித்து வருகிறார். இவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மற்றொரு ஐரோப்பிய நாடானா போர்ச்சுகலில் சிகிச்சை அளிக்க லலித் மோடி விரும்பினார். இதற்கு இங்கிலாந்தில் இருந்து வெளியேற உதவுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை லலித் மோடி அணுகியுள…

  3. பத்திரிகையாளர் ஜகேந்தர் சிங் (இடது), அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா (வலது) உத்தரப் பிரதேசத்தை ஆளும் அகிலேஷ் யாதவ் அரசின் மீதான மோசமான குற்றச்சாட்டு இதுவாகவே இருக்க முடியும். ஆம், மரண வாக்குமூலம் அளித்த ஜகேந்தர் சிங் என்ற பத்திரிகையாளர் தன் மரணத்துக்கு பால் வளத்துறை அமைச்சர் ராம் மூர்த்தி வர்மாவை காரணம் என மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். மரணப் படுக்கையில் தீக்காய வேதனைக்கு மத்தியில் அவர் பேசும்போது, "அன்றைய தினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ராய் மற்றும் 5 போலீஸ்காரர்கள் என் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். என்னை சரமாரியாக தாக்கினர். என்னை அவர்கள் கைது செய்திருக்கலாம். அல்லது என்னை இன்னும் பலமாக அடித்து தாக்கியிருக்கலாம். ஆனால், எதற்காக மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர்" …

    • 0 replies
    • 517 views
  4. பாரீஸ்: மிகப்பெரிய விமான ரகமான போயிங், செங்குத்தாக மேலெழும்பி சாதனை படைத்துள்ளது. போயிங் டிரீம்லைனர் ரக விமானங்கள் அளவில் பெரியவை. 350 பேர் வரை இதில் பயணிக்கலாம். பெரிய விமானம் என்பதால், இதை மேலே எழுப்புவதற்கு நீண்ட தூர "ரன்வே' தேவை. பறக்கும்போதும், நீண்ட தூரம் சென்று தான் திரும்ப முடியும்.ஆனால் சமீபத்தில் போயிங் நிறுவனம், விமானத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. விமானத்தின் எடையும் குறைக்கப்பட்டது. இதையடுத்து இவ்விமானத்தின் செயல்விளக்கம் பாரீசில் செய்து காட்டப்பட்டது. வியட்னாம் ஏர்லைன்சுக்கு சொந்தமான இந்த விமானத்தை இயக்கிய பைலட்டுகள், விமானத்தை கிட்டத்தட்ட செங்குத்தாக மேலேழுப்பி குறைந்த நேரத்தில் அதிக உயரத்தை தொட்டனர். அதே போல, நீண்ட தூரத்திற்கு சுற்றி வளைக்காமல், உடன…

  5. சீனாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான சரக்கு ரயில் பாதையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. போக்குவரத்தில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது சீனா இந்த சரக்கு ரயில் பாதை சீனாவின் வடகிழக்கிலுள்ள ஹார்பின் நகரிலிருந்து, ஜெர்மனியின் ஹாம்பர்க் நகர் வரை நீண்டுள்ளது. மங்கோலியா மற்றும் ரஷ்யா வழியாகச் செல்லும் இந்தப் பாதையில் சரக்குகள் 15 நாட்களுக்குள் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு சென்றடையும். இது நிலம் மற்றும் கடல் பாதை வழியாகச் அதே தூரத்தை எட்டும் நேரத்தில் பாதியளவே என்று சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. சீனா நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை தனது சாலை, ரயில் மற்றும் கடல் வழிப் பாதைகள் மற்றும் தொடர்புகளை விரிவுபடுத்த எடுத்துவரும் பெரிய அளவிலான இலக்கை நோக்கிய ஒரு பயணத்தின் வெள…

    • 0 replies
    • 348 views
  6. திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இன்று காலை 5.30 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 170 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடத்தில் எந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தை தரை இறக்க விமானிகள் முடிவு செய்தனர். சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விமானத்தை தரை இறக்க அனுமதி கேட்கப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் காலை 6.10 மணிக்கு மீனம்பாக்கத்தில் தரை இறக்கப்பட்டது. விமானம் புறப்பட்டதும் ஏற்பட்ட கோளாறை உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டதால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். விமானம் சரி செய்யப்படும் வரை பயணிகள் ஓட்டலில் தங்கவும், உணவு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட…

    • 0 replies
    • 237 views
  7. சிட்னி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அணு குண்டு தயாரிக்கும் அளவுக்கு பலமாகி இருப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. டர்ட்டி பாம் என்று அணுகுண்டுக்கு அவர்கள் பெயரிட்டுள்ளனர். மனித ரத்த வெறி பிடித்து செயல்படும் ஐஎஸ் அமைப்பு பல்வேறு வகையான ஆயுதங்களை ஏற்கனவே வைத்துள்ளது. கிட்டத்தட்ட ராணுவம் போல அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே ஈராக், சிரியாவில் உள்ள அரசு ராணுவ ஆய்வகங்களிலிரு்து அவர்கள் கதிர்வீச்சுத் தன்மை கொண்ட வேதிப் பொருட்களை திருடியுள்ளதாக தகவல்கள் உள்ளன. அவர்றை வைத்து குண்டுகளைத் தயாரிக்க முடியும் என்று ஆஸ்திரேலிய உளவுப் பிரிவு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்னர். டர்ட்டி பாம்... இந்த நிலையில் டர்ட்டி பாம், அதாவது அணுகுண்டு தயாரிக்கப் போவதாகவும், விரைவில் அது …

    • 0 replies
    • 428 views
  8. மெல்போர்ன்: மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.ஹெச்.148 ரக விமானம் என்ஜின் கோளாறால் 300 பயணிகளுடன் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆஸ்திரேலியா தலைநகர் மெல்போர்னில் இருந்து மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.ஹெச்.148 ரக விமானம் மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சென்ற சில நிமிடங்களிலே விமானத்தில் பிரச்சனை கண்டறியப்பட்டது. உடனடியாக விமானம் அவசர, அவசரமாக மெல்போர்னிலேயே தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த சுமார் 300 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு இருபெரும் விபத்துக்களை சந்தித்தது. மார்ச் மாதம் சுமார் 230 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்…

  9. 'பாலுறவுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வோம்' என்று கூறி, ஹைத்தி பெண்களிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதிப்படை வீரர்கள் 'பண்டமாற்றுப் பாலுறவு' செயல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளது. வட அமெரிக்க நாடான ஹைத்தியில் வாழும் ஏழை மக்களுக்கான உதவிகளை கடந்த 2004-லிருந்து ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் அளித்த வந்தனர். இந்த நிலையில், தங்களது அமைதிக் குழு வீரர்கள் 'பண்டமாற்றுப் பாலுறவு' செயல்களில் ஈடுப்பட்டதை ஐ.நா. கண்காணிப்புக் குழு கண்டுபிடித்ததாகவும், அதன் விவரம் தங்களுக்கு தெரியவந்ததாகவும் 'தி அசோசியேடட் பிரஸ்' செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா. அமைதிப் படைக் குழுவில் உலகெங்கும் சுமார் 125,000 பேர் பணியாற்றுகின்றனர்.…

    • 0 replies
    • 371 views
  10. இங்கிலாந்து பெண்ணின் நிர்வாண படம் தான் மலேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு காரணம்? Thursday 2015-06-11 மலேசியா: இங்கிலாந்து பெண்ணின் நிர்வாண படம் தான் மலேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு காரணம் என புகார் எழுந்ததை அடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண் கைது செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 24 வயதான எலினார் ஹாக்கின்ஸ் என்பவர் சவுத்தாம்படன் பல்கலைகழக பட்டதாரி ஆவார். இவர் கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் 30-ம் தேதி மலேசியாவில் உள்ள கினபாலு சிகரத்திற்கு எலினா தனது குழுவினருடன் சென்றார். இந்த சிகரத்தில் ஆடைகள் ஏதும் இல்லாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக தகவல் வெள…

    • 5 replies
    • 3.4k views
  11. தென்கொரியாவில் மெர்ஸ் வைரஸ் தொற்றியதால் பத்தாவது நபர் இறந்திருக்கிறார். அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கும் அந்த நோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கடைகளும் உணவு விடுதிகளும் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறும் நிலையில், தென்கொரிய மத்திய வங்கி தனது வட்டி வீதத்தை என்றும் இல்லாத அளவுக்கு ஒன்றரை வீதமாக குறைத்துள்ளது. இவை குறித்த பிபிசியின் காணொளி. http://www.bbc.com/tamil/global/2015/06/150611_mersvideo

    • 0 replies
    • 286 views
  12. கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரண்டு சிறைக் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் அமெரிக்காவின் பொலிசாருக்கும் சிறைக் காவலர் திணைக்களத்திற்கும் பாரியதொரு சவாலாக பகிரங்கத் தோல்வியாக அமைந்துள்ளது. பலத்த பாதுகாப்பை உடைய சிறையில் என்ன நடந்தது எவ்வாறு மிக நுண்ணிய திட்டமிடுதலில் இது சாதிக்கப்பட்டது, அமெரிக்காவோடு கனடா, மெக்சிக்கோவிலும் தேடுதலை தொடர்வது தொடர்பான தகவல்களை லங்காசிறி வானொலியின் இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா பகிர்ந்து கொண்டார். - See more at: http://www.canadamirror.com/canada/44370.html#sthash.hLS4DDhV.dpuf

  13. ரொறொன்ரோ- ரொறொன்ரோ பெரும்பாகத்தை சேர்ந்த ஒரு சுகாதார பாதுகாப்பு ஊழியர்கள் குழு 12.5மில்லியன் டொலர்கள் லாட்டரி பரிசு தொகையை தங்களிற்குள் பகிர்ந்து கொள்கின்றனர். கடந்த வார லொட்டோ மக்ஸ் சீட்டிழுப்பில் இப்பரிசுத்தொகையை இவர்கள் வென்றுள்ளனர். யூன் 5ந்திகதியின் 50-மில்லியன் டொலர்கள் ஜாக்பொட்டிற்கான பரிசுத்தொகையை வென்ற நான்கு வெற்றியாளர்களில் இந்த குழுவினரும் ஒருவராவர். இந்த குழு முறையை தாங்கள் ஒரு வருடத்திற்கு முன் ஆரம்பித்ததாக Mount Sinai Hospital அறுவைச்சிகிச்கை பிரிவை சேர்ந்த மருத்துவ தாதி லிலியா ரொகேட் தெரிவித்தார். 10பேர்களை கொண்ட இக்குழுவில் பெரும்பாலானவர்கள் Mount Sinai Hospital அறுவைசிகிச்சை அறையில் பணியாற்றுபவர்கள் எனவும் இவர்களில் ஒருவர் தனது மகள் எனவும் லிலியா த…

  14. முதன் முறையாக விண்வெளியில் இரு ஆபாச நடிகர்கள் உடலுறவில் ஈடுபட உள்ளதாகவும் அதனை தாம் வீடியோவாக பதிவு செய்ய உள்ளதாகவும் 'போர்ன்கியூப்' என்ற ஆபாசப் பட நிறுவனம் தெரிவித்துள்ளது. பூமியில் போன்று விண்வெளியில் ஈர்ப்பு சக்தி இல்லை என்பதால் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் அனைவரும் அந்தரத்தில் மிதந்தபடியே தமது பணிகளை மேற்கொள்கிறார்கள். இதற்கான பயிற்சியும் பூமியில் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த நிலையில், விண்வெளியில் உடலுறவில் ஈடுபட முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு விஞ்ஞானிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுவரை விண்வெளியில் யாரும் உடலுறவில் ஈடுபட்டது இல்லை. இந்நிலையில் விண்வெளியில் உடலுறவில் ஈடுபட முடியுமா என்பதை பரிசோதிக்க விண்வெளி வீரர்களை கொண்டு இந்த அதி மு…

  15. யோகாவை தமிழ் குருவிடம் படிக்க பின்னடிக்கும் பலர், அதே தமிழ் குருவிடம் பயின்ற வெள்ளையரிடம் ஆங்கிலத்தில், அதிக பணம் செலுத்தி படிக்கிறோம். கோகோ கோலா, பெப்சி குடிப்பதில் உள்ள கௌரவம், மோர், பருத்திப்பால் குடிப்பதில் இல்லை என்பது பலரது நிலைப் பாடு. அதே போல் தமிழரிடம் இருந்து எடுத்த இடியாப்பம் செய்முறையினை, சீனாக் காரன் நூடில்ஸ் என்று திருப்பித் தர வாங்கி திங்கிறோம், அதுவும் வெள்ளையர் நிறுவனமான நெஸ்லே தரும்போது இன்னும் சந்தோசத்துடன். சிறுவர்கள் இடையே junk food அறிமுகப் படுத்தி, 'child obesity leads to early grave' என மேற்குலக மக்கள் விழித்துக் கொள்கிறார்கள் என்றவுடன், சீனா, இந்தியா என கடை விரிக்கின்றன இந்த பெரிய உணவு வியாபார நிறுவனங்கள். இந்தியா எனும் நாடே உருவாகும் முன்…

    • 38 replies
    • 3.1k views
  16. ரஷ்ய அதிபர் புடின் இறந்து விட்டார்; இப்போது இருப்பவர் “போலி”... "ஷாக்" கொடுக்கும் மாஜி மனைவி! மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின் இறந்து பல காலங்கள் ஆகிவிட்டதாகவும், தற்போது உள்ளவர் போலியானவர் என்றும் புடினின் முன்னாள் மனைவி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினின் முன்னாள் மனைவி லியிட்மிலா. லியிட்மிலாவை புதின் 1983 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை 2014ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இந்த முன்னாள் தம்பதியினருக்கு மரியா மற்றும் யேக்டரினா என 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில காலங்களாக விளாடிமர் புடினின் செயல்கள் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. விளாடிமிர் புடினை சுற்றி ஒரு மர்மம் சுழன்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நி…

  17. கனடிய செனட் சபை புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மசோதாவிற்கு முத்திரை குத்தி ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மசோதா கனடாவின் பொலிஸ் மற்றும் உளவு அதிகாரங்களை வலுப்படுத்துவதோடு தனிநபர் தனியுரிமையை மீறுவதாக இருக்கமாட்டாதென கூறப்படுகின்றது. இம்மசோதா குறித்து பலதரப்பட்ட எதிர்ப்பு கூக்குரல்கள் எழுப்பபட்டன எனவும் கூறப்பட்டுள்ளது. கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை அதிகாரிகள், எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இதர சட்ட அமுலாக்க அதிகாரிகள் கனடாவில் இடம்பெறும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் வெளிநாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்துடன் நாட்டை விட்டு வெளியேறும் தனிப்பட்டவர்களை கண்காணிக்கவும் கைது செய்யவும் புதிய Bill C-51 சட்டம் இலகுவானதாக்கும் என கூறப்படுகின்றது. அண்ம…

    • 0 replies
    • 321 views
  18. கனடிய பிரதம மந்திரி Stephen Harper பால்டிக் கடலில் நேட்டோ இராணுவ பயிற்சி நடாத்திக்கொண்டிருந்த கப்பலை நோக்கி இரண்டு ரஷ்ய பீரங்கி கப்பல்கள் நகர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாப்பர் பயணிக்கும் HMCS Fredericton கப்பலை ரஷ்ய கப்பல்கள் கண்காணிப்பதாக பிரதம மந்திரியின் காரியாலயம் தெரிவிக்கின்றது. பீரங்கி கப்பல்கள் ஹாப்பர் பயணம் செய்யும் கப்பலிற்கு ஏழு கடல் மைல்கள் தூரத்தில் காணப்பட்டதாக கப்பலின் கப்டன் தெரிவித்துள்ளார். கனடிய கப்பலிற்கு அண்மையில் ரஷ்ய போர்க்கப்பல்கள் வருவது அசாதாரணமானதல்ல என தெரிவித்த கப்டன் HMCS Fredericton -ற்கு எந்தவித அச்சுறுத்தலும் காணக்கூடியதாக இல்லை எனவும் கூறியுள்ளார். ஏன் ரஷ்ய கப்பல் அவ்வளவு அண்மையில் வந்ததென்பது தெரியவில்லை எனவும் கூறப்பட்டு…

    • 0 replies
    • 171 views
  19. ரொறன்ரோ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வெடிபொருள் போன்ற சந்தேகத்திற்கு உரிய பொருள் ஒன்று நேற்று (திங்கட்கிழமை) மாலை கண்டெடுக்கப்பட்டது.Leslie Street and Eastern Avenue வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டில் மீள் திருத்த பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து ராணுவத்தினருடன் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வெடிபொருளை பாதுகாப்பாக அகற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தின் போது பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும்,அதைத் தொடர்ந்து அங்கு அழைக்கப்பட்ட கனேடிய இராணுவத்தினர், குண்டை அகற்றி, கனேடியப் படைத்தளம் ஒன்றுக்கு எடுத்துச் சென்றார்கள் எனவும் சந்தேகத்திற்குரிய வெடி பொருள் தொடர்பில் சோத…

    • 0 replies
    • 220 views
  20. இஸ்ரேலுக்கும், காஸாமுனையை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையேயான போரில் இஸ்ரேல் 51 நாட்கள் நடத்திய போரில் 2200 பாலஸ்தீனியர்கள் கொல்லபட்டனர் 11 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர்.பின்னர் ஐநா தலையீட்டின் பேரில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. கடந்த கோடை காலத்தில்,காசாப் பகுதியில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலின் போது இஸ்ரேலிய வீரர் ஒருவர் அங்குள்ள ஒரு ஹாலியா அபு ரிடா என்ற 74 வயது முதிய பாட்டி தாகத்தால் தவித்து உள்ளார் அவருக்கு தனது பாட்டிலில் இருந்த தண்ணீரை கொடுத்து உள்ளார். இதனை அவர் புகைப்படம் எடுத்து கொண்டார் பின்னர் ஒரு மீட்டர் தூரத்தில் இருந்து அந்த முதிய பெண்ணின் நெற்றியில், துப்பாக்கியை வைத்து சுட்டு உள்ளார் என பாலஸ்தீன தகவல் மையம் செய்தி வெளியிட்டு உள்ளது.அல் அக்…

  21. சூரியனை உரிமை கொண்டாடும் பெண்மணி ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் சூரியனில் மனைகளை விற்றுத்தர மறுப்பு தெரிவித்த "ஈ-பே' இணைய விற்பனை தளம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா டுரன்(54) என்ற பெண்மணி, கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சூரியனின் ஒரு பகுதி தமக்கு சொந்தமானது என உரிமை கோரி, ஸ்பெயின் நோட்டரி அலுவலகத்தில் அதனை பதிவும் செய்து கொண்டார். பின்னர் நகரின் பிரதான இடம் ஒன்றில், அலுவலகம் ஒன்றையும் திறந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், குறிப்பாக சோலார் பேனல் மூலம் சூரிய சக்தியைப் பயன்படுத்துவோர் தமக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மிரட்டலையும் விடுத்துள்ளார். மேலும் பிரபல ஓன்லைன் வணிக நிறுவனமான இ-பே நிறுவனம் மூலம், இணையதளம்…

    • 19 replies
    • 2.1k views
  22. அகற்றப்பட்ட பிரபாகரன் சிலையை அரசு செலவில் மீண்டும் அமைக்க வேண்டும்: - ராமதாஸ் [saturday 2015-06-06 14:00] வேளாங்கண்ணி அருகே பிரபாகரனின் உருவச்சிலையை காவல்துறையினர் இரவோடு இரவாக அகற்றியிருக்கின்றனர். பிரபாகரனின் சிலையை அகற்றப்பட்ட இடத்தில் தனது சொந்த செலவில் மீண்டும் அமைத்துத் தர அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்திலுள்ள கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஈழப்போராளி பிரபாகரனின் உருவச்சிலையை காவல்துறையினர் இரவோடு இரவாக அகற்றியிருக்கின்றனர். இதன் மூலம் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரச…

  23. வேளாங்கண்ணி: கையில் அரிவாளுடன் காவல் தெய்வம் கருப்பசாமிக்கு கோயில் கட்டி பார்த்திருப்போம். நாகை மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு கோவில் கட்டியுள்ளார் திமுக நிர்வாகி ஒருவர். இந்த கோவில்தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளார். இந்த படம் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாங்கண்ணி அருகே உள்ளது தெற்கு பொய்கை நல்லூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். தி.மு.க. நிர்வாகியான இவர், தனது கிராமத்தில் பெரியாச்சி அம்மன் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். இந்த கோயிலில் இடது மற்றும் வலதுப் பக்கத்தில் இரண்டு குதிரைகளை வைத்துள்ளார். இந்த குதிரைகளுக்கு அருகில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ள…

    • 2 replies
    • 1.2k views
  24. நீங்கள் ஐந்து வருடங்களுக்குள் இறந்து விடுவீர்களா என்பதை ஆன்லைனில் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதற்காக சுவீடன் விஞ்ஞானிகள் உருவாக்கிய வலைதளத்தில் ஆண்களுக்கு 11 கேள்விகளும், பெண்களுக்கு 13 கேள்விகளும் கேட்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால் நீங்கள் 5 வருடங்களில் இறப்பதற்கான வாய்ப்புகள் தெளிவாக தெரிந்துவிடும். புகை பிடிக்கும் பழக்கம், உடல்நலக்கோளாறு குறித்த வரலாறு, நீங்கள் நடக்கும் வேகம், நீங்கள் எத்தனை கார்களை வைத்துள்ளீர்கள் போன்ற கேள்விகள் அதில் இடம் பெற்றுள்ளன. எனினும் இதில் கலந்து கொள்ள உங்களுக்கு 40 வயது நிரம்பியிருக்கவேண்டும். ஸ்காட்லாந்து நாட்டில் இரு மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்ட 35 ஆயிரம் நோயாளிகளிடம் இந்த வலை…

  25. மேகி நூடுல்ஸை விற்பனையிலிருந்து இருந்து திரும்பப்பெறுவதாக நெஸ்லே இந்தியா நிறுவனம் இன்று அதிகாலை (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் காரீயத்தின் அளவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகமாக உள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் மேகி நூடுல்ஸ் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் டெல்லி அரசு மேகிக்கு 15 நாள் தடை விதித்தது. தொடர்ந்து நேற்று உத்தராகண்ட், ஜம்மு-காஷ்மீர், குஜராத் மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெறும் ஆய்வுகளைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸை விற்பனையிலிரு…

    • 0 replies
    • 482 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.