உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27050 topics in this forum
-
காசாப் போர் ஏற்படுத்தியத் தாக்கம் கடந்த ஆண்டு காசா யுத்தத்தில் இஸ்ரேலிய இராணுவத்தினர் நடந்து கொண்டவிதம் குறித்து புதிய கேள்விகள் எழுந்துள்ளன. இஸ்ரேலிய செயற்பாட்டாளர்கள் குழுவொன்று அறுபதுக்கும் அதிகமான இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய்களிடமிருந்து பெற்ற வாக்குமூலங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஒன்றிலேயே இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அந்த மோதலில் பங்கேற்ற இஸ்ரேல் இராணுவத்தினரிடமிருந்து, எட்டு மாதங்களாக சேகரிக்கப்பட்ட சான்றுகளை வைத்து breaking the silence எனும் அந்த செயல்பாட்டுக் குழு இந்த அறிக்கையை தயாரித்துள்ளது. இந்த காசா யுத்தம் குறித்து முன்பு இஸ்ரேலிய அரசு தெரிவித்திருந்த அதிகாரப்பூர்வ கருத்துகளுக்கு மாறுபட்டதாக இந்த அறிக்கை இருக்கிறது. காசா போரின்போது…
-
- 0 replies
- 244 views
-
-
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இறைதூதர் முகமதுவின் கார்ட்டூன் படங்களை வரைவதற்கான போட்டி ஒன்று நடந்த இடத்திற்கு வெளியே துப்பாக்கியால் சுட்ட ஆயுததாரிகள் இருவரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர். சம்பவ இடத்தில் பாதுகாப்பு படையினர் அங்கே கிட்டத்தட்ட இருபது முறை துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் சொன்னார்கள். பாதுகாப்பு ஊழியர் ஒருவர் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார். பொலிசார் இந்த இடத்தை பாதுகாப்பாக சூழ்ந்துகொண்டு, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தவர்களை அருகிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றுக்கு அப்புறப்படுத்தியுள்ளனர். இஸ்லாத்தை கடுமையாக விமர்சிக்கும் வலதுசாரி அமைப்பான அமெரிக்க சுதந்திர பாதுகாப்பு முன்முயற்சி என்ற அமைப்பு, டல்லாஸ் நகர புறநகர்ப் பகுதி …
-
- 1 reply
- 411 views
-
-
கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்படுவதை பல நாடுகள் தடைசெய்துள்ளன யேமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான விமானத் தாக்குதல்களில் சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் பரவலாக தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை (cluster bomb) பயன்படுத்துவதாக ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. வடக்கு யேமனில் ஹௌதி கிளர்ச்சிக்குழுவினர் வலுவாக நிலைகொண்டுள்ள சாடா மாகாணத்திலுள்ள கிராமங்களுக்கு அருகே கொத்துக்குண்டுகள் போடப்பட்டமைக்கு நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாக அந்த அமைப்பு கூறுகின்றது. இந்த குண்டுகள் அமெரிக்காவால் சவுதி ஆரேபியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் விநியோகிக்கப்பட்டமையை உறுதிப்படுத்தும் படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது. ஆனால…
-
- 2 replies
- 335 views
-
-
நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள் 22 நிமிடங்களுக்கு முன்னர் பகிர்க 'பாதிக்கப்பட்டவர்களின் மன உணர்வை புரிந்துகொள்ளாத ஊடகங்கள்'நிலநடுக்கத்தில் நிலைகுலைந்துபோயுள்ள நேபாளத்தில் செய்தி சேகரிக்கும் இந்திய ஊடகங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்வதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இந்திய ஊடகங்கள் வெளியேறவேண்டும் (#GoHomeIndianMedia) என்ற தொனியில் டுவிட்டர் தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரம் இணையத்தில் முக்கிய பேசுபொருளாக உள்ளது. நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியா முன்னணி பாத்திரம் வகிக்கிறது. இந்தியா தான் முதல்நாடாக தங்களின் மீட்பு அணிகளை அங்கு அனுப்பியிருந்தது. இந்…
-
- 2 replies
- 379 views
-
-
இந்திய ராணுவ ஹெலிகாப்டரிலிருந்து நிவாரணப் பொருட்களை இறக்கும் நேபாள கிராமத்தினர். | படம்: ஏ.எஃப்.பி. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்திய ராணுவத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று நேபாள கம்யூனிஸ்ட்டுகள் சிலர் கூறி வருகின்றனர். நிலநடுக்கத்துக்குப் பிறகு நேபாளத்தில் பல நாடுகளும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் அந்நாட்டுப் பிரதமர் சுஷில் கொய்ராலா அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அதில் கலந்து கொண்ட யூ.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல், சி.பி.என்.(மாவோயிஸ்ட்) மோகன் பைதியா மற்றும் மஜ்தூர் கிஸான் கட்சியின் தலைவர் நாராயண் மன் பிஜுக்சே ஆகிய ம…
-
- 0 replies
- 336 views
-
-
பிரித்தானியாவிற்கு ஒரு இளவரசி பிரித்தானிய இளவரசி கேத் ஈ மிடில்டன் பெண் குழந்தையொன்றை இன்றையதினம் பிரசவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத் ஈ மிடில்டன் தம்பதியினரின் இரண்டாவது குழந்தையாகும். அந்தநாட்டு நேரப்படி காலை 08.34 மணிக்கு லண்டனிலுள்ள சென்ட் மேரிஸ் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் இடம்பெற்றுள்ளது. பிறந்துள்ள பெண் குழந்தை சுமார் நான்கு கிலோ நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக வைத்தியசாலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய முடிக்குரிய வாரிசு வரிசையில் இந்தப் பெண் குழந்தை நான்காவது இடத்தில் உள்ளது. வில்லியம்- கேத்; ஈ மிடில்டன் தம்பதியனரின் முதல் குழ…
-
- 5 replies
- 521 views
-
-
கான்பெராவிலுள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஆஸ்திரேலியாவில் சொத்துக்களை வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சட்டத்தை மீறினால் கடுமையான புதிய தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படவுள்ள புதிய தண்டனைகளில் மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர்கள் அபராதம் ஆகியவை அடங்கும். வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியாவில் புதிய குடியிருப்புகளை மட்டுமே வாங்க முடியும். பழைய குடியிருப்புகளை அவர்கள் வாங்கத் தடையுள்ளது. நாட்டில் சட்டம் தெளிவாக இருந்தாலும், அதை நடைமுறைபடுத்துவது சிறிய அளவிலேயே உள்ளது என அரசு வாதிடுகிறது. ஆஸ்திரேலியாவில் வீடுகளின் விலை உயர்வதற்கு முதலீட்டாளர்கள், குறிப்பாக சீனாவிலிருந்து வருபவர்களே க…
-
- 0 replies
- 275 views
-
-
பண்டைய கால ஏரிப்படுகையின் மீது அமைந்துள்ளது காத்மாண்டு. | படம்: ராய்ட்டர்ஸ். உலகின் பிரதான பூகம்ப பகுதியாகியுள்ள இமயமலைப் பகுதியில் அடுத்த பூகம்பம் தற்போது நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்ப மையத்திலிருந்து மேற்காக ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த நிலநடுக்க ஆய்வாளர் தெரிவித்துள்ளார். தேசிய புவி-பௌதிக ஆய்வுக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர். ஆர்.கே.சத்தா இது பற்றி கூறும் போது, “எதிர்காலத்தில் இமாலயத்தில் பூகம்பம் ஏற்பட்ட்கால் அது ஏப்ரல் 25-ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்ப மையத்துக்கு மேற்காக ஏற்பட வாய்ப்புள்ளது.” என்று கூறுகிறார். எப்படி கூற முடிகிறது? ஏப்ரல் 25-ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவு பூகம்பம் ஒரே திசை பிளவினால் ஏற்பட்டது. நிலநடுக்க மைய…
-
- 0 replies
- 265 views
-
-
ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரில் வெள்ளியன்று நடப்பதாக இருந்த சர்வதேச சைக்கிள் பந்தயம் ஒன்றை பயங்கரவாதத் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் காரணமாக ரத்து செய்துவிட்டதாக அந்நாட்டின் பொலிசார் கூறுகின்றனர். அடுக்கு மாடிக்குடியிருப்பு வீடொன்றிலிருந்து வெடிகுண்டும், வெடிகுண்டு செய்வதற்கான இரசாயனமும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவ்வீட்டில் வாழ்ந்த தம்பதி வியாழனன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். உலகெங்கிலுமிருந்து சைக்கிளோட்ட முன்னணி வீரர்களை ஈர்க்கின்ற வருடாந்த பந்தயத்தில் தாக்குதல் நடத்த இக்கணவன்-மனைவி திட்டமிட்டதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர். இஸ்லாமியவாதக் கடும்போக்காளர்களுடன் தொடர்புகொண்டிருந்த கணவன், இந்த சைக்கிள் பந்தயத்தின் பாதையில் பல முறை தென்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.…
-
- 2 replies
- 307 views
-
-
மைத்திரி மற்றும் ரணிலுக்கு உலகத் தமிழர் பேரவை வாழ்த்து [ வெள்ளிக்கிழமை, 01 மே 2015, 11:35.44 AM GMT ] 19ஆம் திருத்தச் சட்டத்தை வெற்றி கொண்டமைக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உலக தமிழர் பேரவை வாழ்த்துத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற அரசியல் கட்சிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் தனது வாழ்த்து செய்திகளை தெரிவித்துள்ளது. மேலும் அவ்வறிக்கையில், 19ம் திருத்தச்சட்டத்தை வெற்றிக்கொண்டதனால் மக்களாட்சி மற்றும் அதன் நிறுவனங்களை இன்னும் ஒரு படி கொண்டு முன்னோக்கிச் செல்லப்பட்டுள்ளது. எனினும் கடந்த காலங்களில் இலங்கையின் துரதிஷ்டவசமான அரசியல் கலாச்சாரங்கள் மற்றும் பழக்கங்கள் ஏற்றுக்கொள்ள…
-
- 0 replies
- 254 views
-
-
அவுஸ்திரேலியா, அந்தமானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி உருவாக வாய்ப்பு! [ வெள்ளிக்கிழமை, 01 மே 2015, 10:12.46 AM GMT ] பபுவா நியூகினியா அந்தமானில் இன்று இரண்டு இடங்களில் நடந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 135 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இன்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல், அவுஸ்திரேலியாவின் பபுவா நியூகினியாவில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கோகோபோவில் இருந்த 110 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள மையப்பகுதியை சுற்றிய 300 கி.மீ. தூரத்திற்குள் சுனாமி …
-
- 0 replies
- 298 views
-
-
ஆஸ்திரேலியாவில் இந்தோனேஷிய எதிர்ப்பு அலை! - அருங்காட்சியத்தில் இந்தோனேஷிய அதிபரின் புகைப்படம் நீக்கம்! [Friday 2015-05-01 12:00] இந்தோனேஷியாவில் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட மயூரன் சுகுமாரன், ஆண்ட்ரூ சான் என்ற 2 ஆஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் உள்பட 8 பேரின் மரண தண்டனையை ஆஸ்திரேலியா மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த புதன்கிழமை இந்தோனேஷிய அரசு நிறைவேற்றியது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவில் இருந்து தனது தூதரை திரும்ப அழைத்துக்கொண்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவில் தேசிய புகைப்பட அருங்காட்சியகம் உள்ளது. இதில் உள்நாடு மற்றும் சர்வதேச தலைவர்களின்…
-
- 0 replies
- 412 views
-
-
பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. பப்புவா நியூ கினியாவில் கோகோபோ நகரில் இருந்து தெற்கு - தென் மேற்கு பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இருந்தாலும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. நேற்று (வியாழக்கிழமையும்) இதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 6.7 ஆக பதிவாகியிருந்தது. இருப்பினும் பெருமளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் குறித்து…
-
- 0 replies
- 371 views
-
-
முடியல்ல... இந்த அரசியல்வாதிங்க மட்டும் எப்படி இப்படி.. அடுத்தவனை கொப்பி பண்ணுறதில.. அவ்வளவு அவசரமா இருக்காங்க. அதுவும் இப்ப மேற்குலக அரசியல்வாதிங்களுக்கு பாடம் எடுப்பது.. ஹிந்திய மோடி.. சொறிலங்கா மைத்திரி. உலகம் உருப்பட்ட மாதிரித்தான். Election 2015: David Cameron sets out plan for 'first 100 days' David Cameron has said wages, welfare, housing and childcare will be at the heart of the Conservatives' programme for government in its first 100 days. http://www.bbc.co.uk/news/election-2015-32470837
-
- 7 replies
- 627 views
-
-
டெல்லி, வட இந்திய நகரங்களில் கடுமையான நிலநடுக்கம்! ரிக்டரில் 7.7. அலகுகளாக பதிவு!! டெல்லி: டெல்லி உட்பட வட இந்தியா நகரங்களில் இன்று பகல் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இன்று முற்பகல் 11.44 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி சுட்டெரிக்கும் வெயிலில் சாலைகளில் குவிந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகள் பதிவாகி இருந்தது. நேபாளத்தின் பொகாரா அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 34 replies
- 2k views
-
-
ஒரு ஆண்டுக்கு 45 மில்லியன் பயணிகளை உள்ளடக்கும் உலகின் மிகப்பெரிய டெர்மினல் உருவாக்க பெய்ஜிங் திட்டம் தீட்டியுள்ளது. உலகப் பயணம் செய்ய ஆர்வமுள்ள சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு சில ஆண்டுகளாக வியத்தகு முறையில் உயர்ந்துள்ளது. பெய்ஜிங் சர்வதேச விமான நிலையம், உலகின் மிகப்பெரிய டெர்மினலை தொடங்க உள்ளது. 2018-இல் திறக்கப்படும் இந்த பிரம்மாண்டமான டெர்மினல் 1 விமான நிலையம், 700,000 சதுர மீட்டர் பரப்பளவு மற்றும் ஒரு ஆண்டுக்கு 45 மில்லியன் பயணிகள் கையாளும் வகையில் அமைக்கப்படுகிறது. வாடிக்கையாளர் நடைபயிற்சி தூரத்தை குறைக்கும் நோக்கத்திற்னான ஒரு ஆறு அடுக்கு கான்செப்ட் உருவாக்கவும் மற்றும் இணைப்பை அதிகரிக்கவும் பிரிட்டிஷ்-ஈராக் ஆர்கிடெக்ட், Zaha Hadid உடன் விமான ந…
-
- 0 replies
- 462 views
-
-
உத்தரவாதமாக ஆண் குழந்தை தரும் மருந்து, யோகா குரு பாபா ராம்தேவின் மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அந்த மருந்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டது. இப்பிரச்சினையில் கவனம் செலுத்துவதாகவும், அதுபோன்றதொரு பொருளுக்கு எப்படி உரிமம் வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஆண் குழந்தையை உத்தரவாதமாக அளிக்கும் மருந்து பாபா ராம்தேவுக்குச் சொந்தமான மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்பிரச்சினையை மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர் கே.சி. தியாகி எழுப்பினார். “இதுபோன்ற ஒரு பொருளை விற்பனை செய்யும் ஒருநபர் எவ்வாறு, ‘பெண் குழந்தையைப் …
-
- 0 replies
- 372 views
-
-
இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத் தலைவரான அபுபக்கர் அல் பக்தாதி இறந்துப் போனதாக ஈரான் வானொலி அறிவித்துள்ளது. வடக்கு சிரியாவில் ஈராக் எல்லையோரம் உள்ள ரக்கா நகரம் உள்ளிட்ட சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் அப்பகுதி முழுவதையும் ஒன்றிணைத்து ஐ.எஸ்.ஐ.எஸ்.-சின் ஆட்சிக்கு உட்பட்ட தனிநாடாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஓர் அறிக்கையை வெளியிட்ட அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அபு முஹம்மத் அல் அதானி, வடக்கு சிரியாவில் இருந்து ஈராக்கின் டியாலா மாகாணம் வரை உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், இந்நிலப்பரப்பின் ‘கலிபா’வாக (மன்ன…
-
- 3 replies
- 666 views
-
-
பால்டிமோரில் பொலிஸ் படுகொலை ஏப்ரல் 12 அன்று, 25 வயதான ஃப்ரெட்டி க்ரே, பால்டிமோர் பொலிஸ் அதிகாரி ஒருவரை "நேருக்குநேராக பார்த்தார்"; ஒரு வாரத்திற்குப் பின்னர் ஒரு காட்டுமிராண்டித்தனம் மற்றும் சித்திரவதைச் சம்பவத்தில், அவரது இடதுபுற மூன்று முதுகெலும்புகள் உடைந்து, அவரது முதுகு தண்டுவடம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் இறந்து போனார். அந்த மனிதர் அனுபவித்த வலிநிறைந்த கொடூர அனுபவத்தின் வெறும் ஒரு பாகமாக மட்டுமே கருதக்கூடிய, ஒரு பார்வையாளரின் காணொளி, இறுகிய-முகத்துடன் பொலிஸ் அதிகாரிகளின் ஒரு குழு பொலிஸ் வேனின் பின்னாலிருந்த ஒரு சிறிய இரும்பு கூண்டுக்குள் க்ரேயை உதைத்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது, காயப்பட்டிருந்த அவர் கண்கூடாக வலியால் கதறுகிறார். முப்பது நிமிடங்களுக்குப் ப…
-
- 0 replies
- 389 views
-
-
பிரித்தானிய தேர்தல் கொள்கைப்பிரகடனத்தில் இலங்கைத் தமிழர் விவகாரம்! [Thursday 2015-04-30 08:00] பிரித்தானிய தேர்தல் கொள்கைப்பிரகடனம் ஒன்றில் முதல்தடவையாக இலங்கை தமிழர் தொடர்பான விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவின் தேர்தல் களத்தில் பிரதமர் டேவிட் கெமரோன் தலைமையிலான கொன்சவேட்டிவ் கட்சியின் தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 76ம் 77ம் பக்கங்களில் இந்த விடயம் அடங்கியுள்ளது.அதில் “நாங்கள் இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகள் உட்பட போர்க்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைகளை ஊக்குவிப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு பிரதமர் டேவிட் கெமரோன் மேற்கொண்ட விஜயத்தை அடுத்தே இந்த விடயம் உள்வாங்கப்பட்டுள்ளதாக அந்த தேர்தல…
-
- 0 replies
- 350 views
-
-
மயூரன் சுகுமாரன் மற்றும் அவரது சகாக்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியா இந்தோனேசியாவிற்கான தனது தூதுவரை மீள அழைத்துள்ளது. பாலி 9 என்ற ஆஸி போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட மயூரன் சுகுமாரனையும், சானையும் மரண தண்டனையிலிருந்து விடுவிப்பதற்காக ஆஸி அரசாங்கம் இறுதிவரை கடும் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டிருருந்தது. எனினும் தனது வேண்டுகோள்களுக்கு இந்தோனேசியா உரிய முறையில் செவிசாய்க்காதது குறித்து ஆஸி அரசாங்கம் கடும் சீற்றமடைந்துள்ளது. ஆஸி பிரதமர் டொனிஅபொட் தண்டனை குரூரமானது, தேவையற்றது குற்றவாளிகள் சிறையிலிருந்த காலப்பகுதியில் திருந்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார். நாங்கள் இந்தோ…
-
- 2 replies
- 514 views
-
-
நைஜீரியாவில் இராணுவத்தினர் போக்கோ ஹராமுக்கு எதிராக நடத்திய ஒரு தாக்குதலின்போது கிளர்ச்சிக்காரர்களின் முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் கிட்டத்தட்ட முந்நூறு பேரை அந்நாட்டின் பாதுகாப்பு படைகள் விசாரித்து வருகின்றன. அவர்கள் யார் என்பதையும் எவ்வளவுகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் அதிகாரிகள் தெரிந்துகொள்ள முனைகிறார்கள். ஓராண்டுக்கு முன் சிபொக் என்ற ஊரிலிருந்து கடத்தப்பட்டிருந்த பள்ளி மாணவிகள் தற்போது மீட்கப்பட்டவர்களில் இல்லை. சிபொக் மாணவிகள் கடத்தல் சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்றாகும். போக்கோ ஹராமுக்கு எதிராக நைஜீரிய இராணுவம் பெரிய நடவடிக்கை எடுத்துவரும் சம்பீஸா வனப் பகுதியில், செயற்கைக்கோள் வழியாக கண்காணித்த…
-
- 0 replies
- 380 views
-
-
கருப்பு நிறத்தில் நீளமான பாவாடை அணிந்து வந்த முஸ்லிம் மாணவி ஒருவரை பிரான்சிலுள்ள பள்ளியொன்று, வகுப்புகளில் பங்கேற்பதற்கு தடை விதித்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு அங்கு மத நம்பிக்கைகளை வெளிப்படையாக தெரிவிக்கும் எந்தவொரு சின்னங்களுக்கும் சட்டரீதியான தடை பிறப்பித்து சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதை கடுமையாக கடைபிடிக்கும் வகையில் அந்தப் பள்ளியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சாரா என்று அழைக்கப்படும் 15 வயதான அந்தப் பெண், பிரஞ்சு அரசு கொண்டுவந்த அந்தச் சட்டத்துக்கு அமைவாக தலையை மறைக்கும்விதமாக அணிந்துவந்த முக்காடை பள்ளிக்குள் நுழைந்ததும் நீக்கினாலும், முழங்கால் வரை அணிந்திருந்த கருப்பு நிற பாவாடையை தடை செய்வதற்கு அந்தச் சட்டத்தில் வழியில்லை…
-
- 0 replies
- 630 views
-
-
வியாட்னாம் யுத்தத்தின்போது அமெரிக்கர்கள் மனம் மாறியதற்கு 2 சம்பவங்கள் தான் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. குறித்த மனிதன் ஒருவனின் படுகொலை. மற்றயது ஒரு சிறுமி ஒருத்தியின் உடல் எரிபட்ட நிலையில் அவள் ஓடியது. வியட்நாம் போரில் போராளிகளின் இழப்பே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் உறுதி தளராது போரில் வெற்றி பெற்றவர்கள் வடக்கு வியட்நாமியப் போராளிகளே. http://www.bbc.co.uk/news/in-pictures-32483307
-
- 0 replies
- 1.8k views
-
-
நேபாள பூகம்ப மையம். | படம்: யு.எஸ்.ஜி.எஸ். நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தின் எதிரொலியாக தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பெரும்பாறைகள் தெற்கு நோக்கி பல மீட்டர்கள் இடம்பெயர்ந்துள்ளன. ஆனால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாறுதல் எதுவும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டெக்டானிக் ஆய்வியல் நிபுணர் ஜேம்ஸ் ஜாக்சன் கூறும்போது, “பூகம்பத்துக்குப் பிறகான பூமியின் ஊடாக சென்ற ஒலி அலைகளின் தரவுகளின் படி தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பூமியின் பாறை 3 மீட்டர்கள் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இது மிகப்பெரிய இடப்பெயர்வு” என்று கூறினார். இந்தியாவைச் சுமக்கும் கண்டத்தட்டு, ஐரோப்பா, ஆசியாவை தாங்கும் கண்டத்தட்டை நோக்கி ஆண்டுக்கு 2 செமீ நகர்கிறது. …
-
- 0 replies
- 393 views
-