Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிரியா, ஈராக் நாடுகளை சேர்ந்த 13,000 அகதிகளுக்கு கனடா புகலிடம் அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றிய ஐஎஸ்ஐஎஸ் தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கி அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது. அதுமட்டுமின்றி சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரினால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இவ்விருநாடுகளிலும் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்தோரை மறுகுடியமர்த்துமாறு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்றுக் கொண்ட கனடா, 13,000 அகதிகளுக்கு புகலிடம் அளிக்க உள்ளதாக கனடா குடியமர்வுத் துறை அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாண்டர் தெரிவித்தார். இதுகுறித்து அலெக்ஸாண்டர் கூறுகையில், தற்போது உலகிலேய…

  2. கனடா- யு.எஸ்சில் மிச்சிக்கன் என்ற இடத்தில் பனி காரணமாக 123-வாகனங்கள் குவிந்ததால் வானவேடிக்கைகள் மற்றும் அமிலம் கொண்டு சென்ற டிரக் வண்டி தீப்பிடித்ததால் மிச்சிக்கன் மாநிலத்தில் கனடிய டிரக் சாரதி இறந்துவிட்டார். வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஒட்டாவாவை சேர்ந்த டிரக் சாரதி இறந்து விட்டதுடன் குறைந்தது 23-பேர்கள் வரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என மிச்சிக்கன் மாநில பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். விபத்திற்குள்ளாகிய வாகனங்களில் பெரும்பான்மையானவை மேற்குபகுதி பாதைகளில் சென்றவை என கூறியுள்ளார். மோதலின் போது அபாயகரமான பொருட்கள் எரிந்துள்ளதாக விசாரனையாளர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் அதிகாரிகள் அருகாமையில் வசிக்கும் குடியிருப்பாளர்களை வீட…

  3. “In public, Beijing will likely express willingness to establish good relations with the new government,” said Zhang Guihong, a professor at the Institute of International Studies at the Shanghai-based Fudan University. “Privately, its diplomatic missions and officials in Colombo will get busy and start mingling with new people.” The result, considered improbable just two months ago, risks disrupting President Xi Jinping’s moves to increase China’s presence in the Indian Ocean. China has invested heavily in Sri Lanka over the past decade and supported Rajapaksa in the face of U.S.-led inquiries into human rights abuses allegedly committed during the end of a 26-year civi…

  4. பிரான்சில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாரீஸ் நகரில் கடந்த புதன்கிழமை 'சார்லி ஹெப்டோ' பத்திரிகை அலுவலகத்தில் 2 தீவிரவாதிகள் புகுந்து நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்களை கொண்டு தாக்குதல் நடத்தி 12 பேரை கொன்றனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவன் ஏமனில் கல்வி பயின்றதாகவும் அங்கு அல்கொய்தா பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டதாகவும் ஏமன் பாதுகாப்பு படை கூறியது. இந்நிலையில், அரேபியன் தீபகற்பத்தில் உள்ள அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள், பிரான்சில் பத்திரிகை அலுவலகம் மற்றும் ஜெவிஸ் பல்பொருள் விற்பனை அங்காடி மீது நடத்தப்பட்ட தாக்குதல் போல் மீண்டும் பிரான்சில் தாக்குதல் ந…

  5. யு.எஸ்.-வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்சில் வான் நுயுஸ் விமானநிலையத்திற்கு தெற்கில் சிறிய விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் வாகனங்கள் எதனையும் அல்லது கட்டிடங்களை இடிக்காததால் நெருப்பு பிடிக்கவில்லை என தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர். விமானி ஸ்தலத்திலேயே இறந்து விட்டார். இந்த ஒற்றை-எஞ்சின் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.15-மணியளவில் கீழே போயுள்ளது. விமானத்தின் பாகங்கள், இறகுகள், மூக்கு என்பன வீதியில் கிடந்ததாக கூறப்பட்டுள்ளது எனவும் பாகங்கள் அனைத்தும் நொருங்கி விட்டதாகவும் சம்பவத்தை கண்ணுற்ற சாட்சியங்கள் தெரிவித்துள்ளனர். தரையில் மோதமுன்னர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து சுழன்றதாகவு…

  6. கொலைகளுடன் ஆரம்பித்த பணயக்கைதிகளை பிடித்து தொடங்கிய பயங்கரங்கள் காவல்த்துறையினரால் ஒழிக்கப்பட்டன மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட அழித்தல் விடுவித்தல் நடவடிக்கை ஒருசில நிமிடங்களில் முடிந்தது. கொலையாளிகள் 3வரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் En direct - Le preneur d'otage de Vincennes est mort En direct - Le preneur d'otage de Vincennes est mort L'assaut a été donné contre un supermarché casher dans l'est parisien où un homme a pris plusieurs personnes en otage. Après plusieurs détonations, des policiers ont pénétré dans le magasin. Plusieurs otages sont sortis peu après et ont été pris en charge. En direct - Le preneur d'otage de Vincennes est mort L'assaut a été…

  7. கனடா- பிரான்ஸ் நாட்டு கொடி ரொறொன்ரோ நகரசபைக்கு வெளியே வெள்ளிக் கிழமை பறக்க விடப்பட்டது. பிரான்ஸ் மக்களுடனான ஒருமைப்பாடு மற்றும் பரிஸ் பத்திரிகை நிறுவனத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொலையுண்ட 12-பேர்களின் நினைவாகவும் இக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. ரொறொன்ரோ மக்கள் பேச்சு சுதந்திரம் மீதான தங்கள் நம்பிக்கை மற்றும் உலகம் பூராகவும் அதற்காக போராடுபவர்களிற்கு ஆதரவாகவும் உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருக்க வேண்டுமென்று ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி கூறியுள்ளார். பிரதம மந்திரி Stephen Harper சார்ளி ஹெப்டு தாக்குதல் சம்பந்தமாக வியாழக்கிழமை பேசுகையில் இந்த பத்திரிகை தாக்குதல் ஒரு ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் என தெரிவித்திருந்தார். பரிசிலுள்ள கனடிய தூதுவராலயம் தனது கொடியை அ…

  8. பரிசில் Charlie Hebdo என்ற பத்திரிகை அலுவலகத்தில் இன்று காலை வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது 2 ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 10 க்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சரியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்தப் பத்திரிகை முகமது நபியின் கார்டூன் படங்களை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. http://www.francesoir.fr/societe-faits-divers/charlie-hebdo-au-moins-10-morts-suite-une-attaque-la-kalachnikov-contre-le

  9. பிரான்ஸில் ஷார்லி எப்தோ சஞ்சிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகள் இருவரும் கொல்லப்பட்டுவிட்டதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. ஆயுததாரிகளால் பணயக் கைதியாக பிடித்துவைக்கப்பட்டிருந்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. முன்னதாக, பாரிஸின் வடக்குப் பகுதியில் உள்ள களஞ்சிய கட்டடம் ஒன்றில் பதுங்கியிருந்த இரண்டு இஸ்லாமியவாத ஆயுததாரிகளையும் பிடிப்பதற்காக பாதுகாப்புப் படையினர், அந்தக் கட்டடத்தை முற்றுகையிட்டிருந்தனர். இருள் சூழ்கின்ற நேரத்தில், ஆயுதந்தரித்த தாக்குதல் அணியொன்று குறித்த கட்டடத்துக்குள் நுழைந்ததை அடுத்து, வெடிப்புச் சத்தங்களும் துப்பாக்கிச்…

    • 0 replies
    • 744 views
  10. சென்னை: இலங்கை அதிபர் தேர்தலில் தோற்றது ராஜபக்சே மட்டுமல்ல, இந்தியப் பிரதமர் மோடியும்தான் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேயின் வீழ்ச்சி குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், சீமான் கூறியிருப்பதாவது: லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்ததன் மூலமாக இலங்கையின் நிரந்தர மகுடாதிபதியாக நீடித்துவிடலாம் என கனவு கண்ட ராஜபக்சேயை அந்நாட்டு மக்களே தேர்தலில் தூக்கி வீசியிருக்கிறார்கள். இனவெறி அரசியல், அராஜக நடவடிக்கைகள், குடும்பத் தலையீடு என நேர்மையற்ற அரசியலை மட்டுமே நிர்வாகத் தகுதியாகக் கொண்ட ராஜபக்சேயை வரலாறு காறி உமிழ்ந்திருக்கிறது. அறுபது ஆண்டுகால சுதந்திரப் போராட்டத்தை நசுக்கிவிட்டதாகச் சொல்லி இனவெறிக் க…

  11. பாரிஸ், பிரான்ஸ் நகரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள், செல்லும் காரை போலீசார் ஹெலிகாப்டர் மற்றும் கார்கள் மூலம் பின் தொடர்ந்து வருகின்றனர். தீவிரவாதிகள் காரில் இருந்த வண்ணம் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். போலீசாரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். பாரீஸ் நகரில் உள்ள ‘சார்லி ஹெப்டோ’ என்ற பத்திரிகை அலுவலகத்தில் நேற்று முன்தினம் 2 தீவிரவாதிகள் புகுந்து, நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்களை கொண்டு பயங்கர தாக்குதல் நடத்தி 12 பேரை கொன்று குவித்தனர். இந்த தாக்குதலில் தொடர்புள்ள 18 வயதான இளம் தீவிரவாதி ஹமித் மொராத் (18) நேற்று அங்குள்ள சார்லிவில்லி மெஜியரஸ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவர்…

  12. பணயக் கைதிகளாகச் சிலரைப் பிடித்து வைத்துள்ள Charlie Hebdo கொலையாளிகளைப் போலீசார் சுற்றிவளைத்துள்ள நிலையில், பரிசில் ஓர் கடையொன்றில் வேறொரு இஸ்லாமியத் தீவிரவாதி சில பணயக்கைதிகளைப் பிடித்து வைத்துள்ளார். http://www.lefigaro.fr

  13. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தது குறித்து சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் மஹிந்தா ராஜபக்சே மூன்றாவது முறையாக போட்டியிட்டார். இந்த தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து 49 எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபால ஸ்ரீசேன போட்டியிட்டார். இதில், ராஜபக்சே தோல்வி அடைந்துள்ளார். தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் சிங்களர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் தெற்கு பகுதியிலும் ஸ்ரீசேனவுக்கு தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தது வரலாறு காணாதது அல்ல. இரண்டாம் உலகப் போரில் இங்கி…

    • 4 replies
    • 823 views
  14. அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள வாட்டர் டவுன் மற்றும் தெற்கு டகோட்டா பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் வீட்டு மேற்கூரைகளில் 3 அடி அளவிற்கு பனி படர்ந்துள்ளது. நாட்டில் கடும் குளிர் நிலவும் பகுதியாக எஸ்ட்கோர்ட் ஸ்டேஷன் உள்ளது. அங்கு வரலாறு காணாத அளவுக்கு வானிலை மோசமடைந்த நிலையில், நேற்று மைனஸ் 39 டிகிரியாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.கடும் பனியின் காரணமாக வாகனங்களில் உள்ள பெட்ரோல் உறைந்து போவதால் போர்ட்லேண்ட், சிகாகோவில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மேலும் ரயில் மற்றும் விமானப்போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. http…

  15. ரொறொன்ரோ- பாராளுமன்ற ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அதிகாரி செவின் விக்கெர்ஸ் அயர்லாந்தின் அடுத்த கனடிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒக்டோபரில் தேசிய போர் நினைவகத்தின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சந்தேக நபரான Michael Zehaf-Bibeau ஐ கொன்றதால் பாராட்டப்பட்டவர். கீழ்ச்சபையில் இவரது துணிகர நடவடிக்கைகளுக்காக உணர்ச்சி பூர்வமாக அனைவராலும் எழுந்து நின்று கைதட்டலுடன் பாராட்டு பெற்றவர். அத்துடன் உலக பிரபலங்கள் ஊடக பிரபலங்கள் அனைவராலும் கூட சர்வதேச அளவில் பாராட்டுக்களை பெற்றவர். பாராளுமன்றத்தை விட்டு விலகுவது கவலையாக இருப்பதாக தெரிவித்த கெவின் கடந்த சில மாதங்களாக தனக்கு ஆதரவு தந்ததற்காக கனடிய மக்களிற்து நன்றியை தெரிவித்தார். அயர்லாந்தை பிறப்பிடமாக கொண்ட இவர் தனது நாட…

    • 0 replies
    • 457 views
  16. ஒட்டாவா- பரிசில் இடம்பெற்ற படுகொலைகளிற்கு பதிலளிக்கையில் கனடிய பிரதம மந்திரி Stephen Harper ஜிஹாத் இயக்கம் கனடா மற்றும் பிற ஜனநாயக நாடுகளில் யுத்தத்தை பிரகடனப்படுத்தியுள்ளன. இதில் தேர்வுரிமை இல்லை எதிர்கொண்டு சமாளிக்க முகம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அவர்கள் விரும்பிய வண்ணம் செயற்படாதவர்கள் மற்றும் சிந்திக்காதவர்கள் மீது ஜிஹாதியர்கள் போர் பிரகடனம் செய்வர் என பிரதமர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாங்கள் இதை விரும்பாமல் போகலாம் ஆனால் இது போகப்போவதில்லை யதார்த்தம் என்னவென்றால் நாம் இதனை எதிர்கொள்ள போகின்றோம் என பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற தொழில்பயிற்சி திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்ப…

    • 0 replies
    • 494 views
  17. பிரெஞ்சு நகரங்கள் சிலவற்றின் இணையத் தளங்கள் பயங்கரவாதிகளால் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பரிசுக்கு அண்மையில் உள்ள Goussainville, Ezanville ஆகிய நகரங்களின் இணையத் தளங்கள் பின்வருமாறு காட்டப்படுகிறது. http://www.lefigaro.fr/actualite-france/2015/01/08/01016-20150108LIVWWW00308-en-direct-Charlie-Hebdo-traque-freres-kouachi-attentat.php#235833

  18. ஒவ்வொரு இந்து மதப் பெண்ணும் 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.பி. சாக்சி மகராஜ் பேசியுள்ளது மீண்டும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய எம்.பி. சாக்சி மகராஜ், இந்து மத ஒற்றுமையைப் பலப்படுத்த ஒவ்வொரு இந்து மதப் பெண்ணும் நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். முந்தைய காலத்தைப் போல ஒரு ஆணுக்கு 4 மனைவிகள் 40 குழந்தைகள் எல்லாம் இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று கூறியுள்ளார். இதனால் மீண்டும் சாக்சி மகராஜ் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் பசுவைக் கொல்பவர்களையும், மதம் மாறுபவர்களையும் மரண தண்டனைக்கு ஈடான தண்டனை கொடுத்து தண்டிக்க வேண்டும் என…

  19. பாரிஸ் தாக்குதலில் கொல்லப்படோர்க்கு அஞ்சலி நிகழ்வு பிரான்சில் நடந்த தாக்குதல்கள் தொடர்பாக பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் மானுவெல் வால்ஸ் கூறியிருக்கிறார். நையாண்டி இதழான , " சார்லி எப்தோ" மீது நடத்தப்பட்ட துப்பாக்கித்தாக்குதல் சமப்வம் தொடர்பாக போலிசார் இரண்டு சகோதரர்களைத் தேடிவருகின்றனர். சேட் அண்ட் ஷெரிப் குவாச்சி ஆகிய இரு சந்தேக நபர்களையும் ஏற்கனவே உளவுத்துறையினர் தெரிந்தே வைத்திருந்தார்கள் வால்ஸ் கூறினார். ஷெரிப் குவாச்சி இரக்குக்கு ஜிஹாதி போராளிகளை அனுப்பியது தொடர்பான வழக்கொன்றில் ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தார். பிரான்ஸ் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் இந்த இரண்டு பேருடன் தொடர்புடைய ஏழு பேர் தடுத்து வை…

  20. டாக்கா வங்காள தேச கிரிக்கெட் வீர ருபல் ஹூசைன் ( வயது 24) வேகப்பந்து வீச்சாளர். இவர் 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா- நியூசிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட வங்காள தேச அணி சார்பில் தேர்வு செய்யபட்டு உள்ளார்.ஹூசைன் வங்காள தேச்சத்துக்காக 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். 53 ஒரு நாள் போட்டிகளில் 69 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார் நியூசிலாந்துக்கு எதி போட்டி ஒன்றில் ஹாட்ரிக் எடுத்து உள்ளார். வங்காள தேச நடிகை நஸ்னின் அக்தர் ஹேப்பி( வயது 19) இவர் ஆசா போல பாசா என்ற படத்தில் நடித்து உள்ளார். ஹேப்பியும் - ஹூசைனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் ஹூசைன் தன்னை திருமணம் செய்து கொள்…

  21. பிரான்ஸ் நாட்டின் லயான் நகரத்தில் உள்ள உணவகத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டில் 2 ஆவது நாளாக தீவிரவாதிகள் 2 இடத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் பாரிஸ் நகரத்தில் மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பொலிஸ் அதிகாரி இருவர் காயமடைந்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள சார்ளி ஹெப்டோ என்ற வாராந்த பத்திரிகை நிறுவனத்தின் மீது நேற்று ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/01/08/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E…

  22. அமெரிக்காவும் வட கொரியாவும் முட்டிக்கிட்டு இருக்கிற விஷயம் எல்லாருக்கும் தெரியும். அது பத்தி ஒரு சின்ன முன்னோட்டம் பாப்போம். அமெரிக்க நிறுவனமான சோனி, ”தி இண்டர்வியூ” அப்படீங்கிற திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று தடை வித்திச்சுது வட கொரியா. காரணம், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை இண்டர்வியூ எடுக்கிற மாதிரி போய் கொலை பன்றது தான் அந்தப் படத்தோட கதை. இந்த படத்தை வெளியாகிறதுக்கு கொஞ்சம் முன்னாடி, சோனியோட கம்பியூடர்ஸ்லாம் ஹேக் செய்யப்பட்டுச்சு. இதுக்கு காரணம், வட கொரியா தான்னு அமெரிக்கா குற்றம் சொல்லுச்சு. இத வட கொரியா மறுத்ததோட அமெரிக்காவோட ரெட்டை கோபுரம் உள்ளிட்ட கட்டிடத்தை எல்லாம் தரைமட்டாமாக்குவோம் அப்படின்னு மிரட்டலும் விட்டுச்சு. ஆனா அதை எல்லாம் கண்டுகாம…

  23. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானைச் சரணடைய வைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அமெரிக்கா, அந்நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் முறையே 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9-ல் அணுகுண்டுகளை வீசியது. இந்த இரண்டு கொடூரச் சம்பவங்களிலும் 1 லட்சத்து 29 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். கதிரியக்கத்தின் காரணமாகக் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கானவர்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தார்கள். அந்தக் குழந்தைகளில் ஒருவர்தான் சடாகோ சசாகி. 1943 ஜனவரி 7-ல் பிறந்தவர் அவர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டபோது சகாகிக்கு இரண்டே வயதுதான். ஹிரோஷிமாவின் மிசாசா பாலத்துக்கு அருகில் சசாகியின் வீடு இருந்தது. அதாவது, அணுகுண்டு விழுந்த இடத்திலிருந்து சுமார் 1.7 கி.மீ. தொலைவில். குண்டுவிழுந்த அதிர்ச்சியில் வீட்…

  24. சிங்கப்பூரின் ஒரு பகுதி பல இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் நாடு. ஆனால் அந்த நாட்டுக்குப் பெயர் கொடுத்தது ஒர் இந்திய மொழிதான். `சிங்க நகரம்’ என்ற பொருளைத் தரும் சமஸ்கிருத வார்த்தைதான் சிங்கப்பூர். எல்லாமே இருக்கும் நாடு. எதுவுமே இல்லாத நாடு. இந்த இரண்டுக்கும் உதாரணங்கள் கொடுக்கச் சொன்னால் நீங்கள் ஒரே ஒரு உதாரணம் கொடுத்தால் கூடப் போதும். சிங்கப்பூர் மேற்படி இரண்டு விளக்கங்களுக்குமே பொருந்தக் கூடிய நாடு. எப்படி என்பதைப் பிறகு பார்ப்போமே. ஒரு முக்கியத் தீவு, 63 மிகச் சிறிய தீவுகள் - இவைதான் சிங்கப்பூர். சிறிய தீவுகளில் பெரும்பாலானவை மக்கள் வசிக்காதவை. தொன்மைக் காலத்தைச் சேர்ந்த பிரபல வானியல் நிபுணர் தாலமின் `சபனா’ என்று குறிப்பிட்டிருப்பது சிங்கப…

    • 6 replies
    • 2.4k views
  25. நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு இவ்வாறு செனல்4 ஊடகத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களைக் கூறி நாட்டுக்குள் பிரவேசித்த செனல்4 ஊடகம், இலங்கைக்கு விரோதமான ஆவணப்படங்களை தயாரித்துள்ளது என வெளிவிவார அமைச்சு அறிவித்துள்ளது. போலி ஆவணப்படங்களின் மூலம் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்குள் பிரவேசிக்க செனல்4 ஊடகத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளைää இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட அதிகளவான இந்திய ஊடகங்கள் அனுமதி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.