Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதுடெல்லி: கடந்த 2001-2011 ஆம் ஆண்டுகளில் இந்திய அளவில் இஸ்லாமிய மக்கள்தொகை 24 சதவீதம் உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் இஸ்லாமிய மக்கள்தொகையின் எண்ணிக்கை 13.4 சதவீதத்தில் இருந்து 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அண்மையில் மதவாரியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள மாநிலமாக ஜம்மு காஷ்மீர் முதலிடத்திலும் (68.3 சதவீதம்), இரண்டாம் இடத்தை அஸ்ஸாமும் (34.2 சதவீதம்) பிடித்துள்ளன. இவற்றுக்கு அடுத்தப்படியாக மேற்கு வங்காளம் (27 சதவீதம்) உள்ளது. நாட்டில் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாமிய மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 29 சதவீதமாக இருந்தது. த…

  2. ஐஸ்வால்: பிரதமர் நரேந்திர மோடி பற்றி ஃபேஸ்புக்கில் தவறான தகவலை பதிவு செய்ததாக இளைஞர் மீது வழக்குப் பதிவுசெய்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். ஃபேஸ்புக் தளத்தில் பிரதமர் குறித்து தவறான தகவல்கள் பதிவிடப் பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து மிசோரம் மாநில பாஜகவினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில், தீவிர விசாரணை மேற்கொண்ட மிசோரம் மாநில போலீசார், அந்த இளைஞர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66(A) மற்றும் ஐபிசி பிரிவு 500ன் கீழ் பிரதமர் குறித்து தவறான தகவலை பரப்பியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறார்கள் என்று போலீஸார் தெரிவித்தனர். பிரதமர்…

  3. கனடாவில் தாக்குதல்களை நடத்துமாறு யேமனைத் தளமாகக் கொண்டு இயங்கும் அல் கைடா அமைப்பின் பிரிவு கோரும் வீடியோ ஒன்று வெளியாகிய நிலையில், அத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்வதற்குத் தயாராக இருப்பதாக கனேடிய அரசு அறிவித்தது. சார்ளி எப்தோ மீது தமது அமைப்புத்தான் தாக்குதல் நடத்தியதென கடந்த வாரம் உரிமை கோரிய அந்த அமைப்பின் தலைவர் ஒருவரின் மற்றொரு ஒளிப்பதிவு நேற்று வெளியிடப்பட்டது. இஸ்லாமுக்கு எதிராக போரிடும் மேற்கு நாடுகளில் கனடாவும் ஒன்றென குறிப்பிடும் அவர், கனடாவில் தாக்குதல்களை நடத்துமாறு ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்தார். கனடாவின் பாதுகாப்பு அமைப்புக்கள் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீவென் பிளேனியின் (Steven Blaney) பேச்சாளர் ஒருவர் கூறிய…

  4. டெல்லி: இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து, தேடிவரும் சஜித் மிர் (அல்லது) சஜீத் மஜீத் என்ற லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியை, பத்திரமாக பாதுகாத்து வருவதில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ வெற்றிபெற்று வருகிறது. மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சஜீத் மிர், பாகிஸ்தானுக்குள்ளேயே பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி இரவு பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் மும்பைக்குள் ஊடுருவி ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்பட முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டனர். வெடிகுண்டுகளையும் வீசினார்கள். இதில் அப்பாவி மக்கள் 166 பேர் பலியானார்கள். http://tamil.oneindia.com/news/india/indi…

  5. சிங்கப்பூர், இந்தோனேஷிய கடல் பகுதியில் மூழ்கிய ஏர்ஏசியா விமானத்தின், ‘காக்பிட் வாய்ஸ் ரெகார்டர்’ சாதனம் மீட்கப்பட்டது. கடந்த மாதம் 28–ந்தேதி இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற ஏர்ஏசியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று ஜாவா கடல் பகுதியில் விழுந்தது. அதில் பயணம் செய்த 155 பயணிகளும் மற்றும் விமான ஊழியர்கள் 7 பேரும் பலியானார்கள். இந்த விபத்தில் பலியானவர்களின் உடல்களையும், விமானத்தின் சிதைந்த பாகங்களையும் இந்தோனேஷியாவின் தேடுதல், மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விமானத்தின் சிதைந்த பெரும் பகுதி மீட்கப்பட்டு விட்டது. எனினும் பலியானவர்களில் இதுவரை 48 பேருடைய உடல்கள் மட்டுமே கிடைத்து உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு…

  6. கனடா- நபர் ஒருவர் தனது கலிவக்ஸ் வீட்டில் குழாய் குண்டு மற்றும் இரசாயனப்பொருட்கள் வைத்திருப்பதாக ஒட்டாவாவில் உள்ள ஹொட்டேல் ஒன்றில் இருந்து விடுத்த பயமுறுத்தலை தொடர்ந்து இவரை பொலிசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது. சந்தேகநபர் பயமுறுத்தலை விட முன்னதாக ஒட்டாவாவில் உள்ள கீமோ ஹொட்டேலில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபர் நோவ ஸ்கோசியாவிலிருந்து அபாயகரமான இரசாயனப் பொருட்கள் நிறைந்த வாகனத்துடன் ஒட்டாவா வந்ததாகவும் கைது செய்யப்பட்டபின்னர் இவர் யு.எஸ்.ஐ சேர்ந்த ஒரு முன்னாள் இராணுவ உயிரிரசாயனத்திற்குரிய ஆயத நிபுணர் என ஆர்சிஎம்பியனரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை இரவு அதிகாரிகள் ஹொட்டேலை சுற்றி பெரும் எல்லையை சுற்றி வளைத்துள்ளனர். கிறிஸ…

  7. காந்தி பீருக்கு பதிலடி: தமிழகத்தில் தயாராகும் ஜார்ஜ் வாஷிங்டன் செருப்பு! கோவை: வெளிநாடுகளில் பீர் பாட்டில்களில் இந்துக்கடவுள்களின் படங்களை போட்டு விற்பனை செய்தனர். இதையும் தாண்டி அமெரிக்க நிறுவனம் காந்தி பெயரில் பீர் விற்பனை செய்தது. இதற்கு பதிலடியாக, ஜார்ஜ் வாஷிங்டன் பெயரில், அவர் படத்துடன் கூடிய செருப்பு தமிழகத்தில் தயாராகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்தி பீர் டின் அமெரிக்காவை சேர்ந்த நியூ இங்கிலாந்து ப்ரூவிங் கம்பெனி என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம், சமீபத்தில் 'காந்தி பாட்' என்ற புதிய வகை பீர் டின் ஒன்றை அறிமுகம் செய்தது. அந்த பீர் டின்களில் நமது தேசப்பிதா மகாத்மா காந்தியின் புகைப்படத்தையும் வெளியிட்டது. இந்தியாவில் கண்டனம் அமெரிக்க நிறுவன…

    • 13 replies
    • 1.9k views
  8. மெக்ஸிகோவில் எரிமலை வெடிப்பு - காணொளி 6 மணி நேரங்களுக்கு முன்னர் மேற்கு மெக்ஸிகோவில் கொலிமா எரிமலை வெடித்து ஆயிரக்கணக்கான மீட்டர்கள் உயரத்துக்கு சாம்பல் பரவியுள்ளது. மெக்ஸிகோ நகருக்கு வடமேற்காக 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ''பயர் வல்கானோ'' என்று அழைக்கப்படும் இந்த எரிமலை, அந்நாட்டில் மிக அதிகமான சீற்றத்தைக் கொண்டுள்ள ஓர் எரிமலையாகும். பிபிசியின் காணொளியைக் காண இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/global/2015/01/150121_volcano

  9. இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு எதிராக பிரான்ஸ் அரசின் புதிய நடவடிக்கைகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு எதிராக பிரான்சின் புதிய நடவடிக்கைகள்பிரான்ஸில், உள்நாட்டிலேயே உருவான இஸ்லாமியத் தீவிரவாதத்தை எதிர்கொள்ள புதிய , பரந்துபட்ட அதிகாரங்கள் கொண்ட பயங்கரவாதத்துக்கு எதிர் நடவடிக்கைகளை, பிரெஞ்சு அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில், 2,500க்கும் மேற்பட்ட உளவு ஏஜெண்டுகள் ஆட்சேர்க்கப்படுவார்கள் என்று பிரதமர் மானுவெல் வேல்ஸ் கூறினார். பாதுகாப்புப் படைகளுக்கு மேலும் நல்லமுறையில் ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும், இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்ட சந்தேக நபர்கள் குறித்த மேலும் விவரமான தரவுகள் கொண்ட தகவல் தளம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் அவர் கூறின…

  10. அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒபாமா உரை: பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை 6 மணி நேரங்களுக்கு முன்னர் நாட்டு நிலைமை தொடர்பில் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆற்றியுள்ள வருடாந்த உரையில், நிதி நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதாக பிரகடனம் செய்ததோடு, பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என எச்சரித்துள்ளார். காணொளியைக் காண இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/global/2015/01/150121_obamasouvideo

  11. புதுடெல்லி: ஆப்ஸ் ( app's) சேவைகளுக்கான விதிமுறைகளை மீறியதாக வாட்ஸ் அப் பயனாளிகள் பலருக்கு திடீரென 24 மணி நேர தடை விதிக்கப்பட்டதால் அவர்களிடையே குழப்பமும், பரபரப்பும் நிலவியது. வாட்ஸ் அப் போன்றே வாட்ஸ் அப் பிளஸ் ( WhatsApp+) என்ற அப்ளிகேஷனை ஆன்ட்ராய்ட் ரக போன் வைத்திருப்பவர்கள் சிலர் பயன்படுத்தி தங்களது நண்பர்கள் மற்றும் உறவு வட்டாரங்களுக்கு தகவல், புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை அனுப்பி பகிர்ந்துகொண்டுள்ளனர். ஆனால் இவர்களில் பலர் வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனும், வாட்ஸ் அப் அப்ளிகேஷனும் வெவ்வேறு என்ற விவரம் தெரியவில்லை. இவ்வாறு வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனை பயன்படுத்தியவர்களுக்கு ஃபேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் போன்ற வெவ்வேறு சமூக வலைத்தளங்கள் மூலம், " தேர்…

  12. கனடா- கல்கரி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி பயணித்த ஒருவரிடமிருந்து எல்லைப்புற அதிகாரிகள் 20-டொலர்கள் தாள்களாக 38,000டொலர்களிற்கும் மேலான தொகை பணத்தை கைப்பற்றியுள்ளனர். இம்மனிதன் தான் 9,000டொலர்களுடன் பயணம் செய்வதாக கூறியுள்ளார். அதிகாரிகள் மனிதனின் ஜாக்கெட்டிற்குள்ளும் கையில் சுமந்து செல்லும் பொதிக்குள் இருந்து 18,060 டொலர்களையும் சரிபார்க்கப்பட்ட பெட்டிக்குள்; இருந்து 20,000 டொலர்களையும் கண்டுபிடித்துள்ளனர். அனைத்தும் 20-டொலர்கள் தாள்கள். இவர் ஒரு குறைந்த வருமானம் உடையவர். இவ்வளவு தொகைப் பணம் இவரது கைக்கு எவ்வாறு கிடைத்தது என்பது எப்படியானது என அதிகாரிகள் கருதுகின்றனர். இவர் மத்திய கிழக்கில் எங்கு செல்கின்றார் என்பதை அதிகாரிகள் அடையாளம் கண்டு கொ…

  13. வேகம் குறையும் சீனப் பொருளாதாரத்தால் ஏற்படும் தாக்கங்கள் கடந்த இருபது ஆண்டுகளில் மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சியை இவ்வாண்டில் சீனா கண்டுள்ளது. கடினமான சில மாற்றங்களை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டுமென அரசாங்கம் எச்சரித்துள்ளது. பொருளாதாரத்தின் மெதுவான வளர்ச்சி விகிதம் சீன குடும்பம் ஒன்றில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி அலசும் காணொளி இது. http://www.bbc.co.uk/tamil/global/2015/01/150120_china மன்னிக்க வேண்டும் காணொளியைத்தரவிறக்கம் செய்ய முடியவில்லை.தொடுப்பில் அழுத்தி காணொளியப் பார்வையிடலாம்

  14. ஐரோப்பா: இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது. இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் உள்பட பல்வேறு நாட்டிற்கு மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய மாம்பழங்களில் பூச்சிகள் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் புகார் எழுந்தது. இதையடுத்து, இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய கடந்த ஆண்டு மே 1ஆம் தேதி அந்நாடு தடை விதித்தது. இந்நிலையில், இந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ஐரோப்பிய ஒன்றியம் இன்று உத்தரவிட்டுள்ளது. http://news.vikatan.com/article.php?module=news&aid=37597

  15. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தலைநகர் டெல்லியில் 26-ந் தேதி நடைபெறுகிற குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர் மனைவி மிச்செல், உயர் மட்ட தூதுக்குழுவினருடன் 25-ந் தேதி தனி விமானம் மூலம் டெல்லி வந்து சேருகிறார்.ஒபாமாவின் வருகையையொட்டி டெல்லியில் குடியரசு தின விழாவுக்கு வரலாறு கண்டிராத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக குடியரசு தின விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள தலைமை விருந்தினர், ஜனாதிபதியுடன் அவரது குண்டு துளைக்காத காரில் வருவது வழக்கம். ஆனால் ஒபாமா, தனியாக தனது காரில் வந்து சேருவார் என தகவல்கள் கூறுகின்றன. *ஒபாமா பயணம் செய்ய குண்டு துளைக்காத கார் வரவழைக்கப்படுகிறது. இந்த காரின் டயர், டீசல் டேங்க் போன்றவையும் துப்பாக்கியால் சுட முடி…

  16. இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள கனேடிய வெளியுறவு அமைச்சர் ஜோன் பெயர்ட் ராம்லா பகுதி ஊடாக பயணித்த வேளையில், பாலஸ்தீனர்கள் அவரது வாகனத் தொடரணி மீது காலணிகள் மற்றும் முட்டைகள் என்பவற்றை வீசி தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரெய்ட் மாலிக்கை சந்திப்பதற்காக ஜோன் பெயர்ட் மேற்குக்கரை நகருக்கு பயணித்த வேளையிலேயே இந்த அதிருப்தி போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. “ஜோன் பெயர்ட்டை நாங்கள் பாலஸ்தீனத்திற்குள் வரவேற்கவில்லை” என்ற பதாதைகளையும் தாங்கியிருந்த போராட்டக்காரர்கள், அவருக்கு எதிரான பல்வேறு கோசங்களையும் எழுப்பி தமது கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். கனேடிய அரசாங்கம் தொடர்ந்து இஸ்ரேலுக்கு சார்பான நிலைப்பாட்டினை வெளிப்படுத்திவரும் நிலையில், கனேடிய…

  17. ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி, எல்லை தாண்டிய தாக்குதல் நடத்தக்கூடாது என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எல்லையில் தாக்குதல் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி தந்து வருகிறது. இருந்தும் பாகிஸ்தான் திருந்தாமல், தாக்குதல்களை தொடர்கிறது. இந்தியா வருகிறார் ஒபாமா இதற்கிடையே, டெல்லியில் 26-ந் தேதி நடைபெறுகிற இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து கொள்கிறார். இதற்காக அவர் 25-ந் தேதி டெல்லி வருகிறார். ஒபாமா வருகையையொட்டி டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாட…

  18. ஐரோப்பிய நாடுகளில் உள்ள முஸ்லிம் சமூகத்தினரை மனிதாபிமான முறையில் ஒருங்கிணைத்து செயல்பட நாம் முன்வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று வாஷிங்டனில் கூறினார்.பிரான்ஸ் உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் மீது இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் நேற்று வாஷிங்டனில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் நிருபர்களுடன் பேசினார்கள். அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது:பிரான்ஸ் நாட்டில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதேபோல், இங்கிலாந்து உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய த…

  19. ”ஜல்லிக்கட்டு” தமிழர்களின் விளையாட்டே கிடையாது – சொல்கிறார் மேனகா காந்தி! லக்னோ: ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாசாரம் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளது தமிழகத்தில் புதிய பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் தொகுதியில் இன்று பேசியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அப்போது அவர், "ஜல்லிக்கட்டில் காளைகள் மட்டுமல்லாமல் மனிதர்களும் கொல்லப்படுகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ள உச்ச நீதிமன்ற நடவடிக்கை வரவேற்கத்தக்கது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை பாஜக கடுமையாக எதிர்க்கிறது" என்று தெரிவித்துள்ளார். பழக்கப்பட்ட விலங்கினை காட்சிப்படுத்துவது என்ற பட்டியலில் இருந்து காளையை நீக்க நடவ…

  20. புதுக்கோட்டை புனித அந்தோணியார் கோயில் காணும் பொங்கல் விழா (படங்கள்) தை பொங்கல் விழா எ்ன்றால் ஒவ்வொரு கிராமத்திலும் கொண்டாட்டம் தான். கிராமங்கள் தோறும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தி மொத்த கிராமமும் சந்தோசத்தில் மூழ்கும். புதுக்கோட்டை நகரில் உள்ள உசிலங்குளம் அந்தோணியார் கோயில் முன்பு அப்பகுதி மக்கள் ஆயிரக்கணக்கில் திரன்டு ஒரே இடத்தில் பொங்கல் வைத்து வழிபட்டது காண்போரை மகிழச் செய்தது. http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=136258 இப்படி ஒவ்வொரு கிராமங்களும் செயல்பட வேண்டும்.

  21. அமெரிக்க பத்திரிகைகளான 'தி நியூயார்க் போஸ்ட்'-ல் ஊடுருவிய ஹேக்கர்கள், மூன்றாம் உலகப் போர் தொடங்கி விட்டதாக போப் ஆண்டவர் பெயரில் ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். பிரபல அமெரிக்க பத்திரிகைகளான 'தி நியூயார்க் போஸ்ட்' மற்றும் 'யூனைடட் ப்ரெஸ் இன்டெர்னேஷ்னல்' ஆகியவைகளின் ட்விட்டர் பக்கங்களில் ஊடுருவிய ஹேக்கர்கள் அதில், பொருளாதாரம் மற்றும் ராணுவம் தொடர்பாக தவறான செய்திகளை பதிவு செய்தனர். தவறான செய்திகள் பரவியதால் வாசகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.தங்களது பத்திரிகை ஹேக்கர்களால் அத்துமீறப்பட்டதாக 'தி நியூயார்க் போஸ்ட்' நிறுவனம் தெரிவித்தது. மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்று போப் ஆண்டவர் தெரிவித்ததாக தங்களது ட்விட்டர் …

  22. காங்கிரஸ் தலைவர் சோனியா குறித்து, 'தி ரெட் சாரி' என்ற பெயரில் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தகம், கடும் எதிர்ப்புக்கு இடையே இந்தியாவில் வெளியாகி உள்ளது.ஸ்பெயினைச் சேர்ந்த ஜேவியர் மோரோ என்ற எழுத்தாளர், 2008ல், 'தி ரெட் சாரி' என்ற பெயரில், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வாழ்க்கை வரலாறு குறித்து, அதிகாரபூர்வமற்ற புத்தகத்தை எழுதினார். ஸ்பெயின் மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகம், ஸ்பெயின், இத்தாலி நாடுகளில் அமோகமாக விற்பனையானது. இதில், சோனியாவின் இளமை பருவம், ராஜிவுடன் ஏற்பட்ட காதல், திருமணம், அரசியல் குறித்த சம்பவங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், சோனியாவும், காங்கிரஸ் தலைவர்களும், இந்த புத்தகத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும்…

  23. இம்மாதம், 26ம் திகதி நடக்கும் குடியரசு தின விழாவில், அமெரிக்க அதிபர் ஒபாமா, சிறப்பு விருந்தினராக பங்கேற்கஉள்ளார். ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து அசத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குடியரசு தின விழா அன்று, ஒபாமா அமரும் மேடை, அதைச் சுற்றியுள்ள பகுதிகள், விழா மேடைக்கு அவர் நடந்து வரும் பாதை, ஆகியவற்றை, வித, விதமான, வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, ஹாலந்திலிருந்து துலீப் மலர்கள், ரோஜாப்பூக்கள், அந்துாரியம், லில்லி மலர்கள், சிங்கப்பூரில் இருந்து மந்தாரை பூக்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, ஏற்கனவே ஆர்டர் கொடுக்கப்பட்டு விட்டன. இந்த பூக்கள் வந்ததும், குடியரசு தின விழா மேடையை மலர்களால் அலங்கரிக்கும் ப…

    • 5 replies
    • 535 views
  24. ஷார்லி எப்டோ இதழின் புதிய பதிப்பிலும் முகமது நபியின் சித்திரம்தாக்குதலுக்குள்ளான பிரஞ்சு நையாண்டி இதழ் "ஷார்லி எப்டோ"வின் புதிய பதிப்பில் இறைதூதர் முகமது நபி, "நான் ஷார்லி" என்ற வாசகம் பொறித்த அட்டையை தாங்கியிருக்கும் வரிச்சித்திரத்தை அட்டையில் தாங்கியிருக்கும். இந்த சித்திரத்துக்கு மேல் பகுதியில், "எல்லாம் மன்னிக்கப்பட்டது" என்ற வாசகங்களும் இருக்கும். இந்த அட்டையுடன் கூடிய புதிய இதழ் ஏற்கனவே பிரான்ஸ், பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் பிரசுரிக்கப்பட்டுவிட்டது. இந்த இதழின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் , அதன் ஊழியர்களைப் பணிய வைக்காது என்று , அந்த இதழின் செய்தியாளர், ஜினெப் எல் ரசூயி கூறினார். புதன்கிழமை பதிப்பின் மூன்று மிலியன் பிரதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. …

  25. ஒரு பீப்பாய் 20 டாலராகக் குறையுமா? ச.ஸ்ரீராம் முன்பெல்லாம் ஒரு நாட்டை அழிக்க ஆயுதங்களையும், குண்டுகளையும் வீசித் தாக்கினர். அதற்குப் பதிலாக தற்போது புதிதாகக் கண்டுபிடித்திருக்கும் வழிதான், பொருளாதாரப் போர். ஒரு நாட்டுக்கு வருமானத்தைத் தரக்கூடிய பொருளை அதிகமாக உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் எதிரிநாட்டை கத்தியின்றி, ரத்தமின்றி ஒழித்துக்கட்டுவதுதான் இந்தப் பொருளாதாரப் போரின் நோக்கம். அப்படியொரு பொருளாதாரப் போர்தான் தற்போது சர்வதேச அளவில் நடந்து வருகிறது. இந்தப் போரின் முக்கிய ஆயுதமாக மாறியிருக்கிறது கச்சா எண்ணெய். இதனை அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்வதன் மூலம் வல்லரசாக விளங்கும் ரஷ்யாவையும், ஈரானையும் ஆட்டுவிக்க, அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் திட்டமிட்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.