Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஏர் ஏசியா விமானம் கடலில் விழும் முன்பு தலைமை விமானி தன் இருக்கையை விட்டு எழுந்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் பலியாகியுள்ளனர். இதனையடுத்து நடந்த மீட்பு பணியில் இதுவரை விமான விபத்திலிருந்து 72 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கருப்புபெட்டியில் சோதனை செய்து பார்த்ததில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விமானத்தை கட்டுப்படுத்தும் கப்யூட்டரில் ஒரு வாரத்திற்கும் மேலாக கோளாறு இருந்துள்ளது. கோளாறுடனேயே விமானத்தை ஓட்டியுள்ளனர். கடந்த 28ம் திகதி கோளாறு அதிகரிக்கவே தலைமை…

  2. மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினின் மகள் குறித்த ரகசியத்தை எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவரது மகள்கள் எகடெரினா(28) மற்றும் மரியா(29) ஆகியோர் பொதுமக்கள் பார்வையில் இருந்து தள்ளியே வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் என்ன படித்துள்ளார்கள், தற்போது எங்கே, என்ன செய்கிறார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் அலெக்சீ நவல்னி வியாழக்கிழமை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எகடெரினா பற்றிய ரகசியத்தை வெளியிட்டுள்ளார். அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, நேற்று புதினின் மகளை மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பார்த்தேன். அவர் அறிவியல் கவுன்சிலில் உள்ளார் என்று …

  3. சவுதியில் முக்காடு அணியாத மிஷல் ஓபாமா: ட்விட்டரில் திட்டும் மக்கள். ரியாத்: சவுதி சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் தலையில் ஸ்கார்ப் அணியாதது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தனது மனைவி மிஷலுடன் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 25ம் தேதி இந்தியா வந்தார். அவர்கள் நேற்று கிளம்பி சவுதி அரேபியா சென்றனர். ஆக்ரா சென்று தாஜ் மஹாலை பார்க்கும் திட்டத்தை கூட ரத்து செய்துவிட்டு அவர்கள் சவுதி கிளம்பினர். சவுதியில் மிஷல் ஒபாமா தலையில் ஸ்கார்ப் அணியாதது தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சவுதியில் பெண்கள் தலையில் ஸ்கார்ப் அணிய வேண்டும் அல்லது புர்கா அணிந்து முகத்தை மறைக்க வேண்டும். இந்நிலையில் மிஷல் ஸ்கார்ப் அணியாதது பற்றி பலரும் ட்விட்டர…

    • 37 replies
    • 2.8k views
  4. கனடா மொன்றியலில் சர்ச்சைக்குரிய இமாம் ஒருவர், இஸ்லாமிய சமூக நிலையமொன்றை அமைப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு மொன்றியல் நகரசபை மறுத்துள்ளது. பொதுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அனுமதி மறுக்கப்பட்டதாக மொன்றியல் நகர முதல்வர் தெரிவிக்கின்றார். பொதுமக்கள் வழிபாட்டை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்காத இடமொன்றில் இந்த சமூக நிலையம் அமைக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மதச் சுதந்திரத்திற்குத் தடை விதிக்கும் வகையில் இந்த அனுமதி வழங்கப்படவில்லை என்றும், மாறாக பொதுப் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கைக் கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டதாகவும் நகர முதல்வர் டெனிஸ் கடெயர் (Denis Coderre) தெரிவித்தார். ஹம்ஸா ச்சாயுயோய் (Hamza Chauoi) என்ற இந்த இமாம் பேரினவாதக் கொள்கைகள் மற்றும் …

  5. கனடா- ரொறொன்ரோ நகரம் வாழ்வதற்கு சிறந்த இடம் என பொருளாதார புலனாய்வு பிரிவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தரவரிசைப் பட்டியலில் இருந்து கணிக்கப்பட்டுள்ளது. கனடாவின் மிகப்பெரிய நகரம் மனிதவாழ்க்கை பொருத்தப்பாடு மற்றும் உணவுப்பாதுகாப்பு உட்பட்ட ஆறு குறிகாட்டிகளில் ரொறொன்ரோ 50- நாடுகளின் இறுதிப்பட்டியலில்’ ஒட்டுமொத்த சிறந்ததென’ தகுதிபெற்றது. இரண்டாவது இடத்தை பிடித்த கனடிய நகரம் மொன்றியல். இந்த முடிவு பொருளாதார புலனாய்வு பிரிவினரின் ஒரு புதிய அறிக்கையான உலகம் பூராவுமான நகர்ப்புற அளத்தலின் பாதுகாப்பான நகரங்களின் அடைவையும் உள்ளடக்குமென கூறப்பட்டுள்ளது. நகர்ப்புற பாதுகாப்பு அளத்தலில் ரொறொன்ரோ எட்டாவது இடத்தையே பெற்றது. முதலாவது இடத்தை டோக்கியோ பெற்றுள்ளது. ஆனால் ரொறொன்ரோவின் மு…

  6. கனடா எல்லைப் பகுதி சேவைகள் முகமை புதன்கிழமை பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் பாபடோஸ் என்ற இடத்தில் இருந்து வந்த பயணி ஒருவரிடமிருந்து 4,6000 டொலர்களை பறிமுதல் செய்துள்ளனர். குற்றம் மற்றும் பயங்கரவாத நிதிச்சட்டத்தின் கீழ் இப்பறிமுதல் இடம்பெற்றுள்ளது. பொதிகள் இறக்கப்படும் போது அதிகாரிகள் பொதிகள் கொணர்வியில் ஒரு தனி சூட்கேசை கவனித்துள்ளனர். சூட்கேசை மேலதிக சோதனையிட்ட போது அதற்குள் கறுப்பு நிற மடிக்கணனி பை இருந்துள்ளது. பையை சோதனையிட்ட போது சந்தேகம் வெளிப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பையின் உட்பக்க லைனரில் சிறிய வெட்டு போட அதற்குள் பெரிய தொகை 100 யுஎஸ் டொலர்கள் வெளிப்பட்டுள்ளது. பொதியின் சொந்த காரரை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். பயணி தனக்கு பணம் சம்பந்தமாக எதுவும…

  7. புவனேஸ்வர்: சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் சக்திவாய்ந்த அக்னி 5 ஏவுகணை ஒடிஷாவின் வீலர் தீவில் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் சார்பில் அதிநவீன ஏவுகணையாக அக்னி 5 வடிவமைக்கப்பட்டது. 50 டன் எடை கொண்ட அக்னி 5 ஏவுகணை, 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் சக்தி வாய்ந்தது. இந்த ஏவுகணை ஒடிஷா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து இன்று காலை 8.09 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்முறையாக கேனிஸ்டர் எனும் எளிதில் ஏவக்கூடிய சாதனம் மூலம் ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டுள்ளது. எல்லையில் இருந்து இந்த…

  8. கனடாவில் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டம் ஒன்றின் கீழ் பயங்கரவாத செயற்பாடு ஒன்றை மேற்கொள்ளும்படி தூண்டும் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க முடியும். கனடாவிலும் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில் சமஷ்டி அரசாங்கம் புதிய சட்டத்திற்கான வரைவொன்றை நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தது. பயங்கரவாதத்துக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்டவிதிகள் கனேடிய புலனாய்வுச் சேவையினருக்கு அதிகரித்த அதிகாரங்களை வழங்குகின்றன. சந்தேகத்துக்கிடமான தீவிரவாத போக்குடையவர்களின் பயணத் திட்டங்கள், வங்கிக் கொடுப்பனவுகள், அடிப்படைவாத போக்குடைய இணையத்தளங்கள் என்பவற்றுக்கு எதிராக புலனாய்வு சேவையினர் செயற்பட அதிகரித்த அதிகாரங்கள் வழிவகுக்கும். சந்தேக நப…

  9. சென்னை: காங்கிரஸில் இருந்து மகன் கார்த்தியுடன் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் விலகினால் கட்சிக்கு விமோசனம் கிடைக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடுமையாகத் தாக்கியுள்ளார். அதே நேரத்தில் இளங்கோவனின் இந்த கருத்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஜெயந்தி நடராஜன் கட்சியை விட்டு வெளியேறியது குறித்து விமர்சித்திருந்தார். பதவி சுகம் அனுபவித்த ஜெயந்தி மேலும், காங்கிரசிலிருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கியபோது, அன்றைய பிரதமர் ஐ.கே.குஜராலியிடம் கெஞ்சி,…

  10. ரஷ்யாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் பதட்டம் நீடித்தால் அது போராக வெடிக்கும் அபாயம் உள்ளதாக முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் கோர்பசேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ரஷ்யாவை மீண்டும் ஒரு பனிப்போருக்கு மேற்கத்திய நாடுகள் இழுத்துள்ளன. இந்த பனிப்போர் முழு போராக வெடிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றார். கிழக்கு உக்ரைனில் அரசு படையினருக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் 5,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சண்டையில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவியளித்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளை…

  11. டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக வெளியான கருத்துக்கணிப்பு பா.ஜனதாவை ஒருபுறம் பதறவைக்கிறது என்றால், மறுபுறம் ஆபாச பேச்சு புகார், முதல்வர் வேட்பாளர் கிரண் பேடியின் தோற்றம் குறித்த விமர்சனம் என தகிதகித்துக்கொண்டிருக்கிறது டெல்லி தேர்தல் களம். டெல்லி சட்டமன்ற தேர்தல் வருகிற 7 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், வாக்குப்பதிவு நாள் நெருங்க நெருங்க தேர்தல் பிரசாரம் அனல் பறந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டால் அது கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியதால்தான் இருக்கும் என தகவல்கள் வெளியாக, கிரண் பேடி செம கடுப்பாகிப்போனார். இந்நிலையில்தான் எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்த்த கதையாக, "ட…

  12. பெண்ணை துரத்தி துரத்தி காதலிப்பது, 'பாலிவுட்' பாணி என்பதால், இந்தியரை பொறுத்தவரை, அதை பெரிய குற்றமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என ஆஸ்திரேலியாவில் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர், சந்தேஷ் பாலிகா வயது 32. இவர், ஒரு ஆஸ்திரேலிய பெண்ணை, ஒன்றரை வருடமாக விடாமல் துரத்தி, காதலிக்க முயன்றுள்ளார். அது தோல்வியடையவே, வேறொரு பெண்ணை, நான்கு மாதங்களாக துரத்தியுள்ளார். இதுகுறித்த வழக்கு, ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில், நீதிபதி மைக்கேல் ஹில் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அளித்த தீர்ப்பு: இந்தி சினிமாக்களில், நாயகியை தொடர்ந்து துரத்தினால் அவள் மசிந்து விடுவ…

  13. பிரிட்டிஷின் பிரபல சூப்பர் மார்கெட் நிறுவனமான டெஸ்கோ, பிரிட்டிஷில் 43 சூப்பர்மார்கெட்களை மூடப்போவதாக அறிவித்துள்ளது. இதனால், சுமார் 2000 பேருக்கு வேலை பறிபோகும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. பிரிட்டிஷில் சுமார் 97 ஆண்டுகளாக இயங்கி வரும் மல்டிநேஷ்னல் நிறுவனம் டெஸ்கோ. இலாபத்தின் அடிப்படையில் உலகின் மூன்றாவது பெரிய நிறுவனம் என்ற பெயரை எடுத்த இந்நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக வருவாயில் பிந்தங்கி விட்டதாம். வளர்ந்து வரும் தொழில் போட்டிக்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில், தற்போது இந்நிறுவனம், அதிக வருவாய் இல்லாத 43 கடைகளை மூடுவது என்ற முடிவிற்கு வந்துள்ளது. கடைகள் மூடப்படுவதால், அங்கு வேலை செய்து வரும் 2000 பேர் வேலை இழக்க நேரிடும். இது மட்டுமல்லாது, வரு…

  14. டமாஸ்கஸ்: சிரியாவில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.விடம் ராணுவ பயிற்சி பெறும் கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துவிடுவது தொடர்கதையாகிவிட்டது அந்நாட்டுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிரியாவின் பல கிளர்ச்சி குழுக்களுக்கு அளித்து வந்த நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி வருகிறது. சிரியாவின் வடக்கு பகுதியில் 16க்கும் மேற்பட்ட கிளர்ச்சி குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த கிளர்ச்சி குழுக்களுக்கு அமெரிக்கா முழு அளவில் நிதி உதவி வழங்கி வருகிறது. தற்போது சிரியா புரட்சியாளர்கள் முன்னணி உள்ளிட்ட 4 கிளர்ச்சி குழுக்களுக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.விடம் இருந்து நிதி உதவி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஹராஹத் …

  15. பிரதமர் நரேந்திர மோடி தான் வாக்குறுதி அளித்தபடி வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்காதது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. டெல்லியில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கோடிக்கணக்கான கருப்பு பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வருவேன். அந்த பணத்தை வைத்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று நரேந்திர மோடி கூறினார். அது என்ன ஆனது?. ஒபாமா வருகையின்போது மோடி ரூ.10 லட்சம் மதிப்ப…

  16. Started by Athavan CH,

    பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 1 பாரீஸ் பேரணியில் பங்கேற்ற உலகத் தலைவர்கள்.| படம்: ஏஎப்பி ‘‘வாள்முனையைவிடப் பேனா வலியது’’ என்பார்கள். துப்பாக்கியைவிட வலியதா? இதுதான் பாரீஸின் தற்போதைய தலைப்புச் செய்தி. பிரான்ஸ் நாட்டின் ‘தலை’யான பாரீஸ் மிகப் பெரிய நகரம். இங்கு வசிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 23 லட்சம். மொத்த பிரான்ஸில் சுமார் 19 சதவீதம் பேர் பாரீஸில் வசிக்கிறார்கள். பிரான்ஸின் இரண்டாவது பெரிய நகரம் மார்ஸெய்லெஸ் இது பாரீஸின் அளவில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லை. நாட்டின் நிர்வாக, வணிக, கலாச்சார மையம் பாரீஸ்தான். பாரீஸ் தும்மினால் பிரான்ஸுக்கு ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் என்பார்கள். ’இன்று உலகின் தலைநகரமாகிவிட்டது பாரீஸ்’’ என்கிறார் அதன் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலா…

    • 11 replies
    • 4.4k views
  17. சிறுவர்களின் காதைப் பிடித்து திருகும் பிரதமர் மோடி Jan 30, 2015 Ariram Panchalingam Don't miss, Local, News Ticker, Top Slider, World 0 பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தினத்தையொட்டி வீர தீரச் செயலுக்கான விருது பெற்ற ஒரு சிறுமியின் காதைப் பிடித்து செல்லமாக திருகிய படம் இப்போது வைரலாக மாறியுள்ளது. அந்த சிறுமியின் பெயர் ரிபா தாஸ். வயது 8. பிரதமர் மோடி இவரது காதைப் பிடித்து செல்லமாக திருகியபடி போஸ் கொடுத்த புகைப்படம் பிரதமரின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திரிபுராவைச் சேர்ந்தவர் ரிபா தாஸ். தீவிபத்திலிருந்து தனது தம்பியின் உயிரைக் காத்து தீரமாக நடந்து கொண்டார். இதற்காகத்தான் அவருக்கு வீரச் செயலுக்கான விருது கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இவரது வீடு…

  18. பெண்கள் வெற்றியே நாட்டின் வெற்றி: டெல்லியில் ஒபாமா பேச்சு மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இன்று தனது இறுதி நிகழ்வில் கலந்துகொண்டார். தலைநகர் டெல்லியில் உள்ள சிறி கோட்டையில் கூடிய மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய ஒபாமா நாட்டில் பெண்கள் வெற்றி பெற்றால் அந்த நாடே வெற்றியடைகிறது என்று கூறினார். தனது உரையின் போது அவர் மேலும் கூறியதாவது; ஒரு வீட்டில் பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தால், அந்த குடும்பத்தின் குழந்தைகள் நல்ல கல்வி வளர்ச்சிளை பெறுவார்கள். இந்தியாவில் பெண்களுக்கு நல்ல வாய்ப்பும், உரிய கவுரவமும் அளிக்கப்படுகிறது. அதனால் தான் அனைத்து வகையிலும் இந்தியா முன்னேறி வருகிறது. இந்தியாவில் திறமைக்கு குறைவில்லை. இதற்க…

  19. நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தலையைத் துண்டித்து, அந்நாட்டை இஸ்லாமிய நாடாக்குவோம் என ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘நாங்கள் விரைவில் அமெரிக்காவை அடைவோம் ஒபாமா. அப்போது வெள்ளை மாளிகையில் வைத்து உமது தலையைக் கொய்து, அமெரிக்காவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம்' என தெரிவிக்கப் பட்டுள்ளது. குர்தீஷ் வீரரின் தலையைக் கொய்வதற்கு முன்னதாக, ஈராக்கின் மோசூல் நகர வீதியில் நின்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பேசுவது போல் அந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ காட்சிகளில் அமெரிக்கா மட்டுமின்றி பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்திற்கும் மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரவ…

  20. வாரணாசி: உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஓடும் ரயிலில் இருந்து ரயில்வே காவலரால் தூக்கி வீசப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ரிதா, தனது உறவினர்களுடன் கான்பூரில் வேலை செய்யும் தனது கணவர் பார்வேஸ் பாலை பார்க்க சென்றுள்ளார். ஹவுரா - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது உறவினர்களுடன் அசான்சோலில் இருந்து கான்பூர் சென்றுள்ளார். ரயிலில் அதிகமான கூட்டம் இருந்ததால், ரிதா தனது 18 மாத குழந்தை காஜல், அப்பா மானிக் பால் மற்றும் சகோதரர் ஜெய்தீப் பால் ஆகியோருடன் பார்சல் பெட்டியில் ஏறியுள்ளார் என்று கூறப்படுகிறது. ரயில் வாரணாசி வந்ததும், ரயில்வே காவலர் ஒருவர் பார்சல் பெட்டிக்குள் வந்ததோடு, அவர்களிட…

    • 2 replies
    • 544 views
  21. சவுதி அரேபியா சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செலின் முகத்தை மங்கலாக்கி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சவுதி மன்னர் அப்துல்லாவின் இறுதி சடங்கில் பங்கேற்க சவுதி அரேபியாவுக்கு ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஒபாமா ஆகிய இருவரும் சென்றுள்ளனர். இந்நிலையில் சவுதி தலைநகர் ரியாத்தில்(Riyadh) இறங்கிய ஒபாமாவின் மனைவி மிச்செல், சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தலையை மறைக்கும் துணியை அணியாமல், நீண்ட பேன்ட் மற்றும் பளீர் நிறத்திலான ஆடையுடன் மேல் அங்கி போன்றவையையும் அணிந்திருந்தார். இதை பார்த்த பலர் கை குலுக்க மறுத்ததுடன், தலையை மட்டும் அசைத்து வரவேற்றுள்ளனர்.இச்சம்பவம் மிச்செல் மனதை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, மேலும…

  22. ஒட்டாவா- கொன்சவேட்டிவ் அரசாங்கம் கனடாவின் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவர பரிசீலனை செய்கின்றது. இந்த மாற்றம் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி ஒருவரை குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றி நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்க பொலிசாருக்கு அனுமதி வழங்கும். இந்த மாற்றம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப் படுகின்றது. தற்போது எவராவது பயங்கரவாத செயல்பாட்டிற்கு திட்டமிடுகின்றார் என பொலிசார் நம்பும் பட்சத்தில் அந்நபரை பொலிசார் குற்றச்சாட்டு இல்லாமல் கைது செய்யலாம். பின்னர் 72 மணித்தியாலங்களிற்குள் பொலிசார் போதுமான ஆதாரங்கள் கொண்டுவராவிடில் சந்தேக நபர் விடுதலை செய்யப் படவேண்டும். பரிசீலனையில் இருக்கும் புதிய சட்டம் பொலிசார் ஒரு நீதிபதி முன் தோன்றி இரண்டு மேலதிக 4…

  23. USA $1 = CAD .7987 கனடிய டொலர் கிட்டத்தட்ட 6-வருடங்களில் முதல் தடவையாக யுஎஸ்.சின் 80-சதத்திற்கு கீழே சறுக்கியுள்ளது. புதன்கிழமை கனடிய டொலர் யுஎஸ்சின் 79.87-சதமாக காணப்பட்டுள்ளது. இது செவ்வாய்கிழமையை விட சதத்திற்கு முக்கால் விகிதம் குறைந்துள்ளது. யுஎஸ். டொலரின் பெறுமதி கனடா உட்பட்ட உலகின் பல பெரிய நாணயங்களிற்கு எதிராக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனடிய லூனியின் பெறுமதி வீழ்ச்சியடைந்த பின்னர் ஒரு யுஎஸ் டொலரை வாங்க அதிகார பூர்வமான பரிமாற்ற விகிதமாக 1.25 கனடிய டொலர்கள் வேண்டும். 2009-ஏப்ரலில் இருந்து கனடிய டொலர் 80-சத யுஎஸ்சிற்கு பரிமாற்றம் செய்யப்படவில்லை. அடுத்த சில மாதங்களிற்கு நிலைமை மோசமாகலாம் எனவும் கூறப்படுகின்றது. கச்சா எண்ணெயின் விலை புதன்கிழமை பீப…

  24. இந்திய வெளிவிவகாரச் செயலராக ஜெய்சங்கர் நியமனம் –அமைதிப்படையின் ஆலோசகராக இருந்தவர் JAN 29, 2015 | 0:12by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் இந்திய வெளிவிவகாரச் செயலராக, எஸ்.ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்த சுஜாதா சிங்கின் பதவிக்காலம் எட்டுமாதங்களால் குறைக்கப்பட்டதையடுத்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவையின் நியமனக் குழுவின் கூட்டத்துக்குப் பின்னர், இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றும் எஸ்.ஜெய்சங்கர் வரும் 31ம் நாளுடன் இந்திய வெளிவிவகாரச் சேவையில் இருந்து ஓய்வு பெறவிருந்த நிலையிலேயே, புதிய வெளிவிவகாரச் செயலராக அவர் நியமிக்கப்பட்…

  25. கனடாவில் பயங்கரவாதத்தைத் தூண்டுவதற்கும், சட்டபூர்வமான மதக் கருத்துக்களை வெளியிடுவதற்கும் இடையில் மிகக் குறுகிற வேறுபாடுதான் இருப்பதாக கனேடிய அமைச்சர் ஜேசன் கெனி தெரிவித்தார். தமது அரசு எதிர்வரும் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், அந்த வேறுபாட்டை கருத்திலெடுத்துத் தயாரிக்கப்பட்டதென நேற்று வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் குறிப்பிட்டார். சட்டபூர்வமான மதக் கருத்துக்களை வெளியிடுவதைத் தடை செய்வது தமது அரசின் நோக்கம் அல்லவென அவர் குறிப்பிட்டார். தனிநபர்கள் தாக்குதல்களை நடத்துவதைத் தடுப்பதற்கும், பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்காக பயணம் செய்வதைத் தடுப்பதற்கும் வழிவகுக்கும் வகையில் புதிய சட்டமூலம் அமையுமென பிரதம மந்திரி ஸ்ரீபன் ஹாப்பர் கூறினார். ஆனால், ஏற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.