உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
இந்தோனேசியாவின் கடற்பரப்பில் மலேசிய விமான பாகங்கள் மிதப்பு ! ஆஸ்திரேலிய கடற்படை விரைவு! [Monday 2014-10-27 07:00] மலேசியத் தலைநகர் கோலாலம் பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பேருடன் கடந்த மார்ச் 8-ம் தேதி புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அந்த விமானம் ஆஸ்திரேலிய கடற் பரப்பில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக நடைபெறும் தேடுதல் வேட்டையில் இதுவரை எவ்வித தடயமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்தோனேசியாவின் கடற்பரப்பில் விமான பாகங்கள் மிதப்பதாகவும் அதனை உள்ளூர் மீனவர்கள் கண்டெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல்களை உறுதி செய்ய ஆஸ்திரேலிய கடற்படை வீரர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர். http://www.sei…
-
- 0 replies
- 626 views
-
-
இலங்கையில் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக சிங்கள பௌத்த தேசியவாதத்தை நிறுவிய முன்னோடிகளில் ஒருவராக வர்ணிக்கப்படும் அனகாரிக தர்மபாலவின் நினைவாக தபால் முத்திரை ஒன்றை இந்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இந்திய- இலங்கை உறவுகள் மேலும் நெருக்கமடையும் என்று நம்புவதாக தபால் முத்திரையை வெளியிட்டுவைத்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். சிங்கள பௌத்த தேசியவாதத்தை நிறுவியவர்களில் ஒருவரான அனகாரிக தர்மபால, இந்தியாவிலும் பௌத்த மதத்தை மீள உருவாக்க பங்காற்றியதாகவும் தபால் முத்திரையை வெளியிட்ட குடியரசுத் தலைவர் கூறினார். பிரித்தானிய காலனித்துவத்திற்கு எதிரான இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திரப் போராட்டத்தில் அனகாரிக தர்மபால முக்கிய பங்காற்றி…
-
- 0 replies
- 331 views
-
-
பாரசூட் மூலம் கீழே குதித்து ”கூகுள்” துணைத்தலைவர் புதிய சாதனை! வாஷிங்டன்: உலகத்தின் பிரபலமான சர்ச் இஞ்சினான கூகுளின் துணைத்தலைவர் பாராசூட் மூலமாக தரையில் குதித்து சாதனை புரிந்துள்ளார். அமெரிக்க கூகுள் செய்தி நிறுவனத்தின் சீனியர் துணை தலைவர் ஆலன் எஸ்டாஸ் . சமீபத்தில் இவர் அமெரிக்காவின் நியூமெக்சிகோவில் விண்ணில் இருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து சாதனை புரிந்தார். பாரகான் விண்வெளி வளர்ச்சி கார்ப்பரேஷன் இதற்கான போட்டி நடத்தியது. அதில் பங்கேற்க அவர் ஹீலியம் பலூனில் பூமிக்கு மேலே 40 கிலோ மீட்டர் உயரத்துக்கு பறந்து சென்றார். அங்கிருந்து பாராசூட் மூலம் மணிக்கு 1300 கிலோ மீட்டர் வேகத்தில் குதித்து சாதனை படைத்தார். இவர் 1 லட்சத்து 35 ஆயிரத்து 890 அடி உயர…
-
- 0 replies
- 508 views
-
-
உரிமை கோரி வீட்டுப் பணிப்பெண்கள் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டம் ஐக்கிய அரபு எமிரேட்டில் வீட்டுப் பணிப்பெண்களாக வேலை செய்யும் வெளிநாட்டுப் பெண்கள் பலர் பலவிதமான துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டு வருவதாக ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை கூறுகிறது. வீட்டுப் பணிப்பெண்கள், பிள்ளை வளர்க்க உதவும் பணிப்பெண்கள் போன்றவர்களுக்கு பேசப்பட்ட சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என்றும், அவர்களுடைய பாஸ்போர்ட் பறித்துவைத்துக்கொள்ளப்படுவதாகவும், வேலை செய்கிற நேரத்தில் அவர்களுக்கு ஒழுங்கான மருத்துவ உதவிகள் கிடைப்பதில்லை என்றும் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் உடல்ரீதியாகவும் பாலியல்ரீதியாகவும் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகிறார்கள் என்றும் ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அறிக்கை கூறு…
-
- 0 replies
- 454 views
-
-
'அமெரிக்கர்களுக்கு வழங்குவதைவிட ஆறில் ஒரு பங்கு ஊதியமே வழங்கப்பட்டுள்ளது' இந்திய ஊழியர்கள் எட்டு பேருக்கு குறைந்தபட்ச ஊதியத்துக்கும் மிகக் குறைவான சம்பளம் கொடுத்ததற்காக அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் மீது அந்நாட்டின் தொழிலாளர் நலன் திணைக்களம் அபராதம் விதித்துள்ளது. மணிக்கு 100 ரூபாய்க்கும் குறைவான சம்பளம் மட்டுமே கொடுத்து வாரத்துக்கு 122 மணி நேரங்கள் கணக்கில் இந்த ஊழியர்கள் வேலைவாங்கப்பட்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவு தொடர்பான அமெரிக்க சட்டங்களை 'தற்செயலாக தாங்கள் பின்பற்றத் தவறிவிட்டதாக' இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்துள்ள கலிஃபோர்னியாவின் சிலிக்…
-
- 0 replies
- 414 views
-
-
இராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். தீவிரவாத படையினர் குர்து படையின் வீராங்கனைகளை கண்டு அஞ்சி ஓடுகின்றனர். இராக், சிரியாவில் தற்போது ஷியா முஸ்லிம் தலைவர்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர். இதை எதிர்த்து சன்னி பிரிவைச் சேர்ந்த இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) கிளர்ச்சிப் படை உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகிறது. இரு நாடுகளிலும் பெரும் பகுதி ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ளது. ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள், குர்து சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து ஐ.எஸ். படை தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது அமெரிக்க உதவியுடன் குர்து படை வீரர்கள் ஐ.எஸ். படைக்கு எதிராக தீரமாகப் போரிட்டு வருகின்றனர். அண்மைக்காலமாக குர்து படைப் பிரிவில் பெண்கள் அதிகம் சேர்க்கப்பட்டு வரு…
-
- 0 replies
- 650 views
-
-
இன்னும் இருபது வருடங்களுக்குள்.. ஐக்கிய இராச்சியத்தின் இன்னொரு பிராந்தியமான வேர்ல்ஸ் தனிநாடாகும் என்று பிரச்சாரங்கள் இளைய சமூகத்தினரிடம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அண்மையில் ஸ்காட்லாந்து தனிநாடாவதற்கான கருத்துக் கணிப்பு சிறிய சதவீதத்தால் தோல்வி கண்டிருந்தாலும்.. ஸ்காட்லாந்து தனி நாடாவது நிச்சயம் ஓர் நாள் நடக்கும் என்று அந்தக் கோரிக்கையை முன் வைத்திருந்தவர்கள் தேர்தலின் பின் நம்பிக்கை வெளியிட்டு இருந்தனர். இப்போது.. வேர்ல்சிலும் அதே சுதந்திர தேசத்துக்கான குரல் எழ ஆரம்பித்துள்ளது. முன்னொரு காலத்தில்.. வேர்ல்ஸ்.. ஸ்காட்லாந்து.. இங்கிலாந்து.. ஐயர்லாந்து எல்லாமே தனி இராய்ச்சியங்களாக இருந்தன என்பதும் பின்னர் இங்கிலாந்தை ஆண்டவர்களால் அவை ஒரு நிர்வாக ஆட்சி அலகுக்குள் …
-
- 1 reply
- 402 views
-
-
ப.சிதம்பரம் | கோப்புப் படம் நேரு குடும்பத்தைச் சேராதவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகும் நாள் வரலாம் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் அதிகம் பேச வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்; கறுப்புப் பண விவகாரத்தில் பாஜக அரசு மீது அவர் கடுமையாக சாடியுள்ளார். தனியார் செய்தித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த ஜெய்ப்பூர் மாநாட்டில், ராகுல் காந்தியை கட்சியின் துணைத் தலைவராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்த முடிவு சரியானதுதான். தலைமையைப் பொறுத்தவரை, எனது தலைமுறையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கா…
-
- 2 replies
- 1.4k views
-
-
சுவிட்சர்லாந்து உட்பட பல வெளிநாடுகளில், கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள, தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களின் பட்டியலை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், தமிழகத்தை சேர்ந்த அரசியல் புள்ளிகள் சிலர், கலக்கம் அடைந்துள்ளனர்.இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், நான்கு பேர் இடம் பெற்றுள்ள தகவல், இவர்களை கதிகலங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பதிலடி: பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு பதவியேற்றதும், 'வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்க, நூறு நாட்களில் நடவடிக்கை எடுப்போம்' என, அறிவித்தனர். அதற்காக குழு ஒன்றையும் அமைத்தனர்.ஆனால், 'வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்போரின், பெயர்களை வெளியிடுவதில், சட்டச் சிக்கல் எழுந்துள்…
-
- 1 reply
- 424 views
-
-
ஆக்ரா என்றதும் உடன் நினைவுக்கு வருவது தாஜ்மஹால். இப்போது அங்கு இன்னொரு இடம் அங்கு வருபவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது அது 'ஷிரஸ் ஹாங் அவுட் காஃபே'. இது தாஜ்மஹால் கேட்வே எதிரில் இருக்கும் ஃபதேஹாபாத் சாலையில் அமைந்திருக்கிறது. இந்த காபி ஷாப் சமீபத்தில் அங்கு திறக்கப்பட்டுள்ளது. என்ன சிறப்பு என்றால் ஆசிட் வீச்சினால் பாதித்த இளம் பெண்களுக்கான 'ஸ்டாப் ஆசிட் அட்டாக்' எனும் அமைப்பும் சான்வ் (Chaanv) எனும் உள்ளூர் தொண்டு நிறுவனமும் இணைந்து இந்த காபி ஷாப்பை தொடங்கி உள்ளன. ஆசிட் வீச்சுக்கு முன் வண்ணமயமாக இருந்த அவர்களது வாழ்க்கை திடீரென ஒரு நொடியில் இருண்டு விடுகிறது. அதில் இருந்து அவர்கள் மீள்வது என்பது மிகவும் கடினம். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அவர்கள் அதிலிருந்து மீ…
-
- 1 reply
- 733 views
-
-
கனடாவில் ராணுவவீரர்களின் மீது நடக்கும் தொடர் தாக்குதல் நேற்றுமுன் தினம் மொன்றியல் நகரிலிருந்து 30 கி.மீற்றர் தொலைவில் உள்ள சென்ற் றீசெலு நகரில் இரு ராணுவத்தினர் வாகனத்தால் மோதி விபத்துக்குள்ளாக்கப்பட்டனர்.இன்றுகாலை ஒட்டாவா நகரின் மையத்தில் நாடாளுமன்றின் அருகில் போர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் மீண்டும் ஒரு சிப்பாய் சுடப்பட்டார்.இவ்விருதாக்குதலும் மிகவும் கச்சிதமாக நேர்த்தியாக திட்டமிடப்பட்டுள்ளது.இத் தாக்குதலை நடத்தியவர்களில் முதலாமவர் இடையிட்டு இஸ்லாத்தில் இணைந்த கியுபெக்கர்.இன்றைய தாக்குதலில் கறுப்பு இனத்தவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இதுவரை முஸ்லீம்கள் நேரடியாக சம்பந்தப்படவில்லை.இருந்தாலும் ஐஎஸ் ஐஎஸ்ன் பின் புலமிருப்பதாகத்தான் கருதுகின்றனர்.இதுவரை கால…
-
- 31 replies
- 2.1k views
-
-
அகமதாபாத்: அகமதாபாத், மும்பை, கொச்சி விமான நிலையங்களில் தற்கொலைப் படையினர் ஊடுருவி உள்ளதாக தகவல் பரவியதை அடுத்து விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உளவுத்துறை, அகமதாபாத் சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்திற்கு அளித்துள்ள தகவலில், ''25 ஆம் தேதி (நாளை) அதிகாலை, அகமதாபாத்தில் இருந்து மும்பை செல்லும் விமானத்திலும், மும்பையிலிருந்து கொச்சி செல்லும் விமானத்திலும் பயணிகளைப் போல தற்கொலைப் படையினர் ஊடுருவ உள்ளதாகத் தகவல் கிடைத்து உள்ளது. எனவே கூடுதல் பாதுகாப்பு, தீவிர சோதனைகளை மேற்கொள்ளவேண்டும்'' என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அகமதாபாத், கொச்சி, மும்பை ஆகிய விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் …
-
- 0 replies
- 511 views
-
-
சுவிஸ் வங்கிகள் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்குகளில் கருப்பு பணத்தை குவித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் குவித்துள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் இதுவரை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. இதை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது. ‘இந்தப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும், அது காங்கிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமையும்’ என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார். இதையும் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. இந்தநிலையில் இந்த விவகாரத்தில் பிரச்சினையில் சிக்காமல் தவிர்ப்பதற்காக சுவிஸ் வங்கிகள், கறுப்பு பண முதலைகளுக்கு நெருக்கடி கொடுத்துள்ளதாக தெரிய வந்…
-
- 1 reply
- 417 views
-
-
ஷூமாக்கர் குணமடைய 3 ஆண்டு ஆகலாம்: மருத்துவர் தகவல் பனிச்சறுக்கின்போது விபத்துக்குள்ளான முன்னாள் ஃபார்முலா 1 கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் முழுமையாக குணமடைய ஒன்று முதல் 3 ஆண்டுகள் வரை ஆகலாம் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் தெரிவித்துள்ளார். படுத்த படுக்கையாக இருக்கும் ஷூமாக்கருக்கு சிகிச்சை அளித்து வரும் பிரான்ஸ் டாக்டர் ஜியான் பிரான்காய்ஸ் மேலும் கூறுகையில், “கடந்த டிசம்பரில் விபத்துக்குள்ளானதில் இருந்தே அவரை நன்றாக பார்த்துக் கொள்ளும் அவருடைய மனைவி கோரின்னாவை பாராட்டுகிறேன். ஷூமாக்கரின் உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவர் குணமடைய நாம் காலஅவகாசம் கொடுக்க வேண்டும். அவர் குணமடைய ஒன்று முதல் 3 ஆண்டுகள் வரை ஆகலாம். அதுவரை அனைவரும் பொறுமை…
-
- 0 replies
- 395 views
-
-
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதி தெரிவித்தார். ஐ.நா. பொதுச் சபையில் "ஆயுத ஒழிப்பு மற்றும் சர்வதேச அமைதி' தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஆயுத ஒழிப்பு மாநாட்டுக்கான நிரந்தரப் பிரதிநிதி டி.பி. வெங்கடேஷ் வர்மா பங்கேற்றுப் பேசியதாவது.. அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. அதே நேரத்தில், அதில் பாரபட்சம் இருக்கக்கூடாது என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அணு ஆயுத விவகாரத்தைப் பொருத்தவரை, எந்த நாட்டின் மீதும் இந்தியா முதலில் அணு ஆயுதங்களைப் பிரயோகப்படுத்தாது. அதேபோல், அணு ஆயுதம் இல்லாத நாட்டின் மீதும் இந்தியா இத்தகைய தாக்குதலை நடத்தாது. இந்த இரண்டு விஷயங்களிலும் இந்தியா தெளிவாக உள்ள…
-
- 0 replies
- 375 views
-
-
எரிமலை சீற்றம் ஜப்பான் முழுதையும் அழித்து விடும்: ஆய்வில் திடுக்கிடும் தகவல். 2011ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள கியூஷூ தீவில் மவுண்ட் ஷின்மோடேக் வெடித்துச் சீறிய காட்சி. | படம்: ஏ.பி. ஜப்பானில் உள்ள பயங்கர எரிமலைகளில் சீற்றம் ஏற்பட்டால் அது ஜப்பான் முழுதையும் அழிக்கும் அபாயம் இருப்பதாக புவி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மிகப்பெரிய எரிமலை சீற்றத்தினால் அடுத்த நூற்றாண்டில் ஜப்பான் நாடு முழுதும் அழிந்து விடும் அபாயம் உள்ளது என்றும் 127 மில்லியன் மக்கள் தொகைக்கு பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் புதிய ஆய்வு ஒன்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து கோபே பல்கலைக் கழக புவி விஞ்ஞான ஆய்வுத்துறை பேராசிரியர் யொஷியுகி டட்சுமி கூறும்போது, “மிகப்பெரிய எரிமலை சீற்றம் ஜ…
-
- 0 replies
- 419 views
-
-
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்ககோரி போகோஹராம் தீவிரவாதிகளுக்கு மலாலா வேண்டுகோள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சிறுமி மலாலாவுக்கு அமெரிக்கா தனது நாட்டின் உயரிய விருதான லிபர்டி விருதை வழங்கி கவுரவித்தது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுடன் அவருக்கு 61 லட்ச ரூபாய் பணமும் வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட மலாலா மேடையில் உரையாற்றும்போது, இந்த பணம் முழுவதையும் தான் பிறந்த நாடான பாகிஸ்தானில் உள்ள ஏழை சிறுவர் மற்றும் சிறுமியர்கள் கல்வி பயில செலவிட உள்ளதாக மலாலா கூறியுள்ளார். மேலும் நைஜீரியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட மாணவிகளை போகோஹராம் தீவிரவாதிகள் விடுவிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். http:…
-
- 3 replies
- 385 views
-
-
குர்தீஸ் ஆண்களும் பெண்களும் இஸ்லாமிய ராட்சியத்துக்கு எதிராக போராடுகிறார்கள்
-
- 0 replies
- 438 views
-
-
செல்ஸீ அணியின் கால்பந்து வீரர் பெயரில் மோசடி செய்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து அணி செல்ஸீயின் வீரரான கயே ககுதா பெயரில் ஏமாற்றித் திரிந்த மற்றொரு கால்பந்து வீரருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேடி அபாலிம்பா (25) என்ற இவரும் கால்பந்து வீரர்தான். இவர் டெர்பி கவுண்டிக்காக முன்பு விளையாடியவர். வாரம் 20,000 பவுண்டுகள் அப்போது அபாலிம்பா சம்பாதித்தார். ஆனால் இவரது கவனம் கால்பந்தாட்டத்தில் இல்லை. ஒழுக்கமற்று திரிந்ததால் இவரது கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் செல்ஸீ வீரர் கயேல் ககுதாவின் ஏஜெண்ட் என்று கூறி மேடி அபாலிம்பா சிலபல வசதிகளை அனுபவித்துள்ளார். பிறகு கயேல் ககுதாவே நான் தான் என்று ஏமாற்றியுள்ளார். …
-
- 0 replies
- 454 views
-
-
பெங்களூரூ: கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் தனியார் பள்ளி ஒன்றில் 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ஜலாஹல்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3 வயது சிறுடு காலையில் பள்ளி சென்றவர், மாலையில் வீடு திரும்பிய போது காய்ச்சலுடன் காணப்பட்டதோடு, தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளார். சிறுமிக்கு உடல் குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவரிடம் சென்ற பெற்றோர், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து பள்ளிக்கு ச…
-
- 1 reply
- 386 views
-
-
எனது காதலியை தொடாதே என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை நேருக்கு நேராக இளைஞர் ஒருவர் எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவது அமெரிக்காவின் சிகாகோ நகரில் மார்டின் லூதர் கிங் சமுதாய மையத்தில் ஆளுநர் தேர்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றுகொண்டிருந்தா போது ஒபாமாவும் அவர் அருகே ஆயியா கூப்பர் என்ற 20 வயது இளம் பெண்ணும் வாக்களித்துக்கொண்டிருந்தனர். இதன் போது சிரித்த முகத்துடன் வாக்களித்துக்கொண்டிருந்த பெண்ணை பார்த்த ஒபாமா ஆர்வமிகுதியில் அப்பெண்ணை கட்டிபிடித்து முத்தமிட்டார். இதனை அருகே பார்த்துக்கொண்டிருந்த அவரது காதலன் மைக் ஜோன்ஸ் எச்சரிலடைந்து, உடனே ஒபாமாவை நேருக்கு நேராக பார்த்து மிஸ்டர் பிரஸிடென்ட் எனது காதலியை தொடாதீங்க என எச்சரிப்பது …
-
- 4 replies
- 1.1k views
-
-
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், வழக்கமான தனது அதிகாரபூர்வ தீபாவளி விருந்தை அளித்து, தீபாவளி கொண்டாடினார். இங்கிலாந்தில் உள்ள தனது இல்லத்தில், தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடிய டேவிட் கேமரூன், இங்கிலாந்தில் வாழும் 8 லட்சத்துக்கும் அதிகமான ஹிந்துக்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். நாட்டின் வளர்ச்சியில் தங்களது பங்களிப்பை நல்கியுள்ள ஹிந்துக்களுக்கு தீபங்களின் விழாவான இன்று தனது மனமார்ந்த வாழ்த்துகள் என்றும், நமது நாட்டின் வளர்ச்சியில் தோள்கொடுத்துள்ள ஹிந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=119129&category=WorldNews&language=tamil
-
- 1 reply
- 390 views
-
-
பெண்கள் அணியும் லெக்கிங்ஸ் ஆடையில் இந்து கடவுள்களின் உருவப் படங்களை அச்சிட்டமை பெரும் சர்ச்சையை தோன்றியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அமேசான் ஆடைத்தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் பெண்கள் அணியும் உடைகளுள் ஒன்றான லெக்கிங்ஸ் உடையில் இந்து மத கடவுள்களான பிள்ளையார், சிவன், பிரம்மா, விஷ்ணு, முருகன், அனுமான், ராமர், ராதா கிருஷ்ணர், காளி ஆகிய தெய்வங்களின் படங்களை தொடைப்பகுதியில் வரும்படி டிசைன் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த டிசைன்கள் அமெரிக்காவில் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்து கடவுள்களை அமேசான் நிறுவனம் அவமதித்துவிட்டதாக அங்குள்ள இந்துமத அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இந்துமத தலைவர் ராஜன் சேத் என்பவர் வெளி…
-
- 26 replies
- 2.8k views
-
-
வில்லியம் – கேத் மிடில்டனின் "பேபி நம்பர் 2" – ஏப்ரலில் "ரிலீஸ்"! லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேத் மிடில்டன் தம்பதியினரின் 2 ஆவது குழந்தை வரும் ஏப்ரலில் பிறக்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேத் மிடில்டன் தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஜார்ஜ் என பெயர் சூட்டியுள்ளனர். வில்லியம் – கேத் மிடில்டனின் இந்த நிலையில் இளவரசி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து இக்குழந்தை வருகிற ஏப்ரல் மாதம் பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ராணி எலிசபெத்தின் 89 ஆவது பிறந்த நாளான ஏப்ரல் 21 அல்லது இளவரசர் வில்லிய…
-
- 0 replies
- 422 views
-
-
காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் 'பிளேட் ரன்னர்' ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டு சிறை! பிரிட்டோியா, தென் ஆப்பிரிக்கா: காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை தனது வீட்டில் வைத்து சுட்டுக் கொன்ற வழக்கில் தென் ஆப்பிரிக்க பாராலிம்பிக் வீரரும், 'பிளேட் ரன்னர்' என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு காதலர் தினத்தின்போது நடந்த பயங்கர சம்பவத்தில் ரீவாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் பிஸ்டோரியஸ். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் இது. காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் 'பிளேட் ரன்னர்' ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டு சிறை! இந்த வழக்கு பிரிட்டோரியாவில் நீதிபதி தோகோஸைல் மசிபா முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. தற்…
-
- 0 replies
- 329 views
-