உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26907 topics in this forum
-
ஜெரூசலத்தில் யூத வழிபாட்டிடத்தில் தாக்குதல் ஜெரூசலத்தில் கடந்த பல வருடங்களில் நடந்த மிகவும் மோசமான தாக்குதலாக கருத்தப்படும் ஒன்றில், யூத வழிபாட்டிடம் ஒன்றில் துப்பாக்கிகள் மற்றும் இறைச்சி வெட்டும் கத்தி ஆகியவற்றுடன் நுழைந்த இரு பாலத்தீனர்கள், அங்கு வழிபாட்டாளர்கள் 4 பேரைக் கொன்றதுடன் மேலும் பலரைக் காயப்படுத்தியுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் மூவர் இஸ்ரேலிய அமெரிக்க இரட்டை குடியுரிமைகளை கொண்டவர்களாவர். அடுத்தவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இஸ்ரேலியராவார். தாக்குதலாளிகள் இருவரையும் போலிஸார் சுட்டுக்கொன்றார்கள். இந்த வன்செயலை தூண்டியதாக பாலத்தீன தலைவர்கள் மீது குற்றஞ்சாட்டிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இதற்கு கடுமையான பதிலடி தரப்படும் என்று கூறியுள்ளார். சுயபாதுக…
-
- 1 reply
- 397 views
-
-
இந்தியாவில் எபோலா பாதித்த ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார் -- (படத்தில் எபோலா சிகிச்சையில் மருத்துவர்கள், ஆவணப்படம்) லைபீரியாவிலிருந்து இந்தியா திரும்பிய இந்தியப் பிரஜை ஒருவருக்கு எபோலா தொற்று இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். லைபீரியாவில் இருந்தபோது இந்த நோய் தொற்றிய இந்த 26 வயது ஆணுக்கு அவர் அங்கிருந்த போதே உடல்நிலை சரியாகிவிட்டது என்று இந்திய சுகாதார அமைச்சகம் கூறியது. கடந்த வாரம் டில்லிக்கு விமானம் மூலம் வந்த இவர்மீது , உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளின்படி செய்யப்பட்ட பரிசோதனைகளில், எந்த ஒரு வைரஸ் தொற்றும் இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் நடத்தப்பட்ட பர…
-
- 0 replies
- 450 views
-
-
கொலம்பிய கால்பந்து வீரர் எஸ்கோபார் | கோப்புப்படம் கொலம்பியாவைப் பற்றி அறியத் தொடங்குவதற்குமுன் அது தொடர்பாக எழக்கூடிய ஒரு குழப்பத்தைத் தீர்த்துக் கொண்டுவிடலாம். ‘’நாங்கள்தான் கொலம்பியா. கொலம்பியாதான் நாங்கள்’’. ஒபாமாவை ஜனாதிபதியாகக் கொண்ட நாட்டினர் இப்படிச் சொல்வதுண்டு. கொலம்பியா என்பது ஒரு பெண்ணின் பெயர். தங்கள் நாட்டைப் பெண்மையின் வடிவமாகப் பார்ப்பதில் அந்த மக்களுக்கு மகிழ்ச்சி. கொலம்பியா பல்கலைக்கழகம், கொலம்பியா நதி, கொலம்பியா மாவட்டம் இத்தனையும் யு.எஸ்.ஏ.வில் உள்ளன. தலைநகரத்தின் பெயரே வாஷிங்டன் D.C. (டி.ஸி.யின் விரிவு டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா). ஆனால் இந்தத் தொடரில் கொலம்பியா என்று நாம் குறிப்பிடுவது ஒரு தேசத்தை. தென் அமெரிக்காவின் நான்காவது பெரிய நாடு இது. அ…
-
- 4 replies
- 1.5k views
-
-
சென்னை, பயிற்சிக்காக சென்னை வந்துள்ள கொரியா நாட்டு கடற்படை வீரர்கள் மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தினர். கொரியா நாட்டு வீரர்கள் இந்தியாவின் கடற்படை போர் யுக்திகளை தெரிந்துகொள்வதற்காக தென் கொரியாவில் இருந்து 2 போர்க்கப்பல்கள் நேற்றுமுன்தினம் சென்னை துறைமுகத்துக்கு வந்தன. கடற்படையை பலப்படுத்துவதற்காகவும், பல்வேறு நாடுகளுடன் நட்புறவை பேணுவதற்காகவும் கொரியாவில் இருந்து 600-க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் வந்துள்ளனர். முதற்கட்டமாக, கொரியா நாட்டு கப்பற்படை வீரர்கள் நேற்று மெரினா கடற்கரையில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 600 கொரியா கடற்படை வீரர்கள், 400 இந்தியா கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் சேர்ந்து கடற்கரை முழுவதும் கிடந்த குப்பைகளை அள…
-
- 0 replies
- 390 views
-
-
ஜப்பானில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலை பொதுமக்களுடன் இணைந்து சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை தங்களுக்கு பெரும் த்ரில்லை கொடுத்ததாக பயணிகள் தெரிவித்தனர். ஜப்பானில் 'floating maglev' என்ற புதிய ரயில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 500 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ரயில் பொதுமக்களின் உதவியோடு சோதனை ஓட்டம் செய்ய ஜப்பான் ரயில்வே துறை முடிவு செய்தது. அதன்படி ஒருசில குறிப்பிட்ட பயணிகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு இந்த சோதனை ஓட்டத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதில் சில குழந்தைகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. நூறு பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்த 'floating maglev' ஜப்பான் தலைநகர் டோக்கியோ முதல் …
-
- 0 replies
- 403 views
-
-
புதுடெல்லி: உடல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட பொருட்களை ஆன் லைன் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களில், ஆண்களைக் காட்டிலும் பெண்களே முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக ஆன் லைன் நிறுவனங்கள் நடத்திய கணக்கெடுப்பில், ஆன் லைன் சந்தை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிவேக போட்டியில் இறங்கி உள்ளன.இதனால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வயது வந்தோருக்கான பாலியல் மருந்துகள், மாத்திரைகள் மற்றும் செக்ஸ் டாய்ஸ் ஆகியவை அதிக அளவில் வாடிக்கையாளர்களால் வாங்கப்படுகின்றன. அதிலும் ஐ.டி. செக்டாரில் பணிபுரிவோர் மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை இதற்கென செலவு செய்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
காத்மண்டு, இந்தியாவால் வழங்கப்பட்ட குண்டு துளைக்காத காரை ஏற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் மறுத்துவிட்டார் என்று நேபாள அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. சார்க் என்னும் தெற்காசிய பிராந்திய நாடுகள் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு அடுத்த வாரம் நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடக்க இருக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு, நேபாளம் ஆகிய 8 நாடுகள் கலந்து கொள்கின்றன. சார்க் மாநாட்டின்போது, இந்த 8 நாடுகளின் தலைவர்களும் இரு தரப்பு நட்புறவு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கமான ஒன்று. எனவே, பிரதமர் நரேந்திர மோடி, சார்க் நாடுகளின் தலைவர்களை உச்சி மாநாட்டில் சந்திக்கும்போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் சந…
-
- 0 replies
- 408 views
-
-
சர்க்கில் இன்ஸ்பெக்டர் கள்ளக்காதலனுடன் ஹோட்டல் அறையில் உல்லாசமாக இருந்த சப்.இன்ஸ்பெக்டர் மனைவியை கையும் களவுமாக பிடித்துள்ளார் சாப்ட்வேர் எஞ்ஜீனியர் கணவர். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கரிம்நகர் 3-வது டவுன் போலீஸ் நிலையத்தில் சர்க்கில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சுவாமி (35).இவருக்கும், வரங்கல் போலீஸ் நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஜீவிதாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நீண்ட காலமாக கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் கரிம்நகர் 3-வது டவுன் போலீஸ் நிலையத்தில் சர்க்கில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சுவாமி (35).இவருக்கும், வரங்கல் போலீஸ் நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணி…
-
- 2 replies
- 938 views
-
-
உலகம் முழுவதும் புரட்சிகர சக்திகளுக்கு உந்துதலாகத் திகழும் சேகுவாரா கியூப பொலிவிய இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்ட சேகுவாரா ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டார். இந்நிலையில் கடந்த 1967ஆம் ஆண்டு கியூப பொலிவிய இராணுவத்தால் சேகுவாரா சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பிறகு, அவரது உடல் இரகசிய இடத்தில் புதைக்கப்பட்டது. அப்போது புகைப்பட கலைஞர் ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பொலிவியாவில் மத போதகர் லூயிஸ் கார்டேரா என்பவரிடம் இருந்தன. 2012ஆம் ஆண்டில் அந்த மத போதகர் இறந்த போது, அவரது உடைமைகளை உறவினர்கள் சோதனையிட்டதில், சேகுவாராவின் புகைப்படங்கள் இருந்தது தெரிய வந்தது.…
-
- 4 replies
- 9.9k views
-
-
சமீபத்தில் ஓர் தொண்டு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரிட்டனில் சராசரி நபர் ஒருவர் தனது வாழ்நாளில் அல்கொஹொலுக்காக செலவழிக்கும் தொகை குறைந்தது 50 000 பவுண்ட்ஸ் எனக் கணிப்பிடப் பட்டுள்ளது. மேலும் ஏனைய பாகங்களை விட லண்டனில் மதுபானம் அருந்துபவர்கள் அதிகம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மக்மில்லன் புற்றுநோய் எதிர்ப்பு அறக்கட்டளையான இவ்வமைப்பு 18 வயதுக்கு மேற்பட்ட 2000 பேரிடம் மேற்கொண்ட திறந்த கருத்துக் கணிப்பில் ஒவ்வொரு பிரிட்டன் குடிமகனும் 787 பவுண்டுக்கள் மதுபானத்துக்காக ஒவ்வொரு வருடமும் சராசரியாக செலவழிக்கின்றனர் எனக் கண்டு பிடித்துள்ளது. இதில் ஆண்கள் செலவழிக்கும் தொகை 934.44 பவுண்டுக்கள் என்றும் பெண்கள் செலவழிக்கும் தொகை 678.60 பவுண்டுக்கள் என்றும் கூடத் தெரிவிக்க…
-
- 0 replies
- 205 views
-
-
அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே முஸ்லிம்கள் அதனைக் கண்டுபிடித்துவிட்டார்கள் என துருக்கிய அதிபர் ரெஜெப் தையிப் எர்தோஆன் தெரிவித்துள்ளார். துருக்கியப் பிரதமர் ரெஜெப் தையிப் எர்தோஆன் லத்தீன அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்களின் மாநாடு ஒன்றில் உரையாற்றிய எர்தோஆன், 1492ஆம் ஆண்டு கொலபம்பஸ் அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடந்ததற்கு மூன்று நூற்றாண்டுகள் முன்பாக 1178ஆம் ஆண்டிலேயே முஸ்லிம் மாலுமிகள் அமெரிக்காவை அடைந்திருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார். கூபா நாட்டில் மலை மேடொன்றில் பள்ளிவாசல் ஒன்று இருந்ததை தனது நாட்குறிப்பில் கொலம்பஸ் பதிந்துள்ளார் என எர்தோஆன் கூறினார். இயற்கையாக நில அமைப்பில் தென்பட்ட ஒரு வடிவத்தை கொலம்பஸ் அவ்வாறாக உருவகப்படுத்தி சொல்ல…
-
- 0 replies
- 404 views
-
-
ஜெர்மன் மொழி கற்பித்தலை கைவிட வேண்டாம்: மோடியிடம் மெர்கல் கோரிக்கை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப் பாடம் கற்பித்தலை கைவிட வேண்டாம் என பிரதமர் மோடியிடம் ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் கோரிக்கை விடுத்துள்ளார். பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது அவர் மோடியிடம், "இந்தியாவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப்பாடத்தை கைவிட்டு, அதற்கு பதிலாக சமஸ்கிருதப் பாடத்தைக் கற்றுத்தர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என கோரியுள்ளார். அதற்கு பதிலளித்த மோடி, "இந்திய அமைப்புக்கு உட்பட்டு …
-
- 5 replies
- 632 views
-
-
புதுடில்லி: உலகிலேயே, இரண்டாவது நீளமான, அதிவேக ரயில் பாதையை, டில்லி - சென்னை இடையே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்தால், ஆறு மணி நேரத்தில், டில்லியில் இருந்து சென்னை வந்து விடலாம். புதிய ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுரேஷ் பிரபு, தற்போது, பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தாலும், அமைச்சராக பதவியேற்ற பின், டில்லியில் இருந்த சில நாட்களில், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதுபற்றிய விவரங்கள், தற்போது ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி, உலகிலேயே, இரண்டாவது நீளமான, அதிவேக ரயில் பாதை, டில்லி - சென்னை இடையே, 1,754 கி.மீ., தூரத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மணிக்கு, 300 கி.மீ.,: இந்த அ…
-
- 0 replies
- 434 views
-
-
http://m.vikatan.com/tiny/gallery.php?module=cinema&cinema_gallary=7237
-
- 4 replies
- 1.8k views
-
-
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் அரசு படைகளுக்கும் இடையே போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், அங்கு கடந்த சில நாட்களாக மீண்டும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. கிளர்ச்சியாளர்களுக்கு, வீரர்களை அனுப்பியும், ஆயுதங்களை வழங்கியும் ரஷியா உதவி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் ஜி-20 நாடுகளின் மாநாட்டுக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ரஷியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது - ‘உக்ரைன் நாட்டை ஒரு சுதந்திர நாடாக செயல்பட ரஷியா அனுமதிக்கும் என நான் இன்னும் நம்புகிறேன். உக்ரைனின் சுதந்திர விவகாரத்தில் சாதகமான போக்கை ரஷியா கையாண்டால்,…
-
- 0 replies
- 218 views
-
-
பிரான்சில் பொதுமக்களால் காணப்பட்ட புலி ஒன்றைப் பிடிக்க பொலிஸ், தீயணைப்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். பாரிஸ் நகரின் அருகே உள்ள மாண்டிவ்ரேய்ன் என்ற நகர் அருகே உள்ள பெருவணிக வளாகத்தின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இந்தப் புலி தென்பட்டதாக பெண் ஒருவர் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். இதைடுத்து, பொலிசாரும் தீயணைப்பு வீரர்களும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் அப்பகுதியில் இந்தப் புலியைத் தேட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விலங்கின் கால் தடங்களைப் பார்வையிட்ட வல்லுநர்கள், இது ஒரு இளம் புலியின் கால் தடங்களை ஒத்ததாக இருப்பதாகக் கூறினர். மேலும், இந்தப்புலி எங்கிருந்து வந்தது என்பது இன்னும் தெளிவாகவில்லை என…
-
- 0 replies
- 439 views
-
-
ஆங்கிலேயர் பார்த்த தமிழர்கள் தமிழர்களே அல்ல !! அப்பொழுது தெலுங்கரும், மலையாளியும், மராத்தியனும் தான் அப்பொழுது தமிழர்களாக அவர்கள் கண்ணில்.தென்பட்டான்.. ஏன்னெனில் தமிழர்கள் அப்பொழுது#கூலித்தொழிலாளர்களாகவும்,#அடிமைகளாகவும் தான் அப்பொழுது இருந்தான். கடலியல் #ஆய்வறிஞர் ஒரிசா பாலு அவர்கள் தமிழர்களின் கடல்சார்தொன்மை தொடர்பான ஆய்வுகளை தொடர்ந்து செய்து வருபவர். தமிழர்கள் கடல் சார் மரபு மற்றும் சுற்று சூழலை காக்க வேண்டு என்பதில் உறுதியாக இருந்து தமிழகம் முழுவதும் காணொளி காட்சிகள் நடத்தி வருபவர். முகநூல் மூலமாகவும் விழிப்புணர்வு செய்து வருகிறார். இவரிடம் நாம் அறிந்து கொள்ளவேண்டிய செய்திகள் அதிகம் இருக்கின்றன . ஆர்வமுள்ள இளைஞர்கள் இவரை பின்தொடரவேண்டும். நன்றி : அண்ணன் சீமான் …
-
- 2 replies
- 590 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது நிறைவேற்றதிகார செயற்பாட்டினூடாக அமெரிக்க குடிவரவு முறையில் கொண்டு வரவுள்ள பிரதான மாற்றங்கள் குறித்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன. அமெரிக்காவில் சட்டபூர்வ வதிவிட உரிமை பெற்றுள்ளவர்கள் சிலரது பெற்றோருக்கு நாடு கடத்தப்படுவதிலிருந்தான பாதுகாப்பை விரிவுபடுத்த பராக் ஒபாமா திட்டமிட்டுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் மற்றும் பொக்ஸ் நியூஸ் ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன. மேற்படி திட்டமானது நாடு கடத்தப்படுவதால் குடும்பங்கள் பிளவடைவதை தடுப்பதை நோக்காக கொண்டது.குறிப்பிட்ட தனிநபர் அமெரிக்காவில் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பதை இந்த திட்டம் அடிப்…
-
- 0 replies
- 236 views
-
-
இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் இன்று காலை கடலுக்கு அடியில் 7.3 ரிக்டர் அளவுக்கு மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 300 கி.மீ. சுற்றுப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சுனாமி அலைகள் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸை ஆகிய நாடுகளையே சிறிய அளவில் தாக்கலாம் என்றும், இந்தியா- அந்தமானுக்கு பாதிப்பு இருக்காது என்றும் தெரிகிறது. கிழக்குப் பகுதியில் உள்ள கோடா டெர்னேட் என்ற தீவின் வட மேற்கே 154 கி.மீ. தூரத்தில் கடலுக்கு அடியில் 47 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை உயிர்ச் சேதங்கள், பொருட் சேதங்கள் குறித்து தகவல் ஏதும தகவல்கள் இல்லை. ஆனால், இந்த மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் …
-
- 0 replies
- 386 views
-
-
சுல்தான் காஃபூஸ் பின் செய்த் (Qaboos bin Said al Said) என்ற ஓமானின் அரசர் உடல்நலமின்றி இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. தற்சமயம் ஜெர்மனியில் புற்றுநோய்க்கு மருத்துவம் பார்த்து வருவதாகத் தெரிகிறது. ஓமான் சுல்தானின் நலன் விரும்பும் இந்தியர்களின் முயற்சியாக, சுல்தான் காபூஸ் அவர்கள் விரைவில் நலம்பெற வேண்டி, பெங்களூரைச் சேர்ந்த சந்திரசேகர் ஸ்வாமி என்ற ஜோதிடர் தலைமையில் 22 மந்திர விற்பன்னர்கள் குழு ஓமானில் அரச விருந்தினர்களாகத் தங்கி யாகம் நடத்துகின்றனர். சுல்தான் இஸ்லாமியராய் இருக்கும்போது, இது எப்படி எனக் கேள்வி எழலாம். இந்த யாகம் சுல்தானின் வேண்டுகோளின்படி நடத்தப்படும் யாகம் அல்ல. மாறாக, அவரது நலம்விரும்பிகளால் நடத்தப்படுகிறது. மத நல்லிணக்கத்தைக் கொள்கையாகக் கொண்ட சுல்தா…
-
- 0 replies
- 526 views
-
-
பெங்களூரு மத்தியச் சிறைச்சாலையில் பெண் குற்றவாளிகளைக் கட்டாயப்படுத்தி ஆண் சிறைப் பாதுகாவலர்கள் உடலுறவு வைத்து கொள்வதாகக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் 15 பெண் கைதிகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், 3 பெண் கைதிகள் சாதாரணத் சிறைத்தண்டனையும் அனுபவித்து வருகின்றனர். இந்த சிறைச்சாலையில் செக்ஸ் தொல்லைகளும் பல்வேறுக் கொடுமைகளும் நடப்பதாக அங்குள்ள பெண் கைதிகள் கர்நாடகத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர். குறைத் தீர்க்கும் பெட்டியில் இருந்து இவ்வாறு 2 கடிதங்களை நீதிபதிகள் எடுத்துள்ளனர். ஒரு கடிதத்தில் ஆண் கைதிகளிடம் லஞ்சம் பெறும் வார்டன்கள் மற்றும் சிறை அதிகாரிகளின் பெயர்கள் கொண்ட பட்டியல் இடம் பெற்றுள்ளது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அந்த க…
-
- 2 replies
- 893 views
-
-
ஐ எஸ் ஐ எஸ் இடம் உள்ள ஆயுதங்கள் FIM-92 Stinger MANPADs ISIS fighters acquired a host of American Stinger missiles from ravaged Iraqi basis, according to Fox News. The Stinger is lightweight and easy to use, and can be operated from the shoulder of a single soldier, making it no small threat. - See more at: http://www.thefiscaltimes.com/Media/Slideshow/2014/10/16/9-ISIS-Weapons-Will-Shock-You?page=2&utm_source=taboola&utm_medium=referral&utm_term=oneindia-oneindiatamil#sthash.HzkAky6C.dpuf Type 59 Artillery Also known by the slightly less succinct name "130 mm towed field gun M-46 M1954," the Type 59 came out of the Soviet Union in the…
-
- 0 replies
- 632 views
-
-
இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மௌலான கடலின் கிழக்கு திசையில், கடலுக்கடியில் 300 கிலோமீற்றர் தூரத்தில் 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆசிய பசுபிக் சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையம் அறிவித்துள்ளது. http://www.pathivu.com/news/35372/85/7-3/d,article_full.aspx
-
- 1 reply
- 558 views
-
-
இந்த கிரிஸ்துமஸ் விளம்பரம் நிச்சயம் உங்கள் மனதைத் தொடும்! - வீடியோ இந்த கிரிஸ்துமஸ் விளம்பரம் நிச்சயம் உங்கள் மனதைத் தொடும் - சொல்லிவிட்டுச் செல்லும் கருத்தியல் அவ்வளவு அழகானது. முதலாம் உலக மகா யுத்தத்தை அடிப்படையாக கொண்ட கிரிஸ்துமஸ்த் விளம்பரம் இது. ஒரு கிரிஸ்துமஸ் விடுமுறை எவ்வளவு பெறுமதியானது என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறது. இப்படியே உலகம் இருந்திருந்தால், என எண்ணத் தோன்றுகிறது இவ்விளம்பரத்தை பார்த்து முடிக்கையில். ஆனால் இவ்விளம்பரத்திற்கு எதிராக 240 முறைப்பாடுகள் பதியப்பட்டிருக்கின்றன. காரணம் இவ்விளம்பரத்தை உருவாக்கிய Sainsbury நிறுவனம் இங்கிலாந்தின் பிரபலமான சூப்பர்மார்க்கெட் கூட்டுச்சங்கமாகும். தமது பெயரை பிரபலப்படுத்த உலகமகா யுத்தத்தை தேவையில்லாமல் துஷ்ப…
-
- 0 replies
- 801 views
-
-
பாரிஸ் நகர் அருகே தென்பட்ட புலி பிரான்சில், தலைநகர் பாரிஸ் அருகே சூப்பர் மார்க்கெட் அருகே பொதுமக்களால் காணப்பட்ட புலி ஒன்றைப் பிடிக்க போலிஸ், தீயணைப்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையை நடத்திவருகின்றனர். பாரிஸ் நகரின் அருகே உள்ள மாண்டிவ்ரேய்ன் என்ற நகர் அருகே உள்ள பெருவணிக வளாகம் ஒன்றின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இந்தப் புலி தென்பட்டதாக ஒரு பெண் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். இதனை அடுத்து, போலிசாரும் தீயணைப்பு வீரர்களும் அப்பகுதியில் இந்தப் புலியைத் தேட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஹெலிகாப்டர்களும் இந்தத் தேடல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த விலங்கின் கால் தடங்களைப் பார்வையிட்ட வல்லுநர்கள், இது ஒரு இளம் புலியின் கால் தட…
-
- 12 replies
- 848 views
-