Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டெல்லியில் இணைய மாநாட்டில் பங்கேற்று பேசிய மார்க் ஸக்கர்பெர்க்.| படம்: ராஜீவ் பட். இந்திய கிராமங்களை இணையத்தால் இணைக்கும் முயற்சிக்கு ஃபேஸ்புக் உதவத் தயாராக இருப்பதாக, டெல்லியில் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்தார். டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் இணைய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் இன்று (வியாழக்கிழமை) காலை இந்தியா வந்தார். இணைய மாநாட்டில் கலந்துகொண்டு அவர் பேசும்போது, "திறனுக்கு வரம்பே இல்லாத அற்புதமான நாடு இந்தியா. சாதிக்க வேண்டும் என்பவர்களுக்கு இந்தியா சிறந்த களம். அந்த வகையில் ஃபேஸ்புக் வளர்ச்சிக்கு இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளது. இங்கு மென்மேலும் பல வளர்ச்சியை ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம். இது தொடர்பாக ந…

  2. 'சே' என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் சே குவேரா ஆர்ஜென்ரீனாவில் 1928ஆம் ஆண்டு பிறந்தார். அக்காலத்திய ஆர்ஜென்ரீனா வறுமையிலும் அதன் விளைவாக சுகாதார முறைகளிலும் பின்தங்கியிருந்தது. இதன்விளைவாக சே பிறந்த ஒரு சில மாதங்களிலேயே ஆஸ்துமா நோயால் பீடிக்கப்பட்டார். மருத்துவம் படித்து ஒரு சிறந்த மருத்துவராக சேவை புரிந்து பின்னாளில் மார்க்சியச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு புரட்சியாளாராக மாறினார். கியூபாவிற்குச் சென்று அந்நாட்டின் புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மாபெரும் போராளி. அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளையும் விடுதலைசெய்ய பயணித்தபோது தென்பொலிவியக் காடுகளில் அமெரிக்கா ஏகாதிபத்தியவாதிகளாலும் பொலிவிய படைகளினாலும் சதித்தனமான முறையில் கொல்லப்பட்டார். கியூபாவின் விடுதலையி…

  3. ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியையொட்டி அமைந்திருக்கும் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இன்றும் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் பலியாகினர். இதனால் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சம்பா பகுதியையொட்டிய பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. பலியான 2 பேரில் ஒருவர் பெண் ஆவார். எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு இந்திய படையினர் தக்க பதிலடி கொடுத்துவருவதாகவும், எல்லைப்பகுதியையொட்டிய வீடுகளில் வசிப்பவர்களை வீட்டிற்குள் பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் எல்லை பாதுகாப்பு படை உயரதிகாரி டி.கே. பதக் தெரிவித்துள்ளார். இரு தரப்பு த…

  4. இந்திய-பாகிஸ்தான் மோதல் ; அமெரிக்கா கவலை இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியபோது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே தாக்குதல்கள் நடைபெறுவது மிகவும் கவலை அளிக்கிறது. இந்தப் பிரச்னைக்கு இந்தியா, பாகிஸ்தான் அரசுகள் பேச்சுவார்த்தை மூலம் உடனடித் தீர்வு காண வேண்டும்.காஷ்மீர் குறித்த எங்களது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை.அந்த விவகாரம் குறித்து இந்தியாவும், பாகிஸ்தானும்தான் பேசி முடிவெடுக்கவேண்டும் என்றார் அவர். http://www.tamilnewsbbc.com/2014/10/07/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%…

    • 0 replies
    • 819 views
  5. தமிழகத்தில் 60,000 ஆண்டுகள் பழமையான மனிதன்! இந்தியா என்னும் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டைச் சேர்ந்த விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத் திருக்கின்றது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர். ராமஸ்வாமி பிச்சப்பன் மற்றும் சில இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மதுரையில் இருந்து சுமார் அய்ம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோதிமாணிக்கம் என்ற சிறிய குக்கிராமத்தில் வாழ்ந்து வரும் இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆப்ரிகாவிலிருந்து இந்தியாவிற்கு குடி பெயர்ந்த பூர்வகுடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர். ‘‘M130’’ எனப்படும்…

  6. பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென பல்டி அடித்தபோதிலும் கூட, நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. முன்னதாக நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டதாக செய்திகள் பரவின. ஆனால் அது தவறு என்று தற்போது தெரிய வந்துள்ளது. முன்னதாக இன்று முற்பகல் நடந்த விவாதத்தின்போது, ஜெயலலிதாவின் உடல் நிலையைக் காரணமாக வைத்து அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் அவருக்கு 4 ஆண்டு தண்டனைதான் என்பதால் அரசு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை என்றும் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதிட்டார். மேலும் லாலு பிரசாத் வழக்கில்…

  7. கிரீன்பீஸ் அமைப்பு நியாயமாகச் சில கேள்விகளை எழுப்பினாலும் அதன் மீதும் சில சந்தேகங்கள் இருக்கின்றன. ‘நீங்கள் அருந்தும் தேநீர் ஒரு விஷம்’ என்று பரபரப்பாக கிரீன்பீஸ் அமைப்பு சமீபத்தில் இந்தியத் தேயிலைகுறித்து ஒரு ஆய்வக அறிக்கையை வெளியிட்டது. சந்தையில் கிடைக்கும் பிரபல பிராண்டுகளை வேதியியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி, அதில் இருக்கும் பூச்சிக்கொல்லிகளைப் பட்டியலிட்டிருக்கிறது. இதைப் படித்தால், ‘அதிகாலையில் எழுந்ததும் விஷத்தையா வாய்க்குள் விடுகிறோம்?’ என்ற கேள்வி நியாயமாகவே எழும். இதற்கு முன்பே, 2012-ல் சீனாவில் பெய்ஜிங் நகரில் ‘லிப்டன்’ தேயிலையை கிரீன்பீஸ் பரிசோதித்து, அவற்றில் தடைவிதிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளும், நச்சுப் பொருட்களும், உட்கொள்ளும் அளவுக்கு அதிக மாகக் காணப்படுவத…

  8. ஸ்வீடன்: 2014 ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மூளையில் உள்ள செல்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக ஜான் ஓ கிஃபி, நே பிரிட் மோசர், எட்வர்டு ஐ மோசருக்கு ஆகிய 3 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசுக்குழு செயலாளர் கோரன்ஹான்சன் இதனை அறிவித்துள்ளார். மருத்துவ நோபல் பரிசுக்கு தேர்வாகி உள்ள ஜான் ஓ கிஃபி அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆவார். தம்பதிகளான நே பிரிட் மோசர் மற்றும் எட்வர்டு ஐ மோசர் ஆகியோர் நார்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகளாவார்கள். http://news.vikatan.com/article.php?module=news&aid=33176

  9. சர்ச்சைக்குரிய நியூயார்க் டைம்ஸ் கார்ட்டூன் செவ்வாய்க்கிரகத்தை ஆராய இந்தியா அனுப்பிய மங்கள்யான் திட்டம் பற்றி அமெரிக்காவின் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட கேலிச்சித்திரம் வாசகர்களிடமிருந்து வந்த புகார்களை அடுத்து, அப்பத்திரிகை மன்னிப்பு கோரியிருக்கிறது. 'பணக்கார நாடுகளின் விண்வெளிக் குழு' என்று குறியிடப்பட்ட அறை ஒன்றின் வாசல் கதவருகே ஒரு விவசாயி பசுமாட்டுடன் வந்து கதவைத் தட்டுவதுப் போல இந்தியாவை அவர் சித்தரித்திருந்தது. இந்த சர்ச்சை குறித்து பேஸ்புக் பதிவொன்றின் மூலம் எழுதிய நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஆண்ட்ரூ ரோசெந்தால், இந்தக் கார்ட்டூன் விண்வெளி ஆராய்ச்சி என்பது எப்படி பணக்கார மேலை நாடுகளின் பிரத்தியேக வெளியாக இனி இல்லை என்பதைக் காட்டவே வரை…

  10. ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தலிபான் ஆதரவு இஸ்லாமபாத்: ஈராக் மற்றும் சிரியாவில் செயல்படும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தானில் உள்ள தெக்ரிக் இ தலிபான் அமைப்பு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது.பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்பு தெக்ரிக் இ தலிபான். அல்கய்தா அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய இந்த அமைப்பு, மற்ற தீவிரவாத இயக்கங்களுக்கு தற்கொலை படையினரை அனுப்பி வந்தனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தெக்ரிக்இதலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சகிதுல்லா சாகித், தங்கள் அமைப்பின் தலைவர் முல்லா பஸ்துல்லாவின் வாழ்த்து செய்தியை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ஈராக் மற்றும் சிரியாவில் போராடும் ஐ.எஸ் அமைப்பினரை நாங்கள் சகோதரர்க…

    • 0 replies
    • 307 views
  11. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஏழை, பணக்காரன் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது. இந்த பிராந்தியத்தில் ஏழைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சமூக, பொருளாதார ஆணையம் (யுஎன்-இஎஸ்சிஏபி) தெரிவித்துள்ளது. இந்தியா, சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வருமானத்தில் அதிக அளவு ஏற்றத் தாழ்வு நிலவுவதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஏற்றத் தாழ்வு என்பது இப்பிராந்தியத்தில் நிலவும் மிக முக்கியமான சமூக, பொரு ளாதார பிரச்சினையாகும். கடந்த 20 ஆண்டுகளில் இப்பிராந்தி யங்களில் பெருநகரங்களில் வருமானத்தில் பெருமளவு ஏற்றத் தாழ்வு நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பிராந்தியம் அல்லது சமூகத்தில் காணப்படும் பொருளாதா…

  12. ஸ்பெயினிலிருந்து கத்தலோனியா பிரிந்து செல்ல வாக்கெடுப்பு நடத்துகிறது : அதிகரிக்கும் பிரிவினைக் கோரிக்கைகள் ஸ்பையின் நாட்டில் தன்னாட்சிப் பிரதேசமான கத்தலோனியா பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்றை நவம்பர் 9ம் திகதி நடத்தப்போவதாக கத்தலோனியா பிரதேச அரசு அறிவித்துள்ளது. வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என ஸ்பெயின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மக்கள் இத்தீர்ப்புக்கு எதிராகப் போராட கத்தலோனிய உள்ளூர் அரசாங்கம் மக்களுக்கு ஆதரவளிக்கின்றது. திட்டமிட்டபடி வாக்கெடுப்பு நடந்தே தீரும் என்று கத்தலோனியர்கள் எழுச்சிகொள்ள பிரதேச அரசு ஆதரவு வழங்கிவருகிறது. நிலமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட ஸ்பெயினின் பிரதமர் மரியானோ ரஜோய் உடனடியாக கததலோனிய உள்ளூர் அரசைப் பேச்சுக்கு அழை…

    • 0 replies
    • 373 views
  13. தீவிரவாதி என நினைத்து இரு கைகள் இல்லாத இளைஞரை சுட்டுகொன்ற பொலிஸார்! (வீடியோ) அமெரிக்காவில் யூட்டா என்ற மாகாணத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் இரண்டு கையில்லாத ஒரு இளைஞனை தீவிரவாதி என தவறாக நினைத்து சுட்டு கொன்றுவிட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்ற ம் நிறைந்துள்ளது. அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தின் சால்ட் லேக் என்ற நகரைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியான போர்ன் குருஸ் என்பவர் காரில் சென்று கொண்டிருக்கும்போது மூன்று தீவிரவாதிகள் வீதியன் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்ததை அவதானித்துள்ளார். அவர் உடனடியாக தன்னுடைய காரில் இருந்து இறங்கி மூவரையும் நோக்கி தன்னுடைய துப்பாக்கியை காண்பித்து உடனடியாக மூவரும் கைகளை மேலே தூக்கும்படி எச்சரித்தார். The shooting death of…

  14. அமெரிக்கா, ஐரோப்பாவை துவம்சம் செய்யக்கூடிய ஏவுகணையை சீனா பரிசோதனை! – 10 ஆயிரம் கி.மீ பாயும். [sunday 2014-10-05 09:00] அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நகரங்களை தாக்கி அழிக்கவல்ல, 10 ஆயிரம் கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறனுடைய ஏவுகணை சோதனையை, சீனா நடத்தி உள்ளது. இம்மாதம் 1ம் தேதி, சீனாவின் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இந்தத் தருணத்தில் தங்களின் அணு ஆயுத திறனை வெளிப்படுத்தும் வகையில், 10 ஆயிரம் கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்ல ஏவுகணை சோதனையை அந்நாட்டு ராணுவம், கடந்த 25ம் தேதி நடத்தியுள்ளது. ஷான்ஜி மாகாணத்தில் உள்ள தாயுவான் செயற்கைக்கோள் ஏவு தளத்தில் இருந்து 'டாங்பெங் 31பி' என்ற அந்த ஏவு…

  15. ஒரே மேடையில் மோடி, சோனியா, மன்மோகன்! – டெல்லி தசரா விழாவில் அதிசயம். [saturday 2014-10-04 09:00] டெல்லி செங்கோட்டை சுபாஷ் மைதானத்தில் நேற்று நடந்த தசரா விழா, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற இந்தியாவின் அடிப்படைப் பண்பை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என தலைவர்கள் அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். பொது விழா ஒன்றில், பிரதமராக பதவி ஏற்ற பின்னர் மோடியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒன்றாக பங்கேற்றது இதுவே முதல் முறை. இந்த விழாவில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியும் பங்கேற்றார். அவர் வரும் வரையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் …

  16. ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட வீடியோவில், பிரிட்டிஷ் பிணைக் கைதி ஆலன் ஹென்னிங்| படம்: ஏ.பி. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பிணைக் கைதியின் தலையை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் துண்டித்தனர். பிரிட்டனைச் சேர்ந்த பொதுநல ஆர்வலர் ஆலன் ஹென்னிங். இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இவரது தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்யும் வீடியோவை கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டனர். வீடியோவுக்கு 'அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கு மற்றுமொரு செய்தி' அந்த வீடியோவை ஆய்வு செய்த அமெரிக்க மற்றும் பிரிட்டன் அரசுகள் வீடியோவின் நம்பகத்தன்மையை உறுதி செய்தது. இதற்கு முன்னர் வெளியான வீடியோக்களில் இருந்த காட்சிகள் போலவே, இந்த வீடியோ பதிவிலும், பிணைக் …

    • 3 replies
    • 555 views
  17. பாட்னா: பாட்னாவில் காந்தி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பலியானார்கள். 15 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரியவந்துள்ளது. பீகார் தலைநகர் பாட்னா காந்தி சவுக் பகுதியில் உள்ள காந்தி மைதானத்தில் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கடைசி நாளான இன்று ராவண வதம் நிகழ்ச்சியை காண ஏராளமானோர் கூடியிருந்தனர். நிகழ்ச்சியை முடித்து விட்டு மக்கள் வீடுகளுக்கு திரும்பும் போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 32 பேர் பலியாகியுள்ளனர். இந்த தகவலை பீகார் உள்துறை செயலாளர் அமீர் சுபானி உறுதிப்படுத்தியுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவார்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த …

  18. ஈராக் மற்றும் சிரியா பகுதிகளை இணைத்து தீவிர இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் அரசாங்கங்களால் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போக அமெரிக்கா தலைமையில் உலக நாடுகள் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் ஈராக்கின் மேற்குப் பகுதியில் உள்ள சக்லாவ்யா என்ற பகுதியில் தீவிரவாதிகளுடன் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஈராக் ராணுவம் போரிட்டு வருகின்றன. இவர்களுக்கு உணவு, தண்ணீர், தளவாடங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குத் தேவை ஏற்பட்டதை முன்னிட்டு ஆகாய மார்க்கமாக போர் நடக்கும் பகுதிகளில் இவற்றை வீச அரசு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து விமானப்படைப் பிரிவைச் சேர்ந்த சில விமானிகளின் தலைமையில்…

  19. பாகிஸ்தான் கடற்படையால் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 55 இந்திய மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 8 படகுகளையும் பறித்து சென்றுள்ளனர்.பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் வழி தவறி செல்லும் குஜராத் மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து இந்திய மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக குஜராத் தேசிய மீனவ தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளர் மணீஷ் லோதாரி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:குஜராத் கடற்பகுதியில் ஜாகவ் துறைமுகப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்ளை பாகிஸ்தான் கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது. மேலும் அவர்களின் படகுகளையும் பறித்து சென்றுள்ளனர். கடந்த செப…

  20. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் , சோனியா காந்தி மற்றும் கருணாநிதி ஆகியோரின் கூட்டுச் சதியே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=129493506203266568

  21. பெண்கள் அணியும் ஜீன்ஸ் குறித்து கே.ஜே.யேசுதாஸ் வெளியிட்ட கருத்தால் சர்ச்சை! [Friday 2014-10-03 09:00] பிரபல பின்னணி பாடகரும், கர்நாடக இசைக் கலைஞருமான கே.ஜே.யேசுதாஸ் பெண்கள் ஜீன்ஸ் உடை அணிவது குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட அவர் பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார்: 'பெண்கள் ஜீன்ஸ் அணிவதனால் மற்றவர்களுக்கு தொல்லை தரக்கூடாது. எதை மறைத்து வைக்க வேண்டுமோ அது மறைத்தே இருக்க வேண்டும். இது போன்ற உடைகள் எளிமையையும், அன்பையும் பெண்களின் உயர்ந்த குணங்களாக கொண்ட இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது.' என்று தெரிவித்திருந்தார். கே.ஜே.யேசுதாஸின் கருத…

    • 9 replies
    • 1.5k views
  22. மோடிக்கு ஒபாமா கொடுத்த பொக்கிஷம்! அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக சென்றிருந்த பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ஒபாமா ஒரு அரிய புத்தகத்தை பரிசளித்துள்ளார். இது பிரதமர் மோடியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் இருந்தது? 1893-ஆம் ஆண்டு வெளிவந்த ´பார்லிமெண்ட் ஆப் வேர்ல்ட்ஸ் ரிலீஜன்ஸ்´ என்ற புத்தகத்தில் சுவாமி விவேகானந்தர் எழுதிய கருத்துக்கள் அடங்கிய பேப்பரும் இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த புத்தகத்தையே ஒபாமா மோடிக்கு பரிசளித்திருக்கிறார். இந்த பரிசை பிரித்தவுடன் ஆச்சர்யப்பட்டு போன பிரதமர் மோடி டுவிட்டரில் தனது வியப்பை பதிவு செய்துள்ளார். அதாவது, ஜனாதிபதி ஒபாமா விலை மதிப்பில்லாத மிக உயர்ந்த அரிய பொக்கிஷத்தை எனக்கு பரிசாக அளித்திருக்கிறார். அது …

    • 10 replies
    • 900 views
  23. 16 விமான பணிப்பெண்கள் கனடாவில் மாயம் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்சில் பணிபுரிந்த விமான பணிப்பெண்கள் மற்றும் கேபின் பெண்கள் கனடாவில் மாயமாகியுள்ளனர். இந்த தகவலை பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் (பி.ஐ.ஏ.)-ல் வெளிநாடு சென்ற 4 விமானப் பணிப்பெணகள் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மாயமாகியுள்ளனர் என்று ஒரு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் 16-க்கும் மேற்பட்ட விமானப் பணிப்பெண்கள் கனடாவிற்கு சென்ற பிறகு பாகிஸ்தான் திரும்பவில்லை என்பதை பி.ஐ.ஏ.-யும் உறுதிப்படுத்தியுள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அவ…

    • 13 replies
    • 4.4k views
  24. புதுடெல்லி: ‘சுத்தமான இந்தியா’ திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்த அமைப்பில் இணைய சச்சின் டெண்டுல்கர், கமல்ஹாசன் உள்பட 9 பேருக்கு அழைப்பு விடுத்தார். டெல்லியில் இன்று 'சுத்தமான இந்தியா' திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில், சுத்தமான இந்தியா உருவாக்க பொது இடங்களில் வந்து பணியாற்ற 9 பேருக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். மிருதுளா சின்கா ஜி, சச்சின் டெண்டுல்கர், பாபா ராம்தேவ், கமல்ஹாசன், சசிதரூர், பிரியங்கா சோப்ரா, சல்மான்கான், அனில் அம்பானி ஆகியோருக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்கும் பணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளேன். அவர்கள் மேலும், 9 பேருக்கு அழைப்பு விடுக்க கேட்டுக் கொண்டுள்ளேன். சுத்தமான இந்தியாவை உருவாக்குவது என்பது இந்திய மக்களின் பொறுப்ப…

  25. Posted Date : 15:24 (02/10/2014)Last updated : 15:24 (02/10/2014) மதுரை: காதல் திருமணம் செய்து கொண்ட பெற்ற மகளையே பெற்றோரே கவுரவக் கொலை செய்த பயங்கர சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அடுத்த போலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தீலிப்குமார். இவர் அருகில் உள்ள சேம்பர் கிராமத்தை சேர்ந்த விமலா (வயது 19) என்ற பெண் காதலித்து வந்துள்ளார். இவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில், காதலர்கள் இருவரும் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி கேரளாவில் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே, மகளை காணவில்லை என்று விமலாவின் தந்தை வீரண்ணன் உசிலம்பட்டி க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.