உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26715 topics in this forum
-
காணாமல் போன மலேசிய எம்.எச். 370 விமானத்தில் பயணித்த 4 பயணிகளின் வங்கிக் கணக்குகளிலிருந்து 30,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை திருடிய குற்றச்சாட்டில் மலேசிய பெண் வங்கி உத்தியோகத்தரொருவரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்.எச். 370 விமானம் காணாமல் போய் ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் அந்த விமானத்தில் பயணித்த இரு மலேசிய பயணிகளதும் இரு சீன பயணிகளதும் வங்கிக் கணக்குகளிலிருந்து மேற்படி பணம் மர்மமான முறையில் திரும்பப் பெறப்பட்டிருந்தது. இந்நிலையில் மலேசிய கோலாலம்பூர் நகரில் செயற்பட்டு வந்த எச்.எஸ்.பி.சி. வங்கிக் கிளையின் முகாமையாளர் விமான பயணிகளது கணக்குகளிலிருந்து பணம் களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் செய்த முறைப்பாட்டையடுத்து அந்த வங்கியில் பணியாற்றிய 33 வயது பெண் உ…
-
- 0 replies
- 476 views
-
-
திட்டமிட்ட வகையில் எதிரியால் அடக்கி ஒடுக்கப்பட்ட கலை என்னும் மகத்தான செயலை குறுகிய வளங்கள் கொண்டு எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற நுணுக்கத்தை,வழியை காட்டிச்சென்ற எம் தேசியத்தலைவரை இன்று நினைக்கிறேன் .... ஆனால் சகல வளங்களும் ,பலமும் கொண்டு தமிழனின் கலைக்கே மாமலைகளாக விளங்கும் தொப்பிழ் கொடி உறவுகளை நினைக்க பரிதாமகாக உள்ளது .............எதிரியின் இந்த தந்திர வலைக்குள் இருந்து தமிழ் கலையை காப்பாற்ற முயற்சிப்பார்களா ...........?????
-
- 1 reply
- 454 views
-
-
http://kalaiy.blogspot.co.uk/2008/11/blog-post_28.html நன்றி-கலையகம் யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு “யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா”, கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.) பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்…
-
- 1 reply
- 1k views
-
-
நடிகை குஷ்பு ட்விட்டரில், சுண்டைக்காய் அளவே உள்ள கட்சி ஆள் எல்லாம் என்னை மிரட்ட முயற்சி செய்வதை நினைத்தால் கொமடியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். திமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகை குஷ்பு, மக்களவைத் தேர்தலையடுத்து கட்சியில் இருந்து விலகியதோடு, சினிமா வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சுண்டைக்காய் அளவு கட்சி ஆதரவில் ஒருவர் என்னை மிரட்ட முயற்சிசெய்வது கொமடியாக உள்ளது. மேலும், அவர்களின் பலவீனத்தை பார்த்து சிரிக்கத் தான் செய்கிறேன், நான் யாருக்கு பின்னாலும் நிற்கவில்லை என்றும் நான் என் மனசாட்சியை தவிர வேறு எதற்கும் பயப்படுவது இல்லை எனவும் தெரிவித்துள்ளார். http://www.visarnews.com/
-
- 0 replies
- 680 views
-
-
b8a750b69d53ccab82b319968b072c6f
-
- 6 replies
- 812 views
-
-
புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்துகின்றன என்று வேதனை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, மகள்களை போல் மகன்களையும் பெற்றோர்கள் கட்டுக்கோப்பாக வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், நமது நாட்டின் பாலின விகிதத்தை பார்த்திருக்கிறீர்களா? யார் இந்த ஏற்றத்தாழ்வை உருவாக்கியது கடவுள் இல்லை. பெண் குழந்தைகளை கருவறையிலே மருத்துவர்கள், பெற்றோர்கள் கொல்ல வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். மகன் வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் பெண் குழந்தையை கொல்ல வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன். பெண் குழந்தைகளை கருவறையிலே கொல்லாதீர்க…
-
- 10 replies
- 596 views
-
-
மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளது வங்கிக் கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எச்- 370 என்ற விமானம் கடந்த மார்ச் 8 ஆம் திகதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு செல்லும் வழியில் மாயமானது. இந்த விமானத்தின் பாகங்களை தேடும் பணியில் ஆவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.விமானம் மாயமாகி 5 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த வித தகவலும் கிடைக்கவில்லை இந்த விமானத்தில் சென்ற பயணிகள் அனைவரும் இறந்து விட்டார்கள் என்று அறிவித்து மலேசிய அரசு அவர்களுக்கான இழப்பீட்டு தொகையை அவர்களது குடும்பத்திற்கு வழங்கியது இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகளின் வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம் மூலம் 34…
-
- 0 replies
- 635 views
-
-
Hollande a donné le feu vert à à des livraisons d'armes aux Kurdes d'Irak. En savoir plus sur http://www.lesechos.fr/monde/afrique-moyen-orient/0203700982022-les-etats-unis-reflechissent-a-levacuation-urgente-des-civils-au-nord-de-lirak-1032700.php?xvJrdouxSUSJLzkG.99 VIDEOS - Sous la pression de la France notamment, les ministre des Affaires étrangères de l'UE vont se réunir en urgence vendredi. Hollande a donné le feu vert à à des livraisons d'armes aux Kurdes d'Irak. L'implication de la France dans le conflit irakien vient de prendre une nouvelle tournure. François Hollande a annoncé, mercredi, que la France allait livrer des armes aux Kurdes d'Irak dans "les…
-
- 0 replies
- 438 views
-
-
தமிழகத்தை சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்தார். அவருக்கு மத்திய அரசு சுதந்திர தின விழாவில் அசோக் சக்ரா விருது வழங்கி சிறப்பிக்க உள்ளது. சென்னை கிழக்குத் தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன், கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை ஆஃபீசர்ஸ் அகாடமியில் பயின்று, பின் ராணுவத்தில் சேர்ந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள சோஃபியான் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் ராணுவ மேஜராக நியமிக்கப்பட்டார். தீவிரவாதிகள் அச்சுறுத்தல்களை துச்சமாக எண்ணி திறமையாக போரிட்டு உயரதிகாரிகளின் பாராட்டைப் பெற்றவர். அவர் தனக்கு கீழ் உள்ள படையினரை வழிநடத்துவதில் திறமை மிகுந்தவர். இந்நிலை…
-
- 7 replies
- 467 views
-
-
பிரேசிலின் ஜனாதிபதி வேட்பாளர் எடுவார்டோ கம்பொஸ் (49 வயது) விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். கம்பொஸை ஏற்றிச்சென்ற விமானம் சாயோ போலோ மாநிலத்தில் துறைமுக நகரான சந்தோஸிலுள்ள குடியிருப்பு பிரதேசத்தில் சீரற்ற காலநிலை காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த ஏனைய 4 பயணிகளும் இரு விமானிகளும் இறந்துள்ளனர். எடுவார்டோவின் மரணத்தையடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக 3 நாள் தேசிய துக்க தினத்தை அந்நாட்டு ஜனாதிபதி டில்மா ருஸெப் பிரகடனப்படுத்தியுள்ளார். அத்துடன் ஜனாதிபதி தனது பிரசார நடவடிக்கைகளையும் இரத்து செய்துள்ளார். இன்று நாம் மாபெரும் பிரேசில் அரசியல் தலைவரை இழந்து விட்டோம் எனவும் அவரது மறைவால் பிரேசில் அரசியலுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை …
-
- 0 replies
- 283 views
-
-
மும்பை: 280 பயணிகளுடன் சென்ற ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானத்தின் விமானி, குட்டித்தூக்கம் போட்டதால் விமானம் 5000 அடிக்கு திடீரென கீழே இறங்கியதால், விபரீதத்தை உணர்ந்து விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் துணை விமானியை உஷார்படுத்தியதால் விமானம் தப்பியது. மும்பையிலிருந்து 280 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று பிரஸ்ஸல்ஸுக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த விமானம் துர்கிஷ் வான்வெளி எல்லையில் 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென 5,000 அடி கீழே இறங்கி 29,000 அடிக்கு வந்தது, இதனையடுத்து அந்த விமானத்தை கண்காணித்து கொண்டிருந்த விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உடனடியாக எச்சரிக்கை தகவல் அனுப்பி, விமானத்தை மேலே செலுத்துமாறு உத்தரவிட்டனர். அந்த சமயத்தில் அந்த விமான…
-
- 0 replies
- 365 views
-
-
கோலாப்பூர்: சுதந்திர இந்தியாவில் இதுவரை பெண் குற்றவாளிகள் யாருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படாத நிலையில், முதன்முறையாக மகாராஷ்ட்ராவை சேர்ந்த 2 சகோதரிகளுக்கு விரைவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலம் கோலாப்பூரை சேர்ந்த ரேணுகா கிரண் ஷிண்டே மற்றும் அவரது சகோதரி சீமா மோகன் காவிட் ஆகிய 2 சகோதரிகளும், கடந்த 1990 முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஏழை சிறுவர், சிறுமிகளை கடத்திச் சென்று அவர்களை கட்டாயப்படுத்தி திருட வைத்துள்ளனர். பின்னர் அந்த குழந்தைகள் சற்று பெரிதாக வளர்ந்துவிட்டால் அவர்களை கழுத்தை நெரித்தோ அல்லது இரும்பு கம்பியால் தலையால் அடித்தோ கொன்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் 13 குழந்தைகளை கடத்திச் சென்று, அதில் 9 பேரை கொன்றதாக தொடரப்ப…
-
- 0 replies
- 256 views
-
-
ராஜீவ்காந்தி படுகொலைச் சதித்திட்டத்தின் பின்னணி தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட, மத்திய புலனாய்வுத்துறையின் (சிபிஐ), பலநோக்கு கண்காணிப்புக் குழுவின் பணிக்காலம், நீடிக்கப்பட்டுள்ளது. இதன் பணிக்காலம் முடிந்து இரண்டு மாதங்களின் பின்னர், இந்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரி ஒருவரின் தலைமையிலான இந்தக் குழுவில் ஐபி, றோ, வருவாய் புலனாய்வுப் பிரிவு ஆகிய இந்தியப் புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த விசாரணைக் குழுவின் பணிக்காலம் கடந்த மே 31ம் நாளுடன் நிறைவடைந்திருந்தது. இந்தநிலையிலேயே இரண்டு மாதங்கள் கழித்து இந்தக் குழுவின் ஆயுட்காலம் ஒரு ஆண்டினால் இந்திய மத்திய அரசினால் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கையரான கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் …
-
- 0 replies
- 248 views
-
-
வீட்டிலேயே கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டு கடும் கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவன், தனது பெற்றோரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை இடம்பெற்ற மேற்படி படுகொலை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. பிறிஸ்கோ நகரைச் சேர்ந்த மேற்படி சிறுவன் தனது தந்தையான ரேயன் (48 வயது) தாயான மரியா எலெனா ஆகியோரை சுட்டுக் கொன்றுள்ளான். அவன் ரேயன் மற்றும் எலெனாவின் 5 பிள்ளைகளில் இளையவராவார்.மேற்படி படுகொலை இடம்பெற்ற போது அந்த வீட்டில் சிறுவனின் சகோதரி ஒருவரும் இருந்துள்ளார். ஆனால் அவர் சிறுவனால் தாக்கப்படவில்ல…
-
- 0 replies
- 505 views
-
-
தமிழுக்கு கொடிபிடித்த பஞ்சாபி! Posted Date : 15:48 (11/08/2014)Last updated : 15:51 (11/08/2014) ''திருக்குறள் மூலமாக இந்தியாவை இணையுங்கள்!'' இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக தமிழுக்காக தமிழர் அல்லாத ஒருவர் குரல் கொடுத்துள்ளார். இந்திக்கு ஆதரவாகவும் ஆங்கிலத்துக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் நாளும்விவாதங்கள் நடந்துவரும் சூழலில், ஒரு வடநாட்டு எம்.பி எழுந்து, ''வட இந்தியர்கள் தமிழைக் கற்க வேண்டும்'' என்று சொன்னதோடு, ''திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகளின் தினமாகக் கொண்டாட வேண்டும்'' என்றும் கோரிக்கை வைத்திருப்பது அனைவரையும் மலைக்க வைக்கிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில்தான் இந்த அதிசயம் நடந்தது. அந்த எம்.பி-யின் பெயர், தருண் விஜய்…
-
- 2 replies
- 766 views
-
-
உலக அளவில் கணிதத்துக்கான நோபல் பரிசை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஞ்சுள் பார்கவா என்பவர் பெற்றார். 2014 ஆம் ஆண்டுக்கான கணித வல்லுநர்களுக்கான விருது 4 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஞ்சுள் பார்கவா என்பவருக்கும் இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இந்த விருது கணிதத்துக்கான நோபல் பரிசு என்று அழைக்கப்படுகின்றது. இந்த விருது வழங்க ஆரம்பிக்கப்பட்ட 1936 ஆம் ஆண்டிலிருது மேற்கத்திய ஆண்களே பெற்றுவருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. இந்த விருதை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மஞ்சுள் பார்கவா பெறுவது ஆச்சர்யமில்லை என்று விருது வழங்குவதற்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் மூலமே உறுதியாகியுள்ளது என இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் கருத்துத் தெரி…
-
- 0 replies
- 529 views
-
-
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நினைத்தபோதெல்லாம் ஏவுகணையை வீசுவதும், போர் விமானத் தாக்குதல் நடத்துவதும், அப்பாவிகள், குழந்தைகளை கண்மூடித்தனமாக கொன்று குவிப்பதும் ஒருபுறம் நடக்க, இதை தட்டிக் கேட்க வேண்டிய அமெரிக்கா செல்லமாக இஸ்ரேலை கண்டிப்பதும், அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் வேகம் காட்ட வேண்டிய செளதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகள் மறைமுகமாக இஸ்ரேலுடனே கைகோர்த்து நின்றிருப்பதும் தான் இன்றைய நிதர்சனமான நிலை.. என்னாது இஸ்ரேலுடன் செளதி மறைமுக கைகோர்ப்பா என்ற கேள்வி எழலாம்.. இதற்கான காரணங்களைப் பார்க்கும் முன் இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் வரலாற்றை ஒரு முறை திரும்பிப் பார்ப்பது உதவியாக இருக்கும்.... இரண்டாம் உலகப் போர்... இரண்டாம் உலகப் போரில் லட்சக்கணக்கான யூதர்களை ஹிட்லர் …
-
- 2 replies
- 973 views
-
-
புருனேய் நாடு கலாசாரத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக இந்தோனீசியா குற்றஞ்சாட்டியுள்ளது. தமது அதிகாரபூர்வ அகராதியில் ஆயிரக்கணக்கான இந்தோனீசிய வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளதன் மூலம், புருனேய் கலாசாரத் திருட்டைச் செய்துள்ளது என, இந்தோனீசியா கூறுகிறது. இந்தோனீசிய மூலத்தைக் கொண்ட 62,000 வார்த்தைகளை, புருனேய் அரசு தமது அகராதியில் சேர்த்துள்ளது என்றும், அவை தமது நாட்டு மூலத்தைக் கொண்டவை என்பது அந்த அகராதியில், முறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என, இந்தோனீசிய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அப்படியான திருத்தங்கள் செய்யப்படும்வரை, அந்த அகராதியின் வெளியீட்டை புருனேய் நிறுத்த வேண்டும் என்றும் இந்தோனீசியா கோரியுள்ளது. இந்தோனீசியா, புருனேய், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் வெவ்வேற…
-
- 0 replies
- 412 views
-
-
புதுடெல்லி: இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம், இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டில் 1,35, 585 பேரும், 2012ல் 1,35.445 பேரும், 2013 ல் 1,34, 799 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ( National Crime Records Bureau), வரதட்சணை, வறுமை, கடன் போன்றவை தற்கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள போதிலும், மன அழுத்தம் மற்றும் விரக்தி போன்றவற்றினால் தற்கொலை செய்துகொள்வோரது எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. நோய் தீராத நோய் காரணமாக 2011 ல் 26,570 பேரும், 2012 ல் 25, 116 பேரும், 2013 ல…
-
- 0 replies
- 519 views
-
-
புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி பிராண்ட் தேயிலைகளில் அதிகமான பூச்சிக்கொல்லி மருந்து நச்சுகள் இருப்பதாக சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக இயங்கும் அரசு சாரா நிறுவனமான 'கிரீன்பீஸ் இந்தியா' எச்சரித்துள்ள நிலையில், இந்திய தேயிலை வாரியம் இது தொடர்பான ஆய்வறிக்கையை ஏற்க மறுத்துள்ளது. இது தொடர்பாக கிரீன்பீஸ் இந்தியா ( Greenpeace India ) அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization - WHO) அனுமதித்துள்ள அளவைக் காட்டிலும் அபாயகரமான அளவில், இந்தியாவில் விற்கப்படும் முன்னணி பிராண்ட் தேயிலைகளில் பூச்சிக்கொல்லி மருந்து உள்ளதாக கூறியுள்ளது. மேலும் தேயிலை செடிகளில் அடிக்க அனுமதிக்கப்படாத பூச்சிக்கொல்லி மருந்துகளும் இதில் காணப்படுவதாகவும் அது தெரி…
-
- 1 reply
- 471 views
-
-
பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் காவிரி புரட்சியை கொண்டு வருவதே முக்கிய நோக்கம் என்று கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் 2 புனல் மின் திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அவர், லடாக் வந்ததில் பெருமை அடைவதாகவும், புனல்மின் திட்டம் லே நகரத்தின் சுற்றுச் சூழலுக்கு குந்தகம் ஏற்படுத்தாது, லே மக்களின் நாட்டுப்பற்றுக்கு நான் தலைவணங்குகிறேன். இமயமலை மாநிலங்களை மேம்படுத்த புதிய அணுகுமுறை தேவை, காஷ்மீரில் காவிரி புரட்சியை கொண்டு வருவதே முக்கிய நோக்கம் என்று தெரிவித்துள்ளார். மேலும், சியாச்சின் செல்ல திட்டமிட்டுள்ள மோடி, சியாச்சின் விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=114762&category=I…
-
- 0 replies
- 311 views
-
-
கார் விபத்தில் உயிர்தப்பினார் சுனில் கவாஸ்கர் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி முடிந்த அன்று அங்கிருந்து லண்டன் நோக்கி கவாஸ்கர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. ஆனால் சரியான நேரத்தில் விழிப்புடன் இருந்ததால் காயமின்றி தப்பியுள்ளார். "கடவுள்தான் எங்களைக் காப்பற்றினார். நல்ல வேளையாக ஒருவருக்கும் காயமேற்படவில்லை, ஆனால் இந்த விபத்து பற்றி நினைத்தாலே பயங்கரமாக இருக்கிறது” என்று கவாஸ்கர் கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கவாஸ்கர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனைக் குழுவில் இருந்தார். இவருடன் மார்க் நிகலஸ் என்ற சக வர்ணனையாளரும் ஜாகுவார் காரில் மான்செஸ்டரிலிருந்து லண்டன் புறப்பட்டனர். பின் இருக்கையில் ஓட்டுனருக்கு நேராக மார்க் நிகலஸ் அமர, கவாஸ்கர் அவருக்கு எதிர்முனையில் அமர்ந்…
-
- 1 reply
- 444 views
-
-
வாஷிங்டன்: புற்றுநோய்க்குக் காரணமான முக்கியமான ஒரு வேதிப் பொருளைத்தான் பல லட்சம் அமெரிக்கர்கள் தினசரி பயன்படுத்தி வருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அதாவது கோல்கேட் டோட்டல் பற்பசையில் இடம் பெற்றுள்ள ஒரு வேதிப் பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளில் ஒன்று என்று இந்த ஆய்வு கூறுகிறது. பற்களில் ஏற்படும் ஈறு பாதிப்பை ஏற்படுத்தும் நோயைக் குணமாக்க கோல்கேட் பேஸ்ட்டில் டிரைக்ளோசன் என்ற வேதிப் பொருள் சேர்க்கப்படுவதாக கோல்கேட் நிறுவனம் கூறுகிறது. புற்று நோய்க் காரணி: ஆனால் இந்த வேதிப் பொருள் புற்று நோயை ஏற்படுத்தும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. இந்த வேதிப் பொருள் பாதுகாப்பானது, பயன்படுத்தலாம் என்று கடந்த 1997 ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பு அனுமதி அளித்துள்ளது என்பது கு…
-
- 9 replies
- 1.2k views
-
-
சிரியாவின் ரக்கா நகரில் திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பை கொண்டிருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு கற்களால் எறிந்து ஐ.எஸ். போராளிகளால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி மரண தண்டனை நிறைவேற்றத்தை நேரில் கண்ட பெயரை வெளியிடாத நபரொருவர் பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகத்துக்கு இது தொடர்பில் தெரிவித்துள்ளார். பட்டாஹ் அஹமட் என்ற பெண்ணுக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பவ தினம் பிராந்திய மதகுரு ஒருவர் தீர்ப்பை வாசித்ததும் அருகிலிருந்த நகர சபை மைதானத்தில் டிரக் வண்டியொன்றில் பெருந்தொகையான கற்கள் எடுத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பட்டாஹ் அஹமட் கால் முதல் பாதம் வரை கறுப்புத் துணியாலான ஆடை மூடியிருக்க அந்த மைதானத்துக்கு அழைத்து வரப்பட…
-
- 3 replies
- 592 views
-
-
நான் நிதியமைச்சரானால் 2 வாரத்தில் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பேன் என்று சுப்பிரமணிய சாமி சவால் விடுத்துள்ளார். கோவை ரோட்டரி சங்கம் சார்பில் ‘இந்திய பொருளாதாரம் நேற்று, இன்று, நாளை’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேசியதாவது:- நமது நாட்டில் ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வருமான வரியிலிருந்து கிடைக்கிறது. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள். வருமானம் இல்லாததால் ஏழைகள் வரி செலுத்துவதில்லை. சட்டம் மற்றும் சட்ட வல்லுனர்களை தங்கள் கைக்குள் வைத்திருப்பதால் பணக்காரர்கள் வருமான வரி செலுத்துவதில்லை. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு பலன் க…
-
- 0 replies
- 494 views
-