Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 12 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல் இஸ்ரேல் நாட்டில் கடந்த மாதம் 12-ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை பாலஸ்தீனத்தின் காசா எல்லைப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் குழுவினர் கடத்தினர். அந்த மாணவர்களைக் கொன்று, பிரேதங்களை பாலஸ்தீனம் - இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியான வெஸ்ட் பேங்க் அருகே வீசிச் சென்றனர். இதனையடுத்து, ஹமாஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹமாஸ் குழுவினரும் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தி வருவதால் காசா பகுதியை அவர்களிடம் இருந்து பறிக்கும் நோக்கத்தில் தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப…

    • 0 replies
    • 290 views
  2. உத்தரகாண்ட் சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி டேராடூன், ஜூலை 25- உத்தரகாண்ட் மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் பொறுப்பை ஏற்ற ஹரிஷ் ராவத் அரசியலமைப்பு சட்டப்படி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவர் போட்டியிடுவதற்காக தார்சூலா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹரிஷ் தாமி பதவி விலகி வழிவிட்டார். இதேபோல் டோய்வாலா தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் பொகாரியால், சோமேஷ்வர் தொகுதி எம்.எல்.ஏ. அஜய் தாம்டா ஆகியோர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து இந்த மூன்று தொகுதிகளிலும் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மூன்று தொகுதிக…

  3. வரும் ஜூலை 30ஆம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி இந்தியா வருகிறார். 3 நாள் பயணமாக இந்தியா வரும் அவர், இந்திய தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலக பிரச்சனைகள் குறித்து பேச உள்ளார். இந்தியா வரும் ஜான் கெர்ரியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரவேற்று வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது. பின்னர் இரு தலைவர்களும் இணைந்து 5வது இந்திய-அமெரிக்க மூலோபாய கலந்துரையாடலை நடத்துவார்கள். பின்னர் இருவரும் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் சத்திக்கும் போது பேச உள்ள விவகாரங்கள் குறித்து அலசுவார்கள் என்று தெரிகிறது. பின்னர் பிரதமர் மோடியையும் கெர்ரி சந்திக்க உள்ளார். அமெரிக்கா அதிபரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோ…

  4. லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 7 பேர் பலியாயினர். உத்தரபிரதேச மாநிலம் அட்டாரியா என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாகவும், அதில் இருந்த பைலட் மற்றும் துணை பைலட் உள்பட 7 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை என்றும், இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். http://news.vikatan.com/article.php?module=news&aid=30598

  5. எங்கும் ரத்தம், எங்கும் மரணம் உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! உயிருக்கு உயிரான நண்பர்களே, நேற்று இரவு ரொம்பவும் கொடுமை. எத்தனையெத்தனை மக்கள்! குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை; எல்லோரும் அப்பாவிப் பொதுமக்கள்; படுகாயமடைந்து, உறுப்புகளை இழந்து, ரத்தம் வடிய நடுங்கிக்கொண்டு, செத்துக்கொண்டு வண்டிகளில் மந்தைமந்தையாக ஏறிச்சென்று… அப்பப்பா! இப்படியொரு நிலைக்குத்தான் இறுதியில் கொண்டுவந்து விட்டிருக்கிறது இஸ்ரேலியப் படையெடுப்பு. இங்கே அவசரச் சிகிச்சை ஊர்திகளில் பணியாற்றுபவர்கள்தான் நிஜமான வீரர்கள். காஸாவிலுள்ள எல்லா மருத்துவமனைகளிலும் நேரங்காலம் பார்க்காமல் 12-24 மணி நேரம் கூடப் பணியாற்றுகின்றனர். கொடூரங்கள் நிரம்பிய பணியின் …

  6. புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் குழு அருகே அமர எந்த ஒரு கட்சியும் விரும்பாமல் இருப்பதால், இருக்கைகள் ஒதுக்குவதில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு விநோதமான பிரச்னை எழுந்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களை மட்டுமே கைப்பற்றியதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலைமை அக்கட்சிக்கு ஏற்பட்டுவிட்டது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களில் குறைந்தது 55 இடங்களையாவது கைப்பற்றுகிற கட்சிக்குத்தான் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். ஆனால் அந்த அளவுக்கு இடங்கள் இல்லாததால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படவில்லை. இருப்பினும் ஆளும் பா.ஜனதா கூட்டணிக்கு அடுத்தபடியாக அதிக…

  7. உக்கிரேனிய பிரதமர் அர்ஸெனி யட்ஸெனியுக் வியாழக்கிழமை பதவி விலகியுள்ளார். சக்தி வளத்துறையின் கட்டுப்பாட்டை பொறுப்பேற்பதற்கான சட்டமொன்றை அந்நாட்டு பாராளுமன்றம் நிறைவேற்ற தவறியதையடுத்தே அவர் பதவி விலகியுள்ளார். அதேசமயம் அவரின் பதவி விலகல் இடம்பெறுவதற்கு முன்னர் அன்றைய தினம் இரு கட்சிகள் ஆளும் கூட்டமைப்பில் இருந்து விலகியிருந்தன. ரஷ்யாவின் முகவர்களாகவுள்ள உறுப்பினர்களை பாராளுமன்றத்திலிருந்து அகற்றும் வகையில் புதிய தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு வழிவகை செய்யும் முகமாகவே அந்த கட்சிகள் விலகியிருந்தன. மேற்படி, கட்சிகளின் நடவடிக்கைக்கு உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ வரவேற்பளித்துள்ளார். பிரதமர் அர்ஸெனியின் பதவி விலகலானது கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள…

  8. ஜேர்மனியில் மருத்துவ தேவைகளுக்காக தங்கள் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்க்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கஞ்சா செடி பல மருத்துவ நன்மைகளை தரக்கூடியவை. மேலும் இவை மருந்து கடைகளில் மிகவும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில் ஜேர்மனியை சேர்ந்த நடுத்தர குடும்பத்தினர் ஐந்து பேருக்கு கஞ்சாவினை மருந்தாக பயன்படுத்துமாறு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது கடைகளில் வாங்குவதற்கு மாதம் 800 முதல் 1000 பவுண்ட்ஸ் செலவு ஆகிறது. இதனால் நபர் ஒருவர் தனது மாத ஊதியம் 1500 பவுண்ட்ஸ் என்பதால் காப்பீட்டு திட்டம் பணம் வழங்க மறுப்பதாலும் கஞ்சாவை தனது வீட்டிலேயே வளர்க்க அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஐந்தில் மூவருக்கு கஞ்சாவை வீட்டிலேயே வளர்க்க அனுமதியளித்து…

    • 3 replies
    • 562 views
  9. அல்ஜீரியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் அல்ஜெரி, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா ஃபாஸோவிலிருந்து கிளம்பிய தன் விமானம் ஒன்றுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. ஓவுவாககடகோவிருந்து கிளம்பிய 50 நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமான நிறுவனத்தை மேற்கோள் காட்டி அல்ஜீரியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானம் அல்ஜியர்சிற்குச் சென்று கொண்டிருந்தது. ஏஎச்5017 என்ற இந்த விமானத்தில் 110 பயணிகளும் 6 ஊழியர்களும் இருந்தார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்http://www.bbc.co.uk/tamil/global/2014/07/140724_algeria.shtml

  10. இராக்கின் வடக்கே மோசுல் நகரிலும் சுற்றியுள்ள இடங்களிலும் சிறுமிகளும் பெண்களும் பெண்ணுறுப்பை சிதைக்கும் நடைமுறைக்கு உட்பட வேண்டும் என அப்பிராந்தியத்திலுள்ள இஸ்லாமியவாத ஆயுததாரிகள் உத்தரவிட்டுள்ளதாக ஐநா கூறியுள்ளது. இந்த உத்தரவினால் பெரும் கவலை அடைந்துள்ளதாக இராக்கிற்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி ஜாக்குலின் பேட்காக் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு சம்பந்தமாக சுன்னி ஜிகாதி குழுவான ஐசிஸ் நேரடியாக எவ்வித கருத்தையும் கூறவில்லை. இந்த உத்தரவு சம்பந்தமாக அரபு நாடுகளில் மக்கள் சமூக வலைத்தளங்களில் ஆத்திரமும் அதிர்ச்சியும் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இந்த உத்தரவை ஐசிஸ் பிறப்பித்ததாகத் தெரியவில்லை என ஐசிஸுடன் தொடர்புடைய சமூக வலைத்தள கணக்குகள் கூறுகின்றன. பெண்ணுறுப்ப…

  11. EN IMAGES. Troyes : six morts dans une collision frontale Publié le 22.07.2014, 22h44 | Mise à jour : 23.07.2014, 12h19 (FRANCOIS NASCIMBENI / FRANCOIS GUILLOT) Réagir Un minibus transportant des enfants a heurté de plein fouet mardi après-midi un poids lourd roulant en sens inverse sur la départementale 619, sur la commune de Courteranges (Aube). Le dernier bilan fait état de six morts dont cinq enfants originaires de Seine-et-Marne. Le conducteur du véhicule a également trouvé la mort. Le ministre de l'Intérieur, Bernard Cazeneuve, et le secrétaire d’Etat aux Transports, Frédéric Cuvillier, sont arrivés, en fin d'après-midi près du …

  12. தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் 20 மாணவர்கள் பலியாகினர்; 19 பேர் காயமடைந்தனர். மேடக் மாவட்டம் மசாய்பேட் கிராமத்தில் இன்று காலை 9.10 மணியளவில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது. காகடியா டெக்னோ பள்ளிக்குச் சொந்தமான பேருந்து சுமார் 40 மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, மசாய்பேட் கிராமம் அருகே ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த நான்டெட் - செகந்தராபாத் பயணிகள் ரயில் பேருந்து மீது மோதியது. இதில் பேருந்து ஓட்டுநர், பேருந்தில் இருந்த 20 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த 19 மாணவர்கள், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கா…

  13. காஸாமுனை: போர் பெருந்துயரமானது.. அதுவும் பச்சிளங்குழந்தைகளையும் அப்பாவி பொதுமக்களையும் ரணகளப்படுத்தி பலியெடுக்கும் போர் எத்தனை கொடூரமானது என்பதை காஸா பிஞ்சுகள் உலகுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் வகைதொகையின்றி வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் பலியானோர் எண்ணிக்கை 700 ஆகிவிட்டது. படுகாயமடைந்தோர் எண்ணிக்கையோ 5 ஆயிரம். அப்பா.. இன்று நான் இறந்துவிடுவேனா.? நாள்தோறும் கேட்கும் காஸா பச்சிளங்குழந்தைகளின் துயரக் கேள்வி பலி எடுக்கப்பட்ட பாலகர்கள்: இஸ்ரேலின் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீன பச்சிளம் குழந்தைகள் பலியாகிவிட்டன. பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உடலெங்கும் குண்டு காயங்களோடு, துப்பாக்கி சன்…

    • 0 replies
    • 1.9k views
  14. பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. பாலஸ்தீனப் பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில், 700 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி ஆராய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அவசர சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத…

  15. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில், ’’பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியசாமி தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று இலங்கை சென்று ராஜபக்சேவை சந்தித்து பேசியுள்ளது. இந்த சந்திப்பின்போது இலங்கையுடன் நல்லுறவையே இந்திய பிரதமர் நரேந்திரமோடி விரும்புகிறார் என்றும், தமிழக குரல்கள் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்றும் ராஜபக்சேவிடம் சுப்பிரமணிய சாமி கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சுப்பிரமணியசாமி தலைமையிலான குழு தன்னிச்சையாக சென்றதா? அல்லது பா.ஜனதா கட்சியே அனுப்பி வைத்ததா? அல்லது மத்திய மோடி அரசு அனுப்பி வைத்ததா? என்ற கேள்விகளுக்கு விடை எதுவும் இல்லை. இந்திய அரசின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு குறித்து பேச சுப்பிரமணியசாமி யார்? அவருக்கு என்ன உ…

  16. காசா மீது அமெரிக்காவின் ஆதரவோடு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்டு இரத்தவெள்ளதில் உயிருக்குப் போராடுபவர்களை, நோர்வே நாட்டை சேர்ந்த மருத்துவர் குழு ஒன்று இரவு பகல் பாராமல் காப்பாற்றி வருகிறது. இந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் நோர்வே மருத்துவர் கில்பர்ட் என்பவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு அவசர கடிதத்தை எழுதியுள்ளார். அதன் விபரம் வருமாறு, “ஒபாமா உங்களுக்கு இதயம் ஒன்று இருக்கிறதா? ஒரே ஒரு இரவு-வெறுமனே ஒரே ஒரு இரவு மாத்திரம் காசா மருத்துவ மனையில் எம்முடன் இருந்து பாருங்கள். அது வரலாற்றை மாற்றிவிடும் என்று நான் 100 சதவீதம் நம்புகிறேன். மனமிருக்கும் எவரும் க…

    • 0 replies
    • 569 views
  17. தெலுங்கு சேனல் செய்தியின் புகைப்படப் பதிவு. தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகினர். மேடக் மாவட்டம் மசாய்பேட் கிராமத்தில் இன்று காலை 9.10 மணியளவில் இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது. காகடியா டெக்னோ பள்ளிக்குச் சொந்தமான பேருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, மசாய்பேட் கிராமம் அருகே ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த நான்டெட் - செகந்தராபாத் பயணிகள் ரயில் பேருந்து மீது மோதியது. இதில் பேருந்து ஓட்டுநர், பேருந்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த ம…

    • 0 replies
    • 308 views
  18. கனடா கியுபெக் மேயர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையில் காலமானாரென La Prairie நகராட்சி அதிகாரிகளின் தகவலின் படி தெரியவந்துள்ளது. 51-வயதுடைய Roussel -ற்கு குளவி கொட்டுவதால் அலர்ஜி உண்டாவதில்லை என நகர பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். இவருக்கு பல தடவைகள், கிட்டத்தட்ட 15 தடவைகள் அவரது காலில் குளவிகள் கொட்டியிருப்பதாக நம்ப படுகின்றது. அவசர மருத்துவ சேவைப்பிரிவினர் வந்து அவருக்கு அட்ரனலின் ஊசி போட முயன்றுள்ளனர் ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இது ஒரு அதிர்ச்சியான நிலை எனவும் இது போன்ற ஒரு வழியில் ஒருரை இழப்பது என்பது மிகவும் கடினமானதெனவும் நகரத்தின டைரக்டர் ஜெனரல் Jean Bergeron, தெரிவித்துள்ளார். Roussel வெளிப்படையாக குளவிகளிற்கு அலர்ஜி அற்றவராக இருந்தாலும் எ…

  19. ரம்ஜான் நோன்பு இருந்த முஸ்லிம் ஒருவர் வாயில், சிவசேனா எம்.பி.க்கள் வற்புறுத்தி சப்பாத்தியை திணித்ததாக எழுந்த புகார் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது. டெல்லியில் உள்ள மகாராஷ்டிர மாநில இல்லத்தில், ஐ.ஆர்.சி.டி.சி. உணவு வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரம் மகாராஷ்டிரா சதானுக்கு வந்த சிவசேனா எம்.பி.க்கள் 11 பேர், தங்களுக்கு சாப்பிட மகாராஷ்டிர மாநில பாரம்பரிய உணவு வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் பணியில் இருந்த ஊழியர்கள் அவர்களுக்கு சப்பாத்தியை பரிமாறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா கட்சி எம்.பி.க்கள், ரம்ஜான் நோன்பு மேற்கொண்டிருந்த முஸ்லீம் மேற்பார்வையாளரை வலுக்கட்டாயமாக சப்பாத்தியை வாயில் திணித்து சாப்பிட வைத்துள்ளனர் என்ற…

  20. காசா மீது தொடர் தாக்குதல் காசாவின் மீது தற்போது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில், இஸ்ரேல் போர்க் குற்றங்களை இழைத்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை தெரிவித்துள்ளார். இந்த மோதல்களின்போது, பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க போதிய முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டன என்று இஸ்ரேல் கூறுவது தொடர்பில், சந்தேகங்கள் உள்ளன என்று நவி பிள்ளை கூறியுள்ளார். அந்தத் தாக்குதலில், காசாவின் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த ஏழு சிறார்கள் இலக்குவைத்து தாக்கப்பட்டது போலத் தெரிகிறது.ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மேற்கோள்காட்டியுள்ள அவர், அது சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் எந்த அளவுக்கு துச்சமாக மதிக்கப்பட்டன என்பதை அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில…

  21. நெருக்கடியான சூழலில் தாய்வானில் தரையிறங்க முயன்ற விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இதில் 47 பேர் பலியாகினர் எனவும் 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தாய்வானின் ட்ரான்ஸ் ஏசியா விமானம் பெங்கு தீவில் இருக்கும் மகோங் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்தது. இந்த விமானத்தில் ஐம்பத்தி நான்கு பயணிகளும் நான்கு சிப்பந்திகளும் இருந்ததனர் என தாய்வானின் சி.என்.ஏ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜிஈ222 என்ற இந்த விமானம் தரையிறங்க முயன்று, பிறகு விபத்திற்குள்ளானதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. - http://malarum.com/article/tam/2014/07/23/3891/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%A…

    • 0 replies
    • 964 views
  22. வளர்ச்சி, முன்னேற்றம் என்று கூறிக்கொண்டு ஆட்சியைப் பிடித்தவுடனேயே இந்தித் திணிப்பு உள்ளிட்டு தனது பார்ப்பன பாசிச நடவடிக்கைகளைத் தீவிரமாகத் தொடங்கிவிட்டது மோடி அரசு. வெளியுறவுத் துறையில் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைத்தான் பயன்படுத்த வேண்டுமென்ற அறிவிப்பு ஏற்கெனவே வந்துள்ள நிலையில், 1963-ம் ஆண்டின் அலுவல் மொழிகள் சட்டம் மற்றும் ஆட்சி மொழிச் சட்டத்துக்கு எதிராக பொதுத்துறை வங்கிகள், நிறுவனங்கள், வெளியுறவுத்துறை உள்ளிட்ட அனைத்து அமைச்சகங்களின் அதிகாரிகள் மட்டுமின்றி, அலுவலர்களும் சமூக வலைத்தளங்களில் இந்தியில்தான் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த மே 27 அன்று உள்துறை அமைச்சகத்திலிருந்து உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனைச் சரியாகப் பின்பற்றுவோருக்குப் பரிசுத்தொகையும் வழங்கப்போவதாக…

    • 6 replies
    • 727 views
  23. கிழக்கு உக்ரேனில் மலேசிய எம்.எச். 17 விமானம் விபத்துக்குள்ளான தளத்தில் அந்த அனர்த்தத்தில் உயிரிழந்த ஒருவருக்கு சொந்தமான மோதிரமொன்றை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் ஒருவர் களவாடுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று சமூக இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சியில் இராணுவ சீருடையணிந்த 3 கிளர்ச்சியாளர்கள் விமான சிதைவுகளிடையே பொருட்களை ஆராய்வதில் ஈடுபட்டுள்ளமை காண்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களில் கறுப்பு தொப்பி அணிந்துள்ள கிளர்ச்சியாளர் தங்க மோதிரம் போன்ற பொருளை சிதைவுகளிலிருந்து எடுக்கிறார். அந்த மோதிரம் மலேசிய விமானத்தில் பயணித்து உயிரிழந்த பயணியொருவரின் பயணப் பொதியிலிருந்தோ அல்லது அவரது சடலத்திலிருந்தோ எட…

  24. கலாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் தயாநிதி மாறன்| கோப்புப் படம். ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்தது தொடர்பாக முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போதிய ஆதாரம் இருப்பதாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரஸ்தோகி தெரிவித்துள்ளார். ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்தில் தயாநிதி மாறன் முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக போதிய ஆதாரம் இருக்கிறது என ரஸ்தோகி முடிவுக்கு வந்துள்ளார். மேலும், இவ்விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக சிபிஐ தரப்பு விசாரணை இயக்குநரின் கருத்துடன் அட்டர்னி ஜெனரல் முகுல் ரஸ்தோகி ஒத்துப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வழக்கை விசாரித்து வந்த சிபிஐ விசாரணை அதிகாரி, ஏர்செல் - மேக்சிஸ் வழக…

    • 0 replies
    • 301 views
  25. சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவ்த் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவத்தினர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இந்திய நாட்டின் ஒரு ராணுவ வீரரை அவர்கள் கொன்றால், பாகிஸ்தானின் 10 ராணுவ வீரர்களை கொன்று பாடம் புகட்ட வேண்டும் என்றார். இது குறித்து அவர் கூறுகையில்.... பாகிஸ்தானுடன் நட்பு பாரட்டுவதை எப்போதும் சிவசோன எதிர்த்து வருகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும. அவர்களுடன் எந்த விதமான பேச்சும் நடத்த கூடாது. பாகிஸ்தான் நமது ஒருவீரரை கொன்றால், அவர்கள் நாட்டின் 10 வீரர்களை கொன்று பாடம் புகட்ட வேண்டும். அவர்களுக்க அந்த மொழியே சரிதயானது என்றார். http…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.