உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27041 topics in this forum
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கத்தார் அணியினர் ஹிஜாப்புடன் தென் கொரியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்த கத்தார் நாட்டுப் பெண்கள் கூடைப்பந்து அணியினர், போட்டிகளின் போது, இஸ்லாமிய முறைப்படி அவர்கள் அணியும் தலை அங்கிகளை அகற்றுமாறு கோரப்பட்டதை அடுத்து போட்டிகளிலிருந்து விலகிவிட்டனர். ஹிஜாப் என்ற இந்தத் தலை அங்கியை அவர்கள் மங்கோலியாவுக்கு எதிராக நடந்த போட்டியின்போது அகற்றுமாறு கோரப்பட்டனர். அவர்கள் அதைச் செய்ய மறுத்ததை அடுத்து, இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தனர். உலகக் கூடைப்பந்து விதிகள் இதுபோன்ற தலை அங்கிகளை ஆடுகளத்தில் அணிவதைத் தடை செய்கின்றன. ஆனால் இந்த விதியைத் தளர்த்த வேண்டுமா என்பது குறித்து இந்த விளையாட்டை நிர…
-
- 2 replies
- 462 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை ஒழிக்க அமெரிக்கா உறுதி! – ஐ.நாவில் ஒபாமா கர்ஜனை. [Thursday 2014-09-25 09:00] வன்முறையால் உலகின் பல நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.சபை பொதுக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். போருக்கும் சமாதானத்துக்கும் இடையே உலகம் சிக்கி தவிக்கிறது.ம் ஒழுங்கின்மைக்கும் ஒருங்கிணைப்புக்கும் இடையே உலகம் சிக்குண்டுள்ளது. ஈராக், சரியாவில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புகள் அழிக்கப்பட்டாக வேண்டும். அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை ஒழிக்க பாடுபட வேண்டும். ஒழிக்க ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை ஒழிக்க அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. கெடுபிடிப் போர் காலத்துக்குப் பிந்தைய நிலையை ரஷிய நடவடிக்கை மாற்றிவிட்டது. உக…
-
- 0 replies
- 541 views
-
-
ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட பிரெஞ்சுப் பிணைக் கைதி ஹெர்வே கோர்டெல். | ராய்ட்டர்ஸ் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிணைக் கைதியின் தலையை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் துண்டித்தனர். பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹாலண்டே இதனை உறுதிசெய்துள்ளார். அல்ஜீரியாவில், ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் ஹெர்வே கோர்டெல் (55) பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரது தலையை துண்டித்து ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் படுகொலை செய்ததாக தகவல் வெளியானது. தகவலை உறுதி செய்த பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹாலண்டே: இச்செயல் மிகவும் கொடூரமானது, கோழைத்தனமானது என கண்டித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள நியூயார்க் சென்றுள்ள பிரான்ஸ் அதிபர், ஐ.எஸ். செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார…
-
- 1 reply
- 453 views
-
-
மிரட்டல் காரணமாக தாம் வெளியிடும் ஈழமுரசு என்னும் பிரான்ஸில் இருந்து வெளிவரும் தமிழ் சஞ்சிகையை நிறுத்தப்போவதாக அதனை வெளியிடும், ஊடக இல்லம் என்னும் அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கரங்கள் என்று தாம் சந்தேகிக்கும் வகையில் நேரடியான கொலை மிரட்டலும், மின்னஞ்சல் மூலமான மிரட்டலும் விடுக்கப்பட்டதாக அந்த ஊடக இல்லத்தின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கோபிராஜ் என்பவர் தொலைபேசி மூலம் பிபிசியிடம் தெரிவித்தார். இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் கருத்தினை பெற மேற்கொண்ட முயற்சிகள் உடனடியாகப் பலனளிக்கவில்லை. பிரான்ஸில் காணப்படுகின்ற சில குழுக்களுக்கிடையிலான முரண்பாடு காரணமான மிரட்டலே இந்த பத்திரிகை மூடப்படுவதற்கு காரணம் என்று கூறப்படுவதையும் கோபிராஜ் மறுத்தார். அவர்…
-
- 1 reply
- 610 views
-
-
சில காலம் முன்புவரை டொமினிக்கன் குடியரசில் வத்திக்கானத்தின் பிரதிநிதியாக இருந்துவந்த உயர் அந்தஸ்து கொண்ட போலந்துப் பேராயர் ஜோசஃப் வெஸெலொவ்ஸ்கியை சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்ய போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் தற்போது உத்தரவிட்டுள்ளார். சிறுபிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டினை கர்ரீபியன் தீவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் 66 வயது பேராயர் மீது முன்மைக்க திருச்சபை அங்கியை அவர் ஏற்கனவே கழற்ற வேண்டியதாயிற்று. குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து வத்திகானத்தின் மூத்தப் பிரதிநிதியாக இருந்த ஜோசஃப் வெஸெலொவ்ஸ்க்கி சென்ற ஆண்டு ரோமுக்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்தார். 2008 முதல் 2013 வரையான காலகட்டத்தில் டொமினிக்கன் குடியரசில் சிறா…
-
- 2 replies
- 530 views
-
-
பிரதமர் மோடியின் நவராத்திரி விரத 'மெனு': அமெரிக்காவுக்கு இந்திய அதிகாரிகள் அறிவுரை செப்டம்பர் 29- ஆம் தேதி அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்திருக்கும் இரவு உணவு உபசரிப்பில், மோடியின் விரதத்தை கருத்தில் கொண்டு மோடிக்கு வெறும் எலுமிச்சை சாறு கலந்த நீரும் தேநீரும் வழங்க ஏற்பாடு செய்யும்படியும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. செப்டம்பர் 26-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். நியூயார்க்கில் உள்ள அமெரிக்க-வாழ் இந்தியர்களுக்காக அவர் உரையாற்ற உள்ளார். மேலும் பயணத்தின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருநாட்டு வெளியுறவு கொள்கைகள் குறித்து அதிபர் ஒபாமாவுடன் அவர் கலந்தாலோசிக்க உள்ளார். மோடியின் வருகைக…
-
- 0 replies
- 568 views
-
-
சிரியா: அமெரிக்க வான்வழித் தாக்குதலில் 58 பேர் பலி சிரியாவில் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 58 கொல்லப்பட்டதாக ஐ.நா. கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. சிரியா மற்றும் இராக்கில் ஆக்கிரமித்து வந்த ஐ.எஸ்-ஸுக்கு எதிரான வான்வழித் தாக்குதலை சிரியாவின் மேற்கு நகரமான அலீபோ எல்லையோரம் அமெரிக்கப் படைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், செவ்வாய்கிழமை நடத்திய தாக்குதலில் மட்டும் 58 பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் 50 பேர் கிளர்ச்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று உறுதி செய்யப்பட்டதாகவும், மற்றவர்கள் பொதுமக்கள் என்றும், அங்கு இருக்கும் ஐ.நா. கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. மேலும், சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்த இருப்பதாக அமெரிக்கா முன்பே எச்சரித்து …
-
- 0 replies
- 379 views
-
-
பிராந்திய யுத்தத்திற்கு தயாராகுமாறு சீன ஜனாதிபதி இராணுவத்திற்கு உத்தரவு. இந்திய நாளேடு ஆவேசம். சுமர் எல்லையில் சீன இராணுவம். இந்திய எல்லையில் சீன இராணுவம் ஊடுருவியுள்ள நிலையில் பிராந்திய மட்டத்திலான யுத்தம் ஒன்றுக்கு தயாராகுமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங், சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பீஜிங் நகரில் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த மூன்று ஜெனரல்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கிய பின்னர் சீன ஜனாதிபதி இவ்வாறு கூறியதாக ரைம்ஸ் ஒப் இந்திய என்ற ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய சீன படையினர் லத்தீன் கிழக்குப் பிராந்தியத்தின் எல்லையில் சர்ச்சையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் சீனப் ஜனாதிபதியின் பிராந்திய யுத்தம் என்ற கருத்து சந்தேகத்த…
-
- 0 replies
- 486 views
-
-
துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த தங்க பேரீச்சம்பழம் ! [Tuesday 2014-09-23 13:00] பேரீச்சம்பழத்தில் இருந்த நிஜமான கொட்டைகளை எடுத்துவிட்டு, அதே வடிவில் தங்கத்தை உருக்கி பேரீச்சம் பழ தோலில் மறைத்து தங்க பிஸ்கட்களை கடத்தி வந்த கேரள நபரை சுங்கத் துறையினர் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து ஏர்,இண்டியா விமானம் நேற்று காலை 8 மணிக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், கேரள மாநிலம் காசர்கோட் பகுதியை சேர்ந்த முகமது உசேன் (22), என்பவர் சுற்றுலா பயணியாக துபாய்க்கு சென்றுவிட்டு சென்னை வந்தார். சுங்க அதிகாரிகளுக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. துபாயில் இருந்து நேரடியாக கேரளா செல்லாமல் சென்னை …
-
- 0 replies
- 439 views
-
-
ஜப்பானில் ஷிங்கான்சென் சூப்பர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி 50 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 1964 அக்டோபர் முதல் தேதி இது தொடங்கப்பட்டது. மணிக்கு 270 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இதைத்தான் புல்லட் ரயில் என்கிறார்கள். இந்த சேவையைப் பார்த்துப் பிரமித்து தங்கள் நாட்டிலும் இதைத் தொடங்கியவர்கள் பலர். ஆனால், இதற்கு இணையாக யாராலும் நடத்த முடியவில்லை. டோக்கியோவிலிருந்து ஒசாகா நகரம் வரை உள்ள 515.4 கி.மீ. தொலைவைக் கடக்க இந்த ரயிலுக்கு மொத்தம் 145 நிமிஷங்கள்தான் பிடிக்கின்றன. ஒரு நாளைக்கு 323 முறை இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு சுமார் 3,91,000 பயணிகள் இதைப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு பயணத்தின்போதும் ரயில் பெட்டிகள் துடைத்துப் பெருக்கிச் சுத்தப்படுத்தியதைப் போல அவ்வ…
-
- 1 reply
- 512 views
-
-
இலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில் மட்டும் தான், தேர்தலில் கள்ள ஒட்டு போடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? "வளர்ச்சி அடைந்த", "ஜனநாயக" மேற்கத்திய நாடுகளிலும் அது தாராளமாக நடக்கிறது. ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பில், பிரிட்டிஷ் அரசுக்கு சார்பான முடிவுகளைப் பெறுவதற்காக, கள்ள ஒட்டு போடப் பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. வாக்குச் சீட்டு எண்ணுபவர்களே கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர். ஆஹா! இதுவன்றோ ஜனநாயகம்! ஸ்காட்லாந்து பிரிந்து தனி நாடாவதற்கான பொது வாக்கெடுப்பு, கடந்த 18 செப்டம்பர் இடம்பெற்றது. வாக்கெடுப்புக்கு முன்னர், பிரிவினைக்கு ஆதரவாக "ஆம்" என்று வாக்களிக்க விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப் பட்டது. பிரிந்து சென்றால் பொருளாதார ரீதியாக பல பின்னடைவுகள் ஏற்படும் என்ற…
-
- 2 replies
- 806 views
-
-
போராட்டத்தில் ஈடுபட்ட சீனப் பல்கலைக்கழக மாணவர்கள் | படம்: ராய்ட்டர்ஸ் ஹாங்காங்கில் சீனாவின் கட்டுப்பாட்டை எதிர்த்தும் வெளிப்படையான ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துவதை வலியுறுத்தியும், ஹாங்காங்கில் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிட்டனின் காலனியாதிக்கத்திலிருந்த ஹாங்காங், கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. ஹாங்காங்கில் ஒரு நாடு இரு ஆட்சி முறை அமலில் உள்ளது. அதாவது ஹாங்காங்கின் தலைமை நிர்வாகியை சீன அரசுதான் தேர்ந்தெடுக்கும். பாதி சுயாட்சி என்ற அடிப்படையில்தான் ஹாங்காங் நிர்வாகம் இருந்து வருகிறது. இதை எதிர்த்து, ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தி, ஹாங்காங் தலைமை நிர்வாகியைத் தேர்ந்தெடுக்க வேண்டும…
-
- 1 reply
- 350 views
-
-
குழந்தையை கொன்ற பெண்ணுக்கு ஊசி மூலம் மரண தண்டனை! [saturday 2014-09-20 14:00] அமெரிக்காவின் டெக்காஸ் நகரை சேர்ந்தவர் மெர்சல்லா. இவருடன் விசாகோல் மேன் என்ற பெண் தங்கியிருந்தார். இதற்கிடையே மெர்செல்லா வெளிநாடு செல்ல விரும்பினார். எனவே தனது 9 வயது மகன் தேவன் டேயை விசாகோல் மேனிடம் ஒப்படைத்து நல்லபடியாக பார்த்து கொள்ளும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் சிறுவன் தேவன்டேயை நல்லபடியாக கவனிக்கவில்லை. மாறாக அவனை சித்ரவதை செய்தார். உணவு வழங்காமல் பட்டினி போட்டு கொடுமைப்படுத்தினார். இதனால் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான். இச்சம்பவம் கடந்த 2004-ஆம் ஆண்டு நடந்தது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட விசா கோல் மேனுக்கு கடந்த 2006-ஆம் ஆண்டில் மரண தண்டனை விதி…
-
- 0 replies
- 502 views
-
-
-
பிரதமர் ஜான் கீ நியுசிலாந்தில் ஆளும் தேசியக் கட்சி மூன்றாவது தடவையாகவும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கின்றது. கிட்டத்தட்ட 99 வீதமான வாக்குகள் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், 48 வீதமான வாக்குகளை பிரதமர் ஜான் கீ- இன் தேசியக் கட்சி வென்றுள்ளது. இதன்மூலம் ஆளுங்கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியும். எதிரணியான தொழிற்கட்சி 25 வீதமான வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பசுமைக் கட்சி 10 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது. நாட்டின் வரலாற்றில் இம்முறை தேர்தல் பிரசாரமே 'மிகக் கேவலமானது' என்று வர்ணிக்கப்பட்டிருந்தது. ஆளுங்கட்சியினர் தங்களின் எதிராளிகளை இழிவு படுத்துவதற்காக அரசியல்-இணைய எழுத்தாளர்களை பயன்படுத்தி நாட்டின் முக்கிய பிரச்சனைகளை இருட்டடிப்புச் செய்ததாக விமர்சனங்கள் உள்ளன.…
-
- 0 replies
- 408 views
-
-
பாரதியார் பயன்படுத்திய ஹார்மோனிய பெட்டியை காண்பிக்கிறார் அவரது பேரன் கே.வி.கிருஷ்ணன். உத்தரப் பிரதேசத்தில் சுப்பிரமணிய பாரதியார் வசித்த வீட்டை தேசிய நினைவுச் சின்னமாக்குவதற்கான முயற்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் தமிழுக்காக குரல் கொடுத்து வருபவருமான தருண் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர், நேற்று முன்தினம் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் யசோ நாயக்கை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது இதுதொடர்பாக மனு ஒன்றையும் அவர் சமர்ப்பித்துள்ளார். வாரணாசியில், கங்கை நதிக் கரையில் உள்ள கேதார்காட் பகுதியில் பாரதியாரின் அத்தை வாழ்ந்த வீடு உள்ளது. பாரதியாரின் தந்தை இறந்த பிறகு, அத்தை ருக்மணி அம்மாள் அவரை வாரணாசிக்கு அழைத்…
-
- 0 replies
- 363 views
-
-
பிலாவல் பூட்டோ| படம்: ராய்டர்ஸ். காஷ்மீரின் ஓர் அங்குலம் அளவுகூட இந்தியாவிடம் விட்டுவைக்க மாட்டோம், இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை முழுவதுமாக எடுத்துக்கொள்வோம் என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். பெனாசிர் அலி பூட்டோவின், மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் பகுதியில் அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது இதனை தெரிவித்தார். பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு வயது 20. அவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இளம் தலைவராவார். இந்நிலையில், தங்களது பாகிஸ்தான் மக்கள் கட்சியானது, இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை முழுவதுமாக எடுத்துக்கொள்ளும். காஷ்மீரின், ஓர் அங்குலம் அளவுகூட இந்தியாவிடம் விட்டுவைக்காது என பேசியுள்ளது பரபரப்பை…
-
- 0 replies
- 441 views
-
-
பிரான்ஸ் போர் விமானங்கள் ஈராக்கில் தாக்குதலைத் தொடங்கின! [saturday 2014-09-20 08:00] ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டுப் போர் விமானங்கள் முதல் தாக்குதலை நடத்தியிருப்பதாக அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது.ஈராக்கின் வட கிழக்குப் பகுதியில் இருந்த ஐஎஸ் பாசறை ஒன்றின் மீது விமானங்கள் தாக்குலை நடத்தியதாகவும் வரும் நாட்களில் மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் அதிபர் அலுவலகம் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத மத்தியில் அமெரிக்கா ஐஎஸ் இயக்கத்தினர் மீது 170க்கும் மேற்பட்ட தடவைகள் விமானத் தாக்குதல்களை நடத்தியது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் பல நகரங்களும் சிறுநகரங்களும் இருக்க…
-
- 0 replies
- 622 views
-
-
அவுஸ்திரேலியாவை தீவிரவாதிகள் இலக்குவைக்கக் கூடும் என்ற புலனாய்வுத் தகவலையடுத்து அந்நாட்டு பாராளுமன்றத்தின் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. கன்பராவிலுள்ள பாராளுமன்ற தளத்தின் பாதுகாப்பை அவுஸ்திரேலிய பொலிஸார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக பிரதமர் டோனி அப்பொட் தெரிவித்தார். சிட்னி நகரில் தீவிரவாதத்துக்கு எதிரான தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு ஒரு நாளின் பின்பே பாராளுமன்ற பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐ.எஸ். போராளிகளின் ஆதரவாளர்கள் அவுஸ்திரேலியாவில் தலையை வெட்டி படுகொலை செய்தல் உள்ளடங்கலான படுகொலைகளை செய்வதற்கு திட்…
-
- 0 replies
- 380 views
-
-
Subscribe இந்திய முஸ்லீம்கள் இந்தியாவுக்காக வாழ்ந்து உயிர் துறப்பார்கள்: மோடி இந்திய முஸ்லீம்களின் தேசப்பற்று குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது எனக் கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து, இந்தியாவுக்காகவே உயிர் துறப்பார்கள் என தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள மோடி, இந்திய முஸ்லிம்கள் தங்களது தாளத்திற்கு ஏற்ப ஆடுவார்கள் என அல் காய்தா இயக்கம் தவறான எண்ணத்தை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இம்மாத கடைசியில் தாம் மேற்கொள்ள இருக்கும் அமெரிக்க பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மோடி, இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான உறவு…
-
- 0 replies
- 388 views
-
-
ஆண்மைக் குறைவு..! திருமணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனை! மத்திய-மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் நோடீஸ்! [Friday 2014-09-19 21:00] தேனி மாவட்டம், போடி நாயக்கனூரைச் சேர்ந்த வாலிபருக்கும், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்தப் பெண் தனது கணவருக்கு ஆண்மைக் குறைவு இருப்பதாக கூறி விவாகரத்து கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆண்மைக் குறைவு உள்ளதை மறைத்து ஏமாற்றி திருமணம் செய்ததாக கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி சமூக நலத்துறை அதிகாரியிடம் புகார் கொடுத்தார். சமூக நலத்துறை அதிகாரியின் அறிக்கை அடிப்படையில் திருச்சி ஜூடிசியல் மாஜ…
-
- 0 replies
- 502 views
-
-
தம் தரப்பு வெற்றியை கொண்டாடும் வாக்காளர்கள் ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக 55.42% வாக்குகளும் பிரிவினைக்கு ஆதரவாக 44.58% வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன. ஸ்காட்லாந்தில் மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப்பிரதேசங்களில் 31 உள்ளூராட்சிப் பிரதேசங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் வெளியாகிவிட்டன. இறுதி முடிவுகளின்படி ஸ்காட்லாந்த் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லக்கூடாது என்று 1,914,187 பேரும் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று 1,539,920 பேரும் வாக்களித்திருந்தனர். இந்த தேர்தல் முடிவுகள் குறித்து முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவித்திர…
-
- 15 replies
- 1.5k views
-
-
வீட்டிலேயே ரூ. 348 கோடியில் மருத்துவமனை - சூமாக்கரின், மருத்துவ செலவு வாரத்திற்கு ஒரு கோடி ரூபாய்! பெர்ன்: பனிச்சறுக்கு விளையாட்டில் படுகாயமடைந்து கடந்த 9 மாதங்களாக சிகிச்சைப் பெற்று வரும் பார்முலா -1 கார் பந்தய வீரர் மைக்கேல் சூமாக்கரின் மருத்துவச் செலவு வாரத்திற்கு ஒரு கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்முலா-1 கார் பந்தயத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் மைக்கேல் சூமாக்கர். இவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கினார். இதில், தலையில் பலத்த காயமடைந்த சூமாக்கர் சுயநினைவை இழந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த சூமாக்…
-
- 2 replies
- 354 views
-
-
அமெரிக்காவில் எபோலா வைரஸை பரப்புவதற்கு ஐ.எஸ் ஐ.எஸ் போராளிகள் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.எஸ்ஐ.எஸ் போராளி ஒருவர் புதிய திட்டங்கள் குறித்து எழுதியுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டத்தின் படி ஐ.எஸ்ஐ.எஸ் போராளிகள் பெப்சி போத்தலில் எபோலா வைரஸை கலந்து அதை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்று அங்குள்ள நீர் நிலைகளில் கலந்து விட திட்டமிட்டுள்ளது. மேலும் ஐஎஸ்ஐஎஸ் போராளிகளை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி அவர்களை எபோலா வைரஸ் தாக்கியதும், அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கு எபோலோ வைரஸை பரப்பவும் திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. http://virakesari.lk/articles/2014/09/18/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%…
-
- 0 replies
- 444 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்களை ஆபத்தான வழிகளில் அவுஸ்திரேலியா திருப்பி அனுப்பியுள்ளமை அம்பலமாகியுள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் வெளியிட்ட கருத்து மூலம் இந்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன. கடந்த ஒராண்டு காலப்பகுதியில் 12 புகலிடக் கோரிக்கையாளர் படகுகளை திருப்பி அனுப்பி வைத்ததாக ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். இதில் நான்கு படகுகள் ஒரேஞ் லைப் போட்ஸ் எனப்படும் ஆபத்தான படகுகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபத்தான நிலைமைகளில் உயிர் காப்பதற்காக பயன்படுத்தப்படும் அவசர படகுகளைப் பயன்படுத்தி புகலிடக் கோரிக்கையாளர் கடல் வழியாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் படகுகள் இந்தோனேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை, …
-
- 0 replies
- 260 views
-