Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உக்ரைன் விவகாரத்தின் எதிரொலியாக ரஷ்யா மீது புதிதாக கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க ஜி-7 நாடுகளின் தலைவர்கள் இன்று ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும், வரும திங்கள்கிழமைக்குள் அமெரிக்கா இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா ஆசியா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஜி-7 நாடுகளின் தலைவர்கள் அளித்துள்ள ஒப்புதல் அறிக்கையை வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டுள்ளது. அதில், 'ஜெனிவா உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ள எந்த முழுமையான நடவடிக்கையையும் ரஷ்யா எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் உக்ரைன் எல்லையில் தனது ராணுவத்தை குவித்து வருகிறது. உக்ரைனில் நிலவி வரும் பதற்றத்தை தணிப்பதற்காக கொண்டு வர…

  2. பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜீத் சிங் கோலி, நரேந்திர மோடி முன்னிலையில் பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, அம்மாநில முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோர் பங்கேற்றனர். பிரசார மேடையில் அவர்கள் முன்னிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் தல்ஜீத் சிங் கோலி, பாரதிய ஜனதாவில் தம்மை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து கருத்து தெரிவித்த நரேந்திர மோடி அவரது வருகை, பாரதிய ஜனதாவை மேலும் வலுப்படுத்தும் என்றார். தல்ஜீத் சிங் கோலியின் முடிவு குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கின் குடும்பம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. எனினும், அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இந்…

    • 2 replies
    • 518 views
  3. உக்ரேன் கிளர்ச்சியால் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் அபாயம்! [saturday, 2014-04-26 11:29:20] ரஷ்ய - உக்ரேன் நாடுகளுக்கிடையிலான நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் சுமார் 10 நகரங்களில் அரசு கட்டிடங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்துள்ளனர். உக்ரேனின் எச்சரிக்கையையும் மீறி அங்கிருந்து அவர்கள் வெளியேற மறுத்து வருகின்றனர். அவர்களை தனது செல்வாக்கை பயன்படுத்தி ரஷ்யா வெளியேற்ற வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் ரஷ்யா உடன்பாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில், ரஷ்யப்படையினர் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான தீவிர இராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ரஷ்ய துருப்பினர்…

  4. தற்போதைய காலங்களில் இங்கிலாந்து மக்கள் சகல தளங்களிலும் ஆபத்திருப்பது போன்ற பிரம்மையிற் பயந்து வாழ்வதாக கருத்துக் கணிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகையிரதத்திற்காகக் காத்திருக்கும் சந்தர்ப்பங்களிலும், பயணங்களின் போதும், தான் இயங்கிப் படிக்கட்டுகளில் செல்லும் சமயங்களிலும், இனம் தெரியாத பய உணர்வு மக்கள் மத்தியிற் காணப்படுவதாக அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புச் சந்தை நடைமுறைகளிலும், வேலை இடங்களுக்கான உத்தரவாதத்திலும் தேவையற்றுக் காணப்படும் சந்தேகம், பய உணர்வைத் தோற்றி நிற்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்து மக்கள், உணராத வகையில் பய உணர்வு அவர்கள் மனங்களில் ரகசியமாக குடியேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் வாதிகள் ம…

  5. மலையடிவாரத்து முகாமில் போராடும் ஷெர்பாக்கள் மலையேறுவோர்க்கு வழிகாட்டிகளாக இருந்துவரும் ஷெர்பா இனத்தார் 16 பேர் சென்ற வாரம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த பின்னணியில், தற்போதைய மலையேற்ற பருவத்தில் ஏனையோரின் பயணங்கள் தொடருமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. மலையேறச் சென்றிருந்த மற்றவர்களும் எவரெஸ்ட் சிகர அடிவராத்து முகாமிலிருந்து தற்போது கீழே இறங்கிவர ஆரம்பித்துள்ளனர். ஷெர்பாக்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையும், இமலயலையில் தற்போது காணப்படும் ஆபத்தான சூழலும் இந்நிலைக்கு காரணம். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்ற ஆர்வலர்கள் ஏறுவதற்குரிய காலம் என்பது ஒரு மூன்று மாத காலகட்டம்தான். ஷெர்பாக்களின் ஊதிய…

    • 0 replies
    • 424 views
  6. ராஜிவ் மரணமும் அரசியலும் - காங்கிரஸ் http://kumarikantam.blogspot.in/2014/04/blog-post_25.html

  7. புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு எதிராக வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் திடீரென உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை பிப்ரவரி 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த 3 பேர் உள்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்பட 4 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு தனது அதிகாரத்திற்குட்பட்டு முடிவெடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதையடுத்து இந்த 7 பேரையும் விடுக்க முடிவு செய்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த …

  8. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலிருந்து சென்ற விமானத்தில் 'பாதுகாப்பு உசார்நிலை' ஏற்படக் காரணமான பயணி ஒருவரை இந்தோனேசியாவின் பாலித் தீவு காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். முன்னதாக, விமானம் கடத்தப்பட்டுள்ளதாக இந்தோனேசிய இராணுவத்தினர் தகவல் வெளியிடவும் இந்தப் பயணியே காரணமாகியுள்ளார். குறித்த பயணி மதுபோதையில் இருந்ததாகவும் விமானிகளின் காக்பிட்- கட்டுப்பாட்டு அறையின் கதவை ஓங்கித் தட்டியதாகவும் அதன்பின்னர் அந்தப் பயணி மடக்கிப் பிடிக்கப்பட்டதாகவும் வர்ஜின் விமானசேவையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். இந்தத் தகவல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டமையே விமானம் கடத்தப்பட்டதாக முன்னதாக செய்திகள் வரக்காரணம் என்றும் அவர் தெரிவித்தார். விமானம் பாலியில் தரையிறங்கியபோது, விமானத்தை தமது கட்டுப…

  9. ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை விவகாரம்: இன்று தீர்ப்பு வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014 07:32 0 COMMENTS இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனைக் கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கவுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான முதன்மை அமர்வு இந்த மனு மீது தீர்ப்பு அளிக்கவுள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன, சாந்தன், பேரறிவாளன் ஆகியோர…

  10. கனடாவின் வான்கோவர் தீவில் நேற்றிரவு 6.7 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியில் ஆய்வகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ள பகுதியில் சுனாமி ஆபத்துகள் எதுவுமில்லை என அலஸ்காவிலுள்ள அமெரிக்காவின் சுனாமி எச்சரிக்கை அலுவலகம் கூறியுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=5239#sthash.HEHhPI5J.dpuf

  11. இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே நாளில் நடைபெறவுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 7-ம் நாள் தொடங்கி மே 12-ம் நாள் வரை 9 கட்டங்களாக 543 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரையில் 5 கட்டங்களாக மொத்தம் 311 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆறாவது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி,மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 60,817 வாக்களிப்பு நிலையங்களில், இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரை வாக்குப்…

  12. பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் இணைந்து இடைக்கால அரசொன்றை அமைக்க முடிவெடுத்துள்ளன ஒன்றோடொன்று போட்டியிட்டுப் போராடிய பாலஸ்தீன விடுதலை இயக்கங்களான "கமாசும்"(Hamas) வ(f)ற்ராவும்(Fatah) இணைந்து இடைக்கால அரசொன்றை அமைக்க முடிவெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பரஸ்பரம் பகைமை பாராட்டிய இரு அமைப்புகளும் இணைந்து வருகின்ற ஐந்து கிழமைகளுக்குள், முகமட் அபாஸ் தலைமையில், இடைக்கால அரசாங்கத்தை அமைக்க எடுத்த முடிவானது இஸ்ரேல் பிரதமர் பென்ஜாமின் நெற்ரன்ஜாகுவைக் குழப்பமடையச் செய்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரு பாலஸ்தீன விடுதலை அமைப்புகளும் இணைவதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே 2011 இல் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், நடை முறைப்படுத்தப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் …

    • 0 replies
    • 394 views
  13. வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். இந்நிலையில், வாரணாசி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தனது பெற்றோர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ பேரணியாக சென்றார். பின்னர் வாரணாசியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வாரணாசி தொகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, கெஜ்ரிவால் முகாமி…

  14. உலகில் முதல்முறையாக செயற்கை ஆணுறுப்பு மூலம் குழந்தை பெற்றுகொண்ட அமெரிக்கர்! [Wednesday, 2014-04-23 12:40:33] உலகில் முதன்முறையாக செயற்கை ஆணுறுப்பு பொருத்தி ஒருவர் தந்தையாகி உள்ளார். அமெரிக்கா மிசிசிபி நகரை சேர்ந்தவர் மைக் மோர் (வயது30) . இவர் 7 வயதாக இருக்கும் போது ஒரு தவறான அறுவை சிகிச்சையால் இவரது ஆணுறுப்பு பாதிப்பு அடைந்தது. இதனால் அவர் தந்தையாக முடியாது என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். இருந்தாலும் மைக் மோர் தனது 25 வது வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரது இயலாமையை காரணம் காட்டி அந்த பெண் அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்னார் அவர் 2007 ஆம் ஆண்டு சீன டாகடர் கோர்டான் லீயை சந்தித்தார். டாக்டர் லீ அவரது குறையை போக்க முன்வந்தார். செயற்கையான ஆ…

  15. சோனியா காந்திக்கு உடல்நலக்குறைவு: பிரசார பொறுப்பை ஏற்றார் பிரியங்கா.. [Tuesday, 2014-04-22 10:49:22] பாராளுமன்றத்துக்கு இதுவரை 5 கட்டங்களாக 223 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 311 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசார பணிகளில் எல்லா கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. காங்கிரசில் தேர்தல் பிரசார பொறுப்பை சோனியாவும், ராகுலும் ஏற்றிருந்தனர். இந்த நிலையில் சோனியாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.ஆஸ்துமாவால் அவர் கடுமையாக அவதிப்படுகிறார். இதனால் அவரது தேர்தல் பணிகளை அவரது மகள் பிரியங்கா காந்தி ஏற்றுள்ளார். பிரிங்கா காந்தி தற்போது அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சோன…

  16. வட லண்டனின் டொட்டென் ஹாம் பிரதேசத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த காரொன்றிலிருந்து குழந்தையுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை பொதுமக்கள் துணிகரமாக செயற்பட்டு காப்பாற்றியுள்ளனர். தீ அனர்த்தம் ஏற்பட்டபோது அந்தக் காரிலிருந்த வயோதிபர் ஒருவர் ஆசனப்பட்டியிலிருந்து விடுவிக்க முடியாது போராடிய அதேசமயம், குழந்தையும் காரின் ஆசனத்தில் பிணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியாக சென்ற இருவர் மீட்புப் பணியாளர்கள் வருவதன் முன் துரிதமாக செயற்பட்டு அனைவரையும் காரிலிருந்து பாதுகாப்பாக மீட்டனர். அவர்கள் இறுதியாக குழந்தையை மீட்பதற்கு ஒருசில செக்கன்களில் கார் பாரிய வெடிப்புச் சத்தத்துடன் தீப்பற்றி எரிந்துள்ளது. மேற்படி துணிகர மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் உள்ளூர்வா…

  17. கணவர் பாதுகாப்பு சட்டம் கொண்டுவருவோம்: சுயேட்சை வேட்பாளர் வாக்குறுதி. அகமதாபாத்: தேர்தல் வந்துவிட்டால் போதும் வேட்பாளர்களின் வாக்குறுதிகள் வண்ணமயமாய் வாக்காளர்களின் கதவுகளை தட்டும். குஜராத் மாநிலத்தில் ஒரு வேட்பாளர் கொடுத்த வாக்குறுதி இருக்கிறதே கொஞ்சம் வித்தியாசமானதுதான். எனக்கு ஓட்டு போட்டால் மனைவியிடம் அடிவாங்கும் கணவரை பாதுகாப்போம் என்று ஆண்களை டச் செய்யும் வகையில் வாக்கு சேகரித்து வருகிறார் ஒரு சுயேட்சை வேட்பாளர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு சுயேட்சை வேட்பாளர் சொல்லும் வாக்குறுதிகளும் அப்படித்தான் உள்ளது. ஆமதாபாத் கிழக்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் தஷ்ரத் தேவ்தா என்பவர், மனைவியால் அடித்து- உதைத்து தாக்கப்படும் கணவரை காப்பாற்றுவோம். அதற்கு ஏற்…

  18. கனடியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களில் பாதிக்கு மேற்ப்பட்டவை பழுதடைந்தவை! [Monday, 2014-04-21 18:58:44] கனடியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களின் எண்ணிக்கையில் அரைவாசித் தொகையானவை பழுதடைந்த நிலையில் குறிப்பாகத் திருத்தப்பட வேண்டிய கட்டத்தில் இருக்கின்றன எனத் தெரிகின்றன. கிட்டத்தட்ட அரைவாசிக்கும் அதிகமான கடற்படைக் கப்பல்களும் மற்றும் நீர் முழ்கிக்க கபெ;பல்களும திருத்தப்பபட வேண்டிய கட்ட்த்தில் இருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 33 பிரதான கபபல்குளும் மற்றும் நீர்மூகிக் கப்பல்களும் இருக்கின்றபோது அவற்றில் 15 திருத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன எனத தெரியவருகிறது. இவற்றைத்தவிர 4 கப்பல்கள் பரீட்சிக்கப்படுகின்றன எனவும் தெரியவருகிறது. …

  19. போபால்: மத்திய பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சிங்ராவ்லி மாவட்டம் நலதானி என்ற இடத்தில் சிறுமி ஒருவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பேருந்தில் இருந்தவர்கள், சித்திக் பகுதியில் இறங்கிவிடுவதாக கூறி பேருந்தில் சிறுமியை ஏறுமாறு கூறியிருக்கின்றனர். அந்த சிறுமியும் அதை நம்பி பேருந்தில் ஏறியிருக்கிறார். அந்த பேருந்தில் ஒரு டிரைவர் 2 கிளினர் உள்பட 5 பேர் இருந்துள்ளனர். பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், பேருந்தில் இருந்த 5 பேரும் சிறுமியை பலவந்தமாக பலாத்காரம் செய்த…

  20. அமெரிக்காவின் அதிநவீன துப்பாக்கி வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் ஒவ்வொரு நாடும் புதிது புதிதாக போர்க்கருவிகளை உருவாக்கி வருகின்றன. அந்தவகையில், வெடிபொருள் உதவியின்றி இயங்குகிற மின்காந்த துப்பாக்கி ஒன்றை முதன்முதலாக பயன்படுத்த அமெரிக்க கடற்படை திட்டமிட்டுள்ளது. ‘ரெயில்கண்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த துப்பாக்கி, ஒலியை விட 7 மடங்கு வேகத்தில் தோட்டாக்களை செலுத்தும் திறன் வாய்ந்தது. மேலும் இதன் மூலம் 160 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இலக்குகளை தாக்க இயலும். இதில் உள்ள மின்காந்த விசை, தோட்டாக்களை வேகமாக வெளிச்செலுத்த உதவும். இதன் மூலம் பாரம்பரிய துப்பாக்கிகளை விட அதிக வேகத்தில் இந்த துப்பாக்கி செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் இதை பரிட்சித்…

  21. முடிவில்லா மர்மமாக தொடரும் மலேசிய விமான மாயம்.. [sunday, 2014-04-20 16:28:55] மலேசியாவில் இருந்து சீனா நோக்கி சென்று நடுவானில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானத்தின் பாகங்களை தேடும் பணி இன்றுடன் 44வது தினத்தை அடைந்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் சோனார் கருவிகள் கொண்டு நடத்தப்படும் தேடுதல் பணி ஒரு வாரத்தில் முடிவு பெறும் என்று ஆஸ்திரேலிய தேடுதல் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலேசியாவில் இருந்து சீனா நோக்கி சென்ற எம்.எச்.370 என்ற மலேசிய விமானம் கடந்த மார்ச் 8ந்தேதி நடுவானில் மாயமானது. அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் குறித்த தகவல் வெளிவரவில்லை. விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்திருக்க கூடும் என்று கிடைத்த…

  22. உக்ரைனின் கிழக்குபகுதி மக்கள் ஜெனிவா ஒப்பந்தத்தை ஏற்க மறுப்பு சனி, 19 ஏப்ரல் 2014 (13:18 IST) உக்ரைனின் கிழக்கு பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைக்க வலியுறுத்தி போராடி வரும் மக்கள், போராட்டத்தை நிறுத்திக் கொள்ள வலியுறுத்தும் ஜெனிவா ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் ஒருபகுதியாக இருந்த கிரிமியா பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் தன்னை இணைத்துக் கொண்டது. இந்நிலையில், கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இதனை எதிர்த்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, ஜெனிவாவில் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைன், மற்றும் ரஷ்யா ஆகி…

  23. தெற்கு சூடான் பாதுகாப்பு முகாம் மீதான தாக்குதல் போர்க்குற்றமாகவே கருதப்படும்: ஐ.நா கண்டனம் [saturday, 2014-04-19 12:43:11] ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள தெற்கு சூடான் நாட்டில் அரசு துருப்புகளுக்கும், முன்னாள் துணை அதிபரின் போராளிப் படைகளுக்கும் இடையே சில மாதங்களாக நடைபெற்றுவரும் அதிகார சண்டையில் அப்பாவி பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 500க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளதால் தஞ்சம் தேடி மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறி உள்ளனர். இவர்களுக்கு அடைக்கலம் அளிக்க ஐ.நா அமைதிப்படை வீரர்கள் ஆங்காங்கே பாதுகாப்பு முகாம்களை அமைத்து அவர்களைத் தங்க வைத்துள்ளனர். இதுபோல் போர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் ஐயாயிரம் பேர் அகதிகளாகத் …

  24. https://www.youtube.com/watch?v=emw_qloQGqU

  25. பனிப்புயலில் சிக்கி 6 பேர் மரணம் ( எவெரெஸ்ட் சிகரத்தை எட்டும் முயற்சியைக் காட்டும் ஆவணப்படம்) எவெரெஸ்ட் சிகரத்தை நோக்கிச் செல்லும் இமயமலைப் பாதையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென்று வீசிய பனிப்புயலில் சிக்கி குறைந்தது ஆறு உள்ளூர் வழிகாட்டிகள் (ஷெர்பாக்கள்) இறந்தனர் என்று நேபாள அதிகாரிகள் கூறுகின்றார். எவெரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற முயலும் மலையேறிகள் அங்கு செல்வதற்கு முன் புறப்படும், சுமார் 5,800 மீட்டர் உயரத்தில் இருக்கும் எவரெஸ்ட் கீழ்மட்ட முகாம் என்ற இடத்தில் இருந்து சற்று மேலே இந்த பனிப்புயல் தாக்கியதாக ஒரு அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார். இந்த ஷெர்பா வழிகாட்டிகள் இன்று அதிகாலை , அவர்களுக்கு பின் வரவிருந்த மலையேறிகளுக்கு கயிறுகளைக் கட்டி பாதைகளை சீர்படுத்…

    • 1 reply
    • 447 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.