உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26909 topics in this forum
-
பாகிஸ்தானில் பிள்ளைக்கறி தின்ற சகோதரர்களுக்கு 12 ஆண்டு சிறை இஸ்லாமாபாத், ஜூன் 11- பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பக்தார் மாவட்டம் டர்யா கான் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் முகமது ஆரிப் மற்றும் பர்மான் அலி ஆகியோர் தங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடுகாட்டில் உள்ள சவக்குழிகளை தோண்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அவர்களைக் கைது செய்து விசாரித்தபோது, குழியில் இருந்து தோண்டிய பிணங்களை சகோதரர்கள் இருவரும் பச்சையாகத் தின்றதாக தெரியவந்தது. கடந்த 2011ம் ஆண்டு அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுத் தந்தனர். தண்டனை காலம் முடிந்து 2013ல் விடுதலையான இவர்கள், கடந்த ஏப்ரல் மாதத்த…
-
- 0 replies
- 386 views
-
-
பிரேசில்: 32 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி நாளை (12ஆம் தேதி) பிரேசில் நாட்டில் கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான உலக கோப்பை கால்பந்து போட்டி நாளை (12ஆம் தேதி) பிரேசில் நாட்டில் தொடங்குகிறது. 32 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியை நடத்த பிரேசில் அரசு ரூ.84 கோடி செலவழித்துள்ளது. இவ்வளவு தொகை எந்த உலக போட்டியிலும் செலவழிக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3,450 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கவுள்ள இந்த போட்டியை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தியுள்ள பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தொடங்கி வைப்பார் எனவும் அறிவிக்கப்…
-
- 0 replies
- 659 views
-
-
ஜெயலலிதா கொண்டுவந்த மழை நீர் சேகரிப்பு திட்டம் நாடு முழுவதும்... புதுடெல்லி: குடியரசு தலைவர் உரையில் தெரிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வருகிற 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு என்பது கட்டாயம் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார். மேலும் 'ஊழல் இந்தியா' என்பதை 'திறமை மிகு இந்தியா' வாக மாற்ற வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார். மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் பதில் உரையாற்றினார். பிரதமராக பதவியேற்றபின் முதல்முறையாக அவர் மக்களவையில் உரையாற்றினார். மோடி பேசுகையில், "குடியரசுத் தலைவர் உரை பற்றிய அனைவரின் பேச்சையும் கூர்ந்து கேட…
-
- 0 replies
- 309 views
-
-
தொடரும் அச்சம் காரணமாக தொடர்ச்சியாக வெளியேறும் மக்கள் இராக்கின் மோசுல் நகரை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து ஐந்து லட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர் என்று அச்சங்கள் வெளியாகியுள்ளன. அந்த நகரை கைப்பற்றியுள்ள, இராக்கிய இஸ்லாமியத் தேசம் மற்றும் இசிஸ் என்று அழைக்கப்படும் லெவெண்ட் அமைப்புகள் மேலும் முன்னேறி வருகின்றன.மோசுல் இராக்கின் இரண்டாவது பெரிய நகரம். இது அந்தப் பிராந்தியத்துக்கே மிகவும் அபாயகரமானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. முன்னேறி வரும் இசிஸ் அமைப்பினர் அல் கயீதாவின் ஒரு கிளை அமைப்பான இசிஸ், இப்போது கிழக்கு சிரியா, மேற்கு மற்றும் மத்திய இராக் ஆகிய பகுதிகளில் கணிசமான அளவுக்கு நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதுதவிர இ…
-
- 1 reply
- 611 views
-
-
லண்டன் மற்றும் ஐரோப்பிய நகரங்களில் டாக்சி ஒட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் ஸ்மார்ட் போன் "செயலிகள்" ( அப்ளிக்கேஷன்) மூலம் வாடகைக் கார் ( டாக்ஸி) சேவைகளைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதற்கு எதிராக பல ஐரோப்பிய நகரங்களில் வாடகைக் கார் ஓட்டுநர்கள் இன்று புதன் கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைச் செய்து வருகிறார்கள். லண்டனின் பிரசித்தி பெற்ற கறுப்பு வாடகைக் கார் ஓட்டுநர்கள் நகர மையத்தினூடாக வண்டிகளை மெதுவாக ஓட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறார்கள். பாரிஸ், பெர்லின் , ரோம் மற்றும் பிற முக்கிய ஐரோப்பிய நகரங்களில் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து இயங்கும் உபெர் என்ற "திறன்பேசி செயலி" சேவை வாடகைக்கார் த…
-
- 1 reply
- 442 views
-
-
லண்டன்: புளுஸ்டார் ஆபரேஷனின் 30ம் ஆண்டு நினைவுநாளையொட்டி லண்டனில் சீக்கியர்கள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில், மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப் பட்டதால் பதட்டம் உண்டாகியுள்ளது. கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை அப்புறப்படுத்த இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் புளூஸ்டாரில் சீக்கியர்கள் பலர் பலியானார்கள். இதனை நினைவு கூறும்வகையில் ஆண்டுதோறும் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு அமிர்தசரஸ் பொற்கோவிலில் ‘ஆபரேஷன் புளூஸ்டாரின் 30-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது பொற்கோவில் வளாகத்தில் இரு பிரிவினருக்கு இடையே திடீர் மோதல்…
-
- 1 reply
- 599 views
-
-
விடுதலைக்காக போராடிய வீரர்களின் புகைப்படங்களுடன் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் கேரள கல்லூரியின் ஆண்டு மலரில் வெளியானதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழா சிறப்பு மலரில் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி உட்பட 7 பேரின் படம் வெளியானது. இச்சம்பவம் தொடர்பில் கல்லூரி முதல்வர் உட்பட 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம் குளத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் 2012–2013–ம் ஆண்டு விழாவுக்கான சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் வெளியான அக்கல்லூரி விழா சிறப்பு மலரின் ஒரு பக்கத்தில் நல்ல முகங்கள் என்ற தலைப்பில் மகாத்மா காந்தி அன்னை தெரசா …
-
- 1 reply
- 788 views
-
-
லண்டனில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதற்கு வெளிநாட்டினரின் வருகைதான் முக்கியக் காரணம்... லண்டன் இப்போது குற்றவாளிகளின் நகரமாக மாறிக்கொண்டுவருகிறது. கள்வர்கள், போதைப்பொருள் கடத்துபவர்கள், சிறுவர்களைப் பாலியல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்கிறவர்கள், கொலைசெய்கிறவர்கள், பிள்ளைகளைக் கடத்துகிறவர்கள், பெண்கள் மீதான வன்முறையைப் பிரயோகிப்பவர்கள் என்று குற்றங்கள் நிறைந்த இடமாகக் காணப்படுகிறது. உள்ளூர் ஆங்கிலத் தொலைக்காட்சிகளிலெல்லாம் ‘கள்வர்கள் கவனம்’ என்று விளம்பரம் போட்டுச் சொல்லுமளவுக்குக் குற்றச்செயல்கள் அதிகரித்திருக்கின்றன. இறக்குமதியாகும் குற்றங்கள் லண்டனில் வெளிநாட்டவர்களின் வருகைக்குப் பின்னர்தான் களவும், கொள்ளையும் குற்றச் செயல்களும் அதிகரித்துவிட்டதாக வெள்ளைக்கார நண்பர…
-
- 12 replies
- 1.1k views
-
-
கைதான நிலையில் கியென் (கோப்புப் படம்) கோடிக்கணக்கான டாலர்கள் மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக, வியட்நாமின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரும், ஆடம்பரம் மிக்க தொழிலதிபர்களில் ஒருவருமான ங்யுயென் டுக் கியெனுக்கு (Nguyen Duc Kien) முப்பது ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹனோய் நகரின் தலைசிறந்த கால்பந்தாட்ட அணியின் உரிமையாளராக இருக்கின்ற கியென் வரி ஏய்ப்பு செய்ததாகவும் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் குற்றங்காணப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு கியென் கைதுசெய்யப்பட்டபோது அவர் ஆரம்பித்திருந்த ஏசியா கமர்ஷியல் பேங்க் என்ற பெரிய வங்கியின் பங்கு விலைகள் சரிவைக் கண்டிருந்தன. முன்பு இவர் வியட்நாம் பிரதமர் ங்யுயென் டன் ஸுங்க்கு (Nguyen Tan Dung) நெருக்கமாக இருந்தவர்…
-
- 0 replies
- 410 views
-
-
புதுடெல்லி: கங்கை நதியை தூய்மைப்படுத்ததும் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த தொடங்கி உள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கங்கை ஆற்றில் எச்சில் துப்பினாலோ அல்லது குப்பை உள்ளிட்ட கழிவு பொருட்களை போட்டாலோ 3 நாட்கள் சிறைத்தண்டனை அல்லது 10,000 ரூபாய் அபராதம் விதிப்பதற்கான சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இத்தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, "கங்கை நதியை தூய்மைப்படுத்துவது எங்கள் அரசின் முன்னுரிமையாகும். அதற்காக மற்ற நதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்பது அர்த்தமாகாது. முதலில் கங்கை நதியை தூய்மைப்படுத்துவதை நதி தூய்மைக்கான முன்னுதாரணமாக கொண்டு வர உள்ளோம்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. h…
-
- 3 replies
- 787 views
-
-
மோடி பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து இந்திய நாடாளுமன்றத்தில் முதலாவது ஒன்றிணைந்த அமர்வு நேற்று ஆரம்பமாகியது. இந்த அமர்வு எதிர்கட்சித் தலைவர் ஒருவர் இல்லாத நிலையில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும். இந்தியாவின் அரசியலமைப்பின் படி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக இருப்பதற்கு கட்சியொன்று 10 சதவீத ஆசனங்களை பெற்றிருக்க வேண்டும். அதாவது குறைந்த 55 ஆசனங்களை கொண்டிருக்க வேண்டும். எனினும், பிரதான கட்சியாக இந்திய காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த தேர்தலில் 44 ஆசனங்களையே பெற்றுள்ளதாள் நேற்று இடம்பெற்ற முதலாவது ஒன்றிணைந்த நாடாளுமன்ற அமர்வு எதிர்கட்சித் தலைவர் ஒருவர் இன்றி இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்கட்சி அந்தஸ்து வழங்க முடியாது என, லோக்சபா சபாநாயகர் ச…
-
- 0 replies
- 413 views
-
-
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா சிறப்பான வளர்ச்சி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வோங்-ஜீ இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையை தீர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தவுடன் சீனாவுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க இந்தியாவின் மத்திய அரசு முடிவு செய்த நிலையில் நேற்றைய தினம் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வோங்-ஜீ டில்லி சென்றிருந்தார். இந்நிலையில் டில்லியில் பிரதமர் மோடி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இச்சந்திப்பில் சீனா தனது வெளியுறவுக்கொள்கையில் இந்தியாவுக்கும் இந்தியா தனது வெளியுறவுக்கொள்கையில் சீனாவுக்கும் முன்னுரிமை கொடுக்கு…
-
- 2 replies
- 957 views
-
-
ஸ்காட்லாந்து தனிநாடாக பிரிந்துசெல்வதை ஆதரிப்போரின் பிரச்சாரம் ஸ்காட்லாந்து சுதந்திரம் தொடர்பான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், சுதந்திரத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் தமக்கான ஆதரவைத் திரட்டும் தீவிர பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளனர். ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோவில் இன்று கூடிய 100 பேர், சுதந்திரத்தை ஆதரிக்கும் வகையில் யெஸ் -YES (ஆம்) என்ற வார்த்தையை பிரதிபலிக்கும் வகையில் கூடிநின்றனர். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உள்ள மூன்று பிரதான அரசியல்கட்சிகளும் ஸ்காட்லாந்து தனியாக பிரிந்துசென்று சுதந்திர நாடாவதை எதிர்க்கின்றன. ஸ்காட்லாந்து தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியத்துடன் சேர்ந்தே இருக்குமானால் அப்பிராந்தியத்திற்கு மேலதிக அதிகாரங்…
-
- 8 replies
- 660 views
-
-
அண்டார்டிக் சமுத்திரத்தில் ஜப்பானின் திமிங்கில வேட்டை விஞ்ஞான நோக்கம் கொண்டது அல்ல: சர்வதேச நீதிமன்றம் அண்டார்டிக் கடலில் தமது வருடாந்த திமிங்கில வேட்டையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே கூறியுள்ளார். 1986-ம் ஆண்டில் திமிங்கில வேட்டைக்கு உலக அளவில் கொண்டுவரப்பட்ட தடையையும் தாண்டி ஜப்பான் அதன் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துவந்தது. ஆனால், ஜப்பானின் நடவடிக்கை உண்மையில் விஞ்ஞான ஆய்வுகளுக்கானது அல்லவென்று கூறிய சர்வதேச நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருந்த நிலையில், திமிங்கில வேட்டை இந்த ஆண்டில் கைவிடப்பட்டது.விஞ்ஞான ஆய்வுகளுக்காக மட்டும் திமிங்கில வேட்டையை அனுமதிக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே ஜப்பான் அதனை முன்…
-
- 1 reply
- 620 views
-
-
தாஜ்மஹால் இந்தியாவின் மிகப் பிரபலமான சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் வெண் பளிங்கு கற்கள் சுற்றுச்சூழல் மாசின் காரணமாக மஞ்சள் பூத்திருப்பதால், அதன் சுவர்கள் சேறு பூசி சுத்தம் செய்யப்படவுள்ளன. சுண்ணாம்புச் சத்து நிறைந்த சேற்றை சுவர்களில் மெழுகினால் பளிங்கு கற்கள் அதன் இயற்கையான பொலிவை மீண்டும் பெரும் என்று இந்திய தொல்லியல் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 17ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் தனது மனைவி மும்தாஜ்ஜுக்காக கட்டப்பட்ட காதல் சின்னம் தாஜ்மஹால். சேறு மெழுகும் முறையைப் பயன்படுத்தி தாஜ்மஹால் சுத்தம் செய்யப்படுவது இது நான்காவது முறை. தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகரம், அதிகமான மாசை வெளியேற்றும் பல தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள ஊராகும். bbc tamil
-
- 1 reply
- 865 views
-
-
ஹிமாச்சலப்பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த 24 மாணவர்கள் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம் வி.என்.ஆர். பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குலுமனாலிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். பீஸ் நதிக்கரையில் மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அபோது லார்ஜி நீர்மின்நிலையத்திட்டம் செயல்படும் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய 6 மாணவிகள், 18 மாணவர்கள் உள்பட மொத்தம் 24 பேரும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில்: "…
-
- 0 replies
- 497 views
-
-
புதுடெல்லி, ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி சிறைபிடிப்பது வாடிக்கையாகி விட்டது. நடுக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்றும், இன்றும் 82 தமிழக மீனவர்களை இலங்கை கற்படை கைது செய்துள்ளது. 18 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. மீண்டும் மீண்டும் இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை…
-
- 1 reply
- 440 views
-
-
பாகிஸ்தான் கராய்ச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையம் மீது தீவிரவாதிகள் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு தாண்டி.. பலத்த தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை 5 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதோடு சில விமானங்கள் தேசமடைந்துள்ளதாகவும்.. இன்னும் தாக்குதல் தொடர்வதோடு.. விமான நிலையம் புகைமூட்டமாக காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு சர்வதேச விமான நிலையமான இந்த விமான நிலையத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன்.. விமானங்கள் திசை திருப்பி விடப்பட்டுள்ளனவாம். மேலும் விமான நிலைய ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனராம். இதனிடையே தீவிரவாதிகள் விமான ஓடுபாதையிலும் தாக்குதல் நடத்தி விமானம் ஒன்றைக் கைப்பற்றி உள்ளதாகவு…
-
- 3 replies
- 745 views
-
-
செங்கொடிமீடியா டாட் காம் புதிய இணைய தளம் கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார்! செங்கொடி வெளியீட்டு நடுவத்தின், sengodimedia.com என்ற இணைய தளம் இன்று (7.6.2014) உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இன்டர்நெட் பயன்பாடு மற்றும் ஆன் லைன் வர்த்தகம் நாளுக்க நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இக் காலகட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை இணையம் மூலம் ஒன்றிணைப்பதும், ஆன் லைன் வர்த்தகத்தை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துவதும் இன்றியமை யாதது. இதனடிப்படையில், செங்கொடி வெளியீட்டு நடுவம் என்ற தயாரிப்பு நிறுவனம் sengodimedia.com என்ற இணைய தளத்தை உருவாக்கி உள்ளது. தமிழர் நலன் சார்ந்து உலகம் முழுவதும் இருந்து வெளிவரும் புத்தகங்கள், ஆவணப்படம்-க…
-
- 0 replies
- 633 views
-
-
கனடாவின் மாங்டன் நகரில், இராணுவ உடையில் வந்த நபர் ஒருவர், பொலிஸ் வாகனத்தின் மீது நேற்றுமுன்தினம் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவத்தில் 3 பொலிஸார் பலியாகியதுடன் 2 பேர் காயமடைந்தனர். இதேவேளை துப்பாக்கி சூடு நடத்திய மேற்படி நபரை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜஸ்டின் பார்க் என்ற நபர் தனது 'பேஸ்புக்கில்', ‘ஹூக் இன் தி மவுத்’ என்ற பிரபல பாடல் வரிகளுடன், ‘எங்களை முட்டாளாக்க முயற்சிக்க வேண் டாம், என்ன நடக்கும் என்பது எங்களுக்கு தெரியும். எங்களுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமை உள்ளது’’ என்ற தகவலை வெளியிட்டுள்ளான். மேலும் இரண்டு பேர், காட்டு பகுதியில் துப்பாக்…
-
- 7 replies
- 754 views
-
-
'யுக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் முழு உறுப்புரிமை பெற அயராது உழைப்பேன்': புதிய அதிபர் யுக்ரேனின் புதிய அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ, தமது நாட்டின் இறைமையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதாக உறுதியேற்றுள்ளார். கடந்த மார்ச்சில் ரஷ்யாவுடன் இணைந்த க்ரைமியா யுக்ரேனின் அங்கமாகவே எப்போதும் கருதப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தலைநகர் கியேவில் நடந்த பதவியேற்பு நிகழ்வுக்குப் பின்னர் பேசிய பொரோஷென்கோ, ஐரோப்பிய ஒன்றியத்தில் யுக்ரேனுக்கு முழு உறுப்புரிமை பெறுவதற்காக அயராது உழைக்கவுள்ளதாக கூறியுள்ளார். பெரும் செல்வந்தரான பெட்ரோ பொரோஷென்கோ, யுக்ரேனின் குழப்பநிலைமையை நிறுத்துவதற்கான தனது திட்டங்களையும் முன்வைத்துள்ளார். தனக்கு பழிவாங்கவோ மோதலில் ஈடுபடவோ எண்ணம் இல்லை என்றும் கூறிய…
-
- 0 replies
- 275 views
-
-
வாசிம் அக்ரம். | கோப்புப் படம் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமின் நாட்டுப்பற்று குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்தன. மேலும் ஐபிஎல் அணியான கொல்கத்தாவின் பயிற்சியாளராகவும், கிரிக்கெட் போட்டிகளின் போது வர்ணனையாளராகவும் அவர் செயல்பட்டது குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக பாகிஸ்தானில் இவரது நாட்டுப்பற்று பற்றி சிலர் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஜியோ நியூஸ் சானலில் இதைப்பற்றி வாசிம் அக்ரம் பேசுகையில், "இது போன்ற நாகரிகமற்ற கருத்துக்களை என் மீது விமர்சனமாக வைக்கும்போது எனக்கு ஆத்திரம் ஏற்படுவதுண்டு, அவர்கள் என் எதிரே இதையெல்லாம் எழுதினால் நான் இதை அவர்களைப்போலவே எதிர்கொள்வேன். பயிற்சியாளராக இருப்பது மற்றும் வர்…
-
- 1 reply
- 467 views
-
-
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள், பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் ஜூன் 12-ம் தேதி ஆரம்பிக்க இருக்கும் நிலையில், உலககோப்பைக்கு எதிரான பிரேசில் மக்களின் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. தாங்கள் வறுமையில் வாடும் பொழுது, பிரேசில் அரசு கால்பந்து போட்டிகளுக்காக பலகோடிகளை வாரி இறைப்பதை கண்டித்து மக்கள் தெருவிலிறங்கி போராடி வருகிறார்கள். இந்தியாவை போன்ற ஏழைகளின் நாடான பிரேசில், உலககோப்பைக்கு என இதுவரை சுமார் $11 பில்லியன்(ரூ. 65,274 கோடி) வரை செலவிட்டுள்ளது. இதில் பழைய மைதானங்களை புதுப்பிப்பதற்கு என சுமார் 3.6 பில்லியன் வரை (ரூ.21,362 கோடி) செலவாகியுள்ளது. இது தவிர புதிதாகவும் மைதானங்கள் கட்டப்படுகின்றன. தலைநகர் பிரேசில்லாவில் கட்டப்பட்டு வரும் மே கிரின்ச்சா மைதானத்திற்கான செ…
-
- 3 replies
- 814 views
-
-
இன்று Normandie தரையிறக்க 70வது ஆண்டு நாள் நினைவு கூரப்பட்டது. உலகத்தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு உலக வீரர்கள் பலரும் கலந்து தமது இனிய இளைய உயிர்களைத்தியாகம்செய்த இவ்வீர வரலாற்றை பதிந்துள்ளனர். இந்தப்போரிலே பிரான்சை ஐரோப்பாவை விடுவிக்கும் ஏன் உலகை விடுவிக்கும் இந்த போரிலே தமது இனிய இளைய உயிர்களைத்தியாகம்செய்த இவ்வீரர்களுக்கு வீர வணக்கங்கள் இந்தப்போரில் தமது உயிர்களை காவு கொடுத்த லட்சக்கணக்கான பொதுமக்களுக்கும் அஞ்சலிகள்... DEBARQUEMENT - Une journée pour l'histoire. 70 ans après le Débarquement, ce 6 juin 2014 a été l'occasion de nombreuses commémorations en Normandie. 0inShare 0 DEBARQUEMENT - Une journée pour l'histoire. 70 a…
-
- 4 replies
- 788 views
-
-
நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள 4 கிராமங்களுக்குள் புகுந்து போகோஹரம் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 500 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நைஜீரியாவில் மேற்கத்திய கல்வி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போகோஹரம் இஸ்லாமிய தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்களை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள 4 கிராமங்களுக்குள் நேற்று திடீரென புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். தேவாலயங்கள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சுட்டு தள்ளியுள்ளனர். இதில் 500 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நைஜீரியாவில் கடந்…
-
- 1 reply
- 388 views
-