உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27038 topics in this forum
-
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிடம் பயிற்சி பெற்ற தமிழர்கள் தமிழகத்தில்! சுப்ரமணிய சுவாமியின் புதிய புரளி இது! [Friday 2014-07-11 22:00] ஈராக் மற்றும் சிரியாவில் ஆயுதமேந்தி போராடும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திடம் பயிற்சி பெற்ற தமிழகம் மற்றும் ஈழத் தமிழர்கள் தமிழகத்துக்குள் ஊடுருவியிருப்பதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி புதிய பரளி புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பதாவது.. இந்திய அரசியல்வாதிகளால் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் தொடர்பாக எனக்குத் தெரியவந்…
-
- 0 replies
- 523 views
-
-
பாக்தாத்: அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தம் மூலப் பொருளான யுரேனியத்தை சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையிடம் ஈராக் திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளது. ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. இந்தப் போரில் ஈராக்கில் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியுள்ளது. இஸ்லாமிய தேசம் சிரியா மற்றும் ஈராக்கில் தமது அமைப்பு கைப்பற்றிய பகுதிகளை ஒன்றிணைத்து "இஸ்லாமிய தேசம்" என்ற தனிநாடும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக பக்தாதி அறிவிக்கப்பட்டும் இருக்கிறார். இவருக்கு கீழ்தான் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் இருக்க வேண்டும் என்றும் கட்டளை பிறப்…
-
- 1 reply
- 758 views
-
-
சோமாலியக் கடற்கொள்ளையர்களின் பிடியில் கடந்த 44 மாதங்களாக இருக்கும் தமிழர் ஒருவரை விடுவிக்க மாநில அரசு உதவ முன்வர வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும், செயல்பாட்டாளர்களும் கோரியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் பகுதியைச் சேர்ந்த டெனிசன் உட்பட 15 பேர், 28.9.2010 முதல் கடற்கொள்ளகியர்களின் பிடியில் உள்ளனர் என்றும், அவர்களில் 8 பேர் மட்டுமே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் புன்னைக்காயல் கப்பல் மாலுமிகள் சங்கத்தின் உறுப்பினர் வெர்ஜில் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தொடர்புடைய விடயங்கள் ஆட்கடத்தல் இவர்களை விடுவிக்க ஒன்பது கோடி இந்திய ரூபாய்கள் வரை அவர்கள் கோரியுள்ளதாக, டெனிசன் ஒரிரு தினங்களுக்கு முன்னர் தமது குடும்பத்தாருடன் தொலைபேசியில் உரையாடியபோ…
-
- 0 replies
- 486 views
-
-
புதுடெல்லி: 2014-15ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் சிகரெட், பான் மசாலா, குட்கா, எவர்சில்வர் பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் டி.வி., சோப், செருப்பு உள்ளிட்டவை மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால், இவற்றின் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2014-15ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் முக்கிய சிறப்பு அம்சங்கள் வருமாறு: * எவர்சில்வர் பொருட்களுக்கான வரி 5 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாக அதிகரிப்பு. * வைரம், நவரத்தினக் கற்களின் விலை குறையும. * சோடா பானங்களுக்கு கூடுதலாக 5 சதவிகிதம் உற்பத்தி வரி. * சோப்புகள் தயாரிப்புக்கான உற்பத்தி வரி குறைக்கப்படும். இதனால், …
-
- 0 replies
- 959 views
-
-
புதுடில்லி:அமெரிக்காவுக்கு தற்காலிக பணியாளர்களாக செல்லும், இந்தியர்களுக்கு வழங்கப்படும், 'எச்1பி' விசாவுக்கு, அந்நாட்டு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் தற்காலிகமாக பணிபுரிவதற்காக, 'எச்1பி' விசாவை அந்நாட்டு அரசு வழங்குகிறது. ஆண்டுதோறும், 85 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படுகின்றன.இந்த விசாவை பெற்றவர்கள், ஆறு ஆண்டுகள் வரை, அமெரிக்காவில் தங்கியிருந்து பணிபுரியலாம். அமெரிக்காவில், ஏறக்குறைய ஆறு லட்சம் பேரிடம் இந்த விசா உள்ளது.இந்நிலையில், அதிகளவு இந்தியர்களுக்கு, இந்த விசா வழங்கப்படுவதால், தங்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுவதாக, அமெரிக்கர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளனர். அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக…
-
- 1 reply
- 441 views
-
-
புதுடெல்லி: விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தின் போது மக்களவையில் ராகுல் காந்தி தூங்கிக் கொண்டிருப்பது போன்ற காட்சி டி.வி.யில் ஒளிபரப்பானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பட்ஜெட் கூட்டம் நேற்று முன்தினம் (7ஆம் தேதி) தொடங்கியது. இந்நிலையில், இன்று (9ஆம் தேதி) பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். இதையடுத்து, விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கண்களை மூடி, தலையை வலதுபுறமாக தொங்க விட்டு கொண்டிருந்தது போன்ற காட்சி நாடாளுமன்ற டி.வி.யில் ஒளிபரப்பானது. மேலும் இந்த காட்சி வலைதளங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகு…
-
- 1 reply
- 453 views
-
-
சம்சுங் தொழிற்சாலை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் 36 மில்லியன் டொலர் (சுமார் 469 கோடி ரூபா) பெறுமதியான இலத்தினரியல் சாதனங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. பிரேஸில் நாட்டில் சாவோ பவ்லோ நகருக்கு அருகிலுள்ள கம்பினாஸ் எனுமிடத்திலுள்ள சம்சுங் இலத்திரனியல் நிறுவனத்தின் தொழிற்சாலையிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினமிரவு தீடிரென தொழிற்சாலைக்குள் புகுந்த ஆயுதம் தாங்கிய 20 பேர் கொண்ட குழுவொன்று 200 பணியாளர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டே கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக உள்ளுர் பொலிஸார் ஏ.ஃப்.பிக்கு தெரிவித்துள்ளார். இதன்போது 40 ஆயிரம் ஸ்மார்ட் போன்கள், லெப்டொப்கள், டெப்லட் உள்ளிட்ட மேலும் பல இலத்திரனியல் சாதனங்களும் கொள்ளையிடப…
-
- 0 replies
- 368 views
-
-
புதுடெல்லி: வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ‘நேஷனல் ஹெரால்டு’ நாளேட்டுக்கு சொந்தமான சுமார் ரூ.1.600 கோடி சொத்துக்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் அபகரித்துக் கொண்டனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த வழக்கில் ஆகஸ்ட் 7ஆம் தேதி நேரில் ஆஜராகக் கோரி சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது சட்ட விரோத பண பரிவர்த்தன…
-
- 0 replies
- 366 views
-
-
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அமித் ஷா பா.ஜனதாவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக முந்தைய தலைவரான ராஜ்நாத் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டெல்லியில் இன்று பா.ஜ.க.வின் ஆட்சி மன்றக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜ்நாத் சிங் விலகினார். இதனையடுத்து பா.ஜனதாவின் புதிய தலைவராக, ஆட்சி மன்றக்குழுவில் இடம்பெற்றுள்ள 12 உறுப்பினர்களால், அமித் ஷா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவர் உடனடியாக கட்சித் தலைவராக பதவியேற்றுக்கொண்டார். இத்தகவலை, கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங் அறிவித்தார். மோடி, அத்வானி வாழ்த்து பா.ஜனதா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமித்…
-
- 0 replies
- 329 views
-
-
அமெரிக்காவுக்கு செல்லும் விமானங்களில் சார்ஜ் செய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினி சாதனங்கள் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அல் கைதாவுடன் தொடர்புடைய தீவிரவாதிகளின் புதிய வகை குண்டுகளை தயார் செய்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளும் அச்சம் காரணமாகவே இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பிள் ஐ போன், சம்சுங் கலக்ஸி உள்ளிட்ட கையடக்கதொலைபேசிகள், டெப்லட்கள், லெட்டொப்கள் உள்ளிட்ட ஏனைய இலத்திரனியல் சாதனங்கள் சார்ஜ் செய்யப்படாமல் அமெரிக்க செல்லும் விமானங்களில் கொண்டு செல்ல தடை விதிக்க அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் தீர்மானம் செய்துள்ளனர். ஐரோப்பா, மத்திய கிழக்கு, ம…
-
- 2 replies
- 468 views
-
-
கிறிஸ்தவ பாதிரியார்களினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகி பாதிப்படைந்த சிறுவர்களிடம் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். சமீபகாலமாக சில கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் பிஷப்களால் உலகளவில் சிறுவர் - சிறுமிகள் பலர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகி பாதிக்கப்பட்டுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வாடிகன் சிட்டியில் நேற்று நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் பாதிரியார்களின் பாலியல் துஸ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் நீண்ட உரையாற்றினார் போப் ஆண்டவர். கெஞ்சிக் கேட்கிறேன்... பாதிரியார்களின் பாலியல் துஸ்பிரயோகத்தை மறந்துவிடும்படி உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் உங்களுக்கு செய்த கொடுமைகளை ஒருபோதும் ஏற்…
-
- 0 replies
- 354 views
-
-
ராஜீவ் கொலையில் விடுதலைப்புலி பத்மநாபனை விசாரிக்ககோரி வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ் சென்னை ஐகோர்ட்டில், மைலாப்பூரை சேர்ந்த ஜெபமணி மோகன்ராஜ் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘’முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை புலித் தலைவர் பிரபாகரன், அவரது நெருங்கிய நண்பரும், விடுதலை புலி இயக்கத்தை சேர்ந்தவருமான கே.பி. என்று அழைக்கப்படும் கே.பத்மநாபன் என்ற குமரன் பத்மநாபன், பொட்டுஅம்மான் உட்பட பலரை சி.பி.ஐ. பல்நோக்கு புலனாய்வு பிரிவு போலசார் தேடி வந்தனர். இந்த நிலையில், கே.பி. என்ற கே.பத்மநாபன் 2009-ம் ஆண்டு மலேசியாவில் வைத்து இலங்கை ராணுவம் கைது செய்தது. ராஜீவ்காந்தி கொலையில் பத்மநாபன்தான், நிதி உதவி வழங்கும் பொருளாளராக செயல்பட்டுள்ளார். இந்த கொலையில் நடந…
-
- 0 replies
- 490 views
-
-
பூமியின் கூரை என்று அழைக்கப்படும் நாடு திபெத். திபெத் பண்பாடு நடு ஆசியாவின் மலைப் பகுதியில் அமைந்துள்ள திபெத்தில் வாழும் மக்களின் பண்பாடு ஆகும். திபெத் பண்பாடு என்பது திபெத்திய பெளத்த சமயம், சீன, இந்தியப் பண்பாடுகள், மேற்கத்திய பண்பாடுகளின் தாக்கங்கள், இஸ்லாமியத் தாக்கங்கள் ஆகியவற்றை உள்வாங்கிய ஒரு தனித்துவம் மிக்க பண்பாடு என உலக இனவரைவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர்கள் வரையறுக்கிறார்கள். திபெத் பண்பாட்டின் ஒரு சின்னமாக வெளி உலகால் நன்கு அறியப்பட்ட முகம் திபெத்திய பெளத்த சமயத்தின் தலைவராகக் கருதப்படும் பாரம்பரிய தலாய் லாமா ஆவார். ஆனால் பேராசை கொண்ட சீனா, இந்தியாவின் தலைப் பாகமாக இருக்கும் இயமமலைத் தொடரில் திபெத் தேசம் இருந்ததால், அதனை தனதாக்கிக் கொள்வதன் மூலம், இந்தியாவை,…
-
- 0 replies
- 3.8k views
-
-
பிரித்தானிய தலைநகர் லண்டனில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களில் கட்டணங்களுக்கு இனிமேல் காசு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. முற்பணம் செலுத்தப்பட்ட அட்டைகள், சலுகைக் கட்டண அட்டைகள் முதலானவற்றின் மூலமே லண்டன் பஸ்களில் பயணிகள் தமது கட்டணங்களை செலுத்த முடியும். நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இத்திட்டம் அமுலுக்கு வருவதாக லண்டன் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் வருடாந்தம் 24 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களை சேமிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லண்டன் மா நகரில் சுமார் 24,500 பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் 0.7 சதவீதமான பஸ்கள் மாத்திரமே கட்டணங்களுக்கு காசை ஏற்றுக்கொள்ளும் நடைமுறையை தொடர்ந்தன எனவும் ஏனைய பஸ்கள் ஏற்க…
-
- 0 replies
- 423 views
-
-
Planes in 'near miss' at Barcelona airport 1 hour ago A plane spotter captured footage appearing to show the moment two aeroplanes almost collided at a Barcelona airport. An Airbus 340 is shown crossing the runway at El Prat Airport as a flight from Moscow is coming in to land. The pilot of the Boeing 767 from Russia then aborts the landing. The plane then lands safely on the runway shortly afterwards. Officials have denied passengers were in danger at any point. Footage courtesy of Miguel Ángel Ramírez Ruiz. Thanks http://www.bbc.co.uk/news/world-europe-28195337 ஸ்பெயின் நாட்டில் உள்ள பர்சிலோணா விமான நிலையத்தில் நடக்கவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 444 views
-
-
ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார்களால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்களை போப் பிரான்ஸிஸ் இன்று திங்கட்கிழமையன்று சந்திக்கிறார். பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட ஆறு பேரும் அவர் தினசரி நடத்தும், தனியான காலை நேர வழிபாடு ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு பின்னர் அவருடன் பேசுவார்கள். போப் பிரான்ஸிஸ் 16 மாதங்களுக்கு முன்னர் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இத்தகைய சந்திப்பு நடப்பது இதுவே முதன் முறையாகும். இது போல ரோமன் கத்தோலிக்கப் பாதிரியர்களின் பாலியல் துஷ்பிரயோகத்தைத் தான் சகித்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறியிருக்கும் போப் பிரான்ஸிஸ், இதைக் கையாள்வது திருச்சபையின் நம்பகத்தன்மைக்கு மிகவும் முக்கிய…
-
- 0 replies
- 462 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியத்தில் பள்ளிவாசல்கள் தகர்ப்பு 2014-07-07 12:47:53 ஐ.எஸ்.ஐ.எஸ் ஜிஹாத் இயக்கத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த கலீஃபா ஆட்சிக்குட்பட்ட தனிநாடாக பிரகடனம் செய்த பிராந்தியத்திலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை அழித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரலாற்று சிறப்புமிக்க வடக்கு ஈராக் மற்றும் சிரிய எல்லைப் பகுதிகளை இணைத்து இஸ்;லாமிய நாடாக (இஸ்லாமிக் ஸ்டேட்) ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் சுன்னி முஸ்லிம் ஜிஹாதிகளால் கடந்த மாதம் பிரகடனம் செய்யப்பட்டது, இந்நிலையில் தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மொசூல் நகரிலுள்ள இஸ்லாமியர்களின் அடையாளங்களாகவுள்ள சுன்னி முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் உட்பட 6 சியா முஸ்லிம்களின் பள்ளிவாசல…
-
- 0 replies
- 1.7k views
-
-
கொல்கத்தாவில் ஒட்டிப்பிறந்த இரட்டை பெண்களுக்கு 45வது வயதில் ஜசிமுதீன் அகமது என்ற ஆசிரியர் காதலராக கிடைத்துள்ளார். ஒட்டிப் பிறந்த இரட்டை பிறவிகளான கங்கா மற்றும் ஜமனா மோன்டால் ஆகியோர் சர்க்கஸ் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். 7 மாதங்களுக்கு முன் சர்க்கஸ் கம்பெனியில் சவுண்ட் என்ஜினியராக பணிபுரிய வந்த பள்ளி ஆசிரியரான ஜசிமுதீன் அகமது அவர்களை கண்டவுடன் காதல் கொண்டார். அவர்கள் இருவரும் இவர் தான் தங்களை உண்மையாக காதலிப்பதாக உணர்ந்தனர். ஆகையால் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தனர். இது பற்றி இரட்டையர்களில் ஒருவரான ஜமுனா கூறுகையில், கடந்த காலங்களில் நாங்கள் மிகவும் அவதிப்பட்டோம். இனிமேலும் நாங்கள் அவதிப்பட விரும்பவில்லை. வரும் காலம் முழுவதையும் நாங்கள் அவருடன் கழிப்போம் என …
-
- 0 replies
- 466 views
-
-
புதுடெல்லி: " ஷீரடி சாய்பாபா இறைச்சியை சாப்பிட்டவர், அவர் எப்படி இந்து கடவுள் ஆக முடியும்?" என்று துவாரகா பீடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த் சரஸ்வதி கூறியுள்ளார். இந்துக்கள் ஷீரடி சாய்பாபாவை வழிபடுவதற்கு, துவாரகா பீடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். யார் இறைச்சியை சாப்பிட்டாரோ அவர் இந்து கடவுளாக ஆகவே முடியாது என்று ஸ்வரூபானந்த சரஸ்வதி கூறியுள்ளார். சாய்பாபாவை வழிபடுபவர்கள் மற்ற கடவுள்களின் படங்களையும் பயன்படுத்துகின்றனர். பணம் பெறுகின்றனர் என்று கூறியுள்ள அவர், நமது கடவுள்களின் படங்களை பயன்படுத்தவில்லை என்றால், அவர்களுக்கு யார் அனைத்தையும் கொடுப்பார்கள் என்று எழுப்பியுள்ளார். இந்து கடவுள் புகைப்படங்களுடன் சாய்பாபாவின் பட…
-
- 3 replies
- 1.7k views
-
-
உலகப் புகழ் பெற்ற டப்பாவாலாக்கள் மூலம் இன்னொரு புதிய யோசனை, சத்தமில்லாமல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் அவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கின்றனர். டப்பாவாலா என்போர் மும்பையில் அலுவலங்களில் பணி புரிவோரின் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவைப் பெற்று, அவரவர்க்கு உரிய வகையில் உரிய நேரத்தில் வழங்கி, காலி உணவு டப்பாக்களை மீண்டும் அவரவர் இல்லங்களில் வந்து சேர்க்கும் பணியைச் செய்யும் தொழிலாளர்கள். டப்பாவாலா தொழிலில் ஈடுபடுவோர் பெரும்பாலும் ஆண்களே. இருசக்கர வாகனம், நடை, இரயில் என்று பல்வேறு வழிகளை அவர்கள் பின்பற்றுகின்றனர். தற்போது எஸ்.எம்.எஸ் என்று அறியப்படும் குறுஞ்செய்தி நுட்பத்தையும் தங்கள் தொழிலில் இவர்கள் பின்பற்றுகின்றனர். வேல்ஸ் இளவரசர் சார்லஸ் இந்தியா வ…
-
- 0 replies
- 666 views
-
-
இந்தியாவில் காணப்படும் 270 வகை பாம்பு இனங்களில் 60 வகை பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை. இவற்றில் பாம்புகளின் அரசனாக கருதப்படும் ராஜநாகம் மிகவும் அழகான மற்றும் மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பாகும். இதைத் தவிர சுருட்டைப் பாம்பு, நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன் ஆகிய 4 வகை பாம்புகளும் கொடிய விஷத்தன்மை உடைய பாம்புகளாக அறியப்படுகின்றன. இவற்றோடு இந்தியன் பைத்தான் என்ற மலைப்பாம்பு உலகில் காணக்கூடிய மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பரிஷினக்கடவு ஸ்நேக் பார்க்: கேரளாவின் மிகப்பெரிய பாம்புப் பூங்காவாக கருதப்படும் பரிஷினக்கடவு ஸ்நேக் பார்க் கண்ணூர் நகரத்திலிருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள பரிஷினக்கடவு எனும் சிறிய கிராமத்தõல் அமைந்துள்ளது. இங்கு ராஜநாகம…
-
- 0 replies
- 3.2k views
-
-
ஏழை மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைப்பதற்காக, வீட்டுக்கு பத்து ரூபாய் நன்கொடை யாக வசூலிக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார் ஒரு மாவட்ட ஆட்சியர். இது தேசிய செஞ்சிலுவை சங்கத்தின் உள்ளூர் அமைப்பின் மூலம் அமல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து ‘தி இந்து’விடம் பிஹார் மாநிலம் கைமூர் மாவட்ட ஆட்சியர் அர்விந்த்குமார் சிங் கூறியதாவது: மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் நான்கு லட்சம் குடும்பத்தின ரிடம் தலா ரூ.10ஐ நன்கொடை யாக தரும்படி கேட்டுக் கொண் டிருக்கிறோம். இதன்மூலம், குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் நல்ல வர வேற்பு உள்ளது. காரணம், உடனடி சிகிச்சை மற்றும் உதவிகள் கிடைக் காமல் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த …
-
- 1 reply
- 450 views
-
-
இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேரைக் காணவில்லை. இதுகுறித்து தேடுதல் மற்றும் மீட்புக் குழு தலைவர் மர்சுதி வெள்ளிக்கிழமை கூறியதாவது: இந்தோனேசிய தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு: 9 பேர் பலி நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தில் உள்ள டகூவோ கிராமத்துக்கு அருகே உள்ள தங்கச் சுரங்கத்தில் புதன்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் உயிருடனும் 9 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். மேலும் 4 பேரைக் காணவில்லை. என அவர் தெரிவித்தார். சமீப காலமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால், இந்தோ னேசியாவில் தங்கச் சுரங்கங்களில்…
-
- 0 replies
- 398 views
-
-
சோனியா, ராகுலுக்கு அடுத்த நெருக்கடி- வருமான வரித்துறை நோட்டீஸ்! டெல்லி: சர்ச்சைக்குரிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் வருமான வரி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. ஜஹவர்லால் நேரு காலத்தில் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அப்போது அந்த பத்திரிகைக்கு இருந்த கடனை அடைக்க காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டவிரோதமாக சோனியா, ராகுல் ஆகியோர் பணம் கொடுத்தனர்; அதற்கு ஈடாக நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான ரூ2 ஆயிரம் கோடி சொத்து அபகரிக்கப்பட்டது என்பது புகார். இது தொடர்பாக பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி வ…
-
- 0 replies
- 973 views
-
-
புதுடெல்லி: டெல்லி முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷீலா தீட்சித் பதவி வகித்தபோது, அவர் தங்கியிருந்த பங்களாவில் 31 ஏ.சி.க்கள், 25 ஹீட்டர்கள், 15 கூலர்கள் பொருத்தப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. டெல்லியில் கடந்த ஆட்சியின்போது, அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஷீலா தீட்சித் முதல்வராக பதவி வகித்தார். அப்போது அவர் மோதிலால் நேரு மார்க் பகுதியில் உள்ள 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு பங்களாவில் தங்கியிருந்தார். கடந்த டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததையடுத்து, ஷீலா தீட்சித் அந்த வீட்டை காலி செய்தார். இதையடுத்து அந்த வீடு ரூ.35 லட்சம் செலவில் புணரமைக்கப்பட்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஷீலா தீட்சித் …
-
- 0 replies
- 563 views
-