Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மெல்போர்ன், ஏப்.13 - இந்தியாவில் திருடப்பட்டு அஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த சிவன் சிலை, இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்படாவிட்டால் இருநாடுகளுக்கிடையேயான கலாசார உறவுகள் பாதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் தூதர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய துணைத் தூதராக 1991-ஆம் ஆண்டு பதவி வகித்த பெரா வெல்ஸ், இதுகுறித்து கூறியதாவது: 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தச் சிலை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு, அதற்குரிய இடமான தமிழ்நாட்டில் உள்ள கோவிலில் வைக்கப்பட வேண்டும். இந்தியாவில் தற்போது நடைபெறும் தேர்தலை, அடுத்து ஹிந்து மதத்தை வலியுறுத்தும் பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்தச் சிலையை நாங்கள் திரும்ப ஒப்படைப்பது முக்கியமானதாகும் என்று பெரா வெல்ஸ் கூறின…

    • 0 replies
    • 728 views
  2. அமேஸன் காட்டின் ஆதிவாசிகள் தென் அமெரிக்காவின் அமேஸன் காட்டில் வெளி உலகுடன் தொடர்பில்லாத செவ்விந்தியர்கள் வசிக்கும் பகுதிகளின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிரேஸிலின் அக்ரே மாநிலத்தின் ஷியனே நதிக்கு அருகில் கடந்த25 ஆம் திகதி இப்புகைப்படங்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தைக் கண்டவுடன் அம்மனிதர்கள் அம்புகளுடன் விமானத்தை குறிபார்த்து நிற்கும் காட்சிகள் புகைப்படங்களில் பதிவாகியுள்ளன. இப்பழங்குடி மக்கள் மானுடவியலாளர்களால் இதுவரை தொடர்புகொள்ளப்படாத மக்கள் என கூறப்படுகிறது. (படங்கள்: ரோய்ட்டர்ஸ்) http://metronews.lk/article.php?category=lifestyle&news=4990

  3. கொலை வெறி நாஜி ஹிட்லரின் உருவப் படத்துடன் தேநீர் கோப்பை - திடுக்கிட்ட ஜெர்மன் அதிகாரிகள்! சனி, 12 ஏப்ரல் 2014 (15:57 IST) லட்சக்கணக்கில் யூதர்களை கொன்றொழித்த ஜெர்மன் பாசிச நாஜிக் கட்சியின் தலைவர் அடால்ஃப் ஹிட்லரின் உருவப்படம் மற்றும் அவரைப்பற்றிய சிறு குறிப்புடன் ஒரு செயின் ஸ்டோரில் தேநீர் கோப்பைகள் விற்கப்படுவது அறிந்த ஜெர்மன் அதிகாரிகள் திடுக்கிட்டுப் போயுள்ளனர்.எனினும் விசாரணை துவங்கப்பட்டுள்ளது. ஸ்வஸ்திக் உள்ளிட்ட நாஜிகளின் குறியீடு, ஹிட்லரின் உருவம் ஆகியவற்றைப் பயன்படுத்த ஜெர்மனியில் தடை விதிக்கப்பட்டுள்ளது மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜெர்மனியில் உன்னா என்ற இடத்தில் உள்ள செயின் ஸ்டோரில் ஹிட்லரின் உருவப்படத்துடன் ஸ்வஸ்…

    • 1 reply
    • 736 views
  4. ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ஹிந்துஜாக்கள் 2வது ஆண்டாக முதலிடம் ! [sunday, 2014-04-13 09:17:57] பிரிட்டனில் உள்ள பணக்கார ஆசிய தொழிலதிபர்களில் ஹிந்துஜா சகோதரர்கள் 2வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களது மொத்த சொத்து மதிப்பு 13.5 பில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.36 லட்சம் கோடி) ஆகும். இது கடந்த ஆண்டைவிட ஒரு பில்லியன் பவுண்டுகள் கூடுதலாகும். 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிய தொழிலதிபர்களுக்கான விருது வழங்கும் விழா, லண்டனில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் ரஞ்சன் மத்தாய் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், பிரிட்டன் கல்வி அமைச்சர் மைக்கேல் கோவ், சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். சிறந்த தொழிலத…

  5. கோடீஸ்வரராகப் போவதாக எதிர்வு கூறியவருக்கு லொத்தர் சீட்டிழுப்பில் 2,337 கோடி ரூபா பரிசு பிரிட்டனைச் சேர்ந்த நீல் ட்ரொட்டருக்கு யூரோ மில்லியன்ஸ் லொத்தர் சீட்டிழுப்பில் 10.79 கோடி ஸ்ரேலிங் பவுண் (சுமார் 2,337 கோடி இலங்கை ரூபா) பரிசு கிடைத்துள்ளது. 41 வயதான நீல் ட்ரொட்டர் கார் மெக்கானிக் ஆவார். பகுதி நேரமாக பந்தய காரோட்டத்திலும் ஈடுபடுபவர் இவர். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சீட்டிழுப்பில் இவருக்கு 10.79 கோடி ஸ்ரேலிங் பவுண் பரிசு கிடைத்துள்ளது. இச்சீட்டிழுப்பு நடைபெறுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் 'நாளை இந்நேரம் நான் ஒரு கோடீஸ்வரனாக இருப்பேன்' என தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களிடம் நீல் ட்ரொட்டர் எதிர்வு கூறினாராம். 'வியாழனன்று எனது தந்தையின் அலுவலகத்…

    • 3 replies
    • 944 views
  6. ஐநாவுக்கான இரானியத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நபரை மாற்றுவதற்கான எண்ணம் தமக்கு இல்லை என்று இரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐநாவுக்கான இரானியத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹமீத் அபுதாலெபிக்கு, அமெரிக்கா விசா மறுத்துள்ள முடிவை எதிர்த்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக துணையமைச்சர் அப்பாஸ் அராக்சியின் அறிக்கை கூறுகிறது. ஐநாவுக்கான இரானியத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹமீத் அபுதாலெபி, இதற்கு முன்னால் பெல்ஜியம், இத்தாலி, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் இரானியத் தூதராகப் பணியாற்றியவர் ஆவார். பணயக் கைதிகள் சம்பவம் ஆனால் 1979ஆம் ஆண்டு தெஹ்ரானிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டிருந்த கடும்போக்கு மாணவர் க…

    • 0 replies
    • 373 views
  7. ஒருரஸ்யப் போர்விமானமும் AirFrance 319 ம் மோத இருந்த நிலையில் கடந்த 14ம் திகதி மார்ச் இந்த விபத்துத்துக் கடைசி வினாடியில் தவிர்க்கப்பட்டதாக ரஸ்யப்பத்திரிகையான Izvestia ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளது. மொஸ்கோவின் செரமெட்டிவோ விமான நிலையத்திலிருந்து மொஸ்கோ - பரிஸ் இணைப்பை வழங்கும் இந்த Air France KLM (vol AF-1645) விமானம் பல்லாயிரக்கணக்கான மீற்றர்கள் உயர்ந்த பின்னர் அங்கு அந்த வழித்தடத்தில் முன்னறிவிப்பில்லாமல் வந்த ரஸ்யாவின் Tupolev Tu-95 எனப்டும் பாரிய குண்டு வீச்சு விமானத்துடன் மோதப் பார்த்துள்ளது. 100 மீற்றரிற்கும் குறைவான இடைவெளி வித்தியாசத்திலேயே விமானிகளின் திறமையால் இந்தக் கொடூர விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மிக அருகில் வந்த இந்தப் போர்விமானத்தின் இயந்திரத்தின் …

  8. பொது நிகழ்ச்சியில் ஹிலாரி மீது ஷு வீச்சு - பறந்து வந்ததை பார்த்த ஹிலாரி குனிந்து தப்பித்தார்! [Friday, 2014-04-11 13:38:43] அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் இவரது மனைவி ஹிலாரி கிளிண்டன். இவர் தற்போதைய அதிபர் ஒபாமா மந்திரி சபையில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தார். தற்போது அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சொற்பொழி வாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று லாஸ்வே காஸ் நகரில் நடந்த ஒரு நிறுவன விழாவில் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தார். அதில், 1000–க்கும் மேற்பட்டவர்கள் கூடி இருந்தனர். அப்போது அவரை நோக்கி யாரோ ஒருவர் ‘ஷு’வை வீசி எறிந்தார். தன்னை நோக்கி அது பறந்து வந்ததை பார்த்த ஹிலாரி புத்திசாலிதனமாக குனிந்து கொண்டார். எனவே, அந்த ‘ஷு’ அவர் …

  9. என் சோகக் கதையைக் கேளு, தாய்க்குலமே! லோக்சபா தேர்தலில் போட்டியிடும் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, தமக்கு திருமணம் ஆகிவிட்டது தனது மனைவி பெயர் ஜஷோடபென் என்று முதல் முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறார். குஜராத் மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்ட போதெல்லாம் வேட்புமனுவில் திருமணம் குறித்த தகவலை தெரிவிக்காமலேயே வந்தார் மோடி. ஆனால் அண்மைக்காலமாக அவருக்கு திருமணமாகிவிட்டது.. அவரது மனைவி ஓய்வுபெற்ற ஆசிரியை ஜஷோடபென் என்று ஊடகங்கள் எழுதி வந்ததுடன் அவரது பேட்டியையும் வெளியிட்டன. அத்துடன் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் வேட்புமனுவில் அனைத்து விவரங்களும் நிரப்ப வேண்டும் என்றும் உச்ச…

  10. வாக்களித்த பின் பிரியங்கா கிண்டல் - மோடியின் அலை அடிக்கவில்லையே என விழித்தார்! [Thursday, 2014-04-10 13:31:41] புதுடெல்லியில் உள்ள 7 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை வாக்குபதிவு தொடங்கியதில் இருந்து அங்கு விறுவிறுப்பாக வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. 11 மணி நிலவரப்படி அங்கு 25 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வதோரா தனது வாக்கை லோகி எஸ்டேட் வாக்குச்சாவடியில் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, நாட்டில் நரேந்திர மோடியின் அலை அடிக்கவில்லை என மறுப்பு தெரிவித்தார். http://seithy.com/breifNews.php?newsID=107302&category=Indi…

  11. ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகிறார் ஹிலாரி! [Thursday, 2014-04-10 12:58:07] அமெரிக்காவில் வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடலாம் என தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்றபோது, வரும் 2016ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு அவர் ஊடகங்களின் கேள்வி தனக்கு ஊக்கமளிப்பதாகவும், இவ்விடயம் குறித்து தான் சிந்தித்து வருவதாகவும் பதிலளித்துள்ளார். மேலும் கடந்த 2008ம் ஆண்டில் ஜனநாயகக்கட்சி சார்பில், போட்டியிட்ட ஹிலாரி, ஒபாமாவிடம் தோல்வியடைந்தது குறிப்பிடதக்கது. http://seithy.com/breifNews.php?news…

  12. 2016–ம் ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி போட்டி? வாஷிங்டன், அமெரிக்காவில் 2016–ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடலாம் என தெரிய வந்துள்ளது. சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த மாநாடு ஒன்றில் ஹிலாரி கிளிண்டன் பங்கேற்றார். அப்போது அவரிடம், ‘‘உங்கள் எதிர்காலத்திட்டம் என்ன? நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போகிறீர்களா? நீங்கள் அதை விரும்பினால் இங்கே அறிவிக்கலாமே?’’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஹிலாரி கிளிண்டன், ‘‘நீங்கள் எல்லாரும் இப்படி என்னை கேட்பதையும், எனக்கு ஊக்கம் அளிப்பதையும், மிகுந்த கவுரவமாக கருதுகிறேன். நான் அதுபற்றி இப்போது சிந்தித்து வருகிறேன். இந்த சிந்தனை இன்னும் ச…

  13. 'மந்திரவாதி'யாக முன்னிலைப்படுத்தப்படுகிறார் மோடி: சோனியா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி | கோப்புப் படம் ஒருவரின் உண்மை முகம் முகமூடியால் மறைத்து வைக்கப்பட்டு, மாயாவி போன்று அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க போவது போல் நாடெங்கிலும் போஸ்ட்டர்கள் ஒட்டப்படுவதாக சோனியா காந்தி நரேந்திரமோடியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கர்நாடக மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், குஜராத் மாடல் என்று ஒன்றை மேம்படுத்தி, சிறு விஷயத்தை பாஜக பெரிதாக பேசுகிறது. நாட்டில் குஜராத்தை தவிர வேறு எங்கும் நன்மை ஏற்படாதது போல பாஜக ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறது. நாடு முழுவதும் ஒரு நபரின் உண்மையான முகத்தை மறைக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட…

  14. சமூக வலைத்தளமான பேஸ்புக்கை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் 100 மில்லியனைத் தாண்டியிருக்கிறது என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை இந்தியா பெறுகிறது. இந்தியாவில் கைத்தொலைபேசி எண்ணிக்கை அதிகரித்து வருவதே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் எதிர்கொள்ளும் அடுத்த சவால் என்பது இந்தியாவில் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையை எப்படி 100 கோடி என்ற எண்ணிக்கையை எட்டுவது என்பதுதான் என்று அது கூறுகிறது. உலகெங்கும் 123 கோடி பயன்பாட்டாளர்களைக் கொண்ட பேஸ்புக் நிறுவனம் ஆசிய உட்பட வளர்ந்து வரும் சந்தைகளில் தனது வளர்ச்சிக்கு புதிய இடங்களைத் தேடி…

  15. 0 COMMENTS குரங்கு குட்டியை அநாதையாக்கிவிட்டோம் என்ற மன உழைச்சலில் சிங்கமொன்று குரங்கு குட்டியொன்றை அன்பாக பராமறித்து வருகின்ற காட்சி பலரது கவனத்தை ஈர்த்தள்ளது. வாலற்ற குரங்கொன்று புதிதாக பிறந்த தனது குட்டியை மடியில் சுமந்து வருவதை அறியாத சிங்கம் அதனை வேட்டையாடியுள்ளது. பின்னர் தாய் குரங்கை கொன்றுவிட்டோம் என்ற மன உழைச்சலில் திரிந்துள்ளது. இதன்போது அநாதையான குரங்கு குட்டியை காட்டில் உள்ள விலங்குகள் வேட்டையாட முயன்றுள்ளன. இதனையறிந்த அந்த சிங்கம் குரங்கு குட்டியை தனது பாதுகாப்பில் வளர்க்க தொடங்கிவிட்டது. குரங்கு குட்டியை நோக்கி ஏனைய மிருகங்கள் வரும்போது அவற்றை துரத்திவிட்டு குட்டியை மரத்தில் ஏற்றிவிடுவதும் பின்னர் அதனுடன் விழையாடுவதும் அதனை அரவனைப்பதுமென அக்குட்டிய…

    • 0 replies
    • 569 views
  16. காணமால் போன மலேசிய விமானத்தை அமெரிக்கா கடத்தி வைத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காணமால் போன மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக வந்த செய்தியை அடுத்து, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவம் கடத்தி, Diego Garcia என்ற தீவில் ஒளித்து வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் கசிந்து வந்தன. இந்த தீவு இந்திய பெருங்கடலில் உள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான இந்த தீவில் அமெரிக்க போர்விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தீவில்தான் மலேசிய விமானம் …

    • 2 replies
    • 1.2k views
  17. சேது சமுத்திரத்திட்டத்தை அமுல்படுத்த விடமாட்டேன்: – தஞ்சாவூர் கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு [Tuesday, 2014-04-08 20:33:24] சேது சமுத்திர திட்டத்தை அமுல்படுத்த விடமாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார். தஞ்சாவூர் நேற்று நடைபெற்ற பொதுகூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது - நாடாளுமன்றத் தேர்தல் ஊழல் ஆட்சி புரியும் காங்கிரஸ் கட்சியை நாட்டை விட்டு விரட்டும் தேர்தலாகும். சேதுசமுத்திர திட்டத்தால் 10 மீட்டர் அகலமுள்ள கப்பல்கள்தான் செல்லமுடியும். ஆனால் தமிழக அரசுக்கு சொந்தமான பூம்புகார் கப்பல்களின் அகலம் 10.9ம், 13.5ஆகவும் உள்ளது. அரசுக்கு சொந்தமான இந்த கப்பல்களே செல்ல முடியாமல் இருப்பதால்தான் இந்த திட்டத்தை நான் எதிர்த்தேன். மீனவர்களை பாதிக்கும் இந்த திட்டத்தை …

  18. இங்கிலாந்தில் இந்திய மருத்துவா்களுக்கான முக்கிய வழக்கு விசாரணை நாளை துவக்கம். [Monday, 2014-04-07 17:21:04] இங்கிலாந்தில் பொது மருத்துவத் துறையில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் தொழிலைத் தொடங்கும் முன்னர் மருத்துவத் திறன் மதிப்பீடு என்ற தேர்வினை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். அந்நாட்டின் ராயல் மருத்துவக் கல்லூரியின் பொது பயிற்சியாளர்கள் சங்கமும், பொது மருத்துவக் கவுன்சிலும் இந்தத் தேர்வினை நடத்துகின்றன.இந்தத் தேர்வுகளை எதிர்கொள்ளும் இந்தியப் பின்னணி கொண்ட மருத்துவர்கள் இங்கிலாந்து நாட்டவர்களை விட நான்கு மடங்கு அதிகமாகவும், சர்வதேச அளவில் தேர்வுக்கு வரும் மாணவர்கள் 16 மடங்கு அதிகமாகவும் தோல்வியை சந்திக்கின்றனர். எனவே இவர்களிடம் நிறவெறிப் பாகுபாடு காணப்படுவதாக இந்…

  19. இரண்டு பிரிட்டிஷ் பெண்கள், டெனரி ஸ்பானிஷ் தீவில் அலை கடலில் இழுத்து செல்லப்பட்டு பின்னர் இறந்துள்ளனர். அவர்கள் மகப்பேற்று ஆலோசகர் Dr உமா ராமலிங்கம், 42, மற்றும் பாரதி ரவிக்குமார் . மற்றைய மூவரும் காப்பற்றபட்டனர். கேனரி தீவுகள் அவசர சேவைகள் அவர்கள் 10 மற்றும் 14 வயது வரை உள்ள குழந்தைகள், மற்றும் ஒரு 38 வயதான பெண் கூறினார் http://www.bbc.co.uk/news/uk-26925989

  20. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 30 வருடமாக தனது மனைவியாகவிருந்த லையுட்டிமிலாவை உத்தியோகபூர்வமாக விவாகரத்துச் செய்துள்ளார். அவர்கள் இருவரும் பிரிவதற்கு தீர்மானித்துள்ளமை குறித்து கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 30 வயதான முன்னாள் ஒலிம்பிக் உடற்பயிற்சி வீராங்கணையான அலினா கபயெவாவுடன் இரகசிய காதல் தொடர்பைக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து அவரது திருமண வாழ்வு முறிவடையலாம் என கடந்த பல வருடங்களாக ஊகிக்கப்பட்டு வந்தது. லையுட்மிலாவுடனான விவாகரத்தை புட்டின் உறுதிப்படுத்தியதையடுத்து அவரது உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்த லையுட்மிலாவின் (56 வயது) சுயவிபரங்கள் அகற்றப்பட்டிருந்தன. புட்டினின் இரு மகள்மார் என மரியா மற்றும் கதரினாவின் பெயர்கள் குறி…

    • 9 replies
    • 858 views
  21. இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியும் இந்து தேசியவாத கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் இந்த தேர்தலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலில் இன்றைய தினம் அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் 2 ஆசனங்களுக்கான வாக்களிப்பு இடம்பெறுகின்றது. இந்த தேர்தலின் இறுதிக் கட்டம் மே 12 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் மே மாதம் 16 ஆம் திகதி வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இம்முறை மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. ஊழல் மற்றும் உயர்ந்த பணவீக்கம் என்பன இம்முறை தேர்தலில் முக்கிய இடத்தினைப் ப…

  22. பிரிட்டனில் உள்ள இந்திய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு. [sunday, 2014-04-06 12:41:40] பிரிட்டனில் உள்ள இந்திய நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதுகுறித்து கிராண்ட் தோர்ன்டன் எம்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரிட்டனில் பொருளாதார வளர்ச்சியில் இந்திய கூட்டு நிறுவனங்கள் முக்கிய பங்கு விதிக்கின்றன. பிரிட்டனில் உள்ள 700க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். அவற்றில் முதன்மையாக 41 நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் மூலம் ஆண்டுக்கு 19 பில்லியன் பவுண்டுகள் இந்திய மதிப்பில் சுமார் 1.9 லட்சம் கோடி, வரு…

  23. “காங்கிரஸ் படு தோல்வியடையும்” – என்.டி.ரி.வி கருத்துக்கணிப்பு! இந்தியாவில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள லோக்சபா தேர்தலில், தமிழ் நாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஆசனத்தையேனும் பெற முடியாது போகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.இந்தியாவின் என்.டி.ரி.வி நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் நாட்டில் முக்கியமான அரசியல் கட்சிகள் எவையும் கூட்டிணையாத நிலையில், இந்த மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை எதிர்வரும் லோக்சபா தேர்தலில், தற்போதையை எதிர்கட்சியான பாரதீயே ஜனதா கட்சி வெற்றி பெறும் என்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இதன்படி இந்தியா முழுவதும் பாரதீயே ஜனதா கட்…

    • 7 replies
    • 836 views
  24. பிரேசில்: வர்க்கங்களின் கால்பந்து மைதானம் உலகம் முழுவதும் உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு பிடித்த நாடு பிரேசில். அதற்கப்பால் உலகின் மிகப் பெரிய நாடுகளில் (8.511.965 க்ம்) ஒன்றான பிரேசிலை அறிந்து வைத்திருப்பவர்கள் அரிது. மேற்குலகில் பிரேசில் கேளிக்கைகளின் சொர்க்கம். வர்ணமயமான கார்னிவல் அணிவகுப்புகள். பாலியல் பண்டமாக நோக்கப்படும் அழகிய பெண்கள். இவை தான் பலருக்கு நினைவுக்கு வரும். கொஞ்சம் "சமூக அக்கறை கொண்டவர்கள்" என்றால், தெருக்களில் வளரும் குழந்தைகள், நாற்றமடிக்கும் சேரிகளை பார்த்து, வறிய பிரேசில் மீது அனுதாபப் படுவார்கள். ஆனால் எண்ணெய் வளத்தை தவிர உலகின் அனைத்து செல்வங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. என்றோ லத்தீன் அமெரிக்காவின் வல்லரசாக வந்திருக்க வேண்டியது. மொழி, இன, மதப் பிர…

  25. மலேசிய விமானத்தை கடலுக்கு அடியில் தேடும் முயற்சி இன்று தொடங்கியது! [Friday, 2014-04-04 15:29:53] விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் முயற்சி,இன்று இந்தியப் பெருங்கடல் பகுதியில், கடலுக்கடியில் தொடங்கியிருக்கிறது. விமானத்தின் விமானிகள் அறையில் நடந்திருக்கூடிய உரையாடல்கள் மற்றும் பிற தரவுகளை ஒலிப்பதிவு செய்திருக்கும் கறுப்புப் பெட்டியிலிருந்து வரும் ஒலியைக் கேட்டு அது இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் கருவிகளை கப்பல்கள் இழுத்துச் செல்கின்றன. இரண்டு கப்பல்கள் இந்த இழுவைக் கருவிகளுடன் கடலுக்கடியில் சுமார் 240 கிமீ நீளமுள்ள பாதையில் இந்த கறுப்புப் பெட்டி விழுந்திருக்கக் கூடிய இடத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.