Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை மென்மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அந்த விமானத்தில் குறைந்தது இருவர் போலி கடவுச் சீட்டுகளில் பயணத்தை மேற்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கும் விமானம் காணாமல் போனமைக்கும் தொடர்பு இருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் அவ்வாறு போலியான கடவுச்சீட்டில் பயணத்தை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஈரானைச் சேர்ந்த 19 வயதான போரியா நூர் மெஹடாத் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பவில்லை என மலேசிய பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஜேர்மனிக்கு செல்லும் முகமாக மேற்படி விமானத்தில் பயணித்துள்ளார். …

  2. அமெரிக்க ராணுவத்திற்காக, ஜீரோ அழுத்த டயர் - இந்தியருக்கு சொந்தமான நிறுவனம் தயாரிப்பு! [Tuesday, 2014-03-11 09:31:36] அமெரிக்க ராணுவத்திற்காக, ஜீரோ அழுத்த டயரை, இந்தியருக்கு சொந்தமான நிறுவனம் தயாரித்துள்ளது. அமெரிக்காவில், ஓஹியோ மாகாணத்தில் உள்ள, ஏ.இ.ஜி., நிறுவனத்தின் தலைவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ஆப்ரகாம் பனிகோட். அமெரிக்க ராணுவத்துக்கு தேவையான உதிரி பாகங்களை, இந்த நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. இந்த நிறுவனத் தலைவரான ஆப்ரகாம், இந்தியாவின் குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில், மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவின், அக்ரான் பல்கலைக்கழகத்தில், பாலிமர் சயின்ஸ் ப…

  3. காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை மென்மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அந்த விமானத்தில் குறைந்தது இருவர் போலி கடவுச் சீட்டுகளில் பயணத்தை மேற்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கும் விமானம் காணாமல் போனமைக்கும் தொடர்பு இருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் அவ்வாறு போலியான கடவுச்சீட்டில் பயணத்தை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஈரானைச் சேர்ந்த 19 வயதான போரியா நூர் மெஹடாத் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பவில்லை என மலேசிய பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஜேர்மனிக்கு செல்லும் முகமாக மேற்படி விமானத்தில் பயணித்துள்ளார். …

  4. கூட்டணி அமையாததால் போட்டியில் இருந்து ஒதுங்கினார் மத்திய அமைச்சர் வாசன்! [Tuesday, 2014-03-11 18:10:15] காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளாத கட்சிகள் தேர்தலுக்குப் பின்னர் வருத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில், காங்கிரஸ் கட்சிக்கு அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கென ஒரு வாக்கு வங்கி தமிழகத்தில் இருக்கிறது. இருப்பினும், இத்தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. மாறாக, தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் சென்று வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபடுவேன். காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றியை உறுதி செய்யும் வகையில…

    • 3 replies
    • 1.1k views
  5. கோலாலம்பூர்: மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் திசை மாறி, மலாக்கா ஜல சந்தி பகுதியில் விபத்திற்குள்ளாகி கிடப்பதாக ராடார் மூலம், மலேசிய ராணுவம் கண்டறிந்துள்ளது. மலாக்கா ஜலசந்தியின் கிழக்கு பகுதியில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, இதனுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தற்போது நேர் எதிர் திசையில், மலாக்கா ஜலசந்தியின் மேற்குப் பகுதியில் விமானம் விபத்திற்குள்ளானதாக கண்டுப்பிடிக்கப்படடு்ளது. மேலும்பார்க்க .... தகவல்...தினமலர்.....

  6. சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி 22ம் திகதி தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்! [Tuesday, 2014-03-11 18:49:05] இலங்கையில் நடந்த ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஜெனீவாவில் ஐ.நா. மனிதஉரிமை ஆணையத்தில் மத்திய அரசு முன் மொழிய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் கார்த்திக், அருண்குமார், ஜெயபிரகாஷ், சிவராஜ், யுவராஜ் ஆகிய 5 பேர்கள் தஞ்சை முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக கும்பகோணம் அன்னை கல்லூரி மா…

  7. சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 11 பேர், ஒரு தொழிலாளி உள்பட 16 பேர் உயிரிழந்தனர். சுக்மா மாவட்டத்தின் ஜெரூம் நுல்லா வனப் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக சி.ஆர்.பி.எஃப். மற்றும் மாநில போலீஸார் 44 பேர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள், டோங்காபால் - ஜெரூம் காட் பகுதியில் வந்தபோது நக்சல்கள் கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்தனர். அதேவேளையில், மலைப் பகுதிகளில் மறைந்திருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர…

  8. இதனை சாதாரணமாக எடுக்கக் கூடாது. ராகுல் தமிழகம் வர உள்ள நிலையில்.. அவரை காங்கிரஸ் கூலிகளே ஆட்களை வைச்சு.. கொல்லத்திட்டமிட்டிருப்பதன் ரகசியத்தின் கசிவாகவும் இருக்கலாம். ராஜீவ் கொல்லப்பட முன்னரும் சுப்பிரமணியம் சுவாமியும் இவ்வாறு..அறிவிப்புக்களைச் செய்திருந்தவர்.. ராஜீவ் செத்திட்டார் என்று. !!!!

  9. கறுப்புப் பணம் தொடர்பான விபரங்களை இந்திய அரசிற்கு வழங்கிவிட்டதாக சுவிட்சர்லாந்து விளக்கம் [Tuesday, 2014-03-11 11:34:44] இந்திய அரசு அதிகாரிகள் கேட்ட கறுப்புப் பணம் தொடர்பான வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கிவிட்டதாக சுவிட்சர்லாந்து அரசு கூறியுள்ளது. சட்டப்பூர்வமாக தரப்பட வேண்டிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதே சமயம் முறையற்ற வகையில் பெறப்பட்ட வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்கள் அடிப்படையில் தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பணம் கண்டறியும் தங்கள் நடவடிக்கைக்கு சுவிட்சர்லாந்து அரசின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என கடந்த மாதம் நிதியமைச்சர் சிதம்பரம் கூறியிருந்த நிலையில் இக்கருத்து வெளியாகியுள்ளது. http://www.seithy.c…

  10. இந்திய இராணுவம், சிபிஐயின் 3000 கம்ப்யூட்டர்களில் இருந்து தகவல்கள் திருட்டு! [sunday, 2014-03-09 19:20:45] டில்லியில் உள்ள ராணுவம் மற்றும் சி.பி.ஐ., அலுவலகங்களில் உள்ள 3000க்கும் அதிகமான கம்ப்யூட்டர்களில் ஊடுருவி சில வெளிநாட்டு அமைப்புக்கள் தகவல்களை திருடியுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர் ஜீட்டன் ஜெயின் கூறுகையில், 'இந்த நிறுவனங்கள் வெளிநாட்டில் சர்வர்களை நிறுவி, அவற்றின் மூலமாக ஊடுருவி உள்ளன. மிகவும் நவீன பாதுகாப்பு தொழில் நுட்பங்களை கொண்ட இந்த கம்ப்யூட்டர்களில், அந்த நிறுவனங்கள் திறமையாக நுழைந்துள்ளன. இது குறித்து அரசுக்கும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில்சிபலுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது,' என்றார். http:/…

  11. உக்ரேனிய கிறிமியா பிராந்தியத்தை இணைப்பதற்கு ரஷ்யாவால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நகர்வும் அந்நாட்டுடனான இராஜதந்திர கதவுகள் மூடப்படுவதற்கு வழிவகை செய்யும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. கிறிமியா உக்ரேனின் ஒரு பாகம் எனவும் ரஷ்யா அங்கு இராணுவ தலையீட்டை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என ரஷ்ய வெளிநாட்டு அமைச்சர் சொர்கேயி லாவ்ரோவிடம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன்கெரி வலியுறுத்தியுள்ளார். அதேசமயம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, உக்ரேனிய நெருக்கடி தொடர்பில் உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். கிறிமியாவுக்குள் நுழைய முயற்சித்த சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவொன்று அங்கு தீர்க்கப்பட்ட எச்சரிக்கை வேட்டுகளால் திரும்ப நேர்ந்ததையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்…

  12. விமானம் திரும்பியிருக்கலாம் எனத் தெரிவதை அடுத்து தேடும் பரப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் காணாமல்போய் 24 மணி நேரங்களுக்கு அதிகமாகியும் அதன் கதி தெரியாமல் இருந்துவருகின்ற சூழலில், அது தனது திட்டமிட்ட பயணப் பாதையில் இருந்து திரும்பி வந்திருக்கலாம் என்று மலேசிய அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே விமானத்தை தேடிவரும் மீட்புக் குழுக்கள் தாம் தேடிவருகின்ற இடத்தை விஸ்தரித்துள்ளனர். இந்த விமானம் பயணப் பாதையில் திரும்பியிருக்க வாய்ப்பு உள்ளதாக ராடார் சிக்னல்கள் காட்டுவதாக மலேசிய விமானப்படை தலைவர் ரோத்ஸலி தாவுத் கூறினார். "மலேசியன் ஏர்லைன்ஸில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததில்லை" அந்நிறுவனத்தில் விமான சிப்பந்தியாக பணியாற்றியிருந்த வனிதா சுபா…

    • 4 replies
    • 841 views
  13. தேடுவாரின்றி இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைமையகம்! [sunday, 2014-03-09 19:29:02] பாராளுமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சி அலுவலகங்களுமே களை கட்டி காணப்படுகின்றன. ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், ஆள் ஆரவார மின்றி எந்த பரபரப்பும் இல்லாமல் அமைதியாக காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக அ.தி.மு.க. அல்லது தி.மு.க. ஆகிய கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி அமைத்தே காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்து வந்துள்ளது.பெரும்பாலான தேர்தல்களில் இக்கூட்டணியே வெற்றியும் பெற்று வந்துள்ளது. ஆனால் இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனியாக தேர்தல் களத்தில் இறங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. …

  14. விசாகப்பட்டினத்தில் நீர்மூழ்கி தளத்தில் மற்றொரு விபத்து! – இரண்டு வாரங்களில் மூன்றாவது சம்பவம். [sunday, 2014-03-09 19:14:58] விசாகபட்டினத்தில் கடற்படை தளத்தில் நீர்மூழ்கி கப்பல் பணியின்போது குழாய் வெடித்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர். விசாகபட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் ஐஎன்ஸ் அரிகந்த் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இரண்டு அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்குள் மூன்றாவதாக மேலும் ஒரு விபத்து நேற்று ஏற்பட்டது. நேற்று பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரையில் அணு ஆயுத சோதனை கூடத்திற்கு அமைக்கப்படும் குழாய்களில் நீர் அழுத்த பரிசோதனையின் போது குழாய்கள் …

  15. விடுதலை புலிகள் இயக்கம் தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர் இந்திராகாந்தி: - வாழ்த்து விழாவில் ராம்ஜெத்மலானி [sunday, 2014-03-09 14:53:39] சீனா, பாகிஸ்தான் நாடுகள் இலங்கையில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்திவிடக்கூடாது என்பதற்காக விடுதலை புலிகள் இயக்கம் தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர் இந்திராகாந்தி என இந்திய வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் வாதாடி வழக்கில் வெற்றி பெற்ற மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானிக்கு, ம.தி.மு.க.வின் மறுமலர்ச்சி வழக்கறிஞர் பேரவை சார்பில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவி…

    • 3 replies
    • 503 views
  16. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 239 பேருடன் மாயம்! March 8, 2014, 8:50 [iST] கோலாலம்பூர்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் இன்று அதிகாலை மாயமாகியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை 2.40 மணிக்கு எம்.எச்.370 என்ற போயிங் விமானம் சீன தலைநகர் பெய்ஜிங் புறப்பட்டு சென்றுள்ளது. விமானத்தில் 12 ஊழியர்கள் மற்றும் 227 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பெய்ஜிங் போய் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், விமானம் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து காணாமல் போயுள்ளது. தற்போது, மாயமான எம்.எச்.370 போயிங் விமானத்தையும் அதில் பயணம் செய்தவர்களையும் தேடும் பணியில் மல…

  17. கனடாவில் பயிற்சி பெற்று வந்த ரஸ்யப் படையினரை 24 மணிநேரத்துக்குள் வெளியேற உத்தரவு! [saturday, 2014-03-08 21:26:17] கனடாவில் இராணுவப் பயிற்சி பெற்றுவந்த ரஸ்யப் படையினரைத் திருப்பி அனுப்ப கனடா முடிவு செய்துள்ளது. கனடியப் பிரதமர் ஹாப்பர் ரஸ்யாவுடனான இருதரப்பு இராணுவ நடவடிக்கைகள் யாவற்றையும் நிறுத்தியதையடுத்து, ரஸ்யத் துருப்புக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது. கனடாவில் 9 ரஸ்ய இராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். அவர்களே திருப்பி அனுப்பப்படவுள்ளனர். கியூபெக்கிலுள்ள 6 ரஸ்ய வீரர்களை 24 மணித்தியாலத்திற்குள் கனடாவை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. உக்ரைன் விகாரத்தில் ரஸ்யா தலையிட்டதை அடுத்து இந்த நலை ஏற்பட்டுள்…

  18. பீர் பாட்டில்களை கனடா பிரதமருக்கு அனுப்புகிறார் பெட் கட்டித் தோற்ற ஒபாமா ! பெட் வைத்துத் தோற்பதில் நீங்கள் மட்டும்தான் மோசம் என்று நினைக்காதீர்கள் . அமெரிக்க அதிபரும் இதற்கு விதி விலக்கு இல்லை போல் தெரிகிறது. ஐஸ் ஹாக்கி போட்டியில் அமெரிக்க அணி ஜெயிக்கும் என்று கனடா பிரதமருடன் பந்தயம் கட்டி அமெரிக்க அதிபர் ஒபாமா தோற்றுவிட்டார். பெட் வைத்துத் தோற்ற பின்னர், அதற்காக பெட் வைத்த இரண்டு கேஸ் பீர் பாட்டில்களை திங்கட்கிழமை கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருக்கு அனுப்புகிறார் ஒபாமா. அமெரிக்க ஆண்கள் அணி மழைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நடந்த அரை இறுதி ஆட்டத்தில் கனடா அணியால் தோற்கடிக்கப்பட்டது. அமெரிக்கப் பெண்கள் அணியும் கனடா பெண்கள் அணியிடம் இறுதிப் போட்டிகளில் தோற்றது…

  19. பீஜிங்: உலகின் மிக உயரமான இடத்தில், ரயில் பாதையை அமைத்துள்ள சீனா, அந்த ரயில் பாதையை, இந்திய எல்லை வரை நீட்டித்துள்ளது. ரயில் பாதை அமைப்பதில், உலக நாடுகளில், சீனா முன்னோடியாக உள்ளது. மற்ற நாடுகளிலும், சீனா ரயில் பாதை அமைத்து தரும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, சீனா, ஷாங்காய் மற்றும் திபெத்திற்கு இடையில் அமைத்துள்ள ரயில் பாதையை, பஞ்சன் லாமாவில் இருந்து, ஷீகாஜ் வரை நீட்டித்துள்ளது. இந்தியாவின், சிக்கிம் மாநிலத்திற்கு அருகில், ஷீகாஜ் எல்லை உள்ளது. புதிய ரயில் தடத்தால், லுகாசாவில் இருந்து, 253 கி.மீ., தூரத்தில் உள்ள, ஷீகாஜ்ஜை, பயணிகள், இரண்டு மணி நேரத்தில் சென்றடைவர். அக்டோபர் முதல் வாரத்தில், செயல்படத் துவங்கும் இந்தப் பாதையின் பணிகள், 93 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக, சீ…

  20. டெல்லி: யுபி குழுமத் தலைவர் விஜய் மல்லையாவின் சுயரூபத்தை அம்பலப்படுத்தியுள்ளனர் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள். கடந்த 18 மாதங்களாக சம்பளமே தராமல் தன் இஷ்டத்திற்கு தாறுமாறாக வாழ்க்கை நடத்தி வரும், ஐபிஎல் கிரிக்கெட்டில் பணத்தைக் கொட்டி வரும், கவர்ச்சிப் பெண்களின் படத்தை வைத்து காலண்டர் போட்டு வரும் மல்லையாவின் முகம் இந்தப் பெண்களின் பகிரங்க கடிதத்தால் மேலும் மோசமாக சிதைந்துள்ளது. நாளை மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்தப் பெண் ஊழியர்கள் மல்லையாவின் மறுபக்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். பகிரங்க கடிதம்: தாங்கள் எந்த அளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறோம் என்பதை மல்லையாவுக்கே பகிரங்க கடிதம் மூலம் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந…

  21. மும்பை: மும்பையில் கடற்படைக்கு கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார். மும்பையில் உள்ள மாஸ்கோனில் கடற்படைக்காக கப்பல் கட்டும் தளம் இயங்கி வருகிறது. இங்கு கடற்படைக்காக கப்பல் கட்டும் பணி இன்று நடந்து வந்தது. இந்நிலையில் அந்த கப்பலில் திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கப்பலில் வாயு கசிவு ஏற்பட்டது. இதில் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார். மேலும், வாயு கசிவு ஏற்பட்டதால் சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பலில் கடந்த 26ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. http://news.vikatan.com/article.php?module=news&aid=25432

  22. சென்னை: விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அக்கட்சியின் அவசர கூட்டம் திருமாவளவன் தலைமையில் நாளை சென்னையில் நடைபெறுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார். ஆனால் விழுப்புரம் தொகுதியில் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே விடுதலை சிறுத்தை கட்சி தோல்வி அடைந்தது. இதனிடையே, தி.மு.க. கூட்டணியில் இருந்த பல கட்சிகள் வெளியேறிய நிலையில், விடுதலை சிறுத்தை மட்டுமே நிலைத்திருந்தது. ஆனால், தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.…

  23. ரஷ்யாவுக்கு பதிலடி தர மேற்கு பகுதியில் உக்ரைனும் ராணுவம் குவிப்பு! [Monday, 2014-03-03 10:36:54] ரஷ்யாவுக்கு பதிலடி தர உக்ரைனும் தனது ராணுவ படைகளை குவித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனில் சேர்க்க அந்நாட்டு அதிபராக இருந்த விக்டர் யனுகோவிச் மறுப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கலவரம் வெடித்தது. அதிபர் பதவியிலிருந்து விக்டர் யனுகோவிச் நீக்கப்பட்டு, இடைக்கால அதிபராக துர்ஷிநோவ் பதவியேற்றார். பதவி பறிக்கப்பட்ட விக்டர் யனுகோவிச் தலைமறைவானார். ரஷ்யாவின் தீவிர ஆதரவாளரான இவரை காப்பாற்றுவதற்காக, ரஷ்ய அதிபர் புடின் தனது ராணுவத்தை உக்ரைனுக்கு அனுப்பி வைத்ததா…

    • 26 replies
    • 2.1k views
  24. மீரட்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் 67 பேரை மீரட் தனியார் பல்கலைக்கழகம் சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில், அவர்கள் மீது பிரிவினை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், மீரட்டில் உள்ள ஒரு (தனியார்) சுவாமி விவேகனந்தா சுப்ராதி பல்கலைக்கழகத்தில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் 67 பேர் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினர். பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து காஷ்மீர் மாணவர்கள், விடுதியிலும் வளாகத்திலும் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடை…

    • 2 replies
    • 573 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.