Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பேர்ண்: வள்ளுவன் தமிழ்ப் பாடசாலை நிறுவனர் ஆசிரியர் பொ.முருகவேள் எழுதிய சுவிட்சர்லாந்தும், தமிழர் குடியேற்றமும் மற்றும் பூநகரிப் பூங்கா ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. சுவிட்சர்லாந்துத் தலை நகர் பேர்ண்ல் தனிநாயக அடிகளார் அரங்கில் திருக்குறள் உலகளாவிய தமிழ் மறை நூல் பரிந்துரை விழாவும் வள்ளுவன் தமிழ்ப் பாடசாலை நிறுவனர் ஆசிரியர் பொ.முருகவேல்ள் எழுதிய சுவிட்சர்லாந்தும், தமிழர் குடியேற்றமும் மற்றும் பூநகரிப் பூங்கா ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் மு.பி.பாலசுப்பிர மணியன் விழாவிற்குத் தலைமை தாங்கி இரு நூல்களையும் வெளியிட்டார். சிறப்பு விருந்தினராக ஊடகவியலாளர் மொரிசீயஸ் கேசவா பக்ரி கலந்து…

  2. ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். தெலுங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சீமாந்திராவில் உச்சகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 3 நாட்களாக சீமாந்திராவில் மின்சார ஊழியர்களும் போராட்டத்தில் குதித்து இருப்பதால் ரயில் போக்குவரத்து, மருத்துவமனை என அனைத்து சேவைகளும் முடங்கிப் போயுள்ளன. ஆளும் காங்கிரஸ் அரசோ, சீமாந்திரா மக்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்று விளக்கம் அளித்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகின. இது பற்றி கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்…

  3. மாலத்தீவில் நடந்த முதல்கட்ட அதிபர் தேர்தல் செல்லாது எனவும், நவம்பர் 3ம் தேதிக்குள் மறுதேர்தல் நடத்தவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான மாலத்தீவில், கடந்த 30 ஆண்டுகளாக மமூன் அப்துல் கயூம் என்பவரே அதிபராக இருந்து வந்தார். அதன்பிறகு, கடந்த 2008-ம் ஆண்டு பல கட்சிகள் பங்கேற்ற முதலாவது ஜனநாயக தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், மாலத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் முகமது நஷீத் வெற்றி பெற்று அதிபரானார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் அதிபராக இருந்த நஷீத், கடந்தாண்டு பிப்ரவரியில் நடந்த ராணுவப்புரட்சி காரணமாக பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து துணை அதிபராக இருந்த முகமது வகீத், மாலத்தீவின் அதிபரானார். இந்நிலையில், கடந்த மாதம் 7ம் தேதி மாலத்த…

  4. அண்மையில் கென்ய தலைநகர் நைரோபியின் பல்லங்காடிக் கட்டிடத் தொகுதியின் மீது சொமாலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் அல்கயிடா சார்பு இயக்கமான அல் - ஷபாப் தாக்குதல் நடத்தி சுமார் 67 பொதுமக்களைக் கொன்றுதள்ளியது நினைவிருக்கலாம். இத்தாக்குதலைத் தொடர்ந்து இவ்வியக்கம் மீது தனது கவனத்தைத் திருப்பிய அமெரிக்கா, இவ்வியக்கத்தின் தலைவரைக் கைதுசெய்யும் நடவடிக்கையொன்றை ரகசியமாகத் திட்டமிட்டது. அத்திட்டத்திற்கமைய, ஒசாமா பின்லாடனின் மீதான தாக்குதலில் பங்கெடுத்த அமெரிக்காவின் மிகச்சிறந்த நேவி சீல்ஸ் - 6 எனப்படும் அதிரடிப்படையைச் சேர்ந்த வீரர்கள் சனிக்கிழமை சொமாலியாவின் கரையோரத்தில் அமைந்திருந்த அல் - ஷபாப்பின் தலைவரான இக்ரிமா தங்கியிருந்த கட்டிடம் மீது அதிரடித் தாக்குதலை ஆரம்பித்தனர். ஆனால் அ…

  5. கோவில்களை விட கழிவறைகளே முன்னுரிமை கொடுத்து கட்டப்பட வேண்டியவை என பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புது தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற இளைஞர் விழாவில் அவர் பேசியதாவது:ஹிந்துத்துவா தலைவராக நான் அறியப்படுகிறேன். எனது இந்தத் தோற்றம் இவ்வாறு சொல்வதற்கு அனுமதிக்காவிட்டாலும், என்னுடைய உண்மையான எண்ணத்தை தைரியமாக சொல்கிறேன்: முதலில் கழிவறைகளை கட்டிவிட்டு பின்னர் கோவில்களை கட்டுவோம். கிராமங்களில் கோவில்களை கட்டுவதற்கு பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது. ஆனால் அங்கு போதிய கழிவறை வசதிகள் இல்லாததால், பெண்கள் திறந்த வெளிகளைக் கழிவறைகளாக பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது என்றார் நரேந்திர மோடி. இதேபோன்ற கருத்தை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர…

  6. திருப்பதியில் பிரம்மோற்சவத்தை சீர்குலைப்பதோடு, குடைகள் ஊர்வலத்தில் புகுந்து 5 லட்சம் பக்தர்கள் திரளும் கருடசேவையன்று வெடிகுண்டுகளை வெடித்து மிகப்பெரிய நாசவேலையில் தீவிரவாதிகள் ஈடுபட இருந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் உட்பட 3 தீவிரவாதிகளை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தீவிரவாதி பக்ரூதின் கொடுத்த தகவலின்படி நேற்று அதிகாலை தமிழக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள புத்தூரில் உள்ள மேலரதவீதியில் உள்ள ஒரு வீட்டை சுற்றி வளைத்தனர். அதிகாலை காலை 4.30 மணியளவில் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் தீவிரவாதிகளை சரணடையும்படி போலீசார் எச்சரித்தனர். அதை அவர்கள் ஏற்காததால் தொடர்…

  7. இங்கிலாந்து விமானப்படையில் பணிபுரியும் இளவரசர் ஹாரி ஆப்கானிஸ்தான் சென்று இருந்தார். அங்கு முகாமிட்டுள்ள இங்கிலாந்து ராணுவத்தின் அபாச்சி ஹெலிகொப்டரின் விமானியாக பணிபுரிந்தார். அங்கு முகாமிட்டிருந்த முஜாகிதீன் மற்றும் தலிபான் தீவிரவாதிகளை வெடிகுண்டு வீசி அழித்தார். தற்போது அங்கு பணிமுடித்த அவர் இங்கிலாந்து திரும்பி விட்டார். இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் குன்னார் மாகாணத்தின் தலிபான் தீவிரவாதிகளின் தளபதி குவாரி நஸ்ருல்லா இங்கிலாந்தின் டெய்லி மிரர் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதில் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தபோது இளவரசர் ஹாரி தான் எங்களுக்கு முதல் இலக்காக இருந்தார். அவரை பிடிக்க குறி வைத்திருந்தோம். அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டோம். இங்கிலாந்தில் வேண்டுமா…

  8. "இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரியும்” ---எழுத்தாளர் சுஜாதா!!! “இன்னும் முப்பத்தேழு ஆண்டுகளில் தமிழ்நாடு ஒரு சுதந்திரப் பிரதேசம் ஆகும்” என்று 1993 இல் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் சுஜாதா. அவர் தீர்க்கதரிசியல்ல; ஆனாலும் சிறந்த சிந்தனையாளர்; மகா புத்திசாலியும்கூட! கட்டுரையின் தலைப்பு: ‘வருங்காலத் தொழிலாளர்கள்’ கட்டுரை இடம்பெற்ற நூல்: ‘கடவுள்’ முதல் பதிப்பு: டிசம்பர், 2006. உயிர்மை பதிப்பகம். மூன்றாம் பதிப்பு: ஆகஸ்டு, 2012. கட்டுரையை ஐந்தில் ஒரு பங்காகச் சுருக்கியிருக்கிறேன். மகிழ்ச்சியுடன் படியுங்கள். அல்லது, படித்து மகிழுங்கள். இன்றைய தினம் லட்சக்கணக்கான…

  9. காமராஜர் இறந்த தினம் (அக். 1- 1975) காமராஜர் விருதுநகரில் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும்இ அவரை ராஜா என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறிஇ காமராசு என்று ஆனது. தனது பள்ளிப்படிப்பை சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும்போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக்கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தப…

  10. புத்தூர்: ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளையும் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் போலீஸ் பக்ருதீன் என்ற தேடப்பட்ட தீவிரவாதி நேற்று சிக்கினான். அவனிடம் நடத்தபட்ட விசாரணையில் ஆந்திர மாநிலம் புத்தூரில் தேடப்படும் தீவிரவாதிகளான பிலால் மாலிக், மன்னா இஸ்மாயில் ஆகியோர் பதுங்கி இருப்பதாக தெரியவந்து. இதைத் தொடர்ந்து தமிழக போலீசார் இன்று அதிகாலை பிலால், மன்னா ஆகியோர் பதுங்கியிருந்த் 3 வீடுகளை முற்றுகையிட்டனர். வீட்டு கதவை உடைத்து தீவிரவாதிகளைக் கைது செய்ய முயன்ற சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் லட்சுமண்ன் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் துப்பாக்கியால் சுடுவதும் தீவிர…

    • 4 replies
    • 360 views
  11. இந்தியாவில் புண்ணாக்கு ஏற்றுமதியில் வீழ்ச்சி புதுடில்லி: நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, சென்ற ஜூலை மாதத்தில், 1.77 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 2.83 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி, 37 சதவீதம் சரிவடைந்துள்ளது என, இந்திய எண்ணெய்உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சோயா புண்ணாக்கு:மதிப்பீட்டு மாதத்தில், நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 36.42 சதவீதம் சரிவடைந்து, 1.07 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இதுகுறித்து, சோயா பதப்படுத்துவோர் கூட்டமைப்பு (எஸ்.ஓ.பி.ஏ.,) வெளியிட்டுள்ள அறிக்கை :சென்ற ஜூலை மாதம், கால்நடை தீவனம் தயாரிக்க பயன்படும், சோயா புண்ணாக்கின் ஏற்றுமதி, 1.0…

    • 15 replies
    • 1.1k views
  12. மியான்மர் நாட்டில் உள்ள ரஹினி மாகாணத்தில் பௌத்த, முஸ்லிம் மதத்தினர் இடையே கடந்த 2012ம் ஆண்டு ஜூன் முதல் மோதல்கள் நடைபெற்று வருகிறது. அதில் 240 பேர் பலியானதுடன், 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் குடிபெயர்ந்து வேறு இடத்துக்கு ஓடி விட்டனர். இதற்கிடையில் தான்ட்வே நகரில் மீண்டும் பௌத்த பிக்குகள் பயங்கர ஆயுதங்களுடன் சென்று முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். தாக்குதலில் கின் 5 பேர் இறந்தனர். மேலும் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. பெருமளவு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. http://seithy.com/breifNews.php?newsID=94202&category=WorldNews&language=tamil

    • 1 reply
    • 304 views
  13. உலகத்திலேயே தன்னை ஒரு ''பொருளாதார வல்லரசாக'' தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அமெரிக்காவில் புதிய நிதியாண்டிற்கான பட்ஜெட் நிதிப்பற்றாக்குறை காரணத்தால் நிறைவேற்றப்படாமல் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் வைக்கப்பட்ட புதிய நிதியாண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தில் ''ஒபாமா கேர்'' என்று அழைக்கப்படும் ''தனி நபர் சுகாதார காப்பீட்டு திட்டத்திற்கான'' நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வரவு - செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்காததால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதனால் அமெரிக்க அரசு இயந்திரமே செயலிழந்து தவிக்கிறது. அமெரிக்காவின் நிதியாண்டு என்பது ஒவ்வொரு ஆண…

  14. காஷ்மீர் எல்லைக்குள் தீவிரவாதிகளுடன் அத்துமீறி நுழைந்துள்ள பாகிஸ்தான் ராணுவம், அங்குள்ள கிராமத்தை ஆக்கிரமித்துள்ளது. அவர்களை விரட்டியடிக்க இந்திய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 9 நாட்களாக நடக்கும் இந்த சண்டை பற்றி இப்போதுதான் தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், தீவிரவாதிகள் ஊடுருவவும் உதவி செய்து வருகிறது. கடந்த மாதம் 23ம் தேதி ஜம்முவில் ஊடுருவிய 3 தீவிரவாதிகள், ராணுவ முகாம் மற்றும் காவல் நிலையத்தில் புகுந்து நடத்திய தாக்குதலில் 5 போலீசார், 4 ராணுவ வீரர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளையும் ராணுவம் கொன்றது…

  15. டெல்லி: கிரிமினல் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பை தடுக்கும் அவசர சட்டத்தை எதிர்க்குமாறு ராகுலுக்கு ஆலோசனை சொன்னதே சோனியா தான். இதன் மூலம் பிரதமரை ராகுல் அவமதித்துவிட்டார் என பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார். குற்ற வழக்குகளில் இரண்டாண்டு தண்டனை பெற்ற எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கலாம் என கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை முடக்கும் வகையில் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் எதிர்த்து பேட்டியளித்தார். அவசர சட்டத்தை நான்சென்ஸ் என்றும் அதை கிழித்து எறியவேண்டும் என்று கடும் சொற்களை பயன்படுத்தினார். ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எத…

  16. சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி இறுதியாகும் வரை தமிழகத்தில் நடைபெறும் எந்த பாஜக கூட்டத்திலும், மாநாட்டிலும் தலை காட்ட வேண்டாம் என்று சுப்பிரமணியம் சாமிக்கு பாஜக மேலிடம் தடை விதித்துள்ளதாம். இந்த உத்தரவின் காரணமாகவே திருச்சியில் நடந்த நரேந்திர மோடி கூட்டத்துக்குக் கூட சாமியைக் கூப்பிடவில்லையாம். இதனால் கோபித்துக் கொண்டு வெளிநாட்டுக்குப் போய் விட்டாராம் சுப்பிரமணியம் சாமி. பாஜகவில் சாமி ஜனதாக் கட்சிக்காரரான சாமி, சமீபத்தில்தான் பாஜக கூட்டணியில் இணைந்தார். இணைந்தது முதலே அவருக்கு சோதனை அதிகமாகவே இருக்கிறதாம். வாஸ்து ஓ.கே.. ஆனால் வாய் சரியில்லையே...! சுப்பிரமணியம் சாமி கட்சிக்கு வந்ததெல்லாம் சரிதான்... ஆனால் அவரது வாய் சரியில்லையே என்று தமிழக பா…

  17. இத்தாலியத் தீவான லேம்பெதுசாவிற்கு அருகே தஞ்சம் கோரி வந்தவர்கள் பயணித்த படகொன்று கவிழ்ந்ததில் குறைந்தது 94 பேர் இறந்திருக்கிறார்கள் என்று அதிகாரிகள் கூறினர். வட ஆப்ரிக்காவிலிருந்து வந்த இந்த படகு இந்த தீவின் கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது தீப்பிடித்து பின்னர் கவிழ்ந்தது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 163 பேர் காப்பாற்றப்பட்டதாகவும், இன்னும் பலர் கடலில் இருக்கிறார்கள் என்றும் இத்தாலியக் கடலோரக் காவற்படை கூறியது. இந்தப் படகில் சுமார் 500 பேர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தப் படகில் கர்ப்பிணித் தாய்மார்களும், குழந்தைகளும் இருந்தனர் என்று கூறப்படுகிறது. இது ஒரு பெரும் துயர சம்பவம் என்று இத்தாலியப் பிரதமர் வர்ணித்தார்.…

  18. பிரிட்டனின் வல்லாதிக்கத்தை நினைவுறுத்தும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பே காமன்வெல்த் எனப்படும் பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். இதில் பிரிட்டனால் அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளை பிரிட்டன் தனது தலைமையின் கீழ் ஒரு கூட்டமைப்பாக்கி வைத்துள்ளது. அதில் தனது முடிக்குரியவர்களை கெளரவிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் 54 நாடுகளைக் கொண்ட இந்த வெட்டி அமைப்பில் இருந்து கம்பியா என்ற மேற்கு ஆபிரிக்க தேசம் தானாக விலகிக் கொள்ள முடிவு செய்துவிட்டது. அது இந்த அமைப்பில் கடந்த 48 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த வெட்டி அமைப்பின் அரசுத் தலைவர்கள் மாநாட்டை நடத்த இனப்படுகொலை நாடான சிறீலங்காவை பிரிட்டன் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தெரிவு செய்து வைத்துள்ளன. இந்த ம…

  19. செப்டம்பர் 20, 2013 அன்று, இங்கிலாந்தைச் சேர்ந்த நீதிமன்றம் ஒன்று போலியான வெடிகுண்டு கண்டறியும் கருவியை பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு விறபனை செய்த குளோபல் டெக்னிக்கல் எனும் தனியார் நிறுவனத்தின் அதிபர் கேரி போல்டனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த போலியான கருவிகளை பாதுகாப்புத் துறையின் எச்சரிக்கையையும் மீறி, இங்கிலாந்து அரசின் மூன்று முக்கிய துறைகளே ஊக்குவித்துள்ளன என்பது தான் இந்த மோசடியின் உச்சம். கேரி போல்டன் – டுபாக்கூர் குண்டு கண்டறியும் கருவி உலகின் பல்வேறு நாடுகளும் பயத்தின் காரணமாக பல்வேறு போர்க் கருவிகள், ஆயுதங்கள், பாதுகாப்பு கருவிகளை வாங்கிக் குவிக்கின்றன. முதலாளித்துவ நாடுகளில் உள்ள முதலாளிகள் இந்த சந்தையை அரசுகளின் உத…

  20. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் சண்டையை அடுத்து, அமெரிக்க அரசுத் துறை அலுவலகங்கள் பல மூடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தப் பிரச்சினையை சமாளிப்பதற்காக, அடுத்த வராம் மேற்கொள்ளவிருந்த தனது மலேசிய மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயத்தை ரத்து செய்திருக்கிறார். இந்த விஜயத்தின் தொடர்ச்சியாக இந்தோனேசியா மற்றும் புருனெய் ஆகிய நாடுகளுக்கும் செல்லவிருந்த ஒபாமா,அந்தப் பயணங்களையும் மேற்கொள்ளவேண்டுமா என்பது குறித்து இன்னும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறார் என்று அவருக்காகப் பேசவல்ல ஒரு அதிகாரி கூறினார். 17 ஆண்டு கால கட்டத்தில் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடப்படும் இந்த முதல் சம்பவம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், வரவு செலவுத் திட்டம் குறித்து ஒரு உடன்பாட்டு…

  21. மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் பி.ஸ்டாலின் ஐகோர்ட் கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், இலங்கை அரசுக்கு 2 போர்க்கப்பல்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்குவதை கைவிடக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்க தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், வேணுகோபால் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜராகி வாதிடுகையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு சிறைபிடிக்கப்படுகின்றனர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட…

  22. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களை மூட தற்காலிகமாக மூட அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊதியம் இல்லாமல் 6 மாதங்களுக்கு விடுமுறையில் செல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 17 வருடங்களில் அரசு நிறுவனங்களை மூடுவது இதுவே முதல் முறை. அரசின் நடவடிக்கையில் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்ப ட்டுள்ளது. பட்ஜெட்டில் சுகாதார நடவடிக்கைகளூக்கு பிரதிநிதிகள் சபை ஒப்புதல் தரவில்லை. நிதி நிலை யை கருத்தில் கொண்டு வெள்ளை மாளிகை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. வெள்ளை மாளிகையின் இந்த நடவடிக்கையால் 7.83 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=108498 அமெரிக்க அரசு முடங்கி…

  23. மகாத்மா காந்தி பிறந்த தினம் (அக்.2-1869) மகாத்மா காந்தியின் இயற்பெயர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி. இவர் 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. மோகன்தாஸ் காந்தி 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்திஇ தாயார் புத்லிபாய். காந்தி தனது 13-ம் …

  24. நவம்பரில், தனிக் கட்சி துவக்கும் திட்டத்தோடு, ஆதரவாளர்களுடன், இரகசிய ஆலோசனையை தீவிரப்படுத்தி உள்ளார், மத்திய அமைச்சர் வாசன். மேலிடத்தில் ராகுலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சமீப காலமாக, வாசன், மத்திய அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழக மீனவர்கள் மீது, இலங்கை ராணுவம் நடத்தும் தாக்குதல் குறித்து, கடும் கண்டனம் தெரிவித்த வாசன், "இனியும் தாக்குதல் தொடருமானால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படும்' என, காட்டமாக கூறினார். இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்கக் கூடாது; இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக் கூடாது' என, காங்கிரசில் இருந்து கொண்டே, மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக பேச…

  25. ஒரு சின்ன நாடு தைரியமாக எடுக்கும் நடவடிக்கைகளை கூட இந்தியா எடுக்க தவறுவது வெட்ககேடு ஒரு சின்ன நாடு தைரியமாக எடுக்கும் நடவடிக்கைகளை கூட இந்தியா எடுக்க தவறுவது வெட்ககேடு இந்தியர்கள் தங்களுக்குள்ளே பெருமை பேசி கொள்வதும் தாம்தான் மிக உலகில் மிக புத்திசாலிகள் என்றும் மிக தைரியசாலிகள் என்றும், இந்தியா வல்லரசு நாடாகும் தூரம் அதிகம் இல்லை என்று பெருமை பேசிக் கொள்வதில் மட்டும் சளைத்தவர்கள் இல்லை அடே தைரியசாலிகளே புத்திசாலிகளே தமிழ கடற்கறையோராம் தமிழக மீனவர்கள் சுடப்பட்டு இறப்பதும் இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பபடுவதும் அன்றாட நிகழ்ழ்சிகளில் ஒன்றாகிவிட்டது இதை தட்டிக் கேட்க முதுகெலும்பு இல்லாதவர்கள் தானே நீங்கள். கேட்டால் நாங்கள் ஜனநாயகப்படி நடவடிக்கைகளை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.