Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மும்பை: அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு வருகிறது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் டாலருக்கு இணையான மதிப்பு 65.50 ஆக சரிந்தது. கடந்த சில வாரங்களாக ரூபாய் மதிப்பு சரிவைக் கண்டு வருகிறது. 62, 63 என சரிந்த ரூபாய் மதிப்புஇன்றைய காலை வர்த்தகத்தின் போது இதுவரை இல்லாத வகையில் 64.90 ஆக தொடங்கியது. பின்னர் இது 65.13யை தொட்டியது. தொடர்ந்து 65.50 என்ற மதிப்பை அடைந்தது. இதுவரை இல்லாத வகையில் அமெரிக்க டாலருக்கு இணையான மதிப்பு 65.50 ஆக அதிகரிப்பதால் பங்குச் சந்தைகள் கடும் சரிவை எதிர்கொள்ளக் கூடும். http://tamil.oneindia.in/news/2013/08/22/business-rupee-opens-at-64-90-per-us-dollar-hits-65-181757.html

    • 1 reply
    • 362 views
  2. NaamTamilar Tirupur SamaranBala மானங்கெட்டவனுக்கு எதுக்குடா ஆயுதம்???? "யாரிடமும் போருக்கு போக மாட்டேன். யாராவது, என்னிடம் வம்புக்கு இழுத்து அடிச்சாலும், பேசாமலே இருப்பேன். பேச்சு வார்த்தை மூலம், பிரச்னையை இழுத்தடிப்பேன்' என்று சொல்லும் ஒரு நாட்டிற்கு, எதற்கு, 3 லட்சம் கோடியில், மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பல்... அழகு பார்க்கவா? இன்றைய சூழலில், நம்மை சுற்றி, பிணம் தின்னும் கழுகுகள் கூட்டம் உள்ளதால், அவர்களை ஒடுக்க, நமக்கு ஆயுத பலம் தேவை தான். ஆனால், வல்லரசு பலம் இருந்தும், சுண்டைக்காய் அளவில் இருக்கும் இலங்கையை, நம்மால் கட்டுப்படுத்த முடியாத போது, நமக்கு எதற்கு ஆயுதம்? தமிழக மீனவர்கள், 567 பேரை, குருவியை சுட்டுக் கொல்வதை போல், சுட்டுக் கொலை செய்துள்ளனர். இத…

    • 1 reply
    • 689 views
  3. ஜகர்தா: இந்தோனேசியாவில் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வி அதிகாரிகளின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தோனேசியாவின் உள்ள சுமத்ரா தீவில் அமைந்துள்ள பிரபுமுலிக் மாவட்டத்தில் உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமையன்று அம்மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என கடும் சர்ச்சை எழுந்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களிலும் ஏராளமானோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை தெரிவித்திருந்தனர் திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவை தடுப்பதற்கும், விபசாரத்தால் மாணவிகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற…

    • 1 reply
    • 551 views
  4. மும்பை: ஈழத் தமிழரது உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான மெட்ராஸ் கஃபே படத்தை திரையிட எதிர்ப்புத் தெரிவித்து மும்பையில் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் மாணவர்களும் இன்று கண்டன போரட்டம் நடத்தினர். மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் இந்தப் படத்தை தடை செய்ய வலியுறுத்தி வருகின்றன. சென்சார்டு போர்டு அனுமதி இல்லாமல் மெட்ராஸ் கஃபே படத்தை தமிழில் வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மும்பையில் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் மாணவர் அமைப்பினர் பலரும் இணைந்து மெட்ராஸ் கஃபே படத்தை தடை செய்யக் கோரி போராட்டம் நடத்தினர் .இந்தத் திரைப்படம் ஈழத் தமிழர…

    • 3 replies
    • 779 views
  5. சென்னை:பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (BDL), இந்திய ராணுவத்திற்கு இன்வார் எதிர்ப்பு டாங்கி ஏவுகணைகளை வழங்க பாதுகாப்பு அமைச்சகத்துடனான ஒப்பந்தத்தில் கையழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 3,000 கோடியாகும். T-90 டாங்குகள் முலம் ஏவப்படும் இந்த ஏவுகணைகள் லேசர் தொழில்நுட்பத்தை கொண்டு செயல்படுகிறது. மேலும் இந்த ஏவுகணைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அந்நிறுவனம் இந்திய ராணுவத்திற்கு வழங்கும். இத்தகைய ஏவுகணைகள் கண்டிப்பாக நம் இந்திய ராணுவத்திற்கு வலிமையை சேர்க்கும். இந்த ஏவுகணைகள் 5 கிமீ தொலைவில் இருந்து தாக்க வல்லமைப்படைத்தவை. இது எதிரிகளின் வெடிப்பு எதிர்விணை பாதுகாப்பு கவசம் பொருத்தப்பட்ட டாங்கிகளையும் வீழ்த்தக் கூடியவை. பாரத் டைனமிக்ஸ் லிமிடெட், ஒரு பொதுத்…

    • 3 replies
    • 748 views
  6. லக்னோ/பைசாபாத்: அயோத்தியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தடையை மீறி யாத்திரை நடத்தப் போவதாக அறிவித்துள்ளதால் அங்கு உச்சகட்ட பதற்றம் நீடித்து வருகிறது. அயோத்தியில் இன்று பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் 25-ந் தேதி முதல் அயோத்தி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் யாத்திரையை நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் மாநில அரசோ இந்த யாத்திரைக்குத் தடை விதித்தது. இருப்பினும் தடையை மீறி யாத்திரையை நடத்துவோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அறிவித்தது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இன்று பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70 விஸ்வ ஹி…

    • 4 replies
    • 341 views
  7. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய வீரர்கள் படு அசமஞ்சமாக இருந்ததை நன்றாக நோட்டமி்ட்டு வந்த பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லைப் பகுதி தாக்குதல் படையினர் நன்கு திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியே ஐந்து இந்திய வீரர்களைக் கொன்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்திய வீரர்கள் அடிப்படை பாதுகாப்பு நடைமுறைகளைக் கூடக் கடைப்பிடிக்காமல் அஜாக்கிரதையாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் 6ம் தேதி நடந்த இந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்த ஒரே ராணுவ வீரரான சாம்பாஜி குத்தேவிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. : http://tamil.oneindia.in/news/2013/08/23/india-indian-soldiers-were-sitting-ducks-august-6-ambush-tactical-lapses-181845.html

    • 5 replies
    • 521 views
  8. சீனாவுக்கு, நம் ராணுவ பலத்தை காட்டும் வகையில், லடாக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விமான தளத்தில், இந்திய விமானப் படைக்கு சொந்தமான, "சூப்பர் ஹெர்குலிஸ் விமானம்' நேற்று தரையிறக்கப்பட்டது. காஷ்மீரின் லடாக் பகுதியை ஒட்டியுள்ள, எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், சீன ராணுவத்தினர், அடிக்கடி ஊடுருவுகின்றனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவும், சீன வீரர்கள், அங்கு முகாம்களையும் அமைத்து வருகின்றனர். இதையடுத்து, சீனாவுக்கு, ராணுவ பலத்தை காட்டுவதற்கான நடவடிக்கையில், இந்திய ராணுவம் ஈடுபட்டது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விமான தளத்துக்கு, இந்திய விமானப் படைக்கு சொந்தமான, சூப்பர் ஹெர்குலிஸ் விமானம், நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இந்த …

    • 7 replies
    • 834 views
  9. இந்தியாவின் மும்பை நகரில் வியாழனன்று பெண் ஊடகவியலாளர் ஒருவர் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக அந்நகர பொலிசார் கூறுகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த வேறு நான்கு சந்தேக நபர்களையும் விரைவில் கைதுசெய்வோம் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். சந்தேகநபர்களின் தோற்றத்தைக் காட்டும் வரைபடங்கள் காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது அந்நேரம் அப்பெண்ணோடு சென்றிருந்த உடன் வேலைபார்க்கும் ஆண் ஒருவர் கட்டிவைத்து தாக்கப்பட்டுள்ளார்.கைவிடப்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஒன்றை பணிக்காகபடமெடுக்கச் சென்றிருந்தபோது இந்த 22 வயதுப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். சென்ற வருடம் தேசிய அளவில் பெரும்…

    • 2 replies
    • 445 views
  10. தமிழகத்தில் பற்றிப்படருகின்ற தாவரங்களான உன்னிச் செடிகளால் முதுமலை உட்பட பல இடங்களிலும் உள்ள புலிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ஒரு வகை அழகிய மலர்ச்செடிகளாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட ''லண்டனா'' எனப்படுகின்ற இந்த உன்னிச் செடிகள், ஒருவகை பற்றிப்படருகின்ற களைகளாக தற்போது உருவெடுத்துள்ளதாகவும் அவற்றால் உள்ளூர் புல் வகைகள் பலவும் அழிந்துபோவதாகவும் கூறப்படுகின்றது. பொதுவாக, ஒரு இடத்தில் புலிகள் வாழ வேண்டுமானால், அவற்றுக்கான உணவான மான்களும் அங்கு அவசியமாகின்றன. ஒரு புலி உயிர்வாழ 500 மான்களாவது வேண்டுமாம். ஒருவகை உன்னிச் செடிகள் ஆனால், இந்த உன்னிச் செடிகள் தற்போது காடுகளில் பற்றைபோன்று படர்ந்து உ…

    • 6 replies
    • 688 views
  11. திருவனந்தபுரம்: கேரளாவில் மலையாளம் தெரிந்தால் மட்டுமே அரசு வேலை என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். கேரளாவில் உம்மன் சாண்டி முதல்வராக பதவியேற்றதும் மலையாளம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு கேரளாவில் வாழும் தமிழ் மற்றும் கன்னடம் பேசும் சிறுபான்மையின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் மலையாளம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்க வேண்டும் என்ற உத்தரவை உடனே அமல்படுத்தக் கோரி சில மலையாள அமைப்புகள் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் மலப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி கலந்து கொண்டார். அப்போது …

    • 7 replies
    • 794 views
  12. பாரீஸ்: லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி மும்மர் அல் கடாபி பள்ளிச் சிறுமிகளை எப்படியெல்லாம் தனது காமப் பசிக்கு இரையாக்கினார் என்பது குறித்த புதிய புத்தகம் ஒன்றில் பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த சிறுமிகளை அவர் செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார் என்றும், தனது கோட்டைக்குக் கீழே அறை அமைத்து அவர்களை அடைத்து வைத்து பாலியல் ரீதியாக அவர்களை தனது இச்சைக்குப் பயன்படுத்தி வந்ததாகவும் Gaddafi's Harem: The Story Of A Young Woman And The Abuses Of Power In Libya என்ற தலைப்பிலான அந்த நூல் கூறுகிறது. பிரான்ஸைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அன்னிக் கோஜீன் இதை எழுதியுள்ளார். இந்த நூல் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த நூலில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள்... தனது கண்ணில் எ…

    • 1 reply
    • 1.4k views
  13. எகிப்தில் கடந்த சில நாட்களாக நடந்துவரும் வன்முறைகள் பல நூற்றுக்கணக்கானவர்களை பலியெடுத்திருக்கின்றது. ‘நைல் நதியின் நன்கொடை’ என்று அழைக்கப்படும் எகிப்து, இப்போது இரத்தத்தால் நனைந்து கொண்டிருக்கின்றது. இரத்த ஆறு அங்கு பாயத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் துனிசியாவில் தொடங்கிய அரபு வசந்தம் எகிப்தையும் ஆட்டம் காணவைத்தது. 30 வருடங்களாக எகிப்தின் ஆட்சிக் கதிரையில் அமர்ந்திருந்த ஹோஸ்னி முபாரக்கை எப்படி அகற்றலாம் என்று காத்திருந்தவர்களுக்கு, துனீசியா ஒரு வழிகாட்டியாக இருந்தது. அரசுக்கு எதிராக 2011ம் ஆண்டில் எகிபத்திலும் மக்கள் புரட்சி வெடித்தது. உயிரிழப்புக்கள் ஏற்பட்டபோதும் துனீசியாவைப் போலன்றி, பெரும் இரத்தக்களரியின்றி 18 நாட்களில் (2011ம் ஆண்டு பெப்ரவரி 11ம…

  14. 'இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வழியில் அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இலங்கை கடற்படையிடம் இருந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்ற முடியும்' என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'மீனவர் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழு மாநில அரசின் ஆதரவுடன் இலங்கை சென்று திரும்ப வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் தமிழக அரசு அவர்களுக்கு உரிய அனுமதியைத் தரவில்லை என்றும் …

  15. சிரியாவில் போராளிகள் வசமுள்ள பகுதிகளில் நூற்றூக்கணக்கான பொதுமக்கள் இரசாயனக் குண்டுவீச்சுக்குப் பலியானதை அடுத்து, சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதையடுத்து மத்திய தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் ஆயத்த நிலையில் உள்ளன. அமெரிக்க தலைமையில் இப்பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் படைகள் தாக்குதலை தொடுக்க தயாராகி வருகின்றன. அமெரிக்காவின் ஏவுகணை தாங்கி கப்பல் மத்தியதரைக்கடலுக்கு விரைகிறது. மத்தியத்தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள யூ.எஸ்.எஸ். ஹாரி எஸ். ட்ரூமான் என்ற விமானந்தாங்கி கப்பல் சூயஸ் கால்வாய் வழியாக செங்கடலுக்கு விரைகிறது. இது அங்கிருந்து சிரியா மீது தாக்குதல் நடத்தும். இ…

    • 10 replies
    • 913 views
  16. மைதுகுரி: வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள கிரமாத்திற்குள் புகுந்த இஸ்லாமிய தீவரிவாதிகள் அங்குள்ள 44 பேரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டத்திட்டங்கள் படி ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்று கூறி போகோஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது கிராமங்களில் புகுந்து மக்களை தாக்கி வருகின்றனர். அவர்கள் நேற்று அதிகாலையில் வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள தும்பா என்ற கிரமாத்திற்குள் புகுந்தனர். துப்பாக்கியால் சுட்டால் அங்குள்ள பாதுகாப்பு படையினருக்கு கேட்டுவிடும் என்பதால் அவர்கள் 44 கிராமத்தினரை கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். இந்த தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களின் கண்களை அவர்கள் தோண்டி எடுத்துள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்…

  17. பாங்காக்: தாய்லாந்து சென்ற குஜராத் மாநில காவல்துறை தலைவர் அமிதாப் பதக் இன்று அங்கு மாரடைப்பால் மரணமடைந்தார். தனது குடும்பத்தினருடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற அவர் பாங்காக் நகரில் இறந்தார். அவருக்கு வயது 58. நீச்சல் அடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சுதந்திர தினத்தன்று முதல்வர் நரேந்திர மோடி புஜ் நகரில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அருகில் நின்றிருந்த பதக் மயங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது. மிகவும் களைப்பாக இருந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக பதக் தெரிவித்திருந்தார். இந் நிலையில் தாய்லாந்தில் மரணமடைந்துள்ளார். சிபிஐ கஸ்டடியில் பிபி பாண்டேவை சந்தித்த பதக்: முன்னதாக இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ கஸ்டடியில் இருந்த மூத்த ப…

    • 2 replies
    • 546 views
  18. ******************** சிகாகோ பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஓர் அமெரிக்க மாணவி இந்தியா வந்திருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை செய்தியாக்கி உலக அளவில் பெரும் சர்ச்சையை தொடங்கி வைத்துள்ளார். ‘இந்தியா: நீங்கள் கேட்க விரும்பாத கதை’ என்று அவர் கொடுத்துள்ள தலைப்பால், இந்தியா எங்கிருக்கிறது என்று தெரிந்துகொள்ளக்கூட அக்கறை இல்லாதவர்களும் இதை படித்துவிட்டு நமது நாட்டை விமர்சித்த வண்ணம் இருக்கின்றனர். மிஷலா க்ராஸ் என்ற அந்த பெண் தன் கதையை சிஎன்என் வலைதளத்தில் பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் பத்து லட்சம் பேருக்கு மேல் வாசித்துள்ளனர். பல ஆயிரம் பேர் கருத்து கூறியுள்ளனர். அந்நிய நாகரிகங்களை அனுபவபூர்வமாக அறிந்து கொள்வதற்காக மாணவர்கள் வெளிநாடு சென்று மாதக்கணக்கில் தங்குவதையும…

    • 0 replies
    • 418 views
  19. டெல்லி: கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது பற்றி முடிவெடுக்கும் போது பல்வேறு அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பிரனீத் கவுர் உறுதி அளித்துள்ளார். ராஜ்யசபாவில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. டி.ராஜா பேசுகையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் அனுப்பிய கடிதத்தை மத்திய அரசு பரிசீலித்ததா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பிரனீத் கவுர், பிரதமர் பங்கேற்பது பற்றி முடிவெடுக்கும் போது தேசிய மற…

  20. ஸ்ரீகாளகஸ்தி: ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோயில் கோபுரத்து கலசம் கீழே விழுந்ததால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. இதனால் ஆந்திர மாநில மக்கள் சென்டிமென்ட் திலகங்களாகவும் இருக்கின்றனர். இந்த நிலையில் முக்கிய கோயிலான ஸ்ரீகாளகஸ்தியின் கோபுரம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. அதேபோல் கோபுர கலசங்களும் கீழே விழுந்திருந்தன. இதனால் இயற்கை சீற்றம் உள்ளிட்ட பேரழிவுகள் ஏற்பட்டுவிட்டதாக கருதப்பட்டது. தற்போது தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்டு ஆந்திராவே இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. இந்நிலையில் திடீரென ஸ்ரீ காளகஸ்தி கோயில் கோபுரத்து கலசம் கீழே விழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5…

  21. மாற்று மீடியா வடிவில் இயக்க அமெரிக்காவின் லூசியான மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய புதைகுழி வேகமாக பெரிதாகிக் கொண்டிருக்கிறது. இந்த புதைகுழி குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் வீடுகளும், கட்டிடங்களும் இல்லை என்பதால் மனித உயிருக்கு இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் அந்தப் புதைகுழி தொடர்ந்து பெரிதாகிக் கொண்டு வருகிறது. அதன் காரணாக வளர்ந்து நிற்கும் பெரிய மரங்கள் விழுந்துள்ளன. தரைக்கு கீழே இருக்கும் பாறைகள், அமில அரிப்பால் தொடர்ந்து பாதிக்கப்படும்போது, பாறைகள் மெதுவாக வலு இழக்க ஆரம்பிக்கின்றன. பல ஆயிரம் ஆண்டுகள் நடக்கும் இந்த இயற்கை நிகழ்வின் இறுதியில் பாறை முற்றாக சிதைந்து போன பிறகு, தரை மட்டத்தில் விரிசல்கள் உருவாகின்றன. சில நேரங்கள…

  22. ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் குப்வாரா பிரிவில் மீண்டும் ஊடுறுவல் மற்றும் தாக்குதல் முயற்சியில் பாகிஸ்தானியப் படைகள் இறங்கின. ஆனால் ராணுவம் அதை வெற்றிகரமாக முறியடித்தது. கேரன் பகுதியில் இந்த சில்மிஷத்தில் பாகிஸ்தானியப் படைகள் இன்று அதிகாலையில் ஈடுபட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானியத் தரப்பிலிருந்து திடீர் நடமாட்டம் அதிகரித்ததால், இந்தியப் படையினர் சுதாரிப்புடன் செயல்பட்டு முறியடித்துள்ளனர். கடந்த 10 நாட்களில் பாகிஸ்தான் தரப்பி்ல நடந்துள்ள 19வது ஊடுறுவல் முயற்சி மற்றும் போர் நிறுத்த மீறலாகும் இது. ஆகஸ்ட்6ம் தேதி ஐந்து இந்தியப் படை வீரர்களை பாகிஸ்தானியப் படைகள் தாக்குதல் நடத்திக் கொலை செய்தன. அதன் பிறகு தொடர்ந்த…

  23. அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் 46 பேரை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி ஆஸ்திரேலியா காலவரையின்றி தடுத்துவைத்திருப்பது, கொடூரமான, மனிதத் தன்மையற்ற, இழிவுபடுத்தும் விதமான செயல் என்று ஐநா சாடியுள்ளது. ஆஸ்திரேலியாவின் இந்தச் செயல் காரணமாக தடுத்துவைக்கப்பட்டவர்கள் கடுமையான உளவியல் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று இவர்களது வழக்குகளை பரிசீலித்த ஐநா குழுவொன்று கண்டறிந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் தஞ்சக் கோரிக்கையாளர்கள் குடிவரவு மையங்களில் தடுத்துவைக்கப்படுகின்றனர் இலங்கைத் தமிழர்கள் 42 பேர், மியன்மாரிலிருந்து சென்ற ரோஹிஞ்சாக்கள் 3 பேர், குவைத் பிரஜை ஒருவர் ஆகியோர் அடங்கிய இந்த அகதிகள் தாங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளது தொடர்பில் ஐநா மனித உரிமைக் குழுவிடம் முறையிட்டிருந்தனர்.க…

  24. டெல்லி: இலங்கை சிறையில் வாடும் 106 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் இன்று திமுக, அதிமுகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பினர். திமுக சார்பில் வசந்தி ஸ்டான்லியும் அதிமுக சார்பில் மைத்ரேயனும் கருத்துகளைத் தெரிவித்தனர். இந்தக் கருத்துகளுக்குப் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை சிறையில் தற்போது 106 தமிழக மீனவர்கள் உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழக மீனவர்களை மீட்க பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போதும், இந்தியா வந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மீனவர்களை விடுதலை …

  25. டெல்லி: இந்தியாவின் எல்லையில் சீனா முற்றுக்கிக் கொண்டு ஊடுருவது அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ஒரே ஒரு உள்நாட்டு போர்க்கப்பலை தயாரித்துவிட்டதாலே சீனாவோ குய்யோ முறையோ என கூக்குரலிடுகிறது. தெற்காசியாவில் இந்தியாவும் சீனாவும் சர்வ வல்லமை சக்திகளாக இருந்து வருகின்றன. இந்தியாவுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருந்தாலும் சீனாவோ பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மியான்மர் என இந்தியாவை சுற்றிய அனைத்து நாடுகளையும் தம் நட்பு சக்தியாக வைத்துக் கொண்டிருக்கிறது. சரி,,, இந்தியாவும் சீனாவும் எப்படியெல்லாம் என்னென்ன துறைகளிலெல்லாம் வலுவாக இருக்கின்றன? என பார்ப்போமா? ஜிடிபி எனப்படும் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியில் இந்தியா- 5% ; சீனாவோ 7.5% இந்தியாவில் 2011-12 ஆம் ஆண்டு வறுமைக் கோட்டுக்கு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.